மனிதனுடைய செயற்பாடுகள் என்றும் குறிக்கோள் கொண்டதாகவும், பலாபலன்களை நோக்கியதாகவும், எதிர்வினை அறிந்ததாகவும் இருத்தல் அவசியமானது. ஒரு செயற்திட்டத்தைத் திட்டமிடும்போது மைல்கற்கள் திட்டமிடப்பட்டு அதுவரை கிடைத்த பலன்கள் மீளாய்வு செய்யப்படவேண்டும். ஒரினத்தின் போராட்டமும் இதுபோன்றதே. நடந்து முடிந்த ஈழத் தமிழர்களின் ஆயுதப்போராட்டமானது தூரநோக்கு, மனிதவிரோதம், ஆத்மீகபலம், புவியியல்சார் ஆழ்ந்த அறிவு, மக்களின் விழிப்புணர்வு, எழுச்சி, போராட்ட குணம், எதிரியின் பலம், பலவீனம், பொருளாதாரபலம், பலவீனம், உலகப்பொருளாதாரம், உலகமயமாதல், இன்னும் எத்தனையோ அடிப்படைக் காரணிகளை அறியாமலேயே ஒரு குருட்டுத்தனமான போராட்டம் குண்டுச்சட்டிக்குள் குதிரையோடி முடிந்தது. நாடும், மக்களும் நாசமாய் போனது. போராட்டப்பாதையில் மைல்கற்களான மக்களின் சுயாதீனமான கருத்துக்கள் கணக்கெடுக்கப்படாது போனதே தோல்வியின் முதற்படி. தமிழனின் தலையில் இடி.
கற்பனையில் எழுதப்பட்ட சினிமாப்படங்களைப் பார்த்து, அம்புலிமாமா, கதைப்புத்தகங்கள் வாசித்து போராடப்புறப்பட்டதே காரணமா? பிரபாகரனின் பேட்டியில் ஒருதடவை சொல்லியிருந்தார். சுபாஸ் சந்திரபோஸ்சைப் பார்த்து வீரம் வந்தது என்று. அப்படியென்றால் சுபாஸ்க்கு என்ன நடந்தது என்பதையும் ஆய்வு செய்யப்பட்டிருக்க வேண்டுமல்லவா?
புலிகளுக்கும் அரசுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோது நோர்வேயிய அன்றைய சமாதானத்தூதரும், இன்றைய அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சூல்கைம் உடன் தனிமையாக உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. எரிக் தனது நோக்கிலும், கடமையிலும் சரியாகவே இருந்தார். அதை அவர் மிகத்தெளிவாக விளங்கப்படுத்தினார். நாம் எந்தமுடிவுகளையும் ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தமாட்டோம். எமது கடமை இருபகுதியினரையும் ஒருமேசைக்குக் கொண்டுவந்து பேச்சுவாத்தைகளினூடாக இருசாராரும் புரிந்துணர்வுடன் ஒரு சமரசமுடிவை எட்டுவதே இதன் நோக்கம். சுருங்கக் கூறின் நாம் வெறும் தரகர் அல்லது புரோகர்கள் மட்டுமே. இருசாராரும் சண்டைதான் பிடிக்கப்போகிறார்கள் என்றால் கவலையுடன் விட்டுவிடுவோம். இருசாராரும் போருக்குப் பணம் சேர்ப்பதும் தெரியும் என்றார். இந்த சிறியவிடயத்தைத் துல்லியமாக விளங்கிக் கொள்ளமுடியாத புலிகள் நோர்வேயிடம் சென்று அரசு அதைச் செய்கிறது இதைச் செய்கிறது என்று குழந்தைப்பிள்ளைகள் அப்பா அவர் அடிக்கிறார், இவர் இடிக்கிறார் என்பது போல குற்றச்சாட்டுக்களை நோர்வேயிடம் கூறி ஒப்பாரி வைத்தது மிக வேடிக்கைக்குரியதே. இதில் முக்கியமான ஒன்று ஏ9பாதையைத் திறக்கவில்லை என்பது புலிகளின் குற்றச்சாட்டு ஆகும். இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கை ஏற்ற ஒரு வெள்ளைப் பெண்மணி என்னிடம் கேட்டார் ஏ9 பாதையைத் திறப்பதற்குத் தானா இத்தனை வருடங்களாக உயிர்பலி கொடுத்தீர்கள், இதுதான் உங்களின் போராட்டத்தின் நோக்கமா என்றார். வெக்கித் தலைகுனிய வேண்டியிருந்தது. புரிகிறதா புலிகளின் போராட்டத்தின் நோக்கமும் குறிக்கோளும். இனியாவது குறிக்கோளுள்ள வெல்லக்கூடிய போராட்டங்களில் ஈடுபடுங்கள்.
புலிகளின் போராட்டம் உலகமயமாக்கப்பட்டது என்று இன்றும் பலர் பறையடிக்கிறார்கள். சரியான நோக்கும் தீர்க்கதரினமும் சமயோசிதபுத்தியும் இல்லாமல் புலிகளால் ஒரு இனமே ஏறக்குறைய அழிக்கப்பட்டது என்பதும் உலகமயமாக்கப்பட்ட உண்மை என்றறிக. அரசுடன் சமபலத்தில் இருக்கிறோம் என்று சோ காட்டி மாயை காட்டி இல்லாத பலத்தை இருப்பதாகக் காட்டியே இன்று தமிழர்களுக்கு இந்த நிலை. இரண்டு நாள் வெளிநாடுகளில் தெருவில் இறங்கிப்போராடியபோதே ஏற்பட்ட மறுதாக்கத்தை அல்லது எதிர்விளைவுகளை, பலாபலன்களை மக்கள் புரிந்து போராட்ட வடிவத்தை மாற்றியிருக்கவேண்டும். செய்தார்களா?
மாவிலாற்று அடியிலேயே விளங்கியிருக்க வேண்டும் தொடர்ந்து புலிகள் நிற்பதா இல்லையா என்பதை. முழுமையாக புலிகளினதும், புலம்பெயர் தமிழர்களிடம் போராட்டம் குண்டுச்சட்டிக்குள் குதிரையோடியது தான் மிச்சம். பங்கர்களுக்குள் பதுங்கி வாழ்ந்த நிலத்துப் புலிகளுக்குத்தான் உலகநிலவரம் தெரியாது என்றால் புலத்துப் புலிகளுக்குமா உலகறிவு அற்றுப்போனது? அமெரிக்கா ஒன்றுமில்லாத ஒருபிச்சைக்காரனுடன் சமபந்திப்போசனம் வைப்பதற்கு என்ன அண்ணன் தம்பியா? எதாவது கொடுக்கல் வாங்கல்கள் உண்டா? எந்தவெளிநாட்டு அரசும் இலங்கையரசுடனேயே நட்புறவை வைத்திருக்கவிரும்பும். காரணம் பொருளாதார, அதிகாரபரவலாக்கம். என்றும் பொருளாதாரமே வெளிநாடுகளின் ஆர்வத்துக்குரியதாக இருந்து வந்திருக்கிறது. பணமுள்ள இடத்தில்தானே நட்பும் உறவும். சொந்த இடத்தையே பாதுகாக்க முடியாத புலிகள் அமெரிக்காவுடன் பேரம் பேச என்ன வைத்திருந்தார்கள். கனவுகாண்பது என்றாலும் அதற்கு ஒரு தகுதி வேண்டாமா? இது என்ன எம்.ஜி.ஆர் படமா கூரையைப்பிரித்து இறங்கு புலிகளை மீட்டெடுப்பதற்கு.
பலர் புலிகளின் தோல்விக்கு இந்தியாவை குறை கூறுகிறார்கள். வரலாற்று ரீதியாக சிறீமா சாத்திரி ஒப்பந்தத்தில் இருந்து ஜே.ஆர், இராஜீவ் ஒப்பந்தத்தினூடாக மகிந்தாவரை அனைத்தும் தமிழர்களுக்கு பாதகமாகவே இருந்தது. இனியும் பாதகமாகத்தான் இருக்கும். இந்தியாவுக்கு இதைத்தவிர வேறுவழியும் கிடையாது. புலிகளுக்கு உதவி செய்து நேபாளம்வரை வந்துவிட்ட சீனாவை முழுமையாக அழைத்து இலங்கையில் இருத்த இந்தியா விரும்பாது. தமிழகமாநில அரசோ மத்திய அரசில் பல்லுப்பிடுங்கிய பாம்புதான். புரியவில்லையா குறிப்புக்காட்டக் கருணாநிதி கருணையற்றுக் கறுப்புக் கண்ணாடி போட்டிருப்பது. இப்படியான குழந்தைப்பிள்ளைக்கு விளங்கும் விடயங்களைக் கூடப்புரிந்து கொள்ள வலுவற்ற புலிகளால் எப்படி ஒருபோராட்டத்தை அன்றும் இன்றும் இனி என்றும் வென்றெடுக்க முடியும்?
புலிகளின் நன்மைக்காகவும், எம்மக்களின் நலனுக்காகவும் பிழைகளை எடுத்துரைத்தவர்கள் அனைவரையும் துரோகி துரோகி என்றார்கள், சுட்டும் தள்ளினார்கள். ஈற்றில் பக்கத்தில் இருந்த துரோகிகளாலேயே புலிகள் தொலைந்தனர். துரோகிகள் என்றும் பக்கத்தில்தான் இருப்பார்கள் என்ற ஒரு எளிய கருத்தைக் கூட உணரமுடியாத புலிகளால் எப்படி ஒரு போராட்டத்தை வென்றெடுக்க முடியும்? எதிரி என்றும் எதிரில் இருப்பதால் நாம் அவனை அவதானிக்கலாம் துரோகி பக்கத்தில்தான் இருப்பான்.
ஈழத்தமிழர்களின் போராட்டம் என்பதை விட புலிகளின் போராட்டம் என்பதே சரியானது. இந்தப்போராட்டம் என்றும் மக்கள்மயமாகவும் இல்லை, உலகமயமாகவும் இல்லை, வெளிநாடுகளின் உயர்மட்ட அரசியலில் நுழையவுமில்லை, ஏன் பேரம் பேசப்படவும் இல்லை. இப்படிக் குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டிய புலிகளால் எப்படி எம்மக்களின் போராட்டத்தை வென்றெடுக்க முடியும்? வாசகர்கள் விரும்பினால் குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டிய விடயங்களை விலாவாரியாக எழுதலாம். இப்படியான வழித்தோன்றல்களின் புதிய குதிரையோட்டமே சிவந்தனின் ஐ.நா நோக்கிய நடைப்பயணம்.
இந்த நடைப்பயணத்தை எடுத்துக்கொண்டால் சிவந்தன் என்பவர் ஏன் ஐ.நா நோக்கி நடக்கிறார் என்பது பலதமிழர்களுக்கே தெரியாத ஒன்றாக உள்ளது. அவரே முன்னுக்குப்பின் முரணாகப் பேட்டி கொடுக்கிறார். இது சரியான முறையில் திட்டமிடப்படவில்லை. மக்கள் தொலைக்காட்சி என்று இலவசமாக தொலைத்துத் தொலைத்துக்காட்டும் மக்கள் தொலைகாட்சி எனும் ஜிரிவிக்கே இந்த நடைப்பயணி எங்கு எந்தவழியால் போகிறார் என்பது நேற்றுவரை 29.07.2010 தெரியாது இருந்தது. தொலைபேசி நேயர்கள் சொன்னார்கள் சிவந்தன் பலவிடங்களில் தனியாகவே நடந்து போகிறார். அவருக்கு மக்கள் வந்து ஆதரவு கொடுங்கள் என்று. அதையடுத்து சரியாக 15நிமிடத்தில் சிவந்தனுடன் தொடர்பு கொண்டபோது அவர் சொல்கிறார். மக்கள் ஆதரவு இருக்கிறது என்று. இது மீண்டும் புலி, அரசுப்பாணியையே நினைவு படுத்துகிறது.
இலண்டனில் இருந்து ஐ.நா நோக்கி நடக்கும் போராட்டம் ஒரு வலுவான அகிம்சைப் போராட்டம்தான். ஆனால் அது திட்டமிடப்பட்ட விதம், பயணம் செய்யும் முறை, சிவந்தனுக்கு பேச்சில் தெரியும் அவரது போராட்டம் பற்றிய அறிவு, தெளிவு என்பனவும், என்மக்கள், வெளிநாட்டவர், அரசியல், இராஜதந்திரிகள் மட்டங்களில் இப்பயணம் பற்றிய நோக்கம் என்பன கேலிக்கூத்தாகவே இருக்கிறது. இலங்கையில் உலகசாதனை புரிய தெருத்தெருவாய் நடனமாடிய மடையர்கள் போலவே தெரிகிறது.
அகிம்சை முறைப்படி பயணப்போராட்டம் செய்பவர் அகிம்சையுடன், சாந்தமாக, அமைதியாக நடப்பது முக்கியம். சிவந்தன் நடப்பதைப்பார்த்தால் போருக்குப் போகிறவர் போல் போகிறார். அகிம்சை ஐயோ என்று அலறிக்கொண்டு ஓடிவிட்டது. சரி நடந்து போகும் போது பிரித்தானியக் கொடியுடன் போகும் இவர் தான் பிரித்தானியன் என்று உலகத்தவர்களுக்குக் கூறுவதுதானா இப்பயணத்தின் நோக்கம்? மொழியறிவற்றவர்கள் கூட குறிப்பறிய ஏன், எதற்கு நடக்கிறார் என்ற குறிப்பு எதுவுமே கிடையாது. குறைந்தபட்சம் முதுகில் கூட ஒரு குறிப்பெழுதிப்போட முடியாமல் போனதா? மனமில்லாமல் போனதா? ஆங்கிலத்தின் கொடியைக் காவிச்செல்லும் இவர்களுக்கு ஆங்கிலத்தில் நாலெழுத்துத் தெரியாமல் போனது ஏன்? யாருக்குக் காட்ட இந்தப்பயணம். இதைக்காட்டி புலத்துப் புண்ணாக்குகளிடம் மீண்டும் பணம் பறிக்கவா? ருசிகண்ட பூனைகள் சும்மாவா இருக்கும்?
ஐ.நாவை நோக்கி நடக்கும் இவரை எதிர்பார்த்து ஐ.நாவின் பொதுச்செயலாளர் பாங்கி மூன் நிற்கிறார்போலும். சிறையில் வாடுபவர்களை விடுவிக்க வேண்டும், போர்குற்றங்களுக்கு நீதி வேண்டும் என்று கூறுமிவர் எந்த நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்திருந்தார்? பரமேஸ்வரன் மைக்டொனால்ஸ் வழக்குபோல் சாட்சியில்லாத வெற்றிகள் கிட்டலாமல்லவா? ஒருநாட்டில் உயர்நீதி மன்றத்தால் தனக்குச் சரியான தீர்ப்பு கிடைக்காத தனிமனிதர்கள் வழக்குகளை மனித உரிமைகள் நீதிமன்றுக்குக் கொண்டு போகலாம் என்பதை அறியவில்லையா? இதைச் செய்தார்களா? பிரபாகரன் பிணத்தை எம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உரிமை கோரவலுவற்ற உறவுகளும், நட்புகளும், புலிவீரர்களும், புலம்பெயர்புலிகளும் இருக்கும் போது குண்டிச்சட்டிக் குதிரையோடுவதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்.
ஏதாவது தாக்கங்களை உலக அரசியல் மட்டங்களில் ஏற்படுத்துமாறு புதிய முறைகளைக் கையாளுங்கள். கொலஸ்ரோல் உடலில் கூடிவிட்டது என்பதற்காக தமிழரைச் சாட்டி போராடவேண்டாம். இதுவும் ஒரு புலிப்பாணிதான். போராட்டம் தமிழ்மக்களுக்கு என்று கூறி புலிகள் மாபியாவாக வளர்ந்து விழுந்தது தான் மிச்சம். மக்களுக்காகப் போராடியவர்கள் தம்மக்களையே பயணக்கைதிகளாய் வைத்திருந்த நாசகார, நயவஞ்சகச் செயல் புலிகளைத் தவிர உலகில் யாரும் செய்யவில்லை. இப்படியான விவஸ்தை கெட்ட செயல்களை விமர்சித்தால் இன்று ஒரு புதுப்பட்டம் கொடுக்கிறார்கள் அரசாங்கத்தின் ஆள் என்று. புலிகளும், புலிப்பினாமிகளுமே இன்று அரசின் கையாளாக உள்ளனர். எப்போ மாடுசாகும் உண்ணிகளரும் என்று இருந்திருக்கிறார்கள் போலும்.
சிவந்தனிடம் கால்கடுக்கவில்லையா? களைக்கவில்லையா? என்ற கேள்விகளைக் கேட்டபோது அவரின் பதில் குழந்தைப்பிள்ளைக் கூட குலுங்கிச் சிரிக்கவைக்கும். களையைப்பார்த்தால் விடுதலை கிடைக்காதாம். இது விடுதலைப்பயணமா? நீதிகேட்டு பயணமா? ஒன்றுமாய் விளங்கவில்லை யாராவது விளங்கினால் சொல்லுங்கள். இப்படித்தான் எங்களுக்கு ஒன்றும் விளங்காமலே எங்கள் இனத்தையும் நிலத்தையும் அழித்தது போதும். இனியாவது திட்டமிட்டு மக்கள் மயப்பட்ட, இராஜதந்திரரீதியாக, அறிவுரீதியான போராட்டங்களில் ஈடுபடுங்கள். சிலவேளைகளில் விட்டுக் கொடுப்பது கூட இராஜதந்திரம்தான்.
இன்று போரில் விழுந்த இலங்கையையும், சிங்களப்பேரினவாத அரசையும் முண்டு கொடுத்து நிமிர்த்துவது புலிகள் தான். ஈழம் கேட்டுப்போராடியவர்கள் கொழும்பில் வீடுகள் வாங்கினார்கள். எல்லைகள் பறிபோக தமிழர்களின் உறுதிகளைப்பிடுங்கினார்கள். இன்றும் இலங்கைப் பேரினவாத அரசுக்கும் இராஜபக்ச கொம்பனிக்கும் தாராளமாக அள்ளிவழங்குவது புலிகளே. தமிழீழத்தின் தேசியச்சின்னங்கள், சூரியதேவன் பிரபாகரன் வளர்த்த வாரிசுகள் 2009 மே 18 மண்வேண்டி, மண்ணாய், மண்ணில் தலைவன் விழுந்த இரத்தம் காயமுன் விமானரிக்கட்டுகளைப் பதிவுசெய்தார்கள். தலைவன் விழுந்த மண்ணையோ, தண்டிக்கப்பட்ட அப்பாவி மக்களையோ பார்ப்பதற்கல்ல. வியாபாரத்துக்கும் சுற்றுலாவுக்குமாக விமான இருக்கைகள் நிரம்பி விட்டன. இலங்கைத் தயாரிப்புக்களை பகிஸ்கரியுங்கள் என்று வானுயரக்கத்திய புலிகளும் பினாமிகளுமே எயர்லங்காவில் விமான இருக்கைகளைப் பதிவு செய்துள்ளார்கள் என்பதையும் அறிக. தமிழுணர்வும், தேசியம், சுயாட்சி, சுயநிர்ணயம் என விடுதலைவேட்கை பொங்கி வழிகிறது. வாருங்கள் நாங்களும் போய் அள்ளுவோம். ஜிரிவியில் ஒரு விளம்பரம்:- “வாணி சீ பூஃட்சே இனி எம்தேசிய உணவு”. கடலுணவு என்று தமிழில் விளம்பரப்படுத்த முடியாத, அன்றித் தெரியாத தமிழர்களுக்கு வாணி சீ பூஃட் தேசிய உணவாம். சுயமிழந்த தேசியம் தேவடியாளாகி தெருத்தெருவாய் கிடக்கிறது. விலைகூறி மலிவுவிலையில் தேசியம் விற்கப்படுகிறது. முடிந்தால் நீங்களும் வாங்குங்கள்.
இன்று இலங்கைப் பேரினவாத அரசுக்கு தேசியம் பேசிய புலம்பெயர்ந்த புண்ணாக்குகள் கொடுத்த பணம் ரிஆர்ஓ வினூடாகவம் கே.பி யினூடாகவும் போய்விட்டது. மீதியை புலம் பெயர்ந்த புண்ணாக்குகள் விமானம் எடுத்துப் போகிறார்கள் அன்னியச் செலவாணியை அள்ளி இறைப்பதற்கு. நான் பிறந்த சமூகமே ஏறிமிதிப்பற்குக் கூட இலாயக்கற்றுப்போனாயே போ. முட்டாள் சிங்களவன் என்று குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டி கொட்டமடித்த சமூகமே சிங்களவன் எட்டிக்குட்டிவிட்டு கிட்டநின்று சிரிக்கிறான் உன் செய்கைகளைப் பார்த்து. உன்னைவைத்தே உன்னையழிக்கும் செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப் படுகிறது கொட்டிக் கொடுங்கள். வாழ்க தேசியம், சுயாட்சி, சுயநிர்ணயம்.
கூனிக்குறியபடி குலன்.
30.07.2010
sarangan
குண்டிச்சட்டிக் குதிரையோடுவதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்///
இந்த வார்த்தையை தவிர மெருகூட்ட வேறு வார்த்தை கிடைக்கவில்லையா?
Siva
மீண்டும் ஆரம்பித்துவிட்டது புலிகளின் பணம்பறிக்கும் பம்மாத்து. இவ்வளவு காலமும் எப்படி ஆரம்பிப்பது என்றிருந்த புலிப்பினாமிகளுக்கு கிடைத்த சந்தர்ப்பம் மக்களை ஏமாற்றத் தொடங்கி விட்டார்கள். இதில் தற்போது புதிய வானொலி ஒன்றும் தனது பங்கிற்கு தொடங்கி விட்டார்கள்
இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் தமது சுயலாபம் அதற்காக புலிகளை ஆதரித்தார்கள். புலிகளுக்கு நிதி சேகரித்தார்கள் புலிகளுக்காக வக்காளத்து வாங்கினார்கள் இப்போது சிவந்தனுடன் சேர்த்து ஆரம்பித்து விட்டார்கள்
தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான எந்த வழிவகைகளையும் பற்றி கடந்த 1வருடமாக பேசாமல் மக்களுக்காக அடுத்து என்ன என்றதிற்க்கு பதிலே இல்லை மீண்டும் பிரிஎப் சிவந்தனை நடக்க வைத்துள்ளார்கள்.
இவருக்கும் அகதி அந்தஸ்த்துப் பிரச்சனைதானோ இல்லையோ??…..
thaamiran
“இலங்கையில் உலகசாதனை புரிய தெருத்தெருவாய் நடனமாடிய மடையர்கள் போலவே தெரிகிறது.”
இது தான் உண்மை. சுலபமாக யாரும் பிரபல்யம் ஆகிவிடலாம். இந்த ஆசை எல்லேரையும் வதைத்தெடுக்கிறது. அடுத்து யாராவது தொடர்ந்து மூன்று நாட்கள் தலைகீழாய் நிற்கலாம். கவனஈர்ப்பு. கவன ஈர்ப்பு.
Kulan
தாமிரான்! அருமையோ அருமை. கவனஈர்ப்பு நல்லது தீர்வும் தீர்ப்புத்தானே முக்கியமானது. இவ்வளவு மக்களைப் பறிகொடுத்தும் எம்மினம் படிக்கவில்லை என்றால் தலைகீழாக நின்றும் பிரயோசனமில்லை. சரி ஒருகடினான நடைப்பயணம் செய்யும் இவர் அரசியல் மட்டங்களில்: உயர்ஸ்தானியர் மட்டங்களில்: மட்டுமல்ல வெள்ளையர்களையும் இணைத்து பெரிய அமைப்பில் பாரிய பாதிப்பை: ஈர்ப்பை செய்யக்கூடியவகையில் செய்யலாமே. இதற்கு சரியான திட்டமிடல்: காலம்: நேரம் என்ன எல்லாம் சரியாகக் கணிக்கப்பட்டு செயற்படுத்தப் படவேண்டும். விழலுக்கு இறைத்த நீராக இருக்கக்கூடாது. சிவந்தன் மேல் எனக்கு வெறும் பரிதாமமே மீர்ந்துள்ளது.
Kulan
சிவா! அந்தவானொலி எது என்று தெரிந்தால் தலைகழுவாமல் பார்த்துக் கொள்ளலாமல்லவா. ஊரில் எமது சமூகம் ஒருவன் உழைக்க குந்தியிருந்து போட்டுக் கொட்டிய சனம்தானே. இங்கே வந்து ஊரார் உழைப்பைச் சுரண்டியும்: பேக்காட்டியும் வயிறுவளக்கப் பழகிக்கொண்டார்கள். புலிமுடிந்ததும் கோயில் கொடிபிடித்தல் என்று ஏதாவது இருந்தால்தானே குந்தியிருந்து கொட்டலாம்.
சிவா! புலிகளை ஆதரித்தவர்கள் மட்டுமல்ல சுயலாபம் தீட்டியவர்கள். புலிகளுமே அப்படித்தான். மக்களை யார் கவனித்தார். மக்களுக்காகப் போராடுகிறோம் என்ற புலிகள் மக்களை விட்டுவிட்டு சயனைட்டை அடித்திருக்கலாமே. குறைந்தபட்சம் அனுதாபமாவது இருந்திருக்கும். எந்தமக்களுக்காகப் போராடுகிறோம் என்று பொய்யுரைத்தார்களோ அந்தமக்களையே பயணக்கைதிகளாக வைத்திருந்ததில் இருந்து தெரியவில்லையா புலிகள் போராளிகளா? பேடிகளா? மாவியாக்களா? பயங்கரவாதிகளா?என்று. பயங்கரவாதம் என்ற பதமே புலிகளுக்கு மிக மிதமானது. மக்களுக்காகப் போராடுகிறோம் என்ற புலிகள் மக்கள் உங்கள் போராட்டத்தை மறுதலித்தபோது விட்டுவிட்டுப் போகவேண்டியது தானே. அதிகாரம்: புலிகள் பணம்: அதிகாரவெறி;ஆயுதத்தில் மனநோய் கொண்டு மனிதர்கள் மன்னிக்கவும் மிருகங்கள். நான் சொல்லவில்லை புலிகள் என்று தமக்குத் தாமே குத்திக் கொண்டார்கள். புத்தியும் பொருளாதாரமும் எமது கையில் இருந்தால் அதிகாரம் மட்டுமல்ல அரசும் பணியும். இனிமேலாவது யுதர்களையாவது முன்னுதாரணமாகக் கொள்ளுங்கள். இது வரலாறு.
siva
டோவர் நோக்கிப் போகையில் இடையில் கொஞ்சத்தூரம் பிழையான பாதையில் போய் திரும்பி வந்தாராம். இவர் டோவர் துறைமுகத்தை சென்றடையும்போது 30 பேர்தான் வரவேற்க நின்றதாக மனம் வருந்தினார்கள். பாரிசில் நிறைய சப்போட் கிடைக்குமாம். சிவந்தனுக்கு கால் கொப்பளித்துவிட்டதாம். உப்புத் தண்ணீரில் வைத்தியம் பார்க்கிறாராம். காலையில் லைட்டாகத்தான் சாப்பிடுவாராம். நடக்க ஈசியாக இருக்குமாம். இவரின் சின்ன வயதுக்கு (29)நிறைய பொறுப்போடு சிந்தித்து செயற்படுகிறார் நடக்கிறார். சிவந்தனுக்கு பல நாடுகளிலும் இருந்து பலத்த சப்போட்டாம்.
Kusumpu
இந்த வார்த்தையை தவிர மெருகூட்ட வேறு வார்த்தை கிடைக்கவில்லையா///சாரங்கன்.
இது வார்த்தை அல்ல வசனம். பழமொழி என்றும் சொல்லலாம். எப்படியான ஒரு தலைப்பைப் போட்டிருக்கலாம் என்று எண்ணுகிறீர்கள். குண்டுச்சட்டிக்குள் குதிரை என்பது நாமே எமது வீட்டுக்குள் ஒடிவிட்டு நாமே கைதட்டிப் பரிசு கொடுப்பது போன்ற செயலையே அடைமொழியாக அப்படிப் பயன்படுத்துவார்கள். இது பொது உலகிற்குத் தெரியவராது. சிவந்தன் நடக்கிறார் எழுட்ச்சி என்று பெரிய பெரியவார்த்தைகளைக் கூறுகிறார். எங்கே எழுட்ச்சி? இரண்டுபோர் கொடிபிடிக்க மல்லுக்குப்போவதுதான் மக்கள் எழுட்ச்சியா? இதே நடைப்பயிற்சியை உள்நாட்டிலும் செய்யலாம். ஒபாமாவைச் சந்திக்க யார் நடக்கப்போகிறீர்கள்? தமிழர்கள் யாரும் வரவில்லையே என்று ஒபாமா கவலைப்படுகிறார். கில்லறி மாமிக்கும் ஒரே கிண்டல்தான். யாராவது நடவுங்கோப்பா. இல்லாவிட்டால் தவழுங்கோ; பிறதட்டை பண்ணுங்கே: தலைகீழாய் நில்லுங்கோ; ஐ.நா முன் வெள்ளைமாளிகை முன் நின்று துள்ளுங்கோ. உலகசாதலை என்று செய்தீர்கள் என்றால் கொஞ்சம் சனமாவது கூடும். சமூகசேவை நிலையங்களில்(சோசலில்) அள்ளித்தாறார்கள் போலிருக்கிறது திண்டுவிட்டு திண்ணைக்கு மண்ணெடுக்க.
PALLI
//நடந்து முடிந்த ஈழத் தமிழர்களின் ஆயுதப்போராட்டமானது தூரநோக்கு, மனிதவிரோதம், ஆத்மீகபலம், புவியியல்சார் ஆழ்ந்த அறிவு, மக்களின் விழிப்புணர்வு, எழுச்சி, போராட்ட குணம், எதிரியின் பலம், பலவீனம், பொருளாதாரபலம், பலவீனம், உலகப்பொருளாதாரம், உலகமயமாதல், இன்னும் எத்தனையோ அடிப்படைக் காரணிகளை அறியாமலேயே ஒரு குருட்டுத்தனமான போராட்டம் குண்டுச்சட்டிக்குள் குதிரையோடி முடிந்தது//
இது போராட்டமல்ல சதிராட்டம். அதுவும் தனிமனித துதி பாடல் போட்டு ஆடிய சதிராட்டம்;
// இனியாவது குறிக்கோளுள்ள வெல்லக்கூடிய போராட்டங்களில் ஈடுபடுங்கள்.//
மீண்டும் ஒரு தரமா?? தாங்காது சாமி எம்மினம்:
//சிவந்தனிடம் கால்கடுக்கவில்லையா? களைக்கவில்லையா? என்ற கேள்விகளைக் கேட்டபோது அவரின் பதில் குழந்தைப்பிள்ளைக் கூட குலுங்கிச் சிரிக்கவைக்கும். களையைப்பார்த்தால் விடுதலை கிடைக்காதாம்//
அட பாவிகளா அப்படியாயின் செல்வநாயகத்தாரையும் அவரது கூட்டாளிகளையும் அன்றே வடக்கிருந்து கிழக்கே பின்பு கிழக்கிருந்து தெற்கே என ஓடவிட்டு விடுதலையை பெற்றிருக்கலாமே, எதுக்கு இந்த தறுதலைதனமான போராட்டம் எண்ணிக்கையில் அடங்கா உயிர் சேதம்?
//மாவிலாற்று அடியிலேயே விளங்கியிருக்க வேண்டும் தொடர்ந்து புலிகள் நிற்பதா இல்லையா என்பதை.//
அன்றுதானே தலைவர் ஓடுவதுதான் தற்பாதுகாப்பு கலை என முள்ளிவாய்க்கால்வரை ஓடினார், ஆனால் நாம்தான் தலை பின்வாங்குகிறது சுனாமிபோல் பெருக்கெடுக்க போகுது என திரையில்லாமல் படம் காட்டினோம்;
//இன்று போரில் விழுந்த இலங்கையையும், சிங்களப்பேரினவாத அரசையும் முண்டு கொடுத்து நிமிர்த்துவது புலிகள் தான்.//
இன்றல்ல என்றுமே அந்த நல்ல காரியத்தை செய்வது புலிகள்தான்; அதில் புலம்பெயர்ந்த புண்ணாக்குகள் மிகவும் பிரபல்யம்;
//சிங்களவன் எட்டிக்குட்டிவிட்டு கிட்டநின்று சிரிக்கிறான்//
நாமோ எட்டநின்று குட்டுவாங்கிவிட்டு கிட்டபோய் இழிக்கிறோம்:
// புத்தியும் பொருளாதாரமும் எமது கையில் இருந்தால் அதிகாரம் மட்டுமல்ல அரசும் பணியும்.//
பொருள் ஆதாரம் எம்மிடம் நிறயவே இருக்கு; ஆனால் புத்தி அரசிடம்தான் கடன் வாங்க வேண்டும்;
தொடரும் பல்லி;;;;;
rames
இதைவிட நோர்வேயில் கோயில் திருவிழாவில் தமிழர் புனர்வாழ்வு கழக தொண்டர்கள் கச்சான் கடலை வறுத்து அமோகவிற்னையில் இறங்கியுள்ளனர் நாட்டிள்ள அகதிகளை காப்பாற்ற என்றுசொல்லி தமது பிரமுகர் அந்தஷ்தை புதியவர்கள் நிரப்புகிறார்கள். எனியும் இவர்கள் திருந்த சந்தர்ப்பம் இல்லை.
Kulan
பல்லி
/இது போராட்டமல்ல சதிராட்டம். அதுவும் தனிமனித துதி பாடல் போட்டு ஆடிய சதிராட்டம்/ பக்திவாதம்
/மீண்டும் ஒரு தரமா?? தாங்காது சாமி எம்மினம்/
போராட்டம் ஆயுதப்போராட்டமாக இருக்வேண்டும் என்று இல்லையே. பிறந்த ஒவ்வொரு உயிரும் போராடியே ஆகவேண்டும். அது புத்திசாலித்தனமாக புற அகச்சூழல்களையும் பலம் பலவீனங்களையும் உணர்ந்து போராடவேண்டியது அவசியம் நீங்கள் சொல்வதுபோல் பல்லி எல்லாம் சோக்காட்டியே முடிந்தது. இப்போ சிவந்தன் காட்டுகிறார் இதையும் பார்ப்போம்:
ரமேஸ்: முயல்பிடிக்கிற நாயை மூஞ்சையிலை தெரியும் என்பார்கள். புலிகள் கோவிலை மட்டுமல்ல யாரைச் சுயமாக இருக்க விட்டார்கள்
Sujambo
நோர்வேயிலுள்ள முருகன் கோவிலில் இதுபோன்ற பலகதைகளை நாம் கேட்டுள்ளோம் இராமேஸ். ஊரை அடித்து உலையில் போட்டவர்கள் கடைநடத்தி கடன்வாங்கி எட்டு> பத்து மில்லியன் அளவுக்கு தனிப்பட்டவர்களிடம் பணம் வாங்கிவிட்டு மானம் ரோசமில்லாமல் திருவிழாச் செய்கிறார்களாம்: கேட்டால் எல்லோரின் பணமும் கொடுத்துவிட்டோம் என்றும் காசுகேட்டால் சண்டித்தனம் விடுகிறார்களாம். முளங்கை மறைய நகைபோடுமிவர்கள் இவற்றை வித்தாவது அல்லது திருவிழாவை விட்டு விட்டாவது கடன்களைக் கொடுக்கலாமே. மானம் கெட்டவாழ்க்கையை வாழ்ந்து கொண்டு தெய்வத்துக்குத் திருவிழாவா? இதைப்பற்றி அறிந்தீர்களா இராமேஸ். அவர்கள் நோவே அரசாங்கத்துக்கும் கணக்குவிட்டு விட்டு சோசியாலில் தின்னுமிவர்களுக்கு திருவிழாச் செய்ய பணமேது? நம்பிப் பணம் கொடுத்தவர்கள் தெருவளியை நின்று குளறுகிறார்கள். இவர்கள் கடவுளுக்கே கணக்குக் காட்டுவார்கள். தேர்திருவிழா செய்வதற்கு குறைந்தது ஒரு இலட்டம் நோவேய் பணம் தேவையாம். இதை எங்கிருந்து கிண்டி அள்ளுகிறார்கள். இதைக் கேட்க> பிடித்துக் கொடுக்க நோவேயில் மானமுள்ள மனிதர்கள் எவரும் இல்லையா?
புலிகளின் வாரிசு ஐயராக இக்கோவிலில் இருந்து அட்டகாசம் செய்தாராம். கொலை செய்யத்தூண்டும் ஒரு பிராமணி எப்படி ஐயராக முடியும். இது கோவில் நிர்வாகத்துக்குத் தெரியாதா? அல்லது கோவில் நிர்வாகமும் புலிக்கூட்டமா? அதே பிராமணி (பண்டாரமாக இருக்கலாம்) அங்குள்ள இன்னுமொரு அம்மன் கோவிலுக்கு சாத்துப்படி செய்ய மீண்டும் வந்துள்ளாராம்.
இதைப்பற்றி இராமேஸ் விபரமாக அனியாயங்களை சமூகத்துக்குத் தர ஒரு கட்டுரை எழுதலாமே
thurai
உலகமக்களிற்கு ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டத்தை அறியச் செய்வதே இவரின் நடைபயணத்தின் நோக்கம். இதற்கு ஜிரிவி மட்டும் போதாது. உலக நாடுகளின் பிரபலமான தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் இதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
லண்டன் உண்ணாவிரதம் தமிழ்மக்களின் பிரச்சினையை விட மக்டொனால்ட் பேக்கரின் பிரச்சினையாகவே பிரபல்யமானது. அதோடு சம்பந்தப்பட்ட பத்திரிகைகள் நஸ்ட ஈடும் கொடுக்கவேண்டி வந்துவிட்டது. எனவே இவரின்நடை பயணத்தைப்பற்ரி எழுதும்போதும் பேசும் போதும் எல்லோரும் மிகவும் அவதானமாக இருப்பதே நல்லது.
உலகின் பெரிய விளயாட்டுக்கள் நடக்கும்போது மைதானத்தின் ஓரத்தில் சிலர் கூத்தாடுவார்கள் அவர்கழும் அங்கு வந்துள்ள ரசிகர்களின் கண்களிற்கு காட்சியாகவே இருப்பார்கள். கூத்தாடி தன்னைத்தான் எல்லோரும் பார்க்கின்றார்கள் என்று பெருமையாக மேலும் மேலும் ஆடுவார். ஆடிமுடிய அவர் போன இடம் யாருக்குமே தெரியாது. இதுதான் இப்போ புலிகள் நடத்தும் போராட்டம்.
துரை
PALLI
குலன் மீண்டும் கட்டுரையுடன் வந்ததுக்கு எனது நன்றிகள் உங்களை போன்றவர்கள் புள்ளிவைத்தால்தான் பல்லி போன்றோரால் கோலம் போட முடியும்; எனது நண்பர் ஒருவர் சொன்னார் ஏன் பல்லி எதுக்கெடுத்தாலும் புலியை வம்புக்கு இழுக்கிறியள்; அவைதான் முகவரியில்லாத கடிதங்கள் ஆகிவிட்டனவே என்று, எனக்கும் அது சரியாகவே பட்டது, இரவு நெப்போலியனின் உதவியுடன் இப்படியான விடயத்தில் இனி கவனம் எடுப்போம் என சிந்தித்தேன், பலமணி நேரம் ஆனால் என் நேரமும் நெப்போலியனின் ஆயுளும்தான் செலவானதே தவிர முயற்ச்சி தோல்விதான்; கவனிக்கவும்;
அரசியல்;
பொருளாதாரம்;
மருத்துவம்;
குடியேற்றம்;
கலாசாரம்;
கல்வி;
போக்குவரத்து;
விவசாயம்;
சமூகம்;
கடவுள்;
நகை சுவை;
சினிமா
இவைகளுடன் புலம்பெயர் தேசம்
இப்படி இதில் எதை பற்றியாவது புலி இல்லாமல் எதையாவது எழுதலாமா?? அத்தனை குளறுபடிகள் அத்தனையிலும் புலி தொற்றுநோயாய் தொற்றியதால் அவை அகலு மட்டும் புலியை நாம் விமர்சிப்பது தற்காலிகமாக தவிர்க்க முடியவில்லை என்பது என் கருத்து, இது தவறாக கூட இருக்கலாம்;
தொடரும் பல்லி,,,,,,,,,
rohan
//முயல்பிடிக்கிற நாயை மூஞ்சையிலை தெரியும் என்பார்கள். புலிகள் கோவிலை மட்டுமல்ல யாரைச் சுயமாக இருக்க விட்டார்கள்//
இத்தனை நாளும் புலி இருந்ததால் தான் மக்கள் சிரமப்பட்டனர். Anti புலிகளும் உதவிகளைச் செய்ய முடியாமல் சிரமப்பட்டீர்கள். புலி தான் விழுந்து விட்டதே. இந்த வக்கணைகளை விட்டு விட்டு கொஞ்சம் நல்ல விடயங்கள் செய்ய நோக்கம் உண்டா? அல்லது, மேல் சொன்ன வரிகளை உங்களைப் பற்றித் தான் சொன்னீர்களா?
Kulan
துரை! நீங்கள் கூறும் கருத்துடன் பெரிய மாறுபாடில்லை எனக்கு. ஆனால் நீங்கள் கேட்பது போல் உலக ஊடகங்கள் முதலுரிமை கொடுக்காது. யாருக்குப் பிரபல்யம் தேவையோ அவர்களே ஊடகங்களை நாடவேண்டும். தமிழுடகங்களே நடைப்பயணத்தைப் பெற்றி முழுமையாக அறியாத போது வெளிநாட்டு ஊடகங்களா இவர்களை அணுகப்போகிறார்கள். இதனால்தான் கட்டுரையில் தலைப்பே குண்டுச்சட்டிக்குள் குதிரை என்று எழுதப்பட்டது.
ரோகான்!
அதே புலிப்பாணிதான். //இத்தனை நாளும் புலி இருந்ததால் தான் மக்கள் சிரமப்பட்டனர். யுவெi புலிகளும் உதவிகளைச் செய்ய முடியாமல் சிரமப்பட்டீர்கள். புலி தான் விழுந்து விட்டதே. இந்த வக்கணைகளை விட்டு விட்டு கொஞ்சம் நல்ல விடயங்கள் செய்ய நோக்கம் உண்டா? அல்லது, மேல் சொன்ன வரிகளை உங்களைப் பற்றித் தான் சொன்னீர்களா?/
கெடுகிறேன் பிடி பந்தயம் என்றால் என்ன செய்யமுடியும். புலிகளைப்பற்றி விமர்சிப்பவர்களோ அன்றி அவர்களின் பிழைகளை எடுத்துரைப்பவர்களோ அன்ரிப்புலி எனும் புலிநிலை மாறவில்லை என்பதற்கு நீங்கள் நல்ல உதாரணம். என்றுமே சுயவிமர்சனம் செய்யமாட்டீர்களா? புலிகளை விமர்சித்த அதே குலன்தான் அன்று பிரபாரன் விழுந்த போது முதன் முதலில் கண்ணிர் அஞ்சலி செலுத்தி ஒரு கட்டுரையை தேசத்தில் தந்தவர் என்பதை அடக்கமாகக் கூறிவைக்க விரும்புகிறேன். சூரியதேவன் என்றும் இரட்சகன் என்றும் தலையில் வைத்துக் கொண்டாடிய புலிகள் பிரபாகரன் விழுந்ததுமே குத்துக்கரணம் அடிக்கத் தொடங்கினார்கள். நாங்கள் நல்லவிடயங்கள் செய்யவில்லை என்று யார் சொன்னது. அன்று புலியிருக்கும் போதும் நான் எமது மக்களுக்கு எனது மாதச்சம்பளத்தில் 5-10வீதமான பணத்தை ஒதுக்கி கிழக்கு மாகாணத்து மக்களுக்கு (அது எனது பகுதி இல்லை) கால் போட்டுப்பதுடன் பாடசாலைப் பிள்ளைகளுக்குப் பாடப்புத்தகங்கள் சீருடைகள் பள்ளிக்கூடப்பைகள் என்று என்னாலியன்றதைச் செய்து வருகிறேன் என்பதையும் அடக்கமாகக் கூறிக் கொள்கிறேன் ரோகான்
Kulan
நன்றி பல்லி. தங்களை பின்னோட்டத்தில் கண்டதில் மகிழ்ச்சி.
//இப்படி இதில் எதை பற்றியாவது புலி இல்லாமல் எதையாவது எழுதலாமா?? அத்தனை குளறுபடிகள் அத்தனையிலும் புலி தொற்றுநோயாய் தொற்றியதால் அவை அகலு மட்டும் புலியை நாம் விமர்சிப்பது தற்காலிகமாக தவிர்க்க முடியவில்லை என்பது என் கருத்து, இது தவறாக கூட இருக்கலாம்;//
தொற்று நோய்க்கு மருந்திருக்கிறது. இது மாறா நோய். தமிழன் உள்ளவரை மட்டுமல்ல உலகம் உள்ளவரையும் புலிகள் விமர்சிக்கப்பட வேண்டியவர்களே. சிறுபிள்ளையாக இருந்தபோது எம்மை அடித்தவனை கிழடுதட்டினாலும் கோபத்துடனே நோக்கிறோம். ஒரு சிறுபென்சில் துண்டைப் பறித்தவனை இன்று மட்டும் நினைவு படுத்திக் கொள்கிறோம். புலி கொன்றது மட்டுமல்ல அடித்துப்பறித்தது எவ்வளவு. வடக்குக் கிழக்கில் வாழ்ந்த யாராவது ஒருவருடைய குடும்பம் புலிகளின் இன்னலுக்கு தப்பியதுண்டா? இவர்களை எப்படி மன்னிப்பது. தமிழர்களின் வாழ்வில் வடுவாக அமைந்தது புலிகளே. அதை யாராலும் மறுக்கமுடியாதே.
பல்லி உண்மையை எழுதுவதற்குக் குற்ற உணர்வு தேவையில்லை. புலிகளை விமர்சிப்பவர்கள் குற்றவாளிகள் என்றால் எம்முடன் பல வெள்ளையர்களும் சேர்ந்து கொள்வார்கள். புலிகளை எதிர்த்து எழுதுபவர்கள் எல்லாம் அன்ரிப்புலியும் அல்ல அங்கிள் புலியுமல்ல. நாம் வெறும் தமிழர்களின் நலன்விரும்பிகளும் நலன்பேணிகளுமே.
thurai
இலங்கை மக்களை புலியின் பயங்கரவாதத்திலிருந்து விடுவித்ததில் புலம்பெயர் நாடுகளில் வாழும் புலி எதிர்ப்பாளர்களின் பங்குமுண்டு. இதனை சிங்கள அரசு அறிந்திருந்தாலும் இதனைப் பெரிதுபடுத்திக் காட்டுவதில்லை.
புலி எதிர்பாளர்களிற்கு, புலிகளின் தவறுகளை விமர்சித்தவர்களிற்கு, விடுதலைப்புலிகள் என தங்களிற்குத் தாமே பேர் சூட்டி வாழ்ந்த பண அபகரிப்பு கூட்டம் வைத்த பெயர் துரோகிகள், ஒட்டுப்படைகள் இன்னும் பல. சாகும் பசுவில் பால் கறக்கும் கொடியவர்கள் போல் தமிழர் இறக்கும் போதும் கூட அதனை தமது பண வரவிற்காக விளம்பரமாக்கியவர்கள். இப்போ ஏன் இவ்வளவு தூரம் நடக்கின்றார்கள்?.
புலி எதிர்ப்பாளர் என்ன செய்தீர்கள் செய்கின்றீர்களென கேட்போரிற்கு எனது பதில். தமிழரின் பிரச்சினை பற்ரி பேசவோ கதைக்கவோ புலிகளை விட யாரிற்கும் உரிமை இல்லாமல் தடுத்தவர்கள் புலம் பெயர் புலியின் பயங்கரவாதிகளே (சண்டியர்கள்).
காரணம் பறிக்கும் பணத்தில் மற்றவர்களிற்கு பங்கு போகக் கூடாதென்பதேயாகும். ஈழத்தமிழரின் பற்ரிலா இந்த தடையை விதித்தார்கள். இப்போ இதற்கு பரிகாரம் தான் இந்த உண்ணாவிரதமும் நடைபயணமும், இன்னும் என்னவெல்லாமோ பொறுத்திருந்து பார்ப்போம்.
துரை
Kulan
துரை! கேட்கவேண்டிய கேள்வி…நாக்கைப்பிடுங்கி எறியுமாறு கேளுங்கள். முள்ளிவாய்க்காலில் புலி விழுந்து முடிந்தபின் தமிழர்களாய் ஒற்றுமைப்பட்டு அங்குள்ள அகதிகளுக்கோ அவலநிலை மக்களுக்கோ உதவி செய்வதை விட்டுவிட்டு அரசுடன் தாளம்போடுபவர்கள் ஒருபுறம். பணம்பிடுங்க போராட்டங்கள் வேறு. புலிகள் இப்படி அடிப்பார்கள் அப்படிப் பிடிப்பார்கள் என்று வானொலி தொலைக்காட்சிகளில் விலாசமான இராணுவ ஆய்வுகளாலும் அரசுடன் சேர்ந்து நின்றும் நிலத்துப்புலிகளை மண்கவ்வப்பண்ணியது புலத்துப் புலிகள்தான்: துரை தொடர்ந்து கேளுங்கள்
thurai
குலன் நன்றிகள், புலிகளென்று புலம்பெயர் நாடுகளில் வாழும் யாருக்காவது நாக்கைப் பிடுங்கி எறியும் அளவிற்கு மான ரோசம் உண்டா? ஏதாவது மனப்பக்குவமுண்டா? கொள்கைகள் உண்டா?
போர் நடக்கும் போது இறப்பவரெல்லாம் மாவீரரும், விடுதலைக்கு வித்தாகினோரும் என்பார்கள். இலங்கை இராணுவம் புலிகளை அழிக்கும்போது மக்கழும்சேர்ந்து மரணமானதை அரச படுகொலையென்றார்கள்.
தமிழ்நாட்டு மக்களை தொப்புள் கொடி உறவென்பார்கள். இந்தியா துரோகியென்பார்கள். புலிகளின் கண்ணிற்கு தமிழகம் ஓர் தனிநாடு. அது மட்டுமல்ல கருணாநிதி துரோகியென்பார்கள், மறுநாள் ஜெயலலிதா துரோகியென்பார்கள்.
சீமான் புலம்பெயர்நாடுகளிற்கு வரும்போது எழுந்து நின்று குடை பிடித்தார்கள். இப்போ சீமானிற்காக யாராவது குரலாவது கொடுக்கின்றார்களா?
சந்தர்ப்பவாதம், சுயநலம், பதவிமோகம்,பணமோகம், மிரட்டல், கொலைகள். இதெல்லாவற்ரின் மொத்த உருவமே விடுதலைப் புலிகள். இதில் இவர்களை நம்பி உயிர் கொடுத்த இளம் சமூகத்தினரே பரிதாபமானவர்கள். இன்னமும் தாம் புலிகள் என்று சொல்லி வாழும் தமிழர்கள் யாராவது இதற்கு பதில்தருவார்களா?
துரை
Nanthakumar
உருப்படியான செயற்றிட்டம் ஒன்றுடன் இணைந்த விமர்சனமே ஆரோக்கியம். மற்றவை வெறும் ரைம்பாஸிங். தங்களைத் தாங்களே குளீரூட்டி மகிழ்வுறும் மனோவியாதி.
BC
உருப்படியான செயற்திட்டம் அவர்களிடம் ஏற்கெனவே இருக்கு. புலிகளின் நம்பிக்கையை பெற்ற சினிமாவுக்கு பாட்டு எழுதும் தாமரை அமெரிக்கா, கனடாவில் உள்ள புலி ஆதரவாள்களை சந்தித்துவிட்டு விகடனுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் சொல்கிறார்
”தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். மே – 17 வரை போர்க்களத்தில் இருந்து, எப்படியோ தப்பி வந்த சிலரும் இதனை மறுக்கவில்லை. அதே நேரம், ‘தலைவர் வருவார், தமிழீழம் பெற்றுத் தருவார்’ என்கிற முழக்கத்தைத் தவிர்த்து, ‘நாம் போராடித் தமிழீழம் பெறுவோம். அதனைத் தலைவர் கையில் தருவோம்!’ என முழங்கும்படி நான் வேண்டினேன். உலகளாவிய அளவில் இப்போது உருவாகி இருக்கும் ஆக்கப்பூர்வமான கைகோப்பு கண்டிப்பாகத் தலைவர் கையில் தமிழீழத்தை ஒப்படைக்கும்!” – நரம்புகளில் நம்பிக்கை தெறிக்கச் சொல்கிறார் தாமரை.
குலன் புலிகளை விமர்சிப்பது மனோவியாதியில் இருந்து பலரை விடுவிக்க உதவி செய்யும்.
Nanthakumar
‘புலிகளை விமர்சிப்பது மனோவியாதியில் இருந்து பலரை விடுவிக்க உதவி செய்யும்.’
இதை புலிகள் முதலில் படிக்கவேண்டும். இரண்டாவது இந்த விமர்சனங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். முடிந்தால் அவர்களும் ஏற்றுக்கொள்ளும் விதமாய்தன்னும் எழுத நாம் முயலவேண்டும். வெறும் வம்பு தும்பு நக்கல் நளினங்கள் சரிப்பட்டுவராது.
Kulan
நன்றி பிசி
/ ‘தலைவர் வருவார், தமிழீழம் பெற்றுத் தருவார்’// புலிகளின் இந்தக் கூற்றில் இருந்து நாம் ஒரு முடிவுக்கு வரலாம். தன்னம்பிக்கை அற்ற ஒரு சமூகத்தை தலைவர் உருவாக்கியிருக்கிறார். இதையே பிசி அவர்கள் சொல்கிறார். ஒருதனி மனிதனின் தோழில் காவடி தூக்கி வைத்ததால் அரசாங்கம் இது ஒரு தனிமனிதனின் ஐடியோலொயி என்று மட்டுமல்ல தாங்கள் தான் தமிழர்களின் மீட்பர் என்றும் பரப்புரை செய்து போரையும் வென்றார்கள். வெற்றி என்பது புலிகளை அழித்ததல்ல தமிழ்மக்கள் பலரின் மனங்களை வென்றுள்ளார்கள். புலி செய்திருக்க வேண்டியதை மகிந்த செய்திருக்கிறார். தன்னம்பிக்கையற்ற மக்களின் மனங்களை வெல்லாத போராட்டம். என்றும் தோல்வியையே தழுவும்.
Sanjeevan
/தன்னம்பிக்கை அற்ற ஒரு சமூகத்தை தலைவர் உருவாக்கியிருக்கிறார்//
நீங்கள் இந்த சமூகத்தின் பிரதிநிதி இல்லையா குலன்?
//தமிழ்மக்கள் பலரின் மனங்களை வென்றுள்ளார்கள்//
உங்களின் மனத்தையும் மகிந்தா வென்றுள்ளாரா என்பதை அறிய ஆவல்கொண்டுள்ளேன்.
Kusumpu
நந்தகுமார் உங்களுக்குத் தெரியுமா? புலிகள் முதல் முதலில் முகங்கழுவாவிட்டாலும் வாசிப்பது புலிகள் அல்லாதவர்கள் நடத்தும் இணையத்தளங்களைத்தான்: புலிகளுக்கு எது சரிப்பட்டு வந்தது?
BC
//Nanthakumar – இதை புலிகள் முதலில் படிக்கவேண்டும். //
புலிகள் முதல் முதலில் முகங்கழுவாவிட்டாலும் வாசிப்பது புலிகள் அல்லாதவர்கள் நடத்தும் இணையத்தளங்களைத்தான் என்று குசும்பு சொன்னது உண்மை.புலிகளுடை இணையத்தளங்களை விட தேசம்நெற்றை பார்ப்போர் தொகை பல மடங்கு அதிகமானது.தேனீ பார்ப்போர் தொகையும் அதிகமே. புலி ஆட்களும் பார்ப்பதினால் அப்படி. பார்த்து முடிந்த பின்பு தங்களை சந்தோசபடுத்த வடிவேலு, கவுண்டாமணியின் கொமடி சிடி பார்ப்பது மாதிரி தங்களுடைய புலி இணையதளங்களை பார்ப்பார்கள்.
Kusumpu
துரை- /சீமான் புலம்பெயர்நாடுகளிற்கு வரும்போது எழுந்து நின்று குடை பிடித்தார்கள். இப்போ சீமானிற்காக யாராவது குரலாவது கொடுக்கின்றார்களா?/ ஏன் சீமான்: இந்தியா என்று தேடுகிறீர்கள். ஒவ்வொருநாளும் தெருவழியை நின்று வேலை வெட்டியின்றிக் கத்திய புலத்துப் புலிப்புண்ணாக்குகள் 2009மே 18 பிறகு என்ன செய்தார்கள் ஒரு கண்ணீரஞ்சலி? மாவீரர் வணக்கம்? இருக்கிறார் இல்லை என்று இரண்டாய் பிரிந்து அடிபட்டார்கள். கேடுகெட்ட கொலைகாரக் கும்பல்தான் இவர்கள்.
Kulan
/நீங்கள் இந்த சமூகத்தின் பிரதிநிதி இல்லையா குலன்?/- சஞ்ஜவன்- நியாமான கேள்வி. இங்கே நான் குறிப்பிட்டது புலிச்சமூகத்தை. ஒரு இனத்தினுள் பல சமூகங்கள் உண்டு. மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டது இனம். கலாச்சாரம்: பண்பு: சாதி: தொழில்: தத்துவார்த்தம் சமயம் எனப்பல கோட்பாடுகளின் கீழ்சமூகம் அமையும். நான் தமிழ் இனத்தைச் சேர்ந்தவனாயினும் புலிச்சமூகத்தினுள் இருந்து வெளிவந்ததால் அகப்புறக்காரணிகளை கூடுதலாக அறியக்கூடியதாக இருந்தது.
உங்களின் இரண்டாது கேள்வி: /உங்களின் மனத்தையும் மகிந்தா வென்றுள்ளாரா என்பதை அறிய ஆவல்கொண்டுள்ளேன்/ நிச்சயமாக இல்லை புலிஎதிர்த்தாலும் சரி என்னைத் கொல்லத் தேடித்திரிந்தாலும் சரி எதிரியுடன் என்னின விரோதியுடன் கூட்டுச்சேரவே: தொடர்புகளை ஏற்படுத்தவோ மாட்டேன். நான் புலி எதிர்ப்பாளன் அல்ல. புலிகளை அன்றும் இன்றும் சரியான வழியில் (எனக்குத் தெரிந்த புரிந்த வரை) சிந்திக்கச் செய்ய முயற்சித்தவன். சிவந்தனின் நடைப்பயணத்தை கொச்சைப்படுத்துவது அல்ல என்கட்டுரையின் நோக்கம். இந்த பாரிய நடவடிக்கையில் ஈடுபடும் ஒரு இளைஞன் பெரிய தாக்கத்தை ஐரோப்பிய தமிழர்கள் அல்லாத இனத்தினுள் கொண்டு சென்று இலங்கை அரசை நடுங்கச் செய்யுமளவுக்கு செய்திருக்கலாம். எப்படி என்பதை கட்டுரையில் காண்க. ஜெனிவாவுக்கு நடந்து போவது என்பது விளையாட்டான காரியமில்லை. இதைச் சரிவரச் செய்யவில்லையே என்ற ஆதங்கம் தான் இக்கட்டுரை. அவரை வழிநடத்தியவர்கள் மேல்தான் எனக்குக் கோபம். இளைஞர்கள் சரியாக வழிநடத்தப்பட வேண்டும். மகிந்தா ஒற்றுமை ஒருநாடு என்று வாயளவில் சொன்னாலும் அதற்கான அடிப்படை வேலைத்திட்டம் அவரிமும் இல்லை அவர் கொம்பனியும் இல்லை. இது இன்னொரு வலுவான போருக்கு வழிவகுக்கிறார் என்பது தான் உண்மை. இனி ஒரு ஆயுதப்போராட்டம் தலையெடுக்குமாயின் புலிகள் விட்ட பிழையை புரிய தலைமைத்துவம் விடாது. சிலர் பயப்படலாம் இன்னுமொரு போரா என்று. 1972 செகுவாரா போட்ட ஆயுதங்களை 1976 நாம் தூக்கவில்லையா. செகுவாராவும் கணமூடித்தனமாக ஈவிரக்கமில்லாமல் அழிக்கப்பட்ட அமைப்பே. எனது கணிப்பில் புதியபோர் முஸ்லீம் சமூகத்திலிருந்து வெடிப்பதற்கும் சாத்தியங்கள் பல உண்டு. இன்றைய நிலையில் நாம் மிக அவதானமாக காய் நகர்த்துவது மிக முக்கியம். உறவாடிக் கெடுப்பது கூட இராஜதந்திரம் தான். அதை புலிகள் மேல் அரசு பாவித்தது என்பதையும் அறிக. தேசம் தொடர்ந்து இடம்தருமானால் இதுபற்றி எழுத ஆர்வமாக உள்ளேன்.
பல்லி
குண்டு சட்டியில் குதிரைபோல்
ஈழம் ஒன்றை கேட்டுகொண்டு
சுத்தி சுத்தி தீர்வு பல
அதில் ஒன்றே நடை பயணம்
சீரான தலமை இல்லை
சிந்திக்கும் திறனும் இல்லை
சிங்கள தலமைகளுக்கோ
சிரிப்புக்கு குறைவும் இல்லை
ஈழத்தில் பிரச்சனையாம்
லண்டனிலே நடைபயணம்
ஜெனிவாவில் மகாநாடாம்
இல்லாத புலிகளுக்கு
வட்டுகோட்டை தீர்மானம்
பாட்டி வடை கதை போல
அடிக்கடி நினைத்திடுவோம்
அழகான பனைமரம் போல்
நாடுகடந்த ஈழமென்றோம்
நடுகடலில் கப்பல் என்றோம்
மதிநுட்ப அரசமைக்க
கூட்டமைப்பு கிழிக்குமென்றோம்
பொட்டர் இல்லா தேசத்தில்
மொட்டுகளும் மலர்ந்து விடும்
கஸ்ரோவை காணவில்லை
காதலர்கள் கொண்டாட்டம்
ஒருமனதாய் குரல் கொடுப்போம்
ஒன்றாயே போர் தொடுப்போம்
தளபதிகள் தப்பியோட
தமிழ்மக்கள் பலியானோம்
அமிரை துரோகியாக்கி
அதுக்காக பலியெடுத்து
ஆனாலும் கூட்டமைப்பில்
அவர்கள்தான் தலமை வழி
தலைவருக்கு துணை வேண்டும்
அகிம்சையில் பெண் வேண்டும்
மதிவதனிக்கு மணமாலை
அப்பருக்கு நாட்டு பற்றாளர்
குலனின் கட்டுரையில்
குறையில்லை நிறையுண்டு
குண்டு சட்டி குதிரை போல்
குறை பல புலி சொல்லும்;
நட்புடன் பல்லி;;
பல்லி
// தேசம் தொடர்ந்து இடம்தருமானால் இதுபற்றி எழுத ஆர்வமாக உள்ளேன்.//
கண்டிப்பாக பல்லியும் தங்களுக்கு கை கொடுப்பேன்;
Kulan
நன்றி பல்லி கைதந்தால் என்கை உயரும் என்பதில் சந்தேகமில்லை. உதாரணம் உலகமயமாதல் என்னும் எனது கட்டுரை.
பல்லி என்னை ஒரு சிக்கலுக்குள் மாட்டிவிட்டீர்களே. உங்களுக்கு எதிர்பாட்டுப் பாடக்கூடிய அளவிற்கு கவித்துவம் என்னிடம் இல்லை. நன்றாகக் கவிதை எழுதுகிறீர்கள். சுருக்கமாக நாசூக்காக சொல்லவேண்டியதை அழகாக அடுக்காகச் சொல்லியுள்ளீர்கள்.
naanee
நந்தகுமாருடன் நானும் உடன் படுகின்றேன் வேலைத்திட்டம் இல்லாமல் சும்மா வெறுமன எழுதித்தீர்ப்பது ஒன்றுக்கும் உதவாது. அவர்களை கடைசி நேரடியாக எதிர்க்கும் நிலையாவது வரவேண்டும். கடைசி பல பேரின் மனவியாதியையாவது தீர்க்கும் என்று நினைத்தால் நீங்கள்தான் விளங்காதவர்களாகின்றீர்கள். அவர்களுக்கு எல்லாம் தெரியும் தலைவர் எப்படி செத்தார் என்பதும் வடிவாக தெரியும். யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் .இவர்களுக்கு யானையின் இடத்தில் புலி. பலர் இவர்கள் விளக்கமில்லாமல் இப்படியிருக்கின்றார்களே என நினைகின்றார்கள். நெடுமாறனைப் போய் கேளுங்கள் என்ன சொல்வார். உண்மையை சொன்னால் நாளைக்கு பத்திரிகையில் படம் எப்படி வரும். உலகமயமாதலில் எல்லாம் வியாபாரம் தான்.
Nanthakumar
குலனின் கட்டுரையில்
குறையில்லை நிறையுண்டு
குண்டு சட்டி குதிரை போல்
குறை பல புலி சொல்லும்;
கை தந்தால் கை உயரும்
நீ சிரித்தால் சிரிப்பழகு
நீ நடந்தால் நடையழகு
முதுகெல்லாம் புண்ணாச்சு
இனிக்காணும் விட்டுவிடு
என் முதுகை நீ சொறிய
உன் முதுகை நான் சொறிந்தேன்
ஆனாலும் ஆனதென்ன
கோவணத்தைக் கண்டதனால்
களி கொண்டு புலம்புகின்றோம்
புலம்புக புலம்புக
புலமெல்லாம் புலம்புக
‘மகிந்தா வந்தார்
மக்களின் மனங்களை வென்றார் ‘
குலனை மட்டும் வெல்லவில்லை
யார் இந்த மக்கள்
யார் இந்த மக்கள் – மக்காள்
யார் இந்த மக்கள்?
nantha
இந்தியாவில் இருக்கும் தாமரைக்கும், கோபலசாமிக்கும், நெடுமாறனுக்கும் பிரபாகரன் உயிரோடு இருக்கிறான் என்ற ‘உண்மை” தெரிகிறது. பாவம். பிரபாகரனின் உறவினர்கள். அவர்களுக்கு மாத்திரம் அந்த உண்மை தெரியவில்லை. கனடாவில் வசிக்கும் பிரபாகரனின் அக்கா விநோதினியை விட்டு ஒரு அறிக்கை சமர்ப்பிக்க புலி ஆதரவாளர்களால் முடியவில்லையோ?
Kulan
/நந்தகுமாருடன் நானும் உடன் படுகின்றேன் வேலைத்திட்டம் இல்லாமல் சும்மா வெறுமன எழுதித்தீர்ப்பது ஒன்றுக்கும் உதவாது/ naanee
வேலைத்திட்டத்தைப் பற்றிப் பேசுவோம். நடைப்பயணத்தில் வேலைத்திட்டத்தை வைக்கவேண்டியது யார்? யார் நடக்க முயற்சி எடுத்தார்களோ அன்றி யார் பின் நின்று நடத்துகிறார்களோ சரியான வேலைத்திட்டத்தை வைக்கவேண்டியவர்கள். இதை சரியாக வைக்கவில்லை என்பது தானே கட்டுரையின் குற்றச்சாட்டு.
/கடைசி பல பேரின் மனவியாதியையாவது தீர்க்கும் என்று நினைத்தால் நீங்கள்தான் விளங்காதவர்களாகின்றீர்கள்/
கட்டுரையும் என்பின்னோட்டங்களையும் சரியாக விளங்கியிருப்பீர்களாயின் யார் விளங்கிக் கொள்ளவில்லை என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் ஆனால் கட்டுரையாளரோ அன்றி பின்நோட்டக்காரர்களே அல்ல.
/யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் .இவர்களுக்கு யானையின் இடத்தில் புலி// இதை இப்படிச் சொல்லலாமே. புலி இருந்தும் பிரச்சனைதான் இறந்தும் பிரச்சனை என்று.
/நெடுமாறனைப் போய் கேளுங்கள் என்ன சொல்வார். உண்மையை சொன்னால் நாளைக்கு பத்திரிகையில் படம் எப்படி வரும்./
இந்திய அரசியல்வாதிகளை அதுவும் தமிழ் அரசியல்வாதிகளை கணக்கெடுத்துக் கதைப்பது தான் நேரத்தை வீணடிக்கும் செயல்: அவர்கள் கோமாளிகள் என்று இலங்கை அரசு கூறிய வார்த்தைக்கே ஒரு சரியான நடவடிக்கை எடுக்க முடியாதவர்கள். இவ்வளவு மக்களும் இறந்தபோது ஒரு ஆன காரியத்தைச் செய்யமுடியாத இவர்களை எப்படிக் கணக்கெடுப்பது. எனக்கு நெடுமாறன் வை.கோ. விடுதலைச்சிறுத்தைகளுடன் நேரடித் தொடர்புண்டு. ஆனால் அவர்களைப்பற்றிய சரியான கணக்கும் என்னிடம் உண்டு. மக்கள் சாகச் சாக இவர்கள் சொன்ன வார்த்தைகளை நினைவுபடுத்திப் பாருங்கள். இதுவும் ஒரு சினிமாக்கூட்டம்தான். ஒரு பிரபாகரனை வாழவைப்பதனூடு தமிழினத்தை வாழவைக்க முடியாது. களத்தில் நின்றவர்கள் அப்பாவி மக்களே தவிர முக்கியமாக புலிகள் அல்ல. மக்களைக் காக்கவேண்டியவர்கள் போராளிகளே. ஆனால் வன்னிப்போரில் புலிகளைக் காத்து கேடயமாக நின்று செத்து மடிந்தது மக்கள் தான். இதை யாராவது மறுக்க முடியுமா? யாழ்பாணத்தில் இறுதியில் புலிகள் ஓடினார்கள் மக்கள்தானே அதுவும் ஆயுதமில்லாத மக்கள் தானே ஆமியை எதிர்கொண்டார்கள். புலிகளைப் போராளிகள் என்பது படு முட்டாள்தனம். ஆனால் என்றும் என்கண்கள் கசிவது அந்த அப்பாவி இளம்பிள்ளைகள் போராட்டம் என்று எண்ணிப் புலித்தலைமையைக் காக்க போர்கோலம் பூண்டார்களே. இதுதான் இதயத்தை இரணமாக்கும் வேதனை. ஊரான் பிள்ளையை குண்டுகட்டி சயனைட் அடித்துச் சாக அனுப்பிய புலித்தலைமை சரணடைய வெள்ளைக் கொடியுடன் போனதுதான் உலகமகா வேடிக்கை. சாகப்பயந்த இவர்களுக்கு எதற்குப் போராட்டம். மறவர்குலத்தையே மாசுபடுத்திய மடையர்கள் தான் புலித்தலைமையும் அதை ஆதரிக்கும் புலம்பெயர் புலிஆதரவாளர்களும்.
நந்தா கேளுங்கள். கேட்கவேண்டிய கேள்வி. இப்போ பிரபாகரன் இருந்தோ வந்தோ என்ன செய்யமுடியும். பொதுமக்களே அடித்துத் துவைப்பார்கள். படையே அழிந்து எதிலியாக நிற்கும் பிரபாரனால் என்ன செய்ய முடியும். ஆரம்பத்தில் இருந்து ஒன்றாயிருந்த கே.பியே புலிகளைக் காட்டிக் கொடுத்து அரசுடன் கைகோத்து நிற்கும் போது என்னத்தை பிரபாகரன் பிடுங்கி அடுக்கப்போகிறார்.
chandran.raja
சூரியதேவன் ஒளியிழந்து பஸ்பமாகிப் போனது எல்லோருக்கும் தெரியும். தெரியாது என்று சொல்வது எல்லாம் “நடிப்பு” வகையைச் சேர்ந்தது. உயிரோடு இருக்கிறார் என்றால் “கப்பல்” “பெற்றோல்- நிரப்புநிலையம்” “தொடர்மாடிக் கட்டிடங்கள்” “நகைக்கடை” “தளபாடக்கடை” போன்ற பாரிய சொத்துக்கள் எல்லாம் தொடர்ந்தும் தனிச் சொத்துக்கள் ஆக்க முடியாது. அதை அனுபவிப்பவர்களுக்கே! பேரிடியைத் தோற்றுவிக்க கூடியது.
“உயிரோடுயிருக்கிறார்” என்று சொல்லும் போது தாமரை நெடுமாறன் கோ-சாமி போன்றவர்களுக்கு மாதமாதம் இந்திய ரூபாவில் ஒரு சிறுதொகையை கொடுப்பனவாக கொடுத்துவிட்டு தப்பித்துக் கொள்ளமுடியும். இனவெறியை தூண்டிவிட்டு தமது இனப்பெருமைகளை தொடர்ந்தும் வாயடித்துக் கொண்டிருக்கலாம். இதில்-இதைவிட வேறு சூத்திரம் கிடையவே! கிடையாது!!.
பல்லி
// உலகமயமாதல் என்னும் எனது கட்டுரை. பல்லி என்னை ஒரு சிக்கலுக்குள் மாட்டிவிட்டீர்களே//
தவறாக அப்படி செய்திருக்க மாட்டேன், அப்படி தெரியாமல் செய்திருந்தால் சுட்டி காட்டுங்கள் திருத்தி கொள்கிறேன்;
//மகிந்தா வந்தார்
மக்களின் மனங்களை வென்றார் ‘
குலனை மட்டும் வெல்லவில்லை//
புலியை வென்றதனால் மக்களை வென்றார் என்றால்; புலிகள்தான் தமிழர் தமிழர்தான் புலிகள் என்னும் தரித்திரம்(தத்துவம்) உன்மையாகிவிடும்; மகிந்தா மக்களை வெல்ல வேண்டுமாயின் ஒரு இனபாகுபாடு அற்ற அரசை உருவாக்க வேண்டும்; ஒருசில தமிழரை அமைச்சர் ஆக்குவதாலோ அல்லது சில அமைப்புடன் கூடி குலாவுவதாலோ இனபிரச்சனை தீர்ந்து விடாது; குலனும் மக்களில் ஒருவர்தானே.
// வேலைத்திட்டம் இல்லாமல் சும்மா வெறுமன எழுதித்தீர்ப்பது ஒன்றுக்கும் உதவாது.//
அப்படி சொல்வது சரியோ தெரியவில்லை, காரனம் வேலைதிட்டம் அரசியல் சார்ந்து இல்லாவிட்டாலும் ,சமூகம் சார்ந்து சிறுசிறு உதவிகள் செய்த வண்ணம்தான் இருக்கிறார்கள். உதாரனத்துக்கு தேசம்னெற் கூட தனது சமூகபங்களிப்பை செய்கிறது; அரசியல் வேலைதிட்டங்களுக்கு முதலில் இருப்பவர்கள் யார் இவர்கள் கடந்தகாலம் என்ன இவர்கள் தொடர்ந்தும் அரசியல் செய்வார்களா? இப்படி பல பிரச்சனைகள் உண்டு, புலி மட்டும் எம் சமூகத்துக்கு அழிவை தரவில்லை, ஆனால் புலிதான் நம் இனம் அழிய பெரும்பங்கு வகித்தது என்பதில் சந்தேகம் இல்லை; எழுதி பலன் இல்லை என்பது தவறு எழுதுவதால் பலதை நாம் கற்று கொள்கிறோம்; இன்று மகிந்தாவில் இருந்து சங்கரியர்வரை ஒவ்வொருவருடைய முகதிரையையும் இப்படியான விமர்சனங்களே தெரியபடுத்தின; புலிகளோ அல்லது மற்றய அமைப்புகளோ ஏன் அரசோ பேனாக்களை நசுக்காதிருந்தால் இப்படி ஒரு பேரவலம் எமக்கு வந்திருக்காது; எனது கருத்து பதவி வெறி இல்லாத ஒரு வேலைதிட்டம் வரும்வரை அரசியல் அதுவும் தமிழர் அரசியல் ஒரு சாக்கடைதான்; அந்த சாக்கடையைதான் நாம் சுத்தம் செய்ய முயல்கிறோம்;
Kulan
எனக்குக் கவிதை வராது என்பதற்காக நந்தகுமார் போட்டுத்தாக்கிறார். நல்லது கவிதை எழுதும்போது ஒன்றுக்கொன்று தொடர்பாக இருப்பது முக்கியம்.
கை தந்தால் கை உயரும்
நீ சிரித்தால் சிரிப்பழகு
நீ நடந்தால் நடையழகு
இந்த வரிகளுக்கிடையில் எதாவது தொடர்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
மகிந்தா வந்தார்
மக்களின் மனங்களை வென்றார் ‘
குலனை மட்டும் வெல்லவில்லை
யார் இந்த மக்கள்
யார் இந்த மக்கள் – மக்காள்
யார் இந்த மக்கள்?
என்கருத்துப்படி மகிந்த தமிழ்மக்களின் மனங்களில் இடம்பிடிக்க முயன்று வருவது எல்லோருக்கும் தெரிந்ததே. இதைச் செய்திருக்க வேண்டியது புலிகளே என்பது வாதம். நேற்றும் யாழ்பாணத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது கிடைத்த செய்தி புலிகள் இருக்கும் போது பிள்ளைகள் பாடசாலை போக ஏலாது. பொருள் பண்டம் இல்லை காசு பணத்தைக் கண்டவுடன் வந்துவிடுவார்கள் கொண்டுவா அதுக்கு இதுக்கு என்று இப்படி அடுக்கிக் கொண்டே போனார்கள். இப்ப பரவாயில்லை என்றார்கள். குடியேற்றங்கள் நடக்கின்றனவே: தமிழை அழிந்து புத்தமதத்தைத் தானே நிறுவ முயல்கிறார் மகிந்தா என்றபோது அவர்கள் சொன்னவார்த்தை அதுவும் உண்மைதான், ஆனால் நாம் நிம்மதியாக மூச்சு விடுகிறோமே. இதில் இருந்து தெரிவது ஒரு எதிரியே புலிகளை விட நல்லவனாகி விட்டான் என்று புரியவில்லையா. நந்தகுமார் ஏன் என்னுடன் வம்பிழுக்கிறீர்கள்: யார் அந்தமக்கள்? புரியவில்லையா? இலங்கையில் வாழும் தமிழர்களைத்தான் குறிப்பிடுகிறேன். விடுதலைவேண்டி நின்றவர்களும் புலிகளால் கொன்று குதறப்பட்டவர்களும் புண்பட்டவர்களும் அவர்களே.
Kulan
சந்திரன் ராஜா! கர்த்தர் வருவார் என்று காத்திருப்பவர்களும் எம்ஜிஆர் பின்புறத்தால் வந்து மாமரத்தில் ஏறி முகடுபிரித்து இறங்கி காப்பாற்றுவது போல் அமெரிக்கா வானத்தில் இருந்து குதித்துத் தம்மைக்காப்பாற்றுவார்கள் என்று நம்பி நாசமாய் போன தலைவர்கள் வளர்த்துச் சென்ற வாரிசுகள் இப்படித்தான் எழுதுவார்கள். அவர்கள் எதை எழுதினாலும் அதற்குச்சரியான பதிலலையே விளக்கத்தைக் கொடுக்க வேண்டியது நாமல்லவா?
Kulan
பல்லி! /புலியை வென்றதனால் மக்களை வென்றார் என்றால்; புலிகள்தான் தமிழர் தமிழர்தான் புலிகள் என்னும் தரித்திரம்(தத்துவம்) உன்மையாகிவிடும்; மகிந்தா மக்களை வெல்ல வேண்டுமாயின் ஒரு இனபாகுபாடு அற்ற அரசை உருவாக்க வேண்டும்/
நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தாலும் நான் சொல்வ வந்தது என்னவென்றால் ஒரு எதிரி எம்மக்களின் மனங்களை வெல்ல முயற்சித்தான் என்பதுதான். தமிழில் பேசி எம்மக்களைக் கவரமுயல்வது: வடக்குக் கிழக்குக்கு பொருட்களை போகவிடுவது. ஆமியின் அட்டகாசங்களை குறைத்தது போன்ற பலவிடயங்களைச் சொல்லலாம். சிறு சிறு சலுகைகளைக் காட்டி மனங்களைக் கவர முயல்கிறார் என்பது தான் உண்மை. அச்சலுகைகளூடாக தமிழ்பிரதேசங்களை அபகரிப்பதும் குடியேற்றங்களை விரைவு படுத்துவதும் பெளத்தர்கள் சிங்களவர்கள் என்ற மாயையை புத்தசிலை வைப்புக்களூடு திணிக்க முயற்சிப்பது போன்ற பல மறைமுகமான வேலைத்திட்டங்களை அவர் கொண்டுள்ளார்.
நீங்கள் கூறுவதுபோல் இனப்பாகுபாடற்ற சமூகத்தை அவரால் உருவாக்குவதற்குச் சந்தர்பமே இல்லை. இதற்கு பழைய சிங்கள தமிழ் தலைவர்களும் அன்றை சிங்கள தமிழ் தலைவர்களும் புலிகளும் இதற்கு இடம்தர மாட்டார்கள். குழந்தைகளுக்கு விதையிலேயே துவேசம் என்ற நஞ்சை ஊற்றி இருசாராரும் வளர்த்துள்ளனர். அத்துடன் கடந்த தேர்தல் மகிந்தவை சிங்களவர்களை நம்பியே அரசியல் நடத்துமாறு பணித்துள்ளது. கூத்தணி அன்று எப்படிக் கத்தியதே அப்படியே இன்றும் கத்துகிறார்கள். இனப்பாகுபாடு முதலில் இல்லாமல் போவதற்கு பெளத்தத்தை அரசியலுக்குள் நுளையவிடுவதும் சிங்களவர்கள் மட்டும் தான் பெளத்தர்கள் என்று மாயையை உடைக்க வேண்டும். முக்கியமாக குழந்தைகளுக்கு துவேசமற்ற பாகுபாடற்ற ஒரு மனநிலையை அரசு ஏற்படுத்தாத வரை எதிர்காலம் எமக்கு மட்டுமல்ல சிங்கள இனத்துக்கும் சூனியமானதுதான்.
தமிழர்கள் எல்லாம் புலிகள் அல்ல புலிகள் தமிழர் என்று தான் நம்பியிருந்தோம் புலிகளாக சிங்களவர்கள் இருந்திருக்கிறார்கள் உ.ம்:-நடேசனின் மனைவி. புலிகளின் உயர்பாதுகாப்பில் இருந்தவர். பல சிங்களவர்கள் புலிகளின் பணத்துக்காக அரசுக்கெதிராக குண்டு வைத்தவர்கள். ஆதலால் புலிகளைத் தமிழர்கள் என்பதும் தவறானது.
எழுதி பலன் இல்லை என்பது தவறு எழுதுவதால் பலதை நாம் கற்று கொள்கிறோம்; -பல்லி
உண்மை. பல்லி சொல்வது உண்மையிலும் உண்மை. எழுதுவதால் தானே எழுட்சி ஏற்படுகிறது. எழுச்சியில்லா மனிதனே இனமோ புரட்சியடைய மாட்டான் வளர்ச்சியடையவும் முடியாது. எழுந்து நிற்பனதானே எழுத்துக்கள். இல்லையா பல்லி?
Kulan
பல்லி!
/நன்றி பல்லி கைதந்தால் என்கை உயரும் என்பதில் சந்தேகமில்லை. உதாரணம் உலகமயமாதல் என்னும் எனது கட்டுரை./
இப்படித்தானே எழுதினேன்.
// உலகமயமாதல் என்னும் எனது கட்டுரை. பல்லி என்னை ஒரு சிக்கலுக்குள் மாட்டிவிட்டீர்களே/ – நான் சிக்கலில் மாட்டிவிட்டீர்கள் என்று நான் கூறியது எனக்குக் கவிதை வராது உங்கள் பாட்டுக்கு எதிர்பாட்டுப் பாட நான் என்ன செய்வேன்? அதைத்தவிர நான் ஒன்றும் தவறாக எழுதவில்லை பல்லி.
பல்லி
//முதுகெல்லாம் புண்ணாச்சு
இனிக்காணும் விட்டுவிடு//
கடிக்கும் இடத்தில் சொறிந்து பார்
அப்போ தெரியும் அதன் சுகம்;
என்பதுபோல் பிரச்சனைகளை பேசுவதால் சமூகம் விழித்திடும் என்னும் நப்பாசை குலன்போல் எனக்கும் உண்டு;
//கை தந்தால் கை உயரும்
நீ சிரித்தால் சிரிப்பழகு
நீ நடந்தால் நடையழகு//
ஜயோ நான் என்ன கரம்கொடுப்போம் வடம்பிடிப்பொம் எனவா சொன்னேன்;
குலன் கட்டுரையுடன் வந்தால் அதில் நடந்தவை ;நடப்பவை, நடக்கபோவை சிலதையாவது இந்த பல்லியும் பின்னோட்டமாய் சொல்வேன்
என முன்னோட்டமாய் சொன்னது ஒரு தப்பா??
சிரித்தால் சிரிப்பழகு என வைரமுத்து சொன்னது ஏனோ தெரியவில்லை, ஆனால் இங்கோ சிலர் சிரித்தால் பலர் வாழ்வு கெட்டுவிடும் என்பதை
நாம் அறிவோம்; சமாதான பேச்சுவார்த்தை பலதில் எம்மினபலமே தாங்கள் சொல்லிய சிரிப்புதான் என தமிழ்தேசியத்தின் அடாவடி ஆலோசகர் சொல்ல கேக்கவில்லையா??
நடையில் பலவிதம் உண்டு, அதில் நாம் பேசும் நடை நம்ப முடியாதது மட்டுமல்ல நம்பவும் கூடாது;
தொடரும் பல்லி;;;;;
nantha
புலி பிடித்துவிடும் அல்லது போட்டுத்தள்ளிவிடும் என்று ஊரை விட்டு ஓடிய பல தமிழ் கேடிகள் வெளிநாடுகளில் வந்து “புலியாகி” மிரட்டி பணம் சம்பாதித்து சொத்து சுகத்தோடு வாழ்வது மட்டுமில்லாமல் “தமிழ் பிரமுகர்கள்” வரிசைக்கும் உயர்ந்துள்ளனர். இலங்கையில் நடப்பது பற்றி ஒரு சுக்கும் சுண்ணாம்பும் தெரியாமல் பிரபாகரன் உயிரோடு இருக்கிறான் என்று கரடி விட்டு கதவுகளைத் தட்டி காசு தெண்ட என்ன வழி என்று தடம் புரண்டு கொண்டிருக்கும் புலிப்பினாமிகள் இலங்கையில் “இன்வெஸ்ட்” பண்ண நாணம் கெட்டு அலைவது தெரிந்தும் இன்னமும் புலி வாலைப் பிடித்துக் கொண்டிருக்கும் வெளிநாட்டுத் தமிழர்கள் பற்றி மற்றவர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
ஆயுதப் போராட்டம் என்பது கம்யூனிஸ்ட் சித்தாந்தம். கம்யூனிஸ்ட் அல்லாதவர்கள் அல்லது கம்யூனிசத்தை எதிர்ப்பவர்கள் ஆயுதம் ஏந்துவது அடக்கு முறைக்கே ஒழிய மக்களின் விடுதலைக்காக இருக்க முடியாது. எங்கள் இயக்கங்கள் அதனையே செய்தார்கள். முதலாளித்துவத்துடன் கை கோர்த்து விடுதலை பெற்றதாக வரலாறு கிடையாது.
முதலாளித்துவ இலங்கையில் சிங்கள முதலாளித்துவத்தை தமிழ் முதலாளித்துவம் எப்போதும் ஆதரித்தே வந்துள்ளது. சிங்கள முதலாளித்துவம் “மொழியை” ஆயுதமாக்கினார்கள். ஜே ஆர் ஜெயவர்த்தனாவின் களனி மாநாட்டுத் தீர்மானம் பற்றி தமிழர்கள் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் அதே கோஷத்துடன் வந்து வெற்றி பெற்ற பண்டாவை எதிரியாக்கினார்கள். பின்னர் ஜே ஆர் அரசுடன் “தேசிய அரசு” அமைத்து தமிழையே மறந்தவர்கள் “வட்டுக்கோட்டை” தீர்மானம் எதற்கு நிறைவேற்றினார்கள் என்றே புரியவில்லை.
ஒன்று மட்டும் புரிகிறது. இனத்துவேஷம் என்பது முதாலாளித்துவத்தின் ஒரு கோர முகம் என்பதே புரிந்து கொண்ட உண்மை.
இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த தமிழ் கோஷம் தமிழரைப் பலிவாங்க காத்திருக்கிறது?
Mohamed Nisthar
ஓகஸ்ட் 4ம் திகதி இரவு மணி 9.11 குலன் சத்தமின்றி அறைக்குள் வருகிறார். கையில் ஒன்றை எடுக்கிறார், அக்கம் பக்கம் பார்க்கிறார். ஏதோ செய்யப்போகிறார் என்று பயத்துடன் பார்த்துகொண்டிருக்க, வானம் விட்டது போல் ஆகிவிட்டது அவர் வேலை. அதாவது //” எனது கணிப்பில் புதிய போர் முஸ்லீம் சமூகத்திலிருந்து வெடிக்க சாத்தியங்கள் பல உண்டு. இன்றைய நிலையில் நாம் மிக அவதானமாக காய் நகர்த்துவது மிக முக்கியம். உறவாடி கெடுப்பது கூட இராஜதந்திரம் தான்”.//
குலன், ஜாக்கிரதை தமிழர் அழிவிலிருந்து பாடம் ஏதும் படிக்கவில்லையா? சண்டைக்கு தூண்டுவதா இராஜதந்திரம்?
BC
மொகமெட் நிஸ்தார் சொன்ன பின் தான் கவனித்தேன். அவர் சொல்வதில் நியாயம் உள்ளது குலன்.
PALLI
முகமட் நிஸ்தார் தாங்கள் சொல்வதெல்லாம் நாம் காதலிக்க நேரமில்லை என்னும் படத்தில் நாகேஸ் பாலையாவிடம் சொல்ல கேட்டவைதான் ஆகவே தயவு செய்து எங்கள் வயதையும் அனுபவத்தையும் கணக்கு பண்ணலாமே, தமிழர் அழியவில்லை அழித்தார்கள் என்பதுதானே உன்மை;
தொடரும் பல்லி;;;;
Kulan
மொகமட் நிஸ்தார்! உங்கள் இரவுக்கதை இருட்டாகவே இருக்கிறது. நிசார் அடக்குமுறைக்கு உள்ளாகும் இனம் மதம் என்றும் புரட்சிக்குத் தயாராகும். இதைத் தூண்டுவது எதிரியே தவிர நானில்லை. நான் இன்று சொன்ன எதிர்வு கூறல் நாளை நிஜமாகும் என்பது உறுதி.
/இன்றைய நிலையில் நாம் மிக அவதானமாக காய் நகர்த்துவது மிக முக்கியம். உறவாடி கெடுப்பது கூட இராஜதந்திரம் தான்/ நாம் என்று நான் கருதியது முஸ்லீம்களையும் சேர்த்தே. என்பார்வையில் முஸ்லீம்கள் வேறல்ல. தமிழ்மொழியைக் தாய்மொழியாக் கொண்ட ஒவ்வோருவனும் தமிழனே. எனது வெளிநாட்டில் வாழும் சொந்தப்பிள்ளையை விட இலங்கையில் வாழும் முஸ்லீங்கள் தான் உண்மைத்தமிழர்கள் என்பதை உறுதியாக நம்புபவன் யான். போராட்டம் என்பது ஆயுதம் தாங்கிப்போரிடுவது என்று அர்த்தமாகாது. இன்று முஸ்லீம் மக்களுக்கு மேலான மத அடக்கு முறை உலகளாவிய ரீதியிலும் முக்கியமாக இலங்கையிலும் இருப்பது கண்கூடு. முதன் முதலில் சிங்களவர்கள் இனக்கலவரத்தை ஏற்படுத்தியது முஸ்லீங்கள் மேல் என்பதை யாரும் மறந்து போகப் கூடாது. என்றும் இரண்டாவது இனமே அடக்கு முறைகளுக்கெதிராகப் போராடி வந்திருக்கிறது. இஸ்லாமியர்கள் தம்மை 3ம் இனமாக வரையறுத்த காரணத்தால் பிரச்சனைகளில் இருந்து தப்பிக் கொண்டார்கள். ஆனால் இன்று தமிழர்கள் (இஸ்லாத்தை பின்பற்றாதவர்கள்) தொகை அருகும் போது அடுத்த பெரிய இனத்தின் மேல்தான் ஆதிக்கத்தின் கரங்கள் நீட்டப்படும். தமிழர்களை அழிப்பதற்காகவும் ஒருக்குவதற்காகவும் இஸ்லாமியர்களை அரசு நன்கு பயன்படுத்தியதை யாவரும் அறிவர். அடுத்த கட்டம் மாறிநடப்பதற்குச் சாத்தியம் உண்டு. இப்படியான கருத்துக்களையே வைத்தே அவதானமாகக் காய்நகர்த்துவது முக்கியம் என்று கருதினேன். உங்கள் பார்வையில் அது பிழையாக இருக்கலாம். உறவாடிக் கெடுத்தே இன்று புலிகள் அழிக்கப்பட்டார்கள். ஆயுதத்தால் மட்டும் அரசு புலிகளை வென்றது என்பது வேடிக்கையானதே.
