ஆயிஷா கத்தாபி – லிபியாவின் முன்னாள் தலைவர் கத்தாபியின் மகள் – ஈரானிய மக்களுக்கு அனுப்பிய செய்தி:

ஆயிஷா கத்தாபி – லிபியாவின் முன்னாள் தலைவர் கத்தாபியின் மகள் – ஈரானிய மக்களுக்கு அனுப்பிய செய்தி:

🇮🇷 ஓ, வலிமையும் தைரியமும் கொண்ட ஈரான் மக்களே! 🇮🇷

எங்கள் தேசம் துரோகத்தின் வழியாக அழிவுக்குள்ளான தேசம்.

இது வெளிப்படையான எதிரிகளால் அல்ல, மேற்கு நாடுகளின் புன்னகைகளாலும் போலியான வாக்குறுதிகளாலும் ஏற்பட்ட அழிவு.

நான் எச்சரிக்கிறேன்: மேற்குலக நாடுகளின் இனிமையான வார்த்தைகளையும் பொய்யான வாக்குறுதிகளையும் நம்ப வேண்டாம்.

அவர்கள் என் தந்தையிடம் சொன்னார்கள்:

“உங்கள் அணு மற்றும் ஏவுகணை திட்டங்களை விலக்கினால், உலகத்தின் எல்லா வாயில்களும் உங்களுக்காக திறக்கப்படும்.” என்று.

என் தந்தை, நல்ல நம்பிக்கையுடன், பேச்சுவார்த்தையின் பாதையைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் அதற்குப் பின் ஏற்பட்டது – கொடூரமான நேட்டோ வான்வழி தாக்குதல்கள்.

எங்கள் நாடு இரத்தமும் சாம்பலுமாக மாறியது.

எங்கள் மக்கள் அடிமைகளாக ஏழைகளாக வாழ்விடமற்ற அகதிகளாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஓ, என் ஈரானிய சகோதர சகோதரிகளே!

இந்த நரிகளை நம்பி சமாதானத்தின் பக்கம் சென்றால் அழிவும் பிளவுகளும் துக்கமும்தான் மிஞ்சும்.

ஒரு நரியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது ஆடுகளை காப்பாற்றாது. அது தனது அடுத்த உணவுக்கான நேரத்தை நிர்ணயிக்க மட்டுமே உதவும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *