எழுபது உயிரை வாங்கிய ஈரானின் துறைமுக வெடிப்பு !
ஈரானில் சில தினங்களுக்கு முன்பு மிகப்பெரிய துறைமுகமான அப்பாஸ் துறைமுகத்தில் நின்ற ஒரு கண்டெய்னர் வெடித்து சிதறி உள்ளது. மேலும் சம்பவ இடத்தில் 4 பேர் உயிரிழந்து 400 பேர் படுகாயம் அடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 70 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றன.
இந்த துறைமுகம் ஈரானின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்ததோடு, இங்கிருந்து பல்வேறு பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்டன எனவும் குறிப்பிடப்படுகின்றது.