செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!

சமீபத்தில் கனடாவில் வாழும் தமிழ்த் தேசிய உணர்வாளப் பெண்மணி சிவவதனி பிரபாகரன் என்பவர் தனது மகளான திவ்யாவின் திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் தனது முகநூல் பதிவில் “இரு வீட்டாரினதும் தாய் மண்ணின் பண்பாட்டு விழுமியங்களையும் பின்பற்றி கனடிய மண்ணின் பூர்வ குடியினரின் ஆசிகளைப் பெற்று, இணையர்கள் முதன் முதலில் சந்தித்த இந்த மண்ணின் அதாவது கனடாவில் பழங்குடி மக்களிற்குச் சொந்தமான நிலத்தில் தனது மகளின் திருமணம் இனிதே நடந்தேறியது” என்றும் பதிவிட்டுள்ளார். ஒரு தாயார் தனது மகளின் திருமணத்தையிட்டு பேருவகை கொள்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. சமூக வலைத்தளத்திலேயே குடும்பம் நடத்தும் இக்காலத்தில், சிவவதனி அம்மையார் தனது மகளின் திருமணப் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டமையும் ஒன்றும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. ஆனால் திருமதி சிவவதனி பிரபாகரன் தனது சம்ந்தக்குடி பற்றி தெரிவித்த தகவல்களே சமூக வலைத்தள தமிழ்த் தலிபான்களுக்கு சும்மா மெல்லுகிற வாய்க்கு அவல் கிடைத்தமாதிரி ஆகிவிட்டது.

சிவவதனி அம்மா மகள் திவ்யா காதலித்த ஆபிரிக்க நாடான கொங்கோ நாட்டு இளைஞனை திருமணம் செய்து வைத்தமையை பொறுக்காத தமிழ்த் தலிபான்கள் பின்னூட்டலில் வந்து வசை மாரி பொலிகிறார்கள். அடுத்தவர் வீட்டு படுக்கையறையை எட்டிப் பார்க்க கூடாது என்ற அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாத பண்பற்ற தமிழ் ஆண்களும் பெண்களும் புதுமணத் தம்பதிகளுக்கு சாபங்களை அள்ளிக் கொட்டுகிறார்கள்.

சம்பந்தப்பட்ட குடும்பத்தின் அனுமதியின்றி தம்பதிகளின் திருமணப் படங்களை பல்வேறு சமூக வலைத்தள போலிக் கணக்குகளில் பகிர்ந்து தமது காழ்ப்புணர்வை உமிழ்கிறார்கள். புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் வேற்று நாட்டவர்களை மணம் புரிதல் என்பது புதிதல்ல. இரண்டாவது தலைமுறையை கடந்து வாழும் புலம்பெயர் தமிழர்கள் இடையே வேறு இனத்தவர்களில் ஆண் மற்றும் பெண் எடுத்தல் சகஜமாக நடந்து தான் வருகிறது. அவ்வாறான திருமணப் படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டும் வருகின்றன. பெரும்பாலான அத்திருமணங்கள் வெள்ளையினத்தவர்களுடான தமிழ்க் கலியாணங்களாக இருக்கின்றன.

வெள்ளையினத்தவர்களுடனான கலப்புத் திருமணங்களுக்கு வராத விமர்சனங்கள், கறுப்பு நிற ஆபிரிக்க இனத்தவர்களுடான திருமணங்களுக்கு வருகின்றன. இது தமிழர்களின் நிற வெறியை வெளிப்படுத்துகிறது. பெரும்பாலும் பளுப்பு நிறமுடைய தமிழர்கள் தங்களை ஆபிரிக்கர்களை காட்டிலும் உயர் இனமாக கருதுகின்றனர். அதனாலேயே வெள்ளை நிறத்தவர்களிடையே ஏற்படும் கலப்பு திருமண பந்தங்களை வரவேற்று கொண்டாடுகின்றனர். அதேநேரம் ஆபிரிக்க இனத்தவரையோ அல்லது வெள்ளையினம் சாராத ஏனைய கலப்புத் திருமணங்களை எள்ளி நகையாடுகின்றனர்.

இன அடக்குமுறைக்கு எதிராக விடுதலை வேண்டிப் போராடிய இனமான ஈழத்தமிழர்கள் நிறவெறி, சாதிவெறி, மதவெறி, பிரதேச வாதம் மற்றும் பெண்ணடிமைத் தனம் என்ற பிற்போக்குத் தனங்களில் இன்னமும் உழல்வது வெட்கக்கேடானது. தாயகத்தை காட்டிலும் புலத்தில் வாழும் தமிழர்களிடையே இவ்வாறான பிற்போக்குத் தனங்கள் மிகுதியாக காணப்படுகின்றன.

கருத்துச் சுதந்திரத்தின் வரையறை தெரியாத காட்டுமிராண்டி சமூகமாக ஈழத்தமிழ்ச் சமூகம் புலம்பெயர் நாடுகளில் வாழ்வது தலைகுனிவானது. சிவவதனி அம்மையார் தனது மகளின் திருமணப் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தனது மகள் கலப்புத் திருமணம் செய்ததை ஆதரித்தது உண்மையில் வரவேற்க்கத்தக்க செயலாகும். அவர் சொல்ல வந்த செய்தி கணியன் பூங்குன்றனாரின் “ யாதும் ஊரே யாவரும் கேளிர் “ என்பதன்படி தமிழர்கள் சர்வதேசவாதிகள். உலகில் வாழும் அனைவரும் எமது உறவுகளே. அதேநேரம் உலகில் உள்ள அனைத்து ஊர்களும் நமதே என்பதாகும்.

சிவவதனி அம்மையாரின் தூரநோக்கு சர்வதேசப் பார்வையை புரிந்து கொள்ள திராணியற்ற கூட்டமொன்று சமூக வலைத்தளங்களில் குத்தி முறிகிறது. பாலியல் வக்கிரமான சொற்றாடல்களில் பின்னூட்டல்களை இடுகின்றது. அவ்வாறான பின்னூட்டல்களில் பெரும்பாலானவை ஆபிரிக்க மணமகனின் ஆண்குறியை மையமாக கொண்ட வக்கிர கருத்துக்களாக உள்ளன. பெரும்பாலும் இப் பின்னூட்டல்களை இடுபவர்கள் புலம்பெயர் நாடுகளில் வாழும் ஆண்களாகவே உள்ளனர். அவர்களுக்கு தமது ஆண்மையில் இருக்கின்ற குறைபாடுகள் காரணமாகத் தான் ஆபிரிக்க மணமகன் மீது காழ்ப்புணர்வு கொண்டு பாலியல் வக்கிரமான பின்னூட்டல்களை இடுவதாகத் தான் கருத வேண்டியுள்ளது.

ஒரு பெண் யாரைத் திருமணம் செய்ய வேண்டும். யாருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட பெண் தான் தீர்மானிக்க முடியும். பெண்களின் சுதந்திரம், சமத்துவம் மற்றும் பாதுகாப்பில் கூடுதல் முன்னுரிமை கொடுக்கும் மேற்கு நாடுகளில் அகதிகளாக வந்து தஞ்சம் பெற்று வாழும் தமிழ் ஆண்களுக்கு மேற்கூறிய விடயங்கள் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

பெண்கள் மீதான அத்துமீறல்களில் மற்றும் வன்முறைகளில் ஈடுபடும் ஆண்களுக்கு புலம்பெயர் நாடுகளில் எத்தகைய தண்டனைகள் வழங்கப்படும் என்பதும் தெரிந்திருக்கும். அல்லது தெரிந்து வைத்திருக்க வேண்டும். புலம்பெயர் நாடுகளில் மட்டுமல்ல தாயகத்திலும் பெண்கள் பாதுகாப்புத் தொடர்பில் பல்வேறு சட்டங்கள் மற்றும் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆகவே சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகளில் ஒழிந்து கொண்டு வெட்டி வீராப்பு மற்றும் அவதூறு பரப்புகிறவர்கள் திருந்த வேண்டும். அல்லது திருத்தப்படுவார்கள்.

எழுதியவர்: கங்கா ஜெயபாலன், சமூக சேவைப் பணியாளர், கல்வி: Social Work & Education (University of Niederrhein), சர்வதேச உறவுகள் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), அரசியல் விஞ்ஞானம் (கொழும்புப் பல்கலைக்கழகம்).

ஆயிஷா கத்தாபி – லிபியாவின் முன்னாள் தலைவர் கத்தாபியின் மகள் – ஈரானிய மக்களுக்கு அனுப்பிய செய்தி:

ஆயிஷா கத்தாபி – லிபியாவின் முன்னாள் தலைவர் கத்தாபியின் மகள் – ஈரானிய மக்களுக்கு அனுப்பிய செய்தி:

🇮🇷 ஓ, வலிமையும் தைரியமும் கொண்ட ஈரான் மக்களே! 🇮🇷

எங்கள் தேசம் துரோகத்தின் வழியாக அழிவுக்குள்ளான தேசம்.

இது வெளிப்படையான எதிரிகளால் அல்ல, மேற்கு நாடுகளின் புன்னகைகளாலும் போலியான வாக்குறுதிகளாலும் ஏற்பட்ட அழிவு.

நான் எச்சரிக்கிறேன்: மேற்குலக நாடுகளின் இனிமையான வார்த்தைகளையும் பொய்யான வாக்குறுதிகளையும் நம்ப வேண்டாம்.

அவர்கள் என் தந்தையிடம் சொன்னார்கள்:

“உங்கள் அணு மற்றும் ஏவுகணை திட்டங்களை விலக்கினால், உலகத்தின் எல்லா வாயில்களும் உங்களுக்காக திறக்கப்படும்.” என்று.

என் தந்தை, நல்ல நம்பிக்கையுடன், பேச்சுவார்த்தையின் பாதையைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் அதற்குப் பின் ஏற்பட்டது – கொடூரமான நேட்டோ வான்வழி தாக்குதல்கள்.

எங்கள் நாடு இரத்தமும் சாம்பலுமாக மாறியது.

எங்கள் மக்கள் அடிமைகளாக ஏழைகளாக வாழ்விடமற்ற அகதிகளாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஓ, என் ஈரானிய சகோதர சகோதரிகளே!

இந்த நரிகளை நம்பி சமாதானத்தின் பக்கம் சென்றால் அழிவும் பிளவுகளும் துக்கமும்தான் மிஞ்சும்.

ஒரு நரியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது ஆடுகளை காப்பாற்றாது. அது தனது அடுத்த உணவுக்கான நேரத்தை நிர்ணயிக்க மட்டுமே உதவும்.

புதிய வடிவில் வரும் வர்த்தக-தொழில் நுட்பப் போர்

புதிய வடிவில் வரும் வர்த்தக-தொழில் நுட்பப் போர்

Teresa Ribera என்பவர் ஐரோப்பிய கமிஷனின் உப தலைவர். இவர் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி முதலீடுகள் வருமென்கிறார்.அதேவேளை தமது நுகர்வோரையும் பாதுகாக்க வேண்டுமென்கிறார். அவர் மறைமுகமாகக் குறிப்பிடுவது பணவீக்கத்தை என்பது புரிகிறது. நேட்டோ மாநாட்டில் எடுத்த முடிவின் பிரகாரம், நாட்டின் மொத்த உள்ளூர் உற்பத்தியின் (GDP) 5% வீதத்தை பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கினால் பெரும் முதலீட்டாளர்கள் எப்படி வருவார்கள்? பாதுகாப்பு குறித்த அச்சம் நிலவும் நாட்டில் முதலீடு (FDI) வருவது சாத்தியமா?. ஆனாலும் அசாதாரண அரசியல் சூழலிலும் முதலீடு செய்ய சீனா மட்டுமே முன் வரும்.

இதனை அமெரிக்கா அனுமதிக்குமா?.தனது நாடு நோக்கி முதலீடுகளும் தொழிற்சாலைகளும் வர வேண்டுமென தீவிரமாகச் செயற்படும் டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்தோடு இந்த விவகாரத்தில் மறைமுகமான மோதல் போக்கினையே மேற்கொள்வார். ரஷ்யாவினால் ஆபத்து வருமென்கிற அச்சுறுதலை விடுக்கும் டிரம்ப், பட்டினுடனும் உரையாடிக் கொண்டிருக்கிறார். ஒரே நேரத்தில் எதிரியுனும் நண்பர்களுடனும் ஒருவகையான இரட்டை இராஐதந்திரத்தினை டிரம்ப் மேற்கொள்கிறார். ‘கிழக்கை புட்டீன் வைத்துக் கொள்ளட்டும். மீதமுள்ள பகுதிகளின் கனிமவளங்களை நான் கையேற்கிறேன்’ என்பதுதான் டிரம்பின் டீல்.

செயற்கையான வகையில் உலக ஆதிக்கத்தை காட்ட முற்பட்டால் வரிப்போர், மத்திய கிழக்குப் போர் மற்றும் உக்ரேயின் போர் தரும் படிப்பினைகளை மீளாய்வு செய்ய வேண்டிய தேவை டிரம்பிற்கு ஏற்படும். அந்த எதிர்வினையால் வந்த மாற்றங்கள் அனைத்தும் துல்லியமாகப் புலப்படுகிறது. தென்சீனக் கடலிலும் மத்திய கிழக்கிலும் டிரம்ப் மேற்கொண்ட புவிசார் இராஜதந்திரங்கள் அனைத்தும் தற்காலிகத் தோல்வியைத் தழுவியுள்ளன. தைவானுடன் போரில் ஈடுபடவில்லை சீனா. அமெரிக்கா முன்னெடுத்த இஸ்ரேல்-ஈரான் proxy war இலும் ரஷ்யாவும் சீனாவும் மாட்டுப்படவில்லை. ஆதலால் மீண்டும் வர்த்தகப் போரிற்கான ஆயுத்தங்களை அமெரிக்கா மேற்கொள்ளுமென எதிர்பார்க்கலாம்.

– இதயச்சந்திரன்

அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறுமா..?

அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறுமா?.

சீனாவின் இராட்சத விமானங்கள் ஈரானிற்குள் எதைக் கொண்டு வந்தது? அங்கிருந்து எதனைக் கொண்டு சென்றது?.

வந்தது, கப்பல் மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள்.
சென்றது, செறிவூட்டப்பட்ட யுரேனிய அணுசக்தி உபகரணங்கள் என்கிற சந்தேகம் பலமாக எழுகிறது.

உண்மையில் ஈரானின் அணு ஆயுத நிலைகளை அமெரிக்காவின் B2 விமானங்கள் தாக்கியதா?. இது குறித்த பல முரண்பட்ட செய்திகள் வருகின்றன. மத்திய கிழக்கில் எஞ்சியுள்ள ஈரானையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, உலகின் மசகு எண்ணெய் ஆதிக்கத்தை முழுமையாகக் கைப்பற்றும் அமெரிக்க திட்டத்தின் ஒரு பகுதிதானா இந்த இஸ்ரேல் ஆரம்பித்த போர்?.

தனது பொருளாதாரப் போட்டியாளர் சீனாவின் எரிசக்தி வழங்கல் மையங்களையும் அதன் பாதைகளையும் தன்வசமாக்குவதே அமெரிக்காவின் மூலோபாய இலக்கு. இருப்பினும் டிரம்பின் வரிப்போர், மத்திய கிழக்குப் போர், பைடனின் உக்ரெயின் போர் எல்லாமே தோல்விதான். ஆகவே மேலதிக பொருளாதார வீழ்ச்சியிலிருந்து தன்னைக் காப்பாற்ற வேறு வழிகளையே அமெரிக்கா நாட வேண்டும்.

வர்த்தகப் போரில் புதிய பரிமாணத்தை சீனா ஆரம்பித்துள்ளது. அதாவது ஆபிரிக்க நாடுகளுடன் வரியில்லா (Tariff) வர்த்தகத்தைச் செய்ய சீனா உடன்பட்டுள்ளது. அதே போல் ஐரோப்பிய ஒன்றியத்துடன் அமெரிக்கா வரியில்லா வர்த்தகம் செய்யுமா?. என்கிற கேள்வி எழுகிறது.

ஆசியான் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் இதே போன்ற வரியற்ற வர்த்தகத்தை சீனா மேற்கொண்டால் அமெரிக்காவின் நிலை என்னாகும்?. ஆயுதப் போர் தணிந்து, வேறு வடிவிலான பொருளாதாரப் போரினை அமெரிக்கா முன்னெடுக்க வேண்டும்.
பார்ப்போம்,…

லார்க்கூர்னே சிவன் கோயில் அர்ச்சகர்கள் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் இந்தியாவில் கைது !

லார்க்கூர்னே சிவன் கோயில் அர்ச்சகர்கள் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் இந்தியாவில் கைது !

ஐக்கிய மக்கள் சக்தியின் வடக்குப் பேச்சாளர் உமா சந்திரபிரகாஷின் நிதிப்பலமாக இருந்துவந்த மைத்துனர் குடுமி ஜெயந்திரனின் பாரிஸ் லார்க்கூர்னேயில் இருக்கும் சிவன் கோயில் தொடர்ச்சியாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றது. லார்க்கூர்னே கோயிலின் உரிமையாளரான குடும்பி என்றழைக்கப்படும் வெற்றிவேலு ஜெயேந்திரன் இலங்கையில் பல இளம் பெண்களை மீது பாலியல் சுரண்டல் செய்து வருவதான குற்றச்சாட்டு கடந்த காலங்களில் பூதாகரமாக வெடித்திருந்தது. விளிம்பு நிலைக் குடும்பங்களையும் இளம்பராய பெண்களையும் குறி வைத்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வரும் சமூக விரோதியான பாரிஸ் சிவன் கோயில் நிர்வாகி வெற்றிவேலு ஜெயேந்திரன் மீது, ஆள் அடையாள மோசடி, காணி மோசடி என பல்வேறு மோசடிக் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. லார்க்கூர்னே சிவன் கோயில் நிறுவனரும் பாலியல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்பவர். அதேபோன்று லார்க்கூர்னே சிவன் கோயில் பிரதான சிவாச்சாரியாரான வெங்கேடஸ்வரகுருக்கள் அகோரமூர்த்தியும் அவரது மகனும் பாலியல் குற்றவாளிகள் என்ற செய்திகள் வெளியாகி பாரிஸ் சிவன் கோயில் பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரிஸ் சிவன் கோயில் சிவாச்சாரியார் அகோரமூர்த்தி சிவன் கோயிலுக்கு வரும் பெண் பக்த்தர்களிடம் பாலியல் சீண்டல்கள் மற்றும் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக நீண்டகாலமாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன என கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். அகோரமூர்த்தி பாரிஸ் சிவன் கோயிலுக்கு வரும் பெண்களிடம் தனக்கு மசாஜ் செய்துவிடும்படி கோருவதாகவும் நிர்வாகத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. பாரிஸ் சிவன் கோயிலுக்கு அகோரமூர்த்தி அர்ச்சகராக நியமிக்கப்படும் முன்னர் லார்க்கூர்னே பிள்ளையார் கோயிலில் அர்ச்சகராக இருந்ததாகவும். அகோரமூர்த்தி லார்க்கூர்னே பிள்ளையார் கோயில் வரும் பக்தைகளிடம் பாலியல் ரீதியில் அத்துமீறல்களில் ஈடுபட்டதால் பிள்ளையார் கோயிலில் இருந்து விரட்டப்பட்டுள்ளார். பின்னர் பாலியல் குற்றவாளியான வெற்றிவேலு ஜெயேந்திரனின் லார்க்கூர்னே சிவன் கோயிலில் வந்து அர்ச்சகராக சேர்ந்துள்ளார். மோசடிகளுக்கும் துஸ்பிரயோகங்களுக்கும் பெயர் போன லார்க்கூர்னே சிவன் கோயில் அகோரமூர்த்திக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

இப்போது தந்தை எவ்வழியோ தனயனும் அவ்வழியென சென்றதால் பாரிஸ் சிவன் கோயில் சிவாச்சாரியார் அகோரமுர்த்தியின் மகனான சிவாச்சாரியர் தியாகராஜன் பாலியல் துஸ்பிரோயக வழக்கில் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அகோரமூர்த்தியின் மகன் தியாகராஜன் . தியாகராஜன் தமிழ்நாடு அறநிலையத்துறைக்குச் சொந்தமான நாகநாதசுவாமி திருக்கோயிலில் அர்ச்சகராக இருக்கிறார். 40 வயதாகும் தியாகராஜன் பேரில் ஆம்பூரில் பல்வேறு பாலியல் துஸ்பிரயோக சுரண்டல் புகார்கள் இருந்து வந்துள்ளன. ஆளும் பிஜேபி கட்சி ஆதரவால் அவற்றிலிருந்து தியாகராஜன் தப்பி வந்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி செல்வாக்கால் இந்தியப் பிரதமர் கடந்த வருடம் பாரிஸ்க்கு விஜயம் செய்த போது நரேந்திர மோடிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்க அகோரமூர்த்தியின் மகன் தியாகராஜன் பாரிஸ் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், அர்ச்சகர் தியாகராஜன் மீது திருமணமாகாத 28 வயது இளம்பெண், திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அம்மனுவின் படி கோயிலுக்கு உளவாரப் பணி செய்ய வந்த பெண்ணை பலவந்தமாக தியாகராஜன் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார். பின்னர் பாதிக்கப்பட்ட பெண் பிரச்சினை செய்யவும் தானே அப்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் திருமணம் செய்யும்படி வற்புறுத்த அப்பெண்ணை திருமணம் செய்யாது மிரட்டி ஏமாற்றி வந்துள்ளார்.

தியாகராஜன் ஏற்கனவே திருமணமானவர். இப்படியான புகார் எழுவது முதற் தடவையல்ல. ஏற்கனவே கோயிலுக்கு வந்த பெண் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த விவகாரத்தில் கோயில் நிர்வாகம் தலையிட்டு அப்பெண்ணை தியாகராஜனுக்கு இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து வைத்து பிரச்சினையை முடித்துள்ளனர். ஏற்கனவே இரு பெண்களுடன் வாழும் தியாகராஜன் லார்க்கூர்னே சிவன் கோயில் நிறுவனர் போன்று பல பெண்களின் வாழ்க்கையிலும் விளையாடி வந்துள்ளார்.

ஆம்பூர் மகளிர் பொலிஸ் நிலையத்தால் அர்ச்சகர் தியாகராஜன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைது நடவடிக்கைக்குப் பயந்து அர்ச்சகர் தியாகராஜன் பாண்டிச்சேரியில் தலைமறைவாகியிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு விசாரணைகளிலிருந்து மகனை காப்பாற்ற லார்க்கூர்னே சிவன் கோயிலில் பணியிலிருந்த அகோரமூர்த்தியும் தமிழ்நாட்டுக்கு விரைந்துள்ளதாக சிவன் கோயில் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் புலனாய்வுச் செய்தி ஊடகமான நக்கீரனின் செய்திக் குறிப்பின் படி 25 வருடங்களுக்கு முதல் அர்ச்சகர் தியாகராஜனின் தந்தையான வெங்கடேஸ்வரக் குருக்கள் அகோரமூர்த்தியும் பாலியல் குற்றச்சாட்டாலேயே ஆம்பூர் கோயிலிருந்து அடித்து விரட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலியல் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க பாரிஸில் அர்ச்சகராக தஞ்சமடைந்த அகோரமூர்த்தி சிவன் கோயிலில் இப்போது அர்ச்சகராக உள்ளதாக நக்கீரன் செய்தி வெளியிட்டுள்ளது.

அகோரமூர்த்தி லார்க்கூர்னே சிவன்கோயில் பெண்கள் மீது பாலியல் ரீதியில் அத்துமீறல்களில் ஈடுபடுபவதாக பல தகவல்கள் சிவன் கோயில் நிர்வாகத்திற்கு கிடைத்துள்ளது. இது தொடர்பில் சமூக வலைதளங்களில் கணொளிகள் பரப்பப்பட்ட போதும் சிவன் கோயில் நிர்வாகத்தில் உள்ள வெறிக்குட்டிகள் எ‌ந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேநேரம் பாலியல் குற்றச்சாட்டில் ஆம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள அர்ச்சகர் தியாகராஜன் தனது தந்தையின் பொறுப்பில் இருக்கும் லார்க்கூனே சிவன் கோயில் திருவிழாக்களில் வருடாந்தம் கலந்து கொண்டு வருபவர் என்றும் கூறப்படுகிறது. பாலியல் ஆசாமிகளால் கொடியேற்றப்பட்டு லார்க்கூனே சிவன் கோயிலில் திருவிழாக்கள் இடம்பெற்று வருவதாக சிவன் கோயில் பக்தகோடிகள் முணுக்கின்றனர். பாலியல் குற்றச்சாட்டில் கைதான தியாகராஜன் தலைமையிலேயே பாரிஸ் லார்க்கூர்னே சிவன் கோயிலில் “சாத்துப்படி அலங்காரப் பூசை” நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தியாகராஜன் ஜேர்மனியிலும் கோயில் ஒன்றில் கொடியேற்றத் திருவிழா செய்வதாக கூறப்படுகிறது.

வேலியே பயிரை மேய்ந்த கதை தான் லார்க்கூர்னே சிவன் கோயில் விவகாரம். லார்க்கூர்னேயில் சிவன் கோயில் கடையை நடத்தும் வெற்றிவேலு ஜெயேந்திரன் பாரிஸிலிருந்து வெளியேற முன்னர் சிவன் கோயிலுக்கு வரும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு குடும்பங்களில் குழப்பத்தை ஏற்படுத்திய வரலாறும் இருக்கிறது என பாரிஸ் வாழ் தமிழர்கள் கூறுகின்றனர். இலங்கையில் அடையாளத்தை மாற்றிக் கொண்டு வாழும் லார்க்கூர்னே சிவன் கோயில் நிறுவனர் சிவன் கோயிலிருந்து கிடைக்கும் பணத்தில் பல இளம்பெண்களின் வாழ்க்கையை சூறையாடி வருகிறான்.

வெற்றிவேலு ஜெயேந்திரன் பாரிஸிலிருந்து இலங்கை தப்பியோடிய பின்னர் கோயில் நிர்வாகத்தை கொண்டு நடத்தும் கட்டுவனைச் சேர்ந்த சிவகுருநாதன் கருணாகரன் மற்றும் பொன்னுத்துரை மகேந்திரன் ஆகியோர் சாராய போதையிலேயே கோயிலிலுக்குள் வேலை செய்வதாகவும் கூறப்படுகிறது. சிவன் கோயிலில் சேகரிக்கப்படும் அர்ச்சனைப் பற்றுச்சீட்டு பணமும் உண்டியல் பணமும் மோசடியான முறையில் தற்போது இலங்கையில் வாழும் வெற்றிவேலு ஜெயேந்திரனுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. இப்பணம் அனுப்பப்பட்ட விவகாரத்தில் ஒரு அப்பாவி குட்டி என்றழைக்கப்படும் இளைஞன் சிக்க வைக்கப்பட்டு விளக்கமறியலில் உள்ளார். பாரிஸ் சுங்கப்பிரிவின் சோதனைக்குள்ளான லார்க்கூர்னே சிவன் கோயிலின் பல்வேறு ஆவணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில் பாரிஸ் லார்க்கூர்னே சிவன் கோயில் அர்ச்சகர்களும் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளனர். பாரிஸ் வாழ் தமிழ் சிவனடியார்கள் என்று கருதப்படுகிறவர்களால் பாரிஸ் சிவன் கோயில் உண்டியிலிலும் அர்ச்சனைக்கும் மற்றும் எள்எண்னெய் எரிப்பதற்கும் கொட்டும் யூரோக்கள் வெற்றிவேலு ஜெயேந்திரன் தலைமையிலான அடாவடி மோசடிக் கும்பல்களின் சமூக விரோத பாவ நடத்தைகளுக்கே உதவுகின்றன. சிவன் சொத்து குல நாசம் என்கின்ற சொல் வழக்கின் பொருள் புரிந்தவர்கள் பாரிஸ் லார்க்கூர்னே சிவன் கோயிலின் கஜானாவை நிரப்ப துணை போக மாட்டார்கள். பக்தி என்ற பெயரில் நடக்கும் மோசடி வியாபாரத்தில் அரும்பாடுபட்டு சம்பாதித்த பணத்தை பறிகொடுக்காது ஆன்மீக நாட்டமுள்ள பக்தர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என அறநெறிச் செயற்பாட்டாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

ஆம்பூர் நாகநாதசுவாமி திருக்கோயில் மற்றும் பாரிஸ் லார்கூர்னே சிவன் கோயில்களில் இடம்பெறும் இச் செயல்களால் கோயில்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. பக்த கோடிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் ஒரு அசிங்கத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், தாங்கள் கோயில்களில் நிரந்தர பணியாளராக இருக்கும்போதோ அல்லது நிறுவனர்களாக இருக்கும்போதோ மற்றும் அர்ச்சகர்களாக இருக்கும் போதோ திருக்கோயில் பணியாளர்களுக்கான ஒழுக்கநெறிகளை கடைபிடிக்கவில்லை என்பதையே இது சுட்டி காட்டுகிறது.

இந்தப் பாவப்பட்ட பணத்தை மூலதனமாகக் கொண்டே ஜெயந்திரனின் மைத்துனியான உமா சந்திரபிரகாஷ் தன்னுடைய ஐக்கிய மக்கள் சக்தியுடனான அரசியலை முன்னெடுக்கின்றார்.

லாகூர்னே சிவன் கோயில் போன்றே லண்டன் ஹரோவில் ‘ஓம் சரவணபவ’ என்ற பெயரில் தமிழகம் கேரளாவைச் சேர்ந்த புலிக்கள் முரளிகிருஷ்ணன் என்ற போலி ஆசாமி பக்தர்களின் பல்லாயிரக்கணக்காண பவுண்களை சூறையாடியதாக குற்றம்சாட்டப்பட்டு வருகின்றது. மேலும் இவர் பெண்களைப் பாலியல் துஸ்பிரயோகம் செய்தமைக்காக 7 ஆண்டுகள் சிறைத் தண்டணை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறான முட்டாள்தனங்களில் பக்தர்கள் ஈடுபடக் கூடாது. சாமிகளுக்கும் ஆசாமிகளுக்கும் லஞ்சம் கொடுத்து பாவங்களைக் கழுவ முடியாது. தாயகத்தில் உள்ள உறவுகளை வாழ வைப்பதற்கு உதவுவதே மகத்தானது” என்கிறார் மோகனராஜா ராமகிருஷ்ணன்.

 

கோவிட் 19 இன் மீள்வருகையா ? கடந்து வந்த காலங்கள் !

கோவிட் 19 இன் மீள்வருகையா ? கடந்து வந்த காலங்கள் !

உலனத்தின் பெரும்பாலான மாற்றங்கள் கண்டுபிடிப்புக்கள் அழிவுகளைத் தொடர்ந்தே உருவானது. இன்று நாங்கள் அனுபவிக்கின்ற தொழில்நுட்பங்களும் வாழ்க்கை முறையும் இரண்டாவது உலக யுத்தத்தின் விளைவு. இன்று பெண்கள் அனுபவிக்கின்ற மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம் கூட இரண்டாம் உலக யுத்தத்தின் விளைவு தான்.

COVID-19 ஒரு புதிய வாழ்க்கை முறையைக் கற்றுத்தந்து முன்னேற்றங்கள் தொலைவேலை (Work from Home) ஒரு புதிய பணியாற்றும் முறை என அறிமுகமானது. ஆன்லைன் கல்வி, டிஜிட்டல் சுகாதார சேவைகள் முக்கியத்துவம் பெற்றன. மக்கள் ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மையுடன் செயல்பட்டனர்.

இருப்பினும் தற்போது covid 19 மீண்டும் பரவ ஆரம்பித்து உள்ளமை மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. வருமுன் காப்பதே பொருத்தமானது. இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந், ஹொங்கொங் ஆகிய நாடுகளில் கோவிட் 19 மீண்டும் தலையெடுக்கின்றதா எனப் புருவங்கள் உயர்கின்றது.

மனித இனத்தின் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தொற்றுநோய்களில் ஒன்றாக COVID-19 (கொரோனா வைரஸ் நோய்) கருதப்படுகிறது. இது 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் ஊஹான் நகரில் முதல் முறையாக கண்டறியப்பட்டது. குறுகிய காலத்திலேயே உலகெங்கும் பரவிய இந்த நோய், கோடிக்கணக்கான மக்களின் உயிரை வாங்கி அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு துறையையும் மாற்றியமைத்தது.

சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல், சுவை மற்றும் மணம் இழப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் இது உயிருக்கே ஆபத்தான நிலைகளையும் உருவாக்குகிறது. வைரஸின் வேகமான பரவலைக் கட்டுப்படுத்த பல நாடுகள் ஊரடங்கு, சமூக இடைவெளி, முகக்கவசம், தடுப்பூசி ஆகியவை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தன.

COVID-19 வைரஸ், மருத்துவ ரீதியில் “SARS-CoV-2” என அழைக்கப்படுகிறது. இது முதலில் விலங்குகளில் இருந்த வைரஸாக இருந்து, மனிதர்களிடம் பரவ ஆரம்பித்ததாக நம்பப்படுகிறது. ஒரு மனிதனிடமிருந்து மற்றொருவருக்கு சிறுநீரகம், இருமல், தொடுதல் போன்ற வழிகளில் பரவுகிறது.

அதிக வேகத்தில் பரவும் தன்மை காரணமாக, உலக சுகாதார அமைப்பு (WHO) 2020 மார்ச்சில் இதனை “பாண்டமிக்” என அறிவித்தது. அதன் பின்பு உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து, மருத்துவ வசதிகளை மேம்படுத்த தொடங்கின.

மிகவும் மோசமான நிலைமையில், இது குருதிச்செறிவு, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற பரிதாப நிலைகளுக்கு வழிவகுக்கும்.உலகெங்கும் இந்த வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
COVID-19 உலகின் இயங்கும் முறைமைகளைத் தற்காலிகமாக முடக்கி வைத்தது. தொழில்கள் மூடப்பட்டன, பணியிழப்பு ஏற்பட்டது, பல நாடுகளில் பொருளாதாரம் சரிந்தது. கோடிக்கணக்கான உயிர்கள் இழந்தன. பள்ளி மற்றும் கல்லூரிகள் அடைக்கப்பட்டதால் மாணவர்கள் ஆன்லைன் கல்விக்கே மாற வேண்டிய நிலை ஏற்பட்டது. மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பின. மருத்துவர், செவிலியர்கள் அதிக அழுத்தத்திற்கு உள்ளானார்கள்.

தனிமைப்படுத்தல், பயம், நோயிழப்பு போன்ற காரணங்களால் மக்களில் மன அழுத்தம், கவலை, மன உளைச்சல் போன்ற மனநிலைச் சிக்கல்கள் அதிகரித்தது.

COVID-19 ஐ கட்டுப்படுத்தும் மிக முக்கியமான வழியாக தடுப்பூசி விளங்கியது. Pfizer-BioNTech, Moderna, AstraZeneca, Covaxin, Covishield ஆகியவை முன்னிலை பெற்ற தடுப்பூசிகளாகும். தடுப்பூசி பெறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் மூலம் நோயின் தாக்கம் குறைக்கப்பட்டு, மரண விகிதமும் குறைந்தது.

2025 ஜூன் 4 ஆம் தேதியின்படி, இந்தியாவில் COVID-19 தொற்றுநோயின் நிலைமை மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போதைய COVID-19 நிலவரப்படி 4,302 பேருக்கு நோய் தொற்று அடையாளம் காணப் பட்டு உள்ளது. 24 மணி நேரத்தில் 864 பேருக்கு தொற்றியுள்ளது. மொத்தமாக 44 பேர் உயிரைந்துள்ளனர். 24 மணி நேரத்தில் 7 மரணங்கள் பதிவாகியுள்ளது. முக்கியமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களாக கேரளாவில் 1,373 நோயாளிகள், மகாராஷ்டிரா 510, குஜராத்: 397, டெல்லி: 393 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் தற்போது பரவி வரும் COVID-19 வைரஸ் வகைகள்: LF.7; XFG; JN.1; NB.1.8.1; இந்த வகைகள் அனைத்தும் Omicron வகையின் துணை வகைகளாகும். NB.1.8.1 வகை தற்போது உலக சுகாதார அமைப்பால் ‘Variant Under Monitoring’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வைரஸ் இடம் இருந்து எம்மை காத்துக் கொள்ள முகக்கவசம் அணியவும், கைகளை அடிக்கடி கழுவவும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களைத் தவிர்க்கவும், அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களுக்கு மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் தற்போது COVID-19 தொற்று தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, COVID-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸின் செயல்பாட்டில் உலகளாவிய அதிகரிப்பு 2025 பிப்ரவரி முதல் பதிவாகியுள்ளது.

இலங்கையின் சுவாச கண்காணிப்பு அமைப்பின்படி, 2024 ஆம் ஆண்டில், SARS-CoV-2 வைரஸிற்காக சோதிக்கப்பட்ட சுவாச மாதிரிகளில் 3% நேர்மறையான முடிவுகளை வழங்கியுள்ளன. இந்த எண்ணிக்கை 2024 மே மாதத்தில் 9.6% ஆக உயர்ந்தது. இருப்பினும், 2025 ஆம் ஆண்டு இதுவரை SARS-CoV-2 வைரஸின் சராசரி நேர்மறையான முடிவுகள் கிட்டத்தட்ட 2% ஆக உள்ளன. தற்போது சிறியளவிலான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, உடனடியாக எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது என்று கூறியுள்ளார். இருப்பினும், அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் இலங்கையில் பரவி வருவதாக பகிரப்படும் பல தகவல்கள் உண்மை இல்லை என Fact Crescendo போன்ற உண்மை கண்டறியும் நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

பிற நாடுகளில் ஹாங்காங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்து போன்ற சில நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் படுவன்துடாவ, சமீபத்திய கொவிட்-19 வைரஸின் திரிபு மிகவும் பாரதூரமானது அல்ல எனவும், உலக நாடுகள் கொரோனா தடுப்பூசியில் அதிக கவனம் செலுத்தியதால் வைரஸின் வீரியம் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். சுருக்கமாக, இலங்கையில் கோவிட்-19 வைரஸ் தொடர்பாக சிறியளவிலான அதிகரிப்பு காணப்பட்டாலும், குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. மேலும், சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

COVID-19 என்பது வெறும் ஒரு தொற்றுநோய் மட்டுமல்ல. அது மனித இனத்திற்கே ஒரு நெருக்கடியான பாடமாக இருந்தது. இது நம்மை எச்சரிக்கிறது மனிதன் இயற்கையுடன் சுமூகமாக வாழ்கின்ற அளவிற்கே பாதுகாப்பானது.

நாம் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட தொற்றுநோய்களை எதிர்கொள்ள எச்சரிக்கையுடன், முன்னெச்சரிக்கையுடனும், அறிவுடனும் செயல்பட வேண்டும். சுகாதார ஒழுங்குகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொது அறிவு ஆகியவை இனிமேலும் நம் வாழ்க்கையில் முக்கியமான பகுதியாக இருக்க வேண்டும்.

COVID-19 ஒரு எச்சரிக்கையாகும் இயற்கையோடு நமக்கு இருக்க வேண்டிய சமநிலையை உணர்த்தியது. எதிர்காலத்தில் இப்படிப் பட்ட தொற்றுநோய்களை எதிர்கொள்வதற்கான சீரான மருத்துவ மற்றும் சமூக தயாரிப்புகள் அவசியம் என்பதை COVID-19 நமக்கு உணர்த்தியுள்ளது.

இலங்கையில் ஓக்ரோபர் 27, 2024 திகதியில் வெளியான விபரங்களின் படி கோவிட் இனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: 6,72,754; இறந்தவர்களின் எண்ணிக்கை: 16,897; அன்று பாதிக்கப்பட்டிருந்தவர்கள்: 5 பேர் மட்டுமே. நோயிலிருந்து குணமடைந்தவர்கள்: 6,55,852 பேர்; இறப்பு வீதம்: 2.5 சதவிகிதம்; பரிசோதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: 36 இலட்சம் பேர்.

மெய்பொருள் காணுமா யாழ் பல்கலைக்கழக அலுமினி அசோசியேசன் யுகெ ?

மெய்பொருள் காணுமா யாழ் பல்கலைக்கழக அலுமினி அசோசியேசன் யுகெ ?

1970 பதுக்களில் யாழில் பல்கலைக்கழகம் அமைவதற்கு எதிராக தமிழ் தேசியம் போர்க்கொடி தூக்கியது. தமிழரசுக் கட்சி யாழில் பல்கலைக்கழகம் உருவாவதை எதிர்த்தது. தமிழ் காங்கிரஸ் யாழில் இந்து பல்கலைக்கழகம் உருவாக வேண்டு; என்று கோரினர். ஆனால் பொன்னம்பலத்தின் குடும்பத்தில் யாரும் இந்துநாகரீகம் கற்கவில்லை. ஆனால் இப்போதும் தாங்கள் இந்துநாகரீகத்தை வளர்க்க யாழில் உள்ள ஜனாதிபதி மாளிகையை தருமாறு கோருகின்றனர். ஆனால் இந்துநாகரீகமும் கலைப்பீடத்தில் படித்தவர்களும் வேலை வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர். அக்காலத்தில் இடதுசாரிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது சிறிலங்கா சுதந்திரக் கட்சி. ஆட்சியிலிருந்த இடதுசாரிகளின் தூண்டுதலால் 1974இல் உருவாக்கப்பட்டது தான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

அன்று யாழில் பல்கலைக்கழகம் உருவாவதற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய யாழ் தமிழ் தேசியம் தற்போது யாழ் பல்கலைக்கழகத்தை தனது கோட்டையாக்கியுள்ளது. காலங்கள் உருண்டோடி யாழ் பல்கலைக்கழகம் தனது 50 ஆண்டுகளை எட்டுகின்றது. பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது முதல் தமிழீழ விடுதலைப் போராட்டம் வீச்சுப் பெற்ற 1980க்களின் நடுப்பகுதி வரையான முதற் பத்து ஆண்டுகள் யாழ் பல்கலைக்கழகத்தில் இடதுசாரி – சோசலிச சிந்தனை வீச்சுப் பெற்றிருந்தது.

தற்போது யாழ்பாணத்துக்கு வெளியே, இலங்கைக்கு வேளியே சென்ற பல்கலைக்கழக பட்டதாரிகள் ஒன்று சேர்ந்து தாங்கள் தாங்கள் வாழும் நாடுகளில் அமைப்புகைள உருவாக்கி வருகின்றனர். அவ்வாறான ஒரு அமைப்பை பிரித்தானியாவில் அமைக்க பல முயற்சிகள் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட போதும் அது நீண்டகாலமாகக் கைகூடவில்லை. ஆனால் இந்த ஆண்டு அதில் அவர்கள்; வெற்றி பெற்று 1100 பேர்வரை கலந்துகொண்ட நிகழ்வை லண்டன் கிறிஸ்றல்பலஸில் கடந்த ஆண்டு நவம்பர் 30 இல் ஏற்பாடு செய்திருந்தது.

மண்டபம் செலவு 30,000 பவுண் உட்பட மொத்தமாக 44,000 பவுண் செலவில் இந்நிகழ்வு வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களது வருமானம் 52,000 பவுண்களாகவும் செலவு போக 8,000 பவுண்கள் மிகுதியாகவும் கிடைத்துள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தின் அலுமினி அசோசியேசன்ஸ் யுகெ கிறிஸ்ரல்பலஸில் நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்த போதே இந்தச் சங்கத்துக்குள்ளே குழப்பநிலை ஆரம்பமாகிவிட்டது. முதற் கோணல் முற்றும் கோணல் என்ற நிலையில் தற்போது யாழ் பல்கலைக்கழகத்தின் அலுமினி அசோசியேசன்ஸ் யுகெ உள்ளது. இது தொடர்பில் சாந்தி ரதுலோச்சனன் பதிவு செய்த குறிப்பு அங்குள்ள பிரச்சினையின் ஆழத்தை மிகத் தெளிவாகக் குறிப்பிடுவதாக உள்ளது. “ஒரு பெண் 01.10.24லிருந்து 29.12.24 வரை செய்த வீட்டுக்கு கூரை போட வந்துள்ளார்கள் சிவகுரு ஜெயானந்தன், புனிதா கணேஸ்வரன். ஒரு பழைய மாணவர்களுக்கும் அறிவிக்காது, தன்னைத் தலைவராக நினைத்து, யூலை 07, 2024 அன்று ஒரு வெளிநாட்டு நிறுவனத்துக்கு பொன் விழாவை தாரைவார்த்துக் கொடுத்தவர். இதைத் தவிர எந்த சமூகப் பணியிலும் ஈடுபடவில்லை”. யாழ் பல்கலையில் 1984-85 இல் பௌதீக விஞ்ஞான பீடத்தில் கற்ற இவர், தன்னோடு தலைமைப் பதவிக்கு போட்டியிட்டவர் தொடர்பில் பதிவிட்ட கருத்து.

யுகெ அலுமினி அசோசியேசன்ஸ் நவம்பரில் தங்களுடைய நிகழ்வை கொண்டாடுவதற்கு முன் அதற்கான விடயங்களை சிவகுரு ஜெயானந்தன் என்பவர் தன்னிச்சையாக மேற்கொண்டு செயற்பட்டார் என்று குற்றம்சாட்டப்படுகின்றது. இங்கு சாந்தினி குறிப்பிடும் வெளிநாட்டு நிறுவனம் லிஃப்ற் என்கின்ற அமைப்பு. ஜெயானந்தன் இந்த லிஃப்ற் என்ற அமைப்புடனும் நெருக்கமாக உள்ளார். யாழ் பல்கலைக்கழக யுகெ அலுமினி அசோசியேஸன்ஸை உருவாக்க சாந்தி ராகுலேஸ்வரன் போன்ற சிலர எண்ணிய போதும் அதனை நடைமுறைச்சாத்தியமாக்கியது லிஃப்ற் – LIFT என்ற அமைப்பே என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத சிவகுரு ஜெயானந்தனின் நண்பர். அமெரிக்காவில் இருந்து வந்து நின்ற மூவர் இந்நிகழ்வை அரங்கேற்ற முழுமுயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். ஆனால் அவர் தங்களுடைய நோக்கத்தை வெளிப்படையாகக் குறிப்பிடாமல், இந்த அலுமினி அசோசியேஸனை வைத்து லிஃப்ற் என்ற தங்களுடைய அமைப்புக்கு நிதி திரட்டும் முயற்சியை மறைமுகமாக மேற்கொண்டிருந்தனர். அதனையொட்டியே பிரச்சினை உருவானது.

ஆனால் தொடர்ச்சியாக லிஃப்ற் அமைப்புக்கு எதிராக யாழ் பல்கலைக்கழக அலுமினி அசோசியேசன்ஸைச் சேர்ந்த பலரும் கருத்துக்களை வெளியிட்டதும் அதில் நேர்மைத் தன்மை இல்லாததும் லிஃப்ற் அமைப்பு யூகே அலுமினி அசோசியேசன் யுகெ இலிருந்து ஒதுங்க நிர்ப்பந்திக்கப்பட்டது. நவம்பர் 30 கிடைத்த லாபத்தில் பங்கும் வழங்கப்பட வில்லை. ஆனாலும் இது தொடர்பில் தொடர்ந்தும் சந்தேகம் எழுப்பப்படுகின்றது. லிஃப்ற் அமைப்பின் சின்னம் பொறிக்கப்பட்ட சேர்ட்ஷடகள் அலுமினி அசோசியேசன்ஸ் சார்ந்த நிகழ்வில் விற்கப்பட்டது இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தகின்றது. அத்தோடு லிஃப்ற் அமைப்பின் பிரதிநிதியாகக் கருதப்படும் சிவகுரு ஜெயானந்தன் தொடர்ந்தும் யாழ் பல்கைலக்கழக யூகெ அசோசியேசன்ஸ் தலைவராக இருப்பது முரண்பட்ட நலன்கள் கொண்ட செயற்பாடக பார்க்கப்படுகின்றது.

தற்போது யாழ் பல்கலைக்கழக அலுமினி அசோசியேசன்ஸ் யுகெ இன் யாப்பு விதிகளை அமைப்பதற்கு ஒரு குழு உருவாக்கப்பட்டு அக்குழு யாப்பு விதிகளை உருவாக்கி வருகின்றது. அந்த விடயம் யூன் 15 மட்டில் நிறைவடையும் என தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி உருவாக்கப்படும் யாப்பின் பிரகாரம் தற்போது உள்ள அலுமினி அசோசியேசன்ஸ் தற்போதைய செயற்கழு கலைக்கப்பட வேண்டும். புதிய யாப்பின் பிரகாரம் உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டு அதன் செயற்குழுவுக்கான தேர்தல் நடத்தப்பட்டு புதிய செயற்குழு தெரிவு செய்யப்பட வேண்டும்.

1993 முதல் இப்போது வரையான 30 ஆண்டு காலத்தில் யாழ் பல்கலைக்கழக அலுமினி அசோசியேசன்ஸ் யுகெ யை உருவாக்க ஐந்து தடவைகள் முயற்சி எடுக்கப்பட்டதாகத் தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றார் சங்கரப்பிள்ளை முருகையா. எஸ் முருகையா யாழ் பல்கலைக்கழகத்தின் புவியில்துறையில் கற்று விரிவுரையாளராகவும் இருந்தவர்.அவர் மேலும் குறிப்பிடுகையில் “தற்போது யாப்பு தயாரிப்பு வேலைகள் முடிவுக்கு வந்தள்ளது. அதனடிப்படையில் செயற்பட்டு பல்கலைக்கழகத்திற்கும் நாட்டுக்கும் நாங்கள் முன்மாதிரியாகச் செயற்பட வேண்டும”; எனத் தெரிவித்தார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் இன, மத, பிரதேச, சாதிய வேறுபாடுகள் இல்லாமல் இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் கல்வி கற்கின்றனர். அதனால் பிரித்தானியாவில் உருவாக்கப்படும் அலுமினி அசோசியேசன்ஸ் அங்கு கற்ற அனைத்து மாணவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் செயற்படுவதே பொருத்தமானதாக அமையும் என்கிறார் சங்கரப்பிள்ளை முருகையா. மாறாக மற்றையவர்களைப் புறக்கணித்து வடக்கு கிழக்கு தமிழ் மாணவர்களுக்கான அலுமினி அசோசியேசன்ஸ் என்று உருவாக்குவது அரோக்கியமானதாக இராது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் தற்போது கணித விஞ்ஞான பீடங்களில் கற்பவர்களில் 70 வீதமானவர்கள் பெரும்பான்மைச் சமூகத்தினர், கலைப்பீடத்தில் கணிசமான தொகையில் மலையகத் தமிழர்கள் கற்கின்றனர். நாடுமுழுவதும்; இருந்து முஸ்லீம் மக்கள் கற்கின்றனர். இவர்களையெல்லாம் புறக்கணித்து வடக்கு – கிழக்கு தமிழ் மாணவர்களுக்கான அலுமினி அசோசியேசன் என்றமைப்பது அனைவருக்குமான அலுமினி அசோசியேசன் ஒன்று உருவாவதற்கு அத்திவாரம் இடுவதாகவே அமையும் என்பதையும் எஸ் முருகையா தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

கடந்த தேர்தலில் சாந்தி ரதுலோச்சனன் தலைவராக தெரிவு செய்யப்படும் வாய்ப்பு இருந்த போதும் அவர் இறுதி நேரத்தில் வெளியிட்ட நேர்காணலில் தன்னை வல்வெட்டித்துறை வீரப்பெண் என்றும் அதனால் தனக்கு வாக்களிக்கும்படி கேட்டதும் அவரது வாய்ப்பை இழக்கச் செய்ததாக சிலர் தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றனர்.

ஆனால் தற்போது தலைவராக உள்ள சிவகுரு ஜெயானந்தனும் செயலாளர் புனிதா கணேஸ்வரனும் தற்போதைய செயற்குழுவை தொடர முயற்சிக்கின்றனர.; இதுவும் தற்போது அலுமினி அசோசியேசன்ஸ்க்குள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. யாழ் பல்கலைக்கழக அலுமினி அசோசியேசன்ஸ் யுகெ இன் வட்ஸ்அப் குறூப்பில் பதிவு செய்யப்படும் கருத்துக்கள் நாகரீக சமூகம் ஏற்றுக்கொள்ளத் தகாத வகையிலும் அமைந்துவிடுகின்றது என சிலர் தங்கள் அதிருப்தியை தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றனர்.
இது பற்றி கருத்து வெளியிட்டுள்ள அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அருள் பொன்னையா தனது விசனத்தை வருமாறு வெளியிட்டுள்ளார்: ஒரு விழாவை ஏற்பாடு செய்வதும் அதனை திறம்பட நடத்துவதும் இ சிக்கல்கள் வந்தால் உள்வீட்டுக்குள்ளேயே தீர்த்துக் கொளலளவும் முடியாதஇ கல்வி அறிவையும் ஆளுமையையையும் தான் பல்கலைக் கழக கல்வி தந்ததா என்ற கேள்வி எழுவதுடன் வயது என்பது கூட பக்குவத்தை கொடுக்கவில்லையா? என்ற கேள்வியும் எழ வைக்கிறது…

மோதல்கள் தொடர்வது உள ஆரோக்கியத்தையும் நிம்மதியையும் கெடுக்கும். அனேகமானவர்கள் உடல் உள ஆலோக்கியத்தை கட்டாயம் பேணவேண்டிய வயதுக்கு வந்து விட்டீர்கள். ஆவன செய்க.” என அருள் பொன்னையா சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அலுமினி அசோசியேசன் யுகெ விடயத்தை வலிந்து அரசியல் மயப்படுத்தும் போக்கும் துரோகி தியாகி எனக் கன்னம் பிரித்து ஆடும் நிலையும் ஆங்காங்கே தலைதூக்குவதாக சிலர் கவலைகொள்கின்றனர்.

பெண்களின் நாளாந்த வாழ்வை அச்சுறுத்தும் – கர்பணித் தாயின் தலையை வெட்டிக் கொய்யும், அதனைக் கொண்டாடும் காட்டுமிராண்டி மனநிலை !

பெண்களின் நாளாந்த வாழ்வை அச்சுறுத்தும் – கர்பணித் தாயின் தலையை வெட்டிக் கொய்யும், அதனைக் கொண்டாடும் காட்டுமிராண்டி மனநிலை !

நேற்றைய தினம் வவுனியாவில் கணவனால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஆரம்ப பாடசாலை ஆசிரியையும் கர்ப்பணித் தாயுமான சொர்ணலதா விவகாரம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தக் கொலைச் சம்பவம் சமூகத்திற்கு ஒரு மிகப் பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இலங்கையில் தமிழர்கள் பகுதியில் குடும்ப வன்முறையின் உச்ச கட்டமாக இதனைப் பார்க்க வேண்டும். கொலையான பெண் தவறு இழைத்தாரா?அல்லது இழைக்கவில்லையா? என்ற விவாதத்திற்கு அப்பால் அப்பெண்ணை கொலை செய்யும் அதிகாரம் கொலை செய்த ரா ஜூட் என்ற கணவனுக்கு இல்லை.

யுத்த காலம் கண்டிராத கொடூரத்தை தமிழ் பெண்கள் தற்போது அனுபவிக்கின்றனர். புங்குடுதீவு வித்தியா முதல் வவுனியா சொர்ணலதா வரை தமிழ் சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏதும் நிகழவில்லை. மாறாக பெண்களை பாலியல் பண்டங்களாகவும் பிண்டங்களாகவும் நோக்கும் கருத்தியல் தமிழ் தேசிய மனநிலையாக ஆண்கள் மத்தியில் உருவாகி வருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் எந்தச் சந்தர்ப்பத்திலும் பெண்களை கண்ணியக் குறைவாக அணுகவில்லை. ஆனால் பிரபாகரனையும் மாவீரர்களையும் வைத்து அரசியல் செய்யும் அரசியல் தலைவர்களும் பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் அவர்களது பெயரைச் சொல்லும் ரிக்ரொக் விசிலடிச்சான் குஞ்சுகளும் தமிழ் தேசியத்தை தூக்கிப் பிடித்துக்கொண்டு பாலியல் லஞ்சம், பாலியல் சுரண்டல், பெண்களை இழிவுசெய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இந்த தமிழ் தலிபான்கள் தமிழ் மக்களுடைய முன்னேற்றத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். ஒரு கர்பிணித் தாயின் தலையைக் வெட்டிக் கொய்வதும் அவர்களை மாவீரர்களாக்குவதும் இதிலிருந்து தான் ஆரம்பிக்கின்றது.

ஆசிரியையின் படுகொலை விவகாரத்தில் வழமை போலவே சமூக ஊடகங்களில் கருத்து பதிவிடும் பெரும்பாலான தமிழ் ஆண்கள் கொலை செய்த கணவனை மாவீரனாக புகழ்கிறார்கள். வக்கிரமான கருத்துக்களை பதிவிடுகிறார்கள். மேலும் மற்றைய ஆண்களை கத்திகளை தீட்டி தயாராக வையுங்கள் என உற்சாகப்படுத்துகிறார்கள். கொலையான ஆசிரியை தன்னை விட வயது குறைந்த இளைஞர் ஒருவரோடு உறவில் இருந்தமையே இக்கொலைக்கான பின்னணி என சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஏதாவது உண்மை உள்ளதா ? அல்லது வழமையாக சில கணவன்களுக்கு இருப்பது போன்ற சந்தேக புத்தியில் வந்ததா? அல்லது படுகொலை செய்யப்பட்ட பெண் தொடர்பில் குறித்த இளைஞன் பரப்பிய கிசுகிசுவா ? என்ற எவ்வித விசாரணையும் இல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிரான தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

இந்த ஆண்மையவாதச் தமிழ் தலிபான்கள் சொல்வது போல் திருமண உறவைத் தாண்டிய உறவைப் பேணுபவர்களின் தலையை வெட்டிக் கொய்யலாம் என்றால் இந்த சமூகவலைத் தளங்களில் புகழாரம் சூட்டும், மற்றும் பல நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஆண்களின் தலைகள் பல தடவை கொய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தப் படுகொலை விவகாரம் வெறுமனே திருமண உறவை தாண்டிய உறவு தொடர்பில் ஏற்பட்ட சிக்கல் என கடந்து செல்ல முடியாது. திருமண உறவில் நம்பிக்கைத் துரோகம் செய்யும் துணையை கொலை செய்து தான் தண்டிக்க வேண்டும் என்று பாதிக்கப்படுவோர் கிளம்பினால் பொலிஸ் ஸ்ரேசன் வாசலில் நூற்றுக்கணக்கான ஆயிரக் கணக்கான உயிரற்ற மனித தலைகள் தான் உருளும்.

பொதுவில் ஒரு ஆண் திருமண உறவில் இருந்து கொண்டு வேறொரு பெண்ணுடன் உறவை ஏற்படுத்தும் போது அது சமூகத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்துவதில்லை. அந்த விவகாரம் மானம் போன இழிச் செயலாக கருதப்படுவதில்லை. ஆண் என்றால் அப்படித்தான் ”சேறு கண்ட இடத்தில் மிதித்து தண்ணீர் கண்ட இடத்தில் கழுவுவான்” என சமூகம் சமாதானம் கூறுகிறது. மறுபுறமாக பெண் என்றால் “சேலை முள்ளில் விழுந்தாலும், முள் சேலையில் விழுந்தாலும் சேலை தான் கிழியும்“ என பெண்களை பயமுறுத்தி பெண்கள் மீதே பழி போடுகிறார்கள். வவுனியாவில் கொலையான கர்ப்பணித் தாய் மீதான அவரது கொலை வெறித் தாக்குதல் வரலாற்றுக்கு முந்திய கடைத்தனம் மிருகத்தனமானம் நிறைந்தது. இதனை வரவேற்பவர்கள் மிகமோசமான அடிப்படைவாதிகள். இவர்கள் நவீன சமூகத்தில் வாழத் தகுதியற்ற மனிதர்கள். இது பெண்களை உடமையாக பார்க்கும் ஆணாதிக்க கருத்தியலின் மனப்பாங்கின் வெளிப்பாடாகும். கொடூரமாக கொலை செய்யப்பட்ட கர்ப்பிணித் தாய்க்காக குரல் கொடுக்காத சமூகம் அப்பெண்ணின் நடத்தையே அவர் கொலையானதற்கு காரணம் என அவதூறு பேசுகிறது. இதுவொரு இரட்டைக்கொலை.

சமீபத்தில் மட்டக்களப்பில் பட்டப்பகலில் வீட்டில் தனியே இருந்த 37 வயது குடும்பப் பெண் விதுஷாவும் மர்மமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளி அல்லது கொலையாளிகள் கண்காணிப்புக் கமராப் பதிவு றிசீவரை எடுத்துச் சென்றுள்ளனர். கொலை நடந்து நாலைந்து நாட்கள் கடந்தும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கொலையாளிகள் கொலை செய்யப்பட்டவருக்கு தெரிந்தவராக இருக்க வாய்ப்பு உண்டு. கொலைக்கான பின்னணியும் மர்மமாகவேயுள்ளது. பெரும்பாலும் பெண்கள் வீட்டு வன்முறைகளில் தமது கணவன் மற்றும் நெருங்கிய உறவினர்களாலேயே கொல்லப்படுகின்றனர்.

உலகமயமாக்கமும் பரந்துபட்ட இணையப் பயன்பாடும் பெண்கள், சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளை அதிகரித்திருக்கின்றன. கட்டற்ற இணையப் பயன்பாடு பெண்கள் மீதான விரோத மனப்பாங்கை மற்றும் கருத்தியலை கட்டியெழுப்ப பேருதவி புரிகின்றன. தற்போதைய நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பெண்களை நிர்வாணமாக்கி அவர்களது படங்களை பகிர்வதையும் அவர்களுக்கு எதிராக கருத்துக்களைப் பதிவதையும் தமிழ் தேசியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்நின்று செய்கின்றனர். வேழமாளீதன் போன்ற பாலியல் லஞ்சம் கோருபவர்களை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தமிழரசுக் கட்சியின் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளராக நியமித்துள்ளார். இவர்களே வெவ்வேறு பெயர்களில் தங்கள் ஆதரவாளர்கள் மூலம் வலைத்தளங்களை முகநூல்களை உருவாக்கி பெண்கள் மீதான தங்களுக்கு பிடிக்காதவர்கள் மூலமான தாக்குதல்கலை தமிழ் தேசியத்தை முன்னிலைப்படுத்தி மேற்கொள்கின்றனர்.

தனியார் கல்வி நிறுவனத்தின் கலைவிழாவில் நடனமாடிய மாணவியை பாலியல் தொழிலாளியாக சித்தரிக்கும் ஊழல் ஒழிப்பு அணி வன்னியின் அட்டூழியம். நிஜ உலகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்கொடுமைகள், ஒடுக்குமுறைகள், வீட்டு வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகளுக்காக மேலாக இணையத்தில் மோசமான கருத்தியல் ரீதியான வன்முறைகள் நாள்தோறும் நடக்கின்றன.

எம்பி அர்ச்சுனா இராமநாதனின் பினாமிகளால் நடத்தப்படும் ஊழல் ஒழிப்பு வன்னி அணி என்னும் போலி முகநூலின் பின்னால் மறைந்து கொண்டுள்ள ஒரு பாலியல் வக்கிரம் கொண்ட ஆண்மையவாத கூட்டம் சமூகவலைத்தளங்களில் தமிழ்ப் பெண்கள் மீதான மோசமான தாக்குதலை மேற்கொள்கின்றது. இவர்களே வெவ்வேறு பெயர்களில் தங்கள் ஆதரவாளர்கள் மூலம் வலைத்தளங்களை முகநூல்களை உருவாக்கி பெண்கள் மீதான தங்களுக்கு பிடிக்காதவர்கள் மூலமான தாக்குதல்கலை தமிழ் தேசியத்தை முன்னிலைப்படுத்தி மேற்கொள்கின்றனர். ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெண்களை நிர்வாணமாக்கி அதன் மூலம் விளம்பரம் தேடுகின்றனர்.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக காட்டும் எதிர்வினை தமிழ்ச் சமூகத்தில் மிக அசமந்தமாகவே உள்ளது. இந்தப் போக்கினை சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழும் போதும் காணலாம். சமீபகாலங்களாக பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகள் அல்லது இளம்பெண்கள் தொடர்பில் காட்டும் கரிசனத்தை விட சம்பந்தப்பட்ட குற்றம் சுமத்தப்பட்ட ஆண்களை பாதுகாக்கும் சமூக மனப்பாங்கே காணப்படுகின்றது. இந்த பாரபட்சமான வக்கிரமான மனப்பாங்கு ஆண்மையவாத அரசியல், சமூக, சமய மற்றும் கலாச்சார கருத்தியலின் விளைவாகும். இதனை கொழும்பு கொட்டாஞ்சேனையில் ஏப்பிரல் 29 ஆம் திகதி 7 ஆவது மாடியிலிருந்து குதித்த இறந்த மாணவி டில்ஷி அம்ஷிகாவின் தற்கொலை விடயத்திலும் கணவனால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சொர்ணலதா விடயத்திலும் சமூக ஊடகங்களின் பின்னூட்டல்களில் இடப்படும் கருத்துக்களிலிருந்து அப்பட்டமாக தெரிகிறது.

பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்கள் – தெரிவாகாத மூன்று லட்சம் மாணவர்களுக்குமான வழிகாட்டி – #Pathfinde

பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்கள் – தெரிவாகாத மூன்று லட்சம் மாணவர்களுக்குமான வழிகாட்டி – #Pathfinde

சமூக செயற்பாட்டாளர் மருத்துவ கலாநிதி அருள் கோகிலன் உடன் ஒரு கலந்துரையாடல்

புலிகளின் கட்டுப்பாடு மிக கடுமையாக இருந்தது. தங்கள் திசைமாறும் எனக் கருதப்படும் வேறு தமிழர்ச் சிறுகட்சிகள், அமைப்புகள், தனிநபர்கள் கூட ஒழிக்கப்பட்டனர்.

புலிகளின் கட்டுப்பாடு மிக கடுமையாக இருந்தது. தங்கள் திசைமாறும் எனக் கருதப்படும் வேறு தமிழர்ச் சிறுகட்சிகள், அமைப்புகள், தனிநபர்கள் கூட ஒழிக்கப்பட்டனர்.

இதனால் பல தமிழர் இயக்கங்கள் அழிக்கப்பட்டன (ஊர்மாறன், TELO, EPRLF, PLOTE ஆகியவை). இதுவே சகோதரப்படுகொலைக்கு வழிவகுத்தது — ஒரு மக்கள் போராட்டம் பலவீனமாக்கப்பட்டு, ஒரே ஆதிக்கம் கொண்ட இயக்கமாக மாற்றப்பட்டது.