செய்திகள்

செய்திகள்

செய்திகள்

பாடசாலை மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு !

பாடசாலை மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு !

மட்டக்களப்பு கிரான்குளம் பாடசாலை ஒன்றில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்விகற்று வரும் 16 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் வெள்ளி ஏப்ரல் 25 ஆம் திகதி பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவி வழமைபோல சம்பவ தினம் பாடசாலைக்குச் சென்று கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்து நிலையில் வகுப்பறையில் திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து மாணவியை செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று,
அங்கிருந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

 

சிறுவனின் உயிரைப் பறித்த கிண்ணியா குறிஞ்சாகேணி பாலம் !

சிறுவனின் உயிரைப் பறித்த கிண்ணியா குறிஞ்சாகேணி பாலம் !

கிண்ணியா குறிஞ்சாகேணி பாலத்தில், வியாழக்கிழமை 24 ஆம் திகதி மாலை குளிக்கச் சென்ற 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி மரணித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. மூன்று சிறுவர்கள் குளிக்கச் சென்ற வேலையில் இச் சம்பவத்தில் இரு மாணவர்கள் தப்பித்து கரை ஏறியுள்ளதாகவும், குறித்த மாணவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிர் இழந்தவரின் ஜனாசா கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்ணனை கொலை செய்து விட்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த தம்பி !

அண்ணனை கொலை செய்து விட்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த தம்பி !

பாணந்துறை பிரதேசத்தில் தனது மூத்த சகோதரனை தாக்கி கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் தம்பி சரணடைந்துள்ளார். இரவு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இந்த தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பின்வத்த மீகஹா கோவில வீதியைச் சேர்ந்த 39 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், தம்பி தனது கையால் மூத்த சகோதரனின் தலையில் அடித்ததாகவும், தாக்கப்பட்ட மூத்த சகோதரர் தரையில் விழுந்து தலை மோதியதால் மரணம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கிணற்று தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் !

கிணற்று தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் !

யாழில் கீரிமலை – கூவில் பகுதியைச் சேர்ந்த டேவிட் குணவதி என்ற குடும்ப பெண்ணொருவர் நேற்றையதினம் எப்ரல் 24 ஆம் திகதி வீட்டு கிணற்று தொட்டியடியில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இறந்த உடல் சுகயீனம் ஏற்பட்டதால் மருந்து வாங்குவதற்காக கணவனை கடைக்கு அனுப்பியுள்ளார். கணவன் மருந்து வாங்கி கொண்டு வீடு வந்தவேளை மனைவி தண்ணீர் தொட்டியடியில் சடலமாக காணப்பட்டதை அவதானித்துள்ளார். அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக உடற்கூற்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

தாக்குதலை ஆரம்பித்த பாகிஸ்தான் – இந்தியா!

தாக்குதலை ஆரம்பித்த பாகிஸ்தான் – இந்தியா!

இந்திய – பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பந்திபோராவில் பயங்கரவாதிகள், இந்திய பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான் இராணுவத்திற்கு இந்திய இராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் சில இடங்களில் சண்டை நடைபெற்று வருவதால் பதற்றம் நிலவுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அகிலன் முத்துக்குமாரசுவாமி எம். ஏ. சுமந்திரனிடம் பகிரங்க மன்னிப்பு

அகிலன் முத்துக்குமாரசுவாமி எம். ஏ. சுமந்திரனிடம் பகிரங்க மன்னிப்பு

கனடாவையும் தாயகத்தையும் தளமாகக் கொண்டு வெளிவரும் புதிய சுதந்திரன் என்ற இலத்திரனியல் நாளிதழின் ஆசிரியரான அகிலன் முத்துக்குமாரசுவாமி இலங்கை தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாடு வழக்கு தொடர்பானவொரு செய்தியை அவதூறாக பிரசுரித்திரிந்தது. அச்செய்திக்கு எதிரான திருகோணமலை நீதிமன்றில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்று நடந்து வந்தது.

அந்த வழக்கிலேயே இருதரப்பையும் சமாதனமாக போகும்படி நீதிபதி கேட்டுக் கொண்டார். அதன்படி அகிலன் முத்துக்குமாரசுவாமி நீதிமன்றில் எம்.ஏ. சுமந்திரனிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார். மேலும் இந்த பகிரங்க மன்னிப்பு தொடர்பில் அகிலன் முத்துக்குமாரசுவாமி தனது ‘ புதிய சுதந்திரன்’ பத்திரிகையில் ஒரு வாரத்திற்குள் செய்தி வெளியிட வேண்டும் என்று கூறி நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். சுமந்திரனும் அகிலனின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டார்.

இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிற்கு ரணில் விக்ரமசிங்க முன்னிலையாகிறார்

இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிற்கு ரணில் விக்ரமசிங்க முன்னிலையாகிறார்

முன்னாள் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசாநாயக்க மீதான இலஞ்ச ஊழல் புகார் குறித்த விசாரணைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைக்கப்பட்டிருந்தார். வருகிற திங்கட்கிழமை 28 ஏப்பிரல் ரணில் விக்ரமசிங்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்னிலையாவதாக தனது சட்டத்தரணி மூலம் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

சாமர சம்பத் தனது பதவிக்காலத்தில் மாகாணசபையின் வங்கிக் கையிருப்பில் இருந்து பணத்தைப் பெற்றுள்ளார். பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வாங்க என பெற்ற நிதியை தனது தனிப்பட்ட தேவைகளுக்கு செலவு செய்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சாமர சம்பத் தற்போது கைதாகி விளக்கமறியலில் உள்ளார்.

சூப்பார் கூட்டு: எதிரியின் எதிரி எனக்கு நண்பன்: Bar விக்கி வீட்டோடு சுப்ரா மோசடி சரவணபவன் சைக்கிளோடு கூட்டு !

சூப்பார் கூட்டு: எதிரியின் எதிரி எனக்கு நண்பன்: Bar விக்கி வீட்டோடு சுப்ரா மோசடி சரவணபவன் சைக்கிளோடு கூட்டு !

யாழ் ரணில் விக்கிரமசிங்க – காமினி திஸ்ஸநாயக்க கோஸ்டி 1981 இல் யாழ் நூலகத்ததை எரிப்பதற்கு சரவணபவனின் தந்தை வீட்டில் தங்கியிருந்தே அக்காரியத்தைச் செய்தனர். அன்றைக்கு சரவணபவனின் தந்தை ஈஸ்வரபாதம் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர். அதன் பின் சுப்பிரா பினான்ஸ் நிறுவனத்தை நடாத்தி ஏழை மக்களின் நிதி வைப்பீட்டைக் கொள்ளையடித்து மக்களைக் கண்ணீரில் தவிக்க விட்டனர். பிறகு மாம்பழம் கொண்டு சென்று மகிந்த ராஜபக்சவைச் சந்தித்தனர். இப்போது பொன்னம்பலம் கஜேந்திரகுமாரோடு சேர்ந்து தமிழ் மக்களுக்கு உரிமை பெற்றுக் கொடுக்கப் போவதாக வீறுகொண்டு புறப்பட்டுள்ளார்.

தமிழரசு எம் ஏ சுமந்திரன் சரவணபவனுக்கு சீற்கொடுக்காததால் தமிழரசின் சுமந்திரனின் எதிரியான கஜாவோடு சரவணபவன் கோஸ்டி இணைந்தது. எதிரியின் எதிரி தனக்கு நண்பன் என்ற வகையில் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யாழ் உதயனின் ஆசிரியர் ஈஸ்வரபாதம் சரவணபவனை கட்சிக்குள் உள்வாங்கினார். இங்கு கொள்கையும் கிடையாது போட்பாடும் கிடையாது.

இதே அடிப்படையில், உள்ளூராட்சித் தேர்தலில் மான் சின்ன தமிழ் மக்கள் கூட்டணி தாம் போட்டியிடாத தொகுதிகளில் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு வழங்க ஆலோசித்து வருகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ் மாநகரசபை மேயர் கனவு நனவாக முடியாத நிலையில் வி மணிவண்ணன் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு கொடுப்பது தொடர்பில பொதுச் செயலாளர் எம். ஏ. சுமந்திரனுடன் கலந்துரையாடல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மணிவண்ணன் – பார்த்தீபன் கோஸ்டி கஜேந்திரகுமாரோடு காலம் தள்ள முடியாது, தங்களை ஓரம் கட்டுகின்றார்கள் என்ற அடிப்படையில் கட்சியிலிருந்து பிரிந்தனர்.

இங்கும் கொள்கை கோட்பாடு கிடையாது. எதிரியின் எதிரி நண்பண் என்ற அடிப்படையில் தன்னுடைய எதிரி கஜேந்திரகுமார். கஜேந்திரனின் எதிரி சுமந்திரன், என்பதால் மணிவண்ணன் தமிழரசின் சுமந்திரனுக்கு மணி அடிக்கிறார். ஆனால் சுமந்திரன் பார் விக்கியின் எதிரியாகவும் இருப்பதால் கொஞ்சம் சுணக்கம்.

தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சித் தேர்தலிலும் வடக்கு கிழக்கில் பெரும்பான்மை பெறுவதை தடுக்க தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் முத்தரப்பு, பலதரப்பு மற்றும் தனித்தரப்பு கூட்டுக்கள் என பெரிய அரசியல் சதுரங்கமே ஆடுகின்றன.

எவ்வாறாயினும் முன்னாள் நீதியரசர் பார் புகழ் விக்கினேஸ்வரனை மணிவண்ணன் குழுவினர் தமிழரசுக் கட்சியை ஆதரிக்கும் விடயத்தில் தாஜா பண்ண பெரும் பிரயத்தனம் செய்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. தமிழர் உரிமை தமிழ் தேசியம் என்பதெல்லாம் தங்களுடைய அரசியல் வியாபாரத்திற்கு கொடுக்கின்ற பெயர்கள். தமிழ் மக்கள் தொடர்ந்தும் கீழ்நிலையில் இருக்க வேண்டும் அவர்களை வைத்து தங்கள் அரசியல் வியாபாரத்தை வளர்த்தெடுத்து நல்ல கார்களும் காணிகளையும் வாங்கி தங்கள் பரம்பரையை வளர்க்க வேண்டும். கள்ளக் காணி உறுதிகளை திறப்படச் செய்யும் இந்தச் சட்டத்தரணிகள் கும்பலுக்கு உள்ளுராட்சி வேட்புமனுக்களை ஏன் ஒழுங்காகப் பூர்த்தி செய்து கொடுக்க முடியவில்லை. ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரியில்லை என்பது போல் பின்னர் தங்களுடை ஜனநாயகத்தை மறுப்பதாக ஒரு புலம்பல் வேறு.

 

ஆறு திருமுருகனின் துர்க்காபுரத்தில் யுவதி தற்கொலை ! ஆனால் எதுவுமே நடக்காதது போல் தெல்லிப்பளையில் நூல் வெளியிடுகின்றார் – காவி மாபியா !

ஆறு திருமுருகனின் துர்க்காபுரத்தில் யுவதி தற்கொலை ! ஆனால் எதுவுமே நடக்காதது போல் தெல்லிப்பளையில் நூல் வெளியிடுகின்றார் – காவி மாபியா !

சிவபூமி அறக்கட்டளையின் தலைவரான ஆறு திருமுருகனால் நடத்தப்படும் துர்க்காபுரம் மகளிர் இல்லத்தில் மாணவியொருவர் கடந்த வியாழக்கிழமை ஏப்பிரல் 24 ஆம் திகதி தற்கொலை செய்துள்ளார். இறந்த யுவதியின் சடலம் யாழ்ப்பாண போதானா வைத்தியசாலையில் ஊடற் கூற்று பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. தெல்லிப்பளையிலுள்ள மகளிர் விடுதியில் 22 வயதான யுவதி தவறான முடிவு எடுத்து உயிரை மாய்த்ததாகவே பெரும்பாலான ஊடகங்களில் செய்திகள் கசிய விடப்பட்டுள்ளன. ஆனால் இச்சம்பவம் ஆறு திருமுருகனின் அறக்கட்டளையான சிவபூமியால் நிர்வகிக்கப்படும் துர்க்காபுரத்தில் இடம்பெற்றது என்ற தகவலை ஊடகங்கள் வெளியிடவில்லை.

இறந்த யுவதியின் சகோதரியும் தெல்லிப்பளை துர்க்காபுரம் மகளிர் இல்லத்திலேயே தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆறு திருமுருகனைக் காப்பாற்ற விடுதியின் பெயர் உட்பட ஏனைய விடயங்கள் இருட்டடிப்புச் செய்யப்படுவதாக தெல்லிப்பளைப் பிரதேச மக்கள் தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றனர். ஆனால் அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறாதது போல் மறுநாள் முன்னாள் யாழ் பல்கலையின் துணைவேந்தர் சண்முகலிங்கனின் நூலை ஆறு திருமுருகன் வெளியிட்டு வைத்தார். இந்நிகழ்வு யுவதி தற்கொலை செய்து கொண்ட துர்க்கா இல்லத்திற்கு அருகாமையிலேயே நடந்தது. பேராசிரியர் சண்முகலிங்கன் துர்க்கை அம்மன் ஆலயத்தின் மலரில் ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டு பேராசிரியரானது தனிக்கதை. யாழ் பல்கலைக்கழகம் தரம்தாழ ஆரம்பித்தன் ஆரம்பப் புள்ளி பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை ஆறு திருமுருகன் சண்முகலிங்கன் கூட்டே.

மலையக இளம்பெண்களை அழைத்து வந்து அவர்களை கண்ணியமாக வளர்க்கின்றோம் எனக் கூறி பெரும் தொகையான நிதியை வெளிநாடுகளில் தனிப்பட்டவர்களிடம் இருந்தும் ஆலயங்களில் இருந்தும் பெற்று வருகின்றார் ஆறு திருமுருகன். ஆனால் அண்மையில் இவருடைய துர்க்காபுரத்தில் மலையக மாணவிகளை இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்தியது வெளிவந்தது. இது பற்றி தேசம்நெற் விரிவான செய்திகளை வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்கொலை செய்யுமளவிற்கு துர்க்கா புரம் மகளிர் விடுதியில் என்ன பிரச்சினையுள்ளது. இறந்த யுவதியின் குடும்பப் பின்னணி குறித்தும் எந்தவிதமான உத்தியோக பூர்வ தகவல்களையோ விளக்கத்தையோ துர்க்காபுரம் மகளிர் இல்ல நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இதுவரை தெரிவிக்கவில்லை. பொறுப்புக் கூறும் ஆறு திருமுருகன் இந்த விடயத்திலும் வழமை போலவே மௌனம் சாதிக்கிறார்.

ஏற்கனவே மலையகத்திலிருந்து அழைத்து வரப்பட்டு துர்க்காபுரம் மகளிர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இளம் பெண்கள் குளிக்கும் இடத்தில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டிருந்தமை தொடர்பில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. மகளிர் இல்லத்தில் பெண்பிள்ளைகள் குளிக்கும் இடத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கமராக்களால் சிறுமிகள் குளிப்பதும், உடைமாற்றுவதும் பதிவுசெய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அத்துடன் அவ்வாறான பதிவான காட்சிகளும் இணையத்தில் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த விடயத்தில் அப்போதைய ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் விசாரணைகளுக்கு உத்தரவிட்டதாக முதலில் செய்திகள் வெளியாகியிருந்தன. பின்னர் ஆறு திருமுருகனின் அரசியல் செல்வாக்கினால் இந்த விடயம் நீர்த்துப்போக வைக்கப்பட்டது. ஆளுநர் சாள்ஸ்சும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.

கடந்த வருடம் கண்காணிப்பு கமரா விடயம் ஒழுங்காக கையாளப்பட்டிருந்தால் இந்த உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாம். தெல்லிப்பளை துர்க்காபுரம் அப்பாக்குட்டி தங்கம்மா பராமரிப்பில் இருந்த போது உள்ள நிலமை தற்போது இல்லை எனக் கூறப்படுகிறது.

ஆறுதிருமுருகன் போன்ற யாழ் வேளாள இந்து ஆண்மையவாத தலைமைத்துவத்தின் கீழ் ஒரு மகளிர் இல்லம் இயங்குவது துரதிர்ஷ்டவசமானது என்கின்றனர் பெண்ணுரிமைவாதிகள். வேலியை உயர்த்திக் கட்டி பெண்களை அடுப்படியில் இருத்தி யாழ்ப்பாணக் கலாச்சாரத்தை எப்படி பாதுகாக்கலாம் என கட்டுரை எழுதியவர் ஆறு திருமுருகன் என்ற பிற்போக்குவாதியாவார்.

புலம்பெயர் தமிழர்களிடமிருந்து கோடிக்கணக்கான நன்கொடைகளை ஆறுதிருமுருகன் வசூலிக்கின்றார். பல அறக்கட்டளைகளை நடத்தி வரும் ஆறுதிருமுருகனிடம் குவியும் நிதி நன்கொடைகளுக்கு எந்தவிதமான கண்காணிப்புக்களும் மேற்பார்வையும் கிடையாது.

ஆறுதிருமுருகனால் திரட்டப்படும் பணத்தை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டத்திற்கு செலவு செய்வதைக்காட்டிலும் சிவபூமி மற்றும் திருக்குறள் வளாகம் என பகட்டுக்கு விரையமாக்கப்படுகிறது. கலாச்சாரம், பண்பாடு மற்றும் சமயத்தை வளர்க்கிறோம் என மக்கள் பசிபோக்க வேண்டிய பணம் விரையமாக்கப்படுகிறது.

யார் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் அவர்களுடன் நெருக்கத்தை ஆறு திருமுருகன் ஏற்படுத்திக் கொள்வார். அதன் மூலம் தன்னுடைய ஊழலை மறைத்துக் கொண்டு காரியத்தைச் சாதித்துக் கொள்வார். அந்த வகையில் தற்போதைய வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகத்துடனும் ஆறுதிருமுருகன் நெருக்கம் காட்டுகிறார். கடந்த வருடம் மாவிட்டபுரத்தில் திருக்குறள் வளாகம் திறப்பு விழாவில் ஆளுநரும் வடக்கு மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. அரச அதிகாரத்தில் உயர்மட்டங்களில் உள்ளவர்கள் இவ்வாறான சந்தேகநபர்களை வளர்த்துவிடுவதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். தேசிய மக்கள் சக்திப் பிரதிநிதிகள் ஆறுதிருமுருகன், சிவபூமி அறக்கட்டளை விடயங்களில் விலத்திச் செயற்படுவது மிக அவசியம்.

துர்க்காபுரம் மகளிர் இல்லத்தில் இளம் யுவதி தற்கொலை செய்துகொண்டுள்ளமையை சந்தேக மரணமாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தற்கொலை விவகாரத்தில் சுயாதீனமான விசாரணைகள் எந்தவிதமான அரசியல் அழுத்தங்களுக்கும் இடம் கொடுக்காமல் முன்னெடுக்கப்பட வேண்டும். துர்க்காபுரம் மகளிர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதத்தை அரசாங்கத்திடமிருந்து பெற வேண்டும் .

நாட்டின் எப்பாகத்திலும் இயங்கும் சிறுவர், பெண்கள் மற்றும் முதியோர் விடுதிகள் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய அரசாங்கத்தின் நேரடியான கண்காணிப்பு முகாமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும். தான்தோன்றித்தனமாக பராமரிப்பு விடுதிகளை யாரும் விதிமுறைகளுக்குட்படாமல் நடத்த அனுமதிக்க கூடாது. அந்த வகையில் தெல்லிப்பளை துர்க்காபுரம் இல்ல இளம்யுவதியின் தற்கொலையின் பின்னணி மற்றும் காரணம் குறித்து முழுமையான விசாரணை அறிக்கை வெளிப்படுத்தப்பட வேண்டும்.

மேலும் சிவபூமி அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படும் வயோதிபர்கள் சரியான முறையில் கவனிக்கப்படுவதில்லை, அவர்கள் கண்ணியமாக நடத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் தேசம்நெற்க்கு தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அங்கு பராமரிக்கப்படுபவர்கள் இலவசமாக சேவைகளைப் பெறவில்லை. அவர்களிடமிருந்து அவர்களுடைய ஓய்வூதியப் பணம் மற்றும் புலத்திலிருந்து அவர்களுடைய உறவினர்களிடமிருந்தும் பணம் பெற்றே இந்த வயோதிபர்கள் பராமரிக்கப்படுகின்றனர். மேலும் அவர்களுடைய சொத்துக்களையும் ஆறு திருமுருகன் அவர்களுக்கு அழுத்தங்களைக் கொடுத்து உரிமைமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளது.

சிவபூமி அறக்கட்டளை ஆறு திருமுருகனின் நெருங்கிய குடும்பத்தவர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. கல்லாநிதியான இவர் ஸ்கந்வரோதயாக் கல்லூரி அதிபரானதும் கலாநிதிப் பட்டம் பெற்றதும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அணைவினாலேயே. அதன் பின் அதிபர் பதிவியிலிருந்தும் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு வெளியேறினார். அவருடைய தற்போதைய சொத்து மதிப்புப் பற்றிய கேள்விகளும் தற்போது எழுப்பப்டுகின்றது. காவி மாபியா ஆறு திருமுருகனின் சிவபூமி துப்பரவு செய்யப்பட வேண்டும்.

தன்னுடைய கால் ஏக்கர் காணிக்காக செஞ்சோலையை நடத்தும் குமரன்பத்மநாதனுக்கு எதிராகவும் அங்குள்ள குழந்தைகளுக்கு எதிராகவும் அபாண்டமான பழியை ஒரு பெண் வெளியிட்ட போது அனைத்து ஊடகங்களும் அதனைப் பிரசுரித்தன. செஞ்சோலையை நித்தியானந்தாவின் கைலாஸ்க்கு ஒப்பிட்டு அங்கு தங்கியுள்ள குழந்தைகளைக் கொச்சைப்படுத்தினார் அக்காணிச் சொந்தக்காரி. ஆனால் குளியல் அறையில் குளிக்க விடாமல் வெட்டவெளியில் நீராடவிட்டு சிசிரிவி இல் அதனைப் பதிவு செய்தது பற்றியோ இளம் யுவதி தற்கொலை செய்தது பற்றியோ யாழ் ஊடகங்கள் சமூக வலைத்தளங்கள் செய்தி வெளியிடவில்லை. யாழ் உதயன் பத்திரிகை மட்டும் ஒரு சிறு பதிவைப் வெளியிட்டு இருந்தது. ஆறு திருமுருகனையும் துர்க்கா புரத்தையும் சிவபூமி அறக்கட்டளையையும் தொடர்ந்தும் குற்றங்களை இழைக்க இந்த ஊடகச்செயற்பாடுகளும் துணை போகின்றன.

 

கனடா விமான நிலைய துப்பாக்கிச்சூடு தொடர்பில் அல்பிரட் துரையப்பா பேரன் நிஸான் துரையப்பா விளக்கம்

கனடா விமான நிலைய துப்பாக்கிச்சூடு தொடர்பில் அல்பிரட் துரையப்பா பேரன் நிஸான் துரையப்பா விளக்கம்

கனடாவில் பியர்சன் விமான நிலையத்தில் பொலிஸார் சுட்டதில் 30 வயதுடைய நபர் கொல்லப்பட்டுள்ளார். விமானநிலைய புறப்பாடு பகுதி ஒன்றில் இரண்டு தொடக்கம் மூன்று நபர்களை உள்ளடக்கிய சிறு குழுவினருக்கிடையேயான முரண்பாட்டின் போது துப்பாக்கியை பயன்படுத்த முற்பட்ட வேளை அதனை தடுக்க பொலிஸார் சுட்டதாக கூறப்படுகிறது.

விமானநிலையத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றதாகவும் அதன் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் பீல் பிராந்திய தலைமை பொலிஸ் அதிகாரி நிசான் துரையப்பா தெரிவித்துள்ளார். இவர் முன்னாள் யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவின் பேரனாவார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிலையத்தினை அண்டிய சில வீதிகள் மூடப்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.