சாணக்கியன் – செல்வம் கிளீன் சிறிலங்கா விசாரணைக்குள் வருகிறார்களா ?
கடந்த ஆண்டு யூலை 25 அபிவிருத்திக்காக இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு கிடைத்த 400 மில்லியன் நிதியை அவர் திறம்பட செலவழியாமல் மோசடி செய்ததாக குற்றம் சாட்டுகிறார் ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்ரனிசில் ராஜ்குமார்.
அதேசமயம் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளது.
அநுரவின் கிளீன் சிறிலங்கா திட்டத்தின் மூலம் சாணக்கியனின் ஊழலை விசாரிக்கும் படி நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் அறை கூவல் விடுத்தார். சாணக்கியனின் அநுசரணையில், கல்லாத்தில் ஒரு கூட்டுறவுச் சங்க கட்டடம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு 50 இலட்சம் ரூபாய்களே செலவிடப்பட்டதாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது என கூறும் அன்ரனிசில். பூரணமாக கட்டி முடிக்கப்படாத கட்டத்திற்கு 50 இலட்சம் செலவானதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது என்கிறார். பூரணமாகாத கட்டத்தின் படங்களையும் செய்தியாளர் மாநாட்டில் காட்டினார் அன்ரனிசில். அவர் மேலும் தான் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெற்றுக்கொண்ட ஆவணங்களின் அடிப்படையில் புள்ளிவிபரங்களை குறிப்பிட்டு மட்டக்களப்பு மாவட்டம் புறக்கணிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் விநோதமான ஒரு கோரிக்கையை அனைத்து மத குருமார்களிடம் முன்வைத்தார். அதாவது மக்களை கசக்கி பிழிந்து பெறப்பட்ட வரிப்பணத்தையே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலம் மத ஸ்தாபனங்களுக்கு ஒதுக்குகிறார்கள். எனவே அந்த கொடைகளை பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தந்தார் என ஒலிபெருக்கியில் பிரச்சாரம் செய்வது ஏனைய கட்சி உறுப்பினர்கள் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். ஏனவே சாணக்கியனுக்கு இலவச விளம்பரம் செய்ய வேண்டாம் என மறைமுகமாக கேட்டுக் கொண்டார்.