November

November

ஏ (எச் 1 என் 1): புதிய தடுப்பூசிகள் உடனடியாக இறக்குமதி

influenza-a.jpgஉலக சுகாதார நிறுவனத்தால் சிபாரிசு செய்யப்பட்ட ஏ (எச்1 என்1) வைரஸ¤க்கான புதிய தடுப்பூசிகள் உடனடியாக இறக்குமதி செய்யப்படவுள்ளன. டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் புதிய தடுப்பூசிகள் இலங்கைக்குக் கொண்டு வரப்படும் என சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

ஏ (எச்1 என்1) வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 258 பேர் இவ் வைரஸினால் பீடிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இதனை உடனடியாகத் தடுக்கும் நோக்குடன் புதிய ஏ (எச்1 என்1)  தடுப்பூசியை இறக்குமதி செய்யுமாறு சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார். அமெரிக்காவிலுள்ள நோய்த்தடுப்பு நோய் அறிகுறி தொடர்பான ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி ஏ (எச்1 என்1) வைரஸ் பீடிக்கப்படும் நபர்கள் தொடர்பாக வயதெல்லைகள் பற்றி அறிவித்துள்ளது.

கர்ப்பிணித்தாய்மார், 6 மாதங்களுக்குக் குறைந்த குழந்தைகள், முதல் 24 வயதுடையவர்கள், 64 வயதுக்கு மேற்பட்டவர்கள், கோமா நிலையிலுள்ளவர்கள் போன்றோர் இவ்வைரஸால் பீடிக்கப்படக் கூடியவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடுமையான காய்ச்சல், இருமல், தொண்டைப்புண் உண்டாதல், மேல் வலி தலையிடி, என்பவற்றுடன் சிறுவர்களாயின் வயிற் றோட்டம், வாந்தி போன்ற நோய் அறி குறிகள் இருப்பின் உடனடியாக டொக்டர் ஒருவரின் ஆலோசனையைப் பெறுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்க ஜெனரல் பொன்சேகாவிடமிருந்து சமிக்ஞை

ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு சவாலாக நிறுத்தப்படுவாரென்று பரவலான ஊகத்தின் மத்தியில் தனது பதவியிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ள கூட்டுப்படைகளின் முன்னாள் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகா, மனித உரிமைகளுக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் போராடப்போவதாக நேற்று வெள்ளிக்கிழமை சூளுரைத்திருக்கின்றமை வேட்பாளராக தான் நிற்கப்போகிறார் என்பதை அவர் விரைவில் அறிவிக்கும் சாத்தியத்தை அதிகரித்திருக்கிறது.

படையினருக்கு ஜெனரல் பொன்சேகா எழுதியுள்ள பிரியாவிடைக் கடிதத்தில் நிழல்போன்று உங்கள் பக்கத்தில் இருப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தின் புகழுக்கு மாசு கற்பிக்க எவருக்கும் இடமளிக்காதீர்கள். அத்துடன் இராணுவத்தை அரசியல் மயப்படுத்தவும் இடமளியாதீர் என்று படைவீரர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் விலாசமிட்டு எழுதிய கடிதத்தில் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளதாக ராய்ட்டர் செய்திச் சேவை நேற்று குறிப்பிட்டுள்ளது.குறிப்பிட்ட சிலர் எம்மை அவமதிக்க முயற்சிக்கின்ற போதிலும் யுத்த வெற்றியின் உண்மையான உரிமையாளர்கள் நாங்களே என்பதை நாம் மனதில் கொண்டிருக்க வேண்டும் என்றும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் துரிதமாக இழந்து கொண்டிருக்கும் ஜனநாயக சுதந்திரங்களைப் பாதுகாப்பதில் நான் உறுதிப்பாட்டுடன் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன் என்று உங்களுக்கு உறுதியளிக்க நான் விரும்புகிறேன் என்று படையினருக்கு எழுதிய பிரியாவிடைக் கடிதத்தில் ஜெனரல் பொன்சேகா குறிப்பிட்டுள்ளதாக ஏ.எவ்.பி.செய்திச் சேவை நேற்றுத் தெரிவித்தது.

