குலன்

குலன்

மீண்டும் குண்டுச்சட்டிக்குள் குதிரை!: குலன்

Walk_to_Geneva_Sivanthanமனிதனுடைய செயற்பாடுகள் என்றும் குறிக்கோள் கொண்டதாகவும், பலாபலன்களை நோக்கியதாகவும், எதிர்வினை அறிந்ததாகவும் இருத்தல் அவசியமானது. ஒரு செயற்திட்டத்தைத் திட்டமிடும்போது மைல்கற்கள் திட்டமிடப்பட்டு அதுவரை கிடைத்த பலன்கள் மீளாய்வு செய்யப்படவேண்டும். ஒரினத்தின் போராட்டமும் இதுபோன்றதே. நடந்து முடிந்த ஈழத் தமிழர்களின் ஆயுதப்போராட்டமானது தூரநோக்கு, மனிதவிரோதம், ஆத்மீகபலம், புவியியல்சார் ஆழ்ந்த அறிவு, மக்களின் விழிப்புணர்வு, எழுச்சி, போராட்ட குணம், எதிரியின் பலம், பலவீனம், பொருளாதாரபலம், பலவீனம், உலகப்பொருளாதாரம், உலகமயமாதல், இன்னும் எத்தனையோ அடிப்படைக் காரணிகளை அறியாமலேயே ஒரு குருட்டுத்தனமான போராட்டம் குண்டுச்சட்டிக்குள் குதிரையோடி முடிந்தது. நாடும், மக்களும் நாசமாய் போனது. போராட்டப்பாதையில் மைல்கற்களான மக்களின் சுயாதீனமான கருத்துக்கள் கணக்கெடுக்கப்படாது போனதே தோல்வியின் முதற்படி. தமிழனின் தலையில் இடி.

கற்பனையில் எழுதப்பட்ட சினிமாப்படங்களைப் பார்த்து, அம்புலிமாமா, கதைப்புத்தகங்கள் வாசித்து போராடப்புறப்பட்டதே காரணமா? பிரபாகரனின் பேட்டியில் ஒருதடவை சொல்லியிருந்தார். சுபாஸ் சந்திரபோஸ்சைப் பார்த்து வீரம் வந்தது என்று. அப்படியென்றால் சுபாஸ்க்கு என்ன நடந்தது என்பதையும் ஆய்வு செய்யப்பட்டிருக்க வேண்டுமல்லவா?

புலிகளுக்கும் அரசுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோது நோர்வேயிய அன்றைய சமாதானத்தூதரும், இன்றைய அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சூல்கைம் உடன் தனிமையாக உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. எரிக் தனது நோக்கிலும், கடமையிலும் சரியாகவே இருந்தார். அதை அவர் மிகத்தெளிவாக விளங்கப்படுத்தினார். நாம் எந்தமுடிவுகளையும் ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தமாட்டோம். எமது கடமை இருபகுதியினரையும் ஒருமேசைக்குக் கொண்டுவந்து பேச்சுவாத்தைகளினூடாக இருசாராரும் புரிந்துணர்வுடன் ஒரு சமரசமுடிவை எட்டுவதே இதன் நோக்கம். சுருங்கக் கூறின் நாம் வெறும் தரகர் அல்லது புரோகர்கள் மட்டுமே. இருசாராரும் சண்டைதான் பிடிக்கப்போகிறார்கள் என்றால் கவலையுடன் விட்டுவிடுவோம். இருசாராரும் போருக்குப் பணம் சேர்ப்பதும் தெரியும் என்றார். இந்த சிறியவிடயத்தைத் துல்லியமாக விளங்கிக் கொள்ளமுடியாத புலிகள் நோர்வேயிடம் சென்று அரசு அதைச் செய்கிறது இதைச் செய்கிறது என்று குழந்தைப்பிள்ளைகள் அப்பா அவர் அடிக்கிறார், இவர் இடிக்கிறார் என்பது போல குற்றச்சாட்டுக்களை நோர்வேயிடம் கூறி ஒப்பாரி வைத்தது மிக வேடிக்கைக்குரியதே. இதில் முக்கியமான ஒன்று ஏ9பாதையைத் திறக்கவில்லை என்பது புலிகளின் குற்றச்சாட்டு ஆகும். இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கை ஏற்ற ஒரு வெள்ளைப் பெண்மணி என்னிடம் கேட்டார் ஏ9 பாதையைத் திறப்பதற்குத் தானா இத்தனை வருடங்களாக உயிர்பலி கொடுத்தீர்கள், இதுதான் உங்களின் போராட்டத்தின் நோக்கமா என்றார். வெக்கித் தலைகுனிய வேண்டியிருந்தது. புரிகிறதா புலிகளின் போராட்டத்தின் நோக்கமும் குறிக்கோளும். இனியாவது குறிக்கோளுள்ள வெல்லக்கூடிய போராட்டங்களில் ஈடுபடுங்கள்.

புலிகளின் போராட்டம் உலகமயமாக்கப்பட்டது என்று இன்றும் பலர் பறையடிக்கிறார்கள். சரியான நோக்கும் தீர்க்கதரினமும் சமயோசிதபுத்தியும் இல்லாமல் புலிகளால் ஒரு இனமே ஏறக்குறைய அழிக்கப்பட்டது என்பதும் உலகமயமாக்கப்பட்ட உண்மை என்றறிக. அரசுடன் சமபலத்தில் இருக்கிறோம் என்று சோ காட்டி மாயை காட்டி இல்லாத பலத்தை இருப்பதாகக் காட்டியே இன்று தமிழர்களுக்கு இந்த நிலை. இரண்டு நாள் வெளிநாடுகளில் தெருவில் இறங்கிப்போராடியபோதே ஏற்பட்ட மறுதாக்கத்தை அல்லது எதிர்விளைவுகளை, பலாபலன்களை மக்கள் புரிந்து போராட்ட வடிவத்தை மாற்றியிருக்கவேண்டும். செய்தார்களா?

மாவிலாற்று அடியிலேயே விளங்கியிருக்க வேண்டும் தொடர்ந்து புலிகள் நிற்பதா இல்லையா என்பதை. முழுமையாக புலிகளினதும், புலம்பெயர் தமிழர்களிடம் போராட்டம் குண்டுச்சட்டிக்குள் குதிரையோடியது தான் மிச்சம். பங்கர்களுக்குள் பதுங்கி வாழ்ந்த நிலத்துப் புலிகளுக்குத்தான் உலகநிலவரம் தெரியாது என்றால் புலத்துப் புலிகளுக்குமா உலகறிவு அற்றுப்போனது? அமெரிக்கா ஒன்றுமில்லாத ஒருபிச்சைக்காரனுடன் சமபந்திப்போசனம் வைப்பதற்கு என்ன அண்ணன் தம்பியா? எதாவது கொடுக்கல் வாங்கல்கள் உண்டா? எந்தவெளிநாட்டு அரசும் இலங்கையரசுடனேயே நட்புறவை வைத்திருக்கவிரும்பும். காரணம் பொருளாதார, அதிகாரபரவலாக்கம். என்றும் பொருளாதாரமே வெளிநாடுகளின் ஆர்வத்துக்குரியதாக இருந்து வந்திருக்கிறது. பணமுள்ள இடத்தில்தானே நட்பும் உறவும். சொந்த இடத்தையே பாதுகாக்க முடியாத புலிகள் அமெரிக்காவுடன் பேரம் பேச என்ன வைத்திருந்தார்கள். கனவுகாண்பது என்றாலும் அதற்கு ஒரு தகுதி வேண்டாமா? இது என்ன எம்.ஜி.ஆர் படமா கூரையைப்பிரித்து இறங்கு புலிகளை மீட்டெடுப்பதற்கு.

பலர் புலிகளின் தோல்விக்கு இந்தியாவை குறை கூறுகிறார்கள். வரலாற்று ரீதியாக சிறீமா சாத்திரி ஒப்பந்தத்தில் இருந்து ஜே.ஆர், இராஜீவ் ஒப்பந்தத்தினூடாக மகிந்தாவரை அனைத்தும் தமிழர்களுக்கு பாதகமாகவே இருந்தது. இனியும் பாதகமாகத்தான் இருக்கும். இந்தியாவுக்கு இதைத்தவிர வேறுவழியும் கிடையாது. புலிகளுக்கு உதவி செய்து நேபாளம்வரை வந்துவிட்ட சீனாவை முழுமையாக அழைத்து இலங்கையில் இருத்த இந்தியா விரும்பாது. தமிழகமாநில அரசோ மத்திய அரசில் பல்லுப்பிடுங்கிய பாம்புதான். புரியவில்லையா குறிப்புக்காட்டக் கருணாநிதி கருணையற்றுக் கறுப்புக் கண்ணாடி போட்டிருப்பது. இப்படியான குழந்தைப்பிள்ளைக்கு விளங்கும் விடயங்களைக் கூடப்புரிந்து கொள்ள வலுவற்ற புலிகளால் எப்படி ஒருபோராட்டத்தை அன்றும் இன்றும் இனி என்றும் வென்றெடுக்க முடியும்?

புலிகளின் நன்மைக்காகவும், எம்மக்களின் நலனுக்காகவும் பிழைகளை எடுத்துரைத்தவர்கள் அனைவரையும் துரோகி துரோகி என்றார்கள், சுட்டும் தள்ளினார்கள். ஈற்றில் பக்கத்தில் இருந்த துரோகிகளாலேயே புலிகள் தொலைந்தனர். துரோகிகள் என்றும் பக்கத்தில்தான் இருப்பார்கள் என்ற ஒரு எளிய கருத்தைக் கூட உணரமுடியாத புலிகளால் எப்படி ஒரு போராட்டத்தை வென்றெடுக்க முடியும்? எதிரி என்றும் எதிரில் இருப்பதால் நாம் அவனை அவதானிக்கலாம் துரோகி பக்கத்தில்தான் இருப்பான்.

ஈழத்தமிழர்களின் போராட்டம் என்பதை விட புலிகளின் போராட்டம் என்பதே சரியானது. இந்தப்போராட்டம் என்றும் மக்கள்மயமாகவும் இல்லை, உலகமயமாகவும் இல்லை, வெளிநாடுகளின் உயர்மட்ட அரசியலில் நுழையவுமில்லை, ஏன் பேரம் பேசப்படவும் இல்லை. இப்படிக் குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டிய புலிகளால் எப்படி எம்மக்களின் போராட்டத்தை வென்றெடுக்க முடியும்? வாசகர்கள் விரும்பினால் குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டிய விடயங்களை விலாவாரியாக எழுதலாம். இப்படியான வழித்தோன்றல்களின் புதிய குதிரையோட்டமே சிவந்தனின் ஐ.நா நோக்கிய நடைப்பயணம்.

sivanthan3.jpg
இந்த நடைப்பயணத்தை எடுத்துக்கொண்டால் சிவந்தன் என்பவர் ஏன் ஐ.நா நோக்கி நடக்கிறார் என்பது பலதமிழர்களுக்கே தெரியாத ஒன்றாக உள்ளது. அவரே முன்னுக்குப்பின் முரணாகப் பேட்டி கொடுக்கிறார். இது சரியான முறையில் திட்டமிடப்படவில்லை. மக்கள் தொலைக்காட்சி என்று இலவசமாக தொலைத்துத் தொலைத்துக்காட்டும் மக்கள் தொலைகாட்சி எனும் ஜிரிவிக்கே இந்த நடைப்பயணி எங்கு எந்தவழியால் போகிறார் என்பது நேற்றுவரை 29.07.2010 தெரியாது இருந்தது. தொலைபேசி நேயர்கள் சொன்னார்கள் சிவந்தன் பலவிடங்களில் தனியாகவே நடந்து போகிறார். அவருக்கு மக்கள் வந்து ஆதரவு கொடுங்கள் என்று. அதையடுத்து சரியாக 15நிமிடத்தில் சிவந்தனுடன் தொடர்பு கொண்டபோது அவர் சொல்கிறார். மக்கள் ஆதரவு இருக்கிறது என்று. இது மீண்டும் புலி, அரசுப்பாணியையே நினைவு படுத்துகிறது.

இலண்டனில் இருந்து ஐ.நா நோக்கி நடக்கும் போராட்டம் ஒரு வலுவான அகிம்சைப் போராட்டம்தான். ஆனால் அது திட்டமிடப்பட்ட விதம், பயணம் செய்யும் முறை, சிவந்தனுக்கு பேச்சில் தெரியும் அவரது போராட்டம் பற்றிய அறிவு, தெளிவு என்பனவும், என்மக்கள், வெளிநாட்டவர், அரசியல், இராஜதந்திரிகள் மட்டங்களில் இப்பயணம் பற்றிய நோக்கம் என்பன கேலிக்கூத்தாகவே இருக்கிறது. இலங்கையில் உலகசாதனை புரிய தெருத்தெருவாய் நடனமாடிய மடையர்கள் போலவே தெரிகிறது.

அகிம்சை முறைப்படி பயணப்போராட்டம் செய்பவர் அகிம்சையுடன், சாந்தமாக, அமைதியாக நடப்பது முக்கியம். சிவந்தன் நடப்பதைப்பார்த்தால் போருக்குப் போகிறவர் போல் போகிறார். அகிம்சை ஐயோ என்று அலறிக்கொண்டு ஓடிவிட்டது. சரி நடந்து போகும் போது பிரித்தானியக் கொடியுடன் போகும் இவர் தான் பிரித்தானியன் என்று உலகத்தவர்களுக்குக் கூறுவதுதானா இப்பயணத்தின் நோக்கம்? மொழியறிவற்றவர்கள் கூட குறிப்பறிய ஏன், எதற்கு நடக்கிறார் என்ற குறிப்பு எதுவுமே கிடையாது. குறைந்தபட்சம் முதுகில் கூட ஒரு குறிப்பெழுதிப்போட முடியாமல் போனதா? மனமில்லாமல் போனதா? ஆங்கிலத்தின் கொடியைக் காவிச்செல்லும் இவர்களுக்கு ஆங்கிலத்தில் நாலெழுத்துத் தெரியாமல் போனது ஏன்? யாருக்குக் காட்ட இந்தப்பயணம். இதைக்காட்டி புலத்துப் புண்ணாக்குகளிடம் மீண்டும் பணம் பறிக்கவா? ருசிகண்ட பூனைகள் சும்மாவா இருக்கும்?

ஐ.நாவை நோக்கி நடக்கும் இவரை எதிர்பார்த்து ஐ.நாவின் பொதுச்செயலாளர் பாங்கி மூன் நிற்கிறார்போலும். சிறையில் வாடுபவர்களை விடுவிக்க வேண்டும், போர்குற்றங்களுக்கு நீதி வேண்டும் என்று கூறுமிவர் எந்த நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்திருந்தார்? பரமேஸ்வரன் மைக்டொனால்ஸ் வழக்குபோல் சாட்சியில்லாத வெற்றிகள் கிட்டலாமல்லவா? ஒருநாட்டில் உயர்நீதி மன்றத்தால் தனக்குச் சரியான தீர்ப்பு கிடைக்காத தனிமனிதர்கள் வழக்குகளை மனித உரிமைகள் நீதிமன்றுக்குக் கொண்டு போகலாம் என்பதை அறியவில்லையா? இதைச் செய்தார்களா? பிரபாகரன் பிணத்தை எம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உரிமை கோரவலுவற்ற உறவுகளும், நட்புகளும், புலிவீரர்களும், புலம்பெயர்புலிகளும் இருக்கும் போது குண்டிச்சட்டிக் குதிரையோடுவதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்.

ஏதாவது தாக்கங்களை உலக அரசியல் மட்டங்களில் ஏற்படுத்துமாறு புதிய முறைகளைக் கையாளுங்கள். கொலஸ்ரோல் உடலில் கூடிவிட்டது என்பதற்காக தமிழரைச் சாட்டி போராடவேண்டாம். இதுவும் ஒரு புலிப்பாணிதான். போராட்டம் தமிழ்மக்களுக்கு என்று கூறி புலிகள் மாபியாவாக வளர்ந்து விழுந்தது தான் மிச்சம். மக்களுக்காகப் போராடியவர்கள் தம்மக்களையே பயணக்கைதிகளாய் வைத்திருந்த நாசகார, நயவஞ்சகச் செயல் புலிகளைத் தவிர உலகில் யாரும் செய்யவில்லை. இப்படியான விவஸ்தை கெட்ட செயல்களை விமர்சித்தால் இன்று ஒரு புதுப்பட்டம் கொடுக்கிறார்கள் அரசாங்கத்தின் ஆள் என்று. புலிகளும், புலிப்பினாமிகளுமே இன்று அரசின் கையாளாக உள்ளனர். எப்போ மாடுசாகும் உண்ணிகளரும் என்று இருந்திருக்கிறார்கள் போலும்.

சிவந்தனிடம் கால்கடுக்கவில்லையா? களைக்கவில்லையா? என்ற கேள்விகளைக் கேட்டபோது அவரின் பதில் குழந்தைப்பிள்ளைக் கூட குலுங்கிச் சிரிக்கவைக்கும். களையைப்பார்த்தால் விடுதலை கிடைக்காதாம். இது விடுதலைப்பயணமா? நீதிகேட்டு பயணமா? ஒன்றுமாய் விளங்கவில்லை யாராவது விளங்கினால் சொல்லுங்கள். இப்படித்தான் எங்களுக்கு ஒன்றும் விளங்காமலே எங்கள் இனத்தையும் நிலத்தையும் அழித்தது போதும். இனியாவது திட்டமிட்டு மக்கள் மயப்பட்ட, இராஜதந்திரரீதியாக, அறிவுரீதியான போராட்டங்களில் ஈடுபடுங்கள். சிலவேளைகளில் விட்டுக் கொடுப்பது கூட இராஜதந்திரம்தான்.

இன்று போரில் விழுந்த இலங்கையையும், சிங்களப்பேரினவாத அரசையும் முண்டு கொடுத்து நிமிர்த்துவது புலிகள் தான். ஈழம் கேட்டுப்போராடியவர்கள் கொழும்பில் வீடுகள் வாங்கினார்கள். எல்லைகள் பறிபோக தமிழர்களின் உறுதிகளைப்பிடுங்கினார்கள். இன்றும் இலங்கைப் பேரினவாத அரசுக்கும் இராஜபக்ச கொம்பனிக்கும் தாராளமாக அள்ளிவழங்குவது புலிகளே. தமிழீழத்தின் தேசியச்சின்னங்கள், சூரியதேவன் பிரபாகரன் வளர்த்த வாரிசுகள் 2009 மே 18 மண்வேண்டி, மண்ணாய், மண்ணில் தலைவன் விழுந்த இரத்தம் காயமுன் விமானரிக்கட்டுகளைப் பதிவுசெய்தார்கள். தலைவன் விழுந்த மண்ணையோ, தண்டிக்கப்பட்ட அப்பாவி மக்களையோ பார்ப்பதற்கல்ல. வியாபாரத்துக்கும் சுற்றுலாவுக்குமாக விமான இருக்கைகள் நிரம்பி விட்டன. இலங்கைத் தயாரிப்புக்களை பகிஸ்கரியுங்கள் என்று வானுயரக்கத்திய புலிகளும் பினாமிகளுமே எயர்லங்காவில் விமான இருக்கைகளைப் பதிவு செய்துள்ளார்கள் என்பதையும் அறிக. தமிழுணர்வும், தேசியம், சுயாட்சி, சுயநிர்ணயம் என விடுதலைவேட்கை பொங்கி வழிகிறது. வாருங்கள் நாங்களும் போய் அள்ளுவோம். ஜிரிவியில் ஒரு விளம்பரம்:- “வாணி சீ பூஃட்சே இனி எம்தேசிய உணவு”. கடலுணவு என்று தமிழில் விளம்பரப்படுத்த முடியாத, அன்றித் தெரியாத தமிழர்களுக்கு வாணி சீ பூஃட் தேசிய உணவாம். சுயமிழந்த தேசியம் தேவடியாளாகி தெருத்தெருவாய் கிடக்கிறது. விலைகூறி மலிவுவிலையில் தேசியம் விற்கப்படுகிறது. முடிந்தால் நீங்களும் வாங்குங்கள்.

இன்று இலங்கைப் பேரினவாத அரசுக்கு தேசியம் பேசிய புலம்பெயர்ந்த புண்ணாக்குகள் கொடுத்த பணம் ரிஆர்ஓ வினூடாகவம் கே.பி யினூடாகவும் போய்விட்டது. மீதியை புலம் பெயர்ந்த புண்ணாக்குகள் விமானம் எடுத்துப் போகிறார்கள் அன்னியச் செலவாணியை அள்ளி இறைப்பதற்கு. நான் பிறந்த சமூகமே ஏறிமிதிப்பற்குக் கூட இலாயக்கற்றுப்போனாயே போ. முட்டாள் சிங்களவன் என்று குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டி கொட்டமடித்த சமூகமே சிங்களவன் எட்டிக்குட்டிவிட்டு கிட்டநின்று சிரிக்கிறான் உன் செய்கைகளைப் பார்த்து. உன்னைவைத்தே உன்னையழிக்கும் செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப் படுகிறது கொட்டிக் கொடுங்கள். வாழ்க தேசியம், சுயாட்சி, சுயநிர்ணயம்.

கூனிக்குறியபடி குலன்.
30.07.2010

தமிழ் மக்கள் வாக்குகள் யாருக்கு?: குலன்

Sivajilingam_M_Kஎதிர்வரும் தை மாதம் இலங்கைக்கான ஜனாதிபதித் தேர்தலில் சிவாஜிலிங்கம் நிற்கதான் வேண்டுமா? இதனால் ஏற்படும் நன்மை தீமைகள் என்ன? என்னவிதமான எதிர்வுகளை நாம் எதிர்பார்க்கலாம்? சிவாஜிலிங்கம் நிற்பதனால் அரசியல் உலகிற்கு நாம் காட்டும் கணக்கு என்ன? எதை மக்கள் விரும்புகிறார்கள்? என்பது போன்ற தகவல்களை என் அறிவுக்கு எட்டிய வரையில் தேசம்வாசக வட்டங்களுக்குச் சமர்ப்பிக்கலாம் என்று எண்ணுகிறேன்.

தமிழர் தேசிய கூட்டமைப்பு (த.தே.கூ-ரிஎன்ஏ) தனது பிரதிநிதி ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தாத பட்சத்தில் தான் சுயேட்சையாகத் தேர்தலில் நிற்பேன் என்று கொடுத்தவாக்கைக் காப்பாற்ற சிவாஜிலிங்கம் (சிவாஜி) தேர்தலில் நிற்கிறார். அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குகளைக் காப்பாற்றுவது என்பது ஒரு பெரியவிடயம். சிவாஜியின் கூற்றுப்படி நிச்சயமாக ஒரு தமிழன் தேர்தலில் நிற்கவேண்டுமா? ஏன்? வெற்றி பெறமுடியாத தேர்தலில் நிற்பதால் என்ன பலன்?

தேர்தல் வெறும் வெற்றிக்காகவும் ஜனாதிபதியாவதற்கும் நடத்தப்படும் ஒன்றல்ல. மக்களின் கருத்தையும், நிலைப்பாட்டையும், தேவைகளையும், அபிலாசைகளையும், உரிமைகளையும் வெளிக்கொணரும் உண்மை ஊடகமே தேர்தல். த.தே.கூட்டணியினர் கடைசி நிமிடம்வரை அரசியல் நிலைப்பாடு எதுவுமின்றி சரியான தெளிவான முடிவின்றி நின்ற வேளைதான் சிவாஜி தன்முடிவை எடுத்தார். இதுகூட எமக்கு ஒரு சரியான பதிலைச் சொல்கிறது. த.தே.கூ யிடம் இன்னும் சரியான அரசியல் போக்கும், தெளிவும் இல்லை என்பது தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது. இத்தேர்தலில் நிற்பதாலும், மறுப்பதாலும் எற்படும் நன்மை தீமைகளை தமிழ்மக்களுக்கத் தெளிவுபடுத்த வேண்டிய கடமை தமிழர்களின் பெருங்கூட்டமைப்பான த.தே.கூட்டமைப்புக்கு உண்டு. இதை இவர்கள் சரியாகச் செய்யவில்லை. மாறாக வன்னியில் எம்மக்களை கொன்று குவித்து இரத்தம் தோய்ந்த கைகளுடன் நிற்கும் மகிந்த, சரத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கிறார்கள். பேச்சுவார்த்தையைப் பிழை எனக்கூறவில்லை. இது இராஜதந்திர நடவடிக்கைகளின் முன்னெடுப்பாக இருந்தாலும் மக்கள், மனம், மானம், எதிர்காலம், உணர்வென்றும் பலவிடயங்கள் இருப்பதை மறந்து விட்டார்கள்.

மனுத்தாக்கல் முடிந்து தேர்தல் பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்ட நிலையிலும், இன்னும் த.தே.கூ தன்முடிவு என்ன? நிலைப்பாடு என்ன? மக்கள் என்ன செய்ய வேண்டும்? தாம் யாரை ஆதரிக்கப் போகிறோம்? தேர்தலை நிராகரிக்கப் போகிறோமா? என்ற எந்த வினாக்களுக்கும் பதில் இல்லாமாலேயே நிற்கிறார்கள். இப்படியான நொண்டிக் குதிரைகளை நம்பி தமிழ்மக்கள் எப்படி அரசியல் ஆற்றைக் கடப்பது?

30 000 தமிழ்மக்களின் ஆண்டுத்திவசம் முடியுமுன்னரே உதிரம் தோய்ந்த முகங்களுடனும், வெட்டி வீழ்திய வாள்களுடனும் வோட்டுக் கேட்டு வந்து நிற்கும் இருபெரும் சிங்களக் கட்சிகளுக்கு எந்த மனத்துடன், எந்த முகத்துடன் வோட்டுப் போடமுடியும்? தமிழ்மக்கள் வேட்டுப் போட்டால் அவர்கள் செய்த கொலைகளை, சர்வதேச போர்குற்றங்களை தமிழர்கள் சேர்ந்து மூடிமறைக்கிறீர்கள் என்று ஆகாதா? தமிழர்களுக்கென்று ஒரு அரசியல் தேவையில்லை, சிங்களப் பேரினவாத்திற்கு தலைவணங்கி, தலைகுனிந்து, வெட்டுவாள்களுக்கு இரையாகத் தயார் என்று சொல்லாதா? இப்பெருங் கட்சிகளை விட்டால் வேறு எந்தக்கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பது? விக்கிரமபாகுவின் நவசமாசக்கட்சிக்கு வாக்களிக்கலாம் என்கிறீர்களா? அதுவும் வெற்றி பெறமுடியாத கட்சியல்லவா?

தமிழர்களைத் தீவீரவாதிகளாக, திராவிடராக துவேசிக்கும் தெற்கில் தனித்து நின்று தமிழ்மக்களின் தனியுரிமை, தேசியம், சுயநிர்ணயம், மனிதம் என்பவற்றைப் பற்றிப் பேசியவர் போராடியவர் விக்கிரமபாகு. இவருக்கு தமிழர்களின் வாக்குக்கள் போவதால் எந்த ஒரு பெருமாற்றத்தையோ திடமான செய்தியையோ யாருக்கும் சமர்பிக்காது. சில தமிழ் சிங்கள வாக்குகளால் திடமான ஒரு முடிவுக்கு வரமுடியாத நிலை தென்படும். இதனால் சிவாஜி நிற்பதால் புலம்பெயர் தமிழர்களுக்கும், அரசியல் அரங்கிற்கும் தமிழர்களின் செய்தியை வெளிக்கொணர உதவும். அங்குள்ள தமிழ்மக்களின் தீர்ப்புத்தான் எம்மரின் தீர்பாக இருக்கவேண்டுமே அன்றி புலம்பெயந்தவர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் ஈழம்வாழ் தமிழ்மக்களின் தீர்வாக இருக்கமுடியாது. இருப்பினும் புலத்துப் பொழுதுபோக்குகள் தேர்தல் விஞ்ஞாபனங்களை உருவாக்கி விளையாடுகிறது. புலி சிதைந்து பூனையாகி பின் பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்குச் சீவன் போகும் நிலைதான் இன்று இருக்கிறது.

சிவாஜி தேர்தலில் நிற்பதால் த.தே.கூட்டணியினரும் தமிழ் மக்களும் மகிழ்ச்சியடைய வேண்டியவர்களே. இன்நிலையில் த.தே.கூ தன் நடுநிலையைப் பேணி நாளை வெற்றிபெறும் ஜனாதிபதியுடன் இராஜதந்திரத் தொடர்புகளைப் பேணி தமிழ்மக்களின் உரிமைகளை, அபிலாசைகளை வென்றெடுக்க இன்று சிவாஜி தேர்தலில் நின்று களம் ஒன்று திறந்தது சிறந்ததே. இதை ஏன் த.தே.கூ விளங்கிக் கொள்கிறார்கள் இல்லை. சிவாஜியின் தேர்தல் நிலைப்பாடு இரண்டு பெரும் சிங்களக் கட்சிகளுக்கும் ஈபிடிபி, கருணா, பிள்ளையான் போன்றோருக்கும் பெரும் பிரச்சனை ஏற்படுத்தியுள்ளது. காரணங்கள் பின்வருமாறு:

தமிழர்களின் வாக்குகளுக்காகவே ஈபிடிபி, கருணா, பிள்ளையானை மகிந்த வைத்திருக்கிறார். தமிழரின் வாக்குக்கள் பிரிக்கப்பட்டோ அன்றேல் மொத்தமாக சிவாஜிக்குப் போடப்பட்டாலோ மகிந்தவின் செல்வாக்கை மேற்கூறியவர்கள் இழப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழர்களின் வாக்குகள் சிதறுண்டு போவதால் 50வீதத்தை ஒரு தனிக்கட்சி எதுவும் பெறாமல் போகும். வோட்டுப்போட்டோர் தொகை அதிகரித்திருக்கும் ஆனால் வோட்டுகள் சிதறிப்போயிருக்கும் 50விதத்தை எப்படித் தேடிப்பொறுக்குவது. இன்னுமொரு காரணம் 22 கட்சிகள் தேர்தலில் நிற்பதால் சிங்கள வாக்குகளும் சிதறுண்டு போகும். அங்கேயும் எப்படி 50வீதத்தைத் தேடுவது? சிவாஜியின் எண்ணம் எதுவாக இருந்தாலும் தேர்தலைக் குழப்பி, கலக்கி விட்டிருக்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது. சிவாஜி தான் இன்றை தேர்தல் கீரோ. இவர் ஜனாதிபதியாகப் போவதில்லை என்பது திண்ணம். ஆனால் அரசியல் உலகிற்கும், புலம்பெயர் தமிழர்களுக்கும், பிராந்திய வல்லாதிக்கங்களுக்கும், சர்வதேசத்துக்கும் சுட்டிக் காட்டப்போகும் சமிஞ்ஞைகள் பல. சுருங்கக் கூறின் ஒரு தேர்தல் கலகக்காரனும், பலிக்கடாவும் ஜனாதிபதித் தேர்தலில் நின்ற தமிழனும் சிவாஜி ஆகும்.

வெள்ளைக்காரன் நாட்டைவிட்டு போனதின் பின்பு தமிழர்களின் தலைகளை உருட்டியே இலங்கையில் தேர்தல் வெற்றிகள் இருந்தன. தமிழ்ஒழிப்பு, சிங்கள சிறீ அமைப்பு, பிராந்தியக் குடியேற்றங்கள், கலகங்கள், கலவரங்கள், போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம், சமாதானத்துக்காகப் போர் இப்படியெல்லாம் தமிழர்கள் தலைகளை உருட்டித்தான் சிங்களப்பேரினவாத அரசியல்கட்சிகள் தேர்தலில் தன்தலையை நிமிர்த்தின. இந்தத் தேர்தல் அதைவிட மோசமான ஒன்றே. இம்முறை தாமாகவே தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டு, மார்புதட்டிப் பெருமைகொண்டு எம்மக்களிடமே வந்த போடு வோட்டு என்று கேட்பதுதான் வேதனைக்குரியது. உன்தாயை, உன்சகோதரனை நான்தான் கொன்றேன் எனக்கு வோட்டுப் போடு என்று கேட்கிறார்கள் போடப்போகிறீர்களா? இவர்களை எப்படி நம்பப் போகிறீர்கள்? எம்மைப் போட்டி போட்டுக் கொன்று பெருமை கொண்டவர்களுக்கு போய் போடுவோமா வோட்டு அல்லது வேட்டு?

வன்னியில் அகற்றப்படாத பிரேதங்கள் இன்றும் மணத்துக் கொண்டுதான் இருக்கின்றன. அகதியாய் அடைக்கப்பட்டவர்கள் இன்னும் தம்மனத்தை உடைத்துக் கொண்டு வெளியில் வரவில்லை. சரத், மகிந்த இருவரின் கைகளில் இருக்கும் உங்கள் உறவுகளின் உதிரங்கள் உலகின் கண்ணில் காட்டப்படமுன் மறைத்து, குற்றவாளிகளை மன்னித்து, எறிவதை எடுத்து நக்கி நீங்களே உங்கள் உறவுகளின் உதிரத்தைக் களுவப்போகிறீர்களா?

இன்று சிவாஜி தேர்தலில் நிற்பதால் எமக்குக் கிடைக்கும் சமிஞ்ஞைகளும், அறிந்து கொள்ளக்கூடிய உண்மைகளும்:
1.த.தே.கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடு தெளிவாகத் தெரிகிறது. அரசில் தெளிவும், எதிர்காலத் திட்டமும், தீர்க்க தசிசனமும், முடிவெடுக்கும் திறனும் அவர்களிடம் இன்னும் இல்லை என்பது. எதிர்கால அரசியற்பயணம் அவர்களுக்குப் பயமாகவே இருக்கிறது.
2.சிங்களக் கட்சிகளுக்கு எம்மக்கள் பழக்கப்படாது வைத்திருப்பதற்கும் ஒரு வழிசமைக்கப்பட்டிருக்கிறது.
3.சிவாஜி தானே பலிக்காடா ஆவதனால் த.தே.கூட்டமைப்பு தன்னை தமிழர்களின் பிரதிநிதியாகவும் நடுநிலை வாதியாகவும் காட்டிக்கொள்வதூடு நாளை வெற்றிபெறும் ஜனாதிபதியுடன் பகைமை உணர்வின்றி இராஜதந்திர உறவுகளை தமிழர்களுக்காகப் பேணலாம்
4.தமிழர்களின் வோட்டுக்கள் எம்மக்களைக் கொன்ற உதிரம் தோய்ந்த கைகளுக்குப் போகாமல் காக்கலாம்.
5.சிவாஜிக்கு விழும் வோட்டுகளை வைத்து இன்று தமிழ்மக்களின் மனோநிலை, எதிர்கால எண்ணம், வாக்களிக்காத வாக்களிக்க முடியாதவர்கள் நிலை, போர்குற்றவாளிகளை எப்படித் தமிழ் மக்கள் பார்க்கிறார்கள் என்ற சமிஞ்சைகளை நாம் பெறலாம்.
6.தமிழீழம் வேண்டுமா? வேண்டாமா என்று சாட்டுக்கு வோட்டுக்கேட்டு திரியும் புலம்பெயர் அரசியல் பொழுது போக்காளர்களுக்கும் பதில்கள் இங்கே கிடைக்கும். அங்கே வாழும் மக்களின் மனங்களைகளை ஊகிப்பதற்காவது இத்தேர்தல் உதவும். (அங்கே உள்ள மக்களின் தேவையை அறியாமல் இங்கே தேர்தல் வைப்பது அங்கே பசிப்பவனுக்கு இங்கே நாம் சாப்பிடுவது போன்றது. இதனால்தானோ என்னவோ புலத்தில் ஆடடித்துக் கூடிக் குடிக்கிறார்கள். இவர்கள்தான் அன்று பிரபாகரனை மேதகுவாக்கிய மேன்மையாளர்கள். அவதாரமாகக் கருதிய அரைகுறைகள். சூரியதேவன் என்று வர்ணித்த வக்கிரகங்கள்.)
7.சிவாஜி, விக்கிரமபாகுவுடன் இணைந்த தேர்தலில் நிற்பது நாம் சிங்கள மக்களுடன், அரசில்வாதிகளுடனும் இணைந்து ஒருஐக்கிய இலங்கைக்குள்ளும் செயற்படமுடியும் என்ற சமிஞ்ஞையை தெளிவாகக்காட்டுகிறது. இது உடனடியான சரியான விளைவுகளைத் தராவிட்டாலும் எதிர்காலத்தில் சிங்கள மக்களையும், அரசியல்வாதிகளையும் சிந்திக்கத் தூண்டும். நாளை தோன்ற இருக்கும் வர்க்கப்போராட்டத்திற்கு தமிழர், சிங்களவர் இருசாராரும் கைகோர்த்து நின்று போராடத் தூண்டும். (இப்படியான இணைவுப்போரைப் புலிகள் நிச்சயமாகச் செய்திருக்கவேண்டும். செய்யவில்லையே!!! செய்திருந்தால் உலகமயமாதில் தமிழீழக் கோரிக்கை உடைக்கப்படாது வர்க்கப் போராட்டமாய் இலங்கை முழுதும் வியாபித்திருந்திருக்கும்.)
8.சிவாஜி, விக்கிரமபாகுவை ஆதரிப்பதால் தமிழர்களின் சிலவாக்குகள் சிதறிப்போனாலாலும் கொடுக்கப்படும் சமிஞ்ஞைகள் தெளிவாத்தானே உறுதியாகவுமல்லவா இருக்கப் போகிறது.
9.வாக்குக்கள் சிதறுவதனூடாக நிச்சய வெற்றி உறுதியற்று விடும். இரண்டாம் தெரிவுச் சுற்றில் சிறுபான்மை இன, மத வாக்குக்களே ஜனாதிபதியைத் தீர்மானிக்கப் போகிறது. இங்கே சிவாஜியின் பங்கு மிக மிகப்பெரியதே.
10.மக்களின் பாவங்களைச் சுமந்த யேசுபோல், தான் கறுப்பாடாகி தமிழ்மக்களை நிர்கதியாக விட்டுப்போன புலிகளுக்குத் தோள்கொடுத்து குச்சு விளக்கொன்றைக் கொண்டு வந்திருக்கிறார் சிவாஜி.
11.இருபெரும் சிங்களக்கட்சிகளுக்கு தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டிய தேவையின்றி, போர்க்குற்றங்களை மன்னித்தோம் என்ற சமிஞ்ஞைகளின்றி, தமிழ்மக்களின் கருத்துக்களைத் தெளிவாக வைப்பதற்கு சிவாஜி களம் தந்திருக்கிறார்.
12.எமது அபிப்பிராயங்களை, அபிலாசைகளை சிங்களஅரசியல் சார்ந்துதான் செய்யவேண்டும் என்று இன்றை நிலையை சிவாஜி உடைத்திருக்கிறார்.
13.தமிழ்மக்கள் சிங்களத்தமிழ் அரசியல்வாதிகளால் மட்டுமல்ல போராட்டம் என்ற போர்வையில் இயக்கங்களாலும் ஏமாற்றப்பட்டே வந்திருக்கிறார்கள். இனியாவது சிந்தித்து சுயமாக முடிவெடுத்து இந்த அரசியல் களத்தில் ஊடகங்களின் உண்மை நிலை அறிந்து இம்முறையாவது சிவாஜி திறந்து வைத்த களத்தில் களமாடுவார்களா? சிவாஜிக்குத்தான் வோட்டுப் போடுங்கள் என்று கூறவில்லை. அங்குள்ள மக்களின் சரியான களமாடல் புலத்துத் தமிழர்களுக்கும், சர்வதேசத்துக்கும் சிங்களமக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சரியான செய்தியைச் செல்லும்.
14.தேர்தலைப் பகிஸ்கரித்திருக்கலாம் என்கிறீர்களா? பகிஸ்கரிப்பதனால் மகிந்த, சரத்துக்கு ஒருபெரும் தலையிடி குறைந்துவிடும். கட்சியில் இன்று தொங்கும் தமிழ்குழுக்களின் மதிப்பும் மங்கிவிடும். ஆனால் தேர்தலைப் பகிஸ்கரிப்பதனால் தமிழர்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியம் சிங்களக்கட்சிகளுக்கு இருக்காது போய்விடும். சிங்கள மக்களின் வோட்டுக்களில் அவர்கள் தங்கியிருப்பதால் தேர்தலின் முன்னும் பின்னும் தமிழர்களின் குரல்களுக்குச் செவிமடுக்க வேண்டிய தேவை அற்றுவிடும். தமிழர்கள் பகிஸ்கரிப்பதனால் வோட்டுக்கள் எந்தப்பக்கமும் போய் எதிரியைப் பலப்படுத்தாது என்பதை சிங்கள இருபெருங்கட்சிகளும் உணர்ந்திருக்கும். அதனால் வெற்றியை நிர்ணயிப்பவர்கள் தனிச்சிங்களவர்களாகவே இருப்பார்கள். ஆதலால் தமது கவனத்தையும், ஜனாதிபதியான பின் தம் நன்றிக்கடனையும் சிங்கள மக்களுக்கே செய்வார்கள். தமிழர்கள் தேவையற்றவர்களாக எதிரிகளாவே தொடர்ந்து பார்க்கப்படுவார்கள். இன்றைய நிலையில் பேரினவாதக்கட்சிகளின் கவனம் தமிழர்களின் வோட்டுகளில் இருக்கிறது. முக்கியமாக யாழில் மகிந்தவிற்கு டக்லஸ் ஊடாக விழும் வாக்குக்கள் சிவாஜியால் தடுக்கப்படப் போகிறது. இது சிவாஜியின் உயிருக்கு உலைப்பாகவும் இருக்கலாம்.
15.அன்றைய போர், இன்றைய தேர்தல் பலாற்காரம் எல்லாம் மக்களுக்கு என்ன சொல்கிறது வெற்றிக்கு வழி பலாற்காரமே என்று. ஆதனால் மக்கள் தொடர்ந்து பலாற்காரத்தின் பாதையிலேயே பிரச்சனைகளுக்கு முடிவு காண முயல்வர். இது மனோவியல் உண்மை. இதன் தொடர்ச்சியான வளர்ச்சி இன்னுமொரு ஆயுதப் போராட்டமாக உருப்பெறும். 72ல் செகுவேரா, 76ல் நாங்கள். செகுவேராவின் ஆயுதப்போராட்டம் 70தின் கடைசிப்பகுதியில் முற்றாக முறியடிக்கப்பட்ட போதும் அந்த ஆயுதங்களை குறுகிய காலத்தில் நாம் எடுத்தோமல்லவா. இதைத் தவிர்க்க சரியான அரசியல் அடித்தளத்தை நிறுவுவது சிங்களவரசின் கடமையாகும்.
16.சிவாஜியின் கொள்கைகளோ, கோட்பாடுகளோ, கடந்தகால அரசியலோ சரி என்று நான் கருதவில்லை. சுயேட்சையாக ஒரு வேட்பாளர் நிற்பது தவறும் இல்லை என்கிறேன். சிவாஜி நிற்பதனால் வோட்டுப் போடுவர்கள் தொகை கூடப்போகிறது. சிங்களப் பெருங் கட்சிகளுக்கு விழும் வோட்டுக்கள் பிரியப்போகிறது. இதனால் 50வீதம் சாத்தியமற்று விடப்போகிறது. இப்போ இவ்விரு பேரினவாதக்கட்சிகளும் தமிழர்களைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்க முடியுமா?
17.சிவாஜி கடந்தகாலத்தில் என்ன அரசியலைக் கொண்டிருந்தார் என்பதை விட இன்றைய அரசியல் சூழ்நிலைதான் களத்தைத் தீர்மானிக்கிறது, தீர்மானிக்க வேண்டும்.
18.சிவாஜிக்கு விழப்போகும் வோட்டுக்கள் எமக்கு பல விடயங்களைச் சொல்லும்.

•தமிழ்மக்கள் போர் வெறியர்களை மன்னித்தார்களா?
•சிங்களப் பேரினவாத அரசியலுக்குப் பயந்து பணிகிறார்களா? விரும்பித்தான் இணைகிறார்களா?
•இராமன் ஆண்டாலும் சரி இராவணன் ஆண்டாலும் சரி என்று இருக்கப் போகிறார்களா?
•புலிகளின் போக்கை தொடர்ந்தும் ஆதரிக்கிறார்களா?
•தேசியமா? தமிழ்தேசியமா? தமிழர்களின் தெரிவு?
•எதிர்காலத்தில் தமிழர்களின் பாதை எப்படி வகுக்கப்படவேண்டும் என்பதற்கான ஆரம்பம்
•வட்டுக்கோட்டை தமிழ்ஈழமா இல்லையா என்ற புலம்பெயர் தமிழர்களுக்கான பதில்…
•பலபிரதமரைக் கொண்ட சுழற்சிமுறை ஜனாதிபதியாட்சி முறையை மக்கள் அறிவதற்கான வாய்ப்பு

பலகேள்விகளுக்கு விடை இத்தேர்தலில் இருக்கிறது. இதில் சிவாஜி பலிக்கடாவாகி ஒருகளம் திறக்கப்பட்டிருக்கிறதே தவிர தேர்தலின் பதில் என்ன என்பது தான் எமது எதிர்பார்ப்பு. ஈழத்துச் செய்திகளின்படி வன்னிமக்கள் மனங்களில் போரின் கொடுமையும், கடுமையும் இன்னும் விடவில்லை. தேர்தல் அவர்களுக்கு வந்தாலும் சரி, விட்டாலும் சரி என்ற நிலை. தேர்தலுக்கு வோட்டுப்போடப் போவதற்கே நல்ல உடுப்பில்லா நிலை. சில பின்தங்கிய தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் அரசு சில உதவிகளை டக்லஸ் மூலம் செய்வதால் அவர்கள் மகிந்தவுக்கு வோட்டுப் போடுவார்கள் என்று தெரியவருகிறது. யாழ்பாணம் வெளிநாட்டுப்பணங்களின் களியாட்ட கூடமாய் ஆகிவிட்டபடியால் சாப்பிடமட்டும் வாய்திறக்கும் நிலையில் சிலர். கூத்தடிக்கும் நிலையில் பலர். வன்னிமக்கள் அழிவைப்பற்றி யாழ்மக்கள் ஆதங்கப்படுவதாகத் தெரியவில்லை. தமிழ்பகுதிகளில் மகிந்தவுக்கும் பலம் இருப்பது போன்று தெரிகிறது. சரத்தும், சிவாஜிலிங்கமும் அதிகசக்தியை அங்கே பயன்படுத்த வேண்டியிருக்கும். மட்டக்களப்பு துப்பாக்கி அமைச்சர்களால் வாய் பூட்டப்பட்டு இருக்கிறது. அங்கும் அடாவடி வாக்குகள் மகிந்தவின் பக்கமே இருப்பதற்கான சந்தர்பமே அதிகமுண்டு. சரத் தன்பலத்தை தென்பகுதியில் இருந்தே பெறவேண்டியிருப்பதால் சரத் ஜனாதிபதியாக வந்தாலும் தம்மினத்துக்கு மட்டுமே நன்றியுள்ளவராக இருக்கக்கூடிய நிலைதான் தென்படுகிறது. எந்தநேரமும் இன்நிலைகள் மாற்றப்படலாம். அரசியல் ஒரு சதுரங்கமே!.

என்கருத்தைச் சொல்லிவிட்டேன் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

-உங்கள் குலத்திலும் நிலத்திலும் ஒர் குலன்-

நோர்வே தமிழர் அவையில் அரை அவியல்கள் : குலன்

Aravinthan_Ki_PiBallotsBox_VKR1976சந்திரனுக்கு நாய், குரங்குகளை அனுப்பிப் பரிசோதிப்பது போல் ஈழத்தமிழர் பிரச்சனைகள் நோர்வேயில் தான் பரீட்சிக்கப்படுகின்றன. காலாவதியான வட்டுக்கோட்டையைக் கொண்டு எவ்வளவு காலத்துக்கு மக்களை ஏமாற்றி மாறிமாறி ஓடப்போகிறீர்கள். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைக் கொண்டுதிரிந்த கி.பி அரவிந்தனே அதை கிழித்து பிரித்து எறிந்துவிட்டாராம். இதற்கு அவையினரின் அவியல் என்னவென்றால் கிபியை யாரோ வாங்கிவிட்டார்கள் என்பதுதான். புலியின் காலத்தில் மாற்றுக்கருத்துக் கொண்டவர்களைத் துரோகிகள் என்றார்கள். இன்று விலைபோனவர்கள் என்கிறார்கள். இப்படிக் காலத்திற்குக் காலம் கடைவிரித்து நன்றாகவே புலிவியாபாரம் செய்கிறார்கள். இறுதியில் புலம்(ன்)பெயர்ந்தவர்கள் புலிகளையே வித்துவிட்டார்கள்.

நோர்வேயில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் கதாசிரியர்கள் என்று பலர் இருந்தபோதிலும் சென்ற 15.11.2009 நடைபெற்ற சுத்தமாத்துத் தேர்தலை மக்கள் மத்தியில் போட்டுக் கிழிப்பதற்கு ஒருவரும் முன்வராதது வேதனைக்குரியது. ஆயுதக் கலாச்சாரத்தின் பிரதிநிதிகளுக்கு முற்றுப்புள்ளிவைத்த பின்பும் மௌனமாக இருக்கும் நோர்வே எழுத்தாளர்களே! உங்கள் வாய்களையும் கைகளையும் உணவுண்ண மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். நாளை உங்கள் கதவுகள் தட்டப்படும், பின் உடைக்கப்படும். அப்போதும் பேசாமல் இருங்கள்.

ஈழத் தீர்மானத்தை எடுத்த தமிழர் விடுதலைக் கூட்டணியினரே சிந்தனை வாதங்கள் ஜதார்த்தத்துக்கு உதவாது என்று அதைக் கைவிட்டு வேறு பல தீர்மானங்களுக்கும், ஒப்பந்தங்களுக்கும் உடன்பட்டார்கள். திம்புகூட அப்படியாக உருவான ஒன்றுதான். தமிழீழம்தான் முடிந்தமுடிவு என்று நின்ற புலிகளே திம்புத் தீர்மானத்துக்கு ஒத்துவருகிறோம் என்றார்கள். இறுதியில் தமிழர்களுக்கு தருவதைத் தாருங்கள் என்று நின்றார்கள். இதுகூடத் தெரியாமல் புலமும் புலனும் பெயர்ந்த புண்ணாக்குகள் புலிவாலைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார்களே. தமிழீழத்துக்காக ஜனநாயகவழியில் போராடிய கூட்டணியினரோ புலிகளால் கொன்று குவிக்கப்பட்டனர். இதன்பின் புலத்தில் என்ன புதிதாக ஜனநாயகம் வேண்டி இருக்கிறது? ஜனநாயக, ஆயத போராட்டங்கள் இரண்டுமே தோல்வியில் முடிந்த ஜதார்த்தங்கள். இதைக்கூட புரிந்துகொள்ள அறிவில்லாதவர்களை புலன்பெயர்ந்தவர்கள் என்று கூறாமல் வேறு எப்படிக் கூறுவது. அவர்களுக்கு எதற்கு அரசியல். அரை அவியலைத்தான் தின்னப்போகிறோம் என்று அடம்பிடித்தால் நீங்கள் வாழும் நாடுகளில் ஈழம்கேளுங்கள். வன்னி மக்களை விட்டுவிடுங்கள் வன்னிப்போருக்கு என்றும் வன்னிமக்களுக்கு என்றும் திரட்டிய பணங்கள் எங்கே. அதைக் கொண்டு வாருங்கள் முதலில். அன்பின்பு பிரதிநிதித்துவத்தைப் பற்றிப் பேசலாம்.

நோர்வேயில் நடைபெற்ற அரை அவியல்களின் மந்தைகளுக்கு தேசியப்பட்டியல் பிராந்தியப்பட்டியல் என்று பட்டிகட்டி விட்டார்கள். அதற்குள் நின்று சிலர் பா பா என்று கத்தினார்கள். இவர்கள்தான் தேசியபட்டியல்காரர்கள். தேசமே இல்லாத மோசமான தேசியவாதிகள். பிறதேச பிரஜாவுரிமை கொண்டவர்கள்.

NorwayElection_NCET_National_List(Photos: TamilNet)இவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியதுமான தகவல்கள் தேசத்திலோ வேறு இணைத்தளங்களிலோ தொடர்ந்தும் வரலாம். இவர்கள்தானாம் நோர்வேயின் பிராந்தியக் கட்டுப்பாட்டாளர்கள். முஸ்லீம்களையும், சிங்களவரையும் வடக்கு கிழக்கில் இருந்து கலைத்துவிட்டு தமிழீழம் கேட்டு நந்திக்கடலில் குதித்தோரின் வாரிசுகள். நோர்வேயிய மக்களை கலைத்துவிட்டு நோர்வேயில் ஈழம் அமைக்கப்போகிறார்களா? நோர்வே மக்களுக்கு இனி வாழ்க்கை நோ வேதான் (No-way). இந்த நோர்வே அவையின் கூத்துக்களை நோவேயிய அரசுக்கும் நோர்வே மக்களுக்கும் சரியாக எடுத்துக் கூற ஒரு சரியான ஆள் நோர்வேயில் இல்லையா? பிரிவினைவாதிகளால் நோர்வே சட்டத்தை அனுசரித்துப் போக முடியாதாம்; மக்களிடையே ஒற்றுமை பேணவேண்டும் என்கிறதாம் சட்டம். அவையின் திட்டம் அதுவல்லவே.

இந்தத் தேர்தலை வைத்து எந்தப் பாராளுமன்றத்துக்குப் போகப்போகிறார்களோ தெரியவில்லை. இங்குள்ள மக்களையோ ஈழத்திலுள்ள தமிழர்களையோ பிரதிநிதித்துவப் படுத்த நீங்கள் யார்? இந்தச் சர்வாதிகார உரிமையை தந்தது யார்? இவர்கள் கிட்லரை விட மோசமான நாசிகள் என்பதை ஏன் நோர்வேவாழ் தமிழ் தங்கங்களால் சொல்ல முடியவில்லை. அங்குள்ள மக்களின் விருப்பு, வெறுப்புக்களை அறிந்து அவர்களுக்காகப் போராட அங்கே மக்கள் இருக்கிறார்கள். தலைவர்கள் அங்கேயே உருவாகுவார்கள். பிரபாகன் என்ற தமிழ்இனஅழிப்பாளனும், கொலை வெறியனும், உங்கள் பிரதிநிதிகளும் அங்கே அம்மக்களிடையே தான் உருவானார்கள். புலம்பெயர் நாடுகளிலுள்ள அப்பாவித் தமிழ் தொழிலாளர்களை போர், விடுதலை என்று சுரண்டி தம்மை வளர்த்த புலிகளையும், பிரபாகரனையும் அழித்ததோடு நின்றுவிடாமல் இன்று நோர்வே நாட்டு மக்களுக்குப் படங்காட்டவும் நோர்வே நாட்டை நாசம் செய்யவும் தலைமை, பிரதிநித்துவம் என்று கொடி கொண்டு கோலோச்சத் திரிகிறார்கள் இந்தக் கொடியவர்கள். இவர்களுக்குக் கொம்பு சீவுபவர்கள் இருக்கும்வரை இவர்கள் காட்டில் மழைதான். இவர்களின் உண்மை முகங்களை அறிந்தும் இவர்களுக்கு தூபங் காட்டுபவர்களை என்ன என்று சொல்வது? கெடப்போகிறேன் பிடி பந்தயம் என்றால் யார் இவர்களைத் தடுக்க முடியும்?

பியோனார் முக்ஸ்னெஸ்: இவர் ஒரு நோவேயியர் சிவப்புச் சட்டைக்காரர். பெரும்பாலும் இவர் சார்ந்தகட்சி கட்டுக்காசை இழந்தே வந்திருக்கிறதாம். தேர்தலில் வாக்களிப்பவர்கள் பிறப்பில் தமிழராகவோ, தமிழர்களுக்குப் பிறந்தவர்களாகவோ அல்லது தமிழர்களைத் திருமணம் செய்தவர்களாகவோ இருக்க வேண்டும் என்பதுதான் அவையின் அரையவியல் சட்டம். தாம் உருவாக்கிய யாப்பையே மீறி ஒரு நோவேயியரை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது அரை குறை அவை. இந்த முக்ஸ்னெஸ் என்பவர் எந்தத் தமிழிச்சியையும் திருமணம் செய்ததாகத் தெரியவில்லை. காந்தர்வமணங்கள் கணக்கில் எடுக்கப்படமாட்டா. வாக்களிக்கவே தகுதியற்றவர் எப்படி தேர்தலில் நிற்கமுடியும்? இதைக்கூட விளங்கிக் கொள்ள முடியாத அரையவியல்கள் தேர்தல் நடத்தினார்களாம். இனி அவையின் காட்டில் பணமழைதான்.

இந்த முக்ஸ்னெஸக்குத்தான் அதிகவாக்குக்கள் (1864) பதிவாகியிருந்தன. தமிழே தெரியாத ஒருவன் தமிழர்களுக்கு தலைமை தாங்கப்போகிறானாம். இவருக்கு எம்பிரச்சனைகளைச் சொல்ல மொழிபெயர்பாளர்களை அல்லவா கொண்டு திரியவேணும். இங்கேயும் அதிகார வெறியைப் பாருங்கள்; நோர்வே மொழி தெரிந்த தமிழர்கள்தான் பிரச்சனையை கூறலாம் என்ற நிலை வந்துள்ளதா இல்லையா? இதில் இருந்து என்ன தெரிகிறது. வல்லமையுள்ளது தான் வாழவேண்டும் என்ற புலிக்குணம் தெரியவில்லையா? எம்மை ஆழ்வதற்கு வெள்ளையன் ஒருத்தன்தான் சரியானவன் என்பது தெரியவில்லையா? 500 வருடங்களுக்கு மேல் வெள்ளையர்களுக்கு கீழ் அடிமையாக இருந்து அடிமை உணர்வில் ஊறிப்போய் வெள்ளையனுக்கு அடிமையாகியே நாறிப்போன சமூகத்தின் வேடிக்கைகளை உலகமக்களே பாருங்கள். இவர்களுக்கு சுதந்திரம் விடுதலை ஒரு கேடா. சுயமாகவே தன்னுள் விடுதலையடைய முடியாதவர்களுக்கு எதற்கு விடுதலை, சுதந்திரம். இச்சொற்களையே உச்சரிக்க அருகதையற்றவர்கள் இவர்கள்.

ஆதித்தன்: இவரோ ஒரு சுதந்திரமாகத் திரியும் சுத்துமாத்து. தமிழ்முரசம் எனும் புலிகளின் பிரச்சாரப்பீரங்கில் இப்படியொரு வெடிவைத்தாராம். ”தான் போராளியும், முதன் முதலில் சயனைட் உண்டு உயிர்நீர்த்த உரும்பிராய் சிவகுமாரனின் நண்பராம்”. இந்த ஆதியெனும் பொய்யன் பிறந்தது 1967ல். சிவகுமாரன் இறந்ததோ 1974ல். சிவகுமாரன் இறக்கும்போது இவருக்கு 7வயது. சிவகுமாரன் இவருக்கு சிலவேளை தூக்கி வைத்துப் பால் குடுத்திருக்கலாம். சிவகுமாரன்தான் தனது தந்தை என்று கூறியிருந்தால் கூட நம்பியிருக்கலாம். பெயருக்கும் புகழுக்குமாக மாற்றுக்கருத்தாளிடம் இருந்து மாறிப்போன ஆதி போன்றவர்களின் பொய்களை நம்பும் மக்கள் இருக்கும் வரையும் அவர்கள் காட்டில் மழைதான். அரசியல் அறிவிலும் ஆதிக்குப் பாதியில் வந்ததால் எல்லாமே பாதிதானாம். அரசியல் என்று வந்தபின் சபையில் சொல்லும் பொய்களை அவையில் போட்டு உடைப்பது கடமையல்லவா.

ரமணன்; தர்மசீலன்: இவர்களுக்கு ஏன் வோட்டுப் போட்டார்கள் என்று பார்த்தால் அவன் டொக்டர் இவன் இஞ்சினியராம். இஞ்சினியர் டாக்குத்தர்களுக்குத்தான் எல்லாம் உண்டு என்று அவர்களுக்கு மட்டும் தான் பெண்குடுக்கும் கலாச்சார வாரிசுகள் இருக்கும் வரை இவர்கள் காட்டில் மழைதான். இனி டாக்குத்தருக்கும் இஞ்சினியருக்கும்தான் அரசியலும் தமிழ்ஈழமும்.

இதுபோலவே ஏதோ தேர்தல் எண்டார்கள் போட்டோம்: என்ன புள்ளடிதானே போட்டால்போச்சு: அவர் எனக்கு நல்லபழக்கம், இவர் வரச்சென்னார் போய் போட்டனான்: தமிழ் மக்களுக்காக பேசப்போகிறோம் என்றார்கள் அதனாலை போட்டனான்: எனக்கு ஒரே குழப்பமாய்தான் இருந்தது. அவை எங்களோடை நல்லமாதிரி அதனாலை போனனாங்கள் என்பது போன்ற காரணங்களுக்காகவும் வோட்டு வேட்டு வைத்தார்கள். எதற்கு வோட்டுப் போடுகிறறோம் என்று தெரியாமலே வோட்டுப் போட்டவர்களை மந்தை என்று வர்ணிக்காமல் வேறு எப்படி அழைக்கமுடியும். முக்கியமாக ஜெயசிறீ என்பவரைத்தவிர அரசியல் அனுபவமுள்ளவர்கள் இப்பட்டியலில் யாரும் இல்லை என்கிறார்கள்.

அரையவியல்களின் அவை யாப்பின்படி 50 சதவீதமானவர்கள் வோட்டுப் போட்டால் மட்டுமே இந்த தேர்தல் செல்லுபடியாகும் என்றார்கள். அவையின் அவியல்படியே 18வயதுக்கு மேற்பட்ட இலங்கையர்கள் சிங்களவருடன் 8772 என்பதாகும். நோர்வே அரசின் புதுப்பிக்கப்படாத கணக்குப்படி 8582 என்பது அரச அறிக்கை. புதுப்பிக்கப்பட்டால் இது 10000தைத் தாண்டும் என்பது வேறுகணக்கு. நோர்வேக்கு தமிழர்கள் வரத்தொடங்கியதே 1960ல். தொழிலுக்கு என்றும், பாடசாலை பல்கலைக்கழகம் பின் அகதி என்று தமிழர்கள் காலம் காலமாய் நோர்வேயில் கொட்டுண்டார்கள். நோர்வேயில் ஈழத்தில் பிறந்த 18வயதுக்கு மேற்பட்ட தமிழர்கள் விசா இன்றி சட்டவிரோதமாக இருப்பவர்களே 3000 மேல் என்கிறது பொலிஸ் அறிக்கை. இவர்கள் மட்டுமே வோட்டுப்போட்டிருந்தால் அவைக்கு அவித்தவர்களை விட வோட்டுக்கள் கூட விழுந்திருக்கும்.

