கனடா வான்கூவரில் தெருவிழாவில் காரால் மோதித் தள்ளி 11 பேர் பலி !

 கனடா வான்கூவரில் தெருவிழாவில் காரால் மோதித் தள்ளி 11 பேர் பலி !

வன்கூவரில் நடந்த பிலிப்பைன்ஸ் கலாச்சாரத்தை கொண்டாடும் “லாபு லாபு“ என்றழைக்கப்படும் தெரு விழா கூட்டத்திற்குள் கார் ஒன்றை செலுத்தி வந்த நபர், பாதசாரிகள் மீது மோதியதில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதாக வன்கூவர் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இத்தாக்குதல் சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 20:14 மணிக்கு நடந்ததுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கனேடிய பிரதமர் மார்க் கானி தெரிவித்துள்ளார். மேலும் இத்தாக்குதல் குறித்து கூறும் போது அவர் கனடாவின் இதயம் நொருங்கியுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

வாகனத்தைச் செலுத்தி வந்த 30 வயதுடைய ஒரு ஆண் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் வன்கூவர் காவல்துறை இந்த சம்பவம் பயங்கரவாத செயல் அல்ல என்று உறுதியாக நம்புவதாக தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

கனேடிய உள்ளூர் நேரப்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை 27 ஆம் திகதி இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்று டைபெற்றுக்கொண்டிருக்கும் பொதுத்தேர்தலில் இச்சம்பவம் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.

இதேமாதிரியே ஜேர்மனியில் பொதுத்தேர்தல் சமயத்தில் அடுத்தடுத்து காரால் பொதுமக்கள் மீது மோதி தாக்குதல்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஜேர்மனியின் தீவிர வலதுசாரிக் கட்சியான ஏஎப்ஃடி ( AFD) இப்படியான தாக்குதலை தனது தேர்தல் பரப்புரையில் பயன்படுத்தி வாக்கு வேட்டையில் ஈடுபட்டது. தேர்தல் பெறுபேறுகளில் கணிசமானளவு வெற்றியையும் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. கனடாவின் வலதுசாரிக்கட்சியான பழமைவாத கட்சி – கென்சர்வேடிவ் கட்சிக்கு இச்சம்பவம் மேலதிக வாக்குகளைப் பெற்றுக் கொடுக்க வாய்ப்புள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *