வெளிநாட்டுச் செய்திகள்

வெளிநாட்டுச் செய்திகள்

ஆயிஷா கத்தாபி – லிபியாவின் முன்னாள் தலைவர் கத்தாபியின் மகள் – ஈரானிய மக்களுக்கு அனுப்பிய செய்தி:

ஆயிஷா கத்தாபி – லிபியாவின் முன்னாள் தலைவர் கத்தாபியின் மகள் – ஈரானிய மக்களுக்கு அனுப்பிய செய்தி:

🇮🇷 ஓ, வலிமையும் தைரியமும் கொண்ட ஈரான் மக்களே! 🇮🇷

எங்கள் தேசம் துரோகத்தின் வழியாக அழிவுக்குள்ளான தேசம்.

இது வெளிப்படையான எதிரிகளால் அல்ல, மேற்கு நாடுகளின் புன்னகைகளாலும் போலியான வாக்குறுதிகளாலும் ஏற்பட்ட அழிவு.

நான் எச்சரிக்கிறேன்: மேற்குலக நாடுகளின் இனிமையான வார்த்தைகளையும் பொய்யான வாக்குறுதிகளையும் நம்ப வேண்டாம்.

அவர்கள் என் தந்தையிடம் சொன்னார்கள்:

“உங்கள் அணு மற்றும் ஏவுகணை திட்டங்களை விலக்கினால், உலகத்தின் எல்லா வாயில்களும் உங்களுக்காக திறக்கப்படும்.” என்று.

என் தந்தை, நல்ல நம்பிக்கையுடன், பேச்சுவார்த்தையின் பாதையைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் அதற்குப் பின் ஏற்பட்டது – கொடூரமான நேட்டோ வான்வழி தாக்குதல்கள்.

எங்கள் நாடு இரத்தமும் சாம்பலுமாக மாறியது.

எங்கள் மக்கள் அடிமைகளாக ஏழைகளாக வாழ்விடமற்ற அகதிகளாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஓ, என் ஈரானிய சகோதர சகோதரிகளே!

இந்த நரிகளை நம்பி சமாதானத்தின் பக்கம் சென்றால் அழிவும் பிளவுகளும் துக்கமும்தான் மிஞ்சும்.

ஒரு நரியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது ஆடுகளை காப்பாற்றாது. அது தனது அடுத்த உணவுக்கான நேரத்தை நிர்ணயிக்க மட்டுமே உதவும்.

மெய்பொருள் காணுமா யாழ் பல்கலைக்கழக அலுமினி அசோசியேசன் யுகெ ?

மெய்பொருள் காணுமா யாழ் பல்கலைக்கழக அலுமினி அசோசியேசன் யுகெ ?

1970 பதுக்களில் யாழில் பல்கலைக்கழகம் அமைவதற்கு எதிராக தமிழ் தேசியம் போர்க்கொடி தூக்கியது. தமிழரசுக் கட்சி யாழில் பல்கலைக்கழகம் உருவாவதை எதிர்த்தது. தமிழ் காங்கிரஸ் யாழில் இந்து பல்கலைக்கழகம் உருவாக வேண்டு; என்று கோரினர். ஆனால் பொன்னம்பலத்தின் குடும்பத்தில் யாரும் இந்துநாகரீகம் கற்கவில்லை. ஆனால் இப்போதும் தாங்கள் இந்துநாகரீகத்தை வளர்க்க யாழில் உள்ள ஜனாதிபதி மாளிகையை தருமாறு கோருகின்றனர். ஆனால் இந்துநாகரீகமும் கலைப்பீடத்தில் படித்தவர்களும் வேலை வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர். அக்காலத்தில் இடதுசாரிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது சிறிலங்கா சுதந்திரக் கட்சி. ஆட்சியிலிருந்த இடதுசாரிகளின் தூண்டுதலால் 1974இல் உருவாக்கப்பட்டது தான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

அன்று யாழில் பல்கலைக்கழகம் உருவாவதற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய யாழ் தமிழ் தேசியம் தற்போது யாழ் பல்கலைக்கழகத்தை தனது கோட்டையாக்கியுள்ளது. காலங்கள் உருண்டோடி யாழ் பல்கலைக்கழகம் தனது 50 ஆண்டுகளை எட்டுகின்றது. பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது முதல் தமிழீழ விடுதலைப் போராட்டம் வீச்சுப் பெற்ற 1980க்களின் நடுப்பகுதி வரையான முதற் பத்து ஆண்டுகள் யாழ் பல்கலைக்கழகத்தில் இடதுசாரி – சோசலிச சிந்தனை வீச்சுப் பெற்றிருந்தது.

தற்போது யாழ்பாணத்துக்கு வெளியே, இலங்கைக்கு வேளியே சென்ற பல்கலைக்கழக பட்டதாரிகள் ஒன்று சேர்ந்து தாங்கள் தாங்கள் வாழும் நாடுகளில் அமைப்புகைள உருவாக்கி வருகின்றனர். அவ்வாறான ஒரு அமைப்பை பிரித்தானியாவில் அமைக்க பல முயற்சிகள் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட போதும் அது நீண்டகாலமாகக் கைகூடவில்லை. ஆனால் இந்த ஆண்டு அதில் அவர்கள்; வெற்றி பெற்று 1100 பேர்வரை கலந்துகொண்ட நிகழ்வை லண்டன் கிறிஸ்றல்பலஸில் கடந்த ஆண்டு நவம்பர் 30 இல் ஏற்பாடு செய்திருந்தது.

மண்டபம் செலவு 30,000 பவுண் உட்பட மொத்தமாக 44,000 பவுண் செலவில் இந்நிகழ்வு வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களது வருமானம் 52,000 பவுண்களாகவும் செலவு போக 8,000 பவுண்கள் மிகுதியாகவும் கிடைத்துள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தின் அலுமினி அசோசியேசன்ஸ் யுகெ கிறிஸ்ரல்பலஸில் நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்த போதே இந்தச் சங்கத்துக்குள்ளே குழப்பநிலை ஆரம்பமாகிவிட்டது. முதற் கோணல் முற்றும் கோணல் என்ற நிலையில் தற்போது யாழ் பல்கலைக்கழகத்தின் அலுமினி அசோசியேசன்ஸ் யுகெ உள்ளது. இது தொடர்பில் சாந்தி ரதுலோச்சனன் பதிவு செய்த குறிப்பு அங்குள்ள பிரச்சினையின் ஆழத்தை மிகத் தெளிவாகக் குறிப்பிடுவதாக உள்ளது. “ஒரு பெண் 01.10.24லிருந்து 29.12.24 வரை செய்த வீட்டுக்கு கூரை போட வந்துள்ளார்கள் சிவகுரு ஜெயானந்தன், புனிதா கணேஸ்வரன். ஒரு பழைய மாணவர்களுக்கும் அறிவிக்காது, தன்னைத் தலைவராக நினைத்து, யூலை 07, 2024 அன்று ஒரு வெளிநாட்டு நிறுவனத்துக்கு பொன் விழாவை தாரைவார்த்துக் கொடுத்தவர். இதைத் தவிர எந்த சமூகப் பணியிலும் ஈடுபடவில்லை”. யாழ் பல்கலையில் 1984-85 இல் பௌதீக விஞ்ஞான பீடத்தில் கற்ற இவர், தன்னோடு தலைமைப் பதவிக்கு போட்டியிட்டவர் தொடர்பில் பதிவிட்ட கருத்து.

யுகெ அலுமினி அசோசியேசன்ஸ் நவம்பரில் தங்களுடைய நிகழ்வை கொண்டாடுவதற்கு முன் அதற்கான விடயங்களை சிவகுரு ஜெயானந்தன் என்பவர் தன்னிச்சையாக மேற்கொண்டு செயற்பட்டார் என்று குற்றம்சாட்டப்படுகின்றது. இங்கு சாந்தினி குறிப்பிடும் வெளிநாட்டு நிறுவனம் லிஃப்ற் என்கின்ற அமைப்பு. ஜெயானந்தன் இந்த லிஃப்ற் என்ற அமைப்புடனும் நெருக்கமாக உள்ளார். யாழ் பல்கலைக்கழக யுகெ அலுமினி அசோசியேஸன்ஸை உருவாக்க சாந்தி ராகுலேஸ்வரன் போன்ற சிலர எண்ணிய போதும் அதனை நடைமுறைச்சாத்தியமாக்கியது லிஃப்ற் – LIFT என்ற அமைப்பே என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத சிவகுரு ஜெயானந்தனின் நண்பர். அமெரிக்காவில் இருந்து வந்து நின்ற மூவர் இந்நிகழ்வை அரங்கேற்ற முழுமுயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். ஆனால் அவர் தங்களுடைய நோக்கத்தை வெளிப்படையாகக் குறிப்பிடாமல், இந்த அலுமினி அசோசியேஸனை வைத்து லிஃப்ற் என்ற தங்களுடைய அமைப்புக்கு நிதி திரட்டும் முயற்சியை மறைமுகமாக மேற்கொண்டிருந்தனர். அதனையொட்டியே பிரச்சினை உருவானது.

ஆனால் தொடர்ச்சியாக லிஃப்ற் அமைப்புக்கு எதிராக யாழ் பல்கலைக்கழக அலுமினி அசோசியேசன்ஸைச் சேர்ந்த பலரும் கருத்துக்களை வெளியிட்டதும் அதில் நேர்மைத் தன்மை இல்லாததும் லிஃப்ற் அமைப்பு யூகே அலுமினி அசோசியேசன் யுகெ இலிருந்து ஒதுங்க நிர்ப்பந்திக்கப்பட்டது. நவம்பர் 30 கிடைத்த லாபத்தில் பங்கும் வழங்கப்பட வில்லை. ஆனாலும் இது தொடர்பில் தொடர்ந்தும் சந்தேகம் எழுப்பப்படுகின்றது. லிஃப்ற் அமைப்பின் சின்னம் பொறிக்கப்பட்ட சேர்ட்ஷடகள் அலுமினி அசோசியேசன்ஸ் சார்ந்த நிகழ்வில் விற்கப்பட்டது இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தகின்றது. அத்தோடு லிஃப்ற் அமைப்பின் பிரதிநிதியாகக் கருதப்படும் சிவகுரு ஜெயானந்தன் தொடர்ந்தும் யாழ் பல்கைலக்கழக யூகெ அசோசியேசன்ஸ் தலைவராக இருப்பது முரண்பட்ட நலன்கள் கொண்ட செயற்பாடக பார்க்கப்படுகின்றது.

தற்போது யாழ் பல்கலைக்கழக அலுமினி அசோசியேசன்ஸ் யுகெ இன் யாப்பு விதிகளை அமைப்பதற்கு ஒரு குழு உருவாக்கப்பட்டு அக்குழு யாப்பு விதிகளை உருவாக்கி வருகின்றது. அந்த விடயம் யூன் 15 மட்டில் நிறைவடையும் என தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி உருவாக்கப்படும் யாப்பின் பிரகாரம் தற்போது உள்ள அலுமினி அசோசியேசன்ஸ் தற்போதைய செயற்கழு கலைக்கப்பட வேண்டும். புதிய யாப்பின் பிரகாரம் உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டு அதன் செயற்குழுவுக்கான தேர்தல் நடத்தப்பட்டு புதிய செயற்குழு தெரிவு செய்யப்பட வேண்டும்.

1993 முதல் இப்போது வரையான 30 ஆண்டு காலத்தில் யாழ் பல்கலைக்கழக அலுமினி அசோசியேசன்ஸ் யுகெ யை உருவாக்க ஐந்து தடவைகள் முயற்சி எடுக்கப்பட்டதாகத் தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றார் சங்கரப்பிள்ளை முருகையா. எஸ் முருகையா யாழ் பல்கலைக்கழகத்தின் புவியில்துறையில் கற்று விரிவுரையாளராகவும் இருந்தவர்.அவர் மேலும் குறிப்பிடுகையில் “தற்போது யாப்பு தயாரிப்பு வேலைகள் முடிவுக்கு வந்தள்ளது. அதனடிப்படையில் செயற்பட்டு பல்கலைக்கழகத்திற்கும் நாட்டுக்கும் நாங்கள் முன்மாதிரியாகச் செயற்பட வேண்டும”; எனத் தெரிவித்தார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் இன, மத, பிரதேச, சாதிய வேறுபாடுகள் இல்லாமல் இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் கல்வி கற்கின்றனர். அதனால் பிரித்தானியாவில் உருவாக்கப்படும் அலுமினி அசோசியேசன்ஸ் அங்கு கற்ற அனைத்து மாணவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் செயற்படுவதே பொருத்தமானதாக அமையும் என்கிறார் சங்கரப்பிள்ளை முருகையா. மாறாக மற்றையவர்களைப் புறக்கணித்து வடக்கு கிழக்கு தமிழ் மாணவர்களுக்கான அலுமினி அசோசியேசன்ஸ் என்று உருவாக்குவது அரோக்கியமானதாக இராது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் தற்போது கணித விஞ்ஞான பீடங்களில் கற்பவர்களில் 70 வீதமானவர்கள் பெரும்பான்மைச் சமூகத்தினர், கலைப்பீடத்தில் கணிசமான தொகையில் மலையகத் தமிழர்கள் கற்கின்றனர். நாடுமுழுவதும்; இருந்து முஸ்லீம் மக்கள் கற்கின்றனர். இவர்களையெல்லாம் புறக்கணித்து வடக்கு – கிழக்கு தமிழ் மாணவர்களுக்கான அலுமினி அசோசியேசன் என்றமைப்பது அனைவருக்குமான அலுமினி அசோசியேசன் ஒன்று உருவாவதற்கு அத்திவாரம் இடுவதாகவே அமையும் என்பதையும் எஸ் முருகையா தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

கடந்த தேர்தலில் சாந்தி ரதுலோச்சனன் தலைவராக தெரிவு செய்யப்படும் வாய்ப்பு இருந்த போதும் அவர் இறுதி நேரத்தில் வெளியிட்ட நேர்காணலில் தன்னை வல்வெட்டித்துறை வீரப்பெண் என்றும் அதனால் தனக்கு வாக்களிக்கும்படி கேட்டதும் அவரது வாய்ப்பை இழக்கச் செய்ததாக சிலர் தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றனர்.

ஆனால் தற்போது தலைவராக உள்ள சிவகுரு ஜெயானந்தனும் செயலாளர் புனிதா கணேஸ்வரனும் தற்போதைய செயற்குழுவை தொடர முயற்சிக்கின்றனர.; இதுவும் தற்போது அலுமினி அசோசியேசன்ஸ்க்குள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. யாழ் பல்கலைக்கழக அலுமினி அசோசியேசன்ஸ் யுகெ இன் வட்ஸ்அப் குறூப்பில் பதிவு செய்யப்படும் கருத்துக்கள் நாகரீக சமூகம் ஏற்றுக்கொள்ளத் தகாத வகையிலும் அமைந்துவிடுகின்றது என சிலர் தங்கள் அதிருப்தியை தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றனர்.
இது பற்றி கருத்து வெளியிட்டுள்ள அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அருள் பொன்னையா தனது விசனத்தை வருமாறு வெளியிட்டுள்ளார்: ஒரு விழாவை ஏற்பாடு செய்வதும் அதனை திறம்பட நடத்துவதும் இ சிக்கல்கள் வந்தால் உள்வீட்டுக்குள்ளேயே தீர்த்துக் கொளலளவும் முடியாதஇ கல்வி அறிவையும் ஆளுமையையையும் தான் பல்கலைக் கழக கல்வி தந்ததா என்ற கேள்வி எழுவதுடன் வயது என்பது கூட பக்குவத்தை கொடுக்கவில்லையா? என்ற கேள்வியும் எழ வைக்கிறது…

மோதல்கள் தொடர்வது உள ஆரோக்கியத்தையும் நிம்மதியையும் கெடுக்கும். அனேகமானவர்கள் உடல் உள ஆலோக்கியத்தை கட்டாயம் பேணவேண்டிய வயதுக்கு வந்து விட்டீர்கள். ஆவன செய்க.” என அருள் பொன்னையா சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அலுமினி அசோசியேசன் யுகெ விடயத்தை வலிந்து அரசியல் மயப்படுத்தும் போக்கும் துரோகி தியாகி எனக் கன்னம் பிரித்து ஆடும் நிலையும் ஆங்காங்கே தலைதூக்குவதாக சிலர் கவலைகொள்கின்றனர்.

முதிர்ச்சியடையாத அணுவாயுதங்களை கொண்ட இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம்: இடையில் சிக்கித் தவிப்பது அப்பாவி மக்கள் !

முதிர்ச்சியடையாத அணுவாயுதங்களை கொண்ட இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம்: இடையில் சிக்கித் தவிப்பது அப்பாவி மக்கள் !

இந்தியா பாகிஸ்தான் இரு நாட்டு காஷ்மீர் எல்லைப்பகுதிகளிலும் எப்போதுமே ஒருவிதமான போர்ப் பதற்றம் நீண்ட காலமாக நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீரின் பந்திபோராவில் தீவிரவாதிகளுக்கும் இந்தியா இந்திய ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை அவ்வப்போது நடந்துள்ளது.

இப்படியானவொரு பதற்றச் சூழலில் காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இந்தியாவால் தடை செய்யப்பட்ட இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்று இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய பாகிஸ்தான்
எல்லை கட்டுப்பாட்டு கோட்டிலும் சில இடங்களில் சண்டை நடைபெற்று வருவதால் பதற்றம் நிலவுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு இந்தியா மற்றும் பாகிஸ்தான் காஷ்மீரை அண்டிய பகுதிகளில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதாக கூறிக் கொண்டு இந்திய இராணுவம் மே 7 ஆம் திகதி காலை 2 மணி அளவில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் மற்றும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 இடங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் அரசாங்கத்தை நேரடியாக குற்றம் சாட்டும் ஆளும் பிஜேபி அரசாங்கம் பாகிஸ்தான் மீதான அதனது இராணுவநடவடிக்கைக்கு “ஆபரேஷன் சிந்தூர்” எனப் பெயரிட்டுள்ளது.

இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 52 பேர் காயமடைந்து உள்ளனர் என ஷெபாஸ் ஷரீஃப் தலைமை தாங்கும் பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது . பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இந்தியாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

அதேநேரம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி இந்தியா தவறிழைத்து விட்டதாக குற்றம் சாட்டிய பாகிஸ்தான் பிரதமர். இந்தியாவிற்கு தக்க பதிலடி கொடுப்போம் என நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றியுள்ளார். பாகிஸ்தானும் தனது இராணுவம் ஐந்து இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், சில இந்திய வீரர்களை சிறைபிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்தியா தன்னால் தடைசெய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா பாகிஸ்தானில் தளம் அமைத்து இயங்குவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் ஆதரவளித்து வருவதாக தொடர்ந்தும் குற்றஞ்சாட்டி வருகிறது.

தென்னாசியப் பகுதியில் சூழ்ந்துள்ள போர் பதற்றம் உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாட்டு இராணுவம் மற்றும் விமானப் படைகள் தாயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளும் மாறி மாறி போர் ஒத்திகைகளிலும் ஈடுபடுகின்றன. இரு நாட்டு அரசாங்கங்களும் தத்தமது நாட்டு மக்களை போர்ப் பதட்டத்தில் தள்ளியுள்ளன.

வழமையாக இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினாலே இந்தியா பாகிஸ்தான் போர் நடப்பது போன்றே ஆரவாரங்கள் நடக்கும். அப்படியிருக்க உண்மையான போரின் ஒத்திகைகள் தொடங்கிவிட்ட நிலையில் பரஸ்பரம் இரு நாட்டு ஊடகங்களும் சமுக ஊடகங்களும் வெறுப்பையும் பிரிவினைவாதத்தையும் பகையையும் பரப்பி வருகின்றன. சமூக ஊடகங்களில் நிறைய போலியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

மேலும் இந்தியா – பாகிஸ்தான் மோதலால் ஆசிய விமான போக்குவரத்து வழித்தடத்திலும் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளமையும் குறிப்படத் தக்கது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள மோதல்
காரணமாக, பல ஆசிய விமான நிறுவனங்கள், ஐரோப்பா நோக்கி இயக்கப்படும் தமது விமானங்களின் போக்குவரத்து வழித்தடங்களை மாற்றியமைத்துள்ள நிலையில், சிலவற்றை இரத்து செய்வதாகவும் தெரிவித்துள்ளன.

முதிர்ச்சியடையாத அணுஆயுத சக்தி கொண்ட இந்த இரு நாடுகளுக்கிடையே கடந்த இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு இப்போது பெரும் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்களிலும் இந்திய மற்றும் பாகிஸ்தானிடையேயான போர் ஒத்திகைச் செய்திகள் இடம்பிடித்துள்ளன. ஐக்கிய நாடுகளின் பிராந்தியத் தலைவர் இருநாடுகளையும் உச்சபட்ச பொறுமை காக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இதேமாதிரி 2023 இல் ஒக்டோபர் 7 ஆம் திகதி பாலஸ்தீன விடுதலைப் போராளிகளான ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல்ப் பகுதியில் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பாலஸ்தீன பகுதியான ஹாஸா பள்ளத்தாக்கில் பெரும் போரில் ஈடுபட்டு வருகிறது. ஹாஸாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். ஹாஸாவில் மிகப் பெரிய மனிதவலம் உலகத்தின் முன் நடந்தேறி வருகிறது.

மேலும் இந்தியா பாக்கிஸ்தான் இடையிலான போர் இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கத்தை செலுத்தக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து பல பொருட்களை இறக்குமதி செய்யும் இலங்கைக்கு அதில் தடங்கள் ஏற்படக் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.ஏற்கனவே இலங்கை அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் என பொருளாதார நெருக்கடியில் சிக்கி மெதுவாக மீண்டு வர முயற்சிக்கின்றது. இலங்கை மட்டுமல்ல பாகிஸ்தானும் கூட பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளவொரு நாடாகும். அந்தவகையில் இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளையும் போர்ப் பதற்றத்தை தணித்து அமைதிப்பேச்சு வார்த்தைகள் மூலம் பிரச்சினைகளை தீர்க்கும்படி மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இரு நாட்டு மக்களின் விருப்பமும் அதுவே என சமூகச் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

எழுபது உயிரை வாங்கிய ஈரானின் துறைமுக வெடிப்பு !

எழுபது உயிரை வாங்கிய ஈரானின் துறைமுக வெடிப்பு !

ஈரானில் சில தினங்களுக்கு முன்பு மிகப்பெரிய துறைமுகமான அப்பாஸ் துறைமுகத்தில் நின்ற ஒரு கண்டெய்னர் வெடித்து சிதறி உள்ளது. மேலும் சம்பவ இடத்தில் 4 பேர் உயிரிழந்து 400 பேர் படுகாயம் அடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 70 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றன.

இந்த துறைமுகம் ஈரானின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்ததோடு, இங்கிருந்து பல்வேறு பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்டன எனவும் குறிப்பிடப்படுகின்றது.

தெற்காசியாவில் போர்மேகம் சூழ்ந்துள்ளது !

தெற்காசியாவில் போர்மேகம் சூழ்ந்துள்ளது !

காஷ்மீரின் இரண்டு பகுதிகளான இந்திய மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இரு நாட்டு இராணுவங்களுக்கு இடையேயும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேநேரம் பஹல்காம் தாக்குதல் தொடர்பில் இந்தியா சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தி வருகின்றது.

பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு சம்பந்தம் இல்லை என்று முற்றாக மறுக்கிறது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து வரும் அமைதிக்கான கோரிக்கையை இந்தியா பலகீனமாக கருதக் கூடாது என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தான் கோரும் சுதந்திர விசாரணையில் சீனா மற்றும் ரஸ்யா நடுநிலமை வகிக்கலாம் என கருத்துப்பட தெரிவித்துள்ளார்.

முன்னராகவே பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு உரிமை கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பஹல்காம் தாக்குதலின் பின்னர் காஷ்மீரில் வாழும் மக்கள் இந்திய பாதுகாப்பு படைகளால் “கூட்டுத்தண்டணைக்கு“ ( collective punishment) உள்ளாகி வருவதாக எம்பி ரூஹீல்லா மெஹ்தி தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 7 ஹமாஸ் இஸ்ரேலின் இசை நிகழ்ச்சியில் மேற்கொண்ட தாக்குதலுக்கு பின்னர் இஸ்ரேல் இராணுவத்தின் கூட்டுத்தண்டணைக்கு ஹாசா மக்கள் பலியாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் இதுவரை 9 வீடுகளை காஷ்மீரில் இந்திய ராணுவம் குண்டு வைத்து தகர்த்துள்ளது. வீடுகள் போராளிகளுக்கு சொந்தமானவை அல்ல. அந்த வீடுகளில் ஒருகாலத்தில் லஷ்கர்-இ-தொய்பா உறுப்பினர்கள் தங்கியிருந்துள்ளனர். அல்லது அங்கே அவர்கள் பிறந்து வளர்ந்துள்ளனர். அதற்காக உள்ளூர் மக்களின் வாழ்விடங்களை அழித்து அப்பாவி மக்களை இஸ்ரேல் போன்று தண்டிப்பதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று நாள் போர் நிறுத்தத்தை அறிவித்தார் ரஷ்ய ஜனாதிபதி !

மூன்று நாள் போர் நிறுத்தத்தை அறிவித்தார் ரஷ்ய ஜனாதிபதி !

இரண்டாம் உலகப் போர் வெற்றியின் 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 03 நாள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார். அதன்படி, மே 8 ஆம் திகதி முதல் மே 10 ஆம் திகதி வரை 72 மணி நேர போர்நிறுத்தம் அமுலில் இருக்கும் என்று கிரெம்ளின் அறிவித்துள்ளது. இந்த போர் நிறுத்தத்தை யுக்ரைனும் கடைபிடிக்க வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.

பாரிஸில் விசா கிடைக்காத சம்பளம் கிடைக்காத விரக்தியில் இளைஞன் ரயிலில் வீழ்ந்து தற்கொலை !

பாரிஸில் விசா கிடைக்காத சம்பளம் கிடைக்காத விரக்தியில் இளைஞன் ரயிலில் வீழ்ந்து தற்கொலை !

லக்ஸான் என்ற தமிழ் இளைஞர் கடந்த சனிக்கிழமை 26 ஏப்பிரல் பாரிஸின் புறநகர் ரயில் நிலையமொன்றின் தண்டவாளத்தில் படுத்திருந்து தற்கொலை செய்துள்ளார். பெரும் தொகைப் பணத்தை செலவு செய்து குறித்த இளைஞன் பிரான்ஸ்க்கு வந்துள்ளார். அவரின் அகதித் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் அவர் வேலை செய்த உணவகம் ஒன்றிலிருந்து மூன்று மாதங்களுக்குரிய சம்பள பாக்கி இருந்ததாகவும் தெரியவருகின்றது. விசாவும் இல்லாமல் வேலை செய்த சம்பளமும் உரிய நேரத்தில் கிடைக்காத விரக்தியில் லக்ஸான் இருந்ததாக அவரது நண்பர்கள் வட்டாரத்திலிருந்து தெரிய வந்துள்ளது. கடும் மன உளைச்சலில் இருந்த அந்த இளைஞர், தண்டவாளத்தில் தலையை வைத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

வெநாளிட்டு வேலை வாய்ப்புக்களுக்கான பல்வேறு சந்தர்ப்பங்களை பல துறைகளிலும் ஐரோப்பிய நாடுகள் வழங்கி வருகின்றன. இந்த வாய்ப்புக்களை பயன்படுத்தி சட்ட ரீதியாக வெளிநாடுகளுக்கு இலங்கையிலிருந்து வேலை பெற்று வரலாம். அதற்கேற்றாற் போல் இளைஞர் யுவதிகள் தங்கள் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலரும் வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் தற்கொலை செய்துகொண்டுள்ளமை தெரிந்ததே.

அதேநேரம் கனடா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் விசா இல்லாத தமிழ் இளைஞர் மற்றும் யுவதிகள் வேலை வழங்கும் கடைக்காரர்களால் குறைந்த சம்பளம், அதிகப்படியான வேலைப்பளு மற்றும் ஒழுங்காக சம்பளத்தை கொடுக்காமல் என பல்வேறு வகைகளிலும் சுரண்டப்படுகிறார்கள். இப்படியான சந்தர்ப்பங்களில் விசா இல்லாத காரணத்தால் சட்டத்தையும் நாட முடியாதுள்ளது. ஒரு கட்டத்தில் லக்ஸான் போன்று தவறான முடிவு எடுத்து தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

 கனடா வான்கூவரில் தெருவிழாவில் காரால் மோதித் தள்ளி 11 பேர் பலி !

 கனடா வான்கூவரில் தெருவிழாவில் காரால் மோதித் தள்ளி 11 பேர் பலி !

வன்கூவரில் நடந்த பிலிப்பைன்ஸ் கலாச்சாரத்தை கொண்டாடும் “லாபு லாபு“ என்றழைக்கப்படும் தெரு விழா கூட்டத்திற்குள் கார் ஒன்றை செலுத்தி வந்த நபர், பாதசாரிகள் மீது மோதியதில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதாக வன்கூவர் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இத்தாக்குதல் சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 20:14 மணிக்கு நடந்ததுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கனேடிய பிரதமர் மார்க் கானி தெரிவித்துள்ளார். மேலும் இத்தாக்குதல் குறித்து கூறும் போது அவர் கனடாவின் இதயம் நொருங்கியுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

வாகனத்தைச் செலுத்தி வந்த 30 வயதுடைய ஒரு ஆண் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் வன்கூவர் காவல்துறை இந்த சம்பவம் பயங்கரவாத செயல் அல்ல என்று உறுதியாக நம்புவதாக தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

கனேடிய உள்ளூர் நேரப்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை 27 ஆம் திகதி இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்று டைபெற்றுக்கொண்டிருக்கும் பொதுத்தேர்தலில் இச்சம்பவம் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.

இதேமாதிரியே ஜேர்மனியில் பொதுத்தேர்தல் சமயத்தில் அடுத்தடுத்து காரால் பொதுமக்கள் மீது மோதி தாக்குதல்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஜேர்மனியின் தீவிர வலதுசாரிக் கட்சியான ஏஎப்ஃடி ( AFD) இப்படியான தாக்குதலை தனது தேர்தல் பரப்புரையில் பயன்படுத்தி வாக்கு வேட்டையில் ஈடுபட்டது. தேர்தல் பெறுபேறுகளில் கணிசமானளவு வெற்றியையும் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. கனடாவின் வலதுசாரிக்கட்சியான பழமைவாத கட்சி – கென்சர்வேடிவ் கட்சிக்கு இச்சம்பவம் மேலதிக வாக்குகளைப் பெற்றுக் கொடுக்க வாய்ப்புள்ளது.

ஜேர்மனி இனவாதத்தை நோக்கி அடியெடுத்து வைக்கின்றது: “லோரன்ஸ்க்கு நீதி வேண்டும்” இனவெறி ஜேர்மன் பொலிஸார் சுட்டதில் கறுப்பின இளைஞன் பலி !

ஜேர்மனி இனவாதத்தை நோக்கி அடியெடுத்து வைக்கின்றது: “லோரன்ஸ்க்கு நீதி வேண்டும்” இனவெறி ஜேர்மன் பொலிஸார் சுட்டதில் கறுப்பின இளைஞன் பலி !

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையான ஏப்பிரல் 20 ஆம் திகதி ஓல்டன்பேர்க் நகர மையத்தில் உள்ள ஒரு இரவு விடுதியின் முன் இளைஞர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை சமாளிக்க அழைக்கப்பட்ட ஜேர்மன் அவசர உதவிப் பொலிஸார் சுட்டதில் கறுப்பின இளைஞன் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட இளைஞன் லோரன்ஸ் 21 வயதானவர். அவர் அந்நகரத்தில் நன்கு அறியப்பட்ட கூடைப்பந்து வீரர் என்று கூறப்படுகிறது .

சம்பவம் நடந்த அன்று லோரன்ஸ் பொலிஸாரிடமிருந்து தப்பியோடியுள்ளார். அவரைப் பின்தொடர்ந்த பிறிதொரு பொலிஸ் குழு லோரன்ஸ்சை எதிர்கொண்டுள்ளது. அப்போது அவர் கத்தியை வைத்து பொலிஸாரை மிரட்டியதாகவும் எரிச்சலூட்டக் கூடிய கண்ணீர்ப் புகையை தெளித்ததாலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

27 வயதான வெள்ளையின ஜேர்மன் பொலிஸ் அதிகாரி லோரன்ஸ்சை நோக்கி ஐந்து முறை சுட்டுள்ளார். லோரன்ஸின் மேல் உடல், இடுப்பு மற்றும் தலை மீது சூடு விழுந்துள்ளது. இந்த துப்பாக்ச்சி சூடு லோன்ரஸின் பின்பகுதியிலிருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது. படுகாயமடைந்த லோரன்ஸ் சிறிது நேரத்திலேயே மருத்துவமனையில் இறந்துவிட்டார்.

லோரன்ஸிடமிருந்த கத்தி பறிமுதல் செய்யப்பட்டதாக ஜேர்மன் சட்டமா அதிபர் திணைக்களம் கூறுகிறது. அதேநேரம் லோரன்ஸ் கத்தியை வைத்து பொலிஸாரை மிரட்டியதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது. பொலிஸாரின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாத போது துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதியில்லை. அப்படியிருக்க பின்னால் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமை சட்டவிரோதமானது. இது இனவெறித் தாக்குதல் என ஜேர்மனி வாழ் புலம்பெயர் மக்கள் கொந்தளித்துப் போயுள்ளனர்.

லோரன்ஸ் சூட்டுக் கொல்லப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸார் சீருடைகளில் கமராக்கள் அணிந்திருந்துள்ளார்கள். ஆனால் பொலிஸாரின் நடவடிக்கையில் ஈடுபட்ட சமயம் கமராக்கள் நிறுத்தி வைக்கபட்டிருந்தது. பொதுவாகவே பொலிஸார் துப்பாக்கியை பயன்படுத்த எத்தனிக்கும் போது சீருடையில் பொருத்தப்பட்டிருக்கின்ற தானியங்கி கமராக்கள் பதிவு செய்யத் தொடங்கிவிடும். ஆனால் லோரன்ஸ் சுட்டுக்கொல்லப்பட்ட சமயம் கமராக்கள் வேலை செய்யவில்லை.

கறுப்பின இளைஞரான லோரன்ஸ் மீதான தாக்குதல் இனவெறித் தாக்குதல் என கண்டிக்கும் தன்னார்வ செயற்பாட்டாளர்கள் “ லோரன்ஸ்க்கு நீதிவேண்டும்“ என்ற பேரணியை நடத்தியுள்ளார்கள். இச்சம்பவம் தொடர்பில் சுயாதீனமான விசாரணையை கோருகின்றனர். சமீபகாலங்களில் ஹாசாவில் நடக்கும் இனப்படுகொலையை நிறுத்தக் கோரி ஜேர்மனியில் நடக்கின்ற பேரணிகளில் ஜேர்மன் பொலிஸார் அத்துமீறி வருகின்றனர் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. அனுமதி பெற்று நடக்கின்ற ஆர்ப்பாட்ட பேரணிகளில் பங்குபற்றும் முக்காடு அணிந்த பெண்கள் மீது ஜேர்மன் பொலிஸாரால் இனவாதத்தோடு தாக்கும் வீடியோப் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகின்றன.

2020 ஆண்டு ஜோர்ஜ் புளோயிட் (George Floyd) என்ற கறுப்பினத்தவர் மினிசோட்டா வெள்ளையின பொலிஸாரின் இனவெறித்தாக்குதலில் கொல்லப்பட்டமையத் தொடர்ந்து எழுந்த நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் குறிப்பிடத்தக்கன. அமெரிக்காவைப் பொறுத்தவரை கறுப்பினத்தவர்களை கிரிமினல் குற்றவாளிகளாக சித்தரிக்கும் அல்லது அவ்வாறான கிரிமினல் குற்றவாளிகள் கொடுமையான இனவெறித்தாக்குதலுக்கு உள்ளாகிவருகின்றமை வழமையானவையாகும்.

இந்தநிலமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 2013 ஆண்டு தொடங்கப்பட்ட “#பிளைக் லைவ்ஸ் மற்றர்#”( Black lives matters) இயக்கம் தொடர்ந்து போராடி வருகின்றது.

அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை ஏப்பிரல் 25 ஒல்டன்பேர்க்கில் ஆயிரக்கணக்கானோர் கூடி லோரன்ஸ்க்கு நீதி கேட்டு குரல் கொடுத்தனர். ஜேர்மனியைப் பொறுத்தவரை அண்மைக்காலமாக வெளிநாட்டவர்கள் மற்றும் ஜேர்மனி குடியேறிகளுக்கு எதிரான வலதுசாரி இனவாத அரசியல் மிகுந்த செல்வாக்குப் பெற்றுள்ளது. அநியாயமான முறையில் லோரன்ஸ் சுட்டுக்கொல்லப்பட்டமையும் இப்பின்னணிகளிலேயே இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

 

தாக்குதலை ஆரம்பித்த பாகிஸ்தான் – இந்தியா!

தாக்குதலை ஆரம்பித்த பாகிஸ்தான் – இந்தியா!

இந்திய – பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பந்திபோராவில் பயங்கரவாதிகள், இந்திய பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான் இராணுவத்திற்கு இந்திய இராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் சில இடங்களில் சண்டை நடைபெற்று வருவதால் பதற்றம் நிலவுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.