அவையின் கணக்குப்படியே நாம் கணக்கெடுத்தாலும் 50சதவீதத்தை எட்டாது. புதுப்பிக்கப்படாத கணக்குப்படி இலங்கைத் தமிழர்கள் ஆண்கள் 4491 பெண்கள் 4101. மொத்தம் 8582. அவைக்கு வந்த வோட்டுக்கள் அவையின் கணக்குப்படியே 2767. வீதாசாரப்படி 32.2 வீதம். அவையின் அவியல்களைப் பாருங்கள் கீழே.

NorwayElection_NCET_Eastern_Region(Photos: TamilNet)இவர்கள்தான் நோர்வேயின் பிராந்திய பருந்துகள். இந்த அரசியல் சூனியங்கள்தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்கப் போகிறார்களாம். பணருசி கண்ட பூனைகள் சும்மாவா இருக்கப் போகின்றன. நோர்வே தமிழ்தங்கங்களே பணங்களை எடுத்துத் தயாராக வைத்திருங்கள் மாவீரர் தினத்துக்கு குலுக்கிக்கொண்டு வருவார்கள். எல்லா நாட்டிலும் குலுக்கத் தொடங்கி விட்டார்கள்.

மேலுள்ளவர்களுக்கான அவையின் பட்டியல்:
Votes polled: 2076
• Sivaganesh Vadivelu (1600)
• Rajendhrum Ponnuthurai (1597)
• Sivarajah Vallipuram (1546)
• Kannan Nagendram (1523)
• Mary Florida Judin Francis (1470)
• Rajaratnam Veluppillai (1465)

கணிதம் தெரிந்த சிறுவர்களிடம் இந்தக் தொகையைக் கூட்டச்சொல்லுங்கள் 2076 வருகிறதா என்று பார்ப்போம். ஒருவருக்கு 5 வோட்டு என்றால் சுமார் 10380வோட்டுக்கள். சரி 7 வோட்டு என்றால் 14532 வோட்டுக்கள். இங்கே களிவுகள் வந்ததாகத் தெரியவில்லை. களிவுகளுக்கு எப்படிக் கழிவு வரும் என்று கேட்கக்கூடாது. இவர்கள் பிணங்களை எண்ணி எண்ணியே கணக்குப் போடப் புலிகளால் பழக்கப்பட்டவர்கள் இப்படித்தான் போடுவார்கள். அவை சொல்வதை அப்படியே நீங்கள் கேட்க வேண்டியதுதான். ஏன் எதற்கு என்று தெரியாமல் வோட்டுகளையும் போடவேண்டியதுதான். இதுதான் புதிய ஜனநாயகம். இத்தேர்தலிலுள் பெரிய தில்லுமுல்லு என்னவென்றால் ஒருவர் பிராந்தியதுக்கு 7 வோட்டும், பிரதேசத்துக்கு 5 வோட்டும் போடலாமாம். அப்போதுதானே தொகையைப் பெரிதாகக் காட்டலாம். வோட்டுப் போடப் போனவர்களுக்கும் இந்தவிசயம் தெரியாதாம். மேலுள்ள எண்களோ கணக்குகளோ சோடிக்கப்பட்டதல்ல. அவையை ஆட்டித்திரியும் தமிழ்நெட்டில் இருந்தே எடுக்கப்பட்டது.

மேற்குப் பிராந்தியத்தில் பிராக்குப் பார்த்த தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜயசங்கர் அசோகன் என்பவரும் வெள்ளிபார்த்துப் போட்டியிட்டு வென்றுள்ளாராம். வெள்ளிபார்க்கும் வெங்காயங்கள் இருக்கும் வரையும் இவர்கள் காட்டில் பணமழைதான். இனி எல்லோரும் தேர்தல் நடத்தலாம். தேர்தலில் நிற்கலாம். ஏன் எதற்கென்று தெரியாமல் வோட்டும் போடலாம்.

நோவேயிய குடியுரிமையை வைத்துக் கொண்டு வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு அங்குள்ள மக்களிடமே போராட்டம் என்று பணம் திரட்டி தம்வங்கி வைப்பகங்களை நிரப்பும் இவர்கள் வன்னி மக்களைப்பற்றிப் பேசவோ பிரதிநிதப்படுத்துவோ அருகதையற்றவர்கள். நோர்வேயில் அடித்த காசுகளைப் மனச்சாட்சிப்படி கொடுக்க வக்கில்லை, வன்னிமக்களைப் பற்றிக் பேசுவதற்குப் புறப்பட்டு விட்டார்கள். புலிக்கென்று வாங்கி தங்கள் பணமூட்டையை நிரப்பிய பணங்களை எடுத்த முதலில் வன்னிமக்களுக்கு அனுப்புங்கள். அதன்பின் அவர்களைப்பற்றிப் பேசலாம்.

இந்தியாவையும் ஒரு வெள்ளைக்காரிதான் ஆளுகிறாள்; இலங்கைத் தமிழர்களை நோர்வேயில் ஒரு வெள்ளைக்காரன் ஆட்சிப்பொறுப்பு ஏற்றிருக்கிறான். காலணித்துவம் எம்மிடையே கால்கடுக்க நிற்கிறது. உயிர் கொடுத்து உயிர் பிழைத்து நிற்கும் ஈழம்வாழ் எம்முறவுகள் புலம்பெயர் புண்ணாக்குகளுக்கு சரியான பாடம் புகட்டுவார்களா? இன்று இவ்வளவு மக்களையும் அனாதைகளாக்கிக் கொன்று குவித்தது துவைத்தது அவையினர் என்பதை யார் எப்போ உணரப்போகிறீர்கள். இந்த வைரசுகள் எந்தநேரம் எப்படி வருவார்கள் என்பதை யாராலும் உணரமுடியாது. வைரசுகளுக்கு மருந்தும் இல்லை. தொற்றினால் தொற்றியதுதான். முடிவு சாவுதான். நெருங்கவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இவை பன்றிக்காச்சல் போல் எம்நாடுகளுக்குள்ளும் பரவும் சாத்தியங்கள் அதிகமாகவே உண்டு. இந்தச் சாத்தான்களை நாட்டுக்குள் அனுமதிப்பதே அவமானம். இந்த மனிதவிரோதிகளை ஆணிவேருடன் அறுத்து விட முயற்சியுங்கள்.

மாவீரர் தினம் வருகின்றது. புலிகளால் பலாற்காரமாக அல்லது புலிகளை இரட்சகர் என்று நம்பி ஏமாந்து தன்னுயிர் நீர்த்த வீரர்களுக்குமாய் எங்கள் கண்கள் கசியும். புலிகளால் கொன்று குதறப்பட்ட ஒவ்வொரு மாற்று இயக்கத்தவர்களுக்குமாகவும், போரில் அப்பாவிகளாய் உயர்நீர்த்த எம் உடன்பிறப்புக்களுக்காகவும், புரியாது புலிப்பாசறைக்குப் போன பிள்ளைகளுக்காகவும், ஒரு நாள், ஒரு பொதுநாள் தெரிவு செய்யப்பட்டு துக்கதினம் அனுஸ்டிப்பது முக்கியமானது.

நாடுகடந்த தமிழ்ஈழம் நாட்டுக்கொரு தமிழ்ஈழம்: குலன்

headlss_chickens_competitionஅத்திவாரம் போட்டு கோட்டைகட்டிய பின்னரே கோபுரம் வைப்பார்கள். அத்திவாரங்கள் சரியாக இல்லாமல் கட்டி எழுப்பப்பட்ட கோட்டையால் எட்டித்தட்டியவுடனேயே அத்திவாரமே ஆடி கொட்டுப்பட்டுப் போனது புலிக்கோட்டை. அத்திவாரமாக நின்று கோட்டையைத் தாங்கிக்கொள்ள வேண்டிய மக்கள் சரிவரகட்டி எழுப்பப்படாது போனதாலும், நிலத்தின் பண்பு புரியாமல் சூழல் அறியாமல் சரியான அரசியல் ஆய்வின்றி, ஆயுதத்தில் மட்டும் மனநோய் கொண்டு அவசர அவசரமாகக் கட்டப்பட்டதால்தான் புலிக்கோட்டை அழிந்தது என்பதை இன்னும் உணராமல், இன்றும் புலம்பெயர் தமிழர்கள் சிலர் வட்டுக்கோட்டையையும், தட்டுப்பட்ட புலிக் கோட்டையையும் கொண்டு நாடுகடந்த நாடுகடக்கா தமிழ்ஈழம் எனத்தடி கொடுத்து ஓடுகிறார்கள். செம்மறியாட்டுக் கூட்டம் போல் முன்னுக்குப் போகும் செம்மறி கத்திக் கொண்டு ஓட பின்னால் கத்திக் கொண்டோடி துப்பாக்கிகளால் மந்தைகளாக்கப்பட்ட எம்மக்கள் புலிக்கோட்டை அழிந்த பின்பாவது சுயமூளையில் சிந்திப்பார்களா?

1976ல் வட்டுக்கோட்டையில் அத்திவாரம் போட்டு மகாநாடாய் சுழிபுரத்தில் கோட்டை அமைத்து கூட்டணி கோபுரமானது. அன்று கலசங்களாக இருந்த கூட்டணித் தலைவர்கள் ஒலித்தார்கள். இன்று எம்மக்களை ஒழித்தார்கள். இக்கூட்டணி தொடர்ந்து தானே கோபுரக் கலசமாக இருக்க வேண்டும் என்பதற்காக சொன்னபடி எதையும் செய்யாமல் இருக்க கோட் டையைப் பிடிக்க இளைஞர்கள் படையெடுத்து, ஒன்றை ஒன்று கொன்று தின்று, வட்டுக் கோட்டை புலிக் கோட்டையானது. ஆனால் அது மக்கள் கோட்டையாக அமையவில்லை. இக் கோட்டைக்குக் கொத்தளமாகவும் அத்திவாரமாகவும் அமிழ்ந்து போய் இருந்தவர்கள் அப்பாவி எம்தமிழ்மக்களே.

கடும் காற்றுக்கு கதைசொல்ல முடியாத பிரபாகரன் எனும் தலைமைக் கலசத்துக்கு மட்டும் புலம்பெயர் மக்களால் ஆராதனைகள், அபிசேகங்கள், தோத்திரங்கள். அன்று மண்மீட்பு, என்று மக்களின் மனமீட்பு இன்றிப் புறப்பட்ட போர்வீரர்களும் அடிமண்ணாய் கிடந்த மக்களை கருத்தில் கொள்ளவில்லை, சிரத்தை எடுக்கவில்லை. அப்படி கரிசனைப்பட்டவர்கள் கூடச் சுடுகோல்களால் சுட்டுக் கருக்கப்பட்டார்கள். கருவே அழிந்தபின்பு எப்படிப் பிள்ளைப்பேறு என்பதுதானே முள்ளிவாய்கால் முடிவு. தலைபோனபின்பு அந்த வெற்றிடத்தை நிரப்ப தலைபோனவர்கள் ஓடித்திரிகிறார்கள். இன்னும் மண்ணாயும், மனிதராயும், கோட்டை, கோபுரங்களைத் தாங்கி நின்ற ஈழமக்கள் கருத்தை கவனத்தில் கொள்ளாது கடல்கடந்த கடக்கா ஈழம் என்று உடைந்து போன வட்டுக்கோட்டை எனும் கோட்டையைக் கட்டித் தட்டி எழுப்புவதை விட காலத்துக்கேற்றால்போல் கட்டக்கூடிய ஒரு சிறுகுடிசை ஒன்றையாவது சரியாகக் கட்ட முன்வருவார்களா? சரியாகத்தான் சிந்திப்பார்களா?

ஐரோப்பாவில் நாட்டுக்கு நாடு வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்வைத்து அவைகள், பேரவைகள் உருவாகின்றன. இப்பேரவைகள் (பேயவைகள்) அந்நாட்டிலுள்ள மக்களை பிரதிநிதித்துவப் படுத்துமாம், ஜனநாயகமுறையில் தேர்தல் வைப்பார்களாம், எல்லோரும் போய் வோட்டுப் போட வேண்டுமாம். எது ஜனநாயகம்? வோட்டுப் போடுவதுதான் ஜனநாயகமா? இப்படி ஒருதேர்தலை நடத்த நீங்கள் யார்? நாட்டில் அவதியுறும் மக்களைக் கருத்தில் கொள்ளாத இவர்கள் எமது மக்களை எப்படிப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும். எம்மைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கு நீங்கள் யார்? இவர்களின் கொள்கை வட்டுக்கோட்டைத் தமிழீழம் தானாம். அப்படியென்றால் நாடுகடந்த தமிழீழம்? இது நாடு கடத்தப்பட்டதா? இது நாடுகடக்காத் தமிழ் ஈழமா?

புலிகள் இருந்தபோது அங்கிருந்தபடியே இங்குள்ள தமிழர்களைக் கட்டுப்படுத்தினார்களாம். இப்போ புலிபோனதும் புலம்பெயர் தமிழர்களுக்குக் கிலிபோய்விட்டதாம். இவர்களைக் கட்டுப்படுத்த ஒரு அமைப்புத் தேவையாம். இதனால்தான் அவைகள் பேரவைகள் கட்டுகிறார்களாம். இது உள்நாட்டு தமிழர்களையும், அரசியலையும் பிரதிநிதிப்படுத்துமாம். இது நாசனல் மற்றையது இன்ரநாசனலாம். இது ஒரு ஜனநாயக அமைப்பு என்று கட்டுபவர்கள் இப்படி ஒரு அமைப்பைக் கட்டுவதா? இல்லையா? என்று எந்தவாக்கெடுப்பும் நடத்தவில்லை. ஐரோப்பிய நாடுகளைப் பற்றியோ அரசியல் அமைப்புகள் சட்டங்கள் பற்றி எந்த அறிவும் இல்லாமல் ஊரிலிருந்தபடி புலம்பெயர் தமிழர்களை புலிகள் கட்டுப்படுத்தினார்கள் என்றால் புலம்பெயர்ந்தவர்கள் புலன் பெயர்ந்தவர்கள் தான். இதை உணர்ந்துதான் தமக்குத்தாமே மகுடம் சூடிக்கொண்டு புதிய அவைகள் துவையல்கள் வெளிவருகின்றன. இனிமேல் நாலுபேர் சேர்ந்து தேர்தல் நடத்தி 3வோட்டு விழுந்தால் 75சதவீத வெற்றி. நாமும் ஒரு அவைதிறந்து புதிய தேர்தல் நடத்துவோமா?

இந்த இருபகுதியினருக்கும் சில தில்லு முல்லுகள் உண்டு. யாரின் கீழ் யார் இயங்குவது என்று பிரச்சனையும் உண்டு. பேரவைகள் (பேராசைகள்) கடைசிகாலங்களில் பிரபாகரன் உயிருடன் இருக்கும் போது அவர்பின்னால் இருந்து சேர்ந்து குழிபறித்து புலம்பெயர் தமிழர்களின் பணங்களை தமதாக்கிய பெருவள்ளல்கள் எனலாம். இதை சிவசேகரமவர்கள் மிக அழகாகவும் தெளிவாகவும் கூறியிருக்கிறார். சுருங்கச் சொல்லின் புலம்பெயர் புண்ணாக்குகளின் புத்திகளைக் கழுவி பணருசிகண்ட பூனைகள் எனலாமே. இது உள்நாடுகளில் தமிழீழ அமைப்பாகவும் (லோக்கல்). மற்றையது நாடுகடந்த தமிழ்ஈழம் உலகரீதியான தமிழீழ அமைப்பாகவும் (இன்ரர்நாசனல்) இயங்குமாம். ஒன்று பிரபாகரனுடையது மற்றையது கேபியினுடையது என்று கூறுவது பொருந்துமோ? ஒன்று புலம்பெயர் தமிழர்களிடன் நேரடடியாகப் பணம் பிடுங்கியவர்கள், நாடுகடந்த தமிழீழத்தார் பிடுங்கியவர்களிடம் பிடுங்கியவர்கள்.

இவர்கள் தனித்தனியே கூட்டங்களை ஒழுங்கு செய்திருந்தார்கள். கூடுதலாக நாடுகடந்த தமிழீழத்தார் பிரபாகரன் உயிருடன் இருந்தபோது அமைப்பு மீறிய செயல்களில் ஈடுபட்டதால் பிரபாகரனால் அமைப்பை விட்டு விரட்டப்பட்டவர்கள் அல்லது நாட்டுக்கு அழைக்க ஒடி ஒழித்தவர்கள் என்கிறார்கள் நோர்வே தமிழர்கள். எது எப்படியோ எல்லோரும் தமிழர்களைத் திண்டவர்கள் தான். நோர்வே சென்றபோது இவர்களின் பின்புலங்களை அறிந்தபோது நோர்வே தமிழர்கள் பல சொன்னது நியாமாகவே தோன்றியது.

எதிர்வரும் 15ம்திகதி (நவம்பர் 15) நோர்வேயில் ஒரு குழு ஜனநாயகம் எனச்சொல்லிக் கொண்டு நோர்வே ஈழத்தமிழர் அவை எனப்பெயரிட்டுக் கொண்ட அமைப்பு நோர்வே தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த குழுஜனநாயகத் தேர்தல் ஒன்றை நடத்துகிறதாம். இதற்கான வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு விட்டார்களாம். தமிழ்மக்கள் செறிந்து வாழும் நகரங்களில், மாநகரங்களில் தமிழர்களின் தொகைக்கேற்ப வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்களாம். தலைநகர் ஒஸ்லோவில் தேர்தலுக்கு நிற்பவர்கள் உங்கள் வோட்டுக்கள் எனக்கே, நானுன் ஊரவன் உன்வோட்டு எனக்குத்தான் என்று தொடங்கி விட்டார்களாம். இதன் பிரதிபலன்களாக ஊர்வாதம், குழுவாதம், சாதி, குலம் கோத்திரம் என்று ஒன்றாய் இருக்கும் மக்கள் சிதறிச் சின்னா பின்னமாகிப் போகப்போகிறார்கள். வோட்டுப்போடுவதும் பெரும்பான்மையும்தான் ஜனநாயகம் எனக்கருதினால் இலங்கை அரசாங்கம் சிறு ஆயுதம்தாங்கிய குழுக்களும் தாய்நாட்டில் செய்வது எந்தவிதத்திலும் பிழையாகாது. பெரும்பான்மைச் சிங்களவரின் பிரதிநிதியாக இருப்பவன் தன்னை தலைவனாக்கிய சமூகத்துக்கு நன்மை செய்வதும் தன்னை எதிர்த்தவர்களைப் பழிவாங்குவதும் நியாயமாகிறது. எம்சமூகங்களில் பழிவாங்கல் என்பது உதிரத்தில் ஊறிவிட்ட ஒன்றாக அமைந்ததால் தான் சகோதரப்படுகொலைகள் வகை தொகையின்றி நடந்தன.

இன்றும் கூட தமிழ் தலைவர்கள் இராஜபக்சவுக்கு அவர் மொழியிலேயே உணர்த்த வேண்டியது ஒன்று உள்ளது. இன்று அவர்வகிக்கும் பதவி தமிழ் மக்களாலேயே தரப்பட்டது என்பதையும், அந்த மக்கள்தான் இன்று வன்னியில் கம்பிவேலிக்குள் கன்னம் உரசுகிறார்கள் என்பதையும் சரியான முறையில் எடுத்துச் சொல்ல வேண்டிய நிலையும் நிலைப்பாடும் உள்ளது. கோட்டைக்கு ஆசைப்பட்டு குடிசையே இல்லாது போன நிலையைக் கண்ணால் கண்டும் திருந்த மாட்டேன் என்று அடம்பிடிப்பவர்கள் ஈழத்திலுள்ள கடைசித் தமிழனையும் கொன்று விட்டுத்தான் மீதி என்று எண்ணுகிறார்களோ என்னவோ?

ஐனநாயகம் என்பது தன்னை எதிர்த்து வோட்டுப் போட்டவர்களையும், சமூகத்தையும் பிரதிநிதிப்படுத்துபவனே சரியான ஜனநாயகவாதி. இது எம்நாடுகளில் எங்கே நடக்கிறது. இதையே வெளிநாடுகளில் ஜனநாயம் என்று தேர்தல் நடத்த முன்வருகிறார்கள் புலன்பெயர்ந்த தமிழர்கள். என் கணிப்பீட்டில் கீழத்தேய நாடுகளில் ஜனநாயகம் என்பது பெரும்பான்மைச் சர்வாதிகாரமே. திறமையான பொய் பித்தலாட்டங்களின் கூட்டமே.

நோர்வே ஈழத்தமிழர் அவையால் நடத்தப்படும் தேர்தல் பற்றி என் காதைக் கடித்த செய்திகள்
• தொடங்கிட்டாங்கப்பா தொடங்கிட்டாங்க குடுத்த காசுக்கே கணக்கு காட்டேல்லை வெளிக்கிட்டுட்டாங்கடா காசு சேர்க்க.
• குடுத்த காசை உடன் எடுக்கேலாது. பிடித்து விடுவார்கள் எல்லோ. வியாபாரத்தைத் தொடங்கினால் கணக்குக் காட்டலாம் தானே.
• தலைவர் உயிரோடை இருக்கேக்கை இவை எப்படி தேர்தல் நடத்த முடியும். தலைவர் ஆபிரிக்காவில் இருக்கிறார். வரும்போது வருவார். அப்பதெரியும் இவையின்ரை ஆட்டங்கள்.
• யாரிந்த நாடு கடந்த தமிழ் ஈழத்தார்? பதில் – முந்தி புலியிலை இருந்து கலைச்சு விடப்பட்டவையள், காசடித்துக் கொண்டு ஓடி ஒதுங்கியவை, ஊருக்குக் கூப்பிட்ட போது ஓடி ஒழிச்சவையும், உள்ளுக்கிருதே காட்டிக் கொடுத்தவையும் சேர்ந்து தான் நாடுகடந்த தமிழ்ஈழம் தொடங்கியிருக்கினம். உருத்திரகுமார் இவர்களுடன் தொலைக்காட்சியில் நேரடியாகப் பேசினவராம் கேள்விப்பட்டீர்களோ?
• அப்ப நீங்கள் எதுக்கு சப்போட்? அண்டைக்கும் குளப்பினாங்கப்பா, இப்பவும் குளப்புகிறானுகளப்பா? கண்டறியாத தமிழ்ஈழமும் நீங்களும். இங்சை வந்தனீங்கள் வாழ்ந்து போட்டுப் போங்கோவன்.
• ஊரிலை எல்லாம் வெறுமையாப் போச்சு இஞ்சை இருந்தாவது போராடவேணும் தானே.
• முகிலமும் நெடியவனும் பிரச்சனையோடை ஒழிச்சிட்டாங்கள். இருக்கிற சனத்தைக் கொண்டிழுக்க யாராவது வேணும் தானே எண்டுதான் பேரவை துவங்கியிருக்கினம்.
• அங்கை மக்களாலை போராட ஏலாது நாங்கள் தான் இஞ்சை இருந்து ஏதாவது செய்ய வேணும். (ஏன் தமிழீழம் வாங்கி அனுப்பப் போறியளோ?)
• வெளிநாட்டிலை இருக்கிற தமிழர்களுக்குத் தான் அரசாங்கம் பயப்படுது. நாங்கள் ஒன்று சேருவது முக்கியமெல்லே (இரண்டாய் பிரிந்து நிற்கிறீர்கள் எப்படி ஒன்றாகிறதைப் பற்றிக் கதைக்கிறீர்கள்).
• இரண்டு பகுதியும் வட்டுக்கோட்டையைத்தான் கொண்டு திரியினம். அதை வைச்சு எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறாங்களோ? இதுக்கிள்ளை யார் யாருக்குள்ளை வேலை செய்யுறது எண்டதுதான் பிரச்சனை.
• திரும்பவும் அடிபடப்போறாங்கடா சாமி.
• நாளைக்கு எல்லாத் தமிழர்களும் எங்களுக்குத்தான் வோட்டுப் போட்டவை எண்டு நோர்வே அரசாங்கத்திடம் சுத்தப் போறாங்கடா டோய்.
• புலியின்ர காலத்திலேயே தமிழீழத்தில வீடு வாங்காமல் கொழும்பில வீடு வாங்கினாங்கள். தமிழீழம் கிடைக்காதெண்டு அப்பவே உவங்களுக்குத் தெரியும்தானே? இப்ப புலி செத்தபிறகு நாடுகடந்த தமிழீழம் எண்டுசொல்லி இனி எந்தநாட்டில வீடுவாங்கப் போறாங்களோ தெரியாது.
• தலைவர் போனதாலை எல்லாரும் தாங்கள் தாங்கள் தலைவரா நிக்கிறாங்கள்.
• தலைவர் போனதாலைதான் இந்தத் தலையிடியள் தொடங்கியிருக்கிறாங்கள்.
• அன்னை பூபதி பள்ளிகூடம் என்னமாதிரி அண்ணை? எல்லாரிட்டையும் காசுவாங்கித் தானே கட்டிடம் வாங்கினவங்கள். படிப்பறிவில்லாதவையும் படிப்பிக்கினம். நடிப்பு மட்டும் ஏதோ கிராயுவேட் பண்ணின மாதிரி. கோடிக்க ணக்கிலை வாங்கின வங்கள். உது ஆற்றை பேரிலை கிடக்குது, நடக்குது? வேதாளம் பார்த்த வெங்காயங்கள் யார் கேக்கப் போகிறாங்கள்.
• மற்றவங்களின்ரை காசிலை தின்னப் பழகிட்டாங்கள் விடுவாங்களோ.

இப்படி இன்னும் இன்னும் எத்தனையோ…….!!!!!!!

உருப்படுமா உலகமயமாதல்: குலன்

Iran_SL_Leadersபனிக்காடாய் கிடந்த பூமி, வெப்பம் அதிகரிப்பினால் பனி உருக நிலம் புலப்பட ஆரம்பித்தது என்கிறது விஞ்ஞானம். ஒன்றுமில்லாது இருந்து பூமியில் ஒன்றாக உயிரினங்கள் உயிர்த்தெழத் தொடங்கி கூர்ப்பு, வளர்ச்சி, கலப்பு என்று வேற்றுமை அடையத் தொடங்கியது. பூச்சியத்துக்குள்ளிருந்த பூமி, இராச்சியமாக மாறி இன்று உலகமயமாதல் என்பதில் வந்து நிற்கிறது.

ஆயிரத்தித் தொளாயிரங்களில் நாடுகள் பிரிவதும், ஆட்சிகள் அமைப்பதும், உலகமெங்கும் விடுதலை இயக்கங்கள் உருவாவதும், தனித்து நின்று போராடியதும், வென்றதும், ஒரு தலைமையின் கீழ் நாடுகள் இருந்ததும், இயக்கங்கள் அமைந்ததும், சாதாரணமான ஒன்றாக இருந்தது. தலைமை என்பதும் அதற்குப் பணிதல் என்பதும் அத்தியாவசியமான ஒன்றாகவே இருந்தது வந்தது. உலகத்தின் பாதுகாவலராக சோவியத்தும், அமெரிக்காவும் இருந்து ஒரு பனிப்போரை நடத்தினர். காலப்போக்கில் பெருந்தலைமை என்பது மறையத்தொடங்க பிராந்திய வல்லரசுகள் உ.ம் இந்தியா, சீனா, பாக்கிஸ்தான் தலைதூக்கத் தொடங்கின. அமெரிக்க இரசியப் பனிப்போர் உடைந்ததால் பிராந்தியங்களின் பாதுகாப்பு பிராந்திய வல்லரசுகளின் கையில் சென்றுள்ளது. இடதுசாரித்துவ பெருநிலப்பரப்பைக் கொண்ட சோவியத்தை உடைக்கப்போய் அமெரிக்கா பொருளாதாரம் உடைந்து சுக்கு நூறானது தான் மிச்சம்.

இந்தப் பிராந்திய வல்லரசுகள் தம்நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அயல் நாடுகளுடன் நட்புறவாகவும் அன்னியோன்யமாகவும் பரஸ்பர புரிந்துணர்வுகளுடனும் இருக்க வேண்டிய காலகட்டத்தில் வந்து நிற்கிறது. வல்லரசுகளைப் பொறுத்தவரையில் புஜபலம் பொருந்திய அயல்நாடுகள் நட்புறவுடன் தமது இராஜதந்திர நடவடிக்கைகளுடன் இருந்து வந்தன. உ.ம் ஜேர்மன் பிரான்ஸ். இந்து சமுத்திரத்தைப் பொறுத்தமட்டில் 3 பிராந்திய வல்லரசுகள் தமது எல்லை விரிவாக்கங்களைக் கருத்திற்கொண்டு செயற்படுகிறன்றன. இந்த நிலையைச் சரியாகப் பயன்படுத்தி, புலிகளின் கோட்டையை உடைத்தெறிந்தது சிங்களப் பேரினவாத அரசு.

புலிகள் இடதுசாரித்தன்மையைக் கொண்டவர்களாகவும் சீனாவின் கொள்கைகளுடன் ஒத்துப்போகும் இயல்பு கொண்டவர்களாக இருந்தும் ஏன் புலிகளுக்கு சீன உதவி கிடைக்கவில்லை? இந்தியத் துணைக்கண்டம் 6 கோடிக்கு மேற்பட்ட தமிழர்களைக் கொண்டவர்கள் ஒரேமொழியும் இரத்தஉறவும் கொண்ட துணைக்கண்டம் ஏன் புலிகளுக்கு உதவி செய்யவில்லை? பாக்கிஸ்தானைப் பொறுத்தமட்டில் தமிழ் பேசுபவர்களே முஸ்லீம்களாக மாறினார்கள் இவர்கள் தமிழ் முஸ்லீம்களே. இப்படியான எல்லா வசதிகளும் தொடர்பு வசதிகள் இருந்தும் புலிகள் நந்திக்கடலில் குதித்தது ஏன்? உலக அரசியலை நன்கு உணராமை, இராஜதந்திரம் இல்லாமை, மக்களை, மக்கள் போராட்டத்தை மதியாமை, சரியான கெரில்லாவாக இயங்காமை, முரண்டு பிடித்தமை, எல்லாவற்றையும் விட முக்கியமாக அரசியலே இல்லாமை, ஷோ காட்டி வாழ விளைந்தமை. மக்கள் சக்தியையும், அரசியலையும் சரியாக உணர்ந்து கொண்டிருந்தால் நந்தியோ நந்தியாக நின்று காப்பாற்றியிருக்கும்.

மேற்கூறிய அனைத்தையும் நன்கு ஆராய்ந்து அலசி சந்தர்பத்தைச் சரியாகப் பயன்படுத்தியது இலங்கை அரசு என்பதை யாரும் மறுக்க இயலாது. ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் ஆப்பு அறைந்து அனுப்பியது இலங்கை அரசே. இன்றைய உலகில் புஜயபலத்தை விட புத்திப்பலமே மேலோங்கி நிற்கிறது என்பதை புலிகள் ஏன் மறந்தார்கள். இந்துசமுத்திர அரசியல் சதுரங்கத்தில் பலமுள்ள சிறுநாடுகளை தன்கைக்குள் போடமுயன்றன பிராந்திய வல்லரசுகளான இந்தியா சீனா பாக்கிஸ்தான். இச்சதுரங்கத்தில் காய்களை சரியாக நகர்த்தி பிராந்திய வல்லரசுகளை ஒழுங்குபடுத்தி புலிகளுக்கு செக் வைத்தது சிங்கள அரசு. இராக்கியப் போரையும் தலிபானையும் கருத்தில் கொண்ட அமெரிக்கக் கனவில் இருந்த பிரபாகரனுக்கு புலம்பெயர் தமிழர்களின் அம்புலிமாமா கதை நிலாச்சோறாக அமைந்தது. கடைசி வேளையிலும் அமெரிக்கா வரும் ஒபாமா வருவார் என்ற நம்பிக்கையில் சரணடைந்து வாள்வெட்டு பட்டு இறந்தார் தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன். தேசியத்தலைவன் என்பவன் மக்களின் பிரதிநிதியாக மக்களுடன் இருக்க வேண்டியவன். பங்கருக்குள்ளா இருப்பான் என்றும் மக்களை மையப்படுத்தடா மடையா என்றும் எத்தனைபேர், மாற்றுக்கருத்தாளர்கள் கத்தினார்கள். கேட்டார்களா? சொந்த மக்களை நம்பமுடியாத போராட்டவீரன் எப்படி அமெரிக்காவை நம்பினார்.

உடைபட்ட பனிப்போரால் உடைபடத்தொடங்கின நாடுகள். இதேவேளை புஜபலகண்காட்சி மாயையை தொடர்ந்தும் நிலைநிறுத்த ஒரு இராக்குப்போர் நடந்தது. இப்போரால் பொருளாதார ரீதியில் வெற்றியைக் கண்டது அன்றை இடதுசாரி நாடுகளான இரஸ்சியாவும் சீனாவும்தான். சச்சேனிய தீவீரவாதத்தை முடிவுக்குக் கொண்ட வந்து தமது ஒற்றனான சச்சேனிய தீவீரவாதி ஒருவனின் கையில் அதை ஒப்படைத்து விட்டு அவர்களை அவர்களுடனே அடிபட விட்டுவிட்டு இரஸ்சியா தன் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்திக் கொண்டது. புஜபலம் காட்டப்போய் அமெரிக்கா இராக்கிலும் ஆவ்ஃக்கானிஸ்தானிலும் முடங்கிப்போய் கிடந்து இன்று பொருளாதார நெருக்கடிக்குள் முட்டி மோதிக் கொண்டு இருக்கும் வேளைதான் ஒபாமா வந்தார். இவரை நம்பியா புலிகள் சரணடைந்தார்கள். புலிகள் கூப்பிட்டவுடன் ஓடிவர ஒபாமா என்ன சித்தப்பனா?

இந்தியா சதுரங்கத்தில் தன்காய்களைச் சரியாகவே நகர்த்திக் கொண்ட இருக்கிறது. தமக்கு அயலில் தலையிடியாக இருந்துவந்த பாக்கிஸ்தானுக்கு தனிபான்களினூடாக ஒரு செக்கை இன்று வைத்துள்ளது. அன்றைய இராணுவத்தலைவர் இதன் பின்னணியில் இருப்பாரா என்பது இன்றைய கேள்வியாக உள்ளது. அமெரிக்காவால் இரஸ்சிய அரசுக்கு எதிராக உருவாக்கப்பட்ட பின்லாடனை பின் அமெரிக்காவே அழிக்க வேண்டிய நிலையானது. இப்படிப் பின்லாடன் இருக்கிறானா இல்லையா என்ற முடிவில்லாமல் போனதால் தலிபான் தொடர்ந்து போராடுகிறது. அமெரிக்கா தன் வெற்றியை உறுதிப்படுத்த முடியாமல் நிற்கிறது. இந்த நிலையையாவது பிரபாகரன் உருவாக்கி விட்டுவிட்டுப் போயிருக்கலாம். பிரபாகரன் இருக்கலாம் என்ற நம்பிக்கையில் ஒருவனாவது போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு இருந்திருப்பான். சிங்கள அரசோ பேரினவாதமோ தன் இனவெறியைக் காட்டாமலும் போரின் வெற்றியை உணராமலும் இருந்திருப்பார்கள் ஆனால் பிரபாகரன் என்ற பெயர் வாழ்ந்து கொண்டிருக்கும். சிலவேளை மக்களின் போராட்டம் தொடர்ந்திருக்கும். அமெரிக்கா வரும் என்ற புலம்பெயர் புலம்பல்களில் கனவுகண்டு உலக இயற்கை நிதர்சனங்களை விட்டுவிட்டு சரணடைந்து எம்மினத்தை முழு நிர்வாணமாக்கிச் சென்றிருக்கிறார் பிரபாகரன்.

இனிவரும் தலைவர்களாவது இன்றைய உலக அரசியல் நிலமையை உணர்வார்களா? உலகமயமாதல் எதற்காக நடக்கிறது? இதன் விளைவுகள் என்னவாகும்? இவற்றைக் கருத்தில் கொண்டு அரசியல் நடத்த முயற்சியுங்கள்.

பெருந்தலைமை உடையும்போது சிறுசிறு தலைமைகள் உருவாவது இயற்கையானது. இந்தச் சிறுதலைமைகள் சுயமாக தம்மைப் பாதுகாத்துக் கொள்வது என்பது கடினமானதே. இதனால் இணைவுகளும் உடன்படிக்கைகளும் அவசியமாகிறது. இதனால் இசைவாக்கமுள்ள தம்முடன் ஒத்துப்போகக் கூடியவர்களை இணைத்து தம்நாட்டின் ஆட்சிப்பலத்தையும் பிராந்தியப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் இருப்பதால் சிறு சிறு நாடுகளின் பங்களிப்புகள் முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் உலகமயமாதல் என்பது அவசியமாகிறது.

கணனிகளாலும் இலத்திரனியல்சார் தொழில்நுட்பங்களாலும் உலகம் ஒரு கிராமம் போல் குறுகிவிட்டது. இன்நிலையைப் பயன்படுத்திய வசதியான நாடுகள் தம் வசதிகளை மேலும் பெருக்கிக்கொள்ள வளர்முக நாடுகளை நாடுகிறார்கள். அங்கே தொழிலாளர்கூலி மிகக் குறைவாக இருப்பதுடன் தயாரிப்புகளுக்கான மூலப்பொருட்களும் மலிவாகவே கிடைக்கின்றன. தொழிற்சாலையின் இரசாயனக்கழிவுகளையும் வளியசுத்தங்களையும் அங்கேயே விட்டுவிட்டு தயாரிப்புகளை மட்டும் தமது முத்திரைகளுடன் உலகநாடுகளின் பெரும் விலையில் சந்தைப்படுத்தி பெருங்கொள்ளை இலாபம் ஈட்டமுடியும். ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் தம் முதலீடுகளை 3ம் உலகநாடுகளில் செய்வதினூடு சுமார் 200மடங்கு இலாபத்தைப் பெறலாம். மூலப்பொருட்களை 3ம் உலகநாடுகளில் இருந்து கொண்டுவந்து பொருள்களை இங்கே உற்பத்தி செய்து அதைச் சந்தைப்படுத்துவதனால் அடையும் இலாபத்தை விட எல்லாவற்றையும் அங்கேயே எடுத்து கழிவுகளையும் அங்கேயே விட்டு விட்டு அதாவது சக்கையை அங்கே எறிந்து விட்டு சாற்றை மட்டும் இங்கே எடுத்துவந்து சந்தைப்படுத்துவதை விட இலாபம் தரக்கூடிய சிறந்த வியாபாரம் என்ன இருக்கிறது.

இந்நாடுகளின் முதலீடுகள் அங்கே ஆழமாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும் என்றால் போர் எப்படியும் நிறுத்தப்பட வேண்டும். அங்குள்ள அரசின் நட்புறவு வலுப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் குறுகிய காலத்தில் பெரிய முதலீடுகளைச் செய்து பெரு இலாபம் பெறமுடியும். இவையனைத்தும் குறுகிய காலத்தில் நடந்தேறினால் மட்டுமே பெருலாபம் உறுதியாகும். இந்நிலையில்தான் தமிழர்களது தலைவிதியும் புலிகளின் ஈழக்கனவும் நந்திக்கடலினுள் கொட்டப்பட்டது.

போர்காரணமாக அகதிகளின் பெருக்கம் ஐரோப்பிய நாடுகளில் அதிகரிப்பதனால் கலாச்சாரச் சீரழிவுகளும், சட்டவிரோதச் செயல்கள் அதிகரிப்பும், பொருளாதார நெருக்கடியும் எற்படுகிறது. போர்களை முடிவுக்குக் கொண்டு வருவதனால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்றாகி விடுகிறது. அகதிகளை திருப்பி அனுப்பவும் வசதியாகிறது. தமிழ்மக்களின் அழிவையும் அரசாங்கத்தின் அஜாரகங்களையும் நேரில் நின்று பார்த்த நாடுகளே அகதிகளை அனுப்புவற்கான விண்ணப்ப நிராகரிப்புகளை பெருந்தொகையாகக் கொடுக்கத் தொடங்கி விட்டன.

புலிகளுக்கு உதவிசெய்வதூடு ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு என்ன இலாபம் ஏற்படமுடியும்? மாறாக நட்டமே ஏற்படும். புலிகளுக்கு உதவி செய்வதூடு போர் நீடிக்கும், தமது முதலீடுகள் தக்கவைக்கப்படும், ஆயுதவிற்பனையால் ஏற்படும் வருமானத்தை விட ஒரு தொழிற்சாலையூடு அள்ளப்போகும் பெருந்தொகையான இலாபத்தை யார் கைவிடத்தயார்? இதனால் இலங்கை அரசைப் பகைத்துக் கொள்ள ஐரோப்பிய, அமெரிக்க, பிராந்திய வல்லரசுகள் விரும்பவில்லை. இதுவே ஐரோப்பிய அமெரிக்க தெருக்களில் எங்கள் கண்ணீர்கள் காணாமல் போனதற்கும், எங்கள் குரல்கள் கேட்காமல் போனதற்கும் காரணமாகும்.

இது ஒரு பெரியகட்டுரையாக வளராமல் இருப்பதற்காக உலகமயமாதலினால் ஏற்படும் நன்மை தீமைகளை புள்ளிவடிவத்தில் தந்து மீதியை பின்னோட்ட எழுத்தாளர்கள் கொண்டு சென்று முடிப்பார்கள் என்ற நம்பிக்கையில் விட்டுவிடுகிறேன்.

• உலகமயமாதலினால் சிலவேளைகளில் பொருளாதாரச் சமநிலை ஏற்பட சாத்தியம் உண்டு.
• 3ம் உலகநாடுகளில் மூலவளங்கள் அழிக்கப்படும் ஆனால் தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கலாம். வெளிநாடு சென்று திரைகடலோடியும் திரவியம் தேடாமல் வெளிநாட்டவர்களே உங்களை நோக்கி வரும் காலம் கனிந்துள்ளது.
• பொருளாதார வளங்கொண்ட நாடுகளின் முதலீடுகள் உறுதியுடனும் உத்தரவாதத்துடனும் இருக்க வேண்டுமானால் போர்கள் நிறுத்தப்படும். இது இலங்கையில், பிலிப்பைந்து, சுமாத்திரா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் நடந்தேறின.
• போர்கள் நிறுத்தப்படும் போது இணைதல்கள் சாத்தியமாகும். பலமுள்ளவர்கள் இணைந்து பலவீனர்களை உண்பார்களா?
• வளர்முகநாடுகள் ஐரோப்பிய அமெரிக்கநாடுகளின் கழிவறையாக மாற்றம் பெறும்.
• வளர்முகநாடுகளிலும், படித்தவர்களுக்கும் வசதியானவர்களுக்குமே வேலைவாய்ப்பு என்று ஆகிவிடும். இதனால் கறுப்புப் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
• பொருளாதார மையமாக்கல் வலதுசாரித்துவத்துக்கு வழிகோலும். பணக்காரன் பெரும் பணக்காரனாவதும் ஏழைகள் தொடந்து கொடுமைகளை அனுபவிப்பதும் ஊக்கிவிக்கப்படும்.
• வலதுசாரித்துவம் வகுப்புவாதத்துக்கு தூபமிடும்.
• சிறுபான்மை இனங்களின் போராட்டங்கள் பிராந்திய வல்லரசுகளாலும், பெரும்பான்மை இனத்தவர்களின் இணைவுகளாலும் வெளியே வராமல் நசுக்கப்படும். உ.ம் சீனாவில் நடந்து கொண்டிருக்கும் உகுரு இனப்போராட்டம். சிறுபான்மை இனங்கள் உருந்தெரியாமால் பையப் பைய அழிக்கப்படுவார்கள் அன்றேல் தானாக அழிவார்கள்.
• ஆதிக்க மொழிகள் ஆட்சியைப் பெறும் உ.ம் ஆங்கிலம், அரேபிய மொழி இரஸ்சிய மொழிகளால் சிறுமொழிகள் சிறுபான்மை இனம்போல் உலகத்தை விட்டே விரட்டப்படும்.
• சிறுகைத்தொழில்கள் அழிக்கப்படும். பெருந்தொழில்கள் அவற்றை விழுங்கும்.
• மனிதனின் அடிப்படை தேவையான விவசாயம், பண்ணைகள் அழிக்கப்பட்டு பெருவருமானம் தரும் கைத்தொழில்கள் முதன்மைப்படுத்துப்படும். இதனால் வளியசுத்தம் அதிகரித்து உலகில் சமநிலை பாதிக்கப்படும். உணவு தயாரிப்புக்குப் பதிலாக வில்லைகள் தயாரிப்பு அதிகரிக்கும்.
• 3ம் உலகநாடுகளில் முன்பின்னறியா புதிய வியாதிகள் வில்லை வியாபாரங்களுக்காக வலம்வரும். உ.ம். தெங்குக்காச்சல், பறவைக்காச்சல், பன்றிக்காச்சல் இனி பூனைக்காச்சல், நாய்காச்சல் என்று இன்னும் எத்தனை எத்தனையோ காச்சல்களும் பேச்சல்களும் பீச்சல்களும் உருவாகும்.
• பெருந்தெருக்களாலும், போக்குவரத்து, தொழிற்சாலை போன்றவற்றினால் ஏற்படும் வளியசுத்தமும், இரசாயனக்கழிவுகளும் ஐரோப்பிய அமெரிக்க பிராந்திய வல்லரசுகளில் குறைப்பதற்காக 3ம் உலகநாடுகளுக்கு வெளிநாட்டு முதலீடு எனும் பெயரில் ஏற்றுமதி செய்யப்படும். அதாவது வளர்முகநாடுகள் பொருளாதார வல்லரசுகளின் கழிவறையாகும்.
• உலகரீதியாக பொருளாதாரச் சமநிலை ஏற்படச்சாத்தியம் இருந்தாலும் வல்லரசுகள் அவற்றை தடுக்கும். ஆனால் வளர்முக நாடுகளில் ஏற்றத்தாழ்வு மிகப்பெரிய அளவில் இருக்கும்.
• ஒருநாட்டில் இன்னொருநாடு தங்கிவாழவேண்டி அமைவதால் சிறுபான்மைகளின் கருத்துக்கள் போராட்டங்கள் பெரும்பான்மை இணைவுகளால் கொல்லப்படும். பெரும்பான்மை பெரும்பான்மையுடன் கைகோர்த்துக் கொள்ளும் உம் இந்திய இலங்கை உறவு. சீன இலங்கை உறவு.
• கணனிகளாலும் அதிவேக வாழ்வியலாலும், இரசாயனக்கழிவுகளாலும் வளியசுத்தங்களினாலும் அங்கே மக்களின் வாழ்வுக்காலம் குறையும், கூட்டுவாழ்வு குலையும். தனித்துவமான கலாச்சாரங்கள் அழியும்.
• கலாச்சாரங்கள் இணைவுகளால் பலமானதே வாழும். இயந்திரவாழ்க்கை ஒன்று மிருகவாழ்வியலுக்கு வித்திடும்
• உடன்பாடுகளுடன் நாடுகள் இணைந்து பெருலாபம் பெறும்.
• நாடுகளின் எல்லைகள் உடையும், ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு அதிகரிப்பதனால் வகுப்புவாதமும் வர்க்கபேதமும் போராட்டங்களும் அதிகரிப்பதற்கு சாத்தியம் உண்டு.
• தனித்துவமற்ற சமூகம் உருவாகி பணத்துக்காக அலையும்.
• பொருளாதாரப் பரிமாற்றம் போல் பயங்கரவாதப் பரிமாற்றமும் வெகு வேகமாக நடைபெறும். அமைதியான நாடுகளில் களவு கன்னக்கோல் பாலியல் வல்லுறவு என்பன அதிகரிக்கும்.
• நன்மை தீமைகள் இரண்டும் பொதுவானாலும் பொருளாதாரம் ஐரோப்பிய அமெரிக்க பிராந்திய வல்லரசுகளின் கையிலேயே என்றும் இருக்கும்.
• இவ்வளவு காலமும் 3ம் உலகநாடுகள் வல்லரசுகளின் ஆயுதக்கழிவகமாக இருந்தது. இன்று அவை வழியசுத்தம், இரசாயனக்கழிவகமாக மாற்றம் பெறுகின்றன. எது எப்படி வளர்ந்தாலும் மாற்றம் பெற்றாலும் ஒன்று மட்டும் உண்மை ஏதோ ஒருகழிவகத்தை எம்மக்கள் சுமப்பார்கள்.

இப்படி நன்மை தீமைகளுடனான ஒரு உலகமயமாதல் நடந்தேறும். நான் தவறவிட்ட விடயங்களை பின்நோட்டம் விடுவோர் விட்டுவைக்காது தொடருங்கள்.

உண்டியல் கொண்டுவருவார் கண்டீரோ? : குலன்

undialபிரபாகரன் கொல்லப்பட்டதுடன் கொல்லப்பட்டதா எம்மினத்தின் போராட்டம்? ஈழத்தமிழனுக்கு விடுதலை கிடைத்து விட்டதா? இல்லையென்றால் எங்கே உங்கள் போராட்டங்கள்? தரைப்போர், கடல்போர், வான்போர், நட்சத்திரப்போர், கெரில்லாப்போர், அறப்போர் பனிப்போர் எனப் பலபோர்கள் உலகெங்கும் நடந்தும், எமது தேசத்தில் மட்டுமே மனநோயாளியின் தனிப்போர் நடந்து மிககேவலமான முறையில் முடிவடைந்தது. மிருகத்தின் பெயரைக் காவித்திரிந்ததால் ஆறாம் அறிவு வெளியே தாவிவிட்டதா? பங்கருக்குள் இருந்து வெளியே வந்திருந்தால் இன்னொரு உலகம் இருப்பது தெரிந்திருக்கும். எதிர்காலம் அறியும் திறன், தீர்க்கதரிசனம், மக்கள்நேயம், உலகஅரசியல், பொருளாதார மாற்றங்கள் என்பன பற்றிய ஏதாவது ஒரறிவிருந்திருந்தாலாவது குறைந்தபட்ச உடன்பாட்டுடன், எம்மக்களின் அழிவைக் குறைத்து தமிழீழம் தவிர்ந்த ஏதாவதொரு அரசியல் தீர்வுடன் எம்மக்களின் சுபீட்சமான வாழ்வுக்கான, விடுதலைக்கான அடுத்த படியில் கால்வைத்திருக்கலாம்.

எம்மக்களைக் காப்பாற்றுங்கள், போரை நிறுத்து, இனவழிப்பைச் செய்யாதே என்று ஐரோப்பிய வட அமெரிக்கத் தெருவெங்கும் கொடிகொண்டு கோசம் போட்டுத் திரிந்தோரே! உங்கள் கோரிக்கைகள் பிரபாகரன் இறந்ததுடன் நிறைவேறிவிட்டதா? நீங்கள் யாருக்காகப் போராடினீர்கள்? உங்கள் போராட்டங்கள் எல்லாம் பிரபாகரனைக் கொல்வதற்கென்றே ஆகிவிட்டதே. அறப்போர் மறப்போர் என்று உண்ணாவிரதங்கள், ஊர்வலங்கள் எனக் குறைப்போர் நடத்தினீர்கள் அறமழிந்து மக்கள் அகதியாக அவலப்படுகிறார்கள் எம்மண்ணில். எங்கே உங்கள் போராட்டம்?. மக்கள் மக்கள் என்று நீலிக்கண்ணீர் வடித்த மாற்றுக் கருத்தாளர்களே! மாறாக் கருத்தாளர்களே! அந்த மக்களுக்கான விடிவும், தீர்வும் கிடைத்ததா? ஏன் மௌனம்? போரை நிறுத்து மக்களைக் காப்பாற்று என்றீர்களே போரைவிட கொடுமையான பசி, பட்டினி, சித்திரவதைகளையல்லவா எம்மக்கள் நாள்தோறும் அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள். தெருத்தெருவாய் கொடிபிடித்துக் கோசம் போட்டுப் பட்டினிப்போர் நடத்தியோரே! இன்று எம்மக்கள் பட்டினியுடன் முள்கம்பி வேலிகளுக்குள் சிறைப்பட்டுக் கிடக்கிறார்கள். நீங்களோ பிரபாகரனுடன் தமிழினமே அழிந்துவிட்டது எனக் கருதி ஒரு பிணவாழ்வைத் தொடங்கிவிட்டீர்கள். canada1.jpgபோராட வேண்டிய காலம் இதுதான். நீங்கள் நடத்திய தெருப்போராட்டங்கள் பிரபாகரனையும், புலித்தலைமையையும் காப்பாற்றத்தான் நடத்தினீர்கள் என்பது வெளிச்சம் போட்டே காட்டப்பட்டுவிட்டது. உங்கள் பக்திவாதமும் பகட்டும் பொடிப்பொடியான பின்பு, எரியும் வீட்டில் பிடுங்கிய கொள்ளி மிச்சம் என்பதுபோல், மாடு செத்ததும் உண்ணி களர்வதுபோல் களன்று, பிரிந்து, சேர்த்த காசுகளைப் பங்குபோடுவதிலும், முதலீடு செய்வதிலும் கண்ணும் கருத்துமாக இருந்து அடிபடுகிறீர்கள். உங்கள் தலைமையைக் காக்க இவ்வளவுகாலமும் தம்முயிர் உடமைகளைக் கொடுத்த தியாகச்சின்னங்கள் முள்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டு, வதைப்பட்டு சித்திரவதைக்கப்பட்டுச் செத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கே உங்கள் போராட்டம்? எங்கே உங்கள் மக்கள்?

வெளிநாட்டு பங்கர்களுக்குள் ஒளித்திருந்த பலர் சிறு சிறு குழுக்களாகப் புலிவழியே பணம் பறிக்கக் கிளம்பியிருக்கிறார்கள். புலிகளோ உடைத்த உண்டியலை பங்குபோடுவதிலும், மீண்டும் புதிதாக உண்டியல் கொண்டு திரிவதற்காக அதாவது புலம்பெயர் தமிழர்களிடம் மீதமிருப்பதையும் பிடுங்குவதற்காக தலைமையைப் பங்கு போடுவதிலும் அக்கறை காட்டுகிறார்கள். மாற்றுக்கருத்தாளர்கள் பலர் புலிகள் பாணியிலே வன்னிமக்களைச் சாட்டிக் கொண்டு உண்டியலுடன் திரிகிறார்கள். இப்படி முன்பு சேர்த்த பணங்கள் போய் சேரவேண்டியவர்களுக்கு சேர்ந்ததாகத் தெரியவில்லை. இங்கே எல்லா மாற்றுக்கருத்தாளர்களையும் குறிப்பிடவில்லை. நீங்கள் எவரும் புலிகளை விடச்சிறந்தவர்கள் என்று கூறி விட முடியாது. புலியும் காலத்துக்குக் காலம் ஒவ்வொரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு நிதிதிரட்ட உண்டியலுடன் வந்தார்கள். இதன் மறுவடிவம்தான் நீங்கள் இன்று மக்களிடம் கொண்டு வரும், கொண்டுவரவிருக்கும் உண்டியல்கள். சிலமாறாற்றுக்கருத்தாளர்களின் உதவிகள் உரிய இடத்தில் போய் சேர்ந்தாலும். போகும் வழியில் தேன் எடுக்கப்போறவன் விரல் நக்காதிருப்பானா? என்ற மாதிரியாகி விடுகிறது.

கோடிக்கணக்கில் மக்கள் கொட்டிக் கொடுத்துப் போராட்டம் கோட்டை விடப்பட்ட பின் இன்று மக்களிடையே இருப்பது என்ன? வங்கியில் வாங்கிய பணத்துக்கு வட்டி கட்டமுடியாது தவிக்கிறார்கள் புலம்பெயர்ந்தோர். உலகெங்கும் உள்ள அரசுசாரா நிறுவனங்களும், அரசு சார்நிறுவனங்களும் அகதிகளாய் அல்லலுறும் எம் வன்னிமக்களுக்கு உதவிசெய்யத் தயாராக உள்ளார்கள். இவர்களையும் வெளிநாட்டு ஊடகங்களையும் உள்ளே அனுப்ப என்ன முயற்சிகள் எடுக்கப்பட்டன? போராட்டங்கள் எங்கே நடத்தப்பட்டன? என்ன அழுத்தங்கள் உயர்மட்டங்களில் பிரயோகிக்கப்பட்டன? வரிசைப்படுத்திச் சொல்லுங்கள் பார்க்கலாம்? அந்த வன்னிமக்கள் அன்று புலிகளின் பாதுகாப்புக்குக் கேடயமாக இருந்தார்கள். இன்று அரசின் பணப்பைக்குப் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இந்த வாய்பேசா ஜீவன்களை என்னசெய்யப் போகிறீர்கள். இவர்களுக்கான போராட்டம் எங்கே? கூட்டம்கூடி உண்டியல் கொண்டு திரிந்து யாருடைய பணப்பைகளை நிரப்ப நிற்கிறீர்கள்? தோல்வியை விட அந்தத் தோல்வியை ஒப்புக்கொண்டு முழுமையான சரணாகதியடைவதால் எம்மினத்தை நாமே எதிரியிடம் அடைவு வைக்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள்.

புலிகள், மாஜிப்புலிகள், பிரிந்தபுலிகள், ஆயுதம் தாங்கிய தாங்காத தமிழ் அரசியல் கட்சிகள், மாற்றுக்கருத்தாளர்களே! இன்று வன்னிமக்களுக்காக இணைந்து வெளிநாட்டு உதவிநிறுவனங்களையும் ஊடகங்களையும் வன்னிக்கு அனுப்புமாறு போராடுவதற்கு ஏன் மறுக்கிறீர்கள், தயங்குகிறீர்கள்?. யார் தலைமைதாங்குவது என்று பிரச்சனையா? தனிமனித பக்தியை விட்டுவிட்டு எல்லோருமே தலைமை தாங்குங்கள். இன்று நீங்கள் தனிமனிதராகவோ, குழுக்களாவோ கொண்டு திரியும் உண்டியல்கள் அரசுக்கும், அங்குள்ள ஆயுதம்தாங்கிய குழுக்களுக்கும், அநியாயக்காரர்களுக்கும் நீங்கள் எடுத்துக் கொடுக்கும் தலையணையாகும். வெளிநாட்டு அழுத்தங்களினூடாக அவர்கள் உள்நுளையும் போதுதான் அங்குள்ள அநியாயங்கள், அஜாரகங்கள், அடக்குமுறைகள், போரின் வடுக்கள், இனவழிப்புத்தடயங்கள், பாலியற்பலாற்காரங்கள், கொலைகள், கொள்ளைகள் என அனைத்தும் வெளிவரும். ஏன் நாயணநிதியம் கொடுத்த உதவிப்பணங்கூடச் சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறதா? என்ற கண்காணிப்பும் இருக்கும். வெளிநாட்டு அரசுசார்ந்த சாரா நிறுவனங்கள் வன்னியில் நின்றால் மட்டுமே உதவிப்பணங்கள் சரியான முறையில் குறைந்தது 20 சதவீதமாவது வன்னிமக்களுக்குக் கிடைக்கும்.

அகதிகளை இப்படி சிறைப்பிடித்து வைத்திருப்பதினூடாகப் பெறும் வெளிநாட்டு உதவிகளினால் தம்குடும்பத்துப் பணப்பைகளை நிரப்பவதுடன், போர்தடையங்களை தடையங்களை மறைக்கவும், சர்வதேச நீதிமன்றின் நிற்கும் நிலையை தவிர்க்கவும், போரின் செலவுகளை சரிக்கட்டலாம் என்பதை அரசு நன்கறியும். வன்னி அகதிகளை வெளிநாடு போகவிடும் அரசு ஏன் அவர்களை தத்தமது வாழ்விடங்களுக்குப் போக அனுமதிக்கவில்லை. இதனால் இலாபம் பெறுபவர்கள் பலர். வெளிநாடு போகும் தமிழன் போனால் போனதுதான் என்பது தெரிந்ததே. வெளிநாடு போவதற்கு மற்றைய இயக்கங்கள், அரசபடைகள் அடிபட்ட அகதிகளிடமே பணத்தை வாங்கியபின் கொண்டு போய் விடுகிறார்கள் இப்பணங்களின் ஒருபகுதி இராஜபக்சவின் கூட்டுக்குப் போய்சேருகிறது. இப்பணங்கள் புலம்பெயர் தமிழர்களால் அனுப்பப்படுகிறது என்பது யாவரும் அறிந்ததே. சுருங்கச் சொல்லின் தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறுவதிலும், அழிவதிலும் அரச கூட்டின் பணப்பை நிரம்புவதிலும் அரசு அக்கறையாக இருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ இவர்களுக்கு தலையணை எடுத்து வைத்துத் தாலாட்டுகிறது புலம்(ன்) பெயர் உண்டியல்கள்.

அமெரிக்கா வரும் என்று பிரபாகரன் இருந்தாராம், அவர்கள் ஏமாற்றி விட்டார்களாம். புதுக்கதைகள் புறப்படுகின்றன. புலிகள் அமெரிக்காவுடனும் போருக்கு நின்றவர்கள்தானே. நல்லபிள்ளைக்கு நடிக்க வெளிக்கிட்டு நாசமாய் போனதுதான் முடிவு. அமெரிக்காவின் நிபந்தனைக்கு இணங்கினால்தான் நாணயநிதியத்துக் கடன் கிடைக்கும் எனப்பரப்புரை விட்ட அமெரிக்கா அடுத்த நாளே இலங்கை கேட்ட 190 கோடி அமெரிக்க டொலர்களுக்கு மேலாக 250 கோடியாக கொடுத்துள்ளது. இதுவே அமெரிக்காவின் வழமையான நாடகம். பாலஸ்தீனருக்காய் கண்ணீர் விட்டுக்கொண்டு இஸ்ரேலுக்கு உதவும் அமெரிக்காவை நம்பிய பிரபாகரனின் அரசியல் தலைமையை என்ன என்பது. மக்களை நம்பிப் போராடவக்கில்லாதவர் அமெரிக்காவை நம்பிப் போராடினாராம். இது திருநாவுக்கரசுவின் திருகுதாளமா? அமெரிக்கர்களைக் கொண்டுவந்து புலிகளுக்குக் கேடயமாக வைத்திருக்கலாமே. இறந்தவர்களுக்கும் நோபல் பரிசு கொடுக்கிறார்களாம். பிரபாகரனுக்கு கொடுங்கள் என்று திருநாவுக்கரசு முன்மொழிகிறாரே? அமெரிக்க சார்வானவர்களுக்குத்தானே அமைதிக்கான நோபல்பரிசும் கிடைக்கிறது.

குறிப்பிட்ட ஊர், சாதி, மதத்தவர்கள் தம்மவர்க்காக உண்டியலுடன் திரிகிறார்கள். முக்கியமாக சிலஊரைச் சேர்ந்தவர்கள்தான் வெளிநாட்டில் அதிகமாக உள்ளார்கள். அப்படியானால் மற்றக்கிராமத்தைச் சேர்ந்தவர்களின் நிலை என்ன? மற்றக் கிராமத்தவர்களும் உண்டியல் கொண்டு திரியலாமே என்று கேட்பது கேட்கிறது. அதற்கு போதிய மக்கள் வெளிநாட்டில் இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல இது பிரதேசவாதத்தை ஊக்குவிப்பதாகவும் அமையும். பிரதேசவாதம் கொண்டு ஐரோப்பா வடஅமெரிக்காவில் பல எண்ணற்ற கொலைகள் நடந்தேறின. மதங்களினூடு உதவிகள் சேரும்போது மதமாற்றம் தலைதூக்குகிறது. மதம் என்பது இருக்கிறதோ இல்லையோ என்பதற்கு அப்பால் மனிதனின் நம்பிக்கை என்பது அவனது அடிப்படை உரிமை என்பதை யாரும் மறக்கக்கூடாது. ஒருவன் தான் மாக்ஸ்சிட் என்று எப்படி நம்ப உரிமை உண்டோ அதேயளவு உரிமை தான் என்ன மதத்தைத் தழுவுகிறேன் என்பதிலும் உண்டு. சாதி என்பது அடியுடன் தவிர்க்க, அழிக்கப்படவேண்டிய ஒன்று. ஆதலால் பிரிவுகள் எதுவாகவும் இருக்கட்டும் உடனடியாக அந்த பாவப்பட்ட வன்னிமக்களுக்காக புலம்பெயர் மக்களே போராட்டத்தை ஆரம்பியுங்கள். உங்களின் வரிப்பணத்திலும் தான் அரசுசார்- சாரா அமைப்புகள் இங்கு இயங்குகின்றன. இவ்வுதவிகள் எம்மக்களை அடையாவிட்டால் அது வேறு எங்கோ ஒருநாட்டில் கொடுக்கப்படும். அதை ஏன் எம்மக்கள் பெறக்கூடாது. ஒன்றாய் கூடி, இணைந்து நாம் வாழும் நாடுகளின் கதவுகளைத் தட்டுவோம். வன்னிச்சிறை உடையும். எப்போ? எப்போ??

அகதிகளைக் கருத்திற் கொண்டு அரசிடம் போனவர்கள் அவர்கள் சொன்னதைக் கேட்டு பெட்டிப்பாம்பாய் அடங்கி சலுகைகளைப் பெற்றுத் திரும்பி வந்துவிடுகிறார்கள். மனிதவுரிமை சாசனத்தில் (கொன்வென்சனில்) இப்படியாக அகதிகளை நடத்த முடியாது என்பது அரசுக்குத் தெரியும். ஐ.நா வுக்கும் தெரியும், ஆனால் ஐ.நா என்பது க்கியமற்ற நாக்காக அல்லவா இருக்கிறது. இவ்வம்மணங்களை மறைத்துக் கொண்டு அமைதியாக இருப்பதற்குக் காரணம் என்ன? எம்மக்களின் மேல் பிரயோகிக்கப்படும் பலாற்காரங்களையும் சித்திரவதைகளையும் வெளிநாடுகளில் அம்பலப்படுத்தவும் உயர்மட்ட அழுத்தங்களை ஏற்படுத்துவதினூடாக இலங்கை அரசின் சித்திரவதைச் சிறைக்கூடமாக இருக்கும் வன்னி முகாங்களைத் திறப்பதற்கான போராட்டங்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும். இதைவிட்டுவிட்டு யேசு சீவிக்கிறார் என்பதுபோல் பிரபாகரன் இருக்கிறார், கே.பி புல(ன்)பெயர்ந்த தமிழ்ஈழம், அகதிகளுக்கு உதவி, கல்வி என மாற்றுக்கருத்தும் மாறாக்கருத்தும்கொண்டு உண்டியலுடன் ஓடித்திரியாது, அங்குள்ள மக்களை கருத்திற் கொண்டு பொதுப் போராட்டங்களை இங்கே ஆரம்பியுங்கள். உங்கள் உண்டியல்களால் அங்குள்ள வயிறுகள் நிறையப்போவதில்லை. இந்த உண்டியல்களால் உங்கள் உண்டிகள்தான் நிரப்பப்படுகிதோ யார் அறிவார்? வெளிநாட்டு பொது நிறுவனங்கள் உள்நுளையும் போதுதான் சிறைப்பட்ட மக்களின் நிலை, உணர்வுகள், தேவைகள் என்பன எமக்கும் என்பது எமக்கு மட்டுமல்ல, வெளிநாடுகளுக்கும், மனிதஉரிமை அமைப்புகளுக்கும் நீதியின் கண்களுக்கும் தெரியவரும். அங்குள்ள மக்களின் தேவைகளும் தீர்க்கப்படும். எம்மக்களுக்கான போராட்டத்தை புலத்தில் இருந்தும் நாம் தொடரலாம், தொடரவேண்டும். இப்படியான போராட்டங்களை உருவாக்கி நடத்துவதனூடாக மாற்றுக்கருத்துக்களும் மாறாக்கருத்துக்களும் ஒன்றினைந்து மக்கள் கருத்தாகப் பிரணமிக்கும் வாய்ப்புகள் உண்டு. வெளிநாடுகளிலுள்ள அரசியல், பொதுநல, அரசுசார்ந்த, அரசுசாரா அமைப்புக்கள், தொண்டர் நிறுவனங்கள், ஐ.நா, மனிதநேய அமைப்புகள் என எல்லாக் கதவுகளையும் ஒன்று சேர்ந்து தட்டுங்கள். எம்மக்கள் சிறைப்பட்டிருக்கும் வன்னிச் சிறைக்கதவுகள் உடையட்டும். செய்வீர்களா? எப்போ? வன்னிஅகதிகள் மரணவீட்டிற்குப் பின்பா?

ஆயுதப்போராட்டம் அடக்கப்பட்டு, பிரபாகரனும் கொல்லப்பட்டு, புலிகள் பிரிக்கப்பட்டு, வன்னி மக்கள் அகதிச்சிறையில் அடைக்கப்பட்டு இரண்டரை மாதங்கள் ஓடிவிட்டன. வன்னிமக்களுக்காக நாங்கள் ஒவ்வொருவரும் எடுத்த முன்னெடுப்புக்கள் என்ன? வரிசைப்படுத்துங்கள்? அன்று புலிகளும் அதன் சகோதர அமைப்பான ரிஆர்ஓ வும் கொண்டு ஓடித்திரிந்த உண்டியல்களை சின்னதாக உருமாற்றி மற்றவர்கள் அனைவரும் கொண்டோடித் திரிகிறார்கள். ஆரம்பத்தில் புலிகளும் சின்ன உண்டியலுடன்தான் ஓடித்திரிந்தார்கள். உண்டியல் கொண்டு உங்கள் உண்டிகளை நிரப்புவதை விட்டுவிட்டு, வன்னி மக்களுக்கு போதியளவு உண்டி கொடுக்க வெளிநாட்டுதவிகளை அனுப்ப உங்கள் போராட்டங்களை முன்வையுங்கள். அமைதியாக அசந்து தூங்கும் புலமும் புலத்து அரசுசின் காதுகளும் கதவுகளும் அதிரட்டும். எமது மூன்றாம் உலகநாடுகளின் பாட்டன் பீட்டனின் பணத்திலும் உடமைகளிலும் தான் ஐரோபியர்கள் கோட்டை கட்டியவர்கள். எம்மினத்தின் அழிவுக்கு வழிகோலியவர்களில் ஐரோப்பியர்களுக்கும் பங்குண்டு. எம்பங்காளிகளை நாவறுக்கக் கேட்பதும், அவர்களின் அமைதியைக் கலைத்து துலைத்து எமது உரிமைகளை நிலைநாட்ட முயற்சிப்பதில் எந்தத்தவறும் கிடையாது. இன்னும் மாறி மாறாக்கருத்து என்றில்லாது மக்கள் கருத்துக்காக எம்கரங்களை எம்வன்னி மக்களுக்காக உயர்த்துவோமா?

ஆயுதப் போராட்டத்தின் தோல்வி:- குலன்

20090406_01g.jpgபிரபாகரனின் இறப்பின் பின் ஓர் உயிர்ப்பு என்ற தலைப்பில் June 19 ல் வெளியான எனது கட்டுரையுடன் தொடர்புபட்டதாக இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது.

இன்றுவரை நாம் அரசியலில் படித்த பாடங்கள் சில;

உரிமைகள் மறுக்கப்படும் போது போராட்டம் என்பது அவசியமாகிறது. என்றும் இரண்டாவது இனமே போராட வேண்டி இருப்பதால் முஸ்லீம்கள் மதம்சார்ந்து தம்மை மூன்றாம் இனமாக வகுத்துக் கொள்வதினூடு தம்மை பாதுகாத்துக் கொண்டார்கள். இனங்கள் என்று மொழி வாரியாகவே பிரிக்கப்பட்டுள்ளது என்றாலும், அவர்கள் தம்மை மதரீயாக வகைப்படுத்த விரும்புகிறார்கள். முஸ்லீம் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது. முஸ்லீம் மக்கள் நாளை எமது போராட்டத்தில் ஒரு பெரியபரிமாணத்தை எடுப்பர். முக்கியமாக கிழக்கில் முஸ்லீம்களே போராடும் சக்தியாக உருவெடுப்பார்கள் என்பது திண்ணம்.

முதலில் இனக்கலவரம் ஏற்பட்டது சிங்கள முஸ்லீங்களுக்கிடையில்தான். இது சேர் பொன் இராமனநாதன் போன்ற தலைவர்களால் தீர்த்து வைக்கப்பட்டு அவர்கள் தேரில் வைத்து இழுக்கப்பட்டார்கள். பின் கலவரங்களும் போராட்டங்களும் தமிழர்கள் தலையிலே நிர்ப்பந்தமாக திணிக்கப்பட்டது. மற்றவர்கள் பிரச்சினையில் நாம் மூக்கு நுளைக்காமல் இருப்பது முக்கியம் என்பதே இங்கே நாம் படித்தபாடங்களில் ஒன்றாகும்.

ஆங்கிலேயர் நாட்டை விட்டுவிட்டுப் போகும்போது நாமும் எம்தலைவர்களும் நாம் தனித்துவமானவர்கள் என்பதை உணர்ந்து அன்றே பாக்கிஸ்தான்போல் பிரித்திருந்தால் இன்று ஈழம் கோரி ஒருபோராட்டம் நடந்திருக்காது. இவ்வளவு அழிவுகளை நாம் சந்தித்திருக்க மாட்டோம். சிங்களவர்களின் அடிமையாக இருக்காது சிலவேளை சில ஆயுதம் தாங்கிய குழுக்களின் கீழ் அடிமையாக இருந்திருப்போம். ஆனாலும் மொழி பிரதேசம் போன்றவை பாதுகாக்கப் பட்டிருக்கலாம். சிலவேளை எல்லைப்போரில் நாம் பலரைப் பறிகொடுத்திருப்போம். அந்த அழிவை விட இன்றைய அழிவு குறைவாக இருந்திருக்கலாம்.

இன்று தமிழர் சிங்களவர்கள் என்று பிரிவினைக்கு யார் காரணம்? ஆம் முழு இலங்கையின் அரசியல்வாதிகளே காரணம். தமிழ் சிங்கள மக்களிடையே நாட்டின் அபிவிருத்தி சுவீட்சமான வாழ்வு பற்றிய அறிவும், எண்ணங்களும், நாட்டின் நலன் பற்றிய தூரநோக்கும், செயற்திட்டங்களும் இல்லாமல், குறுகிய நோக்குடன் வாக்குவங்கியை நிரப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட பிரிவினைவாதத்தின் வெளிப்பாடே இன்றைய போரும் அழிவுகளும். பிரிவினைப் போராட்டத்தால் இழப்புக்களைச் சந்தித்தது தமிழர்கள் மட்டுமல்ல. சிங்களவர்களும் தான். அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய நலன்கள் எல்லாமே போருக்குள் கொட்டப்பட்டது. உயிரிழப்புகளுக்கும் குறைவில்லை என்பதை அறிக.

ஒருநாடு ஒர் அரசு என வந்துவிட்டால் மக்கள் அனைவரும் அந்நாட்டவர்கள் எனும் மனநிலை வளர்த்தெடுக்கப்படுவது முக்கியம். இதை மாறிமாறி வந்த சிங்கள அரசுகள் செய்யத் தவறின, மறுத்தன. ஒருநாடும் ஒருகுடும்பம் போன்றதே. நாட்டுக்குள் பிளவுகளையும் பிரிவினைகளையும் வைத்துக் கொண்டு நாட்டை வளர்க்கலாம் என்பது கனவே. ஏன் எமது ஈழவிடுதலைப் போராட்டத்திலும் சகோதரப் படுகொலைகளைச் செய்து கொண்டு நாம் ஒற்றுமையாய் போராடுவோம் என்பது எப்படிச் சாத்தியமாகும். இதன் விளைவே இன்று நாமும் எம்மக்களும் அனுபவிக்கும் தாங்கொணாத் துயர். வேற்றுமைகள் பலவிருப்பினும் ஒற்றுமைகளினூடும் பொதுவான வேலைத்திட்டங்களுடும் நாட்டின் ஐக்கியம் கட்டி எழுப்பப்பட்டிருக்க வேண்டும். இதை இன்று கூட அரசு செய்யத்தொடங்கலாம். காலம் கனிந்துதான் இருக்கிறது. இவ்வளவு காலமும் சிங்களப்பேரினவாதம் செய்யத்தவறிய விடயத்தை இன்றைய அரசு செய்யுமானால் இலங்கையில் இனஒற்றுமையுடனான சுபீட்சமான வாழ்வு உருவாகும். முதலில் பட்டகாயங்களுக்கு மருந்து போடுவது மட்டுமல்ல சிங்களமக்களிடையே தமிழர்களும் இனநாட்டுப்பிரசைகள் என்ற அறிவை துவேச ஒழிப்பினூடாக அரசு செய்வது அவசியம். முக்கியமாக மதத்திற்கு மதிப்பளியாது மனிதத்துக்கு மதிப்பளிக்கப்படுமானால் இலங்கையில் ஒற்றுமை சாத்தியமானதே.

அரசியலினுள் மதம் என்று மூக்கு நுளைக்கிறதோ அன்று பிரச்சினைகள் வித்திடப்படுகிறது. மதம் என்பது நம்பிக்கை மட்டுமே. மனிதன் கடவுளை என்றும் கண்டதில்லை. ஆனால் காணாத கடவுளுக்காகச் சண்டைபிடித்துக் கொண்டிருக்கிறான். இவ்வுலகில் மதச்சண்டையே அதிகம் என்பதை அறிக. யூதர்கள் பாலஸ்தீனியர்கள் போல் என்றும் இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்கள் என்றும் சரித்திரப்பகை கொண்டவராக இருக்கவில்லை. சிறியநாடாகி சிற்றரசுளாகி நாடு பண்டைய காலங்களில் ஆளப்பட்டாலும் சரித்திரப்பகை கொண்டவர்களாக நாம் என்றும் வாழ்ந்ததில்லை. பௌத்த சிங்களவரின் நலன் மட்டும் கருதி மகாவம்சம் புனையப்பட்டதோ அன்று ஆரம்பமானது இனவெறி.

பௌத்தனாக இருப்பவன் இனவெறி கொள்ளலாமா? ஒரு பௌத்தன் என்றும் மீழ்பிறப்பை நம்புபவன். நாளை அவன் தமிழனாகவும் பிறக்கலாம் அல்லவா. கொல்லாமையை முதன்மையாகப் போதிப்பது பௌத்தம் என்பதை அறிவுறுக.

இந்தியத் துணைக்கண்டத்தின் தென்பகுதியில் ஏற்பட்ட அரசியல் மதமாற்றங்கள் காலங்காலமாக இலங்கையில் முக்கியமாக வடபகுதியில் பாதிப்பை ஏற்படுத்தியது. மதம் சார்பாக சாம்பிராட் அசோகனின் பௌத்தசங்கங்கள் இந்தியா முழுவதும் சென்று மதம்பரப்பின. அங்கே பௌத்த அலையே முட்டி மோதியது. இதன்பாதிப்பு இலங்கையின் வடபகுதியிலும் இருந்தது காரணம் இன, மொழி, கலாச்சார, வாணிபத்தொடர்புகள் இந்தியாவுடன் மிகமிக நெருக்கமாக இலங்கையின் தென்பகுதியை விட வடபகுதிக்கே அதிகமாக இருந்தது. முதன்முதலில் பௌத்தமதம் வந்ததும். அம்மதத்தை முதன் முதலில் தழுவிக்கொண்டவர்கள் தமிழர்கள் என்பதும் இலங்கைவாழ் அனைத்து மக்களும் உணரவேண்டிய ஒன்றாகும்.

இலங்கை முழுவதும் பௌத்தம் ஒரே நேரத்தில் இருந்தது என்பதற்கான ஆதாரம் போதாது. இருப்பினும் வடகிழக்குப் பகுதிகளில் தமிழ்பௌத்தர்கள் தான் இருந்தார்கள் என்பதற்கு போதிய ஆதாரங்கள் உண்டு. கரையோரப் பக்கமாகவே பௌத்தம் வடகிழக்குப் பகுதிகளில் பரவியிருந்தது. தற்போது சிங்களவர்கள் பௌத்தர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக பௌத்தம் சிங்கள மக்களுக்கு மட்டும்தான் உரியது என்பது பெரும் தவறு. தமிழர்கள் நாகர்கள் என்பது ஆய்வியல் உண்மை. இந்நாகர்களுக்குரிய விகாரையே நாகவிகாரை என்பதாகும். இது நயினாதீவில் உள்ளது என்பதை அறிக. நாகத்தின்மேல் புத்தர் படுத்திருப்பதுபோன்ற பலசிலைகள் தென் கிழக்காசியாவில் காணலாம். நாகவணக்கமானது உலகின் பலவிடங்களிலும் நடந்திருக்கிறது என்பதற்கு இது சான்றாகும்.

சிங்களவர்களும் திராவிடரே என்பதற்கு போதியளவு சான்றுகள் உள்ளன. நோர்வே நக்கீராவின் கட்டுரை ஒன்று தேசம்நெற்றில் வந்திருந்தது. படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

தேசியம் வளர்க்கப்பட்டு பொது வேலைத்திட்டங்களின் கீழ் நீண்ட நோக்குடன் மற்றய இன, மொழி, கலாச்சாரங்கள் மதிக்கப்படும் போதே இனவெற்றுமை உயிர்பெறும். தற்போதய சூழல் அரசுக்குக் கிடைத்த வரப்பிரசாதம். இதை அரசு செய்யத்தவறின் பண்டாரநாயக்கா, கிட்லர் போன்ற மனிதவினத்துவேசிகளுக்கு நிகராக மகிந்தாவும், அவர் குடும்பமும் உள்ளாகும். போரின்பேரழிவு இருபக்கமும் நடந்திருக்கின்றது. இதையுணர்ந்து இன்றைய அரசியல் தலைவர்கள் செயற்படுவது முக்கியமானது. இன்று நீங்கள் எடுக்கும் சரியான முடிவுதான் நாளை இலங்கையில் ஒரு சுபீட்சமான வாழ்வு. ஆயுதமேந்திப் போராடிய தமிழினம் தான்பட்ட காயங்களுடனும் வெறுப்புகளுடனும் தான் இன்றிருக்கிறது. இக்காயங்களுக்கு சரியான முறையில் மருந்து கொடுக்கப்படாது போனால் நாளை இதைவிட பெரிய, பாரிய அழிவுகளுடனான போர் உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை. இனியொரு போர் உருவானால் இலங்கை எனும் ஒரு தீவு சரித்திரமாக்கப்படலாம். விஞ்ஞானத்தின் அபரீதமான வளர்ச்சியும் கட்டுப்பாடற்ற கண்டுபிடிப்புக்களும் நாளை எம்நாட்டில் பரிசோதிக்கப்படலாம்.

மீண்டும் மீண்டும் அரசுக்கு நான் வலியுறுத்துவது ஒன்றே ஒன்றுதான். விழுப்புண்களுடன் இருக்கும் தமிழினம் போராடவும், ஆயுதப்போராட்டத் தோல்வியூடு தான் படித்ததைக் கொண்டு மீண்டும் ஆயுதப்போராட்டத்துக்கு தன்னை சுதாகரித்துக் கொள்வதற்கு அதிககாலம் எடுக்காது. ஆகவே இலங்கையின் சுபீட்சமான எதிர்காலம் இன்று சிங்கள அரசின் கைகளிலேயே இருக்கிறது.

20080521008.jpgதமிழ்மக்களது ஆயுதப்போராட்டத்தின் தோல்விக்குக் காரணம் என்ன?

அரசியல் தெளிவின்மை;
அரசியல் என்பதை புலிகள் விளங்கியவிதம் மிகமிகப் பிழையானது. மண்ணை மீட்பதாலும், இராணுவத்தை அடித்துக் கலைப்பதாலும் ஒரு நாட்டை கட்டி எழுப்பமுடியும் என்பதும், பிடித்தநாட்டை இராணுவப்பலத்தால் காப்பாற்ற முடியும் என்பதும், புலிகளின் மூடத்தனமான முழுமையாக நம்பிக்கையாக இருக்க வேண்டும். வீரதீரங்கள், சாகசங்கள், கதாநாயகத்துவமே அன்றி அரசியல் ஆகாது. இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு விடயத்திலும் அரசியல் உள்ளது. சாப்பிடும் உணவில், வாங்கும் பொருட்களில், பிள்ளை பெறுதலிலும் அரசியல் உள்ளது. முக்கியமாக இலங்கை அரசியற்சட்டம் என்ன கூறுகிறது? எப்படி நாம் பிரிந்துபோகும் உரிமையுடையோமா? நாம் எடுத்தோம், வெட்டினோம் என்று நடுவில் கோடுகீறி இது எனதுநாடு அது உனதுநாடு என்று பிரிப்பதா? இப்படியான குழந்தைப்பிள்ளைத்தனமான கேள்விகளுக்குக் கூட சரியான பதில் இல்லாமலேயே புலிகளின் போராட்டம் நடந்திருக்கிறது என்பதை இராணுவ நடவடிக்கைளின் முடிவுகள் காட்டுகின்றன. அரசியலை விட்டு இராணுவத்தீர்ப்பே தீர்மானமானது என்று கொண்ட புலிகளுக்கு விளைந்தது என்ன? ஆயுதம் தூக்கியவனுக்கு ஆயுதத்தால் சாவெனும் சமயபோதனை எமக்கு வேண்டாம். ஆயுதத்தையே எதிர்த்து தன்போராட்டத்தை அகிம்சை கொண்டு நடத்திய மாகாத்மா காந்திக்கு என்ன நடந்தது. காந்தி எப்போது ஆயுதம் தூக்கினார்? ஆயுதம் என்பது அரசியலுக்கும் விடுதலைக்கும் துணைநிற்கும் ஒரு கருவியே தவிர. அதுவே அரசியலாக முடியாது. ஆயுதத்தைச் சரியாகப் பாவிக்காத போது அதுவே எமக்கு ஆபத்தாகி விடுகிறது என்பதற்கு புலிகள் ஒரு உதாரணம்.

ஆயுதம் தூக்காமலே பலநாடுகள் அரசியல் நகர்வுகளால் நாட்டைப்பிரித்து தம்மாளுகைக்குள் கொண்டுவந்த சரித்திரங்கள் எம்கண்முன் நடந்தேறின. உ.ம்: கொசோவோ, ஸ்கொட்லண்ட், கிழக்குத்தீமோர் ஆயுதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வென்ற எரித்திரியாவின் சுவடுகளைப் புலிகள் தொடர்ந்தார்கள் என்பதில் ஐயமில்லை. எரித்திரியா சரித்திரரீதியாக காலணித்துவ காலத்தில் கூடத் தனித்தே ஆளப்பட்டது. இதன் பிரிவினை கூட பேரிழப்பின் பின்னே அரசியலாலேயே நிர்ணயிக்கப்பட்டது.

ஒரு இறையாண்மையுள்ள நாட்டை நாம் நினைப்பது போல் துண்டாடிவிட முடியாது. அதற்கு அரசியல் மட்டுமல்ல புவியியல் காரணிகள், வளங்கள், உலகவரசியலின் தாக்கம், பிரிந்து போகும் நாட்டை முன்மொழியவும் அதை வழிமொழிந்து உலகநாடுகளின் முன்நிறுத்துவதற்கான பலம்வாய்ந்த நாடுகளின் பின்புலம், பிராந்திய வல்லரசுகளின் அனுசரணை, அயல்நாடுகளின் உதவி இப்படிப் பலகாரணிகளைக் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.

இன்று 29 வருடமாக புலிகள் நடத்தியது தெரு, ஊர், சண்டித்தனங்களின் புறவளர்ச்சியே அன்றி வேறில்லை. அரசியல் இல்லாத ஒருநாட்டை எப்படிக் கட்டியெழுப்ப முடியும் என்று நினைத்தார்களோ புரியவில்லை. புலிகள் உண்மையாக விடுதலைக்காகப் போராடியிருந்தால் இவ்வளவு அறிவுவளங்கள் வெளிநாடுகளில் இருந்தும் அவற்றை சரியான முறையில் பயன்படுத்தியிருக்கலாம். அரசியலுக்கு பாலசிங்கத்தை மட்டும் நம்பியிருந்தார்கள். பாலசிங்கத்தைத் தவிர வெளிநாட்டில் அரசியலுக்காக புலிகளால் நியமிக்கப்பட்ட அரசியல் அறிவுதார்ந்த ஒரு குழுவை சொல்லுங்கள் பார்க்கலாம். புலம்பெயர் தமிழர்களை பணங்காய்க்கும் மரங்களாகப் பாவித்தார்களே தவிர வேறு என்ன செய்தார்கள்? வெளிநாடுகளில் புலிப்பக்தர்களுக்கு விரும்பாத அனைவரையும் துரோகிகள் என்று விலத்தி விலத்தி ஒரினத்தை அழித்து தன்னினத்துக்கே துரோகம் செய்து நிற்பது புலிகளே அன்றி வேறுயாருமில்லை.

அரசியலுக்கு பாலசிங்கம், ஆயுதங்களுக்கு கே.பி (உலகமே தேடும் ஒரு கிறிமினல்) புலிகளின் இராணுவத்துக்கு பிரபாகரன். இந்த மூவரையும் வைத்துக்கொண்டு பலமில்லியன் வருடங்கள் வாழ்ந்த ஒரினத்தை நிர்ணயிக்க முடியும் என்று நம்பிய புலிகளுக்கும் தமிழ்மக்களுக்கும் இந்தத்தோல்வி வேண்டிய ஒன்றே. ஒரு மனிதனின் வாழ்க்கை வரையறைக்கு உட்பட்டது. ஆனால் ஒரு விடுதலைப்போராட்டம் பலதலைமுறைகள் கூடக் காவிச்செல்லப்படலாம். இதை ஒருதனிமனிதனான பிரபாகரனால் எப்படி நிர்ணயிக்க முடியும்? தனிமனிதத் துதிபாடல்களில் வாழ்ந்த சமூகம் இதைவிட வேறுவிதமாக எப்படிச் சிந்திக்கும்? சிந்திப்பவர்களின் தலையெழுத்துக்கள் எல்லாம் துப்பாக்கிகளால் எழுதப்படும் போது எந்தப் புத்திஜீவி, எந்த அறிவுஜீவி தன்கருத்துக்களைச் சொல்ல முன்வருவான். போகும் வழி எதுவெனத்தெரியாமல் போனபோராட்டம் தான் புலிகளினது போராட்டம். ஆயுதமின்றி அரசியலால் கூட நாடுகள் பிரிக்கப்பட்டன என்பதை முன்பு குறிப்பிட்டேன் என்பதை அறிக.

எரித்திரிய போராட்டம்;
எரித்திரிய வீரம் செறிந்த கெரில்லாப் போராட்டம் வெற்றி பெற்றது என்றாலும் மக்களின் விடுதலை தனிமனிதனால் பறித்தெடுக்கப்பட்டுள்ளது. கூட நின்று போராடிய போராளிகள் மந்திரிகளாகி பின் சிறைப்படுத்தப்பட்டனர். எரித்திரியாவின் பிரிவினையை உலகநாடுகள் அனுசரித்ததற்கு முக்கிய காரணம் எரித்திரியாவானது என்றும் மற்றைய நாடுகளுடன் இணைந்து இருந்ததில்லை. காலணித்துவ காலத்திலும் கூட. எரித்திரியரால் பேசப்படும் திகிரின்ய எனும் மொழியும், எத்தியோப்பியரால் பேசப்படும் அமாரிக் எனும் மொழியும் கெஸ் எனும் ஆதிமொழியில் இருந்து உருவானது. இது தமிழைப்போல் ஒரு செம்மொழி என்பதும் குறிப்பிடத்தக்கது. செம்மொழியின் வரைபு இலக்கணம் மற்றமொழிகளின் கலப்பின்றி வாழத்தகுதி கொண்ட மொழி என்பதாகும். இந்த எரித்திரியப் போராட்டம் எத்தனையோ உயிர்களைக் காவுகெண்ட பின்பும் ஒரு தனிமனிதனின் கைகளிலே ஒருநாட்டின், மனித இனத்தின் தலைவிதி போய் சேர்ந்துள்ளது. நான் புலிகள் பலமாக இருக்கும் காலங்களின் யாவருக்கும் சொல்லும் வார்த்தை இது: “தமிழர்களின் போராட்டம் யார் கைகளில் அடிமையாக இருப்பது என்பதுதான்”

போராடும் சக்திகள் கண்டறியப்படாமையும் வழிமுறையற்ற போராட்டமும்;

உண்மையாகப் போராடும் சக்திகள் யார்? போராட்டம் எப்படி பின்பற்றப்பட வேண்டும், குறிக்கோளை அடைவதற்கான வழி என்ன? எமது போராட்டம் வெற்றியழிக்குமா? ஒரு இறைமையுள்ள நாட்டிலிருந்து ஈழம் பிரிப்பதற்கு உலகவரசியல் அமைப்பில் எமக்கு சாத்தியமான காரணிகள் உள்ளதா? இருந்தால் அவை எவை? இல்லையென்றால் போராட்டம் எப்படி அமையவேண்டும் எனும் தூரநோக்கோ, தூயநோக்கோ புலிகளுக்கு இருக்கவில்லை.

எம்நாட்டுத் தமிழ்மக்களின் சனத்தொகையை வைத்தும், புவியில் நிலைகளை வைத்தும் ஒரு தனிநாட்டைப் பிரித்து ஆளமுடியுமா? பிரித்தெடுத்தால் எல்லைப்போர் என்பது தவிர்க்க முடியுமா? இதற்கு எமது புவியியல் அமைப்பும் மக்களும் தயாரா? போராட்டம் மண்ணுக்கா மக்களுக்கா?

ஈழம்வேண்டும் என கடைசிவரையும் தெருத்தெருவாகக் கத்தியவர்கள் யார்? இவர்கள் ஈழமண்ணில் நின்றா கத்தினார்கள். அம்மண்ணில் நின்று கதைக்கவோ கத்தவோ வக்கற்றவர்கள் ஈழம் கேட்டுக் கோசம் போட்டார்கள். ஈழம் எங்காவது ஐரோப்பியக் கடைகளில் விற்கிறதா?

போராடப் புறப்படும்போது எம்முடன் இணைந்து செயற்படும் சக்திகள் யார்? சிங்களப் பகுதிகளில் கூட புரட்சிகரமான சத்திகளை இனங்கண்டு எம்மக்களின் பிரச்சனைகளை அவர்களும் வென்றெடுக்கக் கூடிய வசதிகள் உள்ளனவா எனக்கண்டறிந்து போராட்டம் நெறிப்படுத்தப் பட்டிருக்க வேண்டும். புலிகள் செய்தார்களா? இல்லையே. புலிகளும் ஈழமென்ற போரில் துவேசத்தை வளர்த்தார்களே தவிர சிங்களப்பகுதியிலுள்ள எமக்காகப் போராடும் சக்திகளைத் தவறவிட்டார்கள் என்பதே உண்மை.

எதிரியை ஆயுதத்தால் மட்டும் பலமிழக்கச் செய்வதால் நாம் வென்றுவிட முடியாது. எதிரியின் பகுதிகளில் எம்மவர்களின் அரசியல் ஆதிக்கத்தை வலுப்படுத்துவதும், எதிரியின் பொருளாதாரக் கட்டமைப்பை சீரழிப்பதும், உடைத்தெறிவதும், உலகநாடுகளில் அவர்களை தனிமைப்படுத்துவதும், எமது பிரச்சனையை கூட சிங்களமக்களின் வாயால் கொணர்விப்பதும் கூட எம்மக்களின் விடுதலைக்கு வழிவகுத்திருக்கும். செய்தார்களா? செய்வார்களா?

விடுதலை விடுதலை என்று என்றும் கதைத்தார்களே தவிர இதற்கான அடிப்படை நடவடிக்கைகள் எதுவுமே யாராலும் எடுக்கப்படவில்லை என்பதே உண்மை. சகோதரப் படுகொலைகளுடாக தமிழ் மக்கள் உள்ளேயே எதிரிகளை வளர்த்துக்கொண்டு விடுதலையின் ஏக சுவீகாரபுத்திரர்களாக எப்படி வாழமுடியும் என்பதன் முடிவே இன்றைய புலியழிப்பு.

பிரபாகரன் இன்று உயிருடன் இருந்தால் அவருக்கு அஞ்சலியே செய்யாது போன மக்களின் நிலையில் நின்று எம்மக்களின் விடுதலைக்கான உண்மைத் தார்ப்பரியத்தைப் புரிந்திருப்பாரா என்பதும் கேள்விதான்?

இலங்கை இராணுவம் இலங்கை அரசின் கைகளேயன்றி முழுஅரசும் இராணுவமல்ல. ஒரு இனத்தின் விடுதலைக்கு ஆயுதம் ஒரு கருவியே தவிர அதுவே விடுதலையல்ல. அந்த அரசியலினுள் பலவிதமான விடுதலைகள் தங்கித் தொங்கியிருக்கும். வகுப்புக்கள், பெண்கள், சாதி, மதம், கலை, கலாச்சாரம் என பலவிடுதலைக் கூறுகள் உள்ளடங்கும்.

அரசியலையும் மக்களைகளையும் ஒரு போராடுகளமாகவும், போராடும் சக்தியாகவும் கருதாத புலிகளின் அழிவு எம்மக்களுக்கு நல்லதையே செய்திருக்கிறது எனலாம். இந்த ஒரு சின்ன விடயத்தைப் புரிந்து கொள்வதற்கு எம்மக்களுக்கும் புலிகளுக்கும் ஒரு இலட்சம் மனிதவுயிர்கள் தேவைப்பட்டுள்ளது.

மக்களை தயார்படுத்தாமை, பங்காளிகளாக்காது பார்வையாளராக வைத்திருந்தமை;

கெரில்லாப் போராட்டம் மட்டுமே வெற்றியளிக்கும் என முழுமையாக நம்பிய புலிகள் என்று மக்களை கெரில்லா யுத்தத்துக்குத் தயார்படுத்தினார்கள்? கெரில்லா யுத்தமும் என்பது ஆயுதப் போராட்டத்தின் ஒரு யுத்தவடிவமே தவிர அரசியலாக முடியாது. மக்கள் தம்விடுதலையை முழுமூச்சாக முன்னெடுக்கும்போது அரசபயங்கரவாத்தின் கரங்களாக இயங்கும் இராணுவத்துடன் கெரில்லாக்கள் மோதியிருக்க வேண்டும். இரண்டும் சமாந்தரமாக நடந்திருக்க வேண்டிய ஒன்றாகும். வைத்தால் குடுமி வழித்தால் மொட்டை என்றாகி விட்டது தமிழர் நிலை. கெரில்லா யுத்தத்தை மட்டும் முன்னெடுத்தார்கள் புலிகள். அரசிலுக்கான, அரசியல் தீர்வுக்கான அடித்தளமோ அவர்களிடம் காணப்படவில்லை. புலிகளின் இராணுவ அழிவின் பின் அரசியலை மட்டும் தூக்கிக் கொண்டு திரிகிறார்கள் புலம்பெயர் தமிழர்களும் கே.பியும்.

உலகில் நடந்த கெரில்லாப் போராட்டங்களை உற்றுநோக்கினால் அனைத்துமே இறுதிவரை அவர்கள் கெரில்லாவாகவே இருந்திருக்கிறார்கள். அரசியல் தன்பாதையில் மக்களில் மையங்கொண்டு கெரில்லாக்களின் பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும். புலிகள் தம்கெரில்லாப் பாணியில் இருந்து விலகி மரபுவழி போராளிகளாகத் தயார்படுத்தப்பட்டார்கள். மரபுவழிப் போராட்டம் எம்புவியல்சார் காரணிகளுடன் ஒத்துவருமா என்பதை புலிகள் அறிந்திருந்திருக்க வேண்டும். அதை அவர்கள் செய்யவில்லை. மக்களை வரிவசூலிக்கும் வங்கிகளாகவும், அடித்துவிட்டு ஒளிக்கும் புதர்களாகவும், தம்வசதிகளுக்காய் பயன்படுத்தும் கூலிக்காரர்களாகவும் (பங்கர் வெட்டல், வீடுகட்டல், புலிகளுக்கு நீச்சல்தடாகம் வெட்டல்), ஆள்பற்றாக்குறையாகும் போது குழந்தைபிடிகாரர்களைப்போல் பிடித்து தமக்குப் பாதுகாப்புக்குப் பயிற்சியழித்தார்களே தவிர மக்களை என்ன செய்தார்கள்? போராட விட்டார்களா? மக்களின் கருத்துக்கு செவிசாய்தார்களா? அவர்கள் தேவைகளைக் கேட்டறிந்தார்களா? அரசியல் போருக்காவது தயார்படுத்தினார்களா? சொல்லுங்கள்.

போராட்டம் எப்படி நடந்திருக்க வேண்டும்

• மக்கள் அரசியல் மயப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள் மக்களிடையே உருவாகியிருப்பார்கள். இன்நிலை 1976, 77ல் இருந்தது. அதை முழுமையாக மழுங்கடித்தவர்கள் புலிகளே. நல்ல அரசியல் தலைவர்களையும், புத்திஜீவிகள், அறிவுஜீவிகளைத் தேடித்தேடிச் சுட்டது புலிகளே. இவர்கள் அழிவுறும்போது பெரியமனிதவளமே அழிவுறுகிறது. இது முழுமையாகத் தடுக்கப்பட்டிருக்க வேண்டும். புத்தியாள்வதை விட ஆயுதம் ஆளத்தொங்கியதால் வந்த வினை தான் இது. –இங்கு புலிகள் மேல் குற்றம் சாட்டப்படுகிறது என்பதற்காக மற்றைய இயக்கங்கள் மார்பு தட்டவியலாது.

• மக்களை அரசியல் முன்னெடுப்புக்களில் ஈடுபடுத்தும் வேளை அழிவாயுதங்களில் இருந்தும், பசிபட்டிணியில் இருந்தும், குறைந்தபட்ச முதலீட்டுடன் பெருவருவாய் தரும் பயிற்செய்கை, கைத்தொழில்களை ஊக்குவிப்பதுடன் பயிற்றுவித்தலும் போதியளவு நடந்திருக்க வேண்டும். கடைசிவரையும் சிங்கள அரசின் உணவிலும், சம்பளத்திலும் தானே அரசஊழியர்களுக்கு பணம் கொடுத்தார்கள். தாம் வன்னியை வைத்திருந்தோம் என்று மார்புதட்டும் இவர்கள் எப்போ வன்னியை முழுமையாய் தம்ஆட்சியின் கீழ் அரசின் உதவியின்றி வைத்திருந்தார்கள். போராட்டகாலத்தில் தமக்குத் தேவையான உணவையும், தம்தேவைகளையும் தன்னிறைவு செய்ய மக்கள் தயார்படுத்தப் பட்டிருக்க வேண்டும்.

• சிங்களப் பகுதியிலுள்ள போராடும் சக்திகளுடன் இணைந்து தெற்கில் ஒரு வர்க்கப் போராட்ட அவசியத்தை உணர்த்தியிருக்க வேண்டும் செய்தார்களா? எங்கே? சிங்களப் பகுதியில் ஒருபோராட்டம் உருவாகும் போது தமிழர்கள் பகுதியில் அரசின் கவனம் மிகக் குறைந்திருக்கமல்லவா.

• துவேசத்தை வளர்த்து வாக்குவங்கிகளை நிரப்பும் சிங்கள அரசியலுக்கெதிராக சிங்கள மக்களைத் தூண்டிவிடுவதுடன், நாம் எதற்காகப் போராடுகிறோம், எமக்கு இழைக்கப்பட்ட துரோகங்கள் என்ன? எமது போராட்டம் சிங்களமக்களுக்கு எதிரானது அல்ல, அரசவியந்திரத்துக்கு எதிரானதே என்பதை விளக்கி ஊடக உறுதிப்பாட்டைப் பேணியிருக்க வேண்டும். இப்படிச் செய்திருந்தாலாவது சிங்களமக்களே அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்திருப்பார்கள். எமது போராட்டத்துக்கு ஊன்றுகோலாக இருந்திருப்பார்கள். வடபகுதியில் போர்நடந்தபோது கூட தென்பகுதியில் என்ன நடக்கிறது என்ற ஒன்றுமே தெரியாதவாறு இருந்ததற்கு காரணம் புலிகளின் எந்த ஒரு அசைவும் தெற்கில் இல்லாததே காரணம்.

• தென்பகுதியில் அரசஇயந்திரங்களை ஸ்தபிக்குமாறு தெற்கிலுள்ள முற்போக்கு சக்திகளுடன் இணைந்து தெற்கில் ஒரு போராட்டத்தை தொடர்ந்திருக்கலாம். அங்கே அரசுக்குத் தலைவலி ஏற்படும்போது எமதுபோராட்டம் வெற்றி பெறக்கூடிய சாத்தியங்கள் இருந்திருக்கும். ஏன் செய்யவில்லை?

• புலிகளுக்கு புலம்பெயர் தமிழர்களின் பணம் இருந்தாலும் அரசுக்கு தலையிடி மட்டுமல்ல பொருளாதாரச் சீரழிவுகளை ஏற்படுத்துவதனூடாக அரசை பலமிழக்கச் செய்யலாம். இராணுவ அணுகுமுறைகளால் மட்டும் பொருளாதாரச் சரிவை ஏற்படுத்த முடியாது என்பதை புலிகள் அறிந்திருக்க வேண்டும். இதில் எதைச் செய்தார்கள்?.

• ஏன் தென்பகுதியில் ஒரு இடதுசாரிப்போரை ஏற்படுத்த பலசாத்தியக் கூறுகள் அன்றும் இருந்தது இன்றும் இருக்கிறது. அங்கேயும் ஒரு மக்களுக்குள் போராட்டத்தை உருவாவதற்கு அடிகோலி உதவியிருந்தால் அப்போராட்டம் எம்வெற்றிக்கு அடிகோலியிருக்கும்? முயன்றார்களா?

• புலிகள் தென்பகுதியில் எந்த சரியான இராஜதந்திர முறையைக் கையாண்டார்கள்?.

• போராட்டம் என்பது போராடும் மக்களிடையே மட்டுமல்ல எதிரியின் புலத்திலும் நடைபெறுவது முக்கியம் மட்டுமல்ல இன்றியமமையாததும் கூட. செய்தார்களா?.

• புலத்தில் வாழும் தமிழர்கள் வெறும் பணம்காய்கும் மரங்களாகத்தான் பயன்படுத்தப் பட்டார்கள். இவர்களது அறிவு, அரசியல் வளங்கள் எதுவுமே பயன்படுத்தப்படவில்லை. புலிக்குப் பணம் கொடுக்காதவர்கள் எல்லோரும் துரோகியாகத் தூற்றப்பட்டார்களே அன்றி அவர்களிடன் இருக்கும் அறிவுச் செல்வத்தைப் பயன்படுத்த முனைந்தார்களா? இல்லையே!

• ஆயுதப்போரினதும், அரசியல்தீர்வினதும் அடுத்த கட்டநடவடிக்கை என்ன என்பதில் தெளிவாக இருந்தார்களா? இல்லை. இருந்திருந்தால் எல்லோரையும் கூட்டியள்ளிக் கொண்டு போய் வன்னியில் வேள்வி நடத்தியிருப்பார்களா?.

• மாவிலாற்றிலே புரிந்திருக்க வேண்டும் எதிரியின் பலம். காலம் பார்த்து, எதிரியின் பலமறிந்து, தனக்கு இழப்பின்றி அல்லது குறைந்தபட்ச இழப்புடன் எதிரிக்கு பேரிழப்பைக் கொடுப்பவன்தான் கெரில்லா. இதில் புலிகள் எதைச் சரிவரச்செய்தார்கள்? கிளிநொச்சியில் மக்களுக்குப் பேரழிவு ஏற்படும் போது புலிகள் மரபுவழியில் நின்று விலத்தி முழுமையான ஒரு கெறில்லாப் போர்முறைக்கு மாறியிருக்க வேண்டாமா?

• எதிரியைக் கேடயமாக வைத்திருப்பதே ஒரு கெரில்லாப்பாணிப் போர். தம்மக்களையே கேடயமாக்கி தம்மக்களையே எதிரிகள் அழிக்க காரணமானதுடன் தானும் தன்மக்களை அழித்த கொடூரமான இனவழிப்பாளனும், உண்மையில் இனத்துரோகிகளும் புலிகளே.

• இங்கே புலிகள் எனக்குறிப்பிடுவது முக்கியமான புலித்தலைமையையே. பலாற்காரமாகவும் வசதியின்மையாலும் புலிகளில் இணைந்து கொண்டவர்களையும், வானவேடிக்கைகளில் மயங்கிப்போன புலி உறுப்பினர்களையும் நான் இங்கு கருதவில்லை.

• பிரேமதாசா, மகிந்தா போன்றோரிடம் பணம்வாங்கி அவர்களுக்குச் சேவை செய்த புலிகள் பணத்துக்குப் பதிலாக தமிழ்மக்களின் அரசியல் அபிலாசை ஒன்றை ஆடுபொருளாக வைத்திருக்கலாமே. இதில் இருந்து தெரியவில்லையா புலிகள் போராளிகளா? மாவியாக்களா? என்பது. குறைந்தபட்சம் மாநிலசுயாட்சியையோ அல்லது அதிகாரப் பரவலாக்கலையோ எதையாவது அரசியலுக்காக, எம்மக்களுக்காகக் கேட்டிருந்தால்கூட புலிகளை மன்னிக்கலாம். இன்னும் இன்னும் எத்தனையோ… செய்திருக்கலாம். தெற்கிலங்கையில் குண்டுதாரிகளை அனுப்புவதைத் தவிர எதைத்தான் செய்தார்கள். பேருக்குமட்டும் சிறிதாய் ஏதாவதைச் செய்துவிட்டு சரித்திர நாயகனாகப் பிரபா முயன்றுள்ளார் என்பதே உண்மை. கடைசியில் தரித்திர நாயகனானதே முடிவு.

• ஒருபோராட்டத்தின் வெற்றியே மக்கள் பலத்திலும் ஒற்றுமையிலும்தான் தங்கியிருக்கிறது. சகோதரப் படுகொலைகளைச் செய்ததால் எம்மிடையே எதிரிகளை வளர்த்தார்கள். எதிரியை பொருளாதார ரீதியாக வீழ்த்தாமலும் எம்மிடையே எதிரியை வளர்தெடுத்ததாலுமே ஆயுதப்போராட்டம் வீழ்ச்சி கண்டது என்பதே உண்மை.

• திம்பு அல்லது ராஜிவ் ஒப்பந்தம் போன்றவற்றினூடாகக் கிடைக்கவிருந்த சலுகைகளைப் பெற்றுக்கொண்டு, அதிகாரங்களைச் சிறிது சிறிதாக எளிமையான போராட்டங்களினூடு கூட பெறமுயற்சித்திருக்கலாம். வெறுங்கையால் முழம்போட முயன்றார்கள் புலிகள். இப்போ மாநிலசுயாட்சியும் இல்லை புலிகளின் அழிவில் பிரபாவுக்கு மக்களின் அஞ்சலியும் இல்லை.

• புலிகளின் போக்கில் விடுதலை என்பது புலிக்கும் புலிக்குட்டிகளுக்கும் என்று எண்ணினார்களே தவிர மக்களுக்கு என்று எண்ணியிருந்தால் மக்களைப் போராட வைத்திருப்பார்கள். வெகுஜனப் போராட்டத்தின் வலுவையும், மக்கள் சக்தியையும் மக்களுக்கே உணர்த்தியிருப்பார்கள். மூன்றரை இலட்சம் மக்கள் வன்னிக்குள் பார்வையாளராக முடங்கிச் சாகும்போது கூட வெகுஜனத்தின் போராடுசக்தியை புலிகள் உணர்ந்தார்களா? குறைந்தது 15 ஆயிரம் 20 ஆயிரம் தமிழர்கள் கிடைத்த கத்தி பொல்லுடன் ஓடிப்போய் ஆமியின் மேல்பாய்ந்திருந்தால் கூட இவ்வளவு மக்கள் அழிவை நாம் தேடியிருக்க மாட்டோம். இப்படியான மக்கள் கூட்டத்தின் முன் எத்தனை ஆமிதான் எத்தனை தாங்கிகள்தான் முன்நிற்க முடியும். ரசியாவில் சிலவருடங்களுக்கு முன்னால் ஏற்படவிருந்த இராணுவப்புரட்சி மக்களால் மேற்கூறியவாறே முறியடிக்கப்பட்டது. நவீனரகத் தாங்கிகளால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. எங்கே மக்கள் சக்தி பயன்படுத்தப்பட்டது. அழிக்கப்பட்டது என்பதே உண்மை.

• தம்மிடமுள்ள பிழைகளைகளையும், குறைகளையும் மறைப்பதற்காகக் கதாநாயகவேடம் போட்டு மக்களை நம்பச்செய்து மக்களின் இயங்குசக்தியை அழித்தார்கள். சாதாரணமாக ஒர் உலங்கு வானூர்தியையே அழிக்க முடியாதவர்கள் எப்படி மிகைஒலிப் போர் விமானத்தை விழுத்தியிருப்பார்கள். கருணா உடைந்து போனபோதுதானே உள்விடயங்கள் அரசுக்குத் தெரியவந்தது. விலாசங்காட்டப்போய் மண்கவ்வியதுதான் மிச்சம்.

• மிக்29 இரசியத்தாயாரிப்பான மிகைஒலிப்போர் விமானம். இது 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் தயாரிக்கப்பட்டது. இன்றைய ஐரோப்பிய அமெரிக்க போர்விமானங்களுடன் ஒப்பிடும்போது மிகமிகப் பழையைவாய்ந்ததும் தொழில் நுட்பத்திறன் குறைந்ததுமாகும். எஃவ் 14 (ரொம் கட்) அமெரிக்க தயாரிப்பு, எஃவ் 16( போரிடும் கழுகு) அமெரிக்க தயாரிப்பு, ஏரோ வ்ஃவைட்டர் (ஐரோப்பிய தயாரிப்பு) இவற்றுடன் ஒப்பிடும்போது மிக் 29 பூச்சியம் என்றே கூறலாம். இதற்கான விமான எதிர்ப்பு ஏவுகணைகளை ரஸ்சியாவிடமே மிகமிக மலிவான விலைக்கு வாங்கியிருக்கலாம். அதன் விலை விமானத்தின் விலையைவிடப் பலவாயிரம் மடங்கு மலிவானது. ஏன் செய்யவில்லை? புலம்பெயர் தமிழரிடம் வசூலித்த பணங்கள் எங்கே?.

• செசினா எனும் தனிநபர் சிறுவிமானத்தை விடமலிவான பெறுமதியற்ற, ஒருவிமானத்தை வாங்கி ‘ஷோ’ காட்டி (படங்காட்டி) எதிரி எதிர்பார்த்ததை விட பெரிய போர்விமானங்களை வாங்கச் செய்து தனக்குத்தானே தன்தலையில் மண்போட்டார்கள் புலிகள். ஒரு கெரில்லாப் போருக்கு விமானம் முக்கியமா? விமான எதிர்ப்பு ஏவுகணை முக்கியமா? இதை சாதாரண குழந்தைப்பிள்ளையே இதற்குப் பதில் சொல்லும். இரண்டு பேரைக் கொண்டு பறப்புகளை ஏற்படுத்தும் புலிகளின் விமானங்கள் 800கிலோ நிறையுடைய குண்டுகளை கொழும்பிலுள்ள இராணுவத்தளத்தின் மேல் போட்டதாம். யாருக்குக் காதில் பூவைக்கிறார்கள்?

• மக்கள் கருத்துக்களைத்தான் புலிகள் கேட்கவில்லை மாற்றுக்கருத்தாளர்களின் கருத்தையாவது செவிமடுத்திருக்கலாம். கேட்டிருந்தாலே போதும் குறைந்தபட்சம் சிந்தனைக்கு ஏதாவது கிடைத்திருக்குமல்லவா? மக்களின் கருத்துக்களையோ மாற்றுக்கருத்தாளர்களின் கருத்துக்களையோ செவிமடுத்து தன்பிழைகளைச் சரிசெய்து கொண்டு போராடியிருக்கலாம்.

• ஒரினத்தின் தலைவிதியை, மானத்தை, வரலாற்றை, மதிப்பற்ற உயிர்களை துவம்சம் செய்து தனிமனிதனாக தனிக்காட்டு ராஜாவாக வாழமுயன்றதன் விளைவே இது. தனக்கு அடுத்ததான ஒருசரியான தலைவனை தெரிவு செய்யவே தகுதியற்ற பிரபாவுக்கு போராட்டம் ஒரு கேடா?

• மோட்டுச் சிங்களவன் மோட்டுச் சிங்களவன் என்றோமே இந்திய இராணுவத்தைக் கலைக்கவும், பலதமிழ் அரசியல் எதிர்ப்பலங்களை தொலைக்கவும் பிரேமதாசா புலிகளுக்கு பணமும் ஆயுதமும் கொடுத்ததை யாவரும் அறிவர். அங்கே புலிகள் புத்திசாலிகளாக இருந்திருந்தால் பிரேமதாசாவின் ஒருகல்லில் இரண்டு மாங்காய்கள் என்பதை உணர்ந்திருப்பார்கள். இதுவே ராஜீவ் கொலையாக விரிவடைந்து ஒரு இனத்தின் விடுதலைகே உலைவைத்து நிற்கிறது.

• வன்னிப்புலிகள் வன்னிப்புலிகள் என்கிறார்களே புலிகள். இதற்கு ஒழுங்காக வித்திட்டு நீர்பாச்சிப் பாதுகாத்து வளர்த்தது யார்? பிரபாவா? மாத்தையா… இதை மறந்து விடாதீர்கள். கிட்டு யாழ்பாணத்தில் விலாசம் காட்டினாலும். அடித்தளத்தில் இளைஞர்களை இணைப்பதற்கான இணையங்களை ஊன்றியதும் மாத்தையா, பண்டிதர் போன்றோன் என்பதை அறிக.

• முதன் முதலில் புலிகளுள்ளேயே சகோதரப் படுகொலையை வன்னியில் வைத்து செய்தவர் பிரபா. இது பலகாலமாய் மறைக்கப்பட்டு வந்தது. புளொட் பிரிந்தபின்தான் உண்மைகள் வெளிக்கொணரப்பட்டன. பற்குணம் எனும் சுதுமலையைச் சேர்ந்த இளைஞர் சிறியவயதிலேயே தன்னை ஆயுதப்போராட்டத்தில் இணைத்துக் கொண்டவர். இதை சகோதரப் படுகொலை என்பதா? தோழமைக் கொலை என்பதா? இக்கொலையின் ஆரம்பம் தான் பிரபாகரனின் தமிழினவழிப்பு.

• ஆரம்பத்திலேயே புலிகளை சரியாக இனங்கண்டு அவர்களைப் புறம்தள்ளி வெளியில் புதியபாதையில் புறப்பட்ட எண்ணிய தோழர் சுந்தரம் (சிவசண்முகமூர்த்தி) கைப்பேனா சுடப்பட்டது. எம்புதியபாதைக்கு உலைவைக்கப்பட்டது. புத்திஜீவிகள் அழிப்பு அன்றே ஆரம்பமானது. அன்று துப்பாக்கிகளுக்கு முன்னோடிகளாக போனாக்களே போராட்டத்தைக் கொண்டு செல்லவேண்டும் என்பதை உணர்ந்திருந்தவர்கள் நாம். திரும்பிப் பாருங்கள் இன்று புத்தி வென்றதா? ஆயுதச் சக்தி வென்றதா? சரி இன்றும் ஆயுதம் தாங்கிய குழுக்களே மக்களின் விடுதலைக்காக பேனாக்களுக்கு வழிவிடுங்கள்.

• ஒரு கந்தசட்டியின் போதுதான் முஸ்லீம் மக்கள் யாழ்பாணத்தை விட்டு இரவோடிரவாக உடுத்த உடுப்புடன் கலைக்கப்பட்டார்கள். புலிகள் செய்தபழி அடுத்த கந்தசட்டிக்கு யாழ்பாணமக்கள் புலிகளால் வன்னிக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். படியுங்கள் தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்.

• புலிகள் சகஇயக்கங்களைத் தடைசெய்தார்கள் உலகமே புலிகளைத் தடைசெய்தது. எம்மிடையே பகைகளை வளர்ப்பதனால் வெற்றிப்பாதையில் நாம் பின்னடைவையே சந்திப்போம்.

• புலித்தடையை நீக்க உலகின் முன் நல்லபாம்பாகப் புலிநடிக்கத் தொடங்கியது. உலகம் கண்மூடிக்கொண்டுதான் இருந்ததா? இல்லையே. தெருத்தெருவாய் புலிகள் எம்மையும் மக்களையும் காப்பாற்றுங்கள் எனும் போது உலகம் என்ன சொன்னது? மக்களை வெளியில் விடு. புலிவேறு மக்கள் வேறு என்பதை உலகம் உணர்ந்திருந்தது. மக்களுக்காகப் போராடியிருந்தால் அம்மக்களையே பயணக்கைதிகளாகவும், கேடயமாகவும் பாவித்திருக்க மாட்டார்கள். உலகின் உயர்குற்றங்களின் ஒன்று மனிதக் கேடயம் இதைச் செய்து கொண்டு எங்களைக் காப்பாற்றுங்கள் என்றால் யார் வருவார்? உலகநாடுகளின் உதவி வேண்டுமாயின் அவர்களின் சட்டதிட்டங்களுக்குப் பணிந்து போவது முக்கியம்.

• மாவிலாற்றில் புலிகள் வாங்கிய அடியுடன் உணர்ந்திருக்க வேண்டும் எதிரியின் பலத்தை. இதை உணராதவன் எப்படி ஒரு கெரில்லாப் போராளியாக மட்டுமல்ல மனிதனாகவே இருந்திருக்க முடியாது. எதிரியின் பலமறிந்து அவன் பலவீனத்தை தன் தாக்குதல் வளமாகக் கொள்பவனே ஒரு கெரில்லாப்போராளி. கெரில்லாப் புலிகளின் விறுத்தத்தைப் பாருங்கள். புலிகள் கிளிநொச்சியிலேயே பின்வாங்கியிருந்தால் மக்கள், உடமைகள் காப்பாற்றப்பட்டிருக்கும். புலிகள் தம் கெரில்லாப் பாணியிலேயே தாக்குதல்களைச் செய்து கொண்டிருந்திருக்கலாம். சந்தர்ப்பம் சூழ்நிலைகளைச் சரிவர அறிந்து போராடுபவனே உண்மையாக கெரில்லா.

• புலிகள் ஆயுதங்களை வெளியே எடுக்கும்போது சரியாகக் குறிபார்த்து அந்த இடத்திலேயே ஏவுகணைகள் வந்து விழும்போது புலிகள் உணர்ந்திருக்க வேண்டும் இந்தியாவின் ராடார்கள் (கதிரிகள்) விமானத்தை உளவுபார்க்கும் கதிரிகள் அல்ல. அவை காந்தப்புலமறிகதிரிகள் என்பதை. அக்கதிரிகளை இலகுவாகப் போக்குக்காட்டி அடித்திருக்க முடியும்.

• குழந்தைப் போராளிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று உலகநாடுகளால் புலிகள் எச்சரிக்கப்பட்டார்கள். இதற்குச் செவிமடுக்காது தொடர்ந்தும் ஏன்? எதற்கு என்று கேட்கவலுவற்ற இயந்திரமாக்க வசதியான குழந்தைகளைப் போருக்குப் பயன்படுத்திக் கொண்டு எப்படி உலகநாடுகளிடம் எம்மைக் காற்பாற்றுங்கள் என்று கேட்கமுடியும். இவற்றின் விளைவுதான் மேற்குலகின் மௌனம்.

• தமிழ்மக்களைப் பிரதிநிதிப்படுத்திய புலிகள் ஒரு தனிமனிதனான பிரபாகரனிலும் ஆயுதக்கொள்வனவு ஒரு சிலரின் மட்டுமே தங்கியிருந்ததன் விளைவே ஒரு தனிமனிதனில் அழிவில் ஒரினத்தின் விடுதலைதகர்ப்பு. குறைந்தபட்சம் ஒருசுற்றுத்தலைமை புலிகளுக்குள் இருந்திருந்தாலாவது எம்மக்கள் மாற்றங்களை உணர்ந்திருப்பார்கள். போராட்டம் திருப்பங்களைச் சந்தித்திருக்கும். அரசியல் விழிப்புணர்வு உருவாகச் சந்தர்பம் இருந்திருக்கும். மூளைச்சலவை இன்றியிருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

• கெரில்லாப் போரில் விடுதலையடைந்த நாட்டின் போராட்ட வரலாறுகளைப் படித்துப் பார்த்தால் தெரியும் கெரில்லாக்கள் கடைசிவரையும் கெரிலாக்களாகவே இருந்திருக்கிறார்கள். உ.ம் சீனாவில் மாவேயின் போர், சேயின் போர். புலிகளின் கெரில்லாக்கள் மரபுவழிப்போராட முயன்றதன் விளைவும், மனநிலை அமைப்புமே முக்கியமான வன்னித் தோல்வியாகும். சரி மரவுவழியில் இராணுவமொன்றை எல்லைக்குத் தயாராகக் கட்டி எழுப்பும் போது கெரில்லாக்கள் தொடர்ந்தும் கெரில்லா முறையில் போராட்டத்தை மேற்கொண்டிருக்க வேண்டும். அந்த கெரில்லாக்கள் கிளிநொச்சி நெருக்கடியில் பரவலாக்கப்பட்டிருக்க வேண்டும். கிழக்கிலும் வடக்கிலும் விஸ்தரிக்கப்பட்டிருக்க வேண்டும். வன்னி நெருக்கடியின் போது பின்புறத்தாக்கல் ஊடறிப்புத்தாக்கலூடு வன்னிப்புலிகளுக்கு உதவி வழங்கியிருக்கலாம். எதிரியின் சிந்தனையும் போர் உக்கிரமும் திசைதிருப்பியிருக்கும்.

கட்டுரை நீள்வதால் இத்துடன் முடித்துக் கொள்வது அவசியமாகிறது. புலிகளையோ பிரபாகரனையோ குறை கூறுவதற்காக இதை நான் எழுதவில்லை. இவை வருமுன்காக்கும் ஒரு செயலே. எம்மினப்போராட்டம் பிரபாகரன் எனும் தனிமனிதனுடன் அழிந்து விடப்போவதில்லை. காலத்துக்காகக் காத்திருக்கும் மக்கள், அடக்குமுறைகளுக்கு எதிராகக் கிளந்தெழுவார்கள் என்பது திண்ணம். அப்போது புலிகள் விட்ட பிழைகளை அவர்களும் மீண்டும் விடக்கூடாது என்பதற்காகவே வெள்ளம் வருமுன் அணைகட்ட விரும்புகிறேன். பிழைகள் சுட்டிக்காட்டாத வரை அவைகள் அனைத்தும் சரியானவை போலவே தோற்றமளிக்கும். புலிகள் ஆரம்பத்தில் செய்த இனப்படுகொலைகள் இதற்கொரு உதாரணமாகும். மக்கள் எதிர்க்காது இருந்ததை புலிகள் சம்மதம் என்றே எடுத்துக் கொண்டார்கள். மௌனம் சம்மதம்தான்.

அன்றிருந்த ஒருசில துப்பாக்கிகளுக்கே பயந்ததால் பின் நிரந்தர மெனனத்தை மக்கள் கடைப்பிடிக்க நேர்ந்தது. குறைந்த பட்சம் கைகளால் எழுதிக் கூடப் புலிகளின் படுகொலைகளுக்கு எதிராய் நோட்டீசாவது ஒட்டியிருந்தால் ஒருதரம் புலிகள் சிந்திப்பதற்கு சந்தர்ப்பம் கொடுத்திருப்போம். புலிகளுக்கு எதிராக மக்கள் எதுவும் செய்யவில்லை என்பதே என்வாதம். மக்கள் தம் எதிர்ப்பைக் காட்டியிருக்க வேண்டும் ஜனநாகயகம் அதாவது சன-நியாயம் நிலைநிறுத்தப் பட்டிருக்க வேண்டும்.

ஒரு குற்றத்தைச் செய்பவனும் குற்றவாளி, அது குற்றமென்றறிந்தும் மௌனமாய் இருப்பவனும் குற்றவாளியே. தொடர்ந்தும் யாரும் குற்றவாளிகளாக இருக்கக்கூடாது என்பதற்காகவும், வருமுன் காப்பதற்காகவுமே இதை எழுதுகிறேன். இன்று புலிகள் ஒரு வரலாறு இதை மறக்கவோ அன்றி மறுக்கவோ இயலாது. இதனால் வரலாறு எமக்குத்தந்த பாடங்களைக் கற்றுக்கொள்ளாது போனால் நாம் மீண்டும் மீண்டும் வழுக்கித்தான் விழுவோம். பழைய தமிழ்மன்னர்களின் வரலாற்றிலும் வன்னியே மறைவிடமாகவும், போர்களமாகவும் இருந்திருக்கிறது என்பதை அறிக.

அன்புடன் என்றும் என் இனியமக்களையும், மொழியையும் உண்மையன்புடன் நேசிக்கும் குலன்.

பிரபாகரனின் இறப்பின் பின் ஓர் உயிர்ப்பு : குலன்

Pirabakaran_in_TimePirabakaran_in_TimePirabakaran_in_TimePirabakaran_in_TimePirabakaran_in_Time

வைகாசி 17ல் பிரபாகரன் இறந்து பின் பிறந்து வைகாசி 19ல் மீண்டும் இறந்தார் என்பது அரசசெய்தி. பிரபாகரன் இறக்கவில்லை என்பது புலம்பெயர் புலிகளின் செய்தி. இன்றைய பிரச்சினை பிரபாகரன் பிறந்ததோ, இறந்ததோ அல்ல. பிரபாகரனால் என்ன நடந்தது என்பதுதான் பிரச்சனை. சரி அவர் உயிருடன் இருந்தால் வரும் போது வரட்டும். பிரபாகரனின் புலிப்பிறப்பும் நடப்பும் இறப்பும் எமக்கும் எம்சமூகத்திற்கும் சிலபாடங்களைச் சொல்லிச் சென்றிருக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது.

என்றும் இறந்தகாலமே எதிர்காலத்தின் திறவுகோல் என்பதால் இறந்தகாலத்தை திருப்பிப் பார்க்க வேண்டிய அவசியம் எமக்கு உண்டு. ஆனால் பழய பல்லவி பாடிக்கொண்டு இறந்த காலத்திலேயே நின்றுவிடக்கூடாது. எதிர்காலத்தில் இறந்தகாலத்தின் பிழைகளைத் திருத்துவதும், நல்ல அனுபவங்களை எதிர்காலத்துக்கு எடுத்துச்செல்வதுமே மனிதனுடைய வாழ்க்கை மட்டுமல்ல, ஓரினத்தின் வாழ்வையும் மேம்படுத்தும். என்சிற்றறிவுக்கு எட்டியதை எம்மக்களின் போராட்டமும் எதிர்காலமும் பற்றி அக்கறை கொண்டவன் என்ற வகையில் ஒரு கருத்துக்களம் ஒன்றை அமைக்கும் நோக்கிலேயே இக்கட்டுரை வரையப்படுகிறது. புலம்பெயர்ந்த இளையவர்களுக்கு எமது போராட்டவரலாறு முழுமையாகத் தெரியாத காரணத்தினால் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என பிழையான வழியில் போய்விடக் கூடாது என்ற நோக்கத்திலுமே மிக சுருக்கமாக இக்கட்டுரை எழுதப்படுகிறது.

புலிகளின் ஆரம்பம் இன்றைய விளைவும் – முற்குறிப்பு
தமிழ்மக்கள் மேல் ஏற்படுத்தப்பட்ட அரச பயங்கரவாதத்தின் விளைவாக பல இளைஞர்கள் தனிநபர் தீவீரவாதிகளானார்கள். தனித்து நின்றி போராடுவதனால் பயனில்லை என உணர்ந்தவர்கள் குழுக்களானார்கள். காட்டிக்கொடுப்போர் என்று துரோகிப்பட்டம் கட்டி பலதமிழர்களே கொல்லப்பட்டனர். இதில் முக்கியமாக கதைக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளான இணுவிலைச் சேர்ந்த இரு சண்முகநாதன்கள், பஸ்தியாம்பிள்ளை முக்கிய இடத்தைப் பெறுகின்றனர். பொலிஸ் இலாகாவில் வேலைசெய்பவர்கள் வாங்கும் சம்பளத்துக்கு வேலை செய்துதானே ஆகவேண்டும். அது அவர்கள் தொழில்தர்மம். அவர்கள் மாறுவதற்கோ சிந்திப்பதற்கோ சந்தர்ப்பம் கொடுக்கப்படாது கொல்லப்பட்டது எவ்வகையில் நியாயானமது? வாங்கும் சம்பளத்துக்கு மேலாக தமிழ் இளைஞர்களைச் சித்திரவதைக்கு உள்ளாக்கிய பஸ்தியாம்பிள்ளை தண்டிக்கப்பட வேண்டியவர்தான். துரோகிகள் என்று கொன்று குவிக்கப்பட்டவர்களுக்கு போதிய சந்தர்ப்பங்கள் கொடுக்கப்பட்டனவா என்பது கேள்விதான்.

பின் துரோகிகள் என்பது இனத்துக்குரிய பதமாய் இன்றி தனிப்பட்ட முறையில் தமக்குப் பிடிக்காதவர்கள் எல்லோரும் துரோகிகள் ஆக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். அண்ணனுக்குத் தம்பியும் தம்பிக்கு அண்ணனுமாய் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளே ஒருவரை ஒருவர் கொன்ற சரித்திரம் எம்மிடையே பலவுண்டு என்பது வேதனையே. தமிழின அழிப்பு என்பது எதிரிகளால் மட்டுமல்ல தமிழர்களாலேயும் நடத்தப்படத் தொடங்கியதன் விளைவைத்தான் நாமின்று அனுபவிக்கிறோம். இப்படியான கொலைகளுக்கெதிராக ஒரு குரல்கூட வெளிவரவில்லை. அப்படி எழுந்திருந்தால் கொலை செய்யும் இரும்புத் துப்பாக்கி கூட ஒருகணம் சிந்தித்திருக்கும். தமிழ் படுகொலைகள் தமிழ்மக்களால் ஆதரிக்கப்பட்டனவா? ஆதரிக்காவிட்டால் பிழையெனக்கண்ட போது ஏன் தட்டிக்கேட்கவில்லை? சுடப்பட்ட அத்தனைபேரும் துரோகிகளா? யாரை யாரும் கொல்லலாம் துரோகி என்றும் தூக்கலாம். தமக்கு மட்டும் துரோகி என்ற பெயர் கட்டப்பட்டு விடுமே என்ற பயமா? இதை எல்லா இயக்கங்களும் செய்தன. இதில் முக்கியமானவர்கள் புலிகள் இன்று எம்மினத்துக்கே துரோகியாகிப்போய் நிற்கிறார்கள். எம்மியக்கங்கள் எம்மினத்தில்தானே சுட்டுப்பழகியது.

புலிகள் இன்று தமிழினத்தின் துரோகிகளா? தியாகிகளா?
இக்கேள்விகளுக்கு, கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்? யார் எதை எப்படி செய்தார்கள் என்பது முக்கியமில்லை. முடிவு என்ன? எம்மினத்தின் இன்றைநிலை என்ன என்பதே முக்கியமானது. எம்மினத்தில் 60 000 பேருக்கு மேல் கொன்றும், கொல்வதற்கு வழிவகுத்தும் நின்றவர்கள் புலிகளும் சில இயக்கங்களும். இவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

சிங்களவர்கள் தமிழரைக் கலவரத்தில் கொன்றால் இது இனப்படுகொலை. மக்கள் கொடிபிடித்தார்கள் கோசம் போட்டார்கள். ஆனால் ஒரு இயக்கத்தை மற்றைய இயக்கம் கண்மூடித் தனமாக இராணுவத்தை விட மோசமாக கொன்றபோது ஏன் வாழாதிருந்தீர்? இது எப்படித் தியாகமானது?

சுமார் 500 000க்கு மேல் தமிழர்களை வெளிநாடுகளில் அகதியாக்கி, தம்சொந்த மண்ணை விட்டு அவனியெங்கும் அலையவிட்டு, அவர்களிடமே ஏமாற்றிப் பணம்பிடுங்கி வாழ்ந்தவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

மக்களை ஒருபோராடும் சக்தியாகக் கருதாது அவர்களை பதுங்கு குழிகளாகவும், மறைவிடங்களாக மட்டும் பயன்படுத்தி, போராடும் வலுவை இழக்கச்செய்து, பங்காளிகளாக்காது பார்வையாளராக வைத்திருந்தவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

ஈரோசைத்தவிர அனைத்து சிறு இயக்கங்களில் இருந்து பெரிய இயக்கங்களாக வளர்ந்த புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எவ் வரை கொன்று குவித்தது யார்? அவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

ஒவ்வொரு இயக்கமும் தம்முள் ஒருவரை ஒருவர் கொன்று தீர்த்தனவே அவர்கள் தியாகிகளா? துரோகிகளா? யாருக்கு விரல்விட்டுக் காட்டத் துணிவிருக்கிறது.

ஆயுதம் ஏந்தியவனால் தான் பிரச்சனை என்றால் ஆயுதமே தொட்டுப்பார்க்காத அரசியலில் மட்டும் ஈடுபட்ட அரசியல்வாதியில் இருந்து ஒன்றுமே அறியாத அப்பாவித்தமிழர்கள் வரை கொன்று போட்டவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

எம்மினத்தவனைக் கொல்லத் துப்பாக்கி தூக்கும் போது இவன் என்னினத்தவன் என்று ஒரு செக்கன் கூட சிந்திக்காது நிந்தித்தவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

அடித்துவிட்டு ஒளிப்பதற்கே மக்களைப் பயன்படுத்தியது மட்டுமல்ல, அவர்களை இராணுவம் கொன்று குவித்தபோதும் அருகில் நின்றும் தம்மை மட்டும் பாதுகாத்தவர்களை எப்படித் தியாகிகள் என்பது?

மண்மீட்பு மண்மீட்பு என்றவர்கள் மக்களை, மக்கள் கருத்துக்களை என்றும் காது கொடுத்துக் கேட்டதில்லை. மக்களை இராணுவம் கொன்று குவித்தபோதும் ஒடி ஒளித்தார்கள். மக்களை தம்பாதுகாப்புக்காக கேடயமாய் பாவித்தார்கள்? இவர்கள் மக்களுக்காக என்ன செய்தார்கள்? மண் மண் என்றார்களே இன்று மண் எங்கே? ஒரு மண்ணாங்கட்டியைக் கூட மீட்க முடிந்ததா? மண் என்பது இருப்புமட்டுமே அன்றி மக்களாகாது. மக்களில்லாத மண்ணை வைத்து என்ன செய்யுமுடியும்? மண்ணின் பெயரைச் சொல்லிச் சொல்லி மக்களை அழிக்கக் காரணமாக இருந்தவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இறுதியாகப் புலிகளால் எமக்கு விளைந்தது என்ன? மக்கள் போராட்டம் என்றாலே பயப்படும் மனநிலைக்கும், தன்னம்பிக்கைச் சிதைவுக்கும், அடிமைத்தனத்தை ஆதரிக்கும் நிலைக்கும், கல்வி செல்வச்சீரழிப்புக்கும் எம்மக்களை உள்ளாக்கி, இறுதியில் விடுதலை என்ற சொல்லை எம் இருதலைமுறைகள் உச்சரிக்கவே பயப்படும் அளவுக்கு செய்துவிட்டு மறைந்த புலிகள் துரோகிகளா? தியாகிகளா?

மற்றவர்களை, தாம் விரும்பாதவர்களை, மற்ற இயக்கங்களை எல்லாம் துரோகிகள் என்று கூறிக்கூறியே தமிழ்மக்களின் உண்மைத் துரோகிகளாய் போனவர்கள் யார்?

இலங்கையரசின் காலத்தில் பேச்சு சுதந்திரமும் எழுத்துச் சுதந்திரமும் இருந்தது. ஆனால் புலிகள் ஆட்சியில் இச்சுதந்திரமும் பறிக்கப்பட்டது. எதிரியைக் கூட நல்லவனாக்கியது புலிகளே. இவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

என்கண்ணில் மக்கள் மட்டுமே பார்வையாளராக இருந்து தற்கொலை செய்து கொண்ட தியாகிகள்.

உயிருடன் மனிதனை ரயர்போட்டுக் கொழுத்த எதிரிக்குப் பழக்கிவிட்டது யார்? வீட்டில் வைத்துப்போடுதல், கவர் பண்ணும்போது போடுதல் போன்றவற்றில் ஈடுபட்டது யார்?

உலகத்தில் எத்தனையோ போராட்டங்கள் நடந்தன, வென்றன. எந்த இயக்கமும் தற்கொலைத் தாலிகட்டிச் சென்றதில்லை. ஆனால் மக்களின் போரட்ட உந்துசக்தியாக இருக்கும் இளைஞர்களை தற்கொலைக்கு தாலிகட்டி வழியனுப்பும் ஒரு கோழைத்தனமான விடுதலை அமைப்பு மன்னிக்கவும் மாவியா அமைப்பு புலிகளே. ஒவ்வொரு போராளியின் மனதிலும் எதிரியைக் கொல்லுவேன் வெல்லுவேன் எனும் மனத்திடம் தளர்ந்து அடிப்பேனா அன்றி சயனைட்டைக் கடிப்பேனா எனும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். புலிகள் தம்மைமட்டும் பாதுகாத்துக் கொள்வதற்காக தற்கொலைக் கலாச்சாரத்தை வளர்த்து ஒரு இனத்தையே தற்கொலை செய்யத் தூண்டியிருக்கிறார்கள்

இனியாவது சாப்பிடமட்டுமே வாய்திறப்பதை விட்டு விட்டு ஈழத்தமிழ் மக்களே! உண்மைக்காகவும் உரிமைக்காகவும் வாய் திறப்பீர்களா? எப்போ உங்கள் மௌனம் கலையும். சரியான மக்கள் நலன்விரும்பும் அமைப்புகளை உண்மை விடுதலை விரும்பிகளை இனங்காணுவீர்களா? உங்களைக் காக்கிறோம் என்று அரசில் இருந்து புலிகள் வரை இன்னும் எத்தனை எத்தனையோ அமைப்புகள் வரப்போகின்றன. உங்கள் அனுவங்களை வைத்து அடையாளம் காண்பீர்களா? அல்லது கெடுகிறேன் பிடிபந்தயம் என்று முன்புபோல் மீண்டும் மீண்டும் வதைபடப் போகிறீர்களா என்பதையும் நீங்களே தீர்மானியுங்கள்.

புலி இயக்கம் பிரபாகரனால் மட்டுமா ஆரப்பிக்கப்பட்டது?
தனிநபராக பிரபாகரன் பேருந்து ஒன்றை தீயிட்டுவிட்டு மாணவர்பேரவையைச் சேர்ந்த சத்தியசீலன் இடம் உரும்பிராய்க்கு வந்து தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார் என்றும் யூரியூபில் கூறியிருந்தார். அக்காலகட்டங்களில் சிவகுமாரனில் இருந்து தனிநபர் தீவிரவாதிகளே உருவாகியிருந்தார்கள். இருப்பினும் சிலஅமைப்புக்கள் தம்மாலியன்ற போராட்டங்களைச் செய்து கொண்டிருந்தனர். அவற்றில் மாணவர்பேரவை, இளைஞர் பேரவை போன்றவற்றைக் குறிப்பிடலாம். ரெலோ ஈரோஸ், ஈபிஆர்எல்எவ் என்பனவும் மிகப்பழமையான இயக்கங்கள். இவைபற்றிய வரலாறு எனக்குத் தெரியாது என்பதால் அதை விட்டுவிடுகிறேன்.

நீர்வேலி வங்கிக் கொள்ளையிலேதான் கேபி விமலராசா எனும் ரியூசன் வாத்தியாரின் உந்துறுளியை பாவித்தார் என்ற காரணத்தால் விமலராசா சிறைபோனார். அவர் மாதகலிலுள்ள கடம்பவாதத்தை முகவரியாகக் கொண்டவர். இதனால் இவர் நோர்வேக்குப் போனபோது புலிகளின் பொறுப்பாளராக ஆக்கப்பட்டார். அப்போதும் இவர்தொடர்பில் கேபி வந்துபோவார்.

மாணவர்பேரவையைச் சேர்ந்தவர்கள், இளைஞர்பேரவை இரண்டாகி இளைஞர்பேரவை விடுதலை இயக்கம் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு புறப்பட்டவர்கள், தனிநபர் தீவீரவாதிகள் எனப்பலரும் ஒரு அமைப்பாகி மத்திய செயற்குழுவை அமைத்தார்கள். இளைஞர்பேரவையில் இருந்த உமாமகேஸ்வரன் தலைவராகவும் பிரபாகரன் இராணுவ ஆயுதப் பொறுப்புக்களையும் ஏற்றனர்.

புதிய புலி என்றார்கள், உட்பூசல்களில் பிரிந்தார்கள். பிரிந்தவர்கள் புளொட் என்றும் புதியபாதையுடன் புறப்பட்டனர். இவை ஆரம்பகாலமும், ஒருபக்கச்சார்பான தகவல் மட்டும்தான். இக்காலகட்டங்களில் ரெலோ ஈரோஸ் தம்பரிமாணங்களையும் வளர்த்துக்கொண்டது. உட்பூசல்கள் சகோதரப் படுகொலைகளாகப் பரிணாமம் பெற்றது. முக்கிய நோக்கம் திசைமாறியது. இதை ஏன் இங்கே எழுதுகிறேன் என்றால் தமிழ்தேசிய விடுதலையை ஆரம்பித்தது பிரபாகரன் என்றும் அதன் ஏகபோக உரிமை அவருக்கே உண்டு என்றும் நம்புபவர்களுக்காகவே. அதுமட்டுமல்ல புலியியக்கம் தனியே பிரபாகரனால் மட்டும் உருவாக்கப்பட்டது என்பது தவறானதே.

யார் கெரில்லா, மாவியா?
ஒரு கெரில்லாவுக்கும் கொள்ளைகாரர், மாவியாக்களுக்கும் பலவித்தியாசம் கிடையாது. இவர்கள் அனைவரினதும் இயங்குதன்மை, செயற்பாட்டுத்திறன், நகர்வுகள், நகர்த்தல்கள் அனைத்தும் இரவுகளிலும், கூடுதலாக இரகசியமாகவும், உண்மை முகங்கள் மறைக்கப்பட்டும் இருக்கும். குறைந்த பொருட்செலவில் பெருவெற்றிகளையும், யாரும் எதிர்பாராவண்ணம் சடுதியான தாக்குதல்களையும் செய்வார்கள். அரசியலில் ஆர்வமும் பின்புல உறவுகளும் இருக்கும். ஆனால் வித்தியாசம் ஒன்றே ஒன்று மட்டும்தான் ”நோக்கம்” அதாவது மாவியாவானவன் என்றும் தன்சுயநலத்தில் மிக மிக கவனமாகவும், அக்கறையாகவும் இருப்பான். ஆனால் கொறில்லாவானவன் முக்கியமாக மக்களின் நலத்திலும், மக்களை நேசிப்பவனாகவும், மக்களின் முன்னேற்றத்தில் அக்கறையுள்ளவனாகவும் இருப்பான். இப்போ புலிகள் கெரில்லாக்களா? மாவியாக்களா? கெரில்லா தாக்குதல்கள் செய்பவர்கள் அனைவரும் கெரில்லாக்களாகிவிட முடியாது. சந்தணக் கடத்தல் வீரப்பன் பல கெரில்லாத் தாக்குதல்களைச் செய்தவன், இன்னுமேன் மக்களால் நேசிக்கப்பட்டவனும் கூட. ஆனால் இவன் ஒரு விடுதலைப் போராளியாகவோ கெரில்லவாகவோ இருக்க இயலாது. இங்கே புலிகள் மாவியாவா? கெரில்லாவா என்பதை வாசகர்கள் கையில் விட்டு விடுகிறேன்.

இனங்காணல்
இனங்காணல் என்பது ஒவ்வொரு மிருகங்களுடனும் ஏன் எல்லா ஜீவராசிகளுடனும் கூடிப்பிறந்த ஒன்றாகும். இது ஏன் தமிழர்களுக்கு மட்டும் இல்லாது போனது? நாலு ஆமியை சுட்டுவிட்டு 40 ஆமி என்று கொண்டாடும் போது மக்கள் புலிகளை அடையாளம் கண்டிருக்க வேண்டும் இது வெறும் வானவேடிக்கை என்பதை உணர்ந்திருக்க வேண்டும். சினிமா பார்த்து கீரோய்ஸ்சத்தில் (நாயகத்துவம்) வளர்ந்தவர்கள் நாயகமார்க்கத்தையே பின்பற்றுவர். மக்களும் கைதட்டி வரவேற்றனர். ஆமியைக் கொல்வதுதான் தமிழ்மக்களின் விடுதலையா? சரி இராணுவத்தை ஈழமண்ணில் இருந்து கலைத்து விட்டதும் எமக்கான விடுதலை கிடைத்துவிடுமா? அக்கேள்விகளும் இதற்கான வேள்விகளும் ஏன் நடக்கவில்லை?

ஒரு கெரில்லாவானவன் முக்கியமாக சகோதரப் படுகொலையைச் செய்யக்கூடாது. காரணம் அச்சகோதரனும் அவன் நேசிக்கும் மக்களின் ஒருவனே. இயலாக் கட்டத்திலோ பல அறிவுறுத்தல்கள் விளக்கங்களின் பின் சில கொலைகள் செய்யப்பட்டிருந்தால் கூட புலிகளை மன்னித்திருக்கலாம். எல்லோரும் தெரிந்து பிழைவிடுவதில்லை. விளக்கவின்மையும் தெளிவும் இல்லாமையே காரணம். சகோதரப் படுகொலைகள் நடைபெற ஆரம்பித்தபோது மக்களாவது தட்டிக்கேட்டிருந்தால் சிலவேளை புலிகள் திருந்தியிருக்கலாம். துப்பாக்கியால் மக்களிள் வாய்கள் பொத்தப்படும்போதே மக்கள் உணர்ந்திருக்க வேண்டும் இது சரியான விடுதலை அமைப்பா இல்லையா என்று. விடுதலை என்ற பெயரில் வளர்ந்த வளர்த்தெடுக்கப்பட்ட மாவியாக் கும்பல்தான் என்பதை இன்றைய நிலை உணர்த்தியுள்ளது. இன்னும் இப்படி பல எம்மத்தியில் உருவாகுவதற்குத் தயாராக உள்ளன. இவற்றை இனங்காண்பதற்கே இக்கட்டுரை முன்னுரிமை கொடுக்கிறது.

மாவீரர் தினத்தையோ பொங்குதமிழையோ ஒரு வெகுசனபோராட்ட நிகழ்வாகக் கொள்ள இயலாது. இது வெறும் வேடிக்கை மட்டுமே அன்றி வேறில்லை. மக்களை ஒரு போராட்ட சக்தியாக்கி அவர்களின் முன்னெடுப்புகளுக்கு பக்கபலமாக ஆயுதங்கள் இருந்திருந்தால் மக்கள் தமக்குரிய விடுதலையை வென்றெடுத்திருப்பார்கள். புலித்தலைமை முடிந்துவிட்டது புலிகள் அழிந்து விட்டார்கள் என்று நிம்மதியாக இருந்து விட இயலாது. தமிழர்களுக்கென்று ஒரு அரசியல் சுதந்திரம் உருவாகும் வரை போராட்டம் தொடரும். உயிருள்ள ஜீவராசிகள் அனைத்தும் போராடவே பிறந்தன. ஒரு சின்னங்சிறிய வயிற்றுக்காக எறும்பு போராடுகிறது. நாம்…?

புத்திஜீவிகள் அன்று கொல்லப்படும் போது கைகட்டி மௌனியாய் சமூகம் இருந்தது. அன்று கூட ஒரு கண்டன ஊர்வலத்தையோ புலிகளுக்கெதிரான குரல்களையோ எழுப்பியிருந்தால் இன்று குறைந்தபட்சம் தமிழர்களுக்கு இந்த நிலைவந்திருக்காது. மக்களுக்காகப் போராடுகிறேன் என்று கூறும் அமைப்பு எப்போது மக்களின் குரல்களுக்கு மதிப்பளித்தது? அப்போது கூட மக்கள் ஏன் புலிகளை இனங்காணவில்லை. தெரிந்தும் தெரியாமல் இருந்தீர்களா? ஆகவே உங்களுக்கு இன்று கிடைத்த தண்டனை சரியானதா இல்லையா?

பிரோமதாசாவின் வேண்டுகோளுக்காவே அமிர்தலிங்கம் கொல்லப்பட்டார் என்று அறியப்படுகிறது. சரி ஆயுதம் தாங்காது அரசியலை மட்டுமே மூலதனமாகக் கொண்டு இயங்கிய திறமைசாலியான அமிர் கொல்லப்படும் போது கூட மக்களே வாய் மூடிக்கொண்டுதானே இருந்தீர்கள். அன்று துணைத்தளபதி அமிர்தலிங்கம் என்று வாயாரக்கத்திய உங்கள் வாய்கள் ஏன் அடைத்துப்போயின?

எதிரியென நீங்கள் கருதும் சிங்கள அரசுடன் புலிகள் சேர்ந்து பலசெயற்பாடுகளைச் செய்த போது ஏன் மௌனமாக இருந்தீர்கள்? அப்போது தெரியவில்லையா புலிகளின் இயக்குதன்மை மாவியாக்கள் போல் அமைகிறது என்று? ஏன் இனங்காணவில்லை? எடுத்துக் கூறவில்லை. இன்று உள்ள கூத்தணிகளில் ஒருவரை விரல்விட்டுச் சுட்டிக்காட்டுங்கள் அன்றைய அமிருக்கு நிகராக இன்று வெளிநாட்டிலோ உள்நாட்டிலோ பேச்சுவார்த்தையையோ சட்டநுணுக்கங்களையோ அறிந்த அன்றி தமிழர்களின் நிலையை சரியான முறையில் எடுத்துரைக்கக் கூட ஒருமனிதரை? எல்லாவற்றுக்கும் காரணம் யாருமல்ல மக்களே நீங்கள் தான்..

மக்கள் மேல் குற்றச்சாட்டு
அப்பன் உழைத்துக் கொண்டுவர முழுக்குடும்பமும் சாப்பிட்டு வயிறாறும். அப்பன் இறந்தால் பெற்றோரின் பழிகளை சேர்த்து குடும்பவண்டியை இழுக்க மூத்தமகன் என்ற மாடு தயாராகி நிற்கும். குடும்பப் பெண்கள் பெண்கள் என்று யாரோ முன்பின்னறியா ஒருவனில் தங்கிவாழ பிறந்ததில் இருந்து தமிழ்பெண்கள் தயாராக்கப்படுகிறார்கள். இப்படியான ஒரு சமூகக் கட்டுமானத்தில் இருக்கும் மனிதர்களிடம் சுயசிந்தனையை எதிர்பார்ப்பது சரியா? இச்சமூகம் போராடும் குணாம்சங்கள் கொண்டதல்ல என்பதை புலிகள் அறிந்திருந்தார்கள்.

கலாச்சாரம் குடும்பம் என்று மற்றவர்களின் மூளையிலே சிந்திப்பார்கள். திருவள்ளுவர் சொன்னார், கம்பர் சொன்னார், லெனின் சொன்னார், மாக்ஸ், சே, மாவோ, தொல்காப்பியர், யேசு, புத்தன், கீதை என்று மற்றவர்களின் மூளையில் எம்மினம் சிந்தித்தது, வாழ்ந்தது வாழ்கிறது. எம்மக்கள் என்று புரட்சிகரமாக புதிதாக சிந்திக்கிறார்கள் என்ற நிலைவருகிறதோ அன்றுதான் எம்மக்கள் போராட்டத்துக்குத் தயாரானவர்கள் என்று கொள்ளலாம். எம்மக்கள் போராடத் தயாராக இருந்திருந்தால் புலிகள் பிள்ளை பிடிகாரர்களைப்போல் ஆள்பிடிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. எமது கலாச்சாரமும் சரி, அரசியல் போராட்ட சக்திகளும் சரி மக்களை சுயமாகச் சிந்திக்கவோ போராடவோ அனுமதிக்கவில்லை என்பதே உண்மை.

இன்றும் தலைவா உன்னைத் தலையென்று நம்பினோமே விட்டுவிட்டுப் போட்டாயே என்று ஒப்புச்சொல்லி மாரடிக்கும் நிலையில்தான் மக்கள் இன்றும் உள்ளார்கள். இவர்கள் போராட, தன்உரிமைகளை வென்றெடுக்க தயாரானவர்கள் என்று சொல்கிறீர்களா? பிரபாகரன் இறந்துவிட்டார் என்றதும் ஒரு சமூகமே ஆடிப்போய் ஏன் நின்றது? அடுத்து என்ன செய்வது என்று ஏன் முழிக்கிறது. இதை மறைக்க மீட்பர் பிரபாகரன் இருக்கிறார் வருவார் என்று நம்புகிறது. இது ஏன்? இது தன்னம்பிக்கை இல்லாத ஒரு சமூகத்தையே புலிகளும் மக்களும் அரசியலும் கட்டிவைத்திருக்கிறார்கள் என்பது தான் நிஜம்.

புரட்சி என்பது புரளும் துப்பாக்கியான றிவோல்வர் போன்றவற்றில் இருந்து பிறப்பதல்ல. புரட்சியும் போராட்டகுணமும் மூளையில் இருந்தே பிறக்கிறது. துப்பாக்கி தூக்கும் ஒவ்வொரு போராளியின் மனத்திலும் நான் எதற்காகப் போராடுகிறறேன் என்ற தெழிவு இருக்கவேண்டும். புலிப்போராளிகளினது பல வாக்குமூலங்களை ஊடகங்களுடாகக் கேட்டும் போது பலதடமை வேதனைப்பட்டேன். ஆமிக்காரன் அடிக்கிறான் அனைப்கலைக்க வேண்டும். அண்ணை யோசிக்காதையுங்கோ நாங்கள் இருக்கிறம். சின்னப்புலிகள் சொன்னவார்த்தை இது. இவர்கள் நாட்டுக்காகப் போராடினார்களா? அண்ணைக்காகப் போராடினார்களா? இது ஒரு விடுதலை இயக்கமா? மாவியா கும்பலா?

போராட்டம் என்பது சமூக, பொருளாதார, சூழல் நிலைகளுக்கமைய மாறுபடும். ஒவ்வொரு கெறில்லாப் போராட்ம் என்றும் சூழல் காலநிலைகளுக்கேற்ப மாறுபட்டே ஆகும். சூழலுக்கு ஏற்ப போராடுபவன்தானே கெறில்லா? புலிகளும் புலம்பெயர்ந்த தமிழரிடம் போதிய பணம் வசதியுள்ளது என்ற சூழலை அறிந்து கொண்டுதான் போராடினார்களோ என்னவே? புலிகள் மக்களை தம்பதுங்கு குழிகளாகப் பாவித்தார்களே தவிர போராட்டம் சக்தியாக என்றும் பார்க்கவில்லை என்பதே உண்மை. அப்படி அவர்கள் மக்களைப் போராடுடம் சக்தியாகப் பார்த்திருந்தால் மக்களைப் போராடவிட்டுவிட்டு ஊக்கசக்தியாகவும் அவர்களைப் பாதுகாக்கும் சக்தியாகவுமே இருந்திருப்பார்கள். செய்தார்களா?

ஏன் இல்லை
ஒரு இறைமையுள்ள நாட்டில் இருந்த ஒருபகுதி பிரிந்துபோவதற்கு பலவரையறைகள் உண்டு. அதற்கு வெளிநாடுகளின் அனுசரணை என்பது மிகமுக்கியமானது. அன்ரன் பாலசிங்கத்துக்கு கூட இது தெரியவில்லை என்றால் பாவம் பிரபாகரனுக்கு இதுவற்றித் தெரிவதற்கு சந்தர்ப்பமே கிடைக்காது. தெருச்சண்டித்தனம் ஊர்சண்டித்தனம் போல் ஒருநாட்டைப் பிரித்துவிட முடியாது. உலகம் முழுவதும் தெருத்தெருவாய் கத்தினாலும் ஒர் இறைமையுள்ள நாட்டினுள் மற்றைய நாடுகள் தான்தோன்றித்தனமாக தமிழர்கள் கத்துகிறார்கள் என்பதற்காக ஊடுருவ முடியாது. அரசியலே தெரியாத புலிகளுக்கும் புலம்பெயர் புலிகளுக்கும் இது எப்படித்தெரியும்?

புலம்பெயர்நாட்டுத் தமிழ்பெற்றோரே
இனம் இனவுணர்வு, மொழி மொழியுணர்வு என்பது முக்கியமானதும் எம்முடையானானதுமாகும். ஆனால் உங்கள் பிள்ளைகள் சரியான முறையில் சரியான வழியில்தான் அரசியலையும் போராட்டத்தையும் புரிந்திருக்கிறார்களா என்பது மிக மிக முக்கியமானது.

இவ்வளவுகாலமும் இலங்கைக்குள் ஈழம் என்று விழுந்த கொலைகள் இனி……..? என் சிற்றறிவுக்குத் தெரிந்ததைச் சொல்லவேண்டியது எனது கடன். முடிவெடுப்பதும் வழிநடத்துவதும் உங்கள் திறன்.

ஈரமற்ற ஈன இனமே!!! : குலன்

LTTE_Heros_Dayயாரிவன்? பிரபாகரனா? யாராய்தான் இருந்தால் என்ன? இவன் ஒரு தமிழ் புலி வீரன் மட்டுமல்ல முக்கியமான ஒரு தளபதிதான். இவ்வளவு இராணுவமும் சுற்ற சூழ நின்று பார்க்கத் துடிக்கிறதே. இவன் ஒரு புலிகளின் முக்கியமானவன்தான். அதைத்தான் பிரபாகரன் என்கிறது அரசு. இல்லை என்கிறார்கள் புலம்பெயர் தமிழர். யாராய்தான் இருந்தால் என்ன? அவன் எம்தேசத்தை நேசித்தான், அதனால் போராட உந்தப்பட்டான் அல்லது திணிக்கப்பட்டான். இந்தத் தேசத்தைத் தாங்கிய நெஞ்சம் எதிரியின் கைகளில் அநாதைப் பிணமாய் போகிறதே. ஈரமுள்ள நெஞ்சங்களே யாராவது இவன் உடலை உரிமை கோரினீர்களா? உங்களுக்காய் இவன் தன் இளமையையே தொலைத்தானே! நீங்கள் அன்று தூக்கி வைத்துக் கொண்டாடிய இப்புலிவீரன் எமது ஈழக் கோரிக்கைகள் போல் கேவலமாய் போனானே.

இப்பாடையில் போவது புலி வீரனோ பிரபாகரனே அல்ல. எம்மக்களின் தலைவிதி, சுயநிர்ணய உரிமை இதுமட்டுமல்ல எம்தேசமும் எமக்கிழைத்த நாசமுமே. உலகெங்கும் கொடி பிடித்துக் கோசம் போட்ட சமூகமே! உங்களுக்காய் ஒரு தேசம் அமைக்கபோய் எதிரியின் கையில் ஒரு ஈனனாய் அநாதைப் பிணமாய் போகும் இவனுடலை யார் உரிமை கோரினீர்கள்? ஈன இனமே உனக்கு விடுதலை ஒருகேடா?

அன்று ஈழவிடுதலை என்று ஆயுதம் தாங்கிப் புறப்பட்ட ஒவ்வொருவனும் தன்நலனை விட்டு மக்களுக்காக என்றே புறப்பட்டனர். எந்த நேரமும் தன்னுயிர் போகலாம் என்றே பயணத்தைத் தொடங்கினர். இதில் மாற்றுக்கருத்து எவருக்கும் இருக்க இயலாது. பாதைகள் மாறின, பயணங்கள் தடுமாறின, எதிரியை நோக்கிய துப்பாக்கிகள் எங்களை நோக்கியும் திரும்பின. காலம் இந்த ஈனவினத்தை அழிக்க நினைத்ததோ என்னவோ?

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பது பற்றி ஆராய்ச்சியில் சிலர் இறங்கியுள்ளார்கள். சிலர் கண்மூடித்தனமாக புலிகளின் ஊதுகுழல்கள் கூறுவது நம்புகிறார்கள். பிரபா உயிருடன் இருந்தால் மகிழ்சியானதுதான். ஒரு மரணத்தில் மகிழ்ச்சியுறும் மனம் எனக்கில்லை. ஆனால் பிரபாகரன் என்று அரசுகாட்டும் படம் பிரபாகரன் இல்லையென்று நிரூபிப்பதற்காகவாவது புலம்பெயர்ந்த தமிழர்களோ அன்றி உறவினர்களோ அந்த உடலை உரிமை கோரியிருக்கலாம். அரசின் முகமூடியாவது கிழிந்திருக்குமல்லவா?

கடைசிகாலத்தில் பிரபாகரனும் புலிகளும் எப்படி நடந்தார்களோ அவற்றை ஒருபுறம் வைத்துவிட்டு. எம்மினத்துக்காக துப்பாக்கி தூக்கியவர் என்ற முறையிலும், எமக்காக தலைமறைவு வாழ்க்கைளை மேற்கொண்டவர் என்ற வகையிலும், ஒவ்வொரு இறந்த புலிவீரனும் மரியாதைக்குரியவனே. இராணுவம் அவர்கள் பூதஉடல்களை மரியாதையாகத்தான் நடத்துகிறதா? கார்த்திகையை புனிதமாதமாக்கி 27ம் திகதியை புண்ணிய நாளாக்கி உலகெங்கம் தீபமேற்றினார்கள் புலிகள். அவையெல்லாம் உங்கள் பிள்ளைகளை மேடையில் காட்டுவதற்கான கொண்டாட்டமாகவே கருதியிருக்கிறீர்கள்? இவனைப்போல் எத்தனை புலிவீரர்கள் முகம் தெரியாமல் இடம்தெரியாமல் புதைக்கப்பட்டார்களோ? எரிக்கப்பட்டார்களே?

நீங்கள் துதிபாடிய, நேசித்த, சூரியபுத்திரன் என்று கூவியழைத்துக் கும்பிட்ட பெயரைச் சொல்லிக் கொண்டு அநாதைப் பிணமாய் ஒரு புலிவீரன் போனானப்பா? நெஞ்சு கனக்கிறது. ஈனஇனமே உன்நெஞ்சை தொட்டுப்பார் எங்கே உன்னிதயத்தில் ஈரம்?

புலிகள் குண்டுகளாலோ, போர் விமானங்களினாலோ சிதறவில்லை. எத்தனை துரோகங்கள்? எத்தனை வஞ்சகங்கள்? இத்தனையாலும் தானே புலிகள் சிதறினர். ஒரு சிலரை மட்டும் நம்பி இயக்கம் நடத்தியதன் விளைவுதான் இது. ஒரினமே சில தனிமனிதர்களின் கையில் அடைவு வைக்கப்பட்டு, விடுதலை என்ற சொல்லையே உச்சரிக்காதவாறு ஆக்கப்பட்டது. ஒரு தனிமனிதனுக்காகவே ஒரு கட்டமைப்பு இருக்கக் கூடாது. கட்டமைப்பானது மக்களுக்காக இருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் புலிகள் நிச்சயம் வீழ்திருக்க மாட்டார்கள்.

கப்பல் கப்பலாய் 19 கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. ஒரு கப்பல் சரி இரண்டு கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பின்பும் அதேவழியில் யுத்தளபாடங்களை எந்த மடையன் அனுப்புவான். யார் பதில் சொல்வார்களா? இங்கேதான் பெரும் சதி நடந்தேறியிருக்கிறது. கப்பல் மூழ்கினால் கணக்கு யாருக்குக் காட்டுவது. வந்த சரக்கு கோடிகள் என்பது தானே கணக்கு. வெளிநாட்டில் மலசலகூடம் தேய்த்து போருக்காக, மக்களைக்காக்கவென கண்மூடித்தனமாகக் கொடுக்கப்பட்ட பணமல்லவா அவை.

போதிய யுத்த தளபாடங்கள் இருந்திருந்தால் நிச்சயம் புலிகள் இராணுவத்திற்கு பேரழிவை ஏற்படுத்தியிருப்பார்கள். ஒரு விமானத்தை விழுத்த வக்கில்லாமல் போனது ஏன்? அதுவும் பழைய இரஸ்சிய மிக்29ஐ விழுத்தப் புலிகளால் முடியாமல் போனது ஏன்? சதி இங்கேயும் சரசமாடியே இருக்கிறது. இரஸ்சிய விமானத்தை விழுத்த இரசியாவிலேயே ஏவுகணைகளை வாங்கலாம். சதிகளால் மட்டுமே புலிகள் விழுந்தார்கள் என்பதுதான் உண்மை. இச்சதிகாரர்கள் யார்? தமிழர்களின் தலைவிதியை அடைவுவைத்த துரோகியார்? ஈனச்செயலுக்கு துணைபோய் நம்பிக்கை மோசடி செய்தவன் யார்? துரோகிகள் என்றும் அருகிலேயே இருப்பார்கள் இருந்திருப்பார்கள் என்பதை அறிக.

அப்பிணமானது பிரபாகரனினது இல்லையாயினும் யாரோ ஒரு புலி வீரனினுடையதாகக் கூட இருக்கட்டுமே? ஏன் இறந்தவர்களை யாருமே உரிமை கோரவில்லை? சரி இறந்துபோன உறுதிப்படுத்தப்பட்ட மற்றய தளபதிகளின் உடல்களை ஏன் உறவினர்கள், நண்பர்கள், ஊதுகுழல்கள் ஏன் உரிமை கோரவில்லை? இவனுக்கும் எம்மைப்போல் தாய், தந்தை, சகோதரம், உறவுகள் என்று இருந்துதானே இருந்திருக்கும். இவர்கள் வீரர்கள் இல்லையா? அறிவுள்ள சனங்களே அநாதையாக அனுப்பினீர்களே. ஒரினத்தை நெஞ்சில் தூக்கியவர்கள் அல்லவா இவர்கள். பொங்கு தமிழிலும், மாவீரர் தினங்களிலும் மேடை மேடையாய் தெருத்தெருவாய் கேட்டோமே எல்லாம் பொய்யா?

இராணுவம் ஒரு புலிவீரனையும் கொலை செய்யவில்லை என்கிறீர்களா? இக்கட்டுரையை பலர் பலவாறு கருத்துக் கூறினாலும் உ.ம் புலிகள் என்ன செய்தார்ளோ அதுவோ புலிக்கு நடந்தது எனலாம். இதற்கெல்லாம் அப்பால் நின்று ஒவ்வொரு தமிழனையும் கேட்கிறேன். இப்படி எம்புதல்வர்கள் அநாதைப் பிணமாய், ஏதிலியாய், யார் யாரோ எள்ளி நகையாட பிணமாய் போனார்களே. தெருவில் செத்த பிச்சைக்காரப் பிணத்துக்குக் கிடைத்த மரியாதை இவர்களுக்குக் கிடைத்ததா? எலும்பும் தசையுமாய் அள்ளி எடுத்து கூழம் குப்பை போல் எரிக்கப்பட்டார்களே! எரிகிறதையா இதயம், நோகிறதையா நெஞ்சம். எத்தனை புலி வீரர்களின் உடல்கள் உரிமை கோரப்பட்டன? அடையாளம் கண்டபின் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டன? பிரபாகரன் வாழ்கிறாரா? செத்தாரா? என்று தேடுகிறீர்களே உண்மையில் செத்தவர்களை என்ன செய்தீர்கள்? இறந்தவர்களில் ஒருவராய் பிரபாவாக இருந்தாலும் அவருக்கும் இன்நிலைதான். இந்த நன்றி கெட்ட ஈனத் தமிழ்சாதிக்கு உயிர்கொடுத்தவர்களும் ஈனராய் போனார்களே. இந்த இனத்துக்கு விடுதலை ஒருகேடா?

இது என்வேதனையின் விசாரமே தவிர வேறில்லை.

யாரை நோக்கி இக்கற்கள்….? – குலன்

புலிகளின் வீழ்ச்சி உறுதியாகி விட்டதா? மூக்குள்ள வரை சளி என்பது போல்தான் ஈழத்தமிழர் வாழ்க்கை அமையப் போகிறதா? சிங்கள இனவாதிகளுடனும், இலங்கை அரச ராணுவ இயந்திரங்களின்கீழும் மீண்டும் மிதிபடும் நிலை தொடருமா? ஒற்றையாட்சியினுள் ஆயுதங்கள் முடக்கப்படுமா? இப்படிப் பல கேள்விகளின் மத்தியில் பதுங்கிக் கொள்கிறது மனமும் உணர்வுகளும்.

இன்றைய தேவை கருதி தம்முள் உள்ள குத்து வெட்டுக்களின் தவறுகளை உணர்ந்து அதனை நிராகரித்து ஒன்றிணைந்த ஒரு கிராமத்தை இங்கு குறிப்பிடுவது முக்கியம். யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதியிலுள்ள ஒரு மீன்பிடிக் கிராமம். குத்து வெட்டுகளுடன்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். புலிகளின் யாழ் வீழ்ச்சியுடன் வன்னி நோக்கி நகர்ந்து மீண்டும் புலிகளின் பலாற்காரத்தால் கடைசி வரையும் இழுத்துச் செல்லப்பட்டார்கள். பின் புலிகளின் பிராந்தியத்தை விட்டு 120 குடும்பங்கள் (சுமார் 600 பேர்) இராணுவப் பகுதிக்கு வந்துள்ளனர் என அறிந்ததும் மீதியாய் கிராமத்தில் இருந்த 28 குடும்பங்களும் வேற்றுமைகளை மறந்து ஒருநாள் எல்லோருமாகச் சேர்ந்து கடலட்டை பிடித்து 8 இலட்சம் ரூபாய்க்கு விற்று அப்பணத்தை இடம்பெயர்ந்து அல்லலுறும் கிராமத்தவர்க்குப் பகிர்ந்து கொடுத்தார்கள் என்றால் நாம்….? இதைப் பார்த்தாவது தேவையறிந்து சிந்திப்பீர்களா? IPKF ஈழத்தில் நிற்கும்போது பொது எதிரியாக இருந்த இந்திய இராணுவத்தை எதிர்த்துப் புலிகளும், இலங்கை இராணுவமும் இயங்கின. சுனாமியின் போதும் இப்படியே நடந்தது. எதிரிகளே ஒன்றாகி ஒரு பொது நோக்குக்காக செயற்படும் போது தமிழர்களாய் நீங்கள் பிரிவுண்டுதான் இருக்கப் போகிறீர்களா?

மாற்றுக் கருத்தாளர்கள், புத்திஜீவிகள், முற்போக்காளர்கள், இடதுசாரிகள், சமூக மாற்றம் விரும்பிகள், பெண்கள் சந்திப்புக்கள், பின்னவீனத்துவம், சிறு சஞ்சிகைகள், ஊடகங்கள், எல்லோரையும் நோக்கியே என் எழுத்துக் கற்கள் வீசப்படுகின்றன. நீங்கள் இவ்வளவு காலமும் செய்து கொண்டிருந்தது புலி எதிர்ப்பு வாதம் மட்டுமே. எம்மக்களுக்கான எந்த மாற்று மையங்களை உருவாக்கினீர்கள். உருவாகிய மையங்களினுள்ளும் அமைப்புகளுக்குள்ளும் ஆயுதமின்றிக் குத்து வெட்டுப்பட்டு பிரிந்து பிளந்து கிடக்கிறீர்கள். உங்களுக்கு பாசிச சிங்கள அரசு மட்டுமல்ல பாசிசப் புலிகளும் எதிரிகள் என்றால் புலிகளால் பாதிக்கப்பட அமைப்புகளில் இருந்தவர்கள், மற்றும் மேற்குறிப்பிட்ட அனைவரும் ஒன்றாய் நின்று எம்மக்களுக்கு ஒரு மாற்று வழியைத் தயார்படுத்தி இருக்கலாம் செய்தீர்களா? சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து கிடக்கிறீர்களே. புலிகளால் பொது வேலைத்திட்டத்தில் செயற்பட முடியாது என்றால் (உ+ம்: திம்பு) உங்களால் ஏன் முடியவில்லை. நீங்களும் புலிகளுக்குச் சளைத்தவர்கள் இல்லை என்பதைத்தான் உறுதிப்படுத்துகிறீர்கள். புலியின் போராட்டத்துடன் ஒத்துப்போகாத அனைவரும் காட்டும் காரணங்கள் மக்கள் மக்கள் மக்கள். அந்த மக்கள்தான் இன்று உங்கள் முன் அவலத்தில் விளிம்பில் நிற்கிறார்கள். என்ன செய்யப் போகிறீர்கள்? காலம் கனிந்திருக்கிறது. இனியாவது ஒன்று சேர்வீர்களா? புலி, புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எவ்… எனஇருந்து பின் பிரிந்து சென்றீர்கள். இனி ஏன் மீண்டும் பழைய கனவுகள். புதிதாகச் சிந்தியுங்கள் மக்களுக்காக மக்களாக ஒன்றுபடுங்கள். இன்று புலிகளுக்குக் கூட மாற்று வழியில்லை. எங்கே உங்களது மாற்றுவழியும் சமூக மாற்றமும்?

ஆயுதப்புரட்சி ஒன்றே எமது விடுதலையை வென்றுதரும் என்ற புலிகள் அதே ஆயுதங்களால் இன்று அடியறுந்து நிற்கின்றனர். காரணம் புதிதாகச் சிந்திக்க மறந்து, மறுத்து, பழைய பல்லவியையே பாடிய ஆடியதன் விளைவா? மண்மீட்பு மட்டுமல்ல மக்கள் மீட்பு மட்டுமே எம் மக்களின் விடுதலை என்று, புலிகளின் ஆயுதங்களால் துரத்தப்பட்ட மாற்று கருத்தாளர்கள் இன்னுமேன் மௌனம். புலியெதிர்ப்பு வாதம் மட்டும்தான் உங்கள் பணியா? மக்கள் மீட்பு என்று கருதினால் இந்த மக்கள் மீட்பும் சிங்கள மக்களுக்கும் தேவைப்பட்டது தேவைப்படுகிறது. எமது நியாயமான கோரிக்கைகளைத் தரமறுத்த சிங்கள அரசுக்கெதிராக ஏன் சிங்கள மக்களையே கிளர்ந்தெழ நீங்கள் உதவியிருக்கலாம்? இதைக் கூட நீங்கள் குறைந்தபட்சம் தெற்கிலங்கையிலுள்ள உங்கள் கருத்துக்களுடன் ஆக்கபூர்வமாக இணையக் கூடியவர்களுடனாவது இணைந்து ஒற்றையாட்சியின் கீழ் மக்கள் மீட்பை உருவாக்க முயன்றிருக்கலாம். ஏன் செய்யவில்லை? முதுகில் குத்தப்படும் முத்திரைகளுக்குப் பயந்தீர்களா? முத்திரை குத்தப்படாத கடிதங்கள் உங்களைப் போல் முடங்கித்தான் கிடக்கும்.

முட்டாள்தனமாக ஆயுதத்தில் மனநோய் (psychopath) கொண்ட புலிகளின் வானவேடிக்கைகளிலும் கீரோயிசத்தையும் வெற்றி என்று நம்பி, உயிர்களையும் காவுகொடுத்து, உடமைகளை இழந்து, விடுதலை என்பதை பரம்பரைக்கே உச்சரிக்க முடியாதபடி எம்மக்கள் இன்று இருக்கிறார்கள். இதற்குப் புலிகளே பொறுப்பாளிகள் என்று சொல்லிவிட்டு நீங்கள் ஒழித்துக் கொள்ளமுடியாது. நீங்கள் புலிகளுக்குப் பயந்து சிங்கள அரசுடன் கைகோத்து இருக்க வேண்டிய அவசியமே இல்லை. சிறுசிறு குழுக்களாக இருக்கும் நீங்கள் ஏன் மக்களெனும் பொது நோக்குக்காக பெரிதாக இணையக்கூடாது.

விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்று வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைக் கொண்டு திரியும் புலிப் பினாமிகளின் வால்கள் கேட்டும் கேள்வி என்னவென்றால் புலிகளை விட்டால் மக்களுக்கு என்ன வழி? அரசாங்கத்துக்கு அடிபணியச் சொல்கிறீர்களா? சிங்கள மக்களும் அரசும் இனி எம்மை மதிக்குமா? தமிழனின் எதிர்காலம் என்ன? என்ற கேள்விகளுக்கு நீங்களே பதில் சொல்லவேண்டியவர்கள். புலிகளிலும் பலர் மாற்று வழியின்றியே அங்கே நிற்கிறார்கள் என்பதை அறிக.

மாற்றுக்கருத்துக் கொண்ட மன்னர்கள் மக்களுக்காக இந்தியாவில் என்று, பின் சிங்கப்பூரில் என்று, பின் இலங்கையில் ஒருசந்திப்பை ஏற்படுத்தினீர்கள். ஆக்கபூர்வமாக என்ன நடந்தது? உங்கள் கருத்துக்களை அன்றி மக்களின் நிலை, எதிர்காலம் பற்றி ஏதாவது கதைத்தீர்களா? அரசும் அவர்களின் ஆலோசகர்களும் சொன்னதைக் கேட்டுக் கொண்டு வந்திருக்கிறீர்கள். இதைக் கேட்பதற்கு கணனி, ரேடியோ, தொலைக்காட்சி என்று போதியளவு ஊடகங்கள் உள்ளன. இவ்வளவு செலவழித்துக் கொண்டு போகவேண்டிய அவசியம் என்ன? சுற்றுலாவா?

தயவுசெய்து இனியாவது சிந்தியுங்கள் புலிகளால் என்றும் ஒருசரியான முடிவை எடுக்க முடியாது. தாம்செய்த பிழைகளை ஒத்துக்கொள்ளக் கூடியவீரம் அவர்களிடம் இல்லை. இருந்திருந்தால் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தூக்கிக் கொண்டு செய்த பிழைகளுக்கு நியாயம் கற்பிக்க முயல்வார்களா? கொண்டு திரியும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினூடாக தமக்கு பணம் கொட்டித்தர இன்னும் எவ்வளவு வெளிநாட்டுத் தமிழர்கள் உள்ளார்கள் என்று கணக்குப் போடுகிறார்களா? என்று திம்புப் பேச்சுவார்த்தைக்குச் சென்றீர்களோ அன்றே வட்டுக்கோட்டைத் தீர்மானம் புலிகளின் பக்கத்திலும் இறந்துவிட்டது. இப்ப என்ன வேண்டியிருக்கிறது புதிய வட்டுக்கோட்டைப் பிரகடனம்.

இப்படியான எண்ணமும் கருத்தும் உள்ள புலிகளால் மக்களை மையப்படுத்திய சரியான ஒருபோராட்டத்தை முன்வைக்க இயலாது. மக்களை மையப்படுத்திய போராட்டமானது அரசில் சுபீட்சம் உள்ளதாக ஏன் புலிகள் விரும்பும் தமிழீழமாகவும் இருக்கலாம். அதையும் அங்குள்ள மக்களே தீர்மானிக்க வேண்டும். ஐயோ போதும் போராட்டம் வேண்டாம் மக்கள் களைத்துவிட்டார்கள் என்கிறீர்களா? சரி அந்த மக்களை என்ன செய்யப் போகிறீர்கள் சிறு சிறு ஆயுதக்குழுக்களிடம் ஒப்படைக்கப் போகிறீர்களா? இதைத்தான் அரசு செய்கிறது. இதை அனுமதிக்கப் போகிறீர்களா?

இன்று வெளிப்புலத்தில் எமக்கும் ஈழத்தில் எம்மக்களுக்கும் அரசியல், வாழ்வியல் சம்பந்தமாக பலதேவைகள் இருக்கிறது என்பதை யாவரும் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். குற்றங்களைச் சுட்டிக்காட்டிக் கொண்டு இருப்பதை விடுத்து இனியாவது முன்பு நாம் படித்த பாடங்களை மனதில் கொண்டு முன்நோக்கி நகரவேண்டிய தேவையும், காலத்தின் கட்டாயமும் எம் முன் மண்டியிட்டுக் கிடக்கிறது. எதிரி துரோகி என்றும் அவன் இவன் என்றும் முதுகில் முத்திரை குத்துவதை விட்டுவிட்டு, நீங்கள் கொண்டுவந்து அமைப்புச் சாயங்களைக் கழுவி விட்டு ஒன்றினைத்து ஈழத்திலுள்ள தமிழ் மக்களின் குரல்களைச் செவிமடுத்து நாம் நாமாக எல்லோருமாக இணைந்து செயற்பட வேண்டிய காலத்தில் காலடி வைக்க வேண்டியுள்ளது.

புலிகளினுள்ளும் மாற்றுவழியின்றிப் பலர் இருக்கின்றனர் என்பதை உணரமுடிகிறது. மக்களின் நலனுக்காக மனந்திறந்து இணைக்கூடிய எல்லாச் சக்திகளையும் ஒன்றிணைத்து பொதுவான வேலைத்திட்டங்களை உருவாக்கி, மக்களின் தேவைகளைக் கூர்மைப்படுத்தி இயங்க வேண்டிய அவசியம் இருக்கிறது. சமூகம் என்பது பலதரப்பட்டவர்களைக் கொண்டது. ஆதலால் கருத்துக்களில் மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. மாற்றமில்லாத எதுவுமே வளர்ச்சியடையாது. வளர்ச்சி கூட மாற்றம் தான் என்பதை மறுக்க முடியுமா?

இனியாவது திறந்த மனங்களுடன் மக்களின் தேவைகருதி, பழைய சாயங்களை களைந்து கட்டிய கைகளை அகலத் திறவுங்கள். உங்கள் விரிந்த நெஞ்சங்களில் தமிழ் மக்கள் மையம்கொள்ளட்டும். உங்கள் உண்மையான ஆக்கபூர்வமான விமர்சனங்களை வையுங்கள். கருத்துக்களைக் கருத்துக்களால் சந்தியுங்கள். குறைந்தபட்ச உடன்பாட்டுடனாவது எம்மை நோக்கிக் கையேந்தி நிற்கும் எம்மக்களுக்காக உங்கள் கண்களை அகல விரியுங்கள். மீண்டும் பழைய பல்லவிகளை விட்டுவிட்டு புதியவர்களாக புதிய கருத்துக்களுடன் உங்கள் கருத்துக்களை எம் மக்கள்மேல் குவியுங்கள். உங்களின் ஒற்றுமையில்தான் ஈழ மக்களின் எதிர்காலம் உள்ளது என்பதை மறக்காதீர். நீங்கள் எந்த அமைப்புச் சாந்தவர்களாகவும் இருந்திருக்கலாம். புதியபாதையை மக்கள் நலனுக்காகவும் இனத்துக்காகவும் திறவுங்கள். சுதந்திரம் என்பது ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் உரியது. அதை அடைவு வைக்கவோ, ஏகபோக உரிமை கொண்டாடுவதற்கோ யாருக்கும் உரிமை கிடையாது. அப்படி உரிமை கொண்ட முயலுபவர்கள் மாபியாக்களாகவே பிரணமிப்பார்கள். புலிகள் புறப்பட்ட பயணம் பாதைமாறி பாதாளத்துள் விழுந்துள்ளது. புலிகளும் மாறலாம் மாறவேண்டும் என்பது அவர்கள் இன்று படித்த பாடம் என்பதையும் அறிக.