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பெருமழை, இடி, மின்னல் குறித்து எச்சரிக்கை

srilanka-today.jpgவடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. குறிப்பாக கிழக்குக் கரையை அண்மித்த கடல் பிராந்தியத்தில் கடுமையான காற்று வீசுவதுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

இன்று முழுவதும் சில இடங்களில் கடுமையான மழை பெய்வதுடன் மழை சற்று குறைந்து காணப்பட்டாலும் சில நாட்களுக்கு தொடர்ச்சியான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்படுகிறது. இக்காலங்களில் இடிமின்னல் அதிகமாகக் காணப்படுவதால் பொதுமக்கள் சற்று அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு- கண்டி; கொழும்பு- கட்டுநாயக்க அதிவேக பாதை நிர்மாண பணிகள் விரைவில் ஆரம்பம்

உலக வங்கியின் நிதியுதவியுடன் நடை முறைப்படுத்தப்படவுள்ள கொழும்பு- கண்டி அதிவேக பாதை நிர்மாணப் பணிகள் விரை வில் ஆரம்பமாகுமெனவும் இது தொடர்பாக உலக வங்கியுடனான இறுதிப் பேச்சுவார்த்தை கடந்த வாரம் இடம்பெற்ற தாகவும் நெடுஞ் சாலைகள் அமைச்சர் டி. பி. ஏக்கநாயக்க தெரிவித்தார். இதன் சமகாலத்தில் கொழும்பு-கட்டு நாயக்க அதிவேக பாதை நிர்மாணப் பணி களையும் மேற்கொள்ளவுள்ளதாக அமை ச்சர் தெரிவித்தார்.

அமைச்சின் தற்காலிக ஊழியர்கள் 939 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற இந்த நான்கு வருட காலங்களில் சுமார் 12,000 பேர் நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி அமைச்சில் நிரந்தர நியமனம் பெற்றுள்ளனர். 2005ல் ஜனாதிபதி வழ ங்கிய வாக்குறுதிக்கிணங்க 2007ல் 5,000 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. அதற்கடுத்ததாக இன்று 939 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படுகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொழி லாளர்களின் உயர்வைப் பற்றிச் சிந்திக்கும் ஒரு உன்னதத் தலைவர். அதனால்தான் அவரது பிறந்த தினமும், நான்காவது சேவை பூர்த்தி நிறைவும் முடிவடைந்த கையோடு 939 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குகிறார்

வடக்கிலிருந்து இன்று பசில் விசேட அறிவிப்பு முக்கியமான விடயம் என்கிறார் அமைச்சர் சமரசிங்க

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் இன்று சனிக்கிழமை வடக்கிற்குச் சென்று இடம்பெயர்ந்த மக்களை சந்திக்கும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, அங்கிருந்து விசேட அறிவிப்பொன்றை விடுக்கவிருப்பதாக இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்தத் தகவலை வெளியிட்ட அமைச்சர் சமரசிங்க, எனினும் வடக்கில் எங்கிருந்து பசில் ராஜபக்ஷ இந்த அறிவிப்பை விடுக்கவிருக்கிறார் என்பதை பாதுகாப்புக் காரணம் கருதி வெளியிட முடியாதென்றும் மறுத்து விட்டார்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் பசில் ராஜபக்ஷ வடக்கு அபிவிருத்திக்கான விசேட செயலணியின் தலைவர் என்ற வகையில் நாளை (இன்று சனிக்கிழமை) வடக்கிற்குச் சென்று விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார். அங்குள்ள இடம்பெயர்ந்த மக்களை சந்தித்து பேசியதன் பின்னரே அவர் இந்த அறிவிப்பை விடுக்கவுள்ளார்.இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்தக் குறுகிய காலப் பகுதிக்குள் நினைக்க முடியாத அளவுக்கு உரிமைகளை வழங்கும் முக்கியமானதொரு அறிவிப்பாக இருக்கும். அவர் அந்த அறிவிப்பை விடுத்ததன் பின்னர் அதன் விபரங்கள் தெரியவரும் என்று மகிந்த சமரசிங்க இதன்போது கூறினார்.

இதேநேரம், மீள்குடியேற்றம் தொடர்பாக இங்கு விளக்கமளித்த அமைச்சர் வெள்ளிக்கிழமை வரை வவுனியா (127,495), யாழ்ப்பாணம் (2,034), மன்னார் (970), திருகோணமலை (2,762) முகாம்களிலும் மற்றும் 7 வைத்தியசாலைகளிலும் (தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருபவர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் 3,067 பேர்) மொத்தமாக உள்ள ஒரு இலட்சத்து 36 ஆயிரத்து 328 பேர் (136,328) இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டியுள்ளனர்.கடந்த வாரத்தில் 143,161 ஆக இருந்த தொகை இவ்வாரம் 136,328 ஆக குறைவடைந்துள்ளது. ஒருவார காலப்பகுதியில் 6500 இற்கும் 7 ஆயிரத்திற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கண்ணிவெடி அகற்றும் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த சில வாரங்களில் மீள்குடியேற்றம் மேலும் அதிகரிக்கும். அத்துடன் இலங்கை வந்திருந்த மனிதாபிமான விவகாரங்களுக்குப் பொறுப்பான ஐ.நா. உதவி செயலாளர் ஜோன் ஹோம்ஸ், அரசாங்கத்தின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதியிடம் திருப்தி வெளியிட்டுள்ளார். ஐ.நா.விடமிருந்து இம்மாதிரியான வார்த்தைகள் வெளிவருவது இதுவே முதற்தடவை. இதேநேரம், இடம்பெயர்ந்த மக்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அடுத்த ஓரிரு நாட்களில் 50 சதவீதத்தைத் தாண்டும் என்பதுடன், எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதிக்குள் தெளிவாக பெரும்பான்மையானோர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருப்பர் என்றும் தெரிவித்தார்.

குடும்ப வன்முறையும் சமூகத் தனிமைப்படுத்தலும் தாயையே குழந்தைகளைக் கொல்வதை நோக்கித் தள்ளியது நீதிபதி பிரைன் பாக்கர் :

Sanjayan NavaneethanSarani Navaneethanகுடும்ப வன்முறை சமூகத் தனிமைப்படுத்தல்’ போன்ற காரணங்களே சசிகலா நவநீதன் தனது குழந்தைகளைக் கொலை செய்வதை நோக்கித் தள்ளியதாக வழக்கின் நீதிபதி பிரைன் பார்க்கர் தெரிவித்துள்ளார். ‘இது மிகவும் மனவருத்தமான கொடுமையான நிகழ்வு’ என்று தெரிவித்த நீதிபதி, ‘நீர் அந்த நேரத்தில் நீரும் உமது குழந்தைகளும் இறப்பதே மேல் என்று நம்பி உள்ளீர்கள். நீர் குடும்ப வருமானம், ஒழுக்கமற்ற உறுவு, குடும்ப வன்முறை சமூகத் தனிமைப்படுத்தல் ஆகியவற்றை கவனத்தில் எடுத்தள்ளீர். உம்முடைய மனக் குழப்பமும், நீர் எடுத்த நடவடிக்கையும் வெளியில் உள்ள ஒருவருக்கு விளங்கிக் கொள்ள முடியாது’ எனத் தெரிவித்தார். தாய்மைக்கால மன உளைச்சலால் தனது குழந்தைகளைக் கொலை செய்த சசிகலா நவநீதனின் வழக்கில் தீர்ப்பளிக்கையில் நீதிபதி அவ்வாறு தெரிவித்தார். காலவரையறையற்று சசிகலா நவநீதன் மனநோயாளர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு உடன்பட்டு உள்ளார்.

‘என்னைச் சுட்டுக் கொல்லுங்கள்’ தாய்மைக்கால மனஉளைச்சல் காரணமாக தன்னிரு குழந்தைகளினதும் தொண்டையில் வெட்டியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த தாய் சசிகலா நவநீதன் கதறினார். தான் தன் குழந்தைகளைக் கொலை செய்துவிட்டதாக நீதிமன்றத்தில் கூறிய அவர் தன்னைச் சுட்டுக் கொல்லுமாறு பொலிசாரை மன்றாடினார். சசிகலா நவநீதன் தனது குழந்தைகளான சன்ஞயன் (5), சாராணி (4), ரிசானா (6 மாதம்) ஆகிய தன் மூன்று குழந்தைகளையும் கொலை செய்ய முற்பட்டு இருந்தார். அதில் சன்ஞயன், சாரணி இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். இச்சம்பவம் லண்டன் புறநகர்ப் பகுதியான கார்ஸ்கால்ரன் என்ற இடத்தில் இருந்த அவர்களின் வீட்டில் சென்றவருடம் மே 30ல் இடம்பெற்றது.