/குலன், ஜாக்கிரதை தமிழர் அழிவிலிருந்து பாடம் ஏதும் படிக்கவில்லையா? சண்டைக்கு தூண்டுவதா இராஜதந்திரம்?/ நல்லது உங்கள் எச்சரிக்கையை வரவேற்கிறேன். நாம் படித்தபாடத்தின் காரணமாகவே இப்படி எழுதினேன். சண்டைக்குத் தூண்டுகிறேன் என்கிறீர்கள். சமாதானத்துக்குரிய சமிஞ்ஞைகளைக் காணோமே. தமிழ்மக்களுக்குரிய அரசியல்: மொழி உரிமை திடமாக வரையறுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தாவிட்டால் இன்னொரு போரை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அல்லது தமிழினம் முற்றிலும் அழிந்திருக்கும். ஒரே மக்கள் ஒரே நாடு ஒரே ஒரே ஆகத்தான் வார்த்தையளவில் இருக்கிறது. அடிப்படைக்காரணிகள் எதுவும் தொட்டுப்பார்க்கப்படவில்லை. ஒரு இனத்தை தொடர்ந்து அடிமையாக அடக்கு முறையின் கீழ் வைத்திருக்க முடியாது.
சரி நாமெல்லாம் பிரபாரகன் புலிகள் என்று எதிர்த்தோம் பிழைகளைச் சுட்டிக்காட்டி துரொகிகள் என்ற பெயரும் எடுத்தோம். நாணயத்தின் மற்றப்பக்கத்தைப் பாருங்கள். பிரபாகன் வானத்தில் இருந்து குதித்த தேவனல்ல புலிகள் அன்று சொன்னதுபோல். இவனும் சமுதாயத்தின் அடக்கு முறைக்கெதிராக ஆரம்பகாலத்தில் கிளர்ந்தெழுத்தவனே. இவனை உருவாக்கியது சிங்களபெளத்த பேரினவாதமே. இன்று மகிந்தவுக்கு கிடைத்திருப்பது ஒரு அரியசந்தர்ப்பம் இனி ஒரு போர் இலங்கையில் இல்லாமல் தடுப்பதற்கு. அன்று பெளத்தத்தை பரப்ப வந்த பிச்சுவின் பெயரும் மகிந்ததான். இன்று அரசமரக்கிளைகளுடன் புத்தனின் கண்ணை மூடப்பண்ணிக் கொண்டு திரிவதும் மகிந்ததான். ஒரு சிறு குறிப்பு: மகிந்த தன்தந்தையின் உருவச்சிலையைத் திறந்து வைத்துப் பேசியபோது பெளத்த மடாலயங்கள் சிறுவர்களை இளைஞர்களை உள்வாங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஏன் அரசு அல்லது மக்கள் அமைப்புக்கள் என்று குறிப்பிடவில்லை. மடாலயங்கள் பெளத்தத்தையே போதிக்கும் என்பதை யாவரும் அறிவர். அதே வேளை நாம் உயிரைக் கொடுத்துப் பிடித்த இடங்கள் எல்லாம் எம்முடையது என்பதினூடாக மதமும் பிரிவினையும் பின்னணியில் கண்சிமிட்டுவது தெரியவில்லையா? மகிந்தவும் பெளத்தசிங்கள வெறியனே. மதங்கள் மனிதரின் வாழ்வில் ஆயுதங்களாகவே பாவிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு உதாரணம் தேவையில்லை.
Kulan
பி.சி:
நிஸ்தார் ஒருபக்கத்தை இன்றைய நிறைய நிலையை வைத்தே எழுதுகிறார். ஒரு மெல்லிய கடுதாசித்தண்டுக்கு 4கரையும் இரண்டு பக்கங்களும் உள்ளன. ஒருஇனத்திற்கு எத்தனையோ பக்கங்கள் வரையறைகள் வரம்புகள் உண்டு. போராட்டங்கள் பலவானாலும் இலங்கையில் நடந்த ஆயுதப்போராட்டத்தை எடுத்துக் கொண்டால் 72 செகுவேராவை தன்னினம் என்றும் பாராமல் வெடியும் சுட்டும் ஆறில் எறிந்தவர்கள் இதே சுதந்திரக்கட்சிதான். அதன்பின் தமிழர்கள் 76 அவர்கள் போட்டு ஆயுதங்களை தூக்கவில்லையா? இனியொரு போர் வரக்கூடாது என்றால் எல்லாம் மகிந்தவின் கையில்தான் உள்ளது. அழுகிற பிள்ளைக்கு இனிப்புக் கொடுக்கலாம் ஆனால் வயிற்று வலிக்கு அது உதவாது. மருந்து கசப்பானாலும் நிவாரணி அதுவே. போராடவேண்டிய நிலைக்கு தமிழர்கள் முஸ்லீங்கள் தள்ளப்படுவார்கள். இயங்கியலில் போரிடமுடியாத எதுவுமே அழிந்து போகும். காலநிலையுடன் போரிடமுயாத பன்டா எனும் கரடி இனப்போல். போராடமுடியாதவர்கள் தம்முரிமைகளை வென்றெடுக்க முடியாதவர்கள் அடிமையாகி அழிந்து போவர். தமிழர் பிரதேசங்களில் தமிழர்கள் சிறுபான்மையாகும் போது தமிழர்களின் வாக்குக்களை நம்பி ஒரு ஜனாதிபதி இருக்கவேண்டிய அவசியம் ஏற்படாது. இந்தச் சிறுபான்மைத்துவம் தமிழர்கள் சிங்களக்கீழ்சாதியாக மாறிவருவர். அடிமைத்தனமும் தன்னினத்தை தானே குலைத்துக் கடிக்கும் குணமும் தமிழர்களிடமே அதிகம் உண்டு. இதனால் முஸ்லீங்களே சிலவேளை போராட்டத்தை உரிமை மீட்பைக் கொண்டு சொல்ல வேண்டியிருக்கும்.
நந்தா! ஆரம்பகாலங்களில் புலத்துப் புலிகளின் முதுகில் இருந்து நிலத்துப் புலிகள் குதிரை ஓடினர். பிற்பட்ட காலத்தில் புலத்துப் புலிகள் நிலத்துப் புலிகளின் முதுகில் சவாரி செய்து முள்ளிவாய்க்காலில் அடக்கம் செய்தனர்.
Kulan
/இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த தமிழ் கோஷம் தமிழரைப் பலிவாங்க காத்திருக்கிறது?/ முதுபெரும் தலைவர்களாம் செல்வா தமிழினத்தைக் கடவுளின் கையில் ஒப்படைத்துவிட்டு போக அமிர்வந்து தம்பியையும் புலியையும் வளர்ந்து தமிழகோசம் முள்ளிவாய்கால் வரை போய் ஆண்டுத்திவசமும் முடிந்தது. ஆனால் கூத்தணியின் கூத்துக்கள் முடிவதாகத் தெரியவில்லை. என்று தமிழ் சிங்களம் என்று இருசாராரும் கோசம் போடத்தொடங்கினார்களே அன்றே துவேசம் இருபக்கத்திலும் வேரூன்றி விட்டது. இதை அழிப்பதற்கு ஒருபரம்பரை போகவேண்டும். அதற்கான ஆரம்பப்படியையே காணவில்லை:
/தமிழர் அழியவில்லை அழித்தார்கள் என்பதுதானே உன்மை/ பல்லி சொல்வதுபோல் அறித்தார்கள் என்பதை இரண்டு வடிவத்தில் கொள்ளலாம். இரண்டு வடிவமும் இங்கே பொருந்தும் தமிழன் தன்னைத்தானே அழித்தான் எதிரியம் அழித்தான் என்று கொள்ளலாமா பல்லி.
குண்டுச்சட்டியினுள் குதிரைபோல் எமது பிரச்சனைகளை எம்மிடையே கத்திக் குளறிப் பிரயோசனமில்லை. எனக்கு மகிந்த கொம்பனியை விட சிங்களமக்களில் மரியாதை உண்டு. எமது பிரச்சனைகளை அரசின் அத்துமீறல்களை சிங்களமக்கள் மத்தியில் கொண்டு போங்கள். மனிதநேயமும் பண்பும் கொண்ட மனிதர்கள் அங்கும் உள்ளார்கள். அவர்களின் தன்மான உணர்வுகளைத் தூண்டாதவாறு தமிழ்மக்களின் வாழ்வியல் வேதனைகளையும்: அசரின் அஜாரகங்களையும் பெரும்பான்மை இனத்துக்குச் தொடர்ந்து சொல்லுங்கள் இதுவும் ஒரு இராஜதந்திரம் தான் அந்தமக்களாலேயே அவர்கள் அரசைக் கவிழுங்கள். விட்டுக் கொடுப்பது கூடச் சிலவேளைகளில் இராஜதந்திரம் என்று ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். சிங்கள மக்கள் மத்தியில் போவதற்கு ஒரு சிங்களக்கட்சி தேவையில்லை. தமிழ்கட்சிகள் என்றும் வலதுசாரி ஐ.தே.கட்சியுடனேதான் மானசீகமான காதல் கொண்டவர்கள். தனிமனிதர்களாகவோ தமிழ்கட்சிகளாகவே சிங்கள மக்களிடம் போங்கள் அவர்களுக்கு வடக்கில் கிழக்கில் என்ன நடக்கிறது என்று அறியாமலேயே பெரும்பான்மையினர் வாழ்கிறார்கள். தமிழர்களை எதிரியாகவம் பயங்கரவாதிகளாகவம் புலியாயவும் சித்தரித்து அரசியல் பிழைப்பு நடத்தும் சிங்கள அரசியல்வாதிகளின் முகங்களைக் கிழியுங்கள். இது நிச்சயம் வெற்றியழிக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.
Mohamed Nisthar
பல்லி, குலன் மாலை நல் வாழ்த்துக்கள்,
பின்னூட்டத்தின் பின்னுட்டங்களுக்கு பின்னூட்டம்.
“தமிழர் அழிவிலிருந்து” என்று கண்ணால் கண்ட விடயத்தைத்தானே சொன்னேன். தமிழர் தானாக அழிந்தனரா, அடுத்தவனால் அழிக்கப்பட்டார்களா” என்பதல்ல என்வாதம். தமிழருக்கு ஏற்பட்டது “அழிவு” அவ்வளவுதான். வயதையும், அனுபவதையும் கணக்கில் எடுத்து ஏற்பட்ட அழிவை அப்படியல்ல என்றாக்கி விட முடியுமா பல்லி?
“அடக்கு முறைக்கு உள்ளாகும் இனம், மதம் என்றும் புரட்சிக்கு தயாராகும்” குலன், மீண்டும் ஒரு பகல் கதை சொல்லட்டுமா? 1990 ஒக்டோபர் மாதம் புலிகள் வடக்கில், வட கிழக்கில், வட மேற்கில் இருந்து சோனகரை 24 மணி நேரத்திற்குள் இன சுத்திகரிப்பு செய்கிறார்கள். இந்த சோனகர் பின்பற்றும் சமயமான இஸ்லாம் , ஜிஹாத் என்ற நிபந்தனையுடன் கூடிய தற்காப்பு போரை அவர்களுக்கு அனுமதிக்கின்றது. அதாவது அவர் தம் சொந்த வாழ் விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்படும் போது, தமது வழிபாட்டு தளங்களுக்கு அனுமதி மறுக்கப்படும் போது மறு வார்தையில் கூறுவதானால் ஒரு சமூகம் சர்ந்த (மனித) உரிமை மீறப்படும் போது எந்த வித அத்து மீறலோ, பயங்கரவாதமோ இன்றி தற்பாதுகாப்பு யுத்தம் செய்யலாம். எனவே அன்று சோனவருக்கு தேவைப்பட்டது “அல்லாஹ¤ அக்பர்” (மிக உயர்ந்த இறைவனுக்கன்றி யாருக்கும் அடிபணியோம்) என்ற ஒரு உந்துதல் கோசமே. ஆனால் அதை எந்த சோனகரும் செய்யவில்லை. மாறாக அவர்களிடம் ஏற்பட்டது ஒரே ஒரு கேள்விதான், தமிழா நீயுமா?(Brutus! என்ற விழிப்பு குரலை யாராவது ஞாபக படுத்துங்கள் பார்ப்போம்). ஏன் அன்று குலன் சொல்வது போல் “உறவாடி கெடுக்க..” யாரும் இல்லாமல் போனரா? ஏன் அன்று சோனகர் கிளர்ந்தெழ வக்கில்லாமல் இருந்தார்களா? பாலஸ்தீனில் கல்லெறியும் சிறுவனுக்கு இருக்கும் துணிவும் இல்லையா? ஆனால் சோனகர் அந்தளவுக்கு முட்டாள்களாகவில்லை என்பதை நினைக்கும் போது இன்று மனம் ஆறுதல் கொள்கிறது. சற்று யோசித்து பாருங்கள் குலன், ஒரு கற்பனை கூட செய்து பார்க்கலாம். சோனகர் அன்று தம் வெளியேற்றுகையை எதிர்த்தனர் என்று கொள்வோம். புலிகள் 99.9% சோனகரையும் முடித்துவிட்டனர் என்று வைத்துக்கொள்வோம், அந்த 0.1% சோனகர் ஒருசில புலிகளையாவது கொல்லும் சக்தி பெற்றிருப்பர், கூடவே 100,200 அப்பாவித் தமிழர்களையும் கொன்றிருப்பர். எண்ணிக்கை அடிபடையில் தமிழர் வெற்றி, சோனகர் படு தோல்வி. ஆனால் 19 வருடத்துக்கு முன்பே தமிழா¢ன் உரிமை போராடம் புஸ்வானமாகியிருக்கும் அல்லவா? அல்லது உறவாடி கெடுக்கும் கூட்டத்துடன் சேர்ந்து இலங்கை தமிழரின் எண்ணிக்கையை கணிசமான அளவு குறைக்க வாய்ப்பிருந்ததல்லவா? ஆனாலும் சோனகர் முட்டாள்கள் அல்லவே.
இன்னும் ஒரு துணைக் கதை சொல்கிறேன். 1976 புத்தளம் பெரிய பல்லிவாசல் ஜனநாயக(?) ரீதியில் கூட்டம் கூடிய சோனகர் மீது போலிஸ் துப்பாக்கி பிரயோகம். என் நண்பன் நயீம்(Naim) மூலஸ்தானத்தில் உயிர் இழக்கின்றான். எனது தூரத்து உறவுக்காரர் குண்டடிபட்டு, அவர் மூலை சிதறி “அல்லாஹ¥” என்று பொறிக்கப்பட்ட வாசகத்தில் ஒட்டிக்கொண்டிருந்தது. புத்தள நகர் அல்லோல கல்லோப்படுகிறது. இரண்டு சிங்கள கடைகள் சுக்கு நூறாக்கபடுகிறது. இளைஞ்சர் கொதித்தெழுகின்றனர். நகரில் இருந்து 1 1/2 கி.மீ தூரதில் உள்ள பெளத்த விகாரை தாக்கியழிக்கவும், பெளத்த குருமார் கொல்லப்படவும் தயாரிப்புக்கள் நடக்கும் போது புத்தளம் பா.உ.(MP), உதவி நிதி அமைச்சர் நெய்னா மரிக்காரின் வாகனம் வந்து நிற்க அதிலிருந்து அவரின் செயலாளர் இறங்குகிறார். சரி என் தலைமையில் எல்லாரும் புறப்படுங்கள் புத்த விகாரையும், பிக்குமார்களும் மாத்திரமல்ல வரும் பஸ்களை மறித்து சிங்களவர்களை வெட்டுவோம் என்றார். இளைஞர்களிடம் ஆவேசம் பொங்கும் வேளையில் அவர் சொன்னார் “ஆனால் ஒரு பிரச்சினை, நமது நடவடிக்கையை தொடர்ந்து முழு இலங்கையும் பற்றி எரியும், நம் முஸ்லிம் சகோதரர், சகோதரிகள் , குழந்தைகள் நோயாளிகள் வெட்டப்படுவர், தீயிட்டு கொழுத்தப்படுவர். நாம் பாதுகாப்பு கொடுக்கவேண்டும். முழு இலங்கை முஸ்லீம்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க முடியமானால் புறப்படுங்கள்” என்றார். ஏதாவது புரிகிறதா குலம்? அன்று நாம் கத்தியை தீட்டவில்லை, புத்தியை தீட்டினோம்( எம். ஜீ. ஆர் ரின் பாடல் ஞாபகம் வந்திருக்குமே பல்லி)
இனி துணை கதைக்குள் ஒரு குட்டி கதை. 2010 ஏப்ரல் தேர்தல் பிரச்சாரம். மேடையின் இரு புறமும் துப்பாக்கிகளுடன் இலங்கை ராணுவத்தின் STF அணி, மேடையில் எம்முடன் ஒரு பிக்கு, கூடவே ஜனாதிபதியின் சமய விவகார ஆலோசகர், அப்போது நாம் பேசுகிறாம் ” இந்த நாட்டில் ஜனாதிபதி ராஜ பக்ஸவுக்கு என்ன உரிமை யுள்ளதோ அதே உரிமை என்போன்ற சோனகருக்கும், தமிழருக்கும் உண்டு”. பிக்கு கை தட்டுகிறார். 1976ல் விகரை உடைபட்டிருக்க, பிக்குகள் கொல்லபட்டிருக்க, இந்த சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. இந்த சந்தர்பத்தில் ” உறவாடி கெடுப்பஸ” தின் உள்ளே ஒளிந்திருப்பது என்ன என்பதுதான் என் கேள்வி. கடைசி வரைக்கும் பொறுமை காப்போம், பொது மக்களை பலி கொடுக்க துணியோம். இது பயம் அல்ல. ஒரு வகை திடசந்தர்ப்பம். வயது, அனுபவம் என்றும் கொள்ளலாம் என் நினைக்கின்றேன் (பிழையாயின் மன்னிகவும் பல்லி)
குலன், ஆங்கிலத்தை தாய் மொழியாகக் கொண்ட அமொ¢க்கர் எப்படி ஆங்கிலேயராக (English) மாற முடியாதோ அதே போல்தான் தமிழை தாய் மொழியாகக் கொண்ட சோனகரும் தமிழராக முடியாது. ஆனால் சோனகரும் தமிழரே என்று நீங்கள் கருதுவது உங்கள் உ¡¢மை. இருந்தும் தேவை ஏற்படும் போது தமிழராகவும், தேவை இல்லாத போது சமய சாயமிட்டு முஸ்லீமாகவும் பார்ப்பது உங்கள் ராஜதந்திர நகர்வோ என்று கேற்கத்தோன்றுகிறது.
குலன், சோனகரும் தமிழர் என்கின்றீகள், பிறகு சமாதானததுக்கான சமிக்ஞையை காணோம் என்கின்றீர்கள். அப்படியானால் தமிழருக்கும், சோனகருக்கும் இடையே உறவு இல்லையா? அப்படியானபடியால் தான் கூட இருந்து கொண்டாடி கெடுக்கப் பார்க்கின்றிகளா? குலம், இது நயவஞ்சக தனமல்லவா? எதிரியாய் இருப்பதைவிட அசிங்கமல்லவா இது?, தற்செயலாக நாக்கு பிசகி அப்படி சொல்லியிருந்தால் பரவாயில்லை. நிங்கள் sorry எனலாம், நாமும் it’s OK, take it easy எனலாம். மனிதர்கள் தானே. பெரிய யானைக்கே அடி சறுக்கும் இல்லையா?இதை விட்டுவிட்டு நான் இந்த அர்த்தத்தில் சொன்னேன், அப்படி நினைக்கவில்லை என்றால் எப்படி குலன்?
மனித நேயமுள்ள சிங்களவருடன் கதைக்கப் போகிறீர்கள். வரவேற்கிறேன். பிறகென்ன அவர்களிடம் எமது விடயத்தை கூறி நாம் சிங்கள அடக்கு முறைக்கு உட்படாமல் பாதுகாக்கச் சொல்லுங்கள். சண்டையை தவிர்க்கலாம். யார் என்ன சொன்னாலும் என்ன நான் இலங்கையன், எனக்கு இலங்கையில் சிங்களவருக்கு ஒத்ததான உரிமையுண்டு, தமிழருக்கும் ஒத்தான உரிமை உண்டு. எனவே சோனகரை சும்மா விடுங்கள். சண்டை மூட்டும் உங்கள் ராஜதந்திரம் எமக்கு வேண்டாம். நேச கரம் நீட்ட எமக்கு ராஜதந்திரம் தேவைபடாது. நேர்மை இருந்தால் மாத்திரம் போதும்.
nantha
நிஸ்தார் சொல்லும் கருத்துக்கள் தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் பொருத்தமானதே. சிறுபான்மையினர் ஆயுதம் தூக்கி வென்றதாக சரித்திரம் கிடையாது. 1915 கலவரத்தில் முஸ்லிம்கள் பாடம் படித்துள்ளனர். தமிழர்கள் இன்னமும் படிக்கவில்லை. தவிர குலனின் வாதத்தில் காணப்படும் பவுத்த மத விரோதம் கவலைக்கிடமானது. பவுத்ததமும், இந்து சமயமும் பலவிடயங்களில் ஒத்த கருத்துள்ளவை. தற்போது தமிழ் என்ற பெயரில் கத்தோலிக்க பாதிரிகள் புகுந்து செய்த சாதனைகள் என்ன? தமிழ் பாதிரிகளுக்கு தமிழ் ஈழம் தேவை என்பதை சிங்களப் பாதிரிகள் எங்காவது ஏற்றுக்கொண்டுள்ளனரா? கிடையவே கிடையாது. வத்திக்கானின் செயற்பாடுகள் அமெரிக்க அல்லது மேற்கு நாட்டு ஏகாதிபத்திய சார்பானவை. எனவே பாதிரிகளின் தமிழ் ஈழக் கோஷம் வெறும் வெத்து வேட்டு மாத்திரமல்ல, முழு இலங்கையையும் “கிறிஸ்தவ மயமாக்கல்” என்ற வத்திக்கானின் கொள்கையுடன் தொடர்புடையதே ஆகும். அதற்கு முதல் மோதல் இந்த தமிழ் ஈழக் கூத்து.இலங்கைத் தமிழர்கள் பாதிரிகளின் பின்னால் போவதை நிறுத்தினால் நல்லது. இல்லையெனில் பிலிப்பினோ மாதிரி பெண்களை வெள்ளையர்களுக்கு சப்ளை செய்வதில்தான் “தமிழ் போராட்டம்” முடியும்!
புலிகள் எட்டு இந்து தமிழ் குருமாரைக் கொலை செய்துள்ளனர். பாதிரிகள் பயங்கர மவுனம் சாதிக்கின்றனர். ஒரு அனுதாபம் கூடக் கிடையாது. இந்த நிலையில் இந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்ட தமிழர்கள் பாதிரிகளின் பின்னால் அலைவதை விட புத்த பகவானின் பின்னே செல்வதில் தப்பே கிடையாது. ஏனென்றால் போதி மாதவன் என்ற புத்த பகவானின் கொள்கைகளை தமிழர்கள் பின்பற்றிய வரலாறு உண்டு. இன்று தமிழர்களின் ஐம்பெருங் காப்பியங்களில் மூன்று தமிழர்கள் புத்த மதத்தைக் கைக் கொண்ட காலத்தில் எழுந்தவையே.
இந்துகள் தலதா மாளிகைக்கு யாத்திரை தொடங்குவது சமய சௌஜன்யத்தை மாத்திரமின்றி இந்த இனவாத சாக்கடையிலிருந்து விடுதலை பெறவும் வழி வகுக்கும்.
palli
மொகமட் உங்களுடன் வாதம் செய்ய பயமாக உள்ளது; நாம் என்ன சொல்லுகிறோம் என்பது கூடவா உங்களுக்கு புரியவில்லை; ஏதோ உங்களை துணைக்கு அளைத்து உங்களை முன்னால் விட்டு நாம் பின்னால் நின்று அரசியல் செய்ய நினைப்பதாக உங்கள் கருத்து இருக்கிறது; நமது போராட்டத்தில் நாம் விட்ட மிகபெரிய தவறு முஸ்லீம்மக்களை பகைத்தத்துதான்; அதையே குலன் நாம் விட்ட தவறுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என எழுதியிருப்பார் என நினைக்கிறேன். தமிழரோ அல்லது முஸ்லீமோ அல்லது சிங்களவரோ எவராயினும் எனி ஒரு இன வேறுபாடு வேண்டாம் என்பதே எனது கருத்து; இதில் நான் எழுதியது உங்களை பாதித்திருந்தால் பல்லியை மன்னிக்கவும் நன்றி,
தொடரும் பல்லி,,,,
Kulan
நிஸ்தார் 1990 கதை அல்ல நிஜம் நிஸ்தார். /சோனகரை 24 மணி நேரத்திற்குள் இன சுத்திகரிப்பு செய்கிறார்கள்/ இனச்சுத்திகரிப்பு என்பது மிதப்பான சொற்பதமாகும். இனவிரட்டல் என்பதே சரியாது. அச்சம்பவம் நடந்தேறியபோது சோனகரோ அல்லது இஸ்லாமியர்களே வாய்திறக்க முன் எனது எமது போனாக்கள் அழுதன. நான் எழுதிய ஒருவரியை என் இனத்தின் மேல் கேட்ட கேள்விளை இங்கு தருகிறேன். அன்று முஸ்லீங்களை புலிகள் கலைத்தபோது மெளனமாக இருந்த யாழ்பாணிகளே அடுத்த கந்தசட்டிக்கு புலிகளால் வன்னிக்கு விரட்டப்பட்டார்கள். உங்களுக்கு இது தேவைதான் அனுபவியுங்கள் என்று திட்டிவிட்டு அவர்கள் பட்ட கஸ்டங்களையும் எழுதினேன் நிஸ்தார்.
/அல்லாஹ¤ அக்பர்” (மிக உயர்ந்த இறைவனுக்கன்றி யாருக்கும் அடிபணியோம்) என்ற ஒரு உந்துதல் கோசமே/ நான் அறிந்தவரை வாசித்துப் புரிந்து கொண்டவரை “அல்லாஹ அக்பர்” என்பது இறைவனே உயர்ந்தவன் என்றே அறிந்தேன்./அன்று குலன் சொல்வது போல் “உறவாடி கெடுக்க..” யாரும் இல்லாமல் போனரா?/ உறவாடிக்கெடுப்பதற்கு என்ன இருக்கிறது. இன்றைய அரசியலில் உலகம் முழுக்க நடப்பது இதுதானே இதைத்தானே கே.பியும் சொல்கிறார். புலிகளைக் கேட்டால் “சோனகர்கள் உறவாடிக் கொடுத்தார்கள் கலைத்தோம் என்கிறார்கள்” முக்கியமாக இலங்கை அரசியலில் காலங்காலமாக இதுதான் நடந்து வருகிறது. உலக அரசியலிலும் இதுவே தொடர்கிறது.
/ஆனால் 19 வருடத்துக்கு முன்பே தமிழா¢ன் உரிமை போராடம் புஸ்வானமாகியிருக்கும் அல்லவா? அல்லது உறவாடி கெடுக்கும் கூட்டத்துடன் சேர்ந்து இலங்கை தமிழரின் எண்ணிக்கையை கணிசமான அளவு குறைக்க வாய்ப்பிருந்ததல்லவா/ நிச்சயம் இல்லை புலிகளை எதிர்த்து நிற்கும் சக்தி சோகருக்கு மட்டுமல்ல எமக்கும் இருக்கவில்லை. தமிழரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கும் என்றீர்கள். அப்படி அன்று நடந்திருந்தால் இன்று வன்னி இப்படி ஒரு பேரழிவைச் சந்தித்திருக்காது. நான் உறவாடிக் கெடுப்பது என்று கூறியதை எடக்கு முடக்காகத்தான் பாவிக்க முயல்கிறீர்கள். பலமிழந்திருப்பவன் பாவிக்கும் ஆயுதமே அது. ஆனால் குறிக்கோள் தப்பாதது. இது தமிழனுக்கு என்றும் பொருந்தாது. காரணம் தன்னினத்தை தானே பகைக்கும் உலகில் ஒரே இனம் தமிழர்தான் என்பது எனது எண்ணம்.
/ஏதாவது புரிகிறதா குலன்? அன்று நாம் கத்தியை தீட்டவில்லை, புத்தியை தீட்டினோம்( எம். ஜீ. ஆர் ரின் பாடல் ஞாபகம் வந்திருக்குமே பல்லி/ ஏதாவது புரிகிறதா என்பதன் மூலம் எதுவும புரியாத மடையன் என்று சொல்ல முயற்சிக்கிறீர் நல்லது. எனது கட்டுரையை முழுக்க சரியா உணர்நது வாசித்துவிட்டு பின்னோட்டம் விடுவது நல்லது. புத்தியைத் தீட்டு என்றுதான் அன்று புலிகளுடனும் மல்லுக்கட்டினேன்/ கட்டினோம். இந்தகட்டுரையிலும் அதைத்தான் சொல்கிறேன். பின்னோட்டம் பார்த்துப் பின்னோட்டம் விடாமால் கட்டுரையை வாசியுங்கள். குனிந்தால் குட்டுவதற்கு வரிசையில் நிற்கிறீர்கள். முஸ்லீம்களை தூய்மைப்படுத்த முயற்சிக்கிறீர். கிழக்கில் நிங்கள் அப்பாவித் தமிழ்மக்களின் மேல் நடத்திய அட்டகாசங்கள் எமக்குத் தெரியும். அதேபோன்று இந்துக் கோவிலுக்குள் மாடுவெட்டி மூலஸ்தானத்துக்குள் இரத்தமூத்திய சம்பவமும் அறிவோம். இப்படி எழுதுகிறேன் என்பதற்காகப் புலிகள் செய்த அடடூழியங்களை நியாயப்படுத்தவில்லை. இலங்கைக்கு அப்பால் உலகெங்கும் ஜிகாத் என்ற கொன்று குவிக்கப்படும் அப்பாவிகளுக்கு என்ன சொல்லப்போகிறீர்? மதத்தின் போரால் முக்கியமாக இஸ்லாமியர்கள் மற்ற இனத்துடன் சேர்ந்து வாழமுடியாது போரைத் தூக்கித் திரியும் மனிதவிரோதங்களை எநதக் கூறானில் எழுதப்போகிறீர்கள். ஜனநாயக நாடுகளில் முஸ்லீங்கள் மற்ற இனத்துடன் இணைத்த சமாதானமாக வாழும் நாடுகளை விரல் விட்டு எண்ணுங்கள் பார்க்கலாம். முக்கியமாக அந்தநாடு ஜனநாயகமுறையைப் பின்பற்றும் நாடாக இருக்க வேண்டும். மத்திய கிழக்கில் முஸ்லீம்கள் வாழ்தாலும் உதிரங்கள் எப்போ உறைந்தன? ஆசியாவில் நடக்கும் போர்களிலே பெரும்பான்மையானவை முஸ்லீங்களால் நடத்தப்படுபவை. ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் சாட்டுவார்கள். இங்கே முஸ்லீங்களின் புத்தி எங்கு போனது? சரிவேண்டாம் உறவாடிக் கெடுப்பதைப்பற்றி கதைப்போம். வெள்ளையருக் கெதிராக இந்தியர்கள் போராடிய ஆங்கிலேயர் வெளியேறிய கையுடன் பாக்கிஸ்தானைப் பிரி என்று நெஞ்சில் வாழவைத்தது யார்? பாக்கிஸ்தான் பிரிக்கப்படவேண்டும் முழுக்க முஸ்லீம் நாடாக வேண்டும் என்று கட்டளையிட்ட ஜின்னா இந்தியாவில் இருந்த அத்தனை முஸ்லீங்களையும் இந்துஸ்தானில் இருந்து அழைத்துப் போயிருக்கலாமே. ஏன் இவ்வளவு முஸ்லீங்கள் இந்தியாவில்? இன்று ஐரோப்பிய நாடுகளில் செய்யப்படும் கிறிமினல் நடவடிக்கைகள் முக்கியமாக முஸ்லீங்களாலேயே நடந்தேறுகின்றன என்பதை நிகழ்தகவுகள் ஆதாரம் காட்டுகின்றன். வெளிநாட்டவன் என்ற பார்வையில் நாமும்தான் அதைச் சுமக்கிறோம்:
நான் போர் முஸ்லீங்களிடம் இருந்து வெடிப்பதற்கும் சாத்தியங்கள் உண்டு என்று எதிர்வு கூறியது இஸ்லாமிய கொள்கை கோட்பாடு வாழ்வியல் சமயநம்பிக்கை என்ற பின்னணிகளை முன்வைத்தே. முக்கியமாக ஒரு இஸ்லாமியனாக உங்கள் மதத்தை நியாயப்படுத்தும் போது கூட நான் எனது சமயத்தை நியாயப்படுத்தமாட்டேன். ஒரிரு சம்பங்களை காட்டி உங்கள் சமூகத்தை நியாயப்படுத்த முயற்சிக்காதையுங்கள். உங்கள் சமூகமும் போதிய அளவு அத்துமீறல்களைச் செய்துள்ளது. “புலிகள் யாழ்பாணத்தை விட்டு முஸ்லீம்களைக் கலைத்தார்கள் நாமும் புலிகளுக் கெதிராக மல்லக்கட்டினோம். ஏன் புலிகள் முஸ்லீம்களைக் கலைத்தார்கள் என்று ஆராந்தீர்களா? நாம் மல்லுக்கட்டினோம் யாழ்மக்கள் வன்னிக்கு அவலப்பட்டு ஓடியபோது அரசுடன் கூடிக்குலாவியவர்கள் முஸ்லீம் அரசியல்வாதிகள் என்ன செய்தீர்கள்? புலிகளின் பிடியில் வன்னிமக்கள் எண்கொணாது கொன்று குவிக்கப்பட்ட போது எத்தனை முஸ்லீம் போனாக்கள அழுதன? உங்களுக்கு ஒரு நீதி எங்களுக்கு ஒரு நீதியா?
Kulan
நந்தா! /தவிர குலனின் வாதத்தில் காணப்படும் பவுத்த மத விரோதம் கவலைக்கிடமானது/ கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. புத்தனைப் போதிமாதவனாக ஏற்றுக்கொண்டவன் யான். புத்தனை அரசியல்வாதியாகவும் பெளத்தத்தை அரசியலாகவும் மாற்றுகிறார்கள் என்பது தான் என்கவலை. புத்தனே சித்தாத்தன் என்று இந்துதான். பெளத்தத்தை சமயமல்லாது ஒருதத்துவமாகக் கூடப்பார்க்கலாம். எனது எண்ணப்படி பெளத்தம் தமிழுக்கு உரிமையுடையது நக்கீராவின் கட்டுரை ஒன்றில் வாசித்திருந்தேன் தமிழர்கள் சிங்களவர்கள் அனைவரும் ஒரே இனத்தவர்கள் என்றும்….? தமிழுக்கு அணிகலாக விளங்கும் ஐம்பெரும் காப்பியங்களில் 2பெரியகாப்பியங்கள் பெளத்தமதம் சார்ந்தது. மற்றய 3ல் 2 சமணகாப்பியங்கள் வளையாபதி குண்டலகேசி. ஆக தமிழ் இந்த மதங்களின் காலத்தில் நன்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது. தமிழர்கள் இம்மதங்களைச் சார்ந்து இருந்திருக்கிறார்கள் என்பது ஆதாரம். ஆகவே நந்தா கவலையை விடுங்கள்.
/இன்று தமிழர்களின் ஐம்பெருங் காப்பியங்களில் மூன்று தமிழர்கள் புத்த மதத்தைக் கைக் கொண்ட காலத்தில் எழுந்தவையே/ மறந்துவிட்டீர்கள் போல் இருக்கிறது.3அல்ல 2தனான் அதாவது மணிமேகலை சீவகசிந்தாமணி
/இந்துகள் தலதா மாளிகைக்கு யாத்திரை தொடங்குவது சமய சௌஜன்யத்தை மாத்திரமின்றி இந்த இனவாத சாக்கடையிலிருந்து விடுதலை பெறவும் வழி வகுக்கும்./ இது உண்மையிலேயே புத்திசாலித்தனமான கருந்து இதுவே என்கருத்தாகவும் இருந்தது. நான் அரசியலை மதங்களைத் தவிர்த்துப் பார்க்கவே விரும்புகிறேன். எங்கு எடுத்தாலும் மதங்கள் கூறிய நல்லவிடயங்களை விட்டுவிட்டு மதத்தை ஆயுதமாகவே பாவிக்க முயல்கிறார்கள்.
Kulan
பல்லி!
/மொகமட் உங்களுடன் வாதம் செய்ய பயமாக உள்ளது; நாம் என்ன சொல்லுகிறோம் என்பது கூடவா உங்களுக்கு புரியவில்லை/ மொகமட்.
நிஸ்தார் பலவிடயங்களில் மதமென்ற ஒன்றில் நின்றே எதையும் பார்க்க முயற்சிக்கிறார். மிக்க மனவருத்தத்துடன் தான் பதில் எழுதியிருக்கிறேன். நாம் தமிழர்கள் முஸ்லீங்களை மொழிரீதியாக தமிழர் என்றே கருதினோம் அவர்கள் அப்படிக் கருதவில்லை. திராவிடர் என்று மற்றைய மாறிப்போனவர்களுடன் கைகோத்தோம். எந்தத் தெலுங்களாவது அல்லது துலுக்காரனாவது ஏன் மலையாளியாவது தன்னைத் திராவிடன் என்று வரையறுத்திருக்கிறானா? எத்தனை கட்சி வைத்திருக்கிறார். திராவிடன் என்றால் தமிழ்நாட்டுக்கு தன்னினத்தவன் என்று தண்ணி கொடுத்திருப்பானே. ஒற்றுமையாக இலங்கையை விரும்பம் நிஸ்தார் கூட தன்னை ஒரு முஸ்லீமாகத்தானே வரையறுத்து நிற்கிறார். இலங்கையன் என்று வாதிட்டதாகத் தெரியவில்லையே.
thurai
அன்பின் மொகமட் நிஸ்தார்,
புலிகளால் முஸ்லிம்கள் துரத்தப்படு முன்பே முஸ்லிம்கள் யாழ்ப்பாண்த்தின் பல பகுதிகளிலிருந்தும் துரத்தப்பட்டுள்ளார்கள். இது சமய அடிப்படையில் நடந்ததா அல்லது இன அடிப்படையில் நடந்த உருமை மீறலா? இன்னும் யாழ்பாணத்தின் சில பகுதிகளில் சோனக வளவுகள் என்னும் தோம்புப் பெயர்கழுண்டு.
தமிழரில் தாழ்த்தப்பட்ட சாதியினரிற்கு சம உருமை கொடுத்தவர்கழும் முஸ்லிம்கள்தான். தேனீர்கடைகள், மற்ரும் சிறு வியாபாரங்கள் முஸ்லிம் மக்கழுடனேயே செய்யக் கூடியதாக் இருந்துள்து. எனவே முஸ்லிம்களிற்கு யார் எதிரானவர்களோ அவர்களே தமிழர் இனத்திற்கும் எதிரானவர்களாக் இருந்துள்ளனர். எனவே இந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவது இனறைய சூழலில் முக்கியமானது.
துரை
Kusumpu
மொகமட் நிஸ்தாரின் கருத்துப்படி பார்த்தால் முஸ்லீம்கள் எந்தக் குற்றங்கள் செய்யாதவர்கள் போலவும். தமிழர்கள் புலிகளாகக் கருதுவது போலவும் தோன்றுகிறது. புலிகளுடன் உறவாடி பின் இராணுவத்துக்கும் பொலிசுக்கும் துப்புக் கொடுத்து வந்தவர்கள் யாழ்பாணத்து முஸ்லீம்கள். அதைப் புலிகள் பலதடவை கண்டித்தார்கள். அதன்பின்புதான் முஸ்லீம்களைக் கலைத்தார்கள். அன்று முஸ்லீங்கள் உறவாடிக் கெடுக்க முயற்சித்தார்கள். பெண்ணடக்கு முறை அளவுக்கு அதிகமாக இருப்பது முஸ்லீம் சமூகத்தில்தான். கூறான் சொல்லவில்லை என்பீர்கள் வன்முறையை கூறான் போதிக்கவில்லை என்பீர்கள் உலகம் முழுவதிலும் இது முஸ்லீங்களாலேயே அதிகமாக நடக்கிறது.
தலிபானியனை திருமணம் முடித்த இளம்பெண் தலிபான் கோட்டில் மூக்கும் காதும் அறுக்கப்பட்டால்.இஸ்லாத்தை மையப்படுத்தியே தலிபான் போரே நடக்கிறது. இஸ்லாம் சொல்லவில்லை என்பீர்கள் ஆனால் அது முஸ்லீங்களின் மத்தியில் தானே நடக்கிறது. காரணம் ஒரு இஸ்லாமியனுக்கு வாழக்கைப்பட்டு வாழமுடியாதவளை இழுத்துவந்து மூக்கை அடியெட்ட அறுத்திருக்கிறார்கள். தலிபான் கூறான் படிப்பதற்கு என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு மாணவர் அமைப்பு. ஒரு இனத்தை மதமாக வரையறுக்கும் மொகமட் நிஸ்தார் இதற்கான காரணங்களைச சொல்லி ஆகவேண்டும். முஸ்லீங்களை மதத்தை விட்டு வேறுபடுத்திப் பார்க்க முடியாது. முஸ்லீங்கள் மதத்துக்குக் கொடுக்கும் முன்னுருமை மனித்துக்குக் கொடுக்கவில்லை என்பது எனது எண்ணம். உலகெங்கும் முஸ்லீங்களையோ கூறானையோ விமர்சித்தவர்களுக்கு அரசஉயர்மட்டங்களில் இருந்து கொலை மிரட்டல்கள் பல. பெரியமதங்களில் கடசியாகத் தோன்றிய இஸ்லாமே மொடர்ணாக இருக்கவேண்டியது. ஆனால் கற்காலக் கோட்பாட்டுடன் வாழ்கிறது. ஐரொப்பாவிலும் நாம் பலமுஸ்லீங்களுடன் பழகியிருக்கிறேன்.அவர்களும் நன்றாகவே பழகிட்டு இழுத்துவிழுத்துவார்கள். இதைச் சிறிது ஆராய்தபோது தெரியவந்தது கூறானில் நீ இஸ்லாமியனுக்கு மட்டும் நேர்மையானவனாக இரு என்கிறதாம்.
இனப்பெருக்கத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தும் ஒரே மதமும் இஸ்லாமும் முஸ்லீங்களுமே. அல்லாவுக்கு நாம் இந்த விஞ்ஞான உலகில் கருத்தடை முறைகள் பற்றி விரிவுரை ஒன்று நடத்தவேண்டும். அதை நிஸ்தார் மொகமட் உங்கள் மொழியில் உங்கள் முறையில் செய்தால் உலகம் உய்யும்:
ஊரில் ஆடுகளைக் கூடச்சிலர் இஸ்லாமியர்களுக்குக் காட்டுவதில்லை. அவர்கள் வந்து பார்த்துவிட்டு முதுகெலும்புப் பக்கமாக அமத்திவிட்டும் போய்விடுவார்கள். பின் அந்தஆடு சாப்பிடாது. அதை எப்படியாவது பின் ஒரு முஸ்லீமுக்கே விற்கவேண்டும் இதை நான் எம் அயலட்டையில் பார்த்திருக்கிறேன். என்னைப் பொறுத்தமுறையில் குலன் கூறுவதுபோல் தமிழர்களாகப் பார்ப்பது ஆபத்தானது. இலங்கையில் ஒரு அரசியல் தீர்வு வந்தால் அவர்களைத் தனியாகப் பிரித்து விடுவதே யாவருக்கும் நன்மை பயக்கும். அவர்கள் இஸ்லாமைத்தவிர மனிதனையோ மனிதத்தையோ நம்புவது குறைவு. இஸ்லாமியர்களின் சரியாச்சட்டம் என்ன சொல்கிறது. ஆணுக்கொரு நீதியும் பெண்ணுக்கொரு நீதியுமாக எழுதப்பட்டுள்ளது. எழுதப்பட்டதோ இல்லையே நடைமுறைப்படுத்துப்படுகிறது. பாக்கிஸ்தான் குறுடிஸ்தான் ஈரான் போன்ற நாடுகளில் ஒருவன் மற்ற முக்கியமாகப் பணக்காக்குடும்பஸ்தன் ஒருவனை அவமதித்தால் கோட்டுத் தீர்பழிக்கிறது அவமதித்தவனின் வீட்டிலுள்ள ஒரு பெண்ணை மற்றவன் கற்பழிக்கலாம் என்று. இது ஐரொப்பாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
நையீரியாவில் ஒரு இளம்பெண் (அமீனா)திருமணமாகுமுன் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். இதைக்குற்றமாகக் கருதய முஸ்லீம் சரியாச்சட்டம் அவளுக்கு கல்லெறிந்து கொல்லவேண்டும் என்று விதித்தது. ஆனால் ஆணுக்கு எந்தத் தண்டனையும் கிடையாது. இதைக்கூட மொகமட் நிஸ்தார் சொல்லாம் அப்படி சரியாசட்டம் சொல்லவில்லை என்று. அப்படித்தான் சொல்லவில்லை என்று வைத்தாலும் இஸ்லாம் இப்படியான அனியாயங்களுக்குத் துணைபோகுமாறு அமைந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. இப்படியான ஒரு மதம் தேவையா என்ற எண்ணம் கூடத் தோன்றுவது உண்டு.
இன்று இஸ்லாத்தை எவரும் பேனை எழுத்தோ வாய்வழியாகவோ விமர்சிக்க முயல்வதில்லைக் காரணம் இஸ்லாமியர்களின் வன்முறை தான் காரணம். ஆண்குறி அறுப்பதும் பெண்குறி அறுப்பது இஸ்லாத்தில் வளமையான ஒன்று. சோமலியா போன்ற முஸ்லீம் நாடுகளில் இளம் பெண்களின் குறி போத்திலோடுகளால் அறுக்கப்பட்டு இறுகத்தைக்கப்படுகிறது. ஆணுக்கு இறுக்கமாக இருக்கமாக இருக்கவேண்டுமாம். இதனால் சிறுநீர் கழிப்பதில் இருந்து பிள்ளைப்பேறுவரை வேதனைக்குள் கிடந்து தவிக்கிறார்கள். அல்லாவைத்தவிர யாருக்கும் பணியோம் என்பவர்கள் ஏன் அல்லாவின் படைப்பை மறுக்கிறீர்கள். வெளிநாடுகளில் ஒரு குறியீட்டு வசனம் உண்டு ஒட்டகத்துக்கும் முஸ்லீம்களுக்கும் தலை நுளைய இடம் கொடுத்தால் ஊரே காலியாகி விடும் என்பார்கள் யூதர்கள்.
குசும்பு தொடரும்:
nantha
குசும்பு இஸ்லாம் பற்றி சொல்லிய நடைமுறை உண்மைகள் சரியானவையே. இதே வழிமுறைகளை கத்தோலிக்கர்களும் பின்பற்றுகின்றனர். யூதர்களும் பின்பற்றுகின்றனர். இர்களுக்கிடையே உள்ள வேறுபாடு யாதெனில் கத்தோலிக்க குழுக்கள் தமிழுக்குள் புகுந்து இந்துக்களை கொலை செய்கிறார்கள்.
இஸ்லாம், கிறிஸ்தவம், யூதம் என்பன ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். மற்றைய மதத்தவர்களை மதம் மாற்று அல்லது கொலை செய் என்ற போதனையை பின்பற்றுபவர்கள்.
இதனால் இந்து மதத்தில் குறைபாடுகள் இல்லை என்பது அர்த்தமல்ல. இந்துக்களுக்கு மதம் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. அதனால்த்தான் இந்துக்களை முஸ்லிம்களாகவும், கிரிஸ்தவர்கலாக்கவும் முடிந்துள்ளது. இன்று இந்துக்களுக்கு எதிராக குதிப்பவர்கள் அந்த மதம் மாறினவர்களின் வாரிசுகளே. இந்து மதம் “சுதந்திரக் காற்றை” அதிகளவு கொண்டுள்ளது. மற்றைய மதங்கள் “வியாபர நிறுவனங்களுக்கு” ஒப்பான கொள்கைகளை கொண்டிருக்கின்றன.
முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் மதம் மாற முடியாது. மதம் மாறினால் தலை போய் விடும்.
சந்தர்ப்பம் கிடைக்கும் போது அந்த அகோர முகங்களைக் காண முடிந்துள்ளது.
மதம், மொழி ஆகிய இரண்டுக்கும் அப்பால் உள்ள வாழ்வின் மகத்துவத்தை மனிதப் பண்பாடுகளை மதங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது.
நிஸ்தாரிடம் ஒரு கேள்வி:
முகம்மது நபி ஆறு வயது ஆயிஷாவை வளர்த்து ஒன்பது வயதில் உடல் உறவு கொண்டதை எந்த நாகரிக வாழ்வில் சேர்த்துக்கொண்டு இஸ்லாம் என்ற அடையாளத்தை காத்துக் கொள்ள முயலுகிறீர்கள்? உங்களுக்கு ஒன்பது வயது மகள் இருந்தால் 58 வயதுக் கிழவனுக்கு ஐந்தாம் தாரமாக கட்டிக் கொடுப்பீர்களா? இஸ்லாமின் கோர முகங்களை உங்கள் ஹதீசுகளில் காணலாம். இஸ்லாமியர்கள் சிறுபான்மையாக இருப்பதால் “நாங்கள் நல்லவர்கள்” என்பது அல்பத்தனம்.
மற்றைய மதத்தவர்களை, இஸ்லாமை விமர்சிப்பவர்களை கொல்ல வேண்டும் என்ற இஸ்லாமிய கோட்பாட்டை நியாயம் என்கிறீர்களா?
ஆண்களைக் கொன்று சொத்துக்களையும் பெண்களையும் அபகரிக்க வேண்டும் என்பது இஸ்லாம்/கிறிஸ்தவம் என்பன நடைமுறைப்படுத்திய வரலாறுகள்.
இந்து/பௌத்த மதங்கள் நிறுவன மயப்படுத்தபட்ட (organised or institutionalised) சமயங்கள் அல்ல. மதம் மாறாதே என்றோ மதத்துக்காக கொலை கொள்ளைகளை ஊக்குவிக்கும் மதங்களோ அல்ல.
இதனால் பல நாடுகளின் அரசியல்வாதிகள் “மதங்களை” அரசியலிலிருந்து துரத்தியுள்ளனர். ஆயினும் அந்த நாடுகளிலும் அந்த மதவாதிகளின் அட்டகாசங்கள் குறையவில்லை. மதவாதிகளின் பணம் இன்று மதம் மாற்றவும், மற்றவர்களிக் கொள்ளவும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் சாதாரணமாக உபயோகப்படுத்தப்படுகிறது. அமரிக்கர்களின் டாலர்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் மதவாதிகளூடாகப் புகுந்து விளையாடுகின்றன.
Mohamed SR. Nisthar
குலன், குசும்பு, நந்தா அஸ்சலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக)
ஒரு பெரும் புயலேஅடித்த மாதிரியாகிவிட்டது. நண்பர்களே அடிப்படையில் இனத்தையும், சமயத்தையும், அதை பின்பற்றுவதால் ஏற்பட்ட பெயரையும் போட்டு குழப்பிவிட்டீர்கள். எனவே என்னைப் பற்றிய சிறிய அறிமுகம் இன்று மீதி நாளை.
பிரஜா உரிமை: இலங்கை, ஐ.ஒ
இனம்: சோனகர்
தாய் மொழி: தமிழ்
சமயம்: இஸ்லாம்
வயது: உங்களுக்கு தெரிவது அழகல்ல
கல்வித் தகைமை: (கற்றது) கையளவு (என்ற நிலை)
தொழில்: இந்த பின்னூட்டத்திற்கு சற்றும் சம்பந்தம் இல்லாதது
விருப்பு: சமயம், அரசியல்
மூளை விருத்தி: வயதுக் கேற்றது.
குணாம்சம்:நற்பு, உண்மை பேசல், சரியானதை நிலைநாட்ட பாடுபடல்.
BC
//நந்தா – முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் மதம் மாற முடியாது. மதம் மாறினால் தலை போய் விடும். //
முஸ்லிம்களுக்கு முஸ்லிம் நாடுகளில் மதம் மாறினால் தலை போய் விடும் என்பது உண்மை. ஆனால் கிறிஸ்தவர்களுக்கு அப்படியல்ல.எனக்கு தெரிந்தே பல வெள்ளைகள் சேர்ச்சு பக்கம் போகாமல் சுதந்திரமாக இருக்கின்றனர். ஆக தமிழர்கள் அதுவும் குறிப்பாக சில வருடங்களுக்கு முன்பு சுத்த சைவமாக இருந்து கிறிஸ்தவர்களாக மாறிய தமிழர்களும் ,ஆசிய ,ஆபிரிக்கர்களுமே தங்கள் தலை போய் விடும் என்பது மாதிரி நினைத்து பின்பற்றுகிறார்கள். இந்து மதத்தில் சுதந்திரம் இருந்தும் சுதந்திரம் இல்லாத மாதிரி வாழும் இந்துக்களோடு இவர்களை ஒப்பிடலாம். இலங்கையில் முன்பு எங்கள் கிறிஸ்தவ நண்பன் சேர்ச்சுக்கு போவதை நம்பிக்கையில்லாததால் நிறுத்தி விட்டான். அவனை கண்ட பாதிரியார் சாத்தானின் மகனே என்று ஏசினாராம். ஐயர் எங்களை கோவிலுக்கு போகாவிட்டால் இப்படியெல்லாம் ஏச முடியாது. ஆனால் ஐயர் தலையை சீவி விடுவார் என்ற மாதிரியல்லவா பலர் நடக்கின்றனர்.
குசும்பு குலன் இஸ்லாம் மதம் பற்றி சொன்னது சரியானதே.
Kulan
நிஸ்தார்! எனக்கு எந்த தனிப்பட்டு முறையில் எத்த எதிர்ப்பும் உங்களிலோ இஸ்லாமியர்களிலோ கிடையாது. இஸ்லாத்தை அல்லது குர்ரானை விமர்சித்தால் போர் கொலைமிரட்டல்கள் தான் முடிவாகிறது. இதனால் இந்த மதத்தை விமர்சிக்க யாரும் விருப்புவதில்லை. இதனால் காலத்துக்கு ஏற்றமாற்றங்களைக் கிரகிக்க உங்கள் மதம் தவறிவிட்டது.
எனது மொழி தமிழ்; இனம் தமிழ்; மதம் மனிதம்.
நந்தா! உங்கள் கருத்துக்களுக்கு தலைவணங்கும் வேளை ஒரு விடயத்தையும் சொல்ல ஆசைப்படுகிறேன் இந்து /பெளத்தம் நிறுவனப்படுத்தப்படாதது என்ற கூற்றில் எனது கருந்து பெளத்தம் நிறுவனப்படுத்தப்பட்டது. சங்கமித்திரை இலங்கைக்கு வெள்ளரச மரக்கிளையுடன் வந்து இறங்கியதே மிசனால்தான்: தென்கிழக்காசியாவில் பெளத்தத்தை கொண்டு சென்று பரப்பியவர்கள் திராவிடர்கள் அதைத்திராவிட பெளத்தம் என்று அழைப்பர். அது நிறுவனமயப்பட்டது என்பது என் சிற்றறிவு.
nantha
குலன்:
நிறுவனமயப்படுத்தல் என்ற என்ற வார்த்தையில் நீங்கள் தடுமாறியுள்ளீர்கள். இந்து/பௌத்த பீடங்கள் கணக்குப் புத்தகம்/பதிவுப் புத்தகம் வைத்து மக்களின் விபரங்களை சேகரித்து வைப்பதில்லை. மாதா மாதம் பணம் கொடு என்று யாரும் கட்டாயப்படுத்துவதில்லை. கிறிஸ்தவ பீடங்கள் “பங்குகள்” என்று நமது விதானை, அரசாங்க அதிபர் அலுவலகம் போல கணக்கெடுப்பு நடத்தி வசூல் செய்வது கிடையாது. பணடத்தரிப்பில் எத்தனை கத்தோலிக்கர்கள் இருக்கிறார்கள் என்ற விபரம் வத்திக்கநிலுள்ள போப்பிற்கு 100 % அறியக் கூடியதாக உள்ளது.
சங்கமித்தாவின் கதையை நீங்கள் ஆங்கிலத்தில் படித்துள்ளதாகவே அனுமானிக்க முடிகிறது. வெள்ளரச மரக்கிளையை குசிநாராவிலிருந்து கொண்டு வந்த பின்னர்தான் பௌத்த மதம் இலங்கைக்கு வரவில்லை. உங்களின் கருத்துப்படி கிருபானந்த வாரியாரும் மதம் மாற்ற அலைந்தார் என்று வருங்காலத்தில் எவராவது ஆராய்ச்சி செய்து தொலைக்கப் போகிறார்கள்!
கிறிஸ்த மிஷன்கள் என்பன மேலிடத்து உத்தரவுகளை நிறைவேற்றும் காரியாலயங்கள். கத்தோலிக்கருக்கு வத்திக்கான் போப்பும், கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவர்களுக்கு இங்கிலாந்து மகாராணியும் போடும் உத்தரவுகளை இலங்கையில் நிறைவேற்ற வேண்டும் என்பது அவர்களது மதக் கடமை ஆகிறது. இந்து/பௌத்த பீடங்கள் இப்படி நடப்பதாக தகவல்கள் இல்லை.
நிறுவனம் என்பதனை நீங்கள் ஒரு “கம்பனி” என்பதனை நினைவுறுத்தி கண்டு கொள்ளல் வேண்டும்!
nantha
BC
மேற்கு நாடுகளில் உள்ள கிறிஸ்தவர்களின் நிலைமை வேறு. நமது நாட்டில் கிறிஸ்தவர்கள் பாதிரிகளைக் கண்டு சைக்கிளால் இறங்கி நின்று மரியாதை கொடுக்க வேண்டும். முஸ்லிம்களுக்கும் இது பொருந்தும்.
கனடாவில் பாதிரி யூனிபோர்மில் தெருக்களில் ஆட்களைக் காண முடியாது. சில கருப்பு பாதிரிகள் “விஷயம்’ தெரியாமல் அப்படி வந்து சிரிப்புக்கு ஆளானதைக் நான் கண்டிருக்கிறேன்! நமது பாதிரிகள் என்னமோ அரசாங்க அதிபரை விட அதிகாரம் உள்ளவர்கள் நடந்து கொள்வதை பார்த்திருக்கிறேன்!
எனக்குத் தெரிந்த ஒரு கத்தோலிக்க குடும்பத்து வாலிபன் “இந்து” பெண்ணை திருமணம் முடித்து அவளை மதம் மாற்றாமல் விட்டதினால் அந்த குடும்பம் “தள்ளி” வைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களும் அப்படித்தான் நடந்து கொள்ளுகிறார்கள்.
மதம் மீது பற்றும் நம்பிக்கையும் உள்ளவர்கள் “மனித உரிமைகள்” பற்றி அலட்டுவது சுத்த சவடால்த்தனம். தற்போதுள்ள பல “வெள்ளை” மனித உரிமைக் கோஷ்டிகள் கத்தோலிக்க/கிறிஸ்தவ பீடங்களின் ஏஜண்டுகள் என்பதை அறிந்து கொள்வது நல்லது.
இஸ்லாமியர்களில் எவனாவது ஒரு அயோத்தல்லா “மரண தண்டனை” விதித்தால் நம்ம முஸ்லிகளும் அது சரி என்று உடனேயே வரிந்து கட்டிக் கொண்டு ஊர்வலம் போவார்கள்.
இந்து/பௌத்தர்கள் தங்கள் மத பீடங்களின் “சவடால்களை” அல்லது “புரட்டுக்களை” தாரளாமாக விமர்சிக்கிறார்கள். மற்றவர்கள் வாயே திறக்க அச்சப்படுகிறார்கள். கனடா போன்ற நாடுகளில் அந்த நிலை மாறியுள்ளது. பல கத்தோலிக்க மேற்றிராசனங்கள் பூட்டபடுள்ளன. பாலியல் சேஷ்டைகள் செய்த காரணத்தினால் நஷ்ட ஈடு வழங்க முடியாத காரணமே ஆகும். ஆனால் வத்திக்கானிலுள்ள போப் அந்த பாலியல் கொடூரம் செய்தவர்களுக்கு தண்டனை கொடுத்த சரித்திரம் இல்லை.
Kulan
/நிறுவனம் என்பதனை நீங்கள் ஒரு “கம்பனி” என்பதனை நினைவுறுத்தி கண்டு கொள்ளல் வேண்டும்!/ நந்தா
நிறுவனம் என்பதை நான் சங்கங்கள் என்று கருதிக்கொண்டேன். வித்துரைத்தமைக்கு நன்றி. மதம்பரப்புவதில் பெளத்தர்கள் சளைத்தவர்கள் அல்லர்.
PALLI
மொகமட் இதில் எந்த தகுதியுமே தேவையில்லை சமூகம் பற்றியோ மனிதம் பற்றியோ சிந்திப்பதற்கு; அரசியலோடு சமயம் கலப்பது சரியல்ல; அதுவேறு வழியாகவும் இது வேறுவழியாகவும் பயணிப்பதே மக்களுக்கு இரண்டிலுமே பயணளிக்கும்;
குலன் தாங்கள் முஸ்லீம்மக்களுடன் கைகோர்த்துதான் இனவிடுதலை பற்றி பேசமுடியும் எனவே ஆரம்பித்தார்; அதற்கு எம் இருஇனத்தின் சனதோகையும் சிறுபாண்மையாக இருப்பது கூட காரணமாக இருக்கலாம்: ஆனால் அதன் பின் நந்தா எப்போதும்போல் கதோலிக்க மக்கள்மீது கல் எறிவதிலேயே கவனம் செலுத்துகிறார், எமது பார்வை இனபாகுபாடாக இருக்கவேண்டுமா?? அவை தாண்டி சமூகம் பற்றி சிந்திக்க முடியாதா?? இங்கே மொகமட் தன்னை ஒரு முஸ்லீமாகவே அடையாளபடுத்துகிறார், அதேபோல் நந்தா கிருபானந்தாவாரியாரின் உதவியுடன் தான் இந்துவாகவே என்றும் மார் தட்டுவார் ,அப்படியாயின் குலன் என்ன கத்தோலிக்கரா?
இப்படி முக்கோண வாதம் செய்ய தொடங்கினால் கூட்டமைப்புபோல் ஒரு குத்துமதிப்பு அரசியலே செய்ய முடியும்; இவை தாண்டி அரசு அதன் அதிகாரிகள் அவர்கள் நிர்வாகம் என பலவற்றை நாம் பேசுவது எம் சமூகத்துக்கு உதவுமே; இன்னும் சொல்லபோனால் மிகசண்டியனாகவே மகிந்தா அரசு பதவி ஏற்றிருக்கிறது அது சிங்கள மக்கள் மீது கூட அராசக அடாவடி அரசாகவே செயல்படுவது அவர்கள் வாதம் இப்படி இருக்கும் போது மிக பலவீனமடைந்த சிறுபாண்மையினமான நாங்கள் இப்படி இன அல்லது சமய அரசியல் பேசுவது சரிதானா என்பதே என் ஆதங்கம்;
தொடரும் பல்லி
Kusumpu
/இஸ்லாம்இ கிறிஸ்தவம்இ யூதம் என்பன ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். மற்றைய மதத்தவர்களை மதம் மாற்று அல்லது கொலை செய் என்ற போதனையை பின்பற்றுபவர்கள்/ இது முற்றிலும் உண்மையானதே. ஐரோப்பாவில் வாளா பைபிளா என்று கொன்று குவிக்கப்பட்டுவர்கள் ஏராளம். அதுமட்டுமல்ல கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களுக்காகப் போரிட்டு இறப்பவர்கள் சொர்க்கத்துக்குப் போகிறார்கள் என்ற ஐதீகம் அவர்களிடையே இருந்தது இன்னும் இருக்கிறது.கிறிஸ்தவம் பதிய ஏற்பாடு என்று காலத்துக்கு ஏற்ப மாற்றங்களைக் கிரகிக்கத் தொடங்கியது. இஸ்லாம் மற்றங்களை முற்றாகவே மறுக்கிறது.
/அதனால்த்தான் இந்துக்களை முஸ்லிம்களாகவும்இ கிரிஸ்தவர்கலாக்கவும் முடிந்துள்ளது. இன்று இந்துக்களுக்கு எதிராக குதிப்பவர்கள் அந்த மதம் மாறினவர்களின் வாரிசுகளே/-நந்தா
நோபாளம் மன்னராட்சியில் இருந்த திறந்து விடப்பட்டுபோது 91கிறிஸ்தவமிசன்கள் மதம்மாற்றப் போய்நின்றார்கள். நோபாளத்துக்கும் மாக்சிசத்தை திறந்து விட்டதும். ஐனநாயகம் என்ற போர்வையில் கிறிஸ்தவம் நுளையவழி செய்ததும் ஏகாதிபத்திபங்கள் என்பதை யாரும் மறுக்க இயலாது. உலகில் கடசியான இருந்து இந்துமன்னராட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. ஆனால் என்ன முன்னேற்றம் நடந்தது. இந்துமதத்தை விமர்சிக்காலாம் கதைக்காலம் வாளோ குண்டோ வராது. இதனால் மதம்மாற்றம் என்பதும் இலகுவாகிறது.
நந்தா-/ஆண்களைக் கொன்று சொத்துக்களையும் பெண்களையும் அபகரிக்க வேண்டும் என்பது இஸ்லாம்/கிறிஸ்தவம் என்பன நடைமுறைப்படுத்திய வரலாறுகள்./ இது இந்தியாவை நோக்கி வந்த முகலாயரும் பசியர் (இரானிய அரசர்களும்) நந்தா குறிப்பிட்ட கோரத்தாண்டவத்தை ஆடினார்கள். ஒரு அரசனை வென்றால் அவ்வெற்றியுக் கழிப்புடன் அவர்கள் அடங்கமாட்டார்கள். தோற்றுப்போன அரசனின் மனைவி மகளைப் கற்பழித்த பின்னரே அவர்களின் வெறி அடங்கும். இதை விரும்பாத பெண்கள் முக்கியமாக அரச குடும்பத்தவர்கள் உடன்கட்டை ஏறினர். வாழ்வை விட மானமே மேல் என்று கருதினார். இதன் அடிப்படையிலேதான் உடன்கட்டை ஏறல் வளமையாக்கப்பட்டது.
Kulan
/ நமது பாதிரிகள் என்னமோ அரசாங்க அதிபரை விட அதிகாரம் உள்ளவர்கள் நடந்து கொள்வதை பார்த்திருக்கிறேன்!/ நந்தா!
ஐரோப்பாவில் பண்டைய காலத்தில் அரசுக்கு நிகரான அதிகாரங்களைக் கொண்டிருந்தது. அரசுடன் சாவல்விடும் அளவிக்கு கிறிஸ்தவம் பலமாக இருந்து. புரட்டஸதாந்து நிர்மானிக்கப்பட்டு மற்றநாடுகளுக்கு பரப்பும் போது முக்கியமாக அரசர்கள் மாற்றப்பட்டார்கள். கத்தோலிக்கர்களுக்கு பாடசாலை அனுமதி மறுக்கப்பட்டது. வசதிகள் தடுக்கப்பட்டது.
/எனக்குத் தெரிந்த ஒரு கத்தோலிக்க குடும்பத்து வாலிபன் “இந்து” பெண்ணை திருமணம் முடித்து அவளை மதம் மாற்றாமல் விட்டதினால் அந்த குடும்பம் “தள்ளி” வைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களும் அப்படித்தான் நடந்து கொள்ளுகிறார்கள்./ கத்தோலிக்கர் மட்டுமல்ல முழுக்கிறிஸ்தவ இஸ்லாமிய சமூகமே அப்படித்தான். இப்படி இந்து கிறிஸ்தவ திருமணங்கள் தேவாலயங்களின் மறுக்கப்பட்டபோதும் இவர்களில் சிலரை இந்து ஆலயத்திற்கு (ஐரோப்பவில்) அழைத்து வந்து திருமணம் செய்து வைத்துள்ளேன். இவர்கள் மகிழ்சியாக இருந்தாலும் இறுதியில் இந்துவை கிறிஸ்தவராக அல்லது பிள்ளைகளை கிறிஸ்தவராகத்தானே மாற்றுகிறார்கள். இது மிகவேதனைக்குரியது. போலும் சிலவிடயங்களை அவதானித்துள்ளேன். இந்து கிறிஸ்தவ கலப்புத் திருமணங்களில் எனக்குத் தெரிந்தவரை 5அல்லது 6குடும்பத்தில் பிள்ளையில்லாது அவலப்படும் நிலையைக் காண்கிறேன். இது சாபங்களா? அல்லது? எனக்குத் தெரிந்த சுமார் 15/16 குடும்பங்களில் 5/6 என்பது பெரும் தொகை என்று கருதுகிறேன்.
பல்லி /அதேபோல் நந்தா கிருபானந்தாவாரியாரின் உதவியுடன் தான் இந்துவாகவே என்றும் மார் தட்டுவார் அப்படியாயின் குலன் என்ன கத்தோலிக்கரா?/ நல்லகருத்துகளைக் கூறிய உங்கள் பின்நோட்டத்தில் இருந்து இப்படி ஒரு கேள்வியும் காணப்பட்டது. நான் ஏற்கனவே எழுதியது போல்
மொழி – தமிழ்
இனம் – இனமும் தமிழ்
மதம் – மனிதமதம்
பலம்வாய்ந்த பெரும்பான்மைக்குச் சமனாக சிறுபான்மையினர் ஒன்று கூடுவது யதார்த்தமானதே இருப்பினும் சரியான புரிந்துணர்வும் அரசியல் நோக்கமும் இல்லாது போனால் இந்தியா பாக்கிஸ்தான் தான். இன்று இலங்கையில் நடப்பது ஜனநாயகம் அல்ல பெரும்பான்மைச் சர்வாதிகாரமே.
nantha
குலன்:
இந்துக்கள்/பௌத்தர்கள் மற்றவர்களை மத மாற்றம் செய்தார்கள் என்று இதுவரையில் நான் கேள்விப்பட்டதில்லை! பணம், உத்தியோகம் என்று எங்கும் மற்றவர்கள் பௌத்த/இந்து மதங்களுக்குத் தாவினார்கள் என்று இதுவரையில் தகவல்கள் இல்லை! எனவே உங்களின் “மதம்பரப்புவதில் பெளத்தர்கள் சளைத்தவர்கள் அல்லர்.” என்ற வரிகளை ஏற்றுகொள்ள நான் தயாராக இல்லை!
கிருபானந்த வாரியாரை நான் குறிப்பிட்டது அவர் “இந்து மதத்தில், விசேஷமாக முருகனைப் பற்றி” நல்ல தமிழில் உரையாற்றும் வல்லமை உள்ள காரணத்தினால் அவரை இந்துத் தமிழர்கள் ஏற்கனவே அறிந்த கதைகளை பிரசங்கமாக கேட்டு மகிழ்வதட்கே ஆகும். . சங்கமித்தை இலங்கை வர முன்னரே இலங்கையிலும் தென் இந்தியாவிலும் பௌத்த மதம் பரவியிருந்தது. தவிர சங்கமித்தையோ, கிருபானந்த வாரியாரோ மற்றைய மதங்களை “சாத்தான்கள்” என்று துவேஷம் கிளப்பியதாகவும் தகவல்கள் இல்லை.
கிருபானந்த வாரியார் பிறக்க முன்னரே தமிழர்கள் இந்துக்களாக இருக்கிறார்கள் என்பது பல்லிக்குத் தெரியாது போலிருக்கிறது.
nantha
குசும்பு:
இந்து மன்னர்கள் போரிட்டு வெற்றி பெற்றாலும் “கொலைகள்” புரிந்தமையால் “பிரமஹத்தி” தோஷம் உள்ளவர்கள் என்றும் அவர்கள் அரச கருமங்களை விட்டு யாத்திரைகள் புரிந்து தோஷம் போக்க வேண்டும் என்பது விதி முறை. யாழ்ப்பாணத்தில் “பிரமசத்தி” என்று திட்டும் வார்த்தைப் பிரயோகம் உள்ளதைக் கவனிக்கவும்.
வாதாபி போரில் வெற்றி பெற்ற பல்லவ நந்தி வர்மனும் அவனுடைய சேனாதிபதி பரஞ்சோதியாரும் அவ்வாறே தமது பதவிகளைத் துறந்தவர்கள். பரஞ்சோதியார் பின்னாளில் “சிறுத்தொண்டர்” என்ற நாயனார் வரிசையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
ஆனால் கிறிஸ்தவர்களும்/ முஸ்லிம்களும் போர் வெற்றிகள் கடவுள் தங்களின் பக்கம் என்று “கூத்தாடியதாகவே” வரலாறு உள்ளது. கிறிஸ்தவ நாடுகளின் படைகளில் இப்போதும் ஒரு “கிறிஸ்தவ சாப்ளின்” கூடவே உள்ளது பலருக்குத் தெரியாத விஷயம்!
Kulan
நந்தா! இந்துக்கள் மதமாற்றம் செய்ததாக நான் கருதவில்லை. இந்துக்கள் மதம்மாறினார்களே தவிர மாற்றினார்கள் அல்லர். ஆனால் பெளத்தர்கள் சங்கம் வைத்து மதம்பரப்பினார்கள். உம்: அசோகன். பிக்குகள்கள் வீடுவீடாய் சென்று போதிப்பது என்பது புத்தமத்தின் இயல்பான ஒன்று தானே. இது தாய்லாந்து போன்ற கிழக்கு ஆசியாவில் நடைமுறையில் உள்ள ஒன்றே. சங்கமித்திரை சம்பில்துறைக்கு வரமுன் இலங்கையில் புத்தம் பரவியிருந்திருக்கலாம். ஆனால் பெளத்தம் அசோகனால்தான் சங்கம் அமைத்துப் பரப்பப்பட்டது என்றே நான் வாசித்திருக்கிறேன். இதுபற்றி ஆய்வு எதுவும் என்னிடம் இல்லை. முடித்தால் தயவு செய்து இதுபற்றி எழுதுவீர்களாயின் அறிய ஆவலாக உள்ளேன்.
Kulan
மீண்டும் நந்தாவிடம்! நீங்கள் கூறிய பிரசத்தி என்ற வார்த்தை எனது அம்மம்மா அப்பப்பா பாவித்தார்கள். விரமசத்தி என்பதை சனியன் என்றே விளங்கியிருந்தேன். பிரம்ஹசத்தி என்பதன் பொருள் பிரம்மாகிய பரந்து வியாபித்திருக்கும் சக்தி என்றல்லவா பொருளாகிறது. அல்லது பெரியதோசம் கொண்ட சக்தி என்று கருதப்படுகிறதா?
பரஞ்சோதியை சேனாதிபதியாகக் கொண்ட சாளுக்கருடைய வாதாபியை வென்ற மாமல்லனை அதாவது மகேந்திர பல்லவனின் மகனை நந்திவர்மன் என்று சொல்வதுண்டா? வினாயகவணக்கம் தமிழ்நாட்டில் பரஞ்சோதியார் வாதாவியை வென்று வரும்போது எடுத்துவந்த விநாயகர் சிலையில் இருந்தே ஆரம்பமாகிறது என்கிறார்கள் சிலர். அதான் வாதாவி கணபதி என்று இன்றும் வளங்கப்படுகிறது என அறிகிறேன். இதுபற்றி ஏதாவது தெரியுமா? வாதாவியை மீட்டுவின் தன் சேனாதிபதி பதவியைத் திறந்து பரஞ்சோதியானார். புத்தபிக்குவான நாகநந்தி சாளுக்கனா? பன்றிக் கொடியை வைத்து ஆண்டவர்கள்தான் சாளுக்கர்கள் என்று சிறுவயதில் வாசித்த ஞாபகம்.
PALLI
குலன் ஏற்கனவே நான் நந்தாவுடன் மதவாதத்தில் நந்தாவின் மதம்பிடித்த வாதத்தில் வெற்றியில்லா தோல்வியை ஒப்புகொண்டேன்; அதே போல்தான் இப்போதும் எப்படி மொகமட் தனது பலம் சமயம் என நினைக்கிறாரோ அதேபோல் நந்தாவும் சமய அடிப்படையில் பட்டங்கள் பல பெற்றவர்தான்; குலன் சமயமோ அல்லது மதமோ எவ்வளவு கொடியது என்பதுக்கு ஒரு சிறு உதாரனம் சொல்லுகிறேன்; கோபம் வேண்டாம் என்னடா இது பல்லி குலனுக்கு விளக்கம் தருவதா என; அப்படி திட்டினாலும் தப்பில்லை உங்கள் பின் ஓடி திரிந்து அரசியல் பொறுக்கியவர்களில் நானும் ஒருவன் என வைத்து கொள்ளுங்களேன்;
குலன் உங்கள் கட்டுரை ஒரு திட்டமிடபடாத போராட்டமான நடைபயணம் பற்றியதே(குண்டு சட்டியில் குதிரை ஓடல்) மிக அழகான கருத்தான தலையங்கத்துடன் வந்த கட்டுரை அவரை அவர் பாட்டுக்கு நடக்க விட்டு விட்டு இன்று நந்தா, மொகமட்டுடன் திசைமாறி பயணிப்பதாகவே நான் கருதுகிறேன், நாம் இப்படி பல இடங்களில் திசைமாறி பயணித்ததின் நிலைப்பாடே, தேசியத்தலைவர் ஏதாவது வேண்டிதருவார், அல்லது பறித்து தருவார் என ஆயிரகணக்கான உயிர்களை பறி கொடுத்தோம்; பக்கத்து வீட்டில் சாதி சடங்கு இங்கே மத ஊர்வலம் சமூகமோ அம்மணமாய் நடுதெருவில் நாதியற்றோர் பின்னால் என்பது போல் உள்ளது; தவறாயின் குலன் பல்லியை மன்னிக்கலாம் சின்னவந்தானே (உங்களைவிட)
தொடரும் பல்லி;;;;
nantha
பௌத்தர்கள் சங்கம் வைத்து புத்தரின் போதனைகளைப் பரப்பினார்கள். பின்னர் அந்த சங்கத்தின் செயல்பாடுகள் சங்கத்தையே இல்லாது செய்தது விட்டது. ஆயினும் புத்தரின் போதனைகள் இந்து மதத்தில் காணப்பட்ட பல பிரச்சனைகளுக்கு நிவாரணிகளாக இருந்தது. சாதிபிரச்சனை அதில் முக்கியமானது. சாத்வீகம் என்பதும் சமாதானம் என்பதும் முதன்மையானவை. அதனால் “அசோகனின்” சாம்ராஜ்யம் அடுத்த தலை முறைக்குக் கூட நின்று பிடிக்கவில்லை. ஏனென்றால் புத்தரின் போதனைகளைப் பெரும்பான்மையோர் பின்பற்றத் தயாராகவில்லை.
அரசு என்பது “அதிகாரம்” சம்பந்தப்பட்டது. அதிகாரம் சமாதானப் பாதையினூடாக வந்த வரலாறு பழைய காலத்தில் இல்லை. படைகள் என்பது சமாதானத்தின் ஆணி வேராக இருக்க முடியாது. ஆனால் அரசுக்குப் படைகள் அவசியம். அது இல்லாமல் அரசு இருக்க முடியாது. புத்த மதத்தில் ஒரு அரசின் கீழ் மக்கள் சமாதானமாக வாழும் வழிகள் சொல்லப்பட்டுள்ளன. அரச அதிகாரங்கள் பற்றி குறிப்பிடப்படவில்லை.
இலங்கையில் புத்த பிக்குகள் “சமாதான” தூதுவர்களாக இருப்பதை விட ஒரு “தொழில் சங்கம்” போலவே செயல்படுகிறார்கள். கிறிஸ்தவ பாதிரிகள் அனுபவிக்கும் “வசதிகள்” தங்களுக்கும் வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். புத்த தர்மத்தைப் பாதுகாக்கப் “பலாத்காரம்” தேவை என்பது நிதர்சனமாகி விட்ட உண்மை. தன்னைக் கொல்ல வரும் பசுவையும் கொல்லலாம் என்று காந்தி சொன்னதை நினைவு படுத்துகிறேன்! எனவே “ஆயுதம்” கொண்டு தாக்க வருபனை புத்த மதக்காரன் “சமாதானம்” உபதேசித்துத் தடுத்து விட முடியாது.
ஆயினும் புத்த மதம் பரவிய வேளையில் “சமாதானம்” நிலவியதென்பது மறுக்க முடியாத உண்மை. சமாதான சூழ் நிலையிலேயே மக்கள் சிந்திக்க முடியும். அதனால்த்தான் பல தமிழ் காவியங்களும் நூல்களும் “சமாதான” காலத்தில் எழுந்துள்ளன.
சங்கமித்த காலத்து மதம் பரப்பலை தற்போதுள்ள பாதிரிகளின் மதம் பரப்புதலுடன் ஒப்பிட முடியாது. பாதிரிகள் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் கோஷ்டிகள். மக்களைப் பட்டினியாகுவதன் மூலம் மத மாற்றம் செய்ய அலைகிறார்கள்.
புத்தர் இந்து மாத்திரமல்ல. தன்னுடைய கொள்கைகளை அல்லது அறிவுரைகளை “மதமாக்க” அவர் தனது வாழ் நாளில் விரும்பியது கிடையாது. இந்துக்களிடையே தோன்றிய கேரளத்து நாராயண குரு போன்றவர்களும் புத்தருக்கு நிகரான போதனைகளை செய்துள்ளனர். “சமத்துவம்” என்பதனை புத்தரும் போதனை செய்தார். கம்யூனிச சித்தாந்தமும் போதனை செய்கிறது.
கேரளா அரசியலில் “வாக்குகள்” மூலம் கம்யூனிஸ்ட் அரசை அமைத்த ஈ எம் எஸ் நம்பூதிரிபாடு என்ற பிராமணன் நாராயணகுருவின் கொள்கைகளைப் பின்பற்றியது மாத்திரமின்றி தனது பூணூலையும் அறுத்தவர். அதனால் இன்று கேரளத்தில் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த வீ எஸ் அச்சுதானந்தன் என்பவர் முதலமைச்சர் ஆகியுள்ளார். அவரது ஆட்சிக்கு இன்றும் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் “மத”வாதிகளே.
தமிழர்களிடையே “சமத்துவம்” காணத் தயாரில்லாதவர்கள் சிங்களவர்களுடன் சமத்துவம் என்று கூறி சண்டித்தனம் செய்வது ஒருபோதும் வெற்றி பெறும் காரியமல்ல. வவுனியா நகரசபை சிக்கல் அதனை காட்டி நிற்கிறது.
கிறித்தவம்/இஸ்லாம் என்ற சமயங்கள் சமத்துவம், சமாதானம் என்பனவற்றை உபதேசம் செய்வன அல்ல. சமாதனம் பற்றிப் பேசுபவனை “பலவீனமானவன்” என்று கருதுபவை.
சங்கமித்த “சமாதனம்” போதித்தாரே ஒழிய மற்றவர்களை “சாத்தான்கள்” என்றும் “குறைந்த” பிறப்புக்கள்” என்றும் அவதூறு பரப்பவில்லை. புத்த மத போதனைகளைப் பின் பற்றியதனால்த்தான் அந்த நம்பிக்கை இல்லாதவர்கள் இலங்கை மீது படையெடுப்புக்கள் நடத்திக் கொள்ளைகளும், கொலைகளும் புரிய வாய்ப்பாகியது என்றே நான் கருதுகிறேன்! புத்த மத்தத்தை நம்பாதவர்கள் “ஆயுதம்” தூக்கி அவர்களைத் தாக்க முயற்சித்து “அறை” வாங்கியவுடன் “இது புத்த தருமமா” என்று கேட்டுப் புலம்புவது சுத்த அயோக்கியத்தனம்.
சாம, தான, பேத, தண்டம் என்கிற இந்து வழி முறைகள் அரசியலில் நாகரீகமாகவே உள்ளதனை இலங்கை நிரூபித்துள்ளது.
nantha
குலன்:
“பிரம்மஹத்தி” என்பது “தோஷம்” என்பதே ஆகும். ஆத்மஹத்தி என்றால் தற்கொலை. எனவே பிரமசத்தி என்ற தமிழ் திட்டல் தோஷம் பிடித்தவனே என்பதாகும். நீங்கள் சொல்லும் பெரிய தோஷம் பிடித்த சக்தி என்பது சரியாக இருக்கும் என்றேபடுகிறது.
வாதாபியை வென்ற பல்லவ மன்னனின் பெயரில் சில குழப்பங்கள் உண்டு. பின்னர் சரியான பெயரைக் கூறுகிறேன்.
பரஞ்சோதி பல்லவ படைத்தளபதி. பின்னாளில் சிறுத்தொண்டர் என்கிற இந்து நாயானார் ஆகியவர். பல்லவர்கள் சாளுக்கியர்களை வென்றவர்கள். எனவே பரஞ்சோதி சாளுக்கியனாக இருக்க முடியாது. நாக நந்தி என்ற பிக்கு சாளுக்கியன் என்றே நம்புகிறேன்.
“வாதாபி கணபதி பஜே ஹம்” என்கிற பாடல் வரிகளை வைத்து விநாயகர் வணக்க முறை பல்லவர்காலத்தில் வந்தது என்று கூற முடியாது. திருஞான சம்பந்தர் கேதீஸ்வர பதிகம் பாடியதை வைத்து அவர் காலத்தில்த்தான் சிவ வழிபாடு இலகைக்கு வந்தது என்று சொல்ல முடியுமா?
Kulan
பல்லி! நான் எழுதிய ஒருவார்த்தையை வைத்துக் கொண்ட நிஸ்தார் போருக்குப் புறப்பட்டார். என் மனதில் பட்டதை மட்டுமல்ல அனுபவங்களையும் சேர்த்தே எழுதியிருந்தேன். மொழிவாரியா இஸ்லாமியர்கள் என்முடன் ஒற்றுமைப்பட்டாலும் கலாச்சார ரீதியாக எதிரும் புதிருமாகவே இருக்கிறார்கள். கலாச்சாரரீதியில் நாம் சிங்களமக்களுடன் உடன்பட்டு ஒத்துப்போக முடியும். மதம் உண்மையில் எமக்கும் சிங்களவர்களுக்கும் பெரிய முட்டுக்கட்டையாக நிற்க முடியாது மதத்தைச் சரியாகப் புரிந்து கொண்டால். என்கட்டுரையின் கருத்தை நிஸ்தார் திசைதிருப்பி விட்டார். இருப்பினும் நான் அவர்களுடன் இணைந்து போனதற்குக் காரணமும் உண்டு. இஸ்லாமியருக்கு அவர்கள் விடும் பிழைகளைச் சுட்டிக்காட்டுவதற்கு ஒருசந்தர்பமாகவே கருதினேன் அவ்வளவுதான்.
மதம் என்பது வெறும் நம்பிக்கைக்குரியதே ஆனால் மனிதவாழ்க்கையோ யதார்த்தமானது. இந்த உண்மையான யதார்த்தமான வாழ்வில் வரும் துன்பங்கள் வேதனைகளுக்கு முகம் கொடுக்க முடியாதவன் நம்பிக்கை என்று ஊன்று தடியாக மத்தை பிடிக்கிறார். 3ம் உலகநாடுகளில் மதம் வலுப்பெற்றிருப்பதற்கு இது ஒருகாரணமே. மேலும் பல்லி நாம் மனிதத்தை நேசிப்பதால் மத்தையுமல்லவா சேர்த்து ஒப்புக் கொள்ளவேண்டியிருக்கிறது. காரணம் மனிதரில் பலர் மத்தை நம்புகிறார்களே. உ.ம்: நான் பல்லியுன் நட்பாக இருக்கிறேன் ஆனால் அவர் கையுடன் நட்பில்லை என்று விட்டுவிட முடியுமா? இது ஒரு சாபக்கேடுதான் சத்திர சிகிட்சை செய்தாவது கையில் இருக்கும் கட்டியையும் சீழையும் எடுக்க வேண்டியல்லவா இருக்கிறது. மன்னிப்புக் கோரவேண்டிய அவசியம் இல்லை பல்லி. வயது இங்கு முக்கியமில்லை அறிவு சிந்தனை தூரநோக்கு இருந்தால் போதும். ஒவ்வொரு மனிதனும் பற்பல கோணத்தில் சிந்திக்கிறார்கள். அவை நான் எழுதுவதற்கு முரணாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதற்குத்தானே தேசம் பின்நோட்டம் என்று ஒரு கருத்துக் களத்தைத் திறந்து விட்டிருக்கிறது. பல்லியின் பின்நோட்டத்தைத் தேடிவாசிப்பவர்களில் நானும் ஒருவன் தொடர்நது எழுதுங்கள்.நிஸ்தாரோ நந்தாவே தத்தமது நிலைகளில் நின்று எழுதுகிறார்கள் தெரியாவிட்டால் தெரிந்து கொள்வோம் பிழைஎன்று பட்டால் எழுதுவோம். சிறுவயதில் அல்லது மனதவாழ்வில் ஏற்பட்ட பாதிப்புகள் சிலரை மதவெறியராகவும் மற்றைய மத மறுப்பாளிகளாகவும் ஆக்கி விடுகின்றன. இது இயற்கையான ஒன்றே. சிலருக்குக் கிடைத்த அனுபவங்கள் எமக்குக் கிடைக்காமலும் இருக்கலாம் அல்லவா. எழுதுவதன் மூலமும் கேட்பதன் மூலமும் அறிந்து அனுபவப்படுவதன் மூலமும் மட்டுமே நாம் மனித்தை விதைக்கலாம். நிஸ்தார் வளர்ந்த பின்னணி: கிடைத்த சந்தர்பம் இப்படிப்பல அவரை இப்படி எழுதவைத்தது. அவர் எனது கடுமையான இஸ்லாம் பற்றிய கருத்துக்களை ஒத்துக்கொண்டாரோ இல்லையோ சிந்திப்பதற்கு ஒரசந்தர்ப்பம் கிடைத்திருக்கும் அல்லவா. அவரின் பக்கத்தில் நியாயம் இருந்தது ஆனால் மறுபக்கதைப் பார்க்க மறந்து விட்டார். அதை எடுத்துக் காட்டுவது எமது பொறுப்பில்லையா?
புலிகள் தமது பார்வையில் எல்லாம் சரி என்றே எண்ணினார்கள் எண்ணுகிறார்கள் ஆனால் அவர்கள் பார்க்காத பக்கங்களைப் காட்டவேண்டியது எமது பொறுப்பில்லையா. உ.ம் எனது கட்டுரை அவரது நடைப்பயணத்தை உண்மையில் நான் கொச்சைப்படுத்தவில்லை இப்படியான ஒரு பாரிய முயற்சி புஸ்வாணமாகிப்போகிறதே இந்த இளைஞனின் சக்தி வீணடிக்கப்படுகிறதே என்ற வேதனையின் வெளிப்பாடே குண்டுச்சட்டிக்குள் குதிரை. புலிகள் எதைச்செய்தாலும் கை தட்டித் தட்டியே வாய் பொத்திக் கிடக்கிறது சமூகம். வார்த்தைகளும் வளங்கொண்ட ஆயுதங்களே. அதைச் சரியான இடத்தில் சரியாப் பாவித்தால் உலகையே வெல்லலாம். கருத்தாடுவோம் பல்லி
palli
//சாம, தான, பேத, தண்டம் என்கிற இந்து வழி முறைகள் அரசியலில் நாகரீகமாகவே உள்ளதனை இலங்கை நிரூபித்துள்ளது.//
பல்லிக்கு இந்த பின்னோடத்தில் உடன்பாடு இல்லை ஆனாலும் எமக்கும் சில உலக நடப்புகள் தெரியும் என்பதால் நந்தா நாகரிகமான உங்கள் (எங்கள்) இனமே மஸூதி உடைத்து ராமர் கோவில் கட்டியது, அதுவும் மிக வலிமை வாய்ந்த அரசியல்வாதியானா அத்வானி தலமையில்; இது உங்களை கேவலபடுத்தவில்லை, தவறு அனைவர் தரப்பிலும் உண்டு என்பதை சுட்டி காட்டவும் இதை விட்டு சமூக பொறுப்புடன் வாருங்கள் என்பதுக்காகவுமே;
Kulan
நந்தா! அரசு படை பலம் அதிகாரம் இன்னும் எத்தனையோ மதங்களக்கு முரணான கருத்தியலை வாழ்வியலை கொண்டது. இருப்பினும் மதத்தை ஒரு ஆயதமாகப் உலகம் முழுக்கப்பாவித்துள்ளனர். உ.ம் போத்துக்கேயர் கத்தோலிக்கத்தையும் ஆங்கிலேயர் புரொட்டஸ்தாந்தையும் இராஜராஜ சோழன் சைவத்தையும் பாவித்தனர். முக்கியமாக போத்துக்கேயர் கரையோரப் பகுதிகளை வென்றபின் மதத்தையே பரப்பினர். முக்கியமாக பல கரையோப்பகுதி மக்கள் பலாற்காரமாக மாற்றப்பட்டார்கள் என்ற ஒரு டொக்குமென் (செய்தித் தொடுப்பை) பலவருடங்களுக்கு முன் தொலைக்காட்சியில் கண்டேன். ஐரொப்பாவில் மதத்துக்காவே போரை நடத்தினார்கள்.”அல்லாகூ அக்பர்” என்ற கோசமே போரைத்தானே நினைவுபடுத்துகிறது நந்தா.
/புத்த தர்மத்தைப் பாதுகாக்கப் “பலாத்காரம்” தேவை என்பது நிதர்சனமாகி விட்ட உண்மை./ உங்கள் வரிகளில் வலித்தது எனக்கு இதுதான்.
/சங்கமித்த “சமாதனம்” போதித்தாரே ஒழிய மற்றவர்களை “சாத்தான்கள்” என்றும் “குறைந்த” பிறப்புக்கள்” என்றும் அவதூறு பரப்பவில்லை. / கிறீஸ்தவமத ஐதீகப்படி ஆதாம் ஏவாள் அப்பிளுக்கு ஆசைப்பட்டு பாவம்பட்டுப் பிறந்தவர்கள் என்றும் மனிதர் அவர்களின் வழித்தோன்றல் என்பதால் பாவப்பட்டவர்கள் சாத்தான் பிடித்தவர்கள் என்று கருதுகிறார்கள். அதாவது பிறமதம் யேசுவினூடாக ஈடேறுவதைத் தடுக்கிறது என்பதை நம்புகிறார்கள். கே.பி சொல்வது போல் நம்புங்கள் நம்பிக்கைதான் வாழ்க்கை என்கிறார். இவர் நம்பிக்கையைப் பற்றி எப்படிக் கதைக்கு முடியும். பாவம் பாதிரிகள் பைபிளை நம்புகிறார்கள் அதைத்தவிர வேறு உலகம் இல்லை என்று கருதுகிறார்கள். அதற்கு மேல் அவர்களால் சிந்திக்க இயலாது நந்தா விட்டுவிடுங்களேன்.
வாதாவியில் இருந்து பரஞ்சோதி எனும் சிறுத்தொண்டர் சாளுக்கரை வெற்றி கொண்டு வரும்போது எடுத்துவந்த வினாயகர்தான் வாதாபி கணபதி என்பது உறுதி. இதில் இருந்துதான் கணபதி வணக்கம் உருவானது என்பது எனது சந்தேகம்.
எனது சுருக்கமாக கருத்து என்ன வெனில் வேற்றுமைக்குள் ஒற்றுமையானவற்றைத் தேடுவதே அரசியலும் சரி மனிதவாழ்க்கையிலும் சரி நன்மைபயக்கும் உ.ம் எமக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் வேற்றுமையாக மொழிமட்டுமே உள்ளது மற்றை அனைத்தும் ஒற்றுமையாகவே இருக்கிறது நிறம் கூட இப்படியா ஒற்றுமைகளைத்தேடி ஒற்றுமைகளை வளர்த்தெடுப்பதை விட்டுவிட்டு இருபக்க அரசியல்வாதிகளும் வேற்றுமைகளையே தேடினார்கள். சாதி கூட வேற்றுமைப்படுத்திக்காட்டவே உருவாக்கப்பட்டது. சுனாமி தின்னப்போகும் நாட்டில் இருக்கும் வரையும் சந்தோசமாக வாழ்ந்து விட்டுப் போங்களேன். இலங்கையில் உள்ள வளங்களையும் மனித வளங்களையும் முறையாகப் பயன்படுத்தினால் சுபிட்சமாக வாழலாம்.
nantha
பல்லியின் கதை பரிதாபமாக உள்ளது. மசூதியை உடைத்தது சரி என்று நான் எங்கும் வாதாடியது கிடையாது. தவிர போர்த்துக்கீசரும், முஸ்லிம்களும் அழித்து தரை மட்டமாக்கிய இந்துக் கோவில்களின் கதி என்ன?
ஸ்பெயின், கிழக்கு ஐரோப்பா ஆகிய இடங்களில் கிறிஸ்தவ சிலுவைப்போரின் வெற்றிக்குப் பின்னர் சகல மசூதிகளும் உடைத்துத் தரமட்டமாக்கப்பாடு இன்று “கிறிஸ்தவ” கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை என்ன செய்யப் போகிறீர்கள்? கிறிஸ்தவ கோவில்கள் சமத்துவத்தின் அடையாளங்கள் என்று பல்லி வாதிக்கக் கூடும்!
nantha
விநாயகர் சிலைகள் இந்தோனேஷியாவிலும், கம்போடியாவிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதிலும் சில சிலைகள் பல்லவர் காலத்துக்கு முந்தியவை.
இந்துக்களான பல்லவர்கள் வாதாபி போரின் பின்னர்தான் விநாயக வணக்கத்தை ஏற்படுத்தினார்கள் என்பதை நம்ப முடியாது!
“தமிழ்” என்கிற வட்டத்தினை விட்டு வெளியே வந்து சிந்தியுங்கள். அது தமிழ் பேசுபவர்களுக்குக் கூடிய கௌரவத்தைக் கொடுக்கும்!
PALLI
//பல்லியின் கதை பரிதாபமாக உள்ளது. //
இருக்கலாம் காரனம் என் கதைகள் பாவபட்ட மக்களை சுற்றியே வருவதால் அப்படி இருக்கலாம்; ஆனாலும் கதைமட்டுமே பரிதாபத்துக்கு உரியது பல்லியின் கருத்துக்கள் அப்படியா என்ன??
மற்றவர்கள் செய்யும் தப்பை நாம் சொல்லு முன் நாம் செய்தவைகளை நினைத்து பார்ப்பது நல்லதில்லையா நந்தா, எனது வாதம் மற்றவர்கள் தவறு செய்யவில்லை என நான் சொல்லவில்லை, ஆனால் அவர்களுக்கு எந்த வகையிலும் நமாக்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதுக்கு ஒரு உதாரணமே மசூதி உடைப்பு சொன்னேன்; இப்படி ஆயிரகணக்கில் சம்பவங்கள் உண்டு ஆகவே மதகதவை மூடிவிட்டு சமூக கதவை திறவுங்கள்.
அது உங்களுக்கு சிரமமான காரியமதான் ஆனாலும் முயலுங்கள்??
தொடரும் பல்லி;;;;
Kulan
நந்தா!/தமிழ்” என்கிற வட்டத்தினை விட்டு வெளியே வந்து சிந்தியுங்கள். அது தமிழ் பேசுபவர்களுக்குக் கூடிய கௌரவத்தைக் கொடுக்கும்!/ நன்றி நந்தா நான் என்றும் தமிழன் என்பதை விட பொதுமையாகவே சிந்திப்பவன் ஒரு ஐரோப்பிய மொழியிலும் எழுதுபவன். நிச்சயம் தமிழர்களைப்பற்றி அல்ல.
எனக்கும் வாதாபியில் மீட்ட கணபதிபற்றிய சந்தேகம் இருந்தபடியால்தான் உங்களிடம் கேட்டேன். பல்லவர்களுக்கு முன் வினாயகர் வணக்கம் வேறு இடங்களில் இருந்திருக்கலாம் ஆனால் தமிழ்நாட்டில் சிறுத்தொண்டனாரால்தான் கொண்டுவரப்பட்டதா என்பது தான் என்கேள்வி. இல்லை என்பது எனது எண்ணம். காரணம் சிவவணக்கம் தமிழ்நாட்டில் இருந்துபடியால் கணபதி வணக்கமும் அப்போதே இருந்திருக்க வேண்டும்.
Kulan
பல்லி சொல்வது போல் எம்மவர்கள் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்ல. முகலாயர் இந்தியாவுக்கு வந்து அவர்கள் சூறையாடி வளங்கள். மற்றய மதங்களின் மேல் இவர்கள் பிரயோகித்த வன்முறைகள் வாயால் சொல்வதற்கு வார்த்தையோ வாழ்க்கையோ போதாது. இன்று காதல்சின்னமாக இந்தியாவிற்கு வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் தாஜ்மகாலின் அத்திவாரத்தினுள் உறைந்த கிடக்கும் இந்திய இரத்தமும் வியர்வையையும் எண்ணிப்பார்த்தால் இந்தியத் தொழிலாளர்கள் என்ன செய்யப்பட்டார்கள் என்பது. சிற்பக்கலைஞர்களாக இருந்ததாலும் தொழிலாளிகளாக இருந்ததாலும் கைகொடுத்து விரல் அறுந்தவர்கள் அவர்கள். நந்தா கூறியது போல் முகலாய படையெடுப்புக்கள் ஐரொப்பாவரை வந்து அதாவது ஸ்பெயின் வரை வந்து விரட்டியடிக்கப்பட்டவர்கள். துருக்கிய ஒத்தமான் ஒரு சாப்பிராட்சியத்தையே உருவாக்கினார். அன்று சிலுவைப்போர் என்று அடித்துக் கலைக்கப்பட்ட இஸ்லாமியர்கள் இப்போ படையெடுக்து வருகிறார்கள். வெவ்வேறு வடிவங்களில்.
Mohamed Nisthar
குலன் குசும்பு, நந்தா, பீ.சி, பல்லி என் அறிமுகத்தை வாசித்ததற்கு நன்றிகள் பல.
எனக்கு பிடித்த ஊர் பழமொழி, முன்னரும் சொல்லியுள்ளேன், தேவை கருதி மீண்டும், அதாவது “பசு மாடு பற்றி பேசப் போய் அது கட்டியிருந்த தென்னை மரம் பற்றி கதைத்தல்” நாம் இங்கு சமயங்கள் பற்றிய விவாதங்களை முன்வைக்கவில்லை. என்றாலும் என்மீதே பழியையும் போட்டுள்ளீர்கள், நான் தான் சமய அடித்தளத்தில் இருந்து விவாதிக்கிறேன் என்று. ஐயமீர்! என் பின்னுட்டம் முதலில் வரவிலை. குலன் தன் கட்டுரையில் “முஸ்லீம்”கள் பற்றி பேசியிருந்தார். அதற்கு அவருக்கு அதை தொட்டு பதில் எழுதினேனே தவிர, நானாக சமயத்தை தேவையில்லாமல் இழுக்கவில்லை. சரி அப்படி இழுத்தேன் என வைத்துக்கொண்டாலும் வேறு சமயங்களை பற்றி இதுவரை வாய் திறக்கவில்லை. ஆனால் குலன், குசும்பு, நந்தா, பீ.சீ எல்லாம் ஏதோ சந்தர்பம் பாத்திருந்தாற் போல் சமயங்களை வெளுத்து வாங்கியுள்ளிர்கள் எனது கேள்விக்கு பதில் தராமல். “கூடியிருந்து கொண்டாடி கெடுப்பது” என்றால் என்னவென்று சொல்லாமல், அது நியாயமானதா என்றும் சொல்லாமல் என்மீது பழியையும் போட்டுவிட்டு விடயத்தை திசை திருப்பியுள்ளிகளே. உங்கள் கெட்டித்தனம் அது என்று நீங்கள் வாழாவிருந்தால் நான் என்னதான் செய்யமுடியும். தயவு செய்து குலனின் கட்டுரையையும், எனது முதல் பின்னூட்டத்தையும் மீண்டும் வாசித்து உங்கள் நிலைமையை சீராக்கிக் கொள்ளவும்.
அதுவும் அல்லாமல் சமயம் தொடர்பாக போதிய அறிவு இன்றி வெகு தூரம் (சிவந்தனின் நடை பயணம் போன்று)சென்று விட்டீர்கள். நீங்கள் விமர்சிப்பது உங்கள் உரிமை. நீங்கள் விமர்சித்து விட்டீர்கள் என்பதற்காக உங்கள் தலை வெட்டபடும் என்று சொல்ல முடியுமா என்ன? நான் ஒரு முஸ்லீம் கடைசி வரை அப்படி செய்ய மாட்டேன். என் மதம் சொல்கிறது “லக்கும் தீனுக்கும் வலியத்தீன்” அதாவது உங்களுடைய மார்க்கம் உங்களுக்கு, அவர்களுடைய மார்க்கம் அவர்களுக்கு”. மேலும் சொல்கிறது அறியாதவர்களிடம் தர்க்கிக்காதீர்கள் என்பதாக. ஆகவே இது உங்கள் தலையை கொய்ய தரும் அனுமதியல்ல. மாறாக அவருடன் தர்கித்து அவரை புண்படுத்த வேண்டாம் என்கிற உபதேசம். இதை எல்லாம் விட்டு விட்டு என் சமயத்தை எப்டியாவது காபாற்றி விட வேண்டும் என்ற தேவை எனக்கு இல்லை. சமயம் தன் பாட்டில் தன் வேலையை செய்து கொண்டிருக்கும். அது என்ன அரசியல் கட்சியா? குலன் சொல்வது போல் காலத்துக்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொள்ள, மனித குலத்துக்காக வந்த சமயம், அது முழு மனிதனும் இல்லாமல் போகும் வரை இருக்கும். ஏனெனில் நடந்து சென்ற மனிதன் இன்று ஆகாயத்தில் பறந்து செல்கிறானே தவிர அவன் குணாம்சங்கள் அப்படியே இருக்கின்றன. இருப்பினும் குசும்புவும், நந்தாவும் விசித்திரமான கேள்விகளைக் கேட்டு அவற்றுக்கு நான் பதில் தந்தே ஆகவேண்டும் என்பதால். பதில் தரப்போகிறேன். அதற்கு முன் குலனுடன்.
குலன், ஓகஸ்ட் 8ம் திகதி பின்வருமாறு கூறுகிறீர்கள் ” நான் உறவாடி கெடுப்பதென்பதை எடக்கு முடக்காக பாவிக்க முயற்சிக்கின்றேன்” என்பதாகும். பிறகு கூறுகிறீர்கள் உங்கள் மொழி தமிழ், இனம் தமிழ், மதம் மனிதம். குசும்பும், பீ.சியும் அதை ஆமோதித்துவிட்டார்கள். எனக்கு தெரிந்தவரை மனிதம் என்ற மதம் இல்லை. சரி எனக்கு தெரியாவிட்டால் என்ன அப்படி இருப்பதாக வைத்துக் கொண்டாலும் மனிதம் என்று வந்த பிறகு, மொழி என்ன? இனமென்ன? ஆகவே somethigng is wrong somewhere in your thinking process, குலன். இது குசும்புவுக்கும், பீ.சி க்கும் பொருந்தும்.
நிற்க, ஒன்றை ச ரியாக நிருபித்துவிட்டீர்கள், அதாவது தேவைபடும் போது முஸ்லீம்களை தமிழராகவும், வேறோர் தேவை ஏற்படும் போது அவர்களை சமய சாயமிட்டு “முஸ்லீம்” மாகவும் பார்க்கும் நிலை. இதோ உங்கள் வார்த்தை ” அடிமைத்தனமும், தன்னைத்தானே குலைத்து கடிக்கும் குறைபாடும் தமிழரிடையே அதிகம் உண்டு. ( டண்டடாங் காட்சி மாறுகிறது) இதனால் முஸ்லீம்களே சிலவேளை போராட்டத்தை, உரிமை மீட்பை கொண்டு செல்ல வேண்டிவரும்” (ஓகஸ்ட் 6ம் திகதி). இங்கு “கால்கள் என்பது இரண்டானாலும் பயணம் என்பது ஒன்றல்லோ, தகதிக, தகதிம்ஸ” என்று பதில் தர போகிறிர்களா? குலன் உங்கள் தமிழ் பார்வை ஏன் இங்கு “முஸ்லிம்” மாக மாறுகிறது. அதுதான் இது, இது தான் அது என்று செந்திலின் வாழைப் பழ கதை சொல்கிறீர்களா?
குலன், குசும்புடன் நிறைய பேச இருப்பதால் அவசரமாக பதில் சொல்லுங்கள். அதாவது “கூடி இருந்து உறவாடி கெடுப்பது என்றால் என்ன?, உங்கள் மனிதம் என்ற மதத்தில் அந்த வசனத்தின் பொருள் என்ன? யாருடன் கூடி யாரை கெடுக்கச் சொல்கிறிகள்? இதை விட்டு விட்டு ஒரு தாளுக்கு இரண்டு பக்கங்கள், வானவில்லுக்கு ஏழு நிறங்கள், ஓட்டோபஸ்சுக்கு எட்டு கால்கள் என்று சும்மா கதை அளக்காதீர்கள். என் மதம் இஸ்லாம் சொல்கிறது ” மனிதனே இந்த பூமியில் குழப்பத்தை விளைவிக்காதே” என்று. ஆகவே கூடி இருந்து உறவாடி கெடுக்க என்னால் முடியாது. இதற்காக நான் குலனுனோ, பின்லாடனுடனோ, முல்லா ஒமர் உடனோ, மஹிந்தாவுடனோ ஏன் ஒபாமாவுடனும் சேரவிடமாட்டேன். அப்படி சேர்வோரை கண்டிப்பேன். கேட்காவிட்டால் that is your choice, good bye என்பேன். நீங்கள் என் கேள்விக்கு பதில்தரும் வரை உங்களுக்கான பின்னூட்டம் இனிவராது. கீழே விழுந்து விட்டீர்கள், ஆனால் இன்னும் மீசையில் மண் ஒட்டவிலை என்றால் பரிதாபம். அல்லது உங்களுக்கு மீசையே இல்லை பிறகு என்ன மண்ணும், ஒட்டுதலும் என்றும் அடம்பிடிக்கலாம். still it’s your choice, but certainly a poor choice.
குசும்பு, எனது அறிமுகத்தில் சொல்லிருந்தேன் அல்லவா “மன வளர்ச்சி” என்று அது உங்கள் வயதுக்கேற்ற வகையில் இல்லை என்றே தோன்றுகிறது. நீங்கள் ஏதோ இஸ்லாம் என்பது சாப்பாட்டுடன் சம்பந்தப்பட்ட சமயமாகவும், ஆடு சாப்பிடுவது ஏதோ இஸ்லாத்தின் ஆறாவது கடமை போலவும் அழுகிறிர்கள். இதைவிடவும் “புலிகளுடன் உறவாடி பின் இராணுவத்துக்கும், பொலிஸ¤க்கும் துப்பு கொடுத்து” என்றும், மேலும் ஒரு இடத்தில் ” முஸ்லீம்களை தூய்மைபடுத்த முயற்சிக்கிறிகள், கிழக்கில் நிங்கள்” என்று தொடங்கி, நேற்று வேறு குலனின் “மனிதம்” என்ற வார்த்தையை சொல்லிவிட்டு “அது” உங்களுக்கு இருப்பது போலவும், அப்படியே சோமாலியா பக்கம் சென்று , ஆண்னுக்கு விருத்தசேதனம் செய்வது, அதே பாணியில் பெண்களுக்கு அவர்களின் அந்தரங்க பாகங்கள் தைக்கப்படுவதும் என்று நீண்ட குற்றச்சாட்டுகள். ஆண் விருத்தசேதனம் பற்றி வைத்தியர்களிடம் கேளுங்கள், ஒரு வேளை அவர்களின் உபதேசம் உங்களுக்கும் தேவைப்படும். பெண் விருத்தசேதனம் இஸ்லாத்தில் தடை. உடண்கட்டை ஏறுதல் சைவ சமய கோட்பாடல்ல, ஆனால் சைவர்கள் அதை கைக் கொண்டார்கள். அப்படி இதை ஒரு முறை பார்த்தால் என்ன?
குசும்பு, காட்டி கொடுத்தார்கள் என்ற நிலைபாட்டால் அவர்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள் என்பதை சரி என்று கூறுகிறிகள் போல் தெரிகிறது. சரி அப்படி காட்டிக்கொடுத்தார்கள் என்றே வைத்துக் கொள்வோமே. காட்டி கொடுப்போருக்கான தண்டனை கட்டிவைத்து, மேர்வின் சில்வாவை விட ஒரு படி மேலே சென்று, சுடுவது தானே புலிகளின் தண்டனை முறை. அப்படியிருக்க ஏன் முழு சோனகரும் விரட்டியடிக்கப்பட்டனர். அதே நேரத்தில் புலிகளின் பரம எதிரியாக கருதப்படும் டக்கிளஸ் தேவானந்தாவின் குடும்பத்தினர், உற்றார் உறவினர், ஒரே தெருவை சேர்ந்தோர், அவர் சார்ந்த சமயத்தை சேர்ந்தோர் யாருமே விரட்டியடிக்கப்படவில்லையே? ஏன் அவர்களுக்கு தமிழ் இரத்தம் என்பதா காரணம்? எனவே விரட்டியடிக்கப்பட்ட மக்கள் இஸ்லாம் என்ற மதத்தை பின்பற்றும் முஸ்லிமாக இருப்பதால் அல்ல. ஏனெனில் கத்தோலிக்கரான டக்கிளஸ்சின் இனசனம் விரட்டியடிக்கப்பட்டு இருக்க வேண்டும். அப்படி நடைபெறவில்லை. எனவே விரட்டியடிக்கப்பட்டோர் சமயத்தின் அடிப்படையில் அல்ல, வேறு ஒரு இனத்தினர் என்ற ஒரே காரணம்தான் என்பது தெளிவாக தெரிகிறது அல்லவா? அதையும் விட நீங்கள் சொல்லும் “மனிதம்” இங்கு சோரம் போகிறதே. மேலும் “ஒரு இனத்தை மதமாக வரையறுக்கும் நிஸ்த்தார் இதற்கான காரணத்தை சொல்லியே ஆகவேண்டும்” என்று சொல்கிறிர்கள். விடிய விடிய ராமாயணம் விடிந்தபின் ராமணுக்கு சீதை என்ன முறை என்று கேட்ட மாதிரியாகிவிட்டது உங்கள் கதை. எங்கே நான் இனத்தை மதமாக, அல்லது மதத்தை இனமாக வரையறுத்தேன். இதுதான் சொல்லுவது “half knowledge is always dangerous” என்று. மீண்டும் கடைசியாக ஒரு முறை நன்றாக கவனியுங்கள். எனது மதம் “இஸ்லாம்”. அந்த மதத்தை பின்பற்றுவதால் நான் “முஸ்லிம்”. எனது இனம்” சோனகர்” இந்த மதத்திற்கும் இனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் இன்று சீக்கியா¢ன் சமயத்தை கைக்கொண்டால் நான் “சீக்கிய” இனத்தை சார்ந்தவனாக முடியுமா? ராஜபக்ஸ இனத்தால் சிங்களவர், அவர் இஸ்லாம் சமயத்தை ஏற்றுக்கொண்டால் அவர் சிங்கள இனத்தை சேர்ந்த முஸ்லிம் அவ்வளவுதான். இந்த அடிப்படை புரியாமல் ஏன் ஸார் விதண்டாவாதம் பண்ணுகிறிகள்?
” அல்லாவுக்கு இந்த விஞ்ஞான உலகில் கருத்தடை முறைகள் பற்றி விரிவுரை ஓன்று நடத்த வேண்டும்” ஏன் என்றால் அதிகம் சனபெருக்கத்தில் ஈடுபடுவது முஸ்லீம்களாம். என்னே காழ்ப்புணர்வு ஸார் உங்களுக்கு. மேலும் கூறுகிறார் “ஷரியா சட்டம் ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுகு ஒரு நீதியை சொல்கிறதாம்”. இதற்கொல்லாம் தனித்தனியாக பதில் சொல்ல வேண்டும் குசும்பு. ஆனால் சில தேவை கருதி. குலன், நந்தா, பீ.சி, நீங்கள் உட்பட்டோரை விட இந்த உலகத்தில் கெளரவ மனிதர்களாக மதிக்கப்படும் பின் வருவோர், A.M.Stoddard, Jean L’Heureux, H.G.Wells, Arthur Glyn leonard, H.A. R Gibb, George Bernard Shaw, S. S. Leeder, Anend Besait, Victor Robnsion, Dr.Julius Germanus, Wilfred Cantwell Smith, Marquis of Dfferin and Ava, Napoleon Conaparte என்போர் இஸ்லாம் பற்றி என்ன கூறுகிறார்கள் என்று கேளுங்கள். ஒரு வேளை அவர்களுக்கு பைத்தியும் என்றும் சொல்லிவிடுவீர்கள். ஏனெனில் நீங்கள் தானே எல்லாம் அறிந்தோர். இருந்தும் நீங்கள் அமைதியாக தூக்கத்துக்கு செல்ல வேண்டும் என்பதற்காக ஒருவரின் கூற்றை மாத்திரம் உங்கள் அனைத்து குழப்பங்களுக்குமான விடையாக தருகிறேன். இதோ, George Cernard Shaw சொல்கிறார், ”I’ve always held the religion of Muhammad in high estimation cecause of its wonderful vitality. it is the only religion which appears to me to possess the assimilatign capability to the changign phases of existence which can make itself appeal to every age” (குலன்) கவணித்தீர்களா? இங்கே இஸ்லாம் தன்னை மாற்றிக் கொள்வேண்டிய தேவையில்லை என்பது புலனாகுமே. இதைவிட இன்னொறு கதை சொல்லட்டுமா, கதையல்ல உண்மை என்பீர்கள், சரி இருவருக்கும் பொதுவாக உண்மைக் கதை என்போமே. அதாவது 2001 இரட்டை கோபுர தாக்கியழிக்கப்பட்ட பிறகே, ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தை எடுத்து நோக்கும் போது, அதிகமான அமெரிக்கர்ளும், ஏனைய நாட்டினரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனராம். இதை Hillary Rodman Clitnon, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் இப்படி கூறுகிறார் “Islam is the fastest-growign religion in America, a guide and pillar of stacility for many of our people” கதை எங்கே போகிறது தெரிகிறதா? ஆக ஒருவர் தன் சமயத்தை தேர்ந்தெடுப்பது அவனுடைய புத்திஜீவிதத்துடனும், ஆழ்ந்த அறிவுடனும் சம்பந்தப்பட்ட விடயம். இதற்கு கத்தி பொல்லு வாள் துப்பாக்கி மிரட்டல் தேவைப்படாது. ஆனால் நந்தாவின் அனுபவமோ வேறானது போலுள்ளது.
நந்தா எப்படி நலமாக உள்ளிர்களா? ” ஆறு வயது ஆயீஷாவை வளர்த்து, ஓன்பது வயதில் உடல் உறவு கொண்ட” என்ற உங்கள் ஆதங்கத்திற்கு இதோ என் பதில். ஆயிஷாவை இறை தூதர் முஹம்மது வளர்க்கவில்லை. அந்த சிறுமிக்கு அப்பா இருந்தார். அவர் தான் அபூபக்கர், முஹம்மதுக்குப் பின்னான முதல் கலிபா( ஆட்சி தலைவர்).
இது 1400 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம். அன்றைய மனிதனின் பெளதிக உடல் நிலை நான் சொல்ல வேண்டியதில்லை. மேலும் அந்த சிறுமி 9 வயதில் நிச்சயார்தம் பண்ணி வைக்கப்படார். அந்த துணைவர் முஹம்மது அல்ல. முஸ்லிம்களுடன் பழகிய ஒரு அந்னியர். ஒருமுறை அபூபக்கர் தன் நகரை விட்டு செல்லவேண்டும் தன் குடும்பம் சசிதம். பயணம் மிகக்கடினமானது மீள வருவது எதிர்வு கூற முடியாத நிலை. நிச்சயிக்கபட்ட பெண்னை அவரின் துணையின் அனுமதி இன்றி கூட்டிச் செல்ல முடியாது. அதே நேரத்தில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கமைய அவரை திருமண பந்தமின்றி துணையுடன் விட்டு விட்டு போகவும் முடியாது. அபூபக்கர் அந்த துணையிடம் சென்று திருமணம் பற்றி பேச அவரும், அவர் கோத்திரமும் மறுத்துவிட்டார்கள், முஸ்லிம்களுடன் கலக்க விருப்பம் மறுக்கப்ட்டது( குசும்பு போல் ஒருவராய் இருக்கவேண்டும்). திருமண முறிவு அந்த சமூகத்தில் ஒரு அவமானத்துக்குறிய விடயம்(Stigma). ஆயிஷா முஹம்மதிடம் அபூபக்கரினால் ஒப்படைக்கப்படுகிறார். ஆயிஷா சுமார் 15 அல்லது 16 வயதில் முஹம்மதுவை கரம் பற்றுகிறார். இந்த ஆயிஷாவே பெண்களுக்கு மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர், முதல் இஸ்லாமிய பெண் புத்திஜீவி. நந்தா இது 2010 இன்றும் 9 வயது குழந்தை UKயில் குழந்தை பிறப்பிக்கிறார்கள். ஸ்பெயினில் திருமண வயது 13. எந்த யுகத்தில் இருக்கிறிகள் நந்தா?
மேலும், “மற்றையவரை மதம் மாற்று, அல்லது கொலை செய் என்ற போதனையை பின்பற்றும்” என்று குறைபட்டுள்ளிர்கள். நந்தா, உங்கள் பெயரில் இருந்து, நீங்கள் சைவ பின்னணி கொண்டவர் என நினைக்கிறேன். ஆனாலும் சமயம் என்பது உங்களுக்கு ஒத்துவராத விடயம் போல் தெரிகிறது. எந்த முஸ்லீமும் உங்களிடம் மதம் மாற கேட்டார்களா? கொலை மிரட்டல் வந்ததா? உங்களுடைய மார்கம், உங்களுக்கு, அவர்களுடைய மார்க்கம் அவர்களுக்கு என்று இஸ்லாம் சொல்கிறது. சமயத்தில் வற்புறுத்தல் இல்லை என்றும் சொல்கிறது. எங்கே இந்த கொலை மிரட்டல். மீண்டும் ஒரு முறை Hillary clitnon னுடைய கூற்றை பாருங்கள். ஆக நந்தா சமயவாதியாக தன்னைக்காட்டி ஊழல் பண்ணுவோரையும், தத்தமது கலாச்சார விடயங்களை சமயத்துக்குள் புகுத்தி இதுதான் இன்ன மதம் என்று சொன்னவுடன் அந்த சமயம் அப்படியாகிவிடுமா இல்லையே?
சரி இதையாவது சொல்லுங்கள், நானா குலத்தின் அடிப்படை விவாதத்தை திசை திருப்பினேன?. நான் சமயத்தை பற்றி கதைத்ததால் தானா நீங்கள் எல்லாம் கதைக்க வெளிக்கிட்டீர்கள்? சமயம் பற்றி கதைப்பது கேவலமான விடயமா? அல்லது நான் ஏற்கனவே சொன்னது போல் இனமும், மொழியும் தான் முதன்மை பெற வேண்டும் ஆகவே அவை பற்றித்தான் கதைக்க வேண்டும் என்று ஜனநாயக மறுப்பு செய்ய யார் உங்களுக்கெல்லாம் அனுமதி தந்தார்கள்? குலனின் “கூடி இருந்து கொண்டாடி கெடுப்பது” என்ற நிலப்பாடு நியாயமானதா? குலனின் படி அது நியாயம் என்றால், அப்படித்தான் யாழ் சோனகரும் செய்தார் என்றால் அப்போது மாத்திரம் அது பிழையாகும்? அவர்கள் மிரட்டியடிக்கப்பட வேண்டும்? ஆனால் கூடியிருந்து கொண்டாடி கெடுப்பது” குற்றம் என்று நான் சொன்னால் மாத்திரம் அது எப்படி குற்றமாகும்? இது தானா ஸார் உங்கள் வாதத் திறமை? கிழித்தீர்கள் போங்கள் என்று குலனையும் அவரின் atttorney குசும்புவையும் கேட்கத் தோன்றவிலையா?
Rohan
“இந்து மன்னர்கள் போரிட்டு வெற்றி பெற்றாலும் “கொலைகள்” புரிந்தமையால் “பிரமஹத்தி” தோஷம் உள்ளவர்கள் என்றும் அவர்கள் அரச கருமங்களை விட்டு யாத்திரைகள் புரிந்து தோஷம் போக்க வேண்டும் என்பது விதி முறை” என்பது சரி அல்ல என்பது எனது கருத்து.
மன்னர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்வது ஒன்றும் செய்தி அல்லவே! பிரமஹத்தி என்பது பிராமணர்களைக் கொன்றால் மற்றவர்களுக்கு வரத் தக்க தோஷம் என்பது கதை (யார் கட்டி விட்டிருப்பர் என்பதில் யாருக்கும் குழப்பம் இருக்காதே). இராவணர் பிராமணராம், அவரை இராமர் கொன்றாராம். அதனால் இராமருக்கு பிரமஹத்தி தோஷம் பிடித்ததாம். அதற்காக இந்தியக் கரையில் கால் வைத்ததும் இராமர் ஒரு சிவன் கோயில் கட்டினாராம். அது தான் இராமேஸ்வரமாம்.
சிவனை அடி முடி தேடி பிரமனும் விஷ்ணுவும் போனார்களாம். அன்னப் பறவையாக முடி தேடிய பிரமன் முடியைக் கண்டு விட்டதாகப் பொய் சொல்ல சிவனுக்குக் கோபம் வந்ததாம். அதன் வெளிப்பாடு சிவன் பிரமனின் ஐந்தாவது தலையக் கிள்ளியதில் முடிந்ததாம். பிராமணனா பிரமன் தலையக் கொய்த தோஷம் தீர சிவன் விஷ்ணுவை வணங்க வேண்டியதாயிற்றாம்.
nantha
நிஸ்தார்:
நான் கேட்ட கேள்விகளுக்குப் பதில்களை நீங்கள் தரவில்லை. “நந்தா எப்படி நலமாக உள்ளிர்களா?” என்று கேட்டிருக்கிறீர்கள். மரண தண்டனை எனக்கும் விதித்து விட்டீர்களா?
ஆயிஷாவின் கதை நீங்கள் குறிப்பிட்டபடி “உங்கள் ஹதீசுகளில்” இல்லை. ஆறு வயதில் ஆயிஷா முகம்மது நபியிடம் அபூபக்கரினால் ஒப்படைக்கப்பட்டதாகவும் ஒன்பது வயதில் திருமணம் செய்ததாதகவும் அல்லவா உள்ளது. அபூபக்கர் ஆயிஷாவை ஒப்படைத்தாரா அல்லது விற்றாரா என்பது இன்னமும் கேள்விக்குரியது. ஒன்பது வயது வேண்டாம். பதினைந்து வயது மகளை நீங்கள் 56 வயதுக்காரனுக்கு நாலாம் தாரமாகவோ அல்லது மூன்றாம் தாரமாகவோ நீங்கள் கட்டிக் கொடுக்கத் தயாரா? நிச்சயம் செய்த பெண்ணை திருமணம் செய்ய “அன்னியர்கள்” மறுத்துவிட்டதாக குறிப்பிடுகிறீர்கள். முஸ்லிம்கள் “அந்நியர்களுடன் எப்படி நிச்சதார்த்தம் செய்வார்கள்? உங்கள் கதையில் முரண்பாடுகள் அதிகம். அபூபக்கர் வேறு ஒருவனுக்கு நிச்சயம் பண்ணிய பெண்ணை முகமதுனபிக்கு விற்று விட்டதாதாகவே நான் கருதுகிறேன்? நிச்சயம் பண்ணியவர்கள் ஏன் திருமணத்துக்கு மறுக்க வேண்டும்? தந்தை எதுக்காக மகளை “அன்னியனான” முகமதுவிடம் ஒப்படைக்க வேண்டும்? அதுசரி ஆயிஷாவுக்கு பதினைந்து வயதாக இருக்கும் பொழுது முகமதுவுக்கு பல்லு இருந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை! என்ன வயது என்று சொல்லுங்கள்! எதற்கும் உங்கள் ஹதீஸை படிக்கவும்.
அது மாத்திரமின்றி முகமதுநபி தனது வளர்ப்பு மகனைக் கொன்றுவிட்டு அவனுடைய மனைவியை அடித்துக் கொண்டு போன கதையை என்ன செய்யப்போகிறீர்கள்? மகனுடைய மனைவியைக் கூட சந்தர்ப்பம் கிடைத்தால் “மடக்கலாம்”. அது இஸ்லாத்தில் அனுமதிக்கப்படுள்ளது என்று கூற வருகிறீர்களா? ஏனென்றால் உங்கள் “சல்லல்லாஹு அலைவ சல்லம்” அதனை நடத்தியிருக்கிறார் அல்லவா?
ஸ்பெயினில் 13 வயது திருமண வயது என்று கூறும் நீங்கள் நான்கு பெண்களை திருமணம் செய்து என்ன செய்யபோகிறீர்கள்? மருத்துவ ரீதியாக நாலு பெண்களுடன் ஒரே சமயத்தில் உடலுறவினை ஒரு ஆண் மேற்கொள்ள முடியாது. அது தெரியாதா? ஒன்பது வயதில் பிள்ளை பெற்ற கதை “செய்தி” ஆனால் ஒன்பது வயதுப் பெண்ணுடன் உறவு கொள்வது இஸ்லாமிய மார்க்கம்!
இஸ்லாமிய மதத்தில் பெண்கள் “உணர்ச்சி” இல்லாதவர்கள் என்றே கருதப்படுகிறார்கள். பெண்களை விலைக்கு வாங்குவதனை “மஹர்” கொடுப்பதாகத்தான் கதை உள்ளது.
மத்திய கிழக்கில்த்தான் அடிமை வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டது. இஸ்லாம் அதனைச் சட்டபூர்வமாகியுள்ளது.
முஸ்லிமாக இருந்து இந்துவாக அல்லது கிறிஸ்தவனாக மதம் மாறினால் என்ன செய்ய வேண்டும் என்று இஸ்லாம் சொல்லுகிறது.?
இந்தியாவுக்குள் புகுந்த முஸ்லிம்கள் மற்றவர்களை எப்படி மதம் மாற்றினார்கள் என்ற வரலாறுகளை நீங்கள் படிக்கவில்லைப் போலிருக்கிறது. மாலிக் காபூர் மதுரையில் கொள்ளையடித்துக் கொண்டு போகும்போது ஐயாயிரம் பெண்களையும் கொண்டு போய் டெல்லி சுல்த்தானிடம் கொடுத்த வரலாறு தெரிந்திருக்கும் என்றே எண்ணுகிறேன்!
தலிபான்கள் “மூக்கறுத்த” கதை வந்து ஒருவாரம்தான் ஆகிறது. இலங்கையில் குருநாகல் மாவட்டத்தில் கொக்கரள்ளவில் இரண்டு மாதக் குழந்தையின் தாயை உங்கள் முஸ்லிம்கள் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். கணவன் முன்னிலையிலேயே இந்த “இஸ்லாமிய” நீதி பரிபாலனம் நடந்திருக்கிறது. முஸ்லிம் பெண் ஒருத்தி திருமணமாகுமுன் பிள்ளை பெற்றதற்கு அவள் ஒரு தாய் என்றும் பாராமல் இலங்கையிலேயே இஸ்லாமியக் கைவரிசையை காட்டியிருப்பதை “அது” உங்கள் விவகாரம் என்று விட்டுவிட முடியுமா?http://www.lankaweb.com/news/items/2010/08/11/sri-lanka-an-appeal-to-the-womens-movement-against-inhuman-treatment-of-a-young-woman-on-religious-grounds/
முஸ்லிம் ஆண்கள் மற்றைய மத பெண்களோடு உறவு வைத்திருப்பதை உங்கள் இஸ்லாம் அனுமதிக்கும். ஆனால் உங்கள் இஸ்லாமிய பெண்ணுடன் மற்றவன் உறவு வைத்திருந்தால் பெரும் பிரச்சனையோ?
மதம் மாற்று அல்லது கொல்லு என்பது உங்கள் இஸ்லாமில் சொல்லப்பட்டுள்ள விஷயம். இஸ்லாமியப் படையெடுப்புக்களின் போது நடந்த காரியங்கள் இன்றும் வரலாறாக உள்ளன. இப்போது முஸ்லிம்களால் மற்றவர்களை இந்தியாவிலோ இலங்கையிலோ அப்படி மிரட்ட முடியாது என்பது மாத்திரமல்ல அப்படி மிரட்டினால் என்ன நடக்கும் என்பது அங்குள்ள முஸ்லிம்களுக்குத் தெரியும்! ஆனால் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய இடங்களில் அந்த மிரட்டல்கள் தொடர்கின்றன.
பாகிஸ்தானில் ஒரு பெண்ணை கும்பல்களால் கற்பழிக்கும்படி இஸ்லாமிய கோர்ட் தீர்ப்பு கூறியது மறந்து போய் விட்டதோ? உங்கள் ஆதர்ச இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் நடக்கும் கூத்துக்களை இலங்கையிலும் கொண்டு வரும் உத்தேசம் இருந்தால் அதனை மறந்து விடுங்கள்!
நல்ல காலம். பெரும்பான்மை தமிழ் முஸ்லிம்கள் முகமது நபியின் கதைகளை முற்றாகப் படிக்கவில்லை. படித்திருந்தால் “இஸ்லாத்தை” விட்டு எப்போவோ ஓட்டம் பிடித்திருப்பார்கள்!
nantha
ரோஹன் பிராமணர்களைக் கொன்றால் வருவதல்ல பிரமஹத்தி. கொலை செய்பவர்களுக்கு வருவது பிரமஹத்தி என்கிற தோஷம். போரில் வெற்றி பெற்ற அரசன் கூட தோஷம் உள்ளவனே என்றுதான் இந்து மதம் சொல்லுகிறது. ஏனென்றால் ‘கொலை” என்பது பாவ காரியம்.
palli
//கிருபானந்த வாரியார் பிறக்க முன்னரே தமிழர்கள் இந்துக்களாக இருக்கிறார்கள் என்பது பல்லிக்குத் தெரியாது போலிருக்கிறது.//
அப்படியான ஒரு சமயத்தையோ அல்லது மதத்தையோ யாரால்தான் என்ன செய்யமுடியும்; நீங்கள்தானே அப்படி அவர்களும் இப்படி இவர்களும் பண்ணிபோடார்கள் என சத்தம் போட்டுவிட்டு பல்லிக்கு கேள்வியா.?? எந்த மதத்தையும் யாராலும் ஒன்றும் செய்யமுடியாது ஆகவே அந்த பயத்தை விட்டு விடுங்கள் நந்தா;
//பல்லி /அதேபோல் நந்தா கிருபானந்தாவாரியாரின் உதவியுடன் தான் இந்துவாகவே என்றும் மார் தட்டுவார் அப்படியாயின் குலன் என்ன கத்தோலிக்கரா?/ நல்லகருத்துகளைக் கூறிய உங்கள் பின்நோட்டத்தில் இருந்து இப்படி ஒரு கேள்வியும் காணப்பட்டது. நான் ஏற்கனவே எழுதியது போல்
மொழி – தமிழ்
இனம் – இனமும் தமிழ்
மதம் – மனிதமதம்//
குலன் அவர்கள் இருவரும் ஒரு தலைப்புடன் களம் இறங்கியதால் மூன்றாவது மதம் ஆளின்றி நந்தாவால் தாக்கபடும் என்பதால் ஒரு வேடிக்கையாய் தான் அப்படி எழுதினேன்; நீங்கள் மனிதமதம் என்பது எனக்கு முன்பே தெரியும்; அதனாலேயே இந்த மத ஊர்வலம் வேண்டாம் என்றேன், நந்தாவுக்கு தெரிந்த விடயம் மதம் மட்டுமே;
palli
தயவுசெய்து ஒரு மதத்தின் நோன்பு பெருநாள் (ரம்தான்)நடக்கும்போது தவறான வார்த்தைகளை பாவிக்காதீர்கள்? அது நாகரிகமான செயலும் இல்லை, அதைவிட பலரது மனதை புண்ணாக்கி விடும்:
மொகமட் உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் பல்லி குடும்ப ரமழான் நோன்பு வாழ்த்துக்கள்.
இப்படி வாழ்த்துவது சரியோ தெரியவில்லை; பிழையாயின் மன்னிக்கவும் ,வாழ்த்த தெரியாவிட்டாலும் மனதார வாழ்த்துகிறோம்:
பல்லி குடும்பம்;
nantha
பல்லியின் “ஞானோபதேசங்கள்” விபரம் உள்ளவர்களுக்குத் தேவையற்றவை. மேலும் கள்ளகடத்தல்காரர்களை ஏறி வந்த ஏணி என்று புகழ்ந்த பல்லிக்கு “நாகரீகம்” பற்றிப் பேசுகிறார்? பாதிரிகளின் ஆதரவுகளாக இருந்து பல்லி இந்துக்களுக்கு எதிராக புளுகியதெல்லாம் மறந்து போனதோ? இந்துக்களை எப்போதும் புண்படுத்தலாம் என்பது பல்லி போன்றவர்களின் மாத்திரமல்ல பாதிரிகளின் வேதாந்தமும் ஆகும். “தேசம்நெட்” நாளும் கோளும் பார்த்து எழுத வேண்டும் என்று கட்டளை போட்டதாகத் தெரியவில்லை. எனவே பல்லி தன உபன்யாசங்களை “வீட்டில்” பயன்படுத்துவது நல்லது!
நந்தா வடுகர் என்பது கோவியரின் செல்ல பெயர்;//
கோவியருக்குச் “செல்லப்பெயர்”? பல்லி கொடுத்ததா? அப்போ “உண்மைப் பெயர்” என்னவோ?
PALLI
நந்தா உங்களை போல் செத்த பாம்பு அடிப்பதில் பல்லிக்கு உடன்பாடு இல்லை; பல்லி தேசத்தில் என்ன கிழித்தது என்பதை இத்துபோன சமாசாரங்களை தேடும் சில மணி துளியாவது பார்க்கவும்;
//பல்லி கொடுத்ததா? //
இதை நான் சொல்லாவிட்டால் தாங்கள் வடக்கே இருந்து கோவியர் வந்ததால் அவர்களை வடுகர் என அழைப்பதாக நந்தாவின் முன்னோர்கள் கூறியதாக ஒரு புதுகதை சொல்லுவீர்கள். நீங்கள் யாரோ சொல்லியதை உங்களது அறிவாக கதைவிடும்போது பல்லி தான் பார்த்ததை அனுபவத்தை சொன்னால் வலிக்குதா??
//ஞானோபதேசங்கள்” விபரம் உள்ளவர்களுக்குத் தேவையற்றவை. :://
நானும் நந்தாவுக்குதானே சொன்னேன்; விபரம் உள்ளவர்களுக்கு சொல்லும் அளவுக்கு பல்லி விபரம் தெரியாதா ஆசாமியல்ல;
//கள்ளகடத்தல்காரர்களை ஏறி வந்த ஏணி என்று புகழ்ந்த பல்லிக்கு “நாகரீகம்” பற்றிப் பேசுகிறார்? //
எவர்? அவர் ?எப்போ? இது??
Kulan
நிஸ்தார்! மாட்டைப்பற்றி எழுது என்றால் மாட்டை மரத்தில் கட்டிவிட்டு மரத்தைப்பற்றி எழுதியது நானா நீங்களா? இந்தப் பழமொழி உங்கள் ஊரில் அல்ல எல்லா ஊரிலும் உள்ள ஒன்று. என்கட்டுரையில் ஒரே ஒரு வரிதான் எழுதியிருந்தேன். போராட்டம் இஸ்லாமியர்களில் இருந்தும் வெடிக்கலாம் என்று. வெடிக்கலாம் என்பது வெடிக்கும் என்று அர்த்தம் ஆகாது. அந்த வரிக்காக என் முழுக்கட்டுரையையும் திசைமாற்றியது நீங்களே. நீங்களே கேள்வியையும் கேட்டு பதிலும் சொல்லியிருக்கிறீர். உங்கள் பின்னோட்டங்களைப் பார்க்கும் போது தாங்கள் குழப்பிப்போய் இருக்கிறீர்கள் என்று புரிகிறது. எதற்கும் குரானை எடுத்து சமய அடிப்படைவாதிகள் போல் பதில் சொல்கிறீர்கள். எமக்கு குரானில் இருந்து விளக்கம் தேவையில்லை நான் குரானின் அடிப்படைவாதற்தை முற்றாக வெறுக்கிறேன்.
மனிதகுலத்துக்காக வந்தது சமயம் என்கிறீர்கள் அது மனிதகுலம் இருக்கும் வரை இருக்கும் என்றீர்கள். சமயம் சமயத்துக்கு ஏற்றவாறு அமைந்திருக்க வேண்டும். ஆனால் உங்களது மதம் மதம் பிடித்தல்லவா உலகெங்கும் திரிகிறது. கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு என்றும் இஸ்லாமியர்கள் புத்திசாதுரியத்துடன் செயற்பட்டார்கள் என்றீர்கள். இதனூடாக நீங்கள் சொல்லவருவது இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் படுமுட்டாள் என்றுதானே. உங்கள் மதத்தின் புத்திசாதுரியத்தின் விறுத்தம் உலகமே அறிந்து கொண்ட விடயம். இதில் எனது விளக்கம் தேவையில்லை.
”உறவாடிக் கெடுப்பது” பற்றி நக்கலாகவும் நளினமாகவும் எழுதியிருந்தீர்கள். இதை உண்மையில் பயன்படுத்தவது முஸ்லீங்களே. மனித மதம் என்ற ஒன்று இல்லை என்றீர்கள். இப்படியான குறியீட்டுப் பதங்களையே விளங்கிக் கொள்ள முடியாத ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதியிடம் இருந்து மனிதத்தை எப்படி எதிர்பார்க்க முடியும். மதங்கள் ஆத்மஈடற்றத்தக்கான வாழ்வியல் கொள்ளை கோட்பாடுகளைக் கொண்டது. மனிதம் மனிதத்தன்மையை அதாவாவது மனிதனை மையப்படுத்திய கொள்ளை கோட்பாடுகளைக் கொண்டது. இதனால்தான் மதம் எதையும் பின்பற்றாது மனிதத்தை முன்னிறுத்திய காரணத்தினால் என்மதம் மனிதம் என்றேன். கடுமையான பின்னோட்டத்தை உங்களுக்கெதிராக எழுதும் போது மனிதம் அழுதது. ஆனால் மருந்துகசப்பு என்பதற்காக ஊட்டாமல் விட இயலாது
நிஸ்தார்! உங்களுக்கு இஸ்லாத்தைத்தவிர வேறு எதுவுமே விளங்காதா? ஒருதாளுக்கு இரண்டு பக்கம் என்று நான் எழுதியதற்கு சம்பந்தமில்லாத வியாக்கியாணங்களை எழுதியுள்ளீர்கள். ஒரு தாளுக்கு குறைந்தது இரண்டு பக்கங்களான முகங்கள் இருக்கும் போது ஒரு பிரச்சனைக்கு நிச்சயம் பலமுகங்கள் உண்டு. உமது கருத்துப்போல் எல்லாத்துக்குள்ளும் இஸ்லாத்தை குளைத்து அடிக்க நாங்கள் தயாராக இல்லை. எதற்கும் மாற்று வழிகள் உண்டு. தயவுசெய்து கருத்துக்களை விளங்கிக் கொள்ளுங்கள். உங்களது பாணியில் எனக்கும் இடக்கு முடக்காக எழுதமுடியும் என்பதை மறந்து விடவேண்டாம். நாங்கள் தான் முஸ்லீங்களையும் தமிழர் என்று கொண்டினோமே தவிர உறவாடி முதுகில் குத்துவது முஸ்லீங்கள் தான். முஸ்லீங்களுடன் சிங்களவர்கள் கலவரம் செய்தபோது தன்தலையை நுளைத்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளிவைத்து இன்று தமிழர்களுக்கு இவ்வளவு அழிவுக்கும் காரணமாகிப்போன சேர் பொன் இராமநாதன் போன்றவர்களை நீங்கள் அறிந்திருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டீர்கள். குறைந்தபட்சம் தமிழர்களுக்கு நன்றிக்கடனுடையவராக இருந்திருப்பீர்கள்.
PALLI
//சேர் பொன் இராமநாதன் போன்றவர்களை நீங்கள் அறிந்திருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டீர்கள்.//
என்னடா இது நாமறிந்த குலனா இப்படி எழுதுகிறார் என எண்ணியபோது அருமயான ஒரு வரியில் நாமும் தவறி உள்ளோம்(இந்து) அதனால் அந்த தவறை உனர்ந்து செயல்பட முனைகிறோம் என்பது போல் சுருக்கமாய் சுருக்கென ஒருவார்த்தை சொல்லி மீண்டும் குலன் உங்களை சமூகவாதியாக காட்டியுள்ளீர்கள். நீங்கள் எழுதாவிட்டால் இன்றய எனது பின்னோட்டத்தில் ராமநாதனே நாயகனாக அதுவும் நந்தாவுக்காக எழுதியிருப்பேன், மொகமட் குலன் ஏன் இங்கு இராமநாதனை கூட்டிவந்தார் என்பது தங்கள் பல கேள்விகளுக்கும் ஒரே பதிலைதரதான் என்பது என் கருத்து,
தொடரும் பல்லி,,,,
Kusumbu
/குசும்பு, எனது அறிமுகத்தில் சொல்லிருந்தேன் அல்லவா “மன வளர்ச்சி” என்று அது உங்கள் வயதுக்கேற்ற வகையில் இல்லை என்றே தோன்றுகிறது/
வயதையும் மனவளர்ச்சியையும் தொடர்பு படுத்திக் கதைக்கும் உங்களுக்கு குறைந்தது எனது வயது உங்களுக்குத் தெரியவே சந்தர்ப்பம் இல்லை. அதையும் மீறி மனவளர்ச்சியைப் பற்றிக் கதைக்கிறீர்கள்.
/அப்படியே சோமாலியா பக்கம் சென்று ஆண்னுக்கு விருத்தசேதனம் செய்வது அதே பாணியில் பெண்களுக்கு அவர்களின் அந்தரங்க பாகங்கள் தைக்கப்படுவதும் என்று நீண்ட குற்றச்சாட்டுகள். ஆண் விருத்தசேதனம் பற்றி வைத்தியர்களிடம் கேளுங்கள் ஒரு வேளை அவர்களின் உபதேசம் உங்களுக்கும் தேவைப்படும்/
விருத்தசேதனம்- அல்லாவே பெரியவன் அல்லாவைத்தவிர யாரையும் பணியோம் என்று மதம்பிடித்தவர்கள் பின்பு ஏன் அல்லாவால் படைக்கப்பட்ட குறிகளைக் கத்தரிக்கிறிர்கள்.? பாலியல் பலாற்காரம் என்பது பிறந்த உடனேயோ பாலகர்களில் பாய்கிறது. தன்னைக்காக்க தன்வலியைச் மற்றவர்களிம் கூறமுடியாக பிஞ்சுப்பாலகர்களின் குறிஅறுக்கும் மதம் உலகில் இருக்காமல் விடுவதே மேல். வைத்தியர்கள் விஞ்ஞானத்திடம் கேட்குமாறு கட்டளை இட்டீர்கள். குறி அறித்தவர்களுக்கே எச் ஐ வி 30வீதம் கூடப்பரவியுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானக் கலந்துரையாடிலில் உலகசுகாதார அமைப்பு (கூ) வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் பெரும் பதவி வகிப்பவர்கள் யூதர்கள் அவர்களின் மருத்துவக் கூற்று அல்லாவின் கூற்றுப்போல் அமைவது வழக்கம். அவர்களும் குறியறுப்பவர்கள் தான். இவர்கள் பரப்பி விட்ட பரப்புரையே சுத்தம் துப்பரவு தொற்றின்மை என்பன. குறியறுப்பதால் தொற்றுக்கள் ஏற்படாது என்பதற்கான எந்தக்காரணமும் கிடையாது. பலாற்காரம் என்பது மத்திய கிழக்கு மதங்களில் பாலர்களிலேயே ஆரம்பிக்கப்படுகிறது.
Kulan
//என்னடா இது நாமறிந்த குலனா இப்படி எழுதுகிறார் என எண்ணியபோது அருமயான ஒரு வரியில் நாமும் தவறி உள்ளோம்(இந்து) அதனால் அந்த தவறை உனர்ந்து செயல்பட முனைகிறோம் என்பது போல் சுருக்கமாய் சுருக்கென ஒருவார்த்தை சொல்லி மீண்டும் குலன் உங்களை சமூகவாதியாக காட்டியுள்ளீர்கள்//
பல்லி! நான் உங்களினூடாக என்கட்டுரைப் பின்னோட்டக்காரகள் அனைவரிடமும் மன்னிப்புக கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். காரணம் நிஸ்தார் போன்ற அடிப்படைவாதிகளுக்கு எமது மொழி வளக்கம் புரிவதில்லை. அதை அவர்களின் மொழிவடிவத்திலேயே எழுதவேண்டி இருக்கிறது. சமூகநலனுக்காகப் பேனா தூக்கிய அனைவரும் அடிப்படைவாதத்ததை எதிர்த்தே ஆகவேண்டும் காரணம் மனிதனுக்காக உருவானது என்று கூறப்படும் மதங்கள் அனைத்தும் மனித்தை நடைமுறையில் சில மனிதமறுப்பைச் செய்கின்றன. அதனால் மதத்தில் மனிதத்துக்கு எதிரானவற்றை சுட்டிக்காட்டுவதற்கு மதங்கள் இடம் கொடுக்காது துப்பாக்கியையோ மிரட்டல்களையோ செய்தால் அதற்கெதிராக எமது பேனைகள் திருப்பப்பட வேண்டியது அவசியம். 900 ஆண்டுகளுக்கு முன் சொன்ன நபியை நம்பும் மதம் விஞ்ஞானம் கண்ணால் காட்டுகிற உண்மைகளை நம்ப மறுக்கிறது. தயவு செய்து குலனை மன்னித்துக் கொள்ளுங்கள் நான் என்றும் இப்படியான கடுமையான வார்த்தைகளைப் பாவிப்பதில்லை. நம்பிக்கைதான் வாழ்க்கை அது தன்னம்பிக்கையாக இருக்கட்டும். ஈரானிய அடிப்படைவாதப் தலைவர் ஒரு ஐக்கிய நாடுகள் மகாநாட்டில் அடிப்படைவாதத்தை முன்னிறுத்தி உரையாற்றினார். எத்தனையோ நாட்டுமக்கள் அங்கு கூடியிருந்தார்கள். எங்கு எதை எப்படிப் பாவிப்பது என்று புரியவில்லை இந்த அடிப்படைவாதிகளுக்கு. எனது மொழிவடிவில் நிஸ்தாருக்கு விளங்கப்படுத்துவது என்பது மிககடினமானது. யாராவது முடிந்தால் நிஸ்தாருக்குப் புரியுமாறு உண்மையைப் புலப்படுத்துங்கள்.
Kulan
/இராவணர் பிராமணராம் அவரை இராமர் கொன்றாராம். அதனால் இராமருக்கு பிரமஹத்தி தோஷம் பிடித்ததாம். அதற்காக இந்தியக் கரையில் கால் வைத்ததும் இராமர் ஒரு சிவன் கோயில் கட்டினாராம். அது தான் இராமேஸ்வரமாம்.// ரோகான்!
இராமன் இலங்கைக்கு தேவி சீதாபிராட்டியை மீட்கப்போகும் போது எந்த இடையூறும் வராது காத்தருள வேண்டும் என்று வேண்டி அமைத்த மண்சிவனே இராமேஸ்வரம் என்று நான் வாசித்திருக்கிறேன். இராமன் ஈஸ்வரனாகிய சிவனை வணங்கிதால் அந்த இடமும் கோவிலும் இராமேஸ்வரம் என்றானது. இந்துமதத்திலும் பலமித்துக்கதைகள் உண்டு. இப்படி எல்லாமதங்களிலும் உண்டு.
நிஸ்தார்! /எங்கே நான் இனத்தை மதமாக அல்லது மதத்தை இனமாக வரையறுத்தேன்.// உமது தரவை பாருங்கள்
/இனம்: சோனகர்
தாய் மொழி: தமிழ்
சமயம்: இஸ்லாம்/
சமயம் அல்ல மதம் இஸ்லாம். வரலாற்று ரீதியாக சோனகர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியுமா? இலங்கையில் இஸ்லாம் என்ற மதத்தைத் தழுவியவர்கள் எல்லோரும் சோனகர்கள் இல்லை. உலகில் பலநாடுகளில் முஸ்லீம்: இஸ்லாம் என்பது மதம் மட்டுமல்ல இனம் என்றே அவர்கள் நம்புகிறார்கள். மத்தியகிழக்கில் இருந்த மதம் இஸ்லாம் என்பதால் மத்திய கிழக்கை உதாரணமாக எடுக்கிறேன். ஈராக்கில் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும். மொழிவாரியாகவே இனம் கணிக்கப்படுகிறது. குறுடிஸ்ய மொழியைப் பேசுபவர்கள் குறுடன் என்றும் மற்றயவர்கள் அராபியர் என்றுமே கருதப்படுகிறது. லெபனான் பாலஸ்தீனர்கள் கூட தம்மை அராபியராகவே கருதுகிறார்கள். ஈரானியர்கள் பர்சிய மொழிபேசுவதால் பேசியர் என்றே கருதப்படுகிறார்கள். இலங்கையிலுள்ள முஸ்லீங்கள் சிலர்மட்டுமே தம்மைச் சோனகர்கள் என்று சொல்வார்கள். பெருந்தொகையானவர்கள் தம்மை இஸ்லாமியா என்றே: முஸ்லீம் என்றே சொல்கிறார்கள். உலகில் பெரும்பான்மையான இனங்கள் மொழிவாரியாகவே வகுக்கப்பட்டுள்ளது என்பதை மீண்டும் உறுதியாகக் கூறுகிறேன். சோனகர்கள் வியாபார ரீதியாக இலங்கைக்கு இறுதியாக வந்தவர்கள்.
Kulan
/குலன்) கவணித்தீர்களா? இங்கே இஸ்லாம் தன்னை மாற்றிக் கொள்வேண்டிய தேவையில்லை //
நீங்கள் யார் யாரோவை சாட்சிக்கு இழுக்கலாம். எப்பொருள் யார் யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு. இஸ்லாம் தன்னை மாற்றிக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லாவாறு இருக்கலாம். மாற்றக்களைத்தாங்கம் சகிப்புத்தன்மை இஸ்லாத்துக்கோ முஸ்லீம்களுக்கோ இருப்பதாகத் தெரியவில்லை. அதற்கு முரணான சாட்சிகளே எம்மிடம் உள்ளன.
/அதாவது 2001 இரட்டை கோபுர தாக்கியழிக்கப்பட்ட பிறகே ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தை எடுத்து நோக்கும் போது அதிகமான அமெரிக்கர்ளும் ஏனைய நாட்டினரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனராம். இதை ர்டைடயசல சுழனஅயn ஊடவைழெnஇ அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் இப்படி கூறுகிறார்//
இப்படி கில்லறி கிளிங்டன் கூறினார் என்று நம்பி இங்கே எழுதியதில் இருந்து தெரிகிறது இஸ்லாமியர்கள் பலாற்காரத்தினால்தான் எதையும் சாதிக்க விரும்புகிறார்கள். பலாற்காரம் பாலகராய் இருந்ததில் இருந்து பழகிப்போன ஒன்றுதானே. இதை இஸ்லாம் முழுமையாக அனுமதிக்கிறதே. ஏன் கில்லறி மாறவில்லை? இந்தக்கேள்வியைக் கேட்கவில்லையா?
/இதற்கு கத்தி பொல்லு வாள் துப்பாக்கி மிரட்டல் தேவைப்படாது. ஆனால் நந்தாவின் அனுபவமோ வேறானது போலுள்ளது.//
இந்திய உபகண்டத்தில் ஒருகையில் வாளுடனும் மறுகையில் மனமற்ற மதப்புத்தகமான கூறாரனோடும் வீட்டுவாசல்களைத் தட்டி கொன்று குவித்ததை என்னவென்று சொல்வது? இஸ்லாமின் சாத்வீகம் இதுதானா? ஒத்தொமான் அரசால் இஸ்லாத்தின் பெயரால் அழிக்கப்பட்ட ஆத்மாக்களை எண்ணித்தான் பார்க்க முடியுமா? இந்த மதம் தோன்றிய மத்திய கிழக்கில் என்று அமைதி இருந்த காலமே மிக மிக் குறைவு.
//முஸ்லிம்கள் “அந்நியர்களுடன் எப்படி நிச்சதார்த்தம் செய்வார்கள்? உங்கள் கதையில் முரண்பாடுகள் அதிகம்//
நந்தா நிஸ்தாரைப் பற்றி கூறிய இந்த உண்மையை பின்நோட்டத்தில் பலர் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். நந்தா முஸ்லீங்களைப் பற்றியம் இஸ்லாத்தைப் பற்றியும் இவ்வளவு அறிந்த வைத்திருக்கிறீர்களே. இஸ்லாமியர்களைப் பார்த்து பாவப்படுவது உண்டு. கண்மூடித்தனமான நீதியற்ற விடயங்களை கூறான் சொல்கிறது என்பதற்காக முழுமையாக ஏற்கிறார்களே என்று வேதனைப்படுவதும் உண்டு. ஆண்களைவிடச் சனத்தொகையில் அதிகமுள்ள இஸ்லாமியப் பெண்களால் ஏன்போராட முடியவில்லை என்று ஆதங்கப்படுவதும் உண்டு. குழந்தையாக இருக்கும் போதே மூளைச்சலவைக்கு உள்ளாகிறார்கள். ஆண்செய்யும் அநீதிகளை தட்டிக்கேட்க கூறானை அழைத்தால் அதுவும் பெண்ணுக்குப் பாதகமாகவே இருக்கிறது. இந்த இஸ்லாமியப் பெண்களுக்கு ஈடேற்றமே இல்லையா? தேசத்தை நோக்கியும் ஒரு கேள்விக்கனையைத் தொடுக்க விரும்புகிறேன்: மக்கள் மனிதம் சமூகம் என்று நாம் பார்க்கும் போது இந்த இஸ்லாத்துப் பெண்களை போராட்ட சக்திகளாக வளர்த்தொடுப்பது எப்படி இஸ்லாத்தின் வன்மையான அடிக்கு முறைகளை துவம்சம் செய்வது எப்படி என்று சிந்தனைகள்: எழுத்துக்கள்: படைப்புக்களை வெளிக்கொண்டர முயற்சிப்பீர்களா? ஆண்டாண்டு காலமாக புரையோடிப்போய் கிடக்கும் ஒரு சமூகப்பிரச்சனை இது. முக்கியமாக பெண் எனும் வர்க்கத்தையே முடங்களாக்கி பிள்ளைப்பேறும் இயந்திரங்களாக்கி வைத்திருக்கும் இஸ்லாம் கண்டிக்கப்பட வேண்டியதே. நந்தாவுக்கு இஸ்லாம்பற்றி அறிவு இருப்பதனால் நந்தா ஏன் நீங்கள் ஒரு கட்டுரை எழுதக்கூடாது. வாசிப்பன் ஒருவனாவது என்றோ ஒருநாள் சிந்திப்பான் அல்லவா.
S.Jeyakkumar
குலன் அவர்கட்கு
இக்கட்டுரை விளங்காதவர்களுக்கும் விளங்கக்கூடிய நடையில் தகுந்தநேரத்தில் இடித்துரைப்புக்களுடன் எழுதியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.தங்கள் சுயநலத்திற்காக அடுத்தவன் வீட்டுப் பிள்ளைகள் தீக்குளிக்க வேண்டும் சாகவேண்டும் என அலையும் பணம் பறிக்கும் கூட்டம் இப்பொழுது புலம்பெயர் தேசத்திலேயே அதிகமாக உள்ளனர்.தங்களினதும்(குலன்) பிறரினதும் எழுத்துக்கள் தேசம்நெற் ஊடாக பிறர் உயிர்களைக் காக்கட்டும்.
nantha
தங்கத்துரை, குட்டிமணி பற்றி தேசம்நெட்டில் வந்த ஒரு கட்டுரையில் எனது பதிலுக்கு பல்லி “கள்ளக்கடத்தல்காரர்களின் வள்ளம் மூலம் தான் தப்பியதாகவும்” எழுதி அவர்களை ஏறி வந்த ஏணி என்று எழுதியதையும் அதற்குள் மறந்து போயிருக்க முடியாது.
nantha
குலன்”
யூதம், இஸ்லாம், கிறிஸ்தவம் என்பன ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று முன்னர் நான் குறிப்பிட்டது பற்றி சில விபரங்கள் தரலாம் என்று எண்ணுகிறேன்.
யூதர்களும் முஸ்லிம்களும் பன்றியை மதக் காரணங்களுக்காக உண்பதில்லை. இரு மதத்தினரும் “குறியறுக்கும்” தொழிலை மதக் கடமையாகக் செய்கிறார்கள்.
பெண்கள் விஷயத்தில் யூதமும், இஸ்லாமும் ஒத்த கருத்துக்கள் உள்ளவை. அதிலும் இஸ்லாம் பெண்களை ஒட்டகத்திலும் கீழாகவே மதிக்கிறது. யூதர்கள் பெண்களை “பொருள்” சேர்க்கும் எந்த நடவடிக்கைக்கும் பயன் படுத்த வேண்டும் என்கிறார்கள். முஸ்லிம்கள் ஆறு வயது பெண் குழந்தைகளை “பாலியல்” தேவைகளுக்குப் பயன் படுத்தலாம். ஆனால் யூதர்களின் “தல்முட்” மூன்று வயதுக்கு மேற்பட்ட பெண்களை “பாலியல் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம் என்று சொல்லுகிறது. அப்படி செய்யும் பொழுது அந்த சிறுமிக்கு ஏதாவது “காயங்கள்” வந்தால் இருபது காசுகள் கொடுத்தால் சரி என்கிறது.
முஸ்லிம்கள் பெண்களை “பொருளாதார வசதிகளுக்கேட்ப “பட்டிகளில்” மாடுகள் அடைத்து வைப்பது போல வைத்திருக்கலாம் என்கிறது. அங்கு “கணவன்” என்பவனை விட “உரிமையாளன்” என்பதே பொருத்தமாகிறது. அவன் கேட்ட நேரத்தில் படுக்கைக்கு வரவேண்டும் என்பது இஸ்லாமிய விதி. அப்பெண்களில் யாராவது வேறு ஆண்களோடு தொடர்பு கொண்டால் அவளுக்கு மரணதண்டனை என்பதும் விதி. அப்பெண்கள் மாத்திரமல்ல வேறு எந்தப்பெண்ணும் தன்னிஷ்டப்படி “காதல்” கொள்ள முடியாது. தாங்களும் இஸ்லாமியர்கள் என்று நினைத்து சவுதியில் காதல் வயப்பட்ட பல பாகிஸ்தானிய, இந்திய ஆண்களின் தலைகள் கொய்யப்பட்ட கதைகள் இப்போதும் பசுமையானவை.
முஸ்லிம்கள் இந்துக்களின் சாதிப்பிரச்சனை பற்றிக் குரல் எழுப்புவது வழக்கமானது. ஆனால் சவூதி அரேபிய முஸ்லிம் பெண்களை மற்ற முஸ்லிம்கள் காதல் கொள்ளவும் முடியாது. திருமணமும் செய்ய முடியாது. கதைத்தாலே தலை கொய்யப்படும்.
யூதர்கள் பெண்களை மற்றைய ஆண்களோடு “பணம்” சம்பாதிக்கும் நோக்கத்துக்காக அனுப்பலாம் என்று நம்புகிறார்கள். பதவிகள், பட்டங்கள் பெறுவதற்கும் அவர்களை உபயோகிக்கலாம். மோனிகா லுவின்ச்கி கதை ஒரு உதாரணம். இராக்கின் அணு விஞ்ஞானி “மடக்கப்பட்டது” ஒரு பெண் மூலமே என்பதும் அதனை வைத்து மிரட்டியே இராக்கின் அணு உலை விபரங்களைத் திரட்டி அதனை யூதர்கள் அழித்தார்கள். யூதர்களால் பயிற்ரப்பட்டு கத்தோலிக்கரின் கட்டுப்பாடில் இயங்கிய புலிகளும் இந்த விளையாட்டை செய்தார்கள் என்பது இப்போது வெளியாகும் செய்தி. எந்த நாசத்தையும், அழிவையும் புரிந்து லாபம் அடைய வேண்டும் என்பது இந்த பாலைவனத்து மதங்களின் கோட்பாடாகும்.
முஸ்லிம் நாடுகள் உருப்படாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் கிறிஸ்தவர்களின் செல்வாக்கு இன்னமும் நிலவுவது அந்த நாடுகளின் உபத்திரவங்களுக்குக் காரணமாகிறது.
இலங்கையில் புத்தமதமும், இந்து மதமும் பெரும்பானமையாக இருந்தும் முன்னைய ஆட்சியாளர்களான கிறிஸ்தவர்களின் புகுத்திய பழக்க வழக்கங்களிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார்கள்.
சீனர்கள் வெளிநாட்டுத் தொல்லைகளிலிருந்து காப்பாற்ற புத்தமதமும், சென் யாட் சென்னின் சிந்தனைகளும் கை கொடுக்காது என்பதறிந்து மதங்களை முற்றாக விலக்கியுள்ளனர்.
எனவே பொது வாழ்வு என்பது மதம் சாராத ஒரு அரசியலாக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
வெள்ளையர்களும் கிறிஸ்தவ சமயத்தினை எங்கள் நாடுகளில் பயன்படுத்தி லாபம் காண முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய நாடுகளில் மதவாதிகளின் மூக்கைக் கூட நுழைய விடுவதில்லை. கனடா ஒரு உதாரணம்.
எனது எழுத்துக்களில் இந்துக்களுக்கு சார்பாக எழுதுவதாகப் பலர் கூறக்கூடும். இந்து மதம் மாற்றங்களை உள்வாங்கும் சக்தியுள்ளது. மற்றைய மதங்கள் மாற்றங்களை விரும்புவதில்லை. மற்றவர்களை மாற்றவே விரும்புகின்றன.
Kulan
எஸ் ஜெயகுமார்! உங்களது பின்னோட்டத்தை வாசித்தபோது மனம் அமைதியடைந்தது. மேலும் உங்களைப்போன்ற கட்டுரையின் கருப்பொருளின் கண்ணாயிருக்கும் நல்வாசகர்களுக்கு எமது பின்நோட்டங்கள் ஏமாற்றமாக இருந்திருக்கும் என்பது திண்ணம். மற்றவன் பிள்ளையை தீக்குள் தள்ளிவிடும் நிகழ்வுகள் புலத்தில் மட்டுமல்ல நித்திலும் போதியளவு நடந்தேறிவிட்டது. சிறிது சிந்தித்துப்பாருங்கள் மற்றவன் பிள்ளையை கரும்புலி என்று குண்டுடனும் முழுப்புலிக்குட்டிகளுக்கு கழுத்தில் சயனைட்டுத்தாலி கட்டியனுப்பிய புலிப்புரிசனும் எப்படிச் செத்தார்கள். ஏன் இவர்களால் சயனைட்டு அடிக்க முடியவில்லை. சரி குண்டைக்கட்டி தாமாகச் சிதறியிருக்கலாமே. ஏன் சரணடைந்தீர்கள்? சிங்கள அரசு சிலவேளை உலகநாடுகளிடம் ஒப்படைக்கும் இன்னும் சிலநாட்கள் வாழலாம் என்று நம்பாசைதானே. இவர்களால் அழிக்கப்பட்ட நாட்டையோ மக்களையோ பொருளாதாரத்தையோ எண்ணிப்பார்த்தார்களா? தாமாகவே சிதறியிருந்தால் நாமே மலர்வளையம் வைத்திருப்போம். ஒவ்வொரு கரும்புலிக் குழந்தைகளையும் குண்டு கட்டி அனுப்புவற்கு முன் சேர்ந்திருந்து உணவருந்தி நீங்கள் போங்கள் நான் பின்னாலே வருவேன் என்று சொல்லித்தான் அனுப்புவார் பிரபாகரன். அந்த வீரக்குழந்தைகளை; முன்னால் கோழையாக பேடியாக மண்மண் என்று மனிதத்தைக் கொன்றவனுக்கு மண்ணால் அதாவது சேற்றால் அபிசேகம் பண்ணி விட்டார்கள் இராணுவத்தினர்.
இந்தச் சிவந்தன் என்ற இளைஞனின் ஆர்வம்: உத்வேகம்: பலம்: ஆத்மபலம் என்பற்றுக்கு நான் தலைசாய்கும் வேளை இந்த இளைஞனின் பலமனைத்தையும் ஒரு பொருட்டாக நினைக்காது ஏதாவது செய்து புலத்து மக்களுக்கு சோக்காட்ட நினைத்தார்களே தவிர உலகமக்களிடையே அரசியல் தலைமைகளிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்துமாறு எதுமே செய்யப்படவில்லை என்பது என்கவலை. நிச்சயமாக உங்களின் ஆதங்கமும் அப்படித்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன். உலகின் உன்னதமான போராட்ட வடிவங்களை முழுமையாக மழுங்கடித்தது புலிகளும் இந்தியர்களுமே. உன்னதமான உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்து கெரில்லாப் போராட்டம் வரை சிவந்தனின் நடைப்பயணம் உள்ளீடாக போராடும் சக்திகளை நாசமறுத்தது இவர்களே.
PALLI
குலன் உங்க கட்டுரைக்கு 100ஆவது பின்னோட்டமாக பல்லியின் இந்த பின்னோட்டம் அமைகிறது, இருப்பினும் கட்டுரையை விட்டுவிலகி நாம் போவதாகவே எனக்கு ஒரு நெருடல் உண்டு, ஆனாலும் சிலரது கேள்விக்கு பதில் அளிக்காவிட்டால் என் பின்னோட்டம் கேலியாகி விடும் என்பதால் முடிந்த மட்டும் கட்டுரையுடன் அணுகி பதில் கொடுக்கிறேன்; நடைபயணத்தை விட இங்கே பின்னோட்ட வேகம் அதிகமாகவே உள்ளது, வாழ்த்துக்கள்.
//கட்டுரையில் எனது பதிலுக்கு பல்லி “கள்ளக்கடத்தல்காரர்களின் வள்ளம் மூலம் தான் தப்பியதாகவும்” எழுதி அவர்களை ஏறி வந்த ஏணி என்று எழுதியதையும் அதற்குள் மறந்து போயிருக்க முடியாது.//
நந்தா புலி என சொல்லிவிட்டு இங்கே குட்டிமணி தங்கத்துரையை சாட்சிக்கு கூட்டி வருவது தவறல்லவா?? உங்கள் பார்வையில் அவர்கள் கள்ள கடத்தல்காரர் எனக்கு அப்படி இல்லை, காரனம் நான் இன்று மிருகங்களிடம் இருந்து உயிர்தப்பி வாழ பல மனிதர்கள் (உங்க பார்வையில் கடத்தல்காரர்) உதவி உள்ளனர், புலம்பெயர் தேசத்தை இன்று வசதியான வாழ்வு என அலங்கரிக்கும் பலரை (இன்றுவரை ) நீங்க சொல்லும் கடத்தல்காரர்கள் தான் தரை இறக்கினர், அவர்கள் கூட சில காலம் போக உங்க பார்வையில் சுட்டெரிக்கபடலாம்; உங்க போல் எல்லோரும் வசதியான வீட்டு பிள்ளைகளா?
//சீனர்கள் வெளிநாட்டுத் தொல்லைகளிலிருந்து காப்பாற்ற புத்தமதமும், சென் யாட் சென்னின் சிந்தனைகளும் கை கொடுக்காது என்பதறிந்து மதங்களை முற்றாக விலக்கியுள்ளனர். //
இதுக்கேன் இம்மட்டுதூரம் சீனாவுக்கு கடல் கடந்து கஸ்ற்ற படுவான்;நமக்கு இந்த முள்ளிவாய்க்கால் ஒன்றே போதாதா?? அல்லது சுனாமிதான் நினைவில்லையா?? வாழ்வு ஒரு முறைதான் அதை அன்புடனும் பண்புடனும் வாழ எதுக்கு மதம் மதம்? இதுதானே பல்லியின் நிலைபாடு;
//முஸ்லிம்கள் பெண்களை “பொருளாதார வசதிகளுக்கேட்ப “பட்டிகளில்” மாடுகள் அடைத்து வைப்பது போல வைத்திருக்கலாம் என்கிறது. //
மற்றய பெண்கள் எல்லாம் எப்படி சுகந்திர பறவைகளோ??
//முஸ்லிம் நாடுகள் உருப்படாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். //
புலம் பெயர் தேசம் என்னும் ஒன்றை கண்டுபிடிக்குமட்டும் பல தமிழருக்கு அதேமுஸ்லீம் நாடுகள்தான் சொர்க்கம்; ஏன் இப்போதுகூட குடும்பநிலை அறிந்து அங்கு பயணிக்கும் பெண்கள் என்னிக்கை அற்றவை;
//அவன் கேட்ட நேரத்தில் படுக்கைக்கு வரவேண்டும் என்பது இஸ்லாமிய விதி. அப்பெண்களில் யாராவது வேறு ஆண்களோடு தொடர்பு கொண்டால் அவளுக்கு மரணதண்டனை என்பதும் விதி. அப்பெண்கள் மாத்திரமல்ல வேறு எந்தப்பெண்ணும் தன்னிஷ்டப்படி “காதல்” கொள்ள முடியாது. தாங்களும் இஸ்லாமியர்கள் என்று நினைத்து சவுதியில் காதல் வயப்பட்ட பல பாகிஸ்தானிய, இந்திய ஆண்களின் தலைகள் கொய்யப்பட்ட கதைகள் இப்போதும் பசுமையானவை.//
மிக பெரிய தவறுதான் சுட்டிகாட்டியதுக்கு பாராட்டலாம்: ஆனால் நாம் வசிக்கும் நாட்டில் அதே இன பெண்கள் சுகந்திரமாகவே இருப்பதாக நான் காண்கிறேன்; ஆனால் எம்மவரோ இங்கு வந்தும்… நந்தா கண்ணாடி வீட்டில் நின்று கல் எறியபடாது; கணவனால் பாதிக்கபட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை (தமிழர்) யாராவது நந்தாவுக்கு ஆய்வு செய்து சொல்லகூடாதா?
//யூதர்கள் பெண்களை மற்றைய ஆண்களோடு “பணம்” சம்பாதிக்கும் நோக்கத்துக்காக அனுப்பலாம் என்று நம்புகிறார்கள்.//
அதே யூதர்கள் தமது பெண்களின் அனைத்து ஆடைகளை துவைப்பதுக்கும் மற்றும் வீட்டை சுத்தம் செய்வதுக்கும் இலங்கையில் இருந்து அழகான பெண்களை இறக்கும் சமாசாரம் நந்தாவுக்கு தெரியுமா??
//“பாலியல் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம் என்று சொல்லுகிறது. அப்படி செய்யும் பொழுது அந்த சிறுமிக்கு ஏதாவது “காயங்கள்” வந்தால் இருபது காசுகள் கொடுத்தால் சரி என்கிறது.//
ஜயோ ஜயோ நம்ம இனத்தில் துனைவேந்தரே அப்படிதானே சொன்னாராம் மறந்து போச்சா?? அல்லது மறக்கும் சமாசாரமா?? இரு தினங்களுக்கு முன்பு படித்தேன் கொழும்பில் பாலியல் தொழிலில் ஈடுபடும் ஆண் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்குதாம்; நந்தா நாட்டு நடப்புகளையும் சிறிதேனும் பாருங்கோ தப்பில்லை;
//இந்து மதம் மாற்றங்களை உள்வாங்கும் சக்தியுள்ளது. //
அப்படிதான் நானும் நினைத்தேன் உங்கள் எழுத்து வரும் வரை;
//மற்றைய மதங்கள் மாற்றங்களை விரும்புவதில்லை. மற்றவர்களை மாற்றவே விரும்புகின்றன.//
நந்தா உங்கள் எழுத்து என்னை மாற்றவில்லை; அதேபோல் என் எழுத்தும் தங்களை மாற்ற முடியாது; ஆகவே மாற்றம் என்பது மாறுபவர்கள் இருக்கும் வரை தொடரவே செய்யும்; உமாவுடன் இருந்து பிரபா பிரிந்தார்(மாறினார்) பிரபாவிடம் இருந்து கருனா பிரிந்தார்(மாறினார்) கருனாவிடம் இருந்து பிள்ளையான் பிள்ளையானிடம் இருந்து யார்?? என்னடா இது மத மாற்றத்துடன் இதை பல்லி குழப்புகிறது என குழப்பமா?? அதுவே என் எழுத்து; மெதுவாக சிந்தியுங்கள் வசதி வாய்ப்புகளே மாற்றத்துக்கான காரனம் என்பது புரியும்; உங்களுக்கு அனைத்தும் புரியும் ஆனா புரியாது;;;;
பல்லி;
kamal
கள்ளகடத்தல்காரர்களை ஏறி வந்த ஏணி என்று புகழ்ந்த பல்லிக்கு “நாகரீகம்” பற்றிப் பேசுகிறார்? //நந்தா
பல்லி இவ்வாறு கருத்துப்பட எழுதியிருந்ததை நானும் வாசித்துள்ளேன்.
எவர்? அவர் ?எப்போ? இது?? // என தொடங்கி பல்லி தான் எழுதாதது போலக் கேட்பது தப்பு.
Rohan
//இராமன் இலங்கைக்கு தேவி சீதாபிராட்டியை மீட்கப்போகும் போது எந்த இடையூறும் வராது காத்தருள வேண்டும் என்று வேண்டி அமைத்த மண்சிவனே இராமேஸ்வரம் என்று நான் வாசித்திருக்கிறேன். இராமன் ஈஸ்வரனாகிய சிவனை வணங்கிதால் அந்த இடமும் கோவிலும் இராமேஸ்வரம் என்றானது. இந்துமதத்திலும் பலமித்துக்கதைகள் உண்டு. இப்படி எல்லாமதங்களிலும் உண்டு.//
இராமேஸ்வரத்தின் உத்தியோகபூர்வ இணையப் பக்கம் இப்படிச் சொல்கிறது.
The temple and the island of Rameswaram have acquired this name because, Lord Rama worshipped Lord Shiva, the God of Gods here on return from Sri Lanka. According to legend, after killing Ravana Lord Rama returned with his consort Goddess Seetha to India first stepping on the shores of Rameswaram. To expiate the `dosha’ of killing a brahmin, Lord Rama wanted to offer worship to Lord Shiva. Since there was no shrine in the island had despatched Sri Hauman to Kailash to bring an idol of Lord Shiva.
இராவணனை வீழ்த்திய பிறகு ஸ்ரீ இராமபிரானும், சீதா பிராட்டியும் முதலில் கால் பதித்த தலம் என்பது வரலாற்று வழி செய்தியாகும் . ஒரு பிராமணனைக் கொன்ற தோஷத்தை கழிப்பதற்காக ஸ்ரீ இராமபிரான் சிவபெருமானை வழிபட விரும்பினார் . அந்த வழிபாட்டிற்காக சிவலிங்கம் அங்கு இல்லாத காரணத்தினால் அனுமனை கைலாய மலைக்கு அனுப்பி சிவலிங்கத்தை கொண்டு வரச் செய்தார்.
S.Jeyakkumar
“””இந்து மதம் மாற்றங்களை உள்வாங்கும் சக்தியுள்ளது. மற்றைய மதங்கள் மாற்றங்களை விரும்புவதில்லை. மற்றவர்களை மாற்றவே விரும்புகின்றன.
ஆமாம். இந்து மதம் மாற்றங்களை உள்வாங்கும் சக்தியுள்ளது ஒருவிபச்சாரியைப்போல.அது தேவதாசிமுறையினை பத்தொன்பதாம் நுற்றாண்டுவரை (யாழ்ப்பாணம்) நல்லூர் முழுவதும் காப்பாற்ற வல்லதாக இருந்தது.இதுபற்றி பற்றி பேராசிரியர் திரு.ராயன் ஹல் அவர்களும் தனது தேசம்நெற் பழைய கட்டுரை ஒன்றில்(நல்லூரில் தேவதாசிமுறை)சிறிதளவு குறிப்பிட்டிருந்தார்.
“” இரு மதத்தினரும் “குறியறுக்கும்” தொழிலை மதக் கடமையாகக் செய்கிறார்கள்.
குறியறுப்பது என்ன ஆடு மாடு வெட்டுவது போன்ற தொழிலா?
இதனை இஸ்லாமியர்கள் சுன்னத்(நுனித்தோல் நீக்குதல்) என்றும் யூத கிறிஸ்த்வர்கள் விருத்தசேதனம் என்றும் சொல்வார்கள்.
PALLI
//குறியறுப்பது என்ன ஆடு மாடு வெட்டுவது போன்ற தொழிலா?
இதனை இஸ்லாமியர்கள் சுன்னத்(நுனித்தோல் நீக்குதல்) என்றும் யூத கிறிஸ்தவர்கள் விருத்தசேதனம் என்றும் சொல்வார்கள்.//
ஆனால் நாம் காதல்லவா குத்துகிறோம் எமக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும்; அவர்களும் நாமும் சொல்லும் காரனம் இது சுகாதாரம் வேண்டியாம்;
Mohamed SR. Nisthar
பல்லி, குலன், குசும்பு, நந்தா, மற்றும் அன்பான பின்னுட்டக்காரர்களுக்கு!
பல்லி! குடும்பமாக ரம்ஸான் வாழ்த்து சொல்லியதற்கு மிகவும் நன்றிகள். சின்ன திருத்தம். இப்போது நோன்பு காலம், ஓரு மாத நோன்பு முடிவில் கொண்டாடப்படுவது தான் ரம்ஸான் பண்டிகை, தமிழில் “ஈகைத் திருநாள்” என்போம் .உங்கள் வாழ்த்தில் மனிதம் (நடைமுறையில்) தெரிகிறது. நீங்கள் குடும்ப சகிதம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள். (இஸ்லாம் சொல்கிறது உன்னை ஒருவன் வாழ்த்தினால் அதை விட இரண்டு மடங்காக நீ வாழ்த்து என்று)
குலன்! இன்னும் பதில் சொல்லவில்லயே? கூடியிருந்து கொண்டாடி கெடுப்பதன் விளக்கம் கேட்டேன், யாருடன் கூடி யாரை கெடுப்பது என்றும் கேட்டேன்? உங்கள் மனிதத்துக்கும் அதற்கும் என்ன தொடர்பு என்றும் கேட்டேன். பதில் இன்னும் வரவே இல்லையே. நாம் உங்கள் போன்று விபரமான ஆள் இல்லை. கொஞ்சம் நேரமெடுத்தென்றாலும் விளங்கப்படுத்துங்கள். ஏனெனில் மற்றவனுக்கு நாம் சொல்வது விளங்கவில்லையே அவன் மூடனாக இருப்பானோ என்பதிலும் பார்க்க, நாம் விளங்கப்படுத்தும் முறையில் ஏதும் பிழை இருக்கலாம் என்பவனே அறிவாளியாம். எங்கே உங்கள் அறிவாளி தனத்தை காட்டிவிடுங்கள்.
எனது இன்னுமொரு கேள்விக்கு உங்களுக்கு தெரியாமலே விடை தந்து விட்டீர்கள். நான் கேட்டிருந்தேன் ” இனத்தை மதமாகவும், மதத்தை இனமாகவும் எங்கே இணைத்தேன்” என்று. நீங்களோ அப்படித்தான் இணைத்தீர்கள் என்று சொல்லிவிட்டு பின்வரும் விளக்கத்தையும் தந்தீர்கள். இதோ உங்கள் விடை ” ஈராக்கில் பெரும்பான்மையோர் அறபுக்கள், ஈரானில் பெரும்பான்மையோர் பாரசீகர், குர்திஸ்தானில் பெரும்பான்மையோர் குர்தீஸ்கள்” பிழையே இல்லலையே. அறபு, பாரஸிகர், குர்திஸ்கள் என்பதெல்லாம் அவரவர் இனத்தின் பெயர்கள். நாமும் அப்படியே சொல்கிறோம். (அறபுக்களில் இஸ்லாமியர், கிறிஸ்தவர், யூத மத்தை வின்பற்றுவோரும் இருக்க), பெரும்பான்மையான அறபுக்கள் முஸ்லீம்கள் அப்படி இருந்தும் அவர்கள் “அறபுகள்” என்றே தம்மை அழைக்கின்றனர். அப்படித்தானே அழைப்பர். அவர்களையும் தமிழர் என்றா அழைக்க வேண்டும் என்கிறிர்கள்? நான் இங்கே குலனுக்கும், குசும்புவுக்கும், நந்தாவுக்கும் ஏனைய குழம்பியோருக்கும் என்ன சொல்கிறேன் என்றால் மேலே உள்ளோர் தங்களை “இஸ்லாம்” அல்லது “முஸ்லிம்” என்ற இனமாக கொள்ளவிலையே என்பதுதான். அதே நிலைபாடுதான் பாரஸிகர் தொடர்பாகவும், குர்திஸ்கள் தொடர்பாகவும். இதே விடயம் தான் அமெரிக்கா முதல், ஐரோப்பா ஈராக, சீனா வரையும். இப்படியிருக்க அடி, நுனி தெரியாமல் “இனம்” சம்பந்தமான கேள்வி எழும் போது இலங்கையில் மாத்திரம் “முஸ்லிம்”களை தனி இனமாக மத ரீதியில் சாயம் அடிகிறிர்கள் ஏன் என்பது தான் என் கேள்வி. ஏனெனில் உலகில் சமய பெயரில் இனம் இருப்பதிலை. எனவே இலங்கையிலும் அப்படி இருக்க வேண்டிய தேவை இல்லை என்பதே. இப்போது என்றாலும் புரிகிறதா?
மொழியை அடிப்படையாக கொண்ட இனம் மொழிப் பெயருடன் வருகிறது. மொழி இல்லாத வேறு பல அடிப்படையிலும் இனங்கள் இனம் காணப்பட்டுள்ளன. ஆனால் சமய ரீதியாக எங்கும் இனம் பகுக்கப்படவுமில்லை. அதைவிட உலகத்தில் எங்கும் முஸ்லிம்கள் தங்களை சமய ரீதியாக இனமாக கொள்ளவுமில்லை. நானும் என்றும் அப்படி வாதடியதும் இல்லை, வாதாடவும் மாட்டேன். ஆகவே தான் என் மொழி தமிழ் என்று சொன்னேன், என் மதம் இஸ்லாம் என்றேன், என் இனம் ” சோனகர்” என்று அறுதீயிட்டு கூறினேன். இப்போதாவது புரிகிறதா நான் இனத்தையும், மதத்தையும் இணைக்கவில்லை, யாரையும் அப்படி செய்ய சொல்லவும் இல்லை என்பது?, குலன் நீங்கள் அடித்த பல்டிக்கு சபாஸ் போட எத்தனை பேர் வெளிக்கிட்டு விட்டார்கள். எனக்கு எண்ணிக்கை முக்கியமில்லை, அவர்களும் உங்கள் பாணியில் “கூடியிருந்து கொண்டாடி கெடுப்பது” என்றால் என்னவென்று சொல்லவிலை. யாராவது தெரிந்தால் சொலுங்கப்பா?, மாறாக சமயம் ஒன்றுக்கு சேரடிக்க கிடைத்த வாய்ப்பை கனகச்சிதமாக செய்கின்றீர்களே?
மேலும் குலன் சொல்கிறார், இலங்கையில் உள்ள சிலர் மட்டுமே தங்களை சோனகர் என்று சொல்கிறார்களாம். அந்த “சிலர்” யார் குலன்? ஒரு உண்மை கதை தெரியுமா? இலங்கையில் உள்ள இஸ்லாமியரில், அதாவது முஸ்லிம்களில் 99% “சோனக” இனத்தினர். மிகுதி “மலே” இனத்தினர். மேலும் இலங்கை சோனகர்(Ceylon Moors) என்ற பெயர் வந்ததே, உலகத்தில் வேறு இடங்களிலும் சோனகர் இருக்கின்றனர் என்பதனாலேயே. உதாரணமாக, இந்தியாவில், பிலிப்பைன்சில், மொரோக்கோவில். எல்லா இடங்களையும் விட்டு விட்டு இலங்கையில் மாத்திரம் தான் இப்படி கேள்விப்படுகிறோம் என்று யாரும் சொன்னாலும், சரி அப்படியே வைத்துக்கொள்வோமே. அதில் என்ன பிரச்சினை? சிங்களவர் இலங்கையில் மாத்திரம் தானே இருக்கின்றனர். “சோனவர்”களும் இப்படி இருந்து விட்டு போகட்டுமே. தன்னை இனரீதியாக “தமிழர்” என்று அடித்துக் கூறும் குலன் மனிதம் பேசிக்கொண்டே அந்த ஜனநாயக உரிமையை எனக்கு மறுக்கிறார். இதை சமயத்துடன் போட்டு குழப்பிக்கொண்ட மற்றையோரும் ஏனோ காரணமின்றி எதை எதை எல்லாமோ எழுதி தள்ளுகின்றனர். வாழ்க உங்கள் கூட்டு முயற்சி.
நான் என் இனத்தை “சோனகர்” என்று சொல்ல, ஏனோ தெரியவில்லை நான் மதம் மட்டும் பேசும் “அடிப்படைவாதியாம்” . என் இனத்தை பற்றி கதைக்கிறேன். குலனோ நான் மதம் பற்றி பேசுவதாக கூறுகின்றார். -கீழே அவர் சொல்வதை பாருங்கள்.
“மதங்கள் ஆத்ம ஈடேற்றத்துக்கான வாழ்வியல் கொள்கை கோட்பாடுகளை கொண்டது” குலன் சொல்கிறார், இதைத்தான் நான் என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறேன். மேலும் சொல்கிறார் ” மனிதம்- மனிதத் தன்மையை அதாவது மனிதனை மையப்படுத்திய கொள்கை கோட்பாடுகளைக் கொண்டது”. இங்கு குலன் என்ன சொல்கிறார் என்று யாருக்காவது புரிகிறதா? மதங்களின் ஆத்ம ஈடேற்ற கொள்கை கோட்பாடுகள் மிருகங்களுக்கில்லையே குலன், அது மனிதனுக்குத்தானே? அப்படியானால் மனிதனை மையப்படுத்தித்தானே மதங்கள் கொள்கை கோட்பாடுகளை கொண்டுள்ளது. மனிதனுக்கும், மதங்களுக்கும் நோரடி தொடர்பு உள்ளதாவது இப்போது தெரிகிறதா? நான் என்ன அறபு மொழியிலா எழுதினேன் இல்லையே கூடியவரை இலகு தமிழில்தானே அதுவும் விளக்கமாக எழுதினேன்.
தான் அறியா சிங்களம் தம் பிடரிக்கு அந்தரம் என்று எம் ஊரில் சொல்வார்கள். அப்படித்தான் உங்கள் கதை. “மதங்கள் ஆத்ம ஈடேற்றதுக்குரியது” என்று சொல்லும் நீங்கள், இஸ்லாம் என்ற மதம் அப்படி இல்லை என்பது போலல்லவா சேறடிக்க வெளிக்கிட்டுள்ளிர்கள்? அல்லது இஸ்லாம் தவிர்ந்த ஏனைய மதங்கள் தான் ஆத்ம ஈடேற்றத்தை சொல்பவை, இஸ்லாம் குசும்பு சொல்வது போல ஆடு, சாப்பாடு, உறுப்பு அறுத்தல்,முதுகில் குத்தல் போன்ற விடயங்களூக்கும், நந்தா சொல்வது போல சிறுமிகளுடனான காம விளையாட்டுகளுக்கும் உள்ள “சமயம்”, மனிக்கவும் உங்களுக்கு பிடிக்காத வார்த்தை, “மதம் போலவும்”, சொற்ப அறிவு அடிப்படையில் ,தமிழ் படம் காட்டுகிறிர்கள்.
எல்லாத்துக்குள்ளும் இஸ்லாத்தை குழைத்து அடிக்க நாங்கள் தயாராக இல்லை என்று அழுகிறிர்கள். உங்களை யாரையா கூப்பிட்டது. ஆனால் எனக்கு இஸ்லாம் ஒரு சம்பூரண வாழ்க்கை முறை, அது மனிதம் பற்றி சொல்கிறது. அதை உலகத்தின் மேதைகளாக இன்றும் கருதப்படுவோர், உங்கள் திருப்திக்கு வேண்டுமானால் , குசும்பு, நந்தா, புதிதாய் இணைந்துள்ள ஜெயகுமார், நீங்கள் போன்றோறை விட சற்று மேன் நிலையில் உள்ளோர், சான்றோர் அதை உறுதிபடுத்தியுள்ளார்கள். உதாரணத்துக்கு சில.
Civilisation on Trial என்ற புத்தகத்தில் பக்கம் 205ல் அதன் French ஆசிரியர் இவ்வாறு கூறுகிறார்” The extiction of race consciousness as between Muslims is one of the outstanding achievements of Islam, and in the contemporary world there is, as it happens, a crying need for the propagation of this Islamic virtue”, மனிதத்துக்கு மிக முக்கியமானது.
இதே புத்தகத்தின் பக்கம் 35ல் ஆசி¡¢யர் Jean L’Heureux இப்படி கூறுகிறார் ” Islam has the power of peacefully conquering souls by the simplicity of its theology, the cleanliness of its dogma and principles, and the defined number of the practices which it demands.”, மனிதத்திற்கு இதுவும் தேவையானது.
“Islam Her Moral and Spritual Value” என்ற புத்தகத்தில் பக்கம் 142ல் அதன் ஆசி¡¢யர் Major Arthur Glyn Leonard பின்வருமாறு கூறுகிறார்;
“Let, Europe confess and acknowledge her fault. Let her proclaim aloud to her own ignorant massess, and to the world at large, the ingratitude she has played, and central debt she owes to ISLAM she no longer despise.” மனிததிற்கு இது மிக மிக அவசியமானது.
900 வருடங்களுக்கு, 900 இல்லை ஐயா 1434 வருடங்கள், முன் சொன்ன நபியின் (இறை தூதர்) வார்த்தைகளை நம்பும் இஸ்லாமியர்கள், விஞ்ஞானிகள் சொல்வதை மறுக்கிறார்கள் என்பது குலனின் கவலை. விஞ்ஞானி என்ன, பெரிய விஞ்ஞானி நிங்கள் சொன்னாலும் நாங்கள் கேட்போம். ஆனால் சின்ன நிபந்தனை சொல்வதை சரியாக சொல்ல வேண்டும் இல்லாவிட்டால் இப்படித்தான் விளக்கங்களும் தந்து, நீங்கள் விளக்கம் தரும் வரை கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்போம்.
குசும்பு!
பெண்களின் அந்தரங்க உறுப்பை தைக்கும் உங்கள் குற்றச்சாட்டை, “சைவர்”களின் உடன்கட்டை ஏறலுடன் compromise பண்ணிவிட்டீர்கள் போல் தெரிகிறது, சந்தோசம். ஆனாலும் ஆண்களுக்கான விருத்த தேதனத்தில் இன்னும் உங்களுக்கு பிரச்சினை. அதுதான் வைத்தியரிடம் (யூத, முஸ்லிம் அல்லாத) ஆங்கில, அல்லது தமிழ் வைத்தியரிடம் போய் கேளுங்கள் என்றேன். அவர்கள் தானே இந்த விடயத்தில் துறை சார்ந்தோர். அதை விட்டுவிடு உங்கள் பாட்டிற்கு எழுதினால் விடைவராது. கையோடு AIDS என்றால் என்னவென்றும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் அதை நீங்கள் Aids நோய் என்று குறிப்பிட்டிருந்தீர்கள், Technically it’s wrong you know.
ஆண் குழந்தைகளுக்கு விருத்தசேதனம் செய்வதை ஒரு சித்திரவதையாக சித்தரிக்கிறிர்கள். ஆகவே சித்திரவதை செய்யும் ஒரு சமயம் இந்த உலகத்தில் இருந்தே அகற்றப்பட வேண்டும் போன்ற மாதியான ஒரு கதையையும் சொல்கிறிர்கள். சைவர்களுக்கு மத்தியிலே குழந்தைகளுக்கு காது குத்தும் பழக்கம் உண்டு. அது சித்திரவதை ரகத்துக்குள் சேர்க்கமுடியாதா? அல்லது அதன் வலி விருத்தசேதனத்தின் வலியை விட குறைவு என்று கூறுகிறிர்களா? அல்லது இரண்டையும் பரிசிலித்துள்ளீர்களா? என்ன மாதிரி “உடன் கட்டை ஏறல்” போன்று ஒரு இணக்கப்பாட்டுக்கு யோசிக்கிறிர்கள் போலும்.
நந்தா! நலமா? என்று “மனித”த்துடன் குலசம் விசாரிக்க அதை ” மரணதண்டனை விதிக்கப் போகிறேனா?” என்று மொழி பெயர்த்து விட்டீர்கள். இதில் இருந்து நீங்கள் எவ்வளவு தூரம் குழம்பிபோய் உள்ளிர்கள் என்பது தெளிவாகிறது. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாம். உங்கள் நிலையும் அப்படித்தான். என்ன செய்வது ஒவ்வொருவரின் மன நிலை. சரி விடயத்திற்கு வருவோம்.
எனது ஆம் அல்லது இல்லை என்ற விடையில் இருந்து , ஆயிஷா- முஹம்மது தொடர்பான உங்கள் பிரச்சினைக்கு முடிவு கிடைக்காதே. நீங்கள் ஒரு சம்பவத்தை சொன்னீர்கள் அது பிழை என்று எனது நியாயங்களை சொன்னேன். இல்லை அதை ஏற்கமுடியாது என்றிர்கள். குற்றச்சாட்டு உங்களுடையது என்பதனால் நீங்கள் தான் ஆதாரங்களை முன்வைக்க வேண்டும். குர்-ஆனில் (Qur ‘an) இருந்தோ, ஹதீஸில் இருந்தோ ஏனைய இஸ்லாமிய அல்லது இஸ்லாம் அல்லாத மூலங்களில் இருந்தோ முன்வையுங்கள் அதன் பின் உங்கள் குற்றச்சாட்டின் உண்மை தன்மை பற்றி ஆராய்வோம். ஆதாரங்களை அவதானமாக தேடுங்கள், ஏனெனில் ஈரானில் பாண் திருடிய சிறுவனின் கதை போன்றாகிவிடக் கூடாதல்லவா.
மேலும், ஆணுக்கு “மஹர்” பெற்றுக்கொண்டு பெண்னை அடிமையாக விற்கப்படுவதாக கூறியுள்ளிர்கள். விற்கப்பட்டால் அது ஒரு பொருள். ஆனால் மஹர் பெற்று மணம் முடிக்கும் பெண் ஆணுக்கு அடிமையில்லை. ஏனெனில் பெண்ணுக்கு விவாகரத்து பெறும் உரிமையை இஸ்லாம் 1434 ஆண்டுகளுக்கு முன்பே வழங்கி விட்டது.( ஆனாலும் ஆங்கில சட்டம் (English Law) 1857ல் தான் பெண்னுக்கு அந்த விவாகரத்து உரிமையை வழங்கியுள்ளது, அதாவது 153 வருடங்களுக்கு முன்- இது உங்கள் விளக்கத்திற்கு மாத்திரம்). அது மாத்திரமல்ல கொடுத்த “மஹர்” ரை ஆண் திருப்பி பெறவும் முடியாது. இல்லை இதுவெல்லாம் பிழை என்றால் உங்கள் சரியான ஆதாரத்தை முன் வையுங்கள்.
நான்கு மனைவிகளுடன் ஒரே முறையில் உடல் உறவு கொள்ள முடியாது என்று வைத்திய தகவல் ஒன்றையும் தந்துள்ளிர்கள். யார் சொன்னார் முடியுமென்று. ஆக இஸ்லாம் தொடர்பான உங்கள் பெண்னிலை பார்வை அதாவது சிறுமிகள் கிழவர்களை கலியாணம் பண்ணுவது, மகனை கொன்று மருமகளை கட்டியதான குற்றச்சாட்டு, இப்போது நாலு கலியாண விடயம் எல்லாம் “காம” அடிப்படை கொண்டது. ஆனால் நான்கு கலியாணம் கட்டுவதென்பது கடமையுமல்ல, கட்டினாலும் ஒரே நேரத்தில் உடல் உறவு கொள்வதற்கும் அல்ல. உங்கள் பெண்கள் தொடர்பான இஸ்லாத்திற்கு எதிரான அனைத்து குற்றச்சாடுக்குமான பதிலை இதோ இஸ்லாம் அல்லாத பெண் கூறுகின்றார்.
The life and Teaching of Muhammed என்ற புத்தகத்தில் பக்கம் 25-26ல் அதன் ஆசிரியை Annie Besant பின்வருமாறு கூறுகிறார்,” I often think that woman is more free in ISLAM than in any religion. Woman is more protected by Islam than by the faith that preaches monogamy. In Al Qur ‘an the law about woman is more just and liberal.” ஐய்யய்யோ, காசு வாங்கியிருபாள் இவள் என்று சொல்லிவிடாதிர்கள். ஒரு வேளை நந்தவுக்கு தெரிந்த (உள் வீட்டு) ரகசியங்கள் போன்ற விடயங்கள் இந்த அம்மணிக்கு தெரியாதோ? இப்படி எல்லாம் நாலு கற்றறிந்தவர்களை நம்பாமல் குலன் நந்தாவை நாலும் அறிந்தவர் என்ற நிலையில் இஸ்லாம் பற்றி கட்டுரை எழுத கேட்டது Joke of the year எனலாமா? அல்லது தனக்கும் sense of humour இருபதாக காட்ட குலன் முயற்சிகிறார் போலும்.
நந்தா இஸ்லாத்தின் மிருக்க தன்மை, பாலியல் சமாச்சாரங்கள், விஞ்ஞானத்துடன் ஒவ்வா தனமை, பயங்கரவாதம், பெண்ணடிமை நிலை, ஜனநாயக மறுப்பு, மனித உரிமை மீறல் என்று கட்டுரை அல்லது புத்தகம் எழுத, அது குலன். குசும்பு இன்னும் பலரால் பாரட்டப்பட, அது உலக ரீதியில் அங்கிகரிக்கப்பட, எழுத்து துறைகான நொபல் பரிசு (அப்படி இருக்கிறதா?) பெற அப்பப்பா, நோன்பு நேரம் வயிறு குழுங்க சிரிக்க முடியவில்லை.
ஜெயராஜ்
குலன் உங்கள் கருத்துக்களுடன் எனக்கு நிறையவே உடன்பாடு உண்டு ஆனால் நடந்து முடிந்த போராட்டத்தையும் தியாகங்களையும் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க முடியாது. ஆரம்பகாலங்களில் இணைந்த போராளிகள் பற்றுடனும் உறுதியுடனும் தான் இணைந்தவர்கள். தலைமைகளின் தவறான பாதையினால் திசைமாறியது போராட்டம்.இரத்தம் விற்று இயக்கம் நடத்தியவர்களும் கிட்னி கொடுத்து உயிர் காப்பாற்றியவர்களும் இருந்த காலம் அது. உதாரணத்திற்கு புலிகளில் இருந்த பொன்னம்மானுடன் பொட்டம்மானை ஒப்பிடமுடியாது தலைமையினால் கொடுக்கப்பட்ட ஓடர்களையே தவிர்த்துக்கொண்டவர். இப்படி ஒவ்வொரு இயக்கங்களுக்குள்ளும் தன்னலமற்றவர்கள் நிறையவே இருந்துள்ளார்கள்.
நீங்கள் ஆரம்பித்து வைத்தீர்கள்; முஸ்லீம் மக்களிடமிருந்து தான் புரட்சி வெடிக்கும் என்று. அதை நீங்கள் எழுத முன்பே புரட்சி வெடிக்கத் தொடங்கிவிட்டது. நீங்கள் எதை வைத்து எழுதினீர்களோ அதைவிட்டு பின்னோட்டம் வேறு திசையில் செல்கிறது.
முன்பும் ஜனாதிபதி தேர்தலில் ஜிவாஜிலிங்கம் ,கருணாரத்தினத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கட்டுரை எழுதினீர்கள். உங்கள் கருத்துக்களின் உள் நோக்கம் சரியானவை ஆனால் ஜதார்த்தத்துடன் ஒத்துப்போக முடியவில்லை. இதேபோலத்தான் முஸ்லீம்களிடமிருந்துதான் புரட்சி வெடிக்கும் என்பது இலங்கையில் சாத்தியப்படுமோ என்பது சந்தேகமே.
நிஸ்தார் அவர்களே நாங்கள் யாழ்ப்பாணத்தில் சுபாஸ், ரிக்கோவில் சாப்பிட்டதைவிட அஷாப், மொக்கன்கடை, பிளவ்ஸ் இல் சாப்பிட்டகாலம் அதிகம். காரணம் சாப்பாடு ருசியானது என்பது மட்டுமல்ல, அவர்களை எங்களுக்கு பிடிக்கும், எங்களை அவர்களுக்கு பிடிக்கும். அப்படி வாழ்ந்த காலம் அது.
nantha
“சோனகர்” என்பது தென் இந்தியாவில் இருந்து வந்ததே ஒழிய அந்த வார்த்தையின் வரலாறு பற்றி ஆராய்ந்தால் அது “முஸ்லிம்களைக்” குறிக்காது. தமிழ் நாட்டு வரலாற்றில் :கிரேக்கர்களை ” யவனர்கள்” என்று குறிப்பிடுகிறார்கள். அந்த வார்த்தையே திரிபாகி “சோனகர்” என்றாகி விட்டது. கிரேக்கர்களின் வருகை நின்றவுடன் அந்த திக்கிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் அரேபியர்கள். அவர்களையும் தென் இந்தியாவில், விசேடமாகக் கேரளாவில், சோனகர் அல்லது ஜோனகர் என்று அழைத்துள்ளனர். அது எப்படி ஒரு இனமாகும்?
இலங்கை முஸ்லிம்கள் அரேபியாவிலிருந்து வந்திருக்க முடியாது. அவர்கள் “தமிழை” பேசுவதன் மூலம் மதம் மாறியவர்கள் என்றே கருதலாம். ஆயினும் முன்னாள் சபாநாயகர் பாக்கிர் மாக்கார் (மரக்காயர் அல்லது மரிக்கார்) இலங்கை முஸ்லிம்கள் சிங்களவர்களுக்கும் அரேபியர்களுக்கும் பிறந்த பரம்பரை என்று பகிரங்கமாக ஒரு மானம் கெட்ட அறிவிப்பைச் செய்திருந்தார். அரபியும் சிங்களமும் கலந்தால் எப்படி தமிழ் வரும்? இதனை எந்த முஸ்லிமும் விமர்சிக்கவில்லை.
அரபு நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் தங்களை தங்கள் மொழியோடு அல்லது பாஷையோடு சம்பந்தப்படுத்தியே “தங்களின்” இனத்தை வரைவு செய்துள்ளனர். இலகையில் தமிழைப் பேசிக் கொண்டு தாங்கள் தமிழர் அல்ல என்று சொல்லும் விநோதமானவர்கள் முஸ்லிம்களே!
குலன் குறிப்பிட்டது போல ஒரு சில முஸ்லிம்களே தங்களை “சோனகர்” என்கிறார்கள். சிங்களவரிடம் கேளுங்கள் “சோனகர்” யார் என்று? அவர்கள் ஆகாயத்தை பார்த்து முழிப்பார்கள்.
சில ஐரோப்பிய கிறிஸ்தவர்களின் கருத்துக்களை மேல்கோள் காட்டிப் பயனில்லை. ஏனென்றால் அவர்களுக்கு அரபு மொழியறிவோ அல்லது அவர்கள் புத்தகம் எழுதிய காலத்தில் “குரான் , சிரா, ஹதீஸ்” என்பன ஆங்கில மொழியில் மொழி பெயர்க்கப்பட்டதாதகவும் தெரியவில்லை. அவர்கள் சொல்லியதட்கும் தலிபான்கள் மூக்கறுத்த செய்திக்கும் அல்லது நம்ம முஸ்லிம் ஆளுகள் குருநாகலில் ஒரு பதினேழு வயதுப் பெண்ணான இரண்டு மாதக் குழந்தையின் தாய்க்கு “தென்னம் மட்டையால்” விளாசியதட்கும் என்ன சம்பந்தம்? எது உண்மையான இஸ்லாம்? மூக்கறுத்த இஸ்லாமா அல்லது தென்னை மட்டையடி இஸ்லாமா?
காது குத்துவது எல்லா மதத்தவர்களும் செய்கிறார்கள். அதிலென்ன பெரிய பிரச்சனை? ஆனால் “விருத்தசேதனம்” போல பயங்கரம் காது குத்தலில் கிடையாது. மேலும் ஆண்களுக்கு ‘தோலை” மாத்திரம் வெட்டிவிடுவது யூதர்களிடமிருந்து முஸ்லிம்கள் கற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் பெண்ணின் “உணர்வு” நாடியான “கிளிட்டோரிசை” வெட்டுவது எப்படி நல்ல செயலாகும்? ஆணுக்கும் தோலை மாத்திரமல்ல முன்னுள்ள ஆணுறுப்பின் பகுதியையும் வெட்டினால் எப்படி என்று யோசிக்காமல் அதனை நியாயப்படுத்த சுகாதாரம் அது இது என்று கதை விட வேண்டாம். பாலைவனத்தில் நீரின்றி குளிப்பு முளுக்கின்றி மூத்திர நாற்றம் சகிக்காமல் வியாதிகள் வந்து அப்படி ஒரு முறையைக் கையாண்டார்களோ தெரியவில்லை. உலகத்தில் பெரும்பான்மை மக்கள் இந்த நடைமுறையைக் கைக் கொள்வது கிடையாது. அதனால் அவர்களுடைய “சுகத்திலோ” , சந்தான விருத்தியிலோ எந்த குறைபாடும் வந்ததாகத் தெரியவில்லை!
நான் குழம்பவில்லை. இப்போது நீங்கள் குழம்பியுள்ளது தெரிகிறது. குரானைப் பற்றியும், முகமதுவைப் பற்றியும், இஸ்லாத்தைப் பற்றியும் “சிறிதளவு” தெரிந்தமையினால் நீங்கள் “சுகமா” என்று கேட்டது சுகம் விசாரிக்க அல்ல என்பது புரிகிறது! “உடம்பு எப்பிடி இருக்கு” என்று கேட்டால் தமிழில் இரண்டு அர்த்தங்கள் உண்டு. அது போல இஸ்லாம், முகமது பற்றி விமர்சனம், கேள்வி கேட்பவர்களைக் கொல்ல வேண்டும் என்பது “முஸ்லிம்களின்” கடமை என்பதும் அது ஷரியாவில் சொல்லப்பட்ட விடயம் என்பதும் உண்மை.
முஸ்லிம் அல்லாதவர்கள் காபிர்கள் என்றும், அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதும் இன்னொரு இஸ்லாமியக் கோட்பாடு. இதற்கு என்ன சொல்லுகிறார் நிஸ்தார்?
மனைவியை விவாகரத்து செய்யாலாம் என்பதற்கும் மனைவி விவாகரத்துக் கேட்கலாம் என்பதற்கும் வேறுபாடு உண்டு. மூன்று தரம் “தலாக்” என்று ஒரு மவுலவியின் முனனால் கணவன் சொன்னவுடன் அவனுக்கு விவாகரத்துக் கிடைக்கிறது. மனைவி விவாக ரத்துக் கோரினால் என்பது பற்றி இஸ்லாமில் எங்கும் காணோம்! கணவனுடன் தகராறு செய்யும் மனைவியை “உதைக்கலாம்” என்று இஸ்லாம் சொல்லுகிறது.
ரோமன் டட்ச் சட்டப்படி விவாகரத்துப் பெற்றால் மனைவிக்கு மாதப்படி வழங்க வேண்டும். இஸ்லாத்தில் அப்படிக் கிடையாது. இந்துக்கள்/ பௌத்தர்கள் அந்த சட்டத்தை நியாயமானது என்று ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே நிஸ்தார் மனிதர்கள் “பொறுப்புள்ளவர்கள்” என்று நடக்க வேண்டும் என்று மற்றைய மதங்கள் நம்புகின்றன.
இந்தியாவில் பாத்துமா பிபி என்ற முஸ்லிம் பெண் விவாக ரத்துப் பெற்றபின்னர் தனக்கும் குழந்தைகளுக்கும் ஜீவானம்சம் கோரி சுப்ரீம் கோர்டில் வழக்குத் தாக்கல் செய்த பொழுது அப்படி ஒன்றும் இஸ்லாமிய முறைப்படி செய்ய வேண்டியதில்லை என்று வாதித்தார்கள். ஆயினும் இந்திய சட்டப்படி அந்தப் பெண்ணுக்கு ஜீவனாம்சம் மாத்திரமின்றி பிள்ளைகளுக்கு சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்ற தீர்ப்பை அடுத்து இந்திய முஸ்லிம் மதக் கோஷ்டிகள் ஊர்வலம் போனதும், இந்தியா அரசு மத விவகாரங்களில் தலையிட முடியாது என்று கடை எரிப்பு, வீடுடைப்புக்களில் ஈடு பட்டது எப்படி? “ஈத் முபாரக்” என்று கொண்டாடி என பயன்? கூடக் கிடந்த பெண்ணுக்கும், பெற்ற குழந்தைகளுக்கும் “செலவுக்குக்” கொடுக்க தேவையில்லை என்று சொல்லிக் கொண்டு “ஈத்” என்றால் “கொடை” கொடுப்பது என்று என்று சொல்வதில் என நியாயம் உள்ளது? கணவனே கண் கண்ட தெய்வம் என்றெல்லாம் இந்துக்கள் நம்பி மோசம் போவதில்லை.
ஆயினும் முகமது தனது வளர்ப்பு மகனின் மனைவியை எப்படி அடித்துக் கொண்டு போனார் என்பதை நிஸ்தார் தெளிவு படுத்தவே இல்லை. அல்லது அப்படி ஒன்றுமே இல்லை என்று வாதிக்கிறீர்களா? அது மாத்திரமல்ல முகமது ஆயிஷாவைக் கட்டும் பொழுது முகமதுவுக்கு எத்தனை வயது? சொல்லுங்கள் பார்க்கலாம்!
மேலும் இஸ்லாம் பற்றிய விபரங்களுக்கு
http://www.politicalislam.com/ என்ற இணையத்தளத்தினைப் பார்க்கவும். நிஸ்தார் இந்த இணையத்தளத்தில் வெளியாகும் விபரங்களுக்கு பதிலளித்து இஸ்லாமின் பெயரைக் காப்பாற்ற முயற்சி செய்யாதது ஏன்? எந்த முஸ்லிமும் அந்த கருத்துக்களுக்கு பதில் சொன்னதாகத் தெரியவில்லை. ஆளைத் தேடி மண்டையில் போட அலைந்து கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை!
நோபல் பரிசு பெறும் அல்ப ஆசைகள் நந்தாவுக்குக் கிடையாது. ஆனால் எங்களிடையே வாழும் முஸ்லிம்கள் நாகரீகமான, மனிதத் தன்மையுள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும் என்பதில் எனக்கும் ஆசை உண்டு. இஸ்லாமியர்கள் தவிர்ந்தவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது என்ற எண்ணக் கனவில் இருந்துகொண்டு கருத்துக்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது!
nantha
ஜெயகுமாரின் தமிழ் விளக்கம் “உள்வாங்குதல்” என்றால் விபச்சாரம். ஆகா! இதுவல்லவோ அருமையான விளக்கம். போதாக்குறைக்கு நல்லூரில் தேவதாசிகள் இருந்தார்கள் என்றும் ஒரு சரடு. ராஜன் ஹூல், இரத்தின ஜீவன் ஹூலின் சகோதரர். அவரும் எட்கார் தெர்ச்டனின் “கதைகளைப் படித்திருப்பார்” என்பது தெரிகிறது. நல்லூரில் அவர்களின் அயலில் வாழும் செங்குந்தர்களை நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்களாக மாற்ற அவரது பாதிரிப் பரம்பரைக்கு முடியாது போனதன் “சலிப்போ” என்று தெரியவில்லை.
ஜெயகுமாருக்கு எட்கார் தேர்ஸ்டன் என்று அந்த வெள்ளை ஆள் தென் இந்தியாவின் பிரபலமான “பட்டு” ஆடை உற்பத்தியாளர்கள் பற்றி ஒரு தகவலும் கண்டு பிடிக்காமல் போனது எப்படி? பெரிய வரலாற்று மேதைக்கு அந்த விஷயம் தட்டுபடவில்லையோ? அவருக்கு மேதை என்று பட்டம் வேறு.
………
கள்ளக் கடத்தலையே தொழிலாகக் கொண்ட குட்டிமணியும் தங்கத்துரையும் பல்லிக்கு “மாமனிதர்களாக” இருக்கலாம். பல தமிழர்களின் வாழ்வு தொலைந்து போனதற்கு இந்தக் கள்ளக் கடத்தல் பேர்வழிகளும் முக்கிய பங்கை வகிக்கிறார்கள். கள்ளக் கடத்தல்காரர்கள் தங்களுடன் கூட வருபவர்களின் பொருட்களை அபகரிக்க அந்த ஆளையே கொன்று கடலில் வீசிவிடுவார்கள். அதனைக் “கோட்” அடித்தல் என்று சொல்லுவாகள். தமிழ் இயக்க செம்மல்களும் தங்களின் “உட்கட்சி” போராட்டங்களின் போது தங்களின் ஆட்களையே “கோட்” அடித்து தொலைத்திருக்கிறார்கள். எனவே இந்த டெக்னிக்கை அறிமுகப்படுத்திய கடத்தல்காரர்களை இயக்கங்களை சேர்ந்த செம்மல்கள் துதி பாடுவதில் வியப்புக் கிடையாது.
தவிர வேலைக்குப் போகும் பெண்களெல்லாம் முதலாளிகள் அல்லது மனேஜர்மாருடன் உறவாடுகிறார்கள் என்று வேறு பல்லி எழுதியுள்ளமை கேவலமானது! பெண்கள் சுதந்திரப் பறவைகளா என்று கேள்வி வேறு! எல்லோரும் தற்கொலைக் குண்டைக் கட்டிக் கொண்டு போகவில்லை என்று பல்லி அங்கலாய்ப்பது தெரிகிறது!
PALLI
//எனவே இந்த டெக்னிக்கை அறிமுகப்படுத்திய கடத்தல்காரர்களை இயக்கங்களை சேர்ந்த செம்மல்கள் துதி பாடுவதில் வியப்புக் கிடையாது.//
ஆடு வெட்டுபவன் உடுப்பில் இரத்தம் படிவது ருசியான சாப்பாடான இறைச்சியை நந்தா போன்றோர் வெள்ளாடை உண்டு புரளவே, நான் கடத்தல்காரர் பற்றி சொன்ன தகவல் மிகுதியையும் வாசிக்கவும்; பல்லி இன்று நந்தாவுக்கு பதில் எழுதவும் இந்த நாட்டில் வசிக்கவும் உதவியது அதே கடத்தல்காரந்தான்; இன்று கனடா வந்து சேர்ந்திருக்கும் கப்பல் போல்; நந்தா போன்ற அதிகாரிகள் போல் இன்று போய் நாளை வா சமாசாரம் அல்ல கடத்தல் என்பது வாழ்வா சாவா என்பது அரசகவி புலவருக்கு எப்படி தெரியும்; நான் நாட்டுபுற பாடகன் என்பதால் அவர்களை புகழ்வது எனக்கு தப்பாய் தெரியவில்லை, (கே பி என்னும் தொழிலதிபர் அபிவிருத்தி பற்றி பேச கொழும்பில் தங்கியிருப்பது கூட நந்தாவின் சிந்தனையில் வராதது ஏனோ??)
//வேலைக்குப் போகும் பெண்களெல்லாம் முதலாளிகள் அல்லது மனேஜர்மாருடன் உறவாடுகிறார்கள் என்று வேறு பல்லி எழுதியுள்ளமை கேவலமானது! //
இதை பல்லி சொல்லவில்லை பல பத்திரிகைகள் சொல்லுகிறது, இப்போது கூட ஒரு நாட்டில் இருக்கும் அவலபடும் இளம் பெண்களை உடனடியாக இலங்கை அனுப்ப அங்கு இருக்கும் இலங்கை தூதரகம் ஏற்பாடு செய்கிறதென தகவல், இதில் வேலையின்றி பல (பாலியல் உட்பட) அவதிபடும் பெண்கள் 100 மேல் என்பதும் தகவல்தான், அடுத்து சிங்கபூரில் இலங்கை பெண்கள்(இளம்) கட்டாய பாலியலுக்கு உட்படுத்தபடுவதாக நேற்றய தகவல், இவர்கள் எதுக்காக இங்கு வருகிறார்கள் குடும்பத்தை விட்டு?? அதைதான் பல்லி சொன்னேன் குடும்ப சுமை காரணமாய் இங்கு போவது தவறென தெரிந்தும் அங்கு எமது பெண்கள் போகிறார்கள்.
//முதலாளிகள் அல்லது மனேஜர்மாருடன் உறவாடுகிறார்கள் என்று வேறு பல்லி எழுதியுள்ளமை //
நான் அனைவரையும் சொல்லவில்லை ஆனால் பல நாடுகளில் விவாகரத்து செய்யும் தமிழ் குடும்பங்களில் இதுவும் ஒரு காரணமாய் சொல்லபடுகிறது இது கனடாவில் இருப்பவர்களின் ஆதங்கம் என கூட சொல்லலாம்;
//பெண்கள் சுதந்திரப் பறவைகளா என்று கேள்வி வேறு! //
கேள்விதானே கேட்டேன் அதுக்கேன் இந்த கடின கேள்வி; கனடாவில் நடந்த பெண்கள் சந்திப்பில் உள்ளாடை புரட்சி என ஒன்று நடந்து அது இந்த தேசத்திலும் அமோக காட்சியாய் ஓடியதை நந்தா அறியவில்லையா?? இப்படியானவையைதான் மற்ற சமூகம் செய்தால் தவறாக சூதாடும் நந்தா இவர்களை என்ன சுகந்திர பறவைகளாக பார்க்கிறியளா? என்பதுதான் கேள்வி கேலி அல்ல;
//எல்லோரும் தற்கொலைக் குண்டைக் கட்டிக் கொண்டு போகவில்லை என்று பல்லி அங்கலாய்ப்பது தெரிகிறது!//
ஜயோ நந்தா முகமட்டுக்கு சாதகமாய் உங்கள் இந்த கருத்து அமைந்து விட்டது, குண்டுகட்டி அனுப்பியது யார்?? குண்டுடன் போனது யார்?? இந்த முட்டாள் தனங்களை நாம் செய்துகொண்டு பிற மதங்களையோ அல்லது இனங்கள் மீது கல் வேண்டாம் என்பதுதானே என் வாதம், இந்துமதம் மீது யாராவது விமர்சனம் செய்தால் நீங்க அதுக்காக அவர்கள் மீதும் அவர்கள் விடும் தவறையும் சுட்டி காட்டுங்கள் அதுவே உங்கள் கல்வியாற்றலுக்கு மதிப்பு; அதைவிட்டு மற்றய மதங்களையோ அல்லது இனத்தையோ கடுப்பேத்தவோ அல்லது கேவலபடுத்தவோ உங்கள் அறிவை பயன்படுத்தினால் நீங்கள்ம் ஒரு சத்தியசீலன் தங்கதுரை போன்று கண்ணுக்கு தெரியாமலே ஒரு சமூக போராட்டத்தை உருவாக்குகிறீர்கள் என்பதே நிஜம்;
தொடரும் பல்லி;;;
Kulan
நிஸ்தார்! எத்தனையோ தடவை உங்கள் கேள்வியான /குலன்! இன்னும் பதில் சொல்லவில்லயே? கூடியிருந்து கொண்டாடி கெடுப்பதன் விளக்கம் கேட்டேன்/ பதில் சொல்லியும் இராமன் சீதைக்கு என்ன முறை என்கிறீர்கள். பல உதாரணம் சோனகர் புலிகளுக்குச் சொன்னதில் இருந்து ஜின்னாவரை உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது.
/குறியறுப்பது என்ன ஆடு மாடு வெட்டுவது போன்ற தொழிலா? இதனை இஸ்லாமியர்கள் சுன்னத்(நுனித்தோல் நீக்குதல்) என்றும் யூத கிறிஸ்த்வர்கள் விருத்தசேதனம் என்றும் சொல்வார்கள்./
எஸ். ஜெயக்குமார்! சோமாலியாவில் இஸ்லாத்தின் பெயரால் குறியறுக்கப்படும் பெண்கள் பற்றிக் கேள்விப்படவில்லையா? இளம்பெண்கள் இழுத்துவரப்பட்டு மரங்களின் கீழ் வைத்து கிளவியரால் கத்தக் கத்த குறியறுக்கப்படுகிறார்கள். அறுக்கும் கத்தி கூரானதும் அல்ல. பலகாலங்களுக்கு முன் போத்திலோடுகளால் தான் வெட்டினார்கள். இது ஆடுமாடு வெட்டுவதை விடக் கேவலமானது. வெட்டுவதைத் தொழிலாக சிலகிழவியர் கொண்டுள்ளார்கள். ஆண்களுக்கு ஐரொப்பாவில் வைத்தியசாலைகளில் குறியறுப்பதைப் கண்டவன் நான்.
பெண்கள் குறியறுப்பினால் ஏற்பட்ட பாரிய உடற்கேடுகள் காரணமாக அதாவது சிறுநீர்கழித்தல்: தொற்று: பிள்ளைப்பேறு பிரச்சனைகள் காரணமாக முக்கியமாகப் பெண்களுக்குக் குறியறுத்தல் சட்டமூலமாகத் தடைசெய்யப்பட்டதை அறியவில்லையா? சில அரசாங்க ஐரொப்பிய வைத்தியசாலைகளில் ஆண்குறியறுப்பதற்குத் தடையுண்டு.
Mohamed SR. Nisthar
நந்தா, உங்கள் குற்றச் சாட்டுகளுக்கு, ஆதாரங்கள் தாருங்கள் என்று சொல்லிவிட்டு, ஈரானின் பாண் விடயத்தையும் சொல்லி வைத்தேன். எங்கே அவை?
இப்பொழுது புரிகிறது உங்கள் அறிவு மூலம் எதுவென்பது. அறிவு என்று நாம் தமிழில் எதை குறிப்பிடுகிறோமோ தெரியாது, ஆனால் ஆங்கிலத்தில் பாவிக்கப்படும் “நொலெஐச்” என்பது சற்று ஆழமானது, அதை விடவும் ஆழமானது “இல்ம்” என்ற அறபு பதம். உங்கள் ஆராய்ச்சிக்கான மூலம் ” பொலிடிகல் இஸ்லாம்” என்றவுடன், என் நேரம் வீணடிக்கப்பட்டதை உணர்கிறேன்.
Kulan
ஜெயராஜ்!/முஸ்லீம் மக்களிடமிருந்து தான் புரட்சி வெடிக்கும் என்று./
இது நீங்கள் எழுதிய வார்த்தை. “தான்” என்ற சொற்பதத்தினூடாக அது உறுதிப்படுத்தப்பட்ட நிற்சயப்படுத்தப்பட்ட ஒன்றாகிறது. நான் எழுதிய வசனம் “முஸ்லீம் மக்கள் மத்தியில் இருந்தும் போராட்டம் வெடிப்பதற்குச் சாத்தியம் உண்டு” என்பதாகும். “இருந்தும்” “சாத்தியம்” என்ற வாத்தைப் பிரயோகங்களினூடாக சந்தேகம் தொனிக்கவில்லையா?
/உதாரணத்திற்கு புலிகளில் இருந்த பொன்னம்மானுடன் பொட்டம்மானை ஒப்பிடமுடியாது/ /
நீங்கள் குறிப்பிடும் பொன்னம்மான் யாழ்இந்துக்கல்லூரியில் படித்த கிரிக்கட் வீரர் யோகியின் தம்பி தானே. நீங்கள் குறிப்பிட்ட புலிகளின் மூத்த உறுப்பினர்களுடன் நானும் இருந்தவன் என்பதை பணிவன்புடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன். நான் இவர்களை விட்டு வெளியேறும் போது கூறிவைத்த வார்த்தைகளையும் இங்கே கூறிவைக்க விரும்புகிறேன். ஆயுதப்போராட்டம் ஒரு கருவியே தவிர முழுப்போராட்டமும் ஆயுதப்போராட்டமாகப் பார்க்கப்படுமானால் அது ஆயுதத்தின் மேலுள்ள மனநோயே. ஆயுதம் தூக்கிப்போராடினாலும் என்றும் அரசியலே தீர்வானதும் முடிவானதுமாகும் அரசியலற்ற போராட்டம் தற்கொலைக்குச் சமனானது என்றேன். நடந்து முடிந்திருகிறது என்பதை மனவருத்தத்துடன் கூறிக்கொள்ளிறேன். ஜனாதிபதித் தேர்தலைக் பற்றிக் கூறியிருந்தீர்கள் உண்மை. சரியான பாதை எதுவென்று கூறும்போது பிழையானது எது என்பதையும் கூறினேன். இறுதியில் கூத்தமைப்புக்கு என்ன நடந்தது. சிவாஜி தோற்றாலும் போனபாதை சரியானதே. ஆனால் சிவாஜியின் அரசியல் யதார்த்தம் வேறானது என்பது வேறு.
nantha
நிஸ்தார்:
ஆதாரங்கள் அனைத்தும் அந்த இணையத்தளத்தில் அக்கு வேறு ஆணி வேறாக சொல்லப்பட்டுள்ளது. எனவே “காபிர்கள்” பொய் சொல்லுகிறார்கள் என்று நீங்கள் உங்களையே “இஸ்லாமிய” வழியில் ஏமாற்றிக் கொள்ளலாம்! அல்லது காபிர்கள் கொல்லப்படவேண்டும் என்று முகமது சொன்னது சரியான விஷயம் என்று சமாதானப்பட்டுக் கொள்ளலாம்.
ஆனால் திருமண நேரத்தில் ஆயிஷாவுக்கு எத்தனை வயது என்று தெரிந்த உங்களுக்கு, மகமதுவுக்கு அந்த வேளையில் எத்தனை வயது என்பது கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். அதனை மறைத்து விட்டு இன்னமும் அதைப்பற்றியே கதைக்காத நீங்கள் knowledge பற்றிக் கதைக்கிறீர்கள். கொக்கறல்ல மட்டையடி சமாச்சாரத்துக்கும் பதிலளிக்காதது இஸ்லாமிய மார்க்கம் என்றே எண்ணுகிறேன்!
உங்களுடைய புனித குரானிலும் ஹதீசுகளிலும் சொல்லப்பட்டவையே படு மோசமானவை. அவற்றை விட “இல்ம்” என்ற பதம் ஒன்றும் செய்யப் போவதில்லை. அந்த இணையத்தளத்துடன் எந்த முஸ்லிமும் வாதாட முடியாது. ஏனென்றால் அவர்கள் உண்மையை எழுதுகிறார்கள். அதாவது இஸ்லாம் என்பது இதுதான் என்றும், அவற்றினை ஆதாரங்களோடு புட்டு வைக்கும் போது உங்களுக்கு மவுனம் ஒரே வழி. Some sort of damage controlling!
nantha
//இந்த முட்டாள் தனங்களை நாம் செய்துகொண்டு ..//
பல்லி நாம் என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்று புரியவில்லையே!
//பிற மதங்களையோ அல்லது இனங்கள் மீது கல் வேண்டாம் என்பதுதானே என் வாதம்//
நான் ஒன்றும் “கல்” எறியவில்லை. மவுனம் காத்த பலாபலன்களை இந்துக்கள் தாரளமாக அனுபவிக்கிறார்கள்!
பாதிரிகள் இந்துக்கள் மீது வசை பாடுவதும் முஸ்லிம்கள் மற்றைய மதத்தவர்களை “காபிர்கள்” என்றும் அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை மதக் கொள்கையாக வைத்திருப்பதும் பல்லிக்கு இப்போது புரிந்திருக்கும். அதற்கு மவுனம் காட்ட முடியாது. உங்கள் போதனைகளை முதலில் பாதிரிகளிடம் ஆரம்பியுங்கள்!
குலன்:
கனடாவில் இந்த பெண் குறியறுப்பதற்க்கு இருபது வருடம் சிறைவாசம் என்பது சமீபத்தில் கனடிய அரசு இயற்றிய சட்டம். அதனால் முஸ்லிம்கள் புண்படுத்தப் பட்டார்கள் என்று யாரும் பகிரங்கமாக அறிக்கை விடவில்லை. அனால் எனக்குத் தெரிந்த சில பாகிஸ்தானிகள் “மத சுதந்திரம்” என்று கனடா சொல்லுவது படு பொய் என்று என்னுடன் வாதிட்டிருக்கிறார்கள். அதாவது முகமது காலத்து அபத்தங்களை தொடரவிடவில்லை என்பது அவர்களின் ஆதங்கம்!
பாகிஸ்தான் வம்சா வழியான ஒரு இளம் பெண்ணை முஸ்லிம் முறைப்படி “முக்காடு” போடவில்லை என்பதற்காக கனடாவில் அவளுடைய தந்தையும், சகோதரனும் அடித்தே கொன்றிருக்கிறார்கள். அவர்களுக்கு “ஜீவ பரியந்தம்” ஜெயில் சிட்சை வழங்கப்பட்டுள்ளதுடன் பரோலுக்கு சந்தர்ப்பமே கொடுக்கக் கூடாது என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Kulan
நான் மனிதவாதி என்பதால் மதவாதிகளை வெறுப்பதில்லை. ஆனால் மதஅடிப்படைவாதிதத்தை விரும்புவதில்லை. உறவாடிக் கெடுப்தற்குப் பலபதில் எழுதினேன். கத்திக்கோலுக்கு இரையாகி விட்டது.
மீண்டும் உறவாடிக்கொடுப்பது என்பது இன்றைய அரசியலில் களம்கண்ட விடயமே. அதை தமிழில் பழமொழிகளாகவும் உள்ளன. வளர்த்தகடா மார்வில் பாய்ந்தது: கூட்டிவந்து முதுகில் குத்துவது: கூடவிருந்து குழிபற்றது என்று ஒருவகையில் கூறலாம்: இதற்குப் பல உதாரணங்கள் உண்டு
1) உமாவின் கழகத்து உறுப்பினர் கண்ணன் போன்றோரை பேசுவோம் என்று புலிகள் அழைத்து கூண்டோடு கைலாசம் அனுப்பியது.
2)வெளிநாடு பார்க்க விட்டு கருணா தான்தலைவராகியது
3)கருணா வெளிநாடுபோக பதவிகளை எடுத்துக் கொண்டு கருணாவை வெளியில் விட்டுது
4)சந்திரிகாவுக்கு ஆப்பு வைத்து மகிந்த கட்சியை பிடித்தது
5)புலிகளுடன் நின்ற சோனர் புலிகளைக் காட்டிக் கொடுத்தது
6)பிரபாகரனைப் பேச்சுவார்த்தைக்கு என்று இராஜிவ் அழைத்துச் சென்று வீட்டுக்காவலில் வைத்தது.
7)வீட்டுக்காவலில் இருந்து தப்புவதற்கு போரைத் தொடரமாட்டோம் என்று கையெப்பம் வைத்துவிட்டு விடுவிக்கப்பட்டு யாழ்பாணம் வந்ததும் இந்திய இராணுவத்துக்கு ஆப்படித்தது.
8)இனி வெளிநாடுகளில் பார்த்தால் பின்லாடனுக்கு பின்லாடன் கட்டிய அமெரிக்காவுக்கு 11 புரட்டாசியில் புரட்டி எழுத்தது
9) இந்தியச் சுகந்திரத்துக்காக வெள்ளையரை எதிர்த்து மகாத்மா காந்தியுடன் போராட முயன்று நாடுசுதந்திரம் அடையும்போது பாக்கிஸ்தானைப் பிரித்துத்தா என்றது.
10) இஸ்ரவேல் என்ற ஒருநாடு உருவாகுதற்கு அமெரிக்கா ஐ.நா க்கு அரபுநாடுகள் சம்மதம் தெரிவித்த பின் இஸ்ரவேலை ஒருநாடன்று என்று மறுத்தது. அதை நிஸ்தாரின் பின்நோட்டத்திலும் காணலாம்.
11) குறுடர்களை ஈராக்கியர் ஆக்கி அவர்களுக்கு நச்சு வாயு அடித்தது.
12) ஈரான் ஈராக் போரில் அமெரிக்காவின் இரட்டை வேடம்
13) மத்திய கிழக்கு: பாக்கிஸ்தானை அமெரிக்கா தடவித்தடவி பொருளாதராத்தில் குத்திக் கொல்வது.
இன்னும் இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்: இது அரசியலில் மலிந்து போய் கிடக்கும் விடயமாகும். இந்த முறையின்றி அரசியலே இல்லை என்றாகி விட்டது. தமிழர்களுக்காகச் சத்தியாக்கிரகம் இருக்கிறேன் என்று பேய்காட்டி தமிழரைக் கொல்வதற்கு துனைபோன கருணாநிதியும் இதற்குள் அடங்குவர்.
nantha
குலன்:
நீங்கள் குலதேவனா அல்லது மாகுலனா?
PALLI
குலன் மறந்த சில:
ரி பி சி உறவாடி உடைப்பு;
தேசத்துக்கு தடா;
சேதுவுக்காய் ராமராஜன் குத்துகறனம்;
தீரனின் பின்னோட்ட தளம்;
ஜேயதேவன் என்னது???
பல்லி தொடரவா நிஜத்தை????
Kulan
//குலன்:
நீங்கள் குலதேவனா அல்லது மாகுலனா?// ஏன் நந்தா கேட்கிறீர்கள். ஏதாவது பிழைகாக எழுதிவிட்டேனா? தவறுருந்தால் சுட்டிக்காட்டுங்கள். உங்களது கேள்வி எனக்குப் பயத்தைத் தருகிறது. தேசத்துடன் தொடர்பு கொண்டு அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். இந்தக் குலனை உருவாக்கித் தேசத்துக்குத் தந்தவர்களே பின்நோட்டக்காரர்கள் தான் என்றால் அதிசயமாக இருக்கும். நானும் ஒரு பின்நோட்டக்காரனாகவே பலகாலம் இருந்தேன்.
பல்லி! இது கலியுகம் அதாவது கலி என்பது சனி என்று பொருள். இந்தக் கலியுகம் பற்றி வேதங்கள் எழுதிய ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். தப்பான உறவுகள் மானிடம் தவறிய வாழ்வு போதை பொருள் உபயோகம் என்று கூறிக் கொண்டு வந்து ஈற்றில் சூத்திரன் உலகை ஆள்வான் என்று உள்ளது. அதற்கான அடையாளம் என்ன என்பதற்குப் பதில் விளக்குள் தலைகீழாக எரியும் என்று கொள்ளலாம். தீபங்கள் பந்தங்களைத் தலைகீழாகப் பிடித்தாலும் மேல்நோக்கியே எரியும். பரம்பரையாக மச்சம் உண்ணாத என்குலத்து இறுக்கமாக இந்து வாரிசு என்தந்தை. அவரிடம் கேட்டேன் கலியும் என்கிறீர்கள் ஏன் விளக்குகள் தலைகீழாக எரியவில்லையே என்று அவரின் பதில் என்னை அதியப்படுத்தியது. மின்சாரவிளக்குகளைப்பாருங்கள் இவை தலைகீழாகத்தானே எரிகின்றன. இதை ஏன் சொல்கிறேன் என்றால் உறவாடிக்கெடுத்தல் என்பது கலியுலகில் மலிந்து போன ஒன்று. இது கடுமையாகத் தவிர்க்கப்படவேண்டிய ஒன்றே. நீங்கள் வேண்டுமானால் இருந்து யோசித்துக் பாருங்கள் இன்னும் எத்தனையோ புலப்படும். குறிப்பாக நான் மாட்டுக் கறிசமைத்து பசுப்பால் விட்டு இறக்கி உண்பவன். இந்துமத்தின் பிழைகளையும் தாராளமாக எழுதியுள்ளேன். நான் பாரதியல்ல. பாரதியாலும் பாதிக்கப்பட்டவன். பாரதிபோல் என்குடும்பம் என்னை முழுமையாகவே வெறுத்தது விரட்டியது. இதன்காரணமாக அடிமட்டத்துக்குச் சென்று அங்கிருந்த வளர்ந்ததால் குலனாக மாறினேன். இந்தக் குலனுக்குக் குலம் கிடையாது குணம் உண்டு: போர்குணம் உண்டு நந்தா. நான் மதங்களை வெறுக்கவே இல்லை அடையாளமற்றுப்போகும் மதங்களை அடையாளங்களைத் தேடுவதிலும் அக்கறை கொண்டவன். தென்னமேரிக்காவைச் சேர்ந்து மாயா என்ற இனமத அடிப்படைகளை ஆய்வதில் ஆர்வமாக உள்ளேன். அறிவியல் சார் துறையில் நான் ஒரு விஞ்ஞானப்பீட மாணவன். வெறுப்பது அடிப்படைவாதம்.
nantha
குலன்:
எனக்கு “மாகுலன்” என்ற குலேந்திரனைப் பரிச்சயமுண்டு. அதிக வருடங்களாகத் தொடர்புகள் கிடையாது. குலதேவன் என்பரோடு சில வருடங்களுக்கு முன்னர் ஒரு இணையத்தளத்தில் கருத்துப் பரிமாற்றம் செய்ததுண்டு. அதனாலேயே “பகிரங்கமாகக்” கேட்டேன். தப்பாயின் பொறுத்தருள்க!
இந்துக்கள் “மாட்டிறைச்சி” சாப்பிடக் கூடாது என்பது தற்போதைய இந்திய-பாகிஸ்தானி அரசியல். ஆயினும் இந்துக்கள் அந்த இறைச்சியை சாப்பிட்டதட்கான வரலாறுகள் “இருக்கு” வேதத்தில் தாராளமாக உண்டு. எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டு வரை பிராமணர்களும் மச்சம், மாமிசம் என்பனவற்றை உண்டிருக்கிறார்கள். அதன் பின்னர் சில ‘இந்து அரசர்கள்” பிராமணர்களுக்கு மாத்திரம் புலால் உண்பதை தடை செய்துள்ளனர். கோவில்களில் அந்த நாட்களில் பெண்களின் அதிகாரம் இருந்ததாகவும், புலால் உண்பவர்களுக்கு “காம” உணர்வுகள் அதிகம் என்பதனாலும் கோவில்களில் பணி புரிபவர்களுக்கு மாத்திரம் “புலால்” தடை செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. அதற்கு புத்த மதத்தின் போதனைகளும் காரணம். பின்னர் இந்து அரசுகள் அந்நிய மதத்தவரின் கைகளுக்கு மாறியபின் கதைகளே வேறாகிவிட்டன. புலால் உண்பதே அரசியலாகிவிட்டது.
வேட்டைக்குப் போன மன்னர்களின் கதைகள் தாராளம். இராமரிலிருந்து பலர். அவர்கள் வேட்டையாடிக் கொன்ற மிருகங்களை “கூடப் போன நாய்களுக்கா” கொடுத்தார்கள்?
உணவு விவகாரங்கள் அரசியலாக்கப்பட்டதாலும் “சைவ” உணவு காரணமாகவும் இன்று இந்தியாவே உலகில் உள்ள குருடர்கள் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கிறார்கள். சாதாரண “மீன்” உணவு இந்தியாவில் தாரளமாக இருந்தும் அதனை புறக்கணித்ததன் விளைவே அந்த குருடர் சனத்தொகை. சிவபெருமான் மீனவனாக வந்தார் என்பது திருவிளையாடல் புராணக் கதை. அவர் என்ன கத்தரிக்காயையும் பாவக்காயையுமா மீனவனாக இருந்த போது சாப்பிட்டார்?
ஒரு தேக உழைப்பாளிக்கு “சக்தி” அதாவது கலோரிகள் அதிகம் தேவை. அவை மரக்கறிகளை விட மாமிசத்தில் அதிகம் உண்டு!
வங்காளிப் பிராமணர்கள் மீன் சாப்பிடுவார்கள். கடல் புஷ்பம் என்று சொல்லுவார்கள். இந்தியாவில் அதிகளவில் மாட்டிறைச்சி , எருமயிறச்சி, மீன் ஆகியவற்றை உண்பவர்கள் வங்காளிகளும், மலயாளிகளுமே! அந்த இரு மாநிலங்களிலும் “கம்யூனிஸ்டுக்கள்” ஆட்சியிலுள்ளது மாத்திரமின்றி “இந்திய” அரசு சேவைகளிலும் அவர்களே முன்னணி வகிக்கிறார்கள். இந்தியாவின் படித்த “சனத்தொகை” இந்த இரு மாநிலங்களிலுமே அதிகமாக உள்ளனர்.
இந்த “சைவ உணவு” கலாச்சாரம்தான் இந்துக்களின் தோல்விகளுக்கும் “மூல” காரணமாக அமைந்து விட்டதோ என்று எனக்கு ஒரு அனுமானம் உண்டு!
Kulan
/பகிரங்கமாகக்” கேட்டேன். தப்பாயின் பொறுத்தருள்க!/ என்ன நந்தா இப்படிக்கேட்டு என்னைத் தர்மசங்கடத்துக்குள் தள்ளிவிட்டீர்கள். நான் தர்மன் இல்லாவிட்டாலும் சங்கடப்பட்டு விட்டேன். பாரத்தில் தர்மன் பொய்சொல்லவேண்டி வந்தபோது(அசுவத்தாமா…) தர்மன் பட்ட சங்கடத்தை விட எனக்குச் சங்கடமாக இருந்தது. உங்கள் வார்த்தைகளுக்கே தகுதியிற்றவன் யான். ஆனால் நீங்கள் குறிப்பிடும் அவர்கள் நானில்லை நந்தா.
தாங்கள் கூறிய புலால் விடயம் சிலவற்றை முன்பே அறிந்திருந்தேன். அதை ஒரு வழுவல்காரணமாக வீட்டில் பாவித்தேன் தப்பிக் கொள்வதற்காக. யார் ஏற்கப்போகிறார்கள். குகனை தன் சகோதரர்களில் ஒருவனாக இராமர் ஏற்றபின் குகன் கடவுளாகிய இராமனுக்குப் படைத்தது கடல்புஸ்பங்கள் தானே. இந்துமத்திலுள்ள சிறப்பியல்பு தன்காலத்துக் கேற்ற மாற்றங்களை காணக்கூடியதாகவும் மாற்றங்களை கிரகித்தும் வந்திருக்கிறது என்பதாகும். கண்ணப்பன் படைத்த மாமிசத்தை சிவனே உண்டவின் மனிதனுக்கு எதற்கு மாமிசத்தடை. கொலை என்று எண்ணம் போது கொடூரமாகத்தானுள்ளது. இந்த இயற்கையின் தத்துவமே தன்னினத்தைத் தவிர்ந்த பிறமிருகங்களை உண் என்றல்லவா கட்டளையிட்டிருக்கிறது. அதேவேளை தப்பி வாழ்வதற்கும் வழியை வகுத்திருக்கிறது. என்ன இந்த இயற்கை ஐயா
PALLI
நந்தா உங்களுடன் எனது தோல்வியை ஒப்புகொண்டு இதை நிறுத்தி வேறு ஏதாவது சமூகத்துக்கு தேவையானவற்றை பேசுவோமே; பல்லி ஓடமாட்டேன், ஒதுங்கும் நாகரிகம் தெரிவதால்;
Kulan
பல்லி; நந்தா/நந்தா உங்களுடன் எனது தோல்வியை ஒப்புகொண்டு இதை நிறுத்தி வேறு ஏதாவது சமூகத்துக்கு தேவையானவற்றை பேசுவோமே; பல்லி ஓடமாட்டேன்/
விட்டுப்கொடுப்பதும் ஒத்துப்போவதும் தோல்வி என்று யார் சொன்னது. எனது இந்தக்கட்டுரையிலேயே எழுதியுள்ளேன். விட்டுக் கொடுப்பது கூட ஒரு வகையில் இராஜாதந்திரம்தான் இதை எமது பழைய அரசியல்வாதிகள் செய்யவில்லை என்பது வேதனைக்குரியதே. ஏன் புலிகள் இந்தவிடயத்தில் முழு முட்டாளாகவே இருந்திருக்கிறார்கள். இவர்களுக்கும் எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைத்தன. ஒஸ்லோ பேச்சு வார்த்தையில் கிடைத்த நல்ல சந்தர்ப்பம் பலவெளிநாடுகளின் பார்வை அனுசரணையில் கிடைத்தது. எதிர்த்த நின்பதை விட விட்டுக் கொடுத்து நற்பயன்களை அடையலாம் என்றால் விட்டுக் கொடுப்பதில் என்ன தவறு. நான் பல்லியின் முன்மொழிவை முழுமையாக வரவேற்கிறேன். நந்தாவும் பல்லியும் பல நல்ல விடயங்களை பின்நோட்டத்தில் தருபவர்கள். இதனால் நன்மையடையப்போவது பலர். தொலைப்பார்வையில் நீண்ட நோக்கில் சிலவிட்டுக் கொடுத்தல்களால் பெருவெற்றியும் நன்மைகளும் கிடைத்துள்ளன. விட்டுக் கொடுக்காத: சகிப்புத்தன்மை அற்ற குணங்களால் இரத்த ஆறுகளும் பிணக்குவியல்கள் மட்டுமே மிஞ்சியதாகச் சரித்திரங்கள் உண்டு. ஏன் பின்நோட்டங்களிலும் இதைக்காணலாம்.
nantha
குலன், பல்லி!
இயற்கை என்பது மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல. மனிதர்களே மதத்தை உருவாக்கினார்கள். இந்துக்கள் இயற்கையின் சக்திகளைப் பஞ்ச பூதங்கள் என்று வகைப் படுத்தினார்கள். அவற்றை மனிதர்கள் போரிட்டு வெல்ல முடியாது என்பதன் காரணமாக இருக்கலாம். ஆனால் அந்த பஞ்ச பூதங்களின் உதவிகள் இன்றி மனிதர்கள் வாழமுடியாது.
சொத்துக்கும், சுகத்துக்கும் மனிதன் பேராசைப்பட்டு கெடுதல்களையே உண்டு பண்ணத் தொடங்கினான். புத்தரும் “பேராசையே” பாவங்களுக்குக் காரணம் என்றார்.
இயற்கையின் உணவுச் சங்கிலித் தொடரில் புல்லை உண்ணும் மிருகங்களை மனிதர்களும், வேறு சில மிருகங்களும் உண்ணுகிறார்கள். அது இயற்கையின் சம நிலையை பேண உதவுகிறது. இன்று இருக்கும் மனிதர்களிடையேயான பிரச்சனைகள் “சகலதையும்” தானே அனுபவிக்க வேண்டும் என்ற “அவா”வினால் ஏற்பட்டவைகளே! இந்த சுயநலத்துக்கு வளமில்லா பூமிகளில் உருவான சமயங்கள் கை கொடுக்கின்றன. கடவுள் என்ற கோட்பாடு சுயநலத் தேவைகளுக்காக என்ற கொள்கை வலுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போட்டியில் அழிந்து போவது மனித சமுதாயம் மட்டுமல்ல, அவர்களை வாழச் செய்யும் இயற்கையும்தான்.
கலியுகத்தின் முடிவில் உலகம் அழிந்துவிடும் என்ற கூற்று உண்மையே!
பல்லி
//கலியுகத்தின் முடிவில் உலகம் அழிந்துவிடும் என்ற கூற்று உண்மையே!//
நந்தாவை நம்பி நான் நாலு பேரிடம் கடன் வாங்கலாமா?? அழிந்து போகும் உலகத்துக்காய் நந்தா சரியாக வாதிடுகிறார் வாழ துடிக்கும் சமூகத்துக்காய் நாம் தப்புதப்பாய் கிழிக்கிறோம் எனவும் நந்தாவே சொல்லுகிறார்,
மதம்பிடித்து மதம்பற்றி பேசுவதை விட மனதோடு மனிதம் பற்றி பேசுவது மேல்:
Mohamed SR. Nisthar
ஜெயராஜ், நந்தா, குலன்!
ஜெயராஜ் நன்றாக சாப்பிடுங்கள், சாப்பிட்டுகிட்டே பழகுங்கள் அதில் மனிதம் உள்ளது. யாழ் தமிழரும், யாழ் சோனகரும் பழகுவது தொடர்பானது அல்ல என் பிச்சினை, மாறாக தான் என்ன கதைக்கிறார் என்று அறியாமல் குலன் கதைத்த விடயமே என் ஆதங்கத்துக்கான காரணம். அந்த கருத்து பரிமாற்றம் பரிமாற்றமாக இல்லாமல் ஏனோ தடம் புரட்டப்பட்டு போனாலும் அதன் காரணகருத்தாவான குலன் தனது குண்டு சட்டிக்குள் ஓடி களைத்து இப்போது வெளியே வந்துள்ளது இந்த கருத்து பரிமாற்றத்தை(?) முடிவுக்கு கொண்டுவர வழிசமைக்கும் என நினைக்கிறேன்.
குலன், எனது நச்சரிப்பு தாங்காமல் “கூடியிருந்து கொண்டாடி கெடுப்பது” என்றால் என்ன என்று ஆதாரத்துடன் விளக்கும் முகமாக பெரிய ஒரு பட்டியலேயே சமர்ப்பித்திருந்தீர்கள். அதில் புலியுடன் சேர்ந்திருந்த சோனகரின் காட்டிக்கொடுப்பு முதல் இந்தியாவிடம் இருந்து எப்படி அலி ஜின்னா பாக்கிஸ்தானை பிரித்தெடுத்தார் என்ற விடயங்கள் உங்கள் மனதை தாக்கிய சம்பவங்கள் தந்திருந்தீர்கள். அந்த “கொண்டாடி கெடுத்த” விடயங்கள் படு பிழையானவை, நியாங்களுக்கு அப்பால் பட்டவை என்றும் அவை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும் போது, அதே விடயம் இலங்கையில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று எப்படி எதிர் பார்த்தீர்கள்? இந்த எதிர்பார்ப்புத்தான் , உலகின் நான்காவது பெரிய இராணுவத்துடன் மோதி வெற்றிகண்டதாக கூறிய புலிகள் கிளிநொச்சி வரை பின்வாங்கிய விடயம் போலாகிவிட்டது. இனி உங்களை சுலபமாக புதுக்குடியிருப்பு வரை பின்வாங்கச் செய்யலாம்.
குலன், நிங்கள் விட்ட அடிபடைத் தவறை மறைப்பதற்காக இடையிலே “மனிதம்” , என்ற வார்த்தையை பாவித்தீர்கள். அதுவே உங்களை புலிகளின் முள்ளிவாய்க்கால் நோக்கிய புறமுதுகு காட்டிய ஓட்டம் போன்ற நிலைகுள்ளாக்கிவிட்டது. மனிதம் என்று வந்துவிட்டால் ” அன்பே மனிதம்” என்பதுதான் அதன் பொருளாக முடியுமே தவிர, “கெடுப்பது” அதன் மூலம் “இலாபம்” அடைவது என்றெல்லாம் இருக்க முடியாது. போதா குறைக்கு குசும்பு, நந்தா என்போரையும் மனித கேடயமாக பாவித்து, நான் “மதத்தை” இந்த விவாதத்திற்குள் கொண்டு வந்து விட்டேன் என்று போலி குற்றச்சாட்டுடன் தப்பிக்கொள்ள பார்த்தீர்கள். அதாவது குசும்புவும், நந்தாவும் ,ஏன் நீங்களும் கூட சமங்களை வம்புக்கிழுத்துக் கொண்டே என் மீது குற்றம் சாட்டுவதை நிறுத்தவில்லை. இது இலங்கை அரசாங்கத்தை மாத்திரம் யுத்த நிறுத்தம் செய்யக் கோரி உலக தலை நகரங்களில் செய்யப்பட்ட ஆர்பாட்டங்களுக்கு ஒப்பானது. இருந்தும் முடிந்ததா உங்கள் குண்டு சட்டிக்குள்ளான குதிரை ஓட்டம்? இப்போது உங்கள் சரணடையும் நேரம். உங்கள் அடிப்படை பிழையை, அதாவது ” கூடியிருந்து கொண்டாடி கெடுப்பது” என்ற சிந்தனை தவறானது, என ஒப்பு கொள்ளுங்கள்.
யாரும் யாருடனும் சேரலாம், கொண்டாடலாம் ஆனால் “கெடுக்க” மட்டும் யாரும் முனையக்கூடாது என்பது தான் எனது வேண்டுகோள். உங்களிடம் நீங்கள் கூறும் மனிதம் இருக்குமானால் நீங்கள் விட்ட தவறை தவறென்று சொல்வதில் என்ன கூச்சம்?
நந்தா, எங்கேயோ ஆரம்பித்து, எங்கெல்லாமோ சென்று இப்போது மதவாதிகளாக சொல்லிக்கொண்டே தமது மதத்துடன் சம்பந்தமில்லாத வேலைகளை செய்வோரிடத்தில் வந்து நிற்கின்றீர்கள். “காது குத்துவது” சைவர்கள் மாத்திரமல்ல எல்லா சமயத்தினரும் தான் செய்கின்றனர் என்று சொல்வதன் மூலம், இது பச்சிளம் குழந்தைகளுக்கு சித்திரவதையே இல்லை, ஆனால் நிச்சயமாக ஆண் குழந்தைகளுக்கு விருத்தசேதனம் செய்வதுதான் சித்திரவதை என்று நிறுவ முயல்கிறிர்கள்? . இஸ்லாத்தில் பெண்களுக்கான அந்தரங்க உறுப்பு தைப்பது தடை என்றேன். ஆனால் நீங்களோ குர்-ஆனில் இருந்தோ அல்லது வேறு எங்கிருந்தோ ஆதாரங்களை தராமல் பறவை காவடி (இது சித்திரவதைக்கு உட்பட்டதா என்பது இன்னுமொரு கேள்வி) போல அந்தரத்தில் ஆடிக்கொண்டிருக்கிறிர்கள்.
மேலும், ஒரு உயர் வகுப்பு மாணவருக்கு இருக்கும் பொறுப்புணர்வு கூட இல்லாமல், அதாவது ஒரு விடயத்தின் உண்மைதன்மையை நிரூபிக்க(authenticating exercise), கிடைத்த தகவலை இன்னொரு ஆவணத்தின் தரவுகள் மூலம் பரிச்சித்து பார்ப்பது(Cross checking), முற்றும் முழுதாக Political Islam என்ற இணையத் தளத்தில் உங்கள் அறிவுத் தேடலை செய்திருப்பது பரிதாபத்துக்குறியது மாத்திரமல்ல, ஆபத்தானதும் கூட. அரசியல் அறிவுக்காக “தமிழ்நெற்” என்ற இனையத் தளத்தை நீங்கள் எப்படி நாடமாட்டீர்களோ அப்படியே இஸ்லாம் என்ற சமயம் தொடர்பான சரியான தகவலுக்கு யாரும் Political Islam இணையத் தளத்துக்கு செல்லமாட்டார்கள். சில விடயங்கள் தொடர்பாக இந்த Political Islam இணையத் தளத்தைவிட தமிழ்நெற் நேர்மையானது என்றும் கொள்ளலாம். ஏனெனில் தமிழ்நெற்றை நடத்துவோர் தாங்கள் யார் என்றும், தமது நோக்கம் என்ன என்றும் சொல்கிறார்கள். ஆனால் Political Islam இந்த விடயத்தில் very, very quiet, have you noticed? it’s a defaming excercise of some cowards.
நந்தா, பெண்களை உதைப்பதை குசும்புவின் ஆட்டிறைச்சி விடயம் போன்று இஸ்லாத்தின் ஒரு கடைமை போலவே காட்ட முயல்கிறிர்கள். இதோ பின்வரும் விடயங்களை சற்று நோக்குங்கள். சைவ தமிழ் பெண்கள் இந்த உதைகளுக்கு முகம் கொடுகாதவர் எங்கின்றீர்களா? அல்லது அது பரவாயில்லை எங்கின்றிர்களா? ஆங்கில சட்டம் பெண்கள் சொத்து வைத்திருப்பதையும், விவாகரத்து பெறும் அவர்களின் உரிமையயும் அறிமுகப்படுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவைகளை இஸ்லாம் பெண்களுக்கு அளித்துவிட்டது என்பதையும் மறந்து, இது மேற்குலகின் பெண் சான்றோர்களாலும் உறுதி படுத்தப்பட்டுள எனது கூற்றுக்களையும் புறந்தள்ளிவிட்டு இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து பெற முடியாதவர் போல் பொய் பிரச்சாரம் வேறு செய்கிறீர்கள். உங்களுக்கும் Political Islam குழுவினருக்கும் என்ன வித்தியாசம்? அதைவிடவும் சைவ பெண்களின் ” கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்” என்ற நிலைப்பாட்டை சொல்லிவைத்தீர்கள். சைவ ஆண்கள் ” கல்லானாலும் இவள் என் மனைவி, புல்லானாலும் என் பெண்டாட்டி” என்ற கோட்பாட்டை ஏன் ஏற்க மறுக்கின்றனர். அதைவிடவும் பெண் அப்படி ஒரு நிலையெடுக்க சைவம் அவர்களை மறைமுகமாக தள்ளுகின்றதா என்பதை ஏன் நிங்கள் விசாரணைக்குட் படுத்தவில்லை?
இதையெல்லாம் விட இந்த கல்லும், புல்லும் சாகும் போது இந்த கன்னகிகளை உடன்கட்டை ஏற்றினிர்களே இதைவிட மிருகத்தனம் எங்கே உள்ளது? இதுவும் உங்கள் கண்களுக்கு அகப்படாமல் போனது ஏன்? . இன்னும் கேளுங்கள் நாம் வாழும் பகுதியில் சைவ கோயிலுக்கு 20 யார் தூரத்தி தமிழ் கடைகள் “சைவ கடவுளர்களின் பெயரில்”, உள்ளே அந்த சைவம் “பஞ்சமா பாதங்களாக” கருதுபவைகளில் ஒன்றான குடி சர்வசாதாரணமாகவே கிடைக்கிறது. இன்னொரு பாதகமான செயலான கொலை முயற்சிகளும் சைவ ஆலயங்களில் நடந்தேர்கிறது, பகல் கொள்ளை வேறு ஆலய தர்ம கர்த்தக்களால் நடந்தேர்கிறது. என்ன சொல்ல போகுறிர்கள் நந்தா? ஆக உங்கள் பிரச்சினை சமயத்தின் பேரால் செய்யப்படும் இந்த பலவீனப் பக்தர்களின் செயலுக்கும் சமய போதனைகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருப்பதும், சமய போதனைகளை ஏற்று அதன் வழி நடந்து தன்னைப் போலவே பிறரையும் நேசிக்கும் சமயவாதிகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் உங்களின் கண்ணுக்கு புலப்படாமல் போன விடயந்தான். இது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் அல்லவா?
விவாகரத்து கோரும் பெண்ணுக்கு அவள் கணவன் கட்டாயம் வாழ்வாதார செலவு கட்டவேண்டும், அவளின் தனிப்பட்ட சொத்தில் ஆணுக்கு உரிமையிலலை. பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு வாழ்வாதர பணம் செலுத்த வேண்டும். இது இஸ்லாமிய சட்டம். இதையெல்லாம் விட்டுவிட்டு, இது குர் ஆனில் தெட்டத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளதை ஏன் இல்லை என்று கூறுகிறிர்கள். உங்களுக்கு அறபு வாசிக்க தெரிந்திருக்க வேண்டியதில்லை. ஆங்கிலத்தி, ஏன் தமிழில் கூட மொழி பெயர்புகள் உள்ளன ஒரு முறை சுய ஆராச்சி செய்து பார்த்து இன்ன அத்தியாயத்தில் இன்ன பக்கத்தில் இன்ன வசனம் இப்படி சொல்கிறது என்று எடுத்து விடுங்கள், அதை விட்டு விட்டு நானும் மேற்கோள் காட்டும் சான்றோர்களையும் அவர்கள் காலத்தில் ஆங்கில மொழி பெயர்ப்ப்பு இருந்திருக்காது, ஆகவே அவர்களுக்கு குர்-ஆன் என்ன சொல்கிறது என்பதை அறியமுடியாது என்ற உங்கள் சிறு பிள்ளை தனமான வாதங்களை முன்வைக்கிறிர்கள். எல்லாரையும் உங்களுடன் ஒப்பிட்டு பார்க்கிறிர்கள். அதுதான் இஸ்லாத்தில் பெண்களின் நிலை பற்றி கூறிய பெண்ணை உங்களால் ஏற்றுக்கொள்ள முடையாதுள்ளது. சரி அந்த பெண்ணும், அவர் போன்ற ஏனைய நபர்களும் தம் பாட்டுக்கு எதையோ எழுதிவிட்டு சென்றுள்ளனர் என்றே வைத்துக்கொள்வோமே. அதை பிழை என்று நிருபிக்க உங்களின் சொந்த ஆய்வு எங்கே? Political Islam இணையத் தளத்தின் உதவியை நாடுகிறிர்கள்.
இலங்கை முஸ்லிம்கள் கூட விவாகம், விவாகரத்து, பாகப் பிரிவினையில் இஸ்லாமிய சட்டத்தை கடைபிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கே விவாகரத்துக்கு தனியான நீதி மன்றம் உள்ளது. அது “காதி கோடு”(Quazi Court) என்று அழைக்கபடும். அது இலங்கை நீதி நிருவாக சட்டத்தால் நிருவகிக்கப்படுகிறது. இந்த நீதி மன்றத்தில் கடைமையாற்றுவோர் சட்டம் படித்தவராக (Lawyer or Attorney) இருக்கவேண்டும். இப்படியிருக்க இத்து போன “தலாக், தலாக், தலாக்” என்று மூன்று முறை ஒரு “மெளலவி”(அறபு படிப்பிக்கும் வாத்தியார்) க்கு முனால் சொல்லி விட்டால் ஆண் ஒருவன் விவாகரத்து செய்து விடலாம் என்று ஜோக் அடிக்கிறிர்கள்.
ஈத் என்பதை “கொடை” என்று மொழி பெயர்த்துள்ளிர்கள். இதுவும் Political Islam வின் துணையுடனா? ஈத் என்றால் ” பெரு நாள்” என்பது பொருள். இப்படித்தான் தெரியாத விடயங்களில் மூக்கு நுழைப்பதால் ஏற்படும் விபரிதங்கள். இலஙகை முஸ்லீம்கள் ஒரு வகை “Pakistan Syndrome” மால் பாதிக்கப்பட்டோர் போல் காட்ட வருகிறீர்கள். நல்ல வேளை பின்லாடனுக்கு பின் செல்வோர் என்று சொல்லாமல் விட்டிர்களே அது வரை சந்தோசம்.
பாக்கீர் மாக்கார் இலங்கை முஸ்லிம்கள் அறபுகளுக்கும், சிங்களவர்களுக்கும் பிறந்தவர்கள் என்று சொல்லியது (அப்படி சொன்னாரா இல்லையா என்பது வேறு விடயம்) வெட்கக்கேடான விடயம் என்றிர்கள். இதில் வெட்கப்பட என்ன உள்ளது. குரங்கில் இருந்து பிறந்தாக தங்களை சொல்லும் மனிதர்களை விட இது எவ்வளவு மேலான விடயம். ஒரு வேளை இரண்டு மனிதர்களின் கலப்பில் பிறந்ததினால் தான் உண்மையை (உண்மையாக இருப்பின்) சொல்கிறாறோ? நாங்கள் தமிழர் அல்லர் என்று சொல்ல ஏன் பலவந்தமாக நீங்கள் “தமிழர்” தான் என எங்களை அடக்க முனைகின்றிர்கள். அதில் என்ன சந்தோசத்தை காண்கின்றிர்கள்? ஏதாவது இரகசிய திட்டம் உள்ளதோ, சிங்களவர்களிடம் “சோனகர்” யார் என்று கேட்டால் மேலும், கீழும் பார்பார்கள் என்று குலன் சொல்லியுள்ளிர்கள். “சோனகர்” யார் என்று உங்களுக்கு தெரியாவிடால், அது எப்படி மற்றவருக்கும் தெரியாது என்ற திர்மானத்துக்கு வந்திர்கள்?
“கொண்டாடி கெடுப்பது” பற்றி குலன் தனது கட்டுரையில் எழுதியதற்கு விளக்கம் கேட்டேன். அத்தகைய நிலைப்பாடு பிழை என்றேன். மனிதத்துக்கும் அதற்கும் சம்பந்தமில்லை எனறேன் அவ்வளவு தான். இப்போது குலன் வெளியிட்ட பட்டியல் மூலம் அது பிழை என நிருபித்துள்ளோம் எனவே இனியும் சமயங்கள் பற்றிய உண்மைக்கு புறம்பான கிழ்தரமான ஆய்வுகள் தேவையில்லை என எண்ணுகிறேன். இது தப்பியோடும் முயற்சியல்ல. கடல் போன்று விரிந்த சமயங்களை ஆராய முயல்வதென்பது சமுத்திரத்தின் நீரை சின்ன சிப்பியால் இறைக்க வெளிக்கிட்ட கதை போலாகும். நன்றி.
nantha
பாகீர் மாக்கார் கதை பற்றி தெரியாது என்று சொல்லிவிட்டு அடுத்த வரியில் “உண்மை” சொல்வதாக கதை விட்டிருப்பது பாகீர் மாக்காரின் “கப்சா” கதை நிஸ்தாருக்குத் தெரிந்த கதை என்பதே ஆகும். சிங்களமும் அரபியும் கலந்தால் “தமிழ்” வரும் என்ற “கண்டுபிடிப்பு” எப்படி என்று சொல்லாமல் “உண்மை” சொல்வதாக “படுபொய்” எழுதும் நிஸ்தார் போன்றவர்கள் இலங்கையர்கள் என்று சொல்வதற்கு எந்த தகுதியும் இல்லாதவர்கள். தொப்பி பிரட்டல் என்பதன் அர்த்தம் இதுவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
கொக்கறல்ல மசூதியில் பதினேழு வயது பெண்ணான இரண்டு மாதக் குழந்தையின் தாய்க்கு நடந்த மட்டையடி எந்த வகையில் என்பது பற்றி நிஸ்தார் திருவாய் மலர்ந்தால் நல்லது.
“காபிர்கள்” என்று இஸ்லாத்தில் குறிப்பிடப்படுபவர்கள் யார் என்பதையும் அவர்களை முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் நிஸ்தார் எப்போது சொல்லப் போகிறார்? உடன்கட்டை ஏறும் “கலைக்குப்” பிள்ளையார் சுழி வைத்தவர்களே சில காட்டேரிகளான முஸ்லிம்கள் என்பது வரலாறு.
முகமதுவுக்கு எத்தனை பெண்டாட்டிகள் என்றும் ஆயிஷாவை எத்தனை வயதில் கலியாணம் பண்ணினார் என்பதையும் சொல்லி உங்கள் இஸ்லாத்தின் மரியாதையை காப்பீர்கள் என்றும் நம்புகிறேன்!
முஸ்லிம்கள் தமிழை தாய்மொழியாக வைத்துக் கொண்டு “தமிழரல்ல” என்று சொல்லுவது எந்த நாகரீகத்தில் கொள்ளப் போகிறீர்கள்? நாங்கள் தமிழர், மதத்தால் முஸ்லிம் என்று சொல்லுவது மரியாதையான செயல்பாடு.
politicalislam.com என்ற இணையத்தளம் பற்றி சொல்லும் கருத்துக்கள் உங்களால் சகிக்க முடியாத “உண்மைகள்” என்பது மாத்திரம் புரிகிறது. அங்கு எந்த இஸ்லாமியனும் கருத்துச் சொல்ல பயம் அல்லது “காபிர்கள்” சொல்வது பொய் என்று கூறும் வரட்டுப் பொய் என்பதே உங்கள் எழுத்தில் தெரிகிறது.
பிராபகரனின் புலிகள் பயங்கரவாதிகள் என்றால், பிரபாகரன் செய்த அத்தனை மோசமான செயல்களும் செய்யலாம் என்று உங்கள் இஸ்லாம் கடவுளின் பெயரால் கூறுகிறது. கொள்ளை, கொலை, கற்பழிப்பு என்பன ஏற்றுக் கொள்ளப்பட்டவை. எனவே நீங்கள் உங்கள் இஸ்லாமியா “தகராறுகளை” அரேபியாவில் வைத்துக் கொள்வது நல்லது. இலங்கையில் வேண்டாம்! பாகிஸ்தானில் “ஷரியா” கோர்ட் ஒரு பெண்ணை பலரும் “கும்பலாக” கற்பழிக்கும்படி தீர்ப்புக் கூறி அது அமுல் படுத்தப்பட்டு உலகம் முழுவதும் பாகிஸ்தான் நாறிய கதை எங்களுக்குத் தெரியாது என்று நிஸ்தார் கூறுகிறார்.
இஸ்லாம் என்பது நாகரீகமான மனிதர்களின் கொள்கைகளுக்கு ஒத்துவராத ஒரு பயங்கரவாத மற்றும் பிற்போக்குச் சித்தாந்தம் என்பது வெளிப்படையாகி வரும் உண்மை!
chandran.raja
நந்தாவின் பதில்கள் நிஸ்தாருக்கு வழங்குவதாக மட்டும் கொள்ளமுடியாது இது இஸ்லாம் மதத்திற்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டுவதாகவும் கொள்ளமுடியும். பொதுவாக மதங்களில் இருந்து ஆய்வுகளை ஆதாரங்களை தேடிப் புறப்பட்டால் சமூகத்திற்கு எதுவுமே நல்லகருத்தை வழங்காமல் நிற்க வேண்டும். மதங்களே! நந்தாவின் வார்த்தைகளில் சொல்வதென்றால் எல்லாமே “கப்சா”தான். யாராக இருந்தாலும் மதங்களைத் தவிர்த்து உங்கள் கருத்துக்களை சொல்வது ஆரோக்கியமானது. இங்கு கருத்துச்சொல்பவர்களும் வாசகரர்களாக இருப்பவர்கள் எல்லோரும் மதநம்பிக்கையில் இருந்து விடுபட்டவர்கள் அல்ல. ஏதோ ஒருவகையில் நம்பிக்கை வைத்திருப்பவர்களாகவும் இருக்கலாம்.
தேசம்நெற் தனது பணியில் எந்த மதத்தையோ இனத்தையோ சாதியையோ புண்படுத்துவதான கருத்துக்களை அனுமதிப்பதில்லை. அனுமதிக்கவும் கூடாது என்பதிலும் நாம் உறுதியாக இருக்கிறோம்.. என்பதிலும் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். தமிழ்மக்களைப் பொறுத்தவரை தமிழ்மக்களின் அரசியல் அறிவை உயர்த்துவதே எமது ஒட்டுமொத்த பணி. “தேசம்நெற்”றின் கருத்து எதுவோ?.
சுகுணகுமார்
யார் இந்த சிவந்தன்! கஞ்கா போதையில் தான் சுவிஸ் சென்று வந்தாரா?
Appletree Avenue man convicted for Peartree Avenue offence
Posted by Dan Coombs on Apr 12, 10 12:57 PM in Crime
A MAN from Appletree Avenue has been given a suspended jail sentence after being found guilty of carrying weapons in nearby Peartree Avenue.
Quintan Jeyapalan, 30, of Appletree Avenue, Yiewsley, was given a three month jail term suspended for three years after being found guilty of carrying a cricket bat and a pick axe handle in Peartree Avenue, Yiewsley, on October 24 last year.
Gobi Sivanthan, 29, of Crowland Avenue, Hayes, was also convicted of being in possession of a cricket bat and pick axe handle.
He was also convicted of being in possession of cannabis and driving an Audi while over the alcohol limit.
Sivanthan was given a two month suspended jail sentence, and has been banned from driving for 17 months.
Both were also ordered to pay court costs of £300 to the CPS.
பல்லி
// “தேசம்நெற்”றின் கருத்து எதுவோ?.//
சந்திராவின் கருத்து சத்தம் போட்டு சொல்லவேண்டும்:
எந்த மேடையிலும் துணிவுடன் சொல்லபடவேண்டியது,
இதில் நான் முழுமையாக சந்திராவுடன் உடன்படுகிறேன்;
Kusumpu
பல்லி//தயவுசெய்து ஒரு மதத்தின் நோன்பு பெருநாள் (ரம்தான்)நடக்கும்போது தவறான வார்த்தைகளை பாவிக்காதீர்கள்? அது நாகரிகமான செயலும் இல்லைஇ அதைவிட பலரது மனதை புண்ணாக்கி விடும்//
பல்லி நோன்பு நாட்களில் மட்டும் நல்லவர்களாக அப்பாவிகளாக இருப்பார்கள். நோன்பு முடிய அட்டகாசம். இதைத்தானா மதம் மக்களுக்குக் கற்பிக்கிறது. வாழ்க்கை முழுக்க உருட்டும் பிரட்டும் நோன்பில் மட்டும் நோர்மையும் கடமையும். சும்மா விடுங்க பல்லி.
Kusumpu
சந்திரன் ராஜா- //நந்தாவின் பதில்கள் நிஸ்தாருக்கு வழங்குவதாக மட்டும் கொள்ளமுடியாது இது இஸ்லாம் மதத்திற்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டுவதாகவும் கொள்ளமுடியும்// இக்கட்டுரை மதம் சார்பற்றது புரட்சி இஸ்லாமியரில் இருந்தும் தொடங்கலாம் என்று சந்தேகமாகச் சொன்ன விசயத்தை ஒரு மதப்பிரசாதமாகவும் பின்நோட்டங்களைக் கட்டுரையாகவும் மாற்றிது யார்? இஸ்லாத்துக்கோ அல்லது இஸ்லாமியருக்கோ தாங்கும் தன்மை இல்லை என்பது புரியவில்லையா? இஸ்லாத்தில் குறானுக்கெதிராக ஒருகேள்வியும் கேட்க இயலாது அப்படிப் கேட்டால் நீ முஸ்லீம் இல்லை என்கிறதாம் குறான். இதை நான் வாசித்திருந்தேன். இப்படியான கண்மூடித்தனமான போக்கு நானறிந்த வரையில் எனக்குத் தெரியவில்லை. எங்காவது ஒரு தனிமனிதனுக் கெதிