ஜெயபாலன் த

ஜெயபாலன் த

கோவிட் 19 இன் மீள்வருகையா ? கடந்து வந்த காலங்கள் !

கோவிட் 19 இன் மீள்வருகையா ? கடந்து வந்த காலங்கள் !

உலனத்தின் பெரும்பாலான மாற்றங்கள் கண்டுபிடிப்புக்கள் அழிவுகளைத் தொடர்ந்தே உருவானது. இன்று நாங்கள் அனுபவிக்கின்ற தொழில்நுட்பங்களும் வாழ்க்கை முறையும் இரண்டாவது உலக யுத்தத்தின் விளைவு. இன்று பெண்கள் அனுபவிக்கின்ற மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம் கூட இரண்டாம் உலக யுத்தத்தின் விளைவு தான்.

COVID-19 ஒரு புதிய வாழ்க்கை முறையைக் கற்றுத்தந்து முன்னேற்றங்கள் தொலைவேலை (Work from Home) ஒரு புதிய பணியாற்றும் முறை என அறிமுகமானது. ஆன்லைன் கல்வி, டிஜிட்டல் சுகாதார சேவைகள் முக்கியத்துவம் பெற்றன. மக்கள் ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மையுடன் செயல்பட்டனர்.

இருப்பினும் தற்போது covid 19 மீண்டும் பரவ ஆரம்பித்து உள்ளமை மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. வருமுன் காப்பதே பொருத்தமானது. இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந், ஹொங்கொங் ஆகிய நாடுகளில் கோவிட் 19 மீண்டும் தலையெடுக்கின்றதா எனப் புருவங்கள் உயர்கின்றது.

மனித இனத்தின் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தொற்றுநோய்களில் ஒன்றாக COVID-19 (கொரோனா வைரஸ் நோய்) கருதப்படுகிறது. இது 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் ஊஹான் நகரில் முதல் முறையாக கண்டறியப்பட்டது. குறுகிய காலத்திலேயே உலகெங்கும் பரவிய இந்த நோய், கோடிக்கணக்கான மக்களின் உயிரை வாங்கி அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு துறையையும் மாற்றியமைத்தது.

சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல், சுவை மற்றும் மணம் இழப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் இது உயிருக்கே ஆபத்தான நிலைகளையும் உருவாக்குகிறது. வைரஸின் வேகமான பரவலைக் கட்டுப்படுத்த பல நாடுகள் ஊரடங்கு, சமூக இடைவெளி, முகக்கவசம், தடுப்பூசி ஆகியவை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தன.

COVID-19 வைரஸ், மருத்துவ ரீதியில் “SARS-CoV-2” என அழைக்கப்படுகிறது. இது முதலில் விலங்குகளில் இருந்த வைரஸாக இருந்து, மனிதர்களிடம் பரவ ஆரம்பித்ததாக நம்பப்படுகிறது. ஒரு மனிதனிடமிருந்து மற்றொருவருக்கு சிறுநீரகம், இருமல், தொடுதல் போன்ற வழிகளில் பரவுகிறது.

அதிக வேகத்தில் பரவும் தன்மை காரணமாக, உலக சுகாதார அமைப்பு (WHO) 2020 மார்ச்சில் இதனை “பாண்டமிக்” என அறிவித்தது. அதன் பின்பு உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து, மருத்துவ வசதிகளை மேம்படுத்த தொடங்கின.

மிகவும் மோசமான நிலைமையில், இது குருதிச்செறிவு, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற பரிதாப நிலைகளுக்கு வழிவகுக்கும்.உலகெங்கும் இந்த வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
COVID-19 உலகின் இயங்கும் முறைமைகளைத் தற்காலிகமாக முடக்கி வைத்தது. தொழில்கள் மூடப்பட்டன, பணியிழப்பு ஏற்பட்டது, பல நாடுகளில் பொருளாதாரம் சரிந்தது. கோடிக்கணக்கான உயிர்கள் இழந்தன. பள்ளி மற்றும் கல்லூரிகள் அடைக்கப்பட்டதால் மாணவர்கள் ஆன்லைன் கல்விக்கே மாற வேண்டிய நிலை ஏற்பட்டது. மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பின. மருத்துவர், செவிலியர்கள் அதிக அழுத்தத்திற்கு உள்ளானார்கள்.

தனிமைப்படுத்தல், பயம், நோயிழப்பு போன்ற காரணங்களால் மக்களில் மன அழுத்தம், கவலை, மன உளைச்சல் போன்ற மனநிலைச் சிக்கல்கள் அதிகரித்தது.

COVID-19 ஐ கட்டுப்படுத்தும் மிக முக்கியமான வழியாக தடுப்பூசி விளங்கியது. Pfizer-BioNTech, Moderna, AstraZeneca, Covaxin, Covishield ஆகியவை முன்னிலை பெற்ற தடுப்பூசிகளாகும். தடுப்பூசி பெறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் மூலம் நோயின் தாக்கம் குறைக்கப்பட்டு, மரண விகிதமும் குறைந்தது.

2025 ஜூன் 4 ஆம் தேதியின்படி, இந்தியாவில் COVID-19 தொற்றுநோயின் நிலைமை மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போதைய COVID-19 நிலவரப்படி 4,302 பேருக்கு நோய் தொற்று அடையாளம் காணப் பட்டு உள்ளது. 24 மணி நேரத்தில் 864 பேருக்கு தொற்றியுள்ளது. மொத்தமாக 44 பேர் உயிரைந்துள்ளனர். 24 மணி நேரத்தில் 7 மரணங்கள் பதிவாகியுள்ளது. முக்கியமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களாக கேரளாவில் 1,373 நோயாளிகள், மகாராஷ்டிரா 510, குஜராத்: 397, டெல்லி: 393 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் தற்போது பரவி வரும் COVID-19 வைரஸ் வகைகள்: LF.7; XFG; JN.1; NB.1.8.1; இந்த வகைகள் அனைத்தும் Omicron வகையின் துணை வகைகளாகும். NB.1.8.1 வகை தற்போது உலக சுகாதார அமைப்பால் ‘Variant Under Monitoring’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வைரஸ் இடம் இருந்து எம்மை காத்துக் கொள்ள முகக்கவசம் அணியவும், கைகளை அடிக்கடி கழுவவும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களைத் தவிர்க்கவும், அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களுக்கு மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் தற்போது COVID-19 தொற்று தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, COVID-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸின் செயல்பாட்டில் உலகளாவிய அதிகரிப்பு 2025 பிப்ரவரி முதல் பதிவாகியுள்ளது.

இலங்கையின் சுவாச கண்காணிப்பு அமைப்பின்படி, 2024 ஆம் ஆண்டில், SARS-CoV-2 வைரஸிற்காக சோதிக்கப்பட்ட சுவாச மாதிரிகளில் 3% நேர்மறையான முடிவுகளை வழங்கியுள்ளன. இந்த எண்ணிக்கை 2024 மே மாதத்தில் 9.6% ஆக உயர்ந்தது. இருப்பினும், 2025 ஆம் ஆண்டு இதுவரை SARS-CoV-2 வைரஸின் சராசரி நேர்மறையான முடிவுகள் கிட்டத்தட்ட 2% ஆக உள்ளன. தற்போது சிறியளவிலான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, உடனடியாக எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது என்று கூறியுள்ளார். இருப்பினும், அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் இலங்கையில் பரவி வருவதாக பகிரப்படும் பல தகவல்கள் உண்மை இல்லை என Fact Crescendo போன்ற உண்மை கண்டறியும் நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

பிற நாடுகளில் ஹாங்காங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்து போன்ற சில நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் படுவன்துடாவ, சமீபத்திய கொவிட்-19 வைரஸின் திரிபு மிகவும் பாரதூரமானது அல்ல எனவும், உலக நாடுகள் கொரோனா தடுப்பூசியில் அதிக கவனம் செலுத்தியதால் வைரஸின் வீரியம் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். சுருக்கமாக, இலங்கையில் கோவிட்-19 வைரஸ் தொடர்பாக சிறியளவிலான அதிகரிப்பு காணப்பட்டாலும், குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. மேலும், சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

COVID-19 என்பது வெறும் ஒரு தொற்றுநோய் மட்டுமல்ல. அது மனித இனத்திற்கே ஒரு நெருக்கடியான பாடமாக இருந்தது. இது நம்மை எச்சரிக்கிறது மனிதன் இயற்கையுடன் சுமூகமாக வாழ்கின்ற அளவிற்கே பாதுகாப்பானது.

நாம் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட தொற்றுநோய்களை எதிர்கொள்ள எச்சரிக்கையுடன், முன்னெச்சரிக்கையுடனும், அறிவுடனும் செயல்பட வேண்டும். சுகாதார ஒழுங்குகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொது அறிவு ஆகியவை இனிமேலும் நம் வாழ்க்கையில் முக்கியமான பகுதியாக இருக்க வேண்டும்.

COVID-19 ஒரு எச்சரிக்கையாகும் இயற்கையோடு நமக்கு இருக்க வேண்டிய சமநிலையை உணர்த்தியது. எதிர்காலத்தில் இப்படிப் பட்ட தொற்றுநோய்களை எதிர்கொள்வதற்கான சீரான மருத்துவ மற்றும் சமூக தயாரிப்புகள் அவசியம் என்பதை COVID-19 நமக்கு உணர்த்தியுள்ளது.

இலங்கையில் ஓக்ரோபர் 27, 2024 திகதியில் வெளியான விபரங்களின் படி கோவிட் இனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: 6,72,754; இறந்தவர்களின் எண்ணிக்கை: 16,897; அன்று பாதிக்கப்பட்டிருந்தவர்கள்: 5 பேர் மட்டுமே. நோயிலிருந்து குணமடைந்தவர்கள்: 6,55,852 பேர்; இறப்பு வீதம்: 2.5 சதவிகிதம்; பரிசோதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: 36 இலட்சம் பேர்.

கஜாவின் முன்னணியைக் கைவிடும் தமிழ் மக்கள் ! தமிழ் கட்சிகளும் கைவிடும் அபாயம் !

கஜாவின் முன்னணியைக் கைவிடும் தமிழ் மக்கள் ! தமிழ் கட்சிகளும் கைவிடும் அபாயம் !

நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களின் அரசியல் கண்ணாடியாக உண்மையைப் பிரதிபலித்து நிற்கின்றது. சமூக வலைத்தளங்களும் பாரம்பரிய ஊடகங்களும் கட்டமைத்த பிம்பங்களை இத்தேர்தல் முடிவுகள் தகர்த்து எறிந்துள்ளது என்றால் அது மிகையல்ல. ‘அபிவிருத்தி என்பது சலுகை எங்களுக்கு சலுகை வேண்டாம் உரிமை தான் வேண்டும் என்று கோரி’ தமிழ் மக்களின் முன்னேற்றத்ததைத் தடுத்து வந்தன இந்தத் தமிழ் தேசியக் கட்சிகள். ஆனால் தமிழ் மக்கள் தங்களின் உரிமைகளின் அடிப்படை என்ற அபிவிருத்தி என்பதை மிகத் தெளிவாக உணர்ந்துகொண்டு அதற்கேற்ப வாக்களித்துள்ளனர். தமிழ் மக்களின் மனோநிலையை G L Tharshan னின் இக்காணொலிப் பதிவு மிகத் தெளிவாக முன்வைக்கின்றது.

இனவாதக் கருத்துக்களை கக்கி உரிமை தவிர வேறேதும் சலுகை வேண்டாம் என்ற கோடீஸ்வரர் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தையிட்டி காணிப் பிரச்சினைக்காக ஒவ்வொரு பௌர்ணமியும் போராடி வருகின்றது. உரிமைப் பிரச்சினை, காணிப் பிரச்சினையை முன்வைத்து தன் அரசியல் வாக்கு வங்கியைக் கட்டமைத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி இத்தேர்தலில் மிகுந்த பின்னடைவைச் சந்தித்தது. இக்கட்சியானது உதிரிகளான பலரையும் ஒன்றிணைத்து தமிழரசுக் கட்சிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் ஒரு சவாலாக இருப்பதாக கற்பிதம் செய்திருந்தது.

தங்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் நேரடிப் பிரதிநிதிகள் போலவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலை தாங்களே முன்னெடுப்பதாகவும் இவர்கள் தங்களைத் தாங்களே நம்ப ஆரம்பித்துவிட்டனர். அதற்கும் ஒருபடி மேலே போய் தேசியத் தலைவருக்குப் பின் அடுத்த தேசியத் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பிரச்சாரப் பிரங்கியான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்தார்.

ஆனால் தேர்தல் முடிவுகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை கீழ் நிலைக்குத் தள்ளியுள்ளது. 2018 பெப்ரவரியில் நடந்த உள்ளுராட்சித் தேர்தலில் 0.69 வீத வாக்குகளைப் பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வாக்கு வங்கி 0.68 வீத வாக்குகளாகக் குறைந்தது. 85,000 வாக்குளை 2018 இல் பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலில் 71,000 வாக்குகளையே பெற்று வடக்கு கிழக்கில் 4வாது இடத்துக்கு தள்ளப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்னமும் குண்டுச் சட்டிக்குள் குதிரையோடுவது போல் பெரும்பாலும் குடா நாட்டிற்குள்ளேயே செயல்படும் ஒரு கட்சியாகவே இன்றும் உள்ளது.

சுமந்திரனுக்கு எதிராக தனிப்பட்ட தாக்குதலை நடாத்தி வந்த பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தங்களுடைய பரம்பரை எதிரியாக உள்ள தமிழரசுக் கட்சியை அதன் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரனை நிராகரிக்க வேண்டும் என்பதையே அவர் தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனமாகக் கொண்டிருந்தார். கடந்த பத்து ஆண்டுகளாக சுமந்திரனுக்கு எதிரான பிரச்சாரத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அவர்களுடைய பிரதான ஆதரவுத்தளமான புலம்பெயர் தமிழர்களும் மேற்கொண்டு வந்தனர். ஆனால் வாக்குரிமையைக் கொண்ட களத்தில் வாழும் மக்கள் தங்கள் வாக்குகளை தமிழரசுக் கட்சிக்கும் சமந்திரனுக்கும் ஆதரவாகத் திருப்பி உள்ளனர். 2018 தேர்தலில் 2.73 விகித வாக்குகளைப் பெற்ற தமிழரசுக் கட்சி கடந்த வாரம் நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் 2.96 விகித வாக்குகளைப் பெற்றுள்ளது.

கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கட்சியாக கூட்டணியாகப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கடந்த வாரம் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் தனித்தப் போட்டியிட்ட போதும் கணிசமான வாக்குகளை அவர் பெற்றிருந்தனர். ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 0.85 வீத வாக்குகளைப் பெற்று 106 ஆசனங்களை வெற்றி பெற்றுள்ளது. அதே போல் தேசிய மக்கள் சக்தியும் கடந்த காலங்களில் எவ்வித ஆசனங்களும் இல்லாமல் தனது பயணத்தை ஆரம்பித்து இன்று வடக்கு கிழக்கின் இரண்டாவது பெரும் கட்சியாக தன்னை நிலைப்படுத்தி உள்ளது. எம் ஏ சுமந்திரனின் தேர்தல் வியூகம் அவர் இழந்த பலத்தை மீளப் பெறுவதற்கு வாய்ப்பைக் கொடுத்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியுடைய அரசியல் செயற்பாடுகள் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தொடர்ந்தால் தமிழ், சிங்களக் கட்சிகள் எதிர்கால அரசிலை தலைமுழுக வேண்டும் என்கிறார் ஒரு பெரியவர். அவரின் கணிப்பின் படி தேசிய மக்கள் சக்தி மிக மெதுவாக ஆனால் ஸ்தீரமாக முன்னேறுகின்றது.

அவர்களைக் கையாளும் ஆற்றல் தமிழ் தேசியக் கட்சிகளிடம் போதாமையாக இருப்பதை ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் குருசாமி சுரேன் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சிக்கும் – தமிழ் காங்கிரஸ்க்கும் இடையே உள்ள பரம்பரைப் போட்டியும் தனிநபர் தாக்குதலும், இவ்விரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான சூழ்நிலையைக் கடினமாக்கி உள்ளது. அதனால் எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது. இதனை ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் குருசாமி சுரேன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர்கள் யாழ் மாநகர சபையில் ஈபிடிபி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியுடனும் கூட இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாக குருசாமி சுரேன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

 

நாளாந்த பயணம் – இறுதிப் பயணமாகிறது ! 21 பேர் மரணம் ! இலங்கையின் வீதிகள் மரணவாயில்களா ?

நாளாந்த பயணம் – இறுதிப் பயணமாகிறது ! 21 பேர் மரணம் ! இலங்கையின் வீதிகள் மரணவாயில்களா ?

மே 11 கொத்மலையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 21 பேர் கொல்லப்பட்டு 30 பேர் காயப்பட்டுள்ளனர். இவ்வாவான விபத்துக்கள் நாளாந்த நிகழ்வுகளாகிவிட்டாலும் ஒரே விபத்தில் இவ்வளவு பெரும்தொகையானவர்கள் கொல்லப்பட்டது அண்மையில் நிகழ்ந்த கொடூரமான விபத்தாக மாறியுள்ளது. வழமையாக ஒரு விபத்தில் ஓரிருவரே கொல்லப்பட்டு வந்தனர். இலங்கையில் விபத்துக்கள் தற்செயலானவையல்ல. அவை தினமும் எதிர்பார்க்கப்படுபவையாக உள்ளது. இதற்கு கடந்த தசாப்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் மோசடிகள் முக்கிய காரணங்களாக இருந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் மலையகத்தில் நிகழ்ந்த மற்றுமொரு விபத்தில் வீதிப் பாவனைக்குரிய நிலையில் இல்லாத பஸ் கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு பள்ளத்தில் வீழ்ந்தில் சிலர் கொல்லப்பட்டனர். இவ்வாறு பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.

பாதுகாப்பற்ற – வீதிகள், மோசடியான வீதிப் பாவனைக்குரிய சான்றிதழ்கள், சரியான முறையில் பயிற்றுவிக்கப்படாத அல்லது லஞ்சம் கொடுத்து பெறப்படும் வாகன அனுமதிப் பத்திரங்கள், வீதிப் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்காத சாரதிகள் இவ்வாறு பல்வேறு காரணங்கள் இந்த விபத்துக்களுக்கு காரணமாகின்றது. அந்த வகையில் பொருத்தமற்ற வாகனச் சோடிணைகள் அகற்றப்பட்டுள்ளது. ஏனைய விடயங்கள் தொடர்பில் கூடுதல் இறுக்கங்கள் கொண்டுவரப்பட வேண்டும். வீதிப் போக்குவரத்து மிகக் கடுமையாக்கப்பட வேண்டும். நாளாந்த பயணங்கள் இறுதிப்பயணங்களாகக் கூடாது. 2024 இல் மட்டும் 2541 பேர் வீதி விபத்துக்களில் கொல்லப்பட்டுள்ளனர். 2019இல் 3,097 ஆக இருந்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டாலும் இது இன்னமும் குறைக்கப்பட வேண்டும்.

மேலும் மரணங்களைத் தவிர உடல் ஊனங்கள் மற்றும் குடும்பத்தின் பொருளாதார இழப்பு, மனநிலை பாதிப்பு, எதிர்காலம் என மதிப்பிட முடியாத பல துன்பியலுக்கு இந்த விபத்தக்கள் காரணமாகின்றன. இலங்கை போன்ற 22 மில்லியன் சனத்தொகை கொண்ட ஒரு நாட்டுக் இந்த விபத்துக்களும் அதனால் ஏற்படுகின்ற பொருளாதாரப் பாதிப்புகளும் மிக அதிகம். 70 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1,650 பேர் வரையானவர்களே வீதி விபத்துக்களில் இறந்துள்ளனர்.

இலங்கையில் இன்று இடம்பெற்ற விபத்தில் இந்த 21 பேரைத் தவிரவும் நாட்டின் ஏனைய பகுதிகளில் மேலும் ஐந்து பேர் வரை கொல்லப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த விபத்து மரணங்கள் தொடர்பில் இருக்கின்ற சட்டங்களை இறுக்கமாக அமுல்படுத்துவதுடன் தேவைப்பட்டால் புதிய சட்டவிதிமுறைகளைக் கொண்டுவரவேண்டும். மேலும் வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்தி சாரதிகளுக்கான தொடர்ச்சியான பயிற்சிமுறைகளை அமுஸ்படுத்த வேண்டும். வாகன வரியும் அதிகரிக்கப்பட வேண்டும். பொதுப் போக்குவரத்தை பாதுகாப்பானதாக்க வேண்டும்.

யாருடைய வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் ! எக்கட்சி தோற்கின் எக்கட்சி வெல்லும் !

யாருடைய வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் ! எக்கட்சி தோற்கின் எக்கட்சி வெல்லும் !

தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸ்ம் எழுபதுக்களில் தமிழ் மக்களிடம் பெருத்த அடியைவாங்கி வாக்கு வங்கியை இழந்தது. இழந்த வாக்கு மீளக் கைப்பற்ற அன்று இனவாதத்தைக் கக்கினர். தாங்கள் மீண்டும் மண்கவ்விவிடக் கூடாது என்பதற்காக தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸ்ம் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கினனர். அதன் உத்தியாக தமிழீழப் பிரகடனம் செய்தனர். அன்று இடதுசாரிகளுடன் ஆட்சியை அமைத்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு பல்கலைக்கழகத்தை அமைத்ததை மிகக் கடுமையாக எதிர்த்தனர்.

இன்றுவரை யாழ்ப்பாணத்தின் பெயர் சொல்லும் துரையப்பா ஸ்ரேடியம் – மைதானம் நியூ மார்க்கற் என்பன துரையாப்பா காலத்தில் நிர்மாணிக்கப்பட்டவை. அன்று மக்களுடன் மிக நெருக்கமாக இருந்த அல்பேட் துரையப்பாவுக்கு இயற்கை மரணம் இல்லை என தமிழ் தேசியம் முழங்கியது. இன்றைய பா உ அர்ச்சுனாவின், பா உ சிறிதரனின் ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் பெண்களை இழிவுபடுத்தும் மோசடிக்கும்பல் போல் அன்று துரையப்பா பெண்களை சிங்களவர்களுக்குக் கூட்டிக்கொடுக்கிறார் என்ற பொய்ப் பிரச்சாரங்கள் திட்டமிட்டு பரப்பப்பட்டன.உணர்ச்சிவசப்பட்ட விவேகமற்ற புலிகளின் தலைவர் பிரபாகரன் துரையப்பாவை தமிழ் தேசியத்தின் பெயரால் படுகொலை செய்தார். அடுத்த பத்து ஆண்டுகளுக்குப் பின் தனக்கு உத்தரவு போட்டவர்களையும் பிரபாகரன் படுகொலை செய்ய நேரிட்டது.

வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ளாவிட்டால் வரலாறு எம்மை மோசமாகத் தண்டிக்கும் என்பதை அண்மைய வரலாறும் மீள வலியுறுத்துகின்றது. தலைவர்கள் மட்டுமே மாறிய தமிழ் தேசியக் கட்சிகள் மீண்டும் தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸம் 2024 செப்ரம்பர் ஜனாதிபதித் தேர்தலிலும் நவம்பரில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தோல்வியடைந்தன. பெரினவாதத்தை ஜேவிபி அடக்க தமிழனவாதம் ஊற்றெடுத்தது.

தமிழ் காங்கிரஸின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரை தேசியத் தலைவர் என்றார் அதன் முக்கிய பிரமுகர் ‘வண்டு முருகன்’ எனச் செல்லமாக அழைக்கப்படும் கனகரத்தினம் சுகாஸ்.

நீங்கள் கரன்ட் தூண் என்றால் நாங்கள் கரண்ட் தொட்டா அடிச்சிடுவம் என்றவர் பா உ சிறிதரன். தற்போது ரோகன விஜய வீரவின் மானத்தைக் காப்பாற்றியவன் தமிழன் ஆனால் ஜேவிபி எங்கள் மானத்தை உருவுகின்றது என்று குமுறுகின்றார் பா உ சிறிதரன்.

மோசடி இணையத் தளங்களின் தமிழ் தலிபான்களின் தலைவராகியுள்ள பா உ அர்ச்சுனா மாவீரர்களிலும் பிரபாரனிலும் ஒட்டுண்ணியாகப் பற்றிக்கொண்டு தன்னுடைய பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றார்.

இதையெல்லாம் தாண்டி வட்டுக்கொட்டையில் என்பிபி – ஜேவிபி இலும் தாங்கள் ஒருவோட்டுக் குறைவாக எடுத்தாலும் தான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக கனகரத்தினம் சுகாஸ் சவால் விட்டுள்ளார். ஜேவிபி யை சவப்பெட்டிக்குள் அனுப்புவோம் எனவும் அவர் கூறுகின்றார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் ஊடகவியலாளர் சந்திப்பில் தங்களை யாழ் மக்கள் நிராகரித்தால் தையிட்டி விகாரை விடயத்திலிருந்து தாங்கள் ஒதுங்குவோம் எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து தேர்தலில் தோல்வியைச் சந்தித்த தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸ்ம் 1970க்களில் தோல்விக்குப் பின் வேண்டாத திருமணம் செய்து கொண்டது போல இப்போது மீண்டும் ஜேவிபியை – என்பிபியை தொற்கடிப்பதற்காக இணைய முயற்சிக்கின்றனர். தேர்தலுக்கு முன் இணையாவிட்டாலும் தேர்தலுக்குப் பின்னாவது இணைந்து உள்ளுராட்சி சபையைக் கைப்பற்றலாம் என எண்ணுகின்றனர்.

தமிழ் தேசியக் கட்சிகள் சுழல் பந்து வீச்சு, வேகப் பந்துவீச்சு, குறளிப் பந்துவீச்சு, குறுக்கால பந்து வீச்சு என்று பலவகையில் பந்து வீசினாலும் அது சமூக வலைத்தளங்களைத்தள கொசிப்புக்கு அப்பால் மக்களுடைய மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. ஏழு மாதங்களில் தேசிய மக்களின் சாதனைப் பட்டியல் மிக நீண்டதாகவே உள்ளது. வடக்கு – கிழக்கு கடற்கரையை ஆக்கிரமிக்கும் இந்தியப் படகுகளின் நடமாட்டம் கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்படுகின்றது. அரச அலுவல்கள் கணிசமான அளவு திறம்படச் செயற்படுகின்றது. பாதைகள், காணிகள் விடுவிக்கப்படுகின்றது. மக்கள் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்துள்ளனர். அண்மையில் விடுவிக்கப்பட்ட பாலாலி – வயாவிளான் வீதியில் பஸ் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டதை வரவேற்க பலர் கூடியுள்ளனர். அவ்வீதியின் பஸ் போக்குவரத்தை 1990க்களில் மேற்கொண்ட பெரியவர் அதனை வரவேற்கின்றார்.

நாளை நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களுக்கு பல செய்திகளைச் சொல்லும். கிராமங்களின் அபிவிருத்தி அதன் எதிர்காலம் என்பன நாளைய தேர்தல் முடிவுகளில் வெளிப்படும். தமிழ் தேசியம் முழுவீச்சில் தேசிய மக்கள் சக்தியை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் தேர்தலில் தங்கள் பரப்புரைகளை முடுக்கி விட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் சக்தியின் பிரதான வேட்பாளர் பேராசிரியர் கபிலன் வெற்றி பெற்றால் அவரை பதவியேற்க விடாமல் வழக்குத் தொடுத்து அவரது வெற்றியைப் பறிப்பேன் என சுமந்திரன் சபதமிட்டுள்ளார். எம் ஏ சுமந்திரனை தமிரசசுக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என பொன்னம்பலம் கஜேந்திரகுமார் கங்கணம் கட்டியுள்ளார். ஆனாலும் இருவரதும் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளதால் அவர்கள் மீண்டும் வேண்டாத திருமணத்தைச் செய்ய முனைந்துள்ளனர். இன்னுமொரு விவாகரத்துக்கு முத்தாய்ப்பு செய்கின்றனர்.

இவற்றுக்கு பதலளித்த அமைச்சர் சந்திரசேகரன் தமிழ் மக்களின் மனங்களை வென்றவராக மிக நிதானமாகவே பதிலளித்துள்ளார். அதில் அவர் தமிழ் தேசியம் பேசுகின்ற அதே பொழியாடல்களைத் தவிரத்து இருக்கலாம். ‘நொண்டி’ போன்ற சொற்றொடர்கள் ஊனமுற்றவர்களை அவர்களின் பெற்றோரை புண்படுத்துவதாக அமைந்ததாக ஊனமுற்ற பிள்ளையின் தந்தையும் அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ரட்ணசிங்கம் அனஸ்லி தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

அமைச்சர் சந்திரசேகரன் மற்றும் தேசிய மக்கள் சக்தி பா உ மீது தமிழ் தேசியம் மிகப்பாரிய அளவிலான அவர்களது உருவம், பேச்சு வழக்கு மற்றும் சமூகப் பின்னணிகளை வைத்து உடற்கேலிகள் செய்துவருகின்றனர். அதனால் வாக்காளர்கள் தமிழ் தேசியக் கட்சிகளில் இருந்து தங்களை அந்நியப்படுத்திச் செல்வதையே காணக்கூடியதாக உள்ளது. தமிழ் தேசியத்திற்கு தமிழ் மக்களைப் புரிந்துகொள்ள முடியவில்லையோ என்றே எண்ணத் தோண்றுகின்றது. அமைச்சர் சந்திரசேகரனும் தேசிய மக்கள் சக்தியும் தமிழ் மக்களும் ஒரே மொழியில் உரையாடுவதாகவே தோண்றுகின்றது. வரும் புதின் கிழமை யாருடைய வெற்றி என்பதும் இக்கட்சி தோற்கின் எக்கட்சி வெல்லும் என்பதும் தெரியவிந்துவிடும்.

நல்லை ஆதீன சுவாமிகளின் இரகசிய மரணம் அவர் சமாதியாகாமல் எரிக்கப்பட்டது ஏன் ? தன்ணுணர்வு இழந்தவர் எப்படி வாக்குமூலம் தந்தார் ? ஆதாரங்கள் எங்கே ?

நல்லை ஆதீன சுவாமிகளின் இரகசிய மரணம் அவர் சமாதியாகாமல் எரிக்கப்பட்டது ஏன் ? தன்ணுணர்வு இழந்தவர் எப்படி வாக்குமூலம் தந்தார் ? ஆதாரங்கள் எங்கே ?

 

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் (வயது 68) மே மாதம் முதலாம் திகதி உயிரிழந்தார். அவர் என்ன சுகயீனம் என்று காரணம் குறிப்பிடப்படாத வருத்தத்தின் காரணமாக, பெயர் குறிப்பிடப்படாத கொழும்பில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் அவர் இறந்ததாக ஆறுதிருமுருகனின் வட்டாரங்கள் செய்தியை வெளியிட்டன.

யாழில் ஒரு முக்கிய பிரமுகரான நல்லை ஆதீன சுவாமிகள் நோய்வாய்ப்பட்ட தோ கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டதோ அவருக்கு நெருங்கியவர்களுக்கோ தெரிந்திருக்கவில்லை. திடிரென அவர் இறந்த செய்தி ஆறுதிருமுருகனின் வட்டாரங்களால் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இச்செய்தி பலரையும் சென்றடைவதற்கு முன்னமே அவருடைய உடலும் 24 மணி நேரத்திற்குள்ளாக தகனம் செய்யப்பட்டுள்ளது.

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் இரண்டா வது குருமகா சந்நிதானமான ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளின் இயற்பெயர் சுந்தரலிங்கம் என்பதாகும். நல்லூரை சொந்த இடமாகக் கொண்ட இவர் 1970களின் ஆரம்பத்தில் நல்லை ஆதீன முதலாவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளால் துறவறம் வழங்கப்பட்டு, ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் என்ற நாமம் பெற்றார். 1981ஆம் ஆண்டு முதலாவது குருமகா சந்நிதானம் சமாதி நிலையை அடைந்தமையை தொடர்ந்துஇ நல்லை ஆதீனத்தின் இரண்டாவது குருமகா சந்நிதானமாக பட்டம்சூடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதலாவது குருமகா சந்நிதானம் சமாதி நிலையஅடைந்ததை அடுத்து அவருடைய உடல் நல்லை ஆதீனத்தில் சமாதியாக்கப்படும் எனவே சைவமக்கள் எதிர்பார்த்தனர். அதுவே நல்லை ஆதீனத்தின் பாரம்பரியமும். அவருடைய உடல் சமாதியில் வைக்கப்படும் என்றே செய்திகளும் வெளியாகின.

ஆனால் நல்லை ஆதின சுவாமிகளின் மதிப்பு உயர்ந்துவிடக்கூடாது மற்றையவர்களுக்கு இந்த இறுதிக் கிரியைகளில் வாய்ப்புகள் வந்துவிடக் கூடாது அவருடைய நன்மதிப்பை குறைத்துக் கொள்ளும் நோக்கோடு ஆறுதிருமுருகன், ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளை சமாதியில் வைக்கும் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். சுவாமிகள் தன்னை எரிக்கும்படி கேட்டதாகவும் தன்னையும் தான் சார்ந்த மேலும் இருவரும் தான் தனது இறுதிக்கிரியைகளில் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இலங்கையின் மத, அரசியல் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றிருக்க வேண்டிய இறுதிநிகழ்வை ஆறுதிருமுருகன் கனகச்சிதமாக ஒரு சாதாரணரின் இறுதிச்சடங்காக குறுக்கி தன்னுடைய நீண்டகால திட்டத்துக்கு அடிக்கல் கோலினார்.

நல்லை திருஞான சம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பரிபூரணமடைந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை அவருடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

நல்லை ஆதீனத்தை திருத்துவதற்கான முயற்சிகள் லண்டனில் உள்ளவர்களால் முன்னெடுக்கப்பட்டது. என் சச்சிதானந்தன் இதனை முன்னின்று ஆரம்பித்தார். அதற்கு ஆறுதிருமுருகன் நிதி சேகரிக்க ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து லண்டன் சைவப் பிரமுகர்கள் நிதியை வாரி இறைத்தனர். லண்டன் சைவமுன்னேற்றச் சங்கப் பிரமுகர்கள் இதில் முன்நின்றனர். கோடிக்கணக்கில் பணம் குவிந்தது. நல்லை ஆதினமும் சுவாமிகளும் ஆறு திருமுருகனின் கட்டுப்பாட்டிற்குள் வந்தனர். நல்லை ஆதீன சுவாமிகளின் உணவுக்கான நிதியைக் கூட ஆறுதிருமுருகனே கட்டுப்படுத்தி வந்துள்ளார். அவருக்கான உணவுக்கான நிதி சரியாக வழங்கப்படாததால் தனிப்பட்ட முறையில் சுவாமிகளுக்கு தான் நிதி வழங்கியாதாக யாழ் முக்கிய பிரமுகர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

காலமான ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தன்னை தன்னுடைய குரு தன்னைத் தெரிவு செய்தது போல் தனக்குப் பின் ஒருவரை வளர்த்தெடுத்து உருவாக்க முற்பட்டார். ஆனால் அதற்கு ஆறுதிருமுருகன் அனுமதிக்கவில்லை. சுவாமிகளுக்குப் பின் பெயருக்கு ஒருவரை நியமித்துவிட்டு பின் தானே குருவானலாம் என்ற கற்பனையில் இவர் இருந்திருக்கின்றார் என்ற விடயங்கள் தற்போது மெல்ல மெல்ல வெளிச்சத்திற்கு வருகின்றது.

புகழ்பெற்ற யோக சுவாமிகளின் பாரம்பரியத்தில் உருவானது நல்லை ஆதீனம். அதனை முன்னாள் அமைச்சர் டகளஸ் தேவானந்தாவின் அனுசரணையில் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அதிபராகி, யாழ் பல்கலைக்கழகத்தின் பேரவையில் இடம்பெற்று மெல்ல மெல்ல பிரபல்யமான ஆறுதிருமுருகன் கைப்பற்றுவதற்கு முழுமுயற்சியில் இறங்கியுள்ளார். குருவானவர் இறக்கின்ற போது தன்னிடம் சொத்துக்கள் உட்பட அனைத்தையும் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் செய்திகளைக் கசியவிட்டுள்ளார்.

யோக சுவாமிகளின் சீடனாக உருவானவர் ஹவாய் சுவாமி என்றழைக்கப்படும் சுப்பிரமணிய சுவாமி. இவர் ஒரு ஆங்கிலேயர். இவர் எண்பதுக்களில் இலங்கை வந்தபோது இவருக்கு உதவியாக அனுப்பி வைக்கப்பட்ட ரிஷிகரன் என்ற கோப்பாயைச் சேர்ந்த ஒருவர் தன்னை தொண்டன்சாமி என்று சொல்லிக்கொண்டு தற்போது ஆறுதிருமுருகனோடு ஒட்டிக்கொண்டுள்ளார். மதுப் பிரியரான இவரை ஆறுதிருமுருகன் ஆதீனக் குருவாக்கி அதன் பின் தானே குருவாகலாம் என்ற யோசனையில் செயற்படுவதாக நல்லை ஆதீனத்துக்கு நெருங்கிய வட்டாரங்கள் தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் காலமான சுவாமிகளை அறிந்த அவருடன் தொடர்பில் இருந்தவர்களைத் தொடர்புகொண்டதில் சில ஆச்சரியமான தகவல்கள் வெளிவந்துள்ளது. காலமான சுவாமிகளுக்கும் ஆறுதிருமுருகனுக்கும் நல்ல உறவு இல்லை எனத் தெரியவருகின்றது. ஆதீனத்துக்கு வருகின்ற முக்கிய பிரமுகர்கள் அரசியல் தலைவர்களுடன் சுவாமிகளை உரையாடவிடாமல் ஆறுதிருமுருகனே முந்திக்கொண்டு உரையாடுவதிலிருந்து இந்த அதிருப்தி எழுந்துள்ளது. மேலும் அவருடைய உணவுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியையே வெகுவாகக் கட்டுப்படுத்தியும் வந்துள்ளார் ஆறுதிருமுருகன்.

இந்தப் பின்னணியில் சுவாமிகள் மரணத்துக்கு முன் தனக்கு சொன்னதன் படி தான் செய்கிறேன் என ஆறுதிருமுருகன் சொல்வது ஏற்புடையதாக இல்லை. சுவாமிகளின் மரணமே தற்போது பல கேள்விகளை எழுப்புகின்றது. அவர் என்ன நோய்வாய்ப்பட்டு இருந்தார் ? அவர் ஏன் யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டார் ? கொழும்பில் எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ? யார் அவருக்கு சிகிச்சை அளித்தது ? யாழ் சைவர்களின் முக்கிய பிரமுகரான இவரின் மரணத்தை ஏன் அந்த மருத்துவமனை அறிவிக்கவில்லை ? அவர் ஏன் மரணமானார் என்பதும் மக்களுக்குச் சொல்லப்பட்டிருக்க வேண்டும் ?

முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் மரணம் போல் சுவாமிகளின் மரணமும் பல கேள்விகளை எழுப்புகின்றது.

இது தொடர்பில் தேசம்நெற்க்கு கிடைக்கின்ற மற்றுமொரு அதிர்ச்சித் தகவல் சுவாமிகள் சில காலமாகவே சுயநினைவை இழக்க ஆரம்பித்து விட்டார் என்பது. அவர் தன்னுடைய அங்கி அவிழ்ந்து வீழ்வதையே உணர இயலாத நிலையில் இருந்ததாக நல்லை ஆதீனத்துக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுயநினைவை இழந்தவர் தன்னுடைய மரணச்சடங்கை இப்படிச் செய்யுங்கள், இன்ன, இன்னார் தான் என்னுடைய இறுதிநிகழ்வில் உரையாற்ற வேண்டும் என்பதெல்லாவற்றையும் எப்படிச் சொன்னார். சொத்துக்களை எப்படி ஒப்படைத்தார்.

ஆறு திருமுருகன் தொடர்ந்தும் சைவர்களுக்கு நாமம் போட முடியாது. உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். நல்லை ஆதீனத்துக்கு மக்கள் எழுதி வைத்த சொத்துக்களுக்கு என்ன நடக்கின்றது. சிவபூமிக்கு மக்கள் எழுதி வைக்கும் சொத்துக்களுக்கு என்ன நடக்கின்றது. ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் மரணத்தின் பின்னணி என்ன ? உண்மைகள் உறங்குவதில்லை.

யாழில் வெப்பத்தின் அகோரத்தால் 8வது மரணம் !

யாழில் வெப்பத்தின் அகோரத்தால் 8வது மரணம் !

யாழ்ப்பாணத்தில் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் அதீத வெப்பம் காரணமாக  ஏப்ரல் 30 ஆம் திகதி வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அவ்வேளை அவரை வீதியால் சென்றவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்தனர் எனினும், வெப்பத்தால் ஏற்பட்ட பாதிப்பினால் மயக்கமடைந்து அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் வைத்தியர்கள் என கூறியுள்ளனர் .

இதே போன்றே கடந்த திங்கட்கிழமை இணுவில் பகுதியில் உள்ள தோட்டவெளியில் பயணித்துக் கொண்டிருந்தவர் வெப்பத்தால் ஏற்பட்ட பாதிப்பினால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. இவர்களுடைய இறப்போடு யாழில் வெப்பத்தின் கோராத்தால் உயிரிழங்தவர்களின் என்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மே, 2024இல் வெப்ப அலையோடு ஆரம்பித்த இந்த மரணங்கள் தற்போது எட்டாவது உயிரைப் பறித்துள்ளது. முதலாவது சம்பவம் மே 9, 2024 இல் ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

பொதுவாக வெளி வேலைகளில் ஈடுபடுபவர்களே இந்த வெப்ப கோரத்தின் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். 45 வயதுடைய ஒருவர் மது அருந்திவிட்டு இந்த வெப்ப அலைக்கு முகம்கொடுத்ததால் கொல்லப்பட்டுள்ளார். இவர் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதணையின் படி மிகுந்த நீர் வறட்சியே மரணத்திற்கான பிரதானமான காரணமாகச் சொல்லப்படுகின்றது.

பொதுவாக வெளி வேலைகளில் ஈடுபடுபவர்களே இந்த வெப்ப கோரத்தின் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். 45 வயதுடைய ஒருவர் மது அருந்திவிட்டு இந்த வெப்ப அலைக்கு முகம்கொடுத்ததால் கொல்லப்பட்டுள்ளார். இவர் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதணையின் படி மிகுந்த நீர் வறட்சியே மரணத்திற்கான பிரதானமான காரணமாகச் சொல்லப்படுகின்றது.

சில மாதங்களிற்கு முன்னதாக இரு ஆசிரியர்களின் மரணம் சம்பவித்து இருந்தது. இவையாவுமே நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆபத்தை கட்டியம் கூறி நிற்கின்றன.

இது தொடர்பான விழிப்புணர்வை அதிகாரிகள் ஏற்படுத்தி உள்ளார்களா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகின்றது. அரசு மக்களை இந்த வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ளும் அறிவுரைகளை வழங்க வேண்டும். பாடசாலைகள், பொது இடங்களில் நீர்ச்சாலைகள் அமைக்கப்பட வேண்டும். முன்னைய காலங்களில் வீட்டு படலைக் மேலாக வெய்யில், மழைக்கு ஒதுங்க கூரை வேய்ந்து இருப்பார்கள். ஆடு, மாடுகள் மற்றும் விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் தற்போது நவீனம் என்ற பெயரில் வேலிகள் அகற்றப்பட்டு மதில்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மரங்கள் தறிக்கப்பட்டு ஆளில்லா மாடி வீடுகள் கட்டப்படுகின்றது. இதன் விளைவுகளுக்கு தற்போது உயிரைக் கொடுக்க வேண்டியுள்ளது.

புதிதாக உருவாக உள்ள உள்ளுராட்சி சபைகள் இந்த வெப்ப அலை விடயத்தில் கூடிய கவனத்தைச் செலுத்த வேண்டும். பச்சை வேலிகள், மரங்கள் இல்லாத வீடுகளுக்கு பசுமை மீறல் வரியைக் கொண்டுவர வேண்டும். சோலையாக வைத்திருப்பவர்களுக்கு வரிக் குறைப்புச் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு தனிமனிதனும் தனது வாழ்நாளில் ஏற்படுத்தும் தாக்கத்தை சமநிலைப்படுத்த தாங்கள் உயிரோடு உள்ள காலம்வரை மாதம் ஒரு மரத்தை உருவாக்கி வளர்க்க வேண்டும் என செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மதிப்பீடு செய்துள்ளது.

எண்பதுக்களில் தாயகத்தின் குரலாக இருந்த ஆனந்தி அக்கா பிற்காலத்தில் புலிகளின் குரலாகி மௌனித்துக் கொண்டார் ! : தேசம் த ஜெயபாலன்

தமிழீழ விடுதலைப் போராட்டம் வீச்சுப் பெற்ற 1980க்களின் முற்பகுதியில், இலங்கைப் பேரினவாத அரசுகளின் கொடும் கரங்கள் தமிழ் மக்களை நசுக்கிய நாட்கள். இலங்கையின் வடக்கு கிழக்கில் என்ன நடைபெறுகின்றது என்பதை இலங்கைத் தேசிய ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்த காலம். மின்சார வசதியற்ற கிராமங்கள். தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத வரவேற்பறைகள். வானொலிகள் கோலோச்சிய காலகட்டம். அன்று பத்திரிகைகளை வாங்கும் வசதி குடும்பங்களில் இல்லை. சனசமூக நிலையங்களில் போய் பத்திரிகை படிக்கின்ற காலம். சன சமூக நிலையங்களிலும் ஒவ்வொரு பக்கத்தை ஒவ்வொருவர் வைத்து வாசிப்பார்கள். தகவலுக்கான கேள்வி மித மிஞ்சியிருக்கும். ஆனால் தகவல் கிடைப்பதற்கான வழிகள் மிக மிக அரிதாக இருந்த அந்தக் காலம்.

விரல் நுனியில் தட்டினால் செய்திவரும் இன்றைய காலத்தில் செய்திகளின் ஆயட்காலம் மிக மிக அரிது. அன்று நிலைமை அவ்வாறில்லை. 1986 இல் யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துகின்றார்கள் என்பதை அந்த ரெலோ இயக்கப் போராளிகள் அறிந்து உணர்ந்து கொள்ளவே பல மணிநேரம் ஆகியது. ஆவ்வாறான ஒரு காலகட்டத்தில் மக்கள் செய்திகளுக்காக ஏங்கினர்.

பிபிசி தமிழோசையில் ஆனந்தி அக்காவின் குரலால் தாயகத் தமிழர்கள் ஈர்க்கப்பட்டு இருந்தனர். அதேபோல் பிபிசி தமிழோசையில் சங்கர் அண்ணா, விமல் சொக்கநாதனும் குறிப்பிடத்தக்கவர்கள். சமகாலத்தில் பணியாற்றியவர்கள். விமல் சொக்கநாதன் சில ஆண்டுகளுக்கு முன் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டமை வருத்தத்திற்குரிய பதிவு. இவர்கள் வரிசையில் தாயக மக்களை தன்வசப்படுத்திய மற்றையவர் பிலிப்பைன்ஸ் வெரித்தாஸ் வானொலி அறிவிப்பாளராக இருந்த ஜெகத் கஸ்பர்.

எண்பதுக்களில் இவர்களின் குரல்களுக்காக மக்கள் தவமிருந்தனர். ஒரு நாளைக்கு 30 நிமிடங்களே ஒலிபரப்பாகும் இச்செய்தித் சேவைவைகளினூடாக மட்டுமே வடக்கு, கிழக்கு மற்றும் புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்களால் இலங்கையின் வடக்கு, கிழக்கில் என்ன நடக்கின்றது என்பதை அறியக் கூடியதாக இருந்தது. அன்றை நாட்களில் அப்போதைய இலங்கை அரசு பற்றரிகளைத் தடைசெய்த போது சைக்கிள் டைனமோக்களை வைத்து செய்தி கேட்ட காலங்கள் அது. தமிழ் மக்கள் மிக நெருக்கடியாக இருந்த காலத்தில் அவர்களுக்கு நம்பிக்கை அளித்த குரல் பிபிசி ஆனந்தியின் குரல். அதனால் அவர் என்றும் தமிழ் மக்களின் ஒரு செலிபிரேற்றியாகவே வாழ்ந்தார்.

இதனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் நெருக்கமானவராகவும் குடும்ப நண்பராகவும் மாறினார். செய்தி சேகரிப்புக்காகவும் அதற்கு மேலாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளுக்கும் மிகுந்த நட்பானார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை நேர்கண்ட மிகச் சிலரில் பிபிசி ஆனந்தி அக்கா குறிப்பிடத்தக்கவர். அதைவிட இந்தியாவின் ஹிந்து பத்திரிகையின் ஊடகவியலாளர் அனிதா பிரதாப், ஜெகத் கஸ்பர் ஆகியோரும் வே பிரபாகரனை நேர்கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பின்னணியில் பிபிசி ஆனந்தி அக்கா ஒரு ஊடகவியலாளராக அல்லாமல் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரப் பீரங்கியாகவே மாறினார். துரதிஸ்ட்ட வசமாக பிபிசி தமிழோசையில் இலங்கைத் தமிழர்களின் பாத்திரம் இவரோடு முடிவுக்கு வந்தது. ஆனந்தி அக்கா, விமல் சொக்கநாதன் ஆகியோரின் காலகட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் உள்வாங்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கு வளர்த்தெடுக்கப்பட வில்லை. அதனால் பிபிசி தமிழோசையில் இலங்கைத் தமிழர்கள் அதன் பாத்திரத்தை இழந்தனர்.

யாழ் சாவகச்சேரியைச் சேர்ந்த ஆனந்தி சூரியப்பிரகாசம் தனது சொந்த வாழ்வில் பல நெருக்கடிகளைச் சந்தித்தவர். உறவை விபத்தில் இழந்தவர். பிற்காலங்களில் முதமையில் தனது கணவரையும் இழந்தவர். இலங்கை வானொலியில் தயாரிப்பாளராக இருந்தவர். அப்போது வானொலி நாடகங்களில் நடித்தவர். அறிவிப்பாளராகப் பணியாற்றியவர். 1970க்களில் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்து பகுதிநேர அறிவிப்பாளராக பணியாற்ற ஆரம்பித்து பின் முழுநேர அறிவிப்பாளராக 2005 ஓய்வுபெறும்வரை இருந்தார். 2025 பெப்ரவரி 21இல் அவர் குரல் மௌனமானது.

ஆனந்தி அக்கா முரண்பட்ட கருத்துடையோருடனும் உறவைப் பேணி வருபவர். தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அவர் பற்றுக்கொண்டிருந்த போதும் ஏனைய விடுதலைப் போராட்ட அமைப்புகளுடனும் நல்லுறவைப் பேணி வந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஈபிடிபியினருக்கும் இடையே மோசமான பகைமுரண்பாடு நிலவிய காலகட்டத்திலும், தோழர் டக்ளஸ் தேவானந்தவுடனும் நல்லுறவைப் பேணியவர்.

தமிழ் புலமை மிக்க ஆனந்தி அக்கா தமிழ் இலக்கியத்திலும் மிகுந்த ஆர்வம் மிக்கவர். தொலைபேசி உரையாடல்களில் தமிழ் இலக்கியத்திலிருந்து பாடல்களை எனக்கு பாட்டிக்காட்டியுள்ளார். எப்போதும் ‘டேய்’, ‘என்னடா’ என்று வாஞ்சையோடு அழைக்கும் அவர், ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றுக்கு என்னையும் வற்புறுத்தி அழைத்திருந்தார். அவர் பல நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே என்னை அழைத்திருப்பார் என்பதும் எனக்குத் தெரியும். அப்போது என்னருகில் வந்து சொன்னார், “எப்பிடியும் போய் என்னைத் திட்டித்தான் எழுதப்போகின்றாய்” என்று வாஞ்சையுடன் திட்டிக்கொண்டார். நான் பிரித்தானியாவில் அவரைச் சந்தித்த பின் அவரை ஒரு ஊடகவியலாளராக ஒரு போதும் பார்த்ததில்லை.

இடையிடையே தொலைபேசியல் கதைத்துக் கொள்வார். என்னுடைய தனிப்பட்ட குடும்ப பிரச்சினைகள் உட்பட. ஒரு சகோதரியாக ஒரு நல்ல பண்பாளராக எனக்கு ஆனந்தி அக்கா மீது எப்போதும் ஒரு கௌரவம் உண்டு.

தையிட்டி விகாரை இடிக்கப்படக்கூடாது ! இடிக்கப்படமாட்டாது ! இன்னுமொரு இன மத கலவரத்துக்கு நெய்வார்க்கும் புலித்தோல் போர்த்த நரிகள் !

கடவுள் மனிதனைப் படைத்தானா அல்லது கடவுளை மனிதன் படைத்தானா என்றால் கடவுளை மனிதன் படைத்தான் என்பதற்கு தையிட்டி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. புத்தரா, சுத்தரா, யேசுவா, சிவனா, இல்லை தமிழ் கடவுளா, சிங்களக் கடவுளா, அல்லது கூறுகெட்ட கடவுளா என்றால் இந்த நாசமறுத்த மதங்களால் மனுசன் மிருகமானது தான் மிச்சம். மதங்கள் மனுசனின் மனிதாபிமானத்தின் கடைசிச்சொட்டு ஈவிரக்கத்தையும் வற்றச்செய்து மற்றையவனின் இதயத்தை பிளந்து தின்னும் வெறியோடு திரிகின்றனர்.

நாலு பேரை ரயரைப் போட்டு உயிரோடு கொழுத்தினால், அந்த மனிதக் கொழுப்பு எரிகின்ற வாசனையில் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கு ஒரு கூட்டம் தவிக்கின்றது. இந்த வாசனை இலங்கை மக்களுக்கொன்றும் புதிததல்ல. அதிகார வெறிகொண்ட சிங்கள, தமிழ் அரசியல்வாதிகள் கொலை அரசியலில் மிகக் கைதேர்ந்தவர்கள். இலங்கையின் வரலாற்றில் படுகொலைகள் அத்தனையும் அரசியல் தலைமைகளினால் ஊக்குவிக்கப்பட்டு, அரசியல் லாபங்களுக்காக மட்டுமே நடத்தப்பட்டன. 2009 ற்குப் பின் உயிர்கள் கொல்லப்படவில்லை, தங்களுடைய அரசியலை முன்னெடுக்க முடியவில்லை என்ற தவிப்பு குறும் தேசியவாத தமிழ், சிங்கள அரசியல் தலைவர்களிடம் தற்போது மேலோங்கி நிற்கின்றது. தமிழ், சிங்கள குறும்தேசியவாதத் தலைமைகள் என்னவிலை கொடுத்தும் தங்கள் இருப்பைத் தக்கவைப்பார்கள். அதற்கு அவர்களுக்கு இப்போதுள்ள ஒரே துருப்புச்சீட்டு தையிட்டி விகாரையும் ஒரு மத – இனக் கலவரமும்.

சிங்கள இனவாதிகளுக்கு எவ்விதத்திலும் குறையாதவர்கள் அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி. இவர்களுடைய சந்தர்ப்பவாத அரசியலுக்கு மிகச் சிறந்த எடுத்துகாட்டு, தாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொண்டே இவர்கள் விடுதலைப் புலிகளின் தலைவரை முதுகில் குத்தியவர்கள். அப்போது இவர்கள் வே பிரபாகரனின் துப்பாக்கிக்கு கட்டுப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்தார்கள். 2009 யுத்தம் மிகத் தீவிரம் பெற்ற காலத்தில் இவர்கள் யாரும் நாட்டில் இல்லை. இவர்கள் எல்லோருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்படப் போகின்றார்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் கொல்லப்படுவார் என்ற விடயம் 2009 முற்பகுதியிலேயே தெரியப்படுத்தப்பட்டு விட்டது. இதனை அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் எம் கெ சிவாஜிலிங்கம் 2009 முற்பகுதியில் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்து இருந்தார்.