மருத்துவர்களின் போராட்டத்தின் பின் ரிசானா உயிர் தப்பினார். ரிசானாவும் ஜனவரியில் நவநீதன் சசிகலாவின் நான்காவது குழந்தையும் அவர்களுடைய தந்தை நவராஜா நவநீதனுடன் வாழ அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

20 யூலையில் ஓல்ட் பெயிலி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த சசிகலா நவநீதன், சொந்தமாகக் கடை வைத்திருந்து அதில் பணியாற்றிய கணவர் நவராஜா நவநீதன் திருமணத்திற்குப் புறம்பான உறவை வைத்திருந்தார் என்றும் தன்னை அடிப்பதாகவும் தனது தலையில் ஒலித்த யாருடையதோ குரல்கள் அதனை தான் நம்பும்படி உணத்தியதாகவும் தெரிவித்தார்.

சன்ஞயன் சாரணி ஆகியோரின் கொலைகளை புரிந்ததாகவும் ஆனால் தன்னுணர்விற்கு அப்பாற்பட்டு (diminished responsibility) நடந்ததாகவும் ரிசானா மீதான கொலை முயற்சியையும் ஏற்றுக்கொண்டார்.

சம்பவம் இடம்பெற்றதற்கு ஒரு மாதத்திற்கு முன்னிருந்து குழந்தைகளைக் கொலை செய்யும்படியாக அந்தக் குரல்கள் தனது தலையில் ஒலித்து வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்த சசிகலா சம்பவதினமும் அந்தக் குரல்கள் மீண்டும் ஒலித்தாகவும் அன்று தான் அந்தக் குரல்கள் கூறியபடி நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

Funeral_of_the_Childrenசசிகலா சார்பில் ஆஜரான கியூசி டேவிட் எதரிங்ரன், ‘சசிகலா தனது காலாச்சார காரணங்களுக்காக தனக்கு ஏற்பட்ட உடற்காயங்களை மருத்துவருக்கு காட்டினார். ஆனால் தனது மனநிலையை வெளிப்படுத்தவில்லை’ எனத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ‘தனது வாழ்க்கையில் இனிமேல் எவ்வித அர்த்தமும் இல்லை என்ற முடிவுக்கு வந்த சசிகலா தனது குழந்தைகளை தனது கணவனுடன் விட்டுச் செல்லவும் விரும்பவில்லை’ என்று தெரிவித்தார். ‘தற்போது அவர் தான் மிகப் பயங்கரமான விடயத்தைச் செய்திருப்பதை அறிய வந்துள்ளது. அவர் அப்போதும் மிக நோயாளியாக இருந்தார். இப்போதும் அவர் மிகவும் நோயாளியாகவே உள்ளார்’ என கியூசி டேவிட் எடிங்ரன் நீதிமன்றில் தெரிவித்தார்.

சம்பவம் பற்றி நவநீதன் பொலிஸாருக்கு அவசர அழைப்பை விடுத்தார். தனது மனைவி குழந்தைகளைக் கொலை செய்துவிட்டதாகவும் தெரிவித்தார். பொலிஸார் வந்ததும் நவநீதன் மனைவி கொலைக்குப் பயன்படுத்திய கத்திகளை கட்டில் மெத்தைக்குக் கீழ் வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார். வீட்டைச் சோதணையிட்ட பொலிஸார் கட்டில் மெத்தைக்குக் கீழிருந்த 3 கத்திகளையும் ஒரு கடிதத்தையும் நவநீதன் சசிகலாவிற்கு தங்கள் திருமணத்தின் ஞாபகார்த்தமாக வழங்கிய நெக்லஸையும் கண்டெடுத்தனர்.

அக்கடிதத்தில் நவநீதனுக்கு ‘திருமணத்திற்குப் புறம்பாக இரு உறவுகள்’ இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்ததுடன் ‘நான் கண்ணீர் வர அழுது புலம்புகின்றேன்’, ‘உதவிக்கு யாரும் இல்லை’, ‘நாங்கள் எல்லோரும் இறப்பதே நல்லது’ போன்ற வரிகள் இருந்தது.

பொலிஸார் கைது செய்வதற்கு முன்னர் தனக்கு வாழ விருப்பமில்லை தன்னை கொலை செய்யுமாறு சசிகலா பொலிஸாரைக் கேட்டுக் கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தற்கொலை செய்யும் முயற்சியில் எலிகளைக் கொல்வதற்கு வைக்கின்ற மாத்திரைகளை தான் உட்கொண்டாதகவும் சசிகலா பொலிஸாருக்கு தெரிவித்து இருந்தார்.

1999ல் இங்கிலாந்து வந்த சசிகலாவை இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தமும் பாதித்து இருந்தது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு யுத்தம் தொடர்பான கெட்ட கனவுகள் வந்து போயிருந்ததாகவும் பழைய சம்பவங்கள் மீண்டும் வந்து சென்றதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டு இருந்தது.

சசிகலாவை பரிசோதணை செய்த மூன்று மருத்துவர்களும் அவர் மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததை உறுதிப்படுத்தி இருந்தனர்.

Rita Ariyaratnam with her childrenஇச்சம்பவத்திற்குப் பின்னர் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற சம்பவத்திலும் தனது குழந்தைளுடன் தற்கொலை செய்ய முற்பட்ட தாய் தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்டார். குழந்தைகள் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்திற்கு முன்னர் கனடாவைச் சேர்ந்த இளம்தாயொருவர் தனது கணவனது இறப்பைத் தாங்க முடியாமல் தனது பிள்ளைகளுடன் தற்கொலை செய்ய முயன்றார். இச்சம்பவத்தில் பிள்ளைகள் உயிரிழந்தனர். தாய் காப்பாற்றப்பட்டார்.

கருணாநிதியைக் கண்டித்து போஸ்டர்கள் – பரபரப்பு

20-poster-tamilnadu.jpgவிடு தலைப் புலிகள் தொடர்பாக முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்துக்களுக்குக் கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் சில பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கம் அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்படவில்லை. அதனால்தான் இன்று நாடு நாடாக இலங்கைத் தமிழர்கள் அலையும் நிலை ஏற்பட்டு விட்டது என்று முதல்வர் கருணாநிதி, யாருக்குத் தெரியும் இந்த மெளன வலி என்ற தலைப்பில் முரசொலியில் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் தமிழின உணர்வாளர்கள் என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ஈழ விடுதலைப் போரை கொச்சைப்படுத்தும் கலைஞரே, உங்கள் அறிக்கை மெளனத்தின் வலியா, துரோகத்தின் மொழியா என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

தமிழின உணர்வாளர்கள், மதுரை என்ற பெயரில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. போஸ்டரில் பெரியார் படமும் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர்களை போலீஸார் உடனடியாக அகற்றி விட்டனர்.

20-poster-tamilnadu.jpg

இந்தியா, இலங்கை முதல் டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முடிவு

20112009.jpgஇலங் கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பெரும் இக்கட்டான நிலையில் தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா கடுமையாகப் போராடி வெற்றி தோல்வியின்றி  முடித்து விட்டது.

இன்று சச்சின் புதிய உலக சாதனை ஒன்றை நிகழ்த்தினார். கிரிக்கெட் வரலாற்றில் ஒரு நாள் போட்டியிலும், டெஸ்ட் போட்டியிலும் 30,000 ஓட்டங்களைக் கடந்து அவர் புதிய சாதனை படைத்தார். தனது 20வது வருட கிரிக்கெட் வாழ்க்கையை புதிய சாதனையுடன் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு இன்று சச்சின் பெற்றது 43வது டெஸ்ட் சதமாகும்.

இப்போட்டியில் முக்கிய நிகழ்வுகளாவன.

– மொத்தம் 6 பேர் சதம் அடித்தனர். டிராவிட் (177), டோணி (110), தில்ஷான் (112), பிரசன்னா ஜெயவர்த்தனே (154), கெளதம் கம்பீர் (114), சச்சின் (100).

– மஹேல ஜெயவர்த்தனா இரட்டை சதம் எடுத்தார்.

– சச்சின் ஒரு நாள் போட்டியிலும், டெஸ்ட் போட்டியிலும் 30 ஆயிரம்  ஓட்டங்களைக் கடந்து புதிய சாதனை படைத்தார்.

– 72 ஆண்டு காலமாக இருந்து வந்த 6வது விக்கெட் இணைப்பட்ட சாதனையை ஜெயவர்த்தனாவும், பிரசன்னா ஜெயவர்த்தனாவும் முறியடித்தனர்.

– மஹேல ஜெயவர்த்தனா டெஸ்ட் போட்டிகளில் 9000 ஓட்டங்களைக் கடந்தார்.

India 426 & 412/4 (129.0 ov)
Sri Lanka 760/7d
India 2nd innings 

G Gambhir  c Prasad b Herath  114 
V Sehwag  c Mathews b Herath  51
R Dravid  lbw b Welegedara  38
A Mishra  c Dilshan b Mathews  24 
SR Tendulkar  not out  100  
 VVS Laxman  not out  51  
 Extras (b 12, lb 9, w 2, nb 11) 34     
      
Total (4 wickets; 129 overs) 412 (3.19 runs per over)
Did not bat Yuvraj Singh, MS Dhoni*†, Harbhajan Singh, Z Khan, I Sharma 
Fall of wickets1-81 (Sehwag, 16.6 ov), 2-169 (Dravid, 40.1 ov), 3-209 (Mishra, 55.6 ov), 4-275 (Gambhir, 79.6 ov) 
        
 Bowling
 UWMBCA Welegedara 21 1 76 1
 KTGD Prasad 13 0 56 0  
 HMRKB Herath 40 6 97 2
M Muralitharan 38 6 124 0  
AD Mathews 15 6 29 1
 TM Dilshan 1 0 2 0 
 NT Paranavitana 1 0 7 0

Match details
Toss India, who chose to bat
Series 3-match series level 0-0
Player of the match DPMD Jayawardene (Sri Lanka)
 Umpires DJ Harper (Australia) and AL Hill (New Zealand)
TV umpire AM Saheba
Match referee JJ Crowe (New Zealand)
Reserve umpire SD Ranade

சரத் பொன்சேகாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் -‘லங்கா’ பத்திரிகை: பொன்சேகாவுக்கு மேலதிக பாதுகாப்பு – ஹுலுகல்ல

031109sarathfonseka.jpgகூட்டுப் படைகளின் பிரதானியாகக் கடமைபுரிந்து ஓய்வுபெற்ற சரத் பொன்சேகாவை கொலை செய்ய அரசு முயற்சிப்பதாக வெளியிடப்படும் தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என்றும், மக்கள் விடுதலை முன்னணி ஆதரவான ‘லங்கா’ பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசாங்கம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில், தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல இக்கருத்தினை வெளியிட்டார்.

“சரத் பொன்சேகாவைக் கொலை செய்யும் முயற்சி நடைபெற்று வருவதாகப் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. அதற்கு அரசாங்கத்துடன் தொடர்பிருப்பதாக நேரடியாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளமையானது பாரதூரமான விடயமாகும். ஆகையால் இதனை தீர விசாரிக்க வேண்டியுள்ளது.  பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பொலிஸ் மா அதிபருக்கும் புலனாய்வுப் பிரிவினருக்கும் இது தொடர்பான உத்தரவினை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாகக் குறிப்பிட்ட பத்திரிகை ஆசிரியரின் விளக்கமும் தேவைப்படுகின்றது. அவ்வாறானதொரு செய்தி தமக்குக் கிடைக்குமிடத்து, அவர் உடனடியாகப் பொலிஸாருக்கு அறிவித்திருக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

உயர்தரத்திலான இராணுவ அதிகாரி ஒருவர் ஓய்வுபெற்றதும் அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விட மேலதிகமான பாதுகாப்பை சரத் பொன்சேகாவுக்கு வழங்கியுள்ளதாகவும், அவரது வேண்டுகோளுக்கிணங்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஹுலுகல்ல மேலும் தெரிவித்தார்.

அனோமாவும் ராஜினாமா

anoma.jpgமுன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவும் பதவி விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  இதனை இராணுவத் தரப்பு உறுதி செய்துள்ளது.

ரணவிரு சேவா என்ற படைவீரர்கள் நலத்திட்ட அதிகார சபையின் தலைவராக அனோமா பொன்சேகா இதுவரை காலமும் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.