இறுதி யுத்தம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் கட்டுப்பாட்டில் இருந்த வேர்கள் புலனாய்வுத்துறையின் புலனாய்வுப் பகுப்பாளர் முல்லை மதி கூறுகையில்: இரா சம்பந்தன் வே, பிரபாகரனின் மறைவுச் செய்திக்காக எப்படிக் காந்திருந்தார் என்பதையும் பஸில் ராஜபக்சவோடு இடம்பெற்ற உரையாடலையும் குறிப்பிட்டிருந்தமை இங்கு கவனிக்கத்தக்கது.

பொன்னம்பலம் கஜேந்திரகுமார், செல்வராஜா கஜேந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் அப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் தலைவரும் அழிக்கப்படப்போகிறார்கள் என்பது இவர்கள் அனைவருக்கும் மிகத் தெளிவாக அறிவுறுத்தப்பட்டது. இருந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளையோ அதன் தலைவர்களையோ காப்பாற்ற இன்று தங்களை விடுதலைப் புலிகளாக சித்தரிக்கும் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரோ, செல்வம் அடைக்கலநாதனோ, சிவஞானம் சிறிதரனோ (அப்பொழுது இவர் பாராளுமன்ற உறுப்பினர் இல்லை.) இதற்காகத் துடிக்கவில்லை.

இவர்கள் யாழ் குடாநாட்டு கிணறுகளில் மலசலம் கலந்து மக்கள் நோய்வாய்ப்படுவது பற்றியும் எவ்வித கவலையும் கிடையாது. அந்தக் குடிநீருக்கும் மத்தியப்படுத்தப்பட்ட கழிவகற்றலுக்கும் ஆப்பு வைத்தவரே சிவஞானம் சிறிதரன் மற்றும் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் போன்ற பா உ க்கள். இவர்களுக்கு தையிட்டியில் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரின் காணிகள் இழக்கப்பட்டது பற்றி எவ்வித அக்கறையும் கிடையாது. பா உ சிறிதரன் போன்றவர்களால் முண்டு கொடுத்து நிறுத்தப்பட்ட ரணில் விக்கிரமசிங்க – மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் தலைமையில் தான் இந்த விகாரைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இன்றைக்கு துடிக்கும் நீங்கள் அன்று அதனை நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் 1000 விகாரைகள் கட்ட திட்டம் போட்ட சஜித் பிரேமதாஸாவை ஆதரித்த தமிழரசுக் கட்சியில் தான் எஸ் சிறிதரன் இன்றும் தொங்கிக் கொண்டுள்ளார்.

சென்றவாரம் இந்த விகாரை உடைப்பு போலித் தமிழ் தேசிய பா உ க்கள் சஜித் தலைமையிலான எதிர்க்கட்சியைச் சந்தித்து உள்ளது. தமிழ் – சிங்கள பகுதிகளில் உள்ள இனவாத சக்திகளுக்கு, இப்போது நாட்டு மக்களிடையே ஏற்பட்டு வருகின்ற புரிந்துணர்வும், ஒடுக்கப்பட்ட சமூகங்களிடையே ஏற்படுகின்ற நெருக்கமும் பெரும் பதற்றத்தையும் தங்களுடைய இருப்புக்கே ஆபத்து ஏற்பட்டு இருப்பதையும் மிகத் தெளிவாகக் காட்டியுள்ளது. அதனால் தற்போதுள்ள சுமூகநிலையைச் சீரழிக்க நாட்டில் ஒரு இனக்கலவரம் அவர்களுக்குத் தேவைப்படுகின்றது. அதனால் தான்: பொன்னம்பலம் கஜேந்திரகுமார், சிவஞானம் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தையிட்டி விகாரை உடைத்து அகற்றப்பட வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லி வருகின்றனர். இவர்களுக்கு ஏற்றாற் போல் இவர்களின் பாராளுமன்ற நண்பன் உதயன்கம்பன்பில “தையிட்டியில் உள்ள திஸ்ஸ விகாரையில் தமிழர்களைக் கை வைக்க விடமாட்டோம்” என்று தெரிவித்துள்ளார். இவையெல்லாம் திட்டமிட்டு இனவாதத்தைக் கிளறி இரத்தக் களரியொன்றைக் காண வேண்டும் என இந்த அரசியல் வாதிகள் விடாமுயற்சியில் இறங்கி உள்ளதையே காட்டுகின்றது.

பா உ சிறிதரனின் தமிழரசுக் கட்சிக்கு தையிட்டி விகாரை அங்குரார்பணத்திற்கும் அழைப்பு விடுக்பபட்டிருந்தது. பொன்னம்பலம் கஜேந்திரகுமாரின் கட்சியில் சட்டத்தரணிகளுக்கா பஞ்சம், அப்படி இருக்கையில் நீதிமன்றத் தீர்ப்புக்க எதிராக விகாரை கட்டப்பட்டதாக சொல்லும் பொன்னம்பலம் கஜேந்திரகுமார், அந்த வழக்கு இலக்கத்தை ஏன் வெளியிடவில்லை.

தையிட்டியில் மக்களுடைய காணியில் அவர்களுடைய அனுமதியின்றி இராணுவம் புத்தவிகாரை அமைத்தது முற்றிலும் உண்மை. அதனை ஆரம்பத்திலேயே தடுத்திருக்க வேண்டும். ஆனால் தையிட்டி விகாரையை கட்டிய அரசாங்கத்துக்கு ஒரு தூணாக நின்றவர்களே தற்போது விகாரையை இடிக்கச் சொல்லி குரல் எழுப்புகின்றார்கள்.

மேலும் இவ்விகாரை, நயினா தீவு நாக விகாரையின் விகாராதிபதிக்கும் இராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டினால் கட்டப்பட்ட விகாரையாகும். இந்த விகாரை அமைப்பதற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள ஒருவர் தனது 20 பரப்புக் காணியையும் அன்பளிப்புச் செய்துள்ளார். இராணுவம் இவ்வாறான தான்தோறித் தனங்களில் ஈடுபட்டால் அதனைச் சட்டத்தின் மூலம் கையாண்டிருக்க வேண்டும். நீதி மன்றத்துக்கூடாக தடையுத்தரவுகளைப் பெற்றிருக்க வேண்டும். மேல் நீதிமன்றத்துக்குச் சென்றிருக்க வேண்டும். பாராளுமன்றத்தில் போராடியிருக்க வேண்டும். ஆனால் இந்த தமிழ் தேசிய சட்டத்தரணிகள் இதுவரை சட்டரீதியாக ஒரு துரும்பையும் அசைக்கவில்லை. குறைந்தபட்சம் ஒரு பொலிஸ் முறைப்பாடு கூடப் பதிவு செய்யப்படவில்லை. ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதும் அவ்வப்போது விகாரைக்கு முன்னால் நின்று படம் எடுத்து போஸ்ற் போடுவதுமாகவே உள்ளனர்.

தங்களுடைய காணிகள் தங்களுக்கு வேண்டும் என்று கோருவதற்கு காணி உரிமையாளர்களுக்கு முழு உரிமையும் உண்டு. ஆனால் ஒரு விகாரை கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் அதனை உடைக்கக் கோருவது அல்லது அதனை அப்புறப்படுத்தக் கோருவது. ஒரு ஆரோக்கியமான முடிவல்ல. மேலும் இப்போராட்டம் அரசியல் வாதிகளுக்கு அழைப்புவிடுத்து தற்போது அரசியல்வாதிகளின் போராட்டமாக மாற்றப்பட்டுவிட்டது. குறிப்பாக பொன்னம்பலம் கஜேந்திரகுமார், சிவஞானம் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான தையிட்டி விகாரையை உடைத்து அப்புறப்படுத்தும் போராட்டமாக மாற்றப்பட்டு விட்டது, இந்தப் போராட்டம் காணி உரிமையாளர்களின் கையில் இல்லை. இது ஆரம்பத்திலிருந்தே பொன்னம்பலம் கஜேந்திரகுமார் மற்றும் சிவஞானம் சிறிதரனின் இனக்கலவரத்தைத் தூண்டுவதற்கான போராட்டம். அதில் செல்வம் அடைக்கலநாதனும் தெற்கில் உதயகம்பன்பிலவும் இணைந்தகொண்டுள்ளனர்.

இந்த விகாரை கட்டப்பட்டதற்கும் சிவஞானம் சிறிதரனுக்கும் பொன்னம்பலம் கஜேந்திரகுமாருக்கும் இருக்கும் சம்பந்தம் கூட தேசிய மக்கள் சக்த்தி அரசாங்கத்துக்குக் கிடையாது. அவர்கள் மதம் என்பதை மக்களுக்கு போதையூட்டும் ஒரு நிறுவனமாகவே பார்க்கின்றனர். அதனால் தான் நாக விகாராதிபதியைக் கூட ஜனாதிபதி அனுர சென்று சந்திக்கவில்லை. நாக விகாராதிபதி அனுரவை நம்பமுடியாது என்றும் அவர் மத நம்பிக்கையற்றவர் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்த மிக முக்கியமான பெண் ஆளுமை மாவீரர்களின் தாய், போராளி தமிழ் கவி அம்மா மாவீலாறு அணை விளையாட்டாக மூடப்பட்டது எவ்விதம் வினையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முடிவை நோக்கிச் சென்றது என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதே போல் 2006 முதல் பொங்கு தமிழ் நடத்தி போருக்கு அழைத்தபோதும் புலம்பெயர் தமிழர்கள் பெரும்பாலும் யாழ்பாணத்து புலம்பெயர் தமிழ் தேசியவாதிகள் ஷெல் தங்கள் மீது விழாது என்பதை நன்றாகத் தெரிந்துகொண்டு யுத்த போதையேறி நின்றனர். எவ்வளவுக்கு அதிகமாக மக்கள் சாகின்றார்களோ அவ்வளவுக்கு சர்வதேச நாடுகள் தலையீடு செய்து தமிழர்களுக்கு தீர்வுகொண்டு வந்து தரும் என்று முட்டாள்தனமாக நம்பினர். தமிழர்களை வழிநடாத்திய முட்டாள்தனமான அரசியல் தான் தமிழர்களை இந்நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தியது. அதில் யாழ்ப்பாணத்து தமிழ் தலைமைகளுக்கு முக்கிய பங்குண்டு. ஆனால் நடந்துமடிந்த யுத்தத்தைப் பயன்படுத்தி நான் உட்பட யாழ்ப்பாணத்து மக்கள் தொகையில் மூன்றில் ஒன்று வெளிநாடு சென்றுவிட்டது. இன்னுமொரு மூன்றில் ஒன்று பொன்னம்பலம் கஜேந்திரகுமார், சிவஞானம் சிறிதரன் போன்று கொழும்பில் ஒரு வீடு யாழ்ப்பாணத்தில் ஒரு வீடு என்று வாழ்கிறது. ஆனால் இவர்களை நம்பினால் தையிட்டி குடும்பங்களுக்கு அவர்களுடைய ஆயுட்காலத்தில் காணி கிடைப்பதற்கான வாய்ப்பு கிடையாது.

அதனால் தையிட்டி உரிமையாளர்கள் முதலில் தற்போது புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள மக்கள் நலன்சார்ந்த அரசுக்கு தங்களுடைய பிரச்சினையை விளக்கி, ஆதாரங்களை வழங்கி, ஒரு நிரந்தரத் தீர்வுக்கு வரவேண்டும். அந்தத் தீர்வு இனிமேல் விகாரையை இடித்து காணியைத் தர வேண்டும் என்று கோருவதாக இருக்க முடியாது. ஏனெனில் அது இலங்கையில் இன ஐக்கியத்தை சீர்குலைப்பதுடன் எதிர்காலத்தில் தவறான முன்ணுதாரணமாக அமையும். தையிட்டி விகாரை தமிழ் மக்களின் இன ஐக்கியத்துக்கான சமிக்ஞ்யையாக அடையாளமாக மாற வேண்டும். விகாரைக்கு மிக அவசியமான காணியைத் தவிர ஏனைய காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் பெரும்பாலும் அனைத்து பௌத்தர்களும் உடன்படுகின்றனர். தமிழ் மக்களும் விதிவிலக்கல்ல. அவர்களும் விகாரையை உடைக்க வேண்டும் அப்புறப்படுத்த வேண்டும் என்று கேட்கும் அளவுக்கு தரம்தாழ்ந்துவிடவில்லை. இதனை வைத்து சுயநல அரசியலை முன்னெடுப்பவர்கள் இதிலிருந்து ஒதுங்கினால் மக்களே தங்களுடைய பிரச்சினையை சுமூகமான விழியில் தீர்த்துக் கொள்வார்கள். அதனால் விகாரை உடைக்கப்படக் கூடாது. உடைக்கப்பட மாட்டாது.

தமிழகம் ஒரு காலகட்டத்தில் பௌதத்திற்கு மாறிய போது தமிழகத்திற்கு அருகிலிருந்த வட இலங்கையிலும் பௌத்தம் பரவியது. இலங்கைக்கு பௌத்தத்தை கொண்டுவந்தவர்கள் தமிழர்களே. அதனால் வடபகுதியில் பௌத்த மத வரலாற்றுச் சான்றுகள் கிடைப்பது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. பௌத்தம் தமிழர்களுடைய மதம். அதன் பின்னரே அது சிங்களவர்களுடைய மதமானது. ஆனாலும் இந்து சமயமமும் பௌத்தமும் மிகுந்த உறவைக்கொண்ட சமயங்கள். இந்து சமய சாமிகளின் படங்கள் திருவுருவங்கள் இல்லாத பௌத்த விகாரைகள் இலங்கையில் இல்லை.

1980க்கள் வரை யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் கணிசமான அளவில் வாழ்ந்தனர். அவர்களுடைய பேக்கரித் தொழில் மிகச் செழிப்பாக இருந்தது. யாழில் சிங்களவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், வடக்கைவிட்டு துரத்தப்பட்டனர். பின்னர் முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தையும் வடக்கையும் விட்டு துரத்தப்பட்டனர். அவர்கள் தங்களுடைய காணி, நில புலங்களை விட்டுவிட்டுத்தான் சென்றனர். வன்னியில் அரச காணிகள் யாழ்ப்பாணத்தாருக்கு வழங்கப்பட்ட போது மலையகத்திலிருந்து வந்த காணியற்ற மக்களுக்கு யாழ்ப்பாண அதிகாரிகள் காணிகளை வழங்கவில்லை. இன்றும் அந்த மக்கள் காணி அற்றவர்களாகவே வாழ்கின்றனர். யாழ்ப்பாணத் தலைமைகள் இனவாதத்தைக் கக்கி அதிகாரத்தைக் கைப்பற்ற, வன்னி, மலையகம், கிழக்கு மக்கள் போராடி மாண்டனர். யாழ்பாணத்தார் வெளிநாடு சென்றனர். இந்த அரசியலை ஜி ஜி பொன்னம்பலம் செய்தார். இப்போது அவருடைய பேரன் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரும் செய்கின்றார்.

வெள்ளாளர் வாழும் இடங்களில் ஒடுக்கப்பட்டசமூகத்தவர் காணிகளை வாங்க அனுமதிப்பதில்லை. இன்றும் ஆலயங்களில் ஒடுக்கப்பட்ட சமூகத்தவர் சாமிக்கு எட்ட நிற்பதற்காக பல விதிமுறைகள் உள்ளது. இன்றும் யாழ் மண்ணில் ஒடுக்கப்படுகின்ற சமூகங்களின், மலையகத் தமிழர்களின் ஒடுக்குமுறைக்கு குரல் கொடுக்க ஒரு கஜேந்திரகுமார், ஒரு சிறிதரன், ஒரு அடைக்கலநாதன் கிடையாது. ஆனால் பௌத்த விகாரையை உடைக்க நான் முந்தி நீ மூந்தி என்று போட்டி போட்டுக்கொண்டு வருகின்றனர். ஒரு காலத்தில் கரவெட்டியில் உள்ள கன்பொல்ல போன்ற கிராமங்கள் உருவாகத் தான் இந்த வலதுசாரித் தமிழ் தேசியம் வழிகோலும்.

தமிழ் வாக்காளரின் மின் அதிர்ச்சி வைத்தியத்தில் 5 பாராளுமன்ற உறுப்பினர்கள்; இரு அமைச்சர்கள் உட்பட 11 பேர் அகற்றப்பட்டுள்ளனர்!

 

இலங்கை எங்கும் என்பிபி சுனாமி! தமிழ் தேசியவாதம் வடக்கு கிழக்கில் மரண அடிவாங்கியது!! தமிழரசு சாணக்கியன் தேர்தலில் விசேட சித்தி!!!

சென்ற பாராளுமன்றத்திற்கு தெரிவான தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன், ஜனா, பிள்ளையான், ராமநாதன் அங்கஜன், டக்ளஸ் தேவானந்தா, செல்வராஜா கஜேந்திரன், எம் ஏ சுமந்திரன் இத்தேர்தலில் தங்கள் ஆசனங்களை இழந்துள்ளனர். விக்கினேஸ்வரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் இருவரும் பார்பெமிட் விவகாரம் வெளியானதும் தாங்களாகவே தோல்வியை எதிர்பாரத்து தேர்தலில் இருந்து விலகினர். இரா சம்பந்தன் மரணத்தை தழுவினார். இப்படியாக இலங்கைப் பாராளுமன்றத்திலிருந்து 11 பழைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கடந்து அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இலங்கை வரலாற்றில் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவே முதல்தடவவையாகும். ஒரு இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதல் வாக்குகளையும் ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி சுவீகரித்துக்கொண்டுள்ளது. விதிவிலக்காக மட்டக்களப்பில் மட்டும் தேசிய மக்கள் சக்தி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சிறுபான்மைக் கட்சிகள் அவர்களுடைய சொந்த மண்ணில் மண் கவ்வுகின்றனர். வடக்கு, கிழக்கு, மலையகம் எங்கும் தேசிய மக்கள் சக்தி வாக்குகளைக் குவித்து ஆசனங்களையும் குவித்துள்ளது. தமிழ், முஸ்லீம், மலையகக் கட்சிகள் இரண்டாம், மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

தேசிய நல்லிணக்கத்தில் நின்று போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை வேட்பாளர் அருண் ஹேமச்சந்திரா மட்டுமே தமிழர்கள் மத்தியிலிருந்து சென்றும் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களின் வாக்குகளையும் பெற்று மூவின மக்களின் செல்வாக்கோடும் பாராளுமன்றம் சென்ற ஒரே தமிழ் வேட்பாளராக உள்ளார். திருகோணமலையில் என்பிபி திசைகாட்டி இரு ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி தொலைபேசி ஒரு ஆசனத்தையும் தமிழரசுக் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.

இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கட்சி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டது இதுவே முதற் தடவையாகும். இந்நிலை யாழ் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் வடக்கு கிழக்கின் ஏனைய மாவட்டங்களிலும் காணப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தி தமிழர் பெரும்பான்மையாக வாழும் அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் வாக்குகளைப் பெற்று நாட்டில் மட்டுமல்ல தமிழ் மக்களின் பூர்வீக தாயகப் பிரதேசங்களிலும் கூடுதல் வாக்குகளையும் ஆசனங்களையும் பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி திசைகாட்டி யாழில் மூன்று ஆசனங்களையும் தமிழரசுக் கட்சி வீடு, தமிழ் காங்கிரஸ் சைக்கிள், ஊசி சுயேட்சைக் குழு தலா ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.

இத்தேர்தலில் விதிவிலக்காக இலங்கையில் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தமிழரசுக் கட்சி கூடுதல் வாக்குகளையும் ஆசனங்களையும் பெற்று முன்னிலை வகிக்கின்றது. தமிழரசுக் கட்சியின் எம் ஏ சுமந்திரனின் நண்பரான இராசமாணிக்கம் சாணக்கியன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 60,000க்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளளார். அவருக்கு அடுத்த படியாக ஞானமுத்து சிறினேசன் முன்னணி வகிக்கின்றார். வடக்கு கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே தமிழரசுக் கட்சி கூடுதல் வாக்குகளையும் கூடுதல் ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது. மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி வீடு மூன்று ஆசனங்களையும் என்பிபி ஒரு ஆசனத்தையும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய தமிழ்தேசிய அரசியலானது கிழக்கை நோக்கி நகரத்தப்பட்டுள்ளதையே இது காட்டுவதாக பலரும் விமர்சனம் முன்வைத்துள்ளனர்.

வடக்கு கிழக்கில் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட பாரம்பரிய தமிழ் ஊடகங்களால் புனையப்பட்ட தமிழ் தேசியவாதக் கதையாடல்கள் எதற்கும் தமிழ் மக்கள் செவிமடுக்கவில்லை. ஜோதிலிங்கம், நிலாந்தன் போன்ற ஊடகவியலாளர்கள் விமர்சகர்களின் கருத்துக்களை வடக்கு கிழக்கு மக்கள் கணக்கில் கொள்ளவில்லை. அதனால் அங்குள்ள ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தமிழ் தேசியத்துக்கு வாக்களிக்காத தமிழ் மக்களை அறிவற்றவர்கள், துரோகிகள், கற்பனாவாதிகள் என தமக்கு வாய்க்கு வந்தபடி விமர்சனங்களை வைக்கின்றனர். தமிழரசுக் கட்சிக்கு எதிராக தனது ஊடகத்தை முடுக்கிவிட்ட ஐபிசி பாஸ்கரனின் கருத்துநிலைப்பாட்டை மக்கள் முற்றாக ஒதுக்கித் தள்ளியுள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தமிழரசு வீடு எம் ஏ சுமந்திரன் அல்லது சிறிதரன் தங்கள் வீட்டுக்கே அனுப்பப்பட்டுள்ளார்க்ள். ஈபிடிபி வீணை டக்ளஸ் தேவானந்தா, ரஎம்விபி பிள்ளையான் ஆகியோர் தங்கள் ஆசனங்களை இழந்துள்ளனர். சங்கு இத்தேர்தலில் தன்னுடைய அத்தனை பாராளுமன்ற ஆசனங்களையும் இழந்துள்ளது. செல்வம் அடைக்கலநாதன் மட்டும் தன்னுடைய ஆசனத்தை தக்க வைத்துள்ளார். வன்னியில் திசைகாட்டிக்கு இரண்டு ஆசனங்களும் தமிழரசுக் கட்சிக்கு ஒரு ஆசனமும் சங்குக்கு ஒரு ஆசனமும் கங்காருவுக்கு ஒரு ஆசனமும் கிடைத்துள்ளது. வீட்டிலிருந்து வெளியேறி சங்கில் போட்டியிட்ட தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன், ஜனா ஆகியோர் தங்கள் ஆசனங்களை இழந்தனர். வீட்டிலிருந்து வெளியேறி வெவ்வேறு கட்சிகளிலும் போட்டியிட்ட அனைவரும் தேர்தலில் மண் கவ்வினர். வீட்டிலிருந்து பிரிந்து சென்ற சைக்கிளில் சவாரி செய்து அதிலிருந்து பிரிந்து மானில் நின்றவர்கள் யாவரும் தோல்வியடைந்தனர். சைக்கிளில் டபிள்ஸ் போனவர்கள் இப்போது சிங்கிளாகத்தான் போகவேண்டியுள்ளது. இதில் இனி யார் போறது என்ற சண்டை உருவாகி சைக்கிள் திருப்பியும் உடையலாம் எனவும் தகவல்கள் கசிகின்றது. சைக்கிளில் டபிள்ஸ் சென்ற செல்வராஜா கஜேந்திரன் ஆசனங்களை இழந்துள்ளர். தபால் பெட்டி கட்சியில் நின்ற ராமநாதன் அங்கஜன் முகவரியற்றுப்போனார்.

பத்தாவது பாராளுமன்றத் தேர்தலை கிலுகிலுப்பாக சுவாரஸ்யமாக வைத்திருந்த ஊசிக்குழு இத்தேர்தலில் ஒரு ஆசனத்தை வெற்றிகொண்டுள்ளது. அண்மைய வரலாற்றில் சுயேட்சைக் குழவில் ஒருவர் போட்டியிட்டு பாராளுமன்றம் தெரிவாகியிருப்பது இதுவே முதற்தடவை. நேற்று மத்திய கல்லூரியில் வாக்கு எண்ணும் நிலையத்துக்குச் சென்றும் அர்ச்சுனா பிரச்சினையில் ஈடுபட்டுள்ளார். ஒரு ‘கொமடிப்பீஸ்’ ஆக மாறிவரும் அர்ச்சுனா தனது சொந்தக் குடும்ப விவகாரங்களையும் சமூக வலைத்தளத்திலேயே பதிவேற்றி வருகின்றார். அவருடைய படுக்கையறையும் கழிவறையும் மட்டுமே இன்னமும் சமூகவலைத் தளங்களில் வரவில்லையெனப் பலரும் நகைக்குமளவுக்கு அவர் ஒரு சமூகவலைத்தளப் பிரியராக உள்ளார். மருத்துவ மாபியாக்களை எல்லாம்விட்டுவிட்டு இப்போது அவர் மாப்பிளை மாபியாவாக பாராளுமன்றம் செல்ல உள்ளார். அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கிறாரோ இல்லையோ அரசியலை சுவாரஸ்யமாக்கி தமிழ் மக்களை முட்டாள்களாக்கிவிடுவரோ என்ற அச்சத்தில் பலர் உள்ளனர்.

இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத் தேர்தலில் நாடு முழவதும் சராசரியாக மூன்றில் ஒரு மக்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. தேசிய மக்கள் சக்தி தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுவிடும் என்பதால் சிலர் தங்களுடைய வாக்குகள் அவசியமில்லை எனக் கருதியிருக்கலாம். இன்னும் சிலர் வயோதிபம் காரணமாக வாக்களிப்பு நிலையங்களுக்கு போய்வருவதற்கான வசதிகள் இல்லாததால் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது விட்டுள்ளனர். மேலும் கணிசமான வாக்குகள் செல்லாத வாக்குகளாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சில கட்சிகள் பெற்ற வாக்குகளிலும் பார்க்க செல்லாத வாக்குகள் அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் யாழ்ப்பாணத்தில் என்பிபி அலையை முடக்கிவிட்டதில் அதன் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரின் பங்களிப்பு கணிசமானது. ஒரு குறுகியகாலத்தில் தெற்கில் இருந்த என்பிபி அலையை வடக்குக்கும் மடைமாற்றி விட்டவர் இராமலிங்கம் சந்திரசேகர் என்பதை ஜனாதிபதி அனுராவும் யாழ் வந்திருந்த போது குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது. யாழ் மற்றும் தமிழ் மக்களின் நலன்சார்ந்த வீதிகளைத் திறப்பது, காணிகளை விடுவிப்பது, மாகாணசபையை அமுல்படுத்துவது போன்ற தமிழ் மக்கள் சார்ந்த விடயங்களை கட்சியின் மேல்மட்டங்களுக்கு கொண்டு சென்றதில் வடக்கில் ராமலிங்கம் சந்திரசேகரும் கிழக்கில் அருண் ஹேமசந்திராவும் குறிப்பிடத்தக்கவர்கள். இராமலிங்கம் சந்திரசேகர் தேசியப் பட்டியலூடாக பாராளுமன்றம் செல்லவுள்ளார். அருண் ஹேமச்சத்திரா திருகோணமலையிலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இருவரும் நவம்பர் 21 இல் கூடும் புதிய பாராளுமன்றத்தில் அமைச்சர்களாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அருண் ஹேமச்சந்திரா ஜேவிபி – என்பிபி க்குள் வளர்ந்து வருகின்ற மூவின மக்களாலும் வரவேற்கப்படுகின்ற ஒரு தலைவராக வளர்ந்து வருகின்றார். ஒரு காலத்தில் இலங்கையின் ஆட்சிபீடத்திற்கும் அவர் வரலாம் என சிலர் கட்டியம் கூறுகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும் பாராளுமன்றத் தேர்தல் அது நேற்று முடிவடைந்துவிட்டது. அடுத்து பிரதேச சபைத்தெர்தலுக்கு நாடு தயாராகப் போகின்றது. ”வெற்றி மீது வெற்றி வந்து எம்மைச் சேரும் அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் மக்களைச் சேரும்” என்ற களிப்பில் உள்ள தேசிய மக்கள் சக்தி ஜனவரியில் பிரதேச சபைத் தேர்தலையும் அதனைத் தொடர்ந்து மாகாணசபைத் தேர்தலையும் நடாத்த உள்ளது. பாரானுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றுவதால் அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கு அவர்களுக்கள்ள ஒரே தடை பொருளாதாரமே. ஆனால் அதற்கான மாற்றுவழிகளை அவர்களால் ஏற்பாடு செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர். நவம்பர் 21 முதல் பாரிய முன்னேற்றகரமான மாற்றங்களை நோக்கி நாடு நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேசம்நெற் எதிர்வு கூறிய பல்வேறு அம்சங்களும் இத்தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை எங்கும் என்பிபி சுனாமி! தமிழ் தேசியவாதம் வடக்கு கிழக்கில் மரண அடிவாங்கியது!! தமிழரசு சாணக்கியன் தேர்தலில் விசேட விசேட சித்தி!!!

தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையைக் கடந்து அறுதிப் பெரும்பான்மையை வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளதாக எண்ணப்பட்டுக்கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதல் வாக்குகளையும் ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி சுவீகரித்துக்கொண்டுள்ளது. விதிவிலக்காக மட்டக்களப்பில் மட்டும் தேசிய மக்கள் சக்தி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சிறுபான்மைக் கட்சிகள் அவர்களுடைய சொந்த மண்ணில் மண் கவ்வுகின்றனர். வடக்கு, கிழக்கு, மலையகம் எங்கும் தேசிய மக்கள் சக்தி வாக்குகளைக் குவித்து ஆசனங்களையும் குவித்து வருகின்றது. தமிழ், முஸ்லீம், மலையகக் கட்சிகள் இரண்டாம், மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கட்சி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டது இதுவே முதற் தடவையாகும். இந்நிலை யாழ் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் வடக்கு கிழக்கின் ஏனைய மாவட்டங்களிலும் இந்நலையே காணப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தி தமிழர் பெரும்பான்மையாக வாழும் அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் வாக்குகளைப் பெற்று நாட்டில் மட்டுமல்ல தமிழ் மக்களின் பூர்வீக தாயகப் பிரதேசங்களிலும் கூடுதல் வாக்குகளையும் ஆசனங்களையும் பெற்று முன்னிலை வகிக்கின்றது. தேசிய மக்கள் சக்தி யாழில் இரண்டு முதல் மூன்று ஆசனங்களையும் தமிழரவுக் கட்சி ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களையும் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்தேர்தலில் விதிவிலக்காக இலங்கையில் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தமிழரசுக் கட்சி கூடுதல் வாக்குகளையும் ஆசனங்களையும் பெற்று முன்னிலை வகிக்கின்றது. தமிழரசுக் கட்சியின் எம் ஏ சுமந்திரனின் நண்பரான இராசமாணிக்கம் சாணக்கியன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 60,000க்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளளார். அவருக்கு அடுத்த படியாக் ஞானமுத்து சிறினேசன் முன்னணி வகிக்கின்றார். வடக்கு கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே தமிழரசக் கட்சி கூடுதல் வாக்குகளையும் கூடுதல் ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது. மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி இரண்டு முதல் மூன்று ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்ககு கிழக்கில் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட பாரம்பரிய தமிழ் ஊடகங்களால் புனையப்பட்ட தமிழ் தேசியவாதக் கதையாடல்கள் எதற்கும் தமிழ் மக்கள் செவிமடுக்கவில்லை. ஜோதிலிங்கம், நிலாந்தன் போன்ற ஊடகவியலாளர்கள் விமர்சகர்களின் கருத்துக்களை வடக்கு கிழக்கு மக்கள் கணக்கில் கொள்ளவில்லை. அதனால் அங்குள்ள ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தமிழ் தேசியத்துக்கு வாக்களிக்காத தமிழ் மக்களை அறிவற்றவர்கள், துரோகிகள், கற்பனாவாதிகள் என தமக்கு வாய்க்கு வந்தபடி விமர்சனங்களை வைக்கின்றனர். தமிழரசுக் கட்சிக்கு எதிராக தனது ஊடகத்தை முடுக்கிவிட்ட ஐபிசி பாஸ்கரனின் கருத்துநிலைப்பாட்டை மக்கள் முற்றாக ஒதுக்கித் தள்ளியுள்ளனர்.

இலங்கையின் 10வது பாராளுமன்றத்தை தெரிவு செய்வதற்கு நடைபெற்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாறு காணாத சாதனையை நிகழ்த்தி வருகின்றது. சுதந்திர இலங்கையில் முதற்தடவையாக வடக்குக் கிழக்கும் தெற்கும் இணைந்து இனவாதத்தை புறம் தள்ளி ஒரு தேர்தலைச் சந்திக்கின்றனர். இலங்கைப் பாராளுமன்றத்துக்கான 225 உறுப்பினர்களில் 196 உறுப்பினர்கள் வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்பட உள்ளனர். 29 உறுப்பினர்கள் தேசியப்பட்டியலில் இருந்து தெரிவு செய்யப்பட உள்ளனர். 113 ஆசனங்களை வெற்றிகொள்ளும் கட்சி பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சியை அமைக்கும். தற்போது என்பிபி அனுதிப் பெரும்பான்மையை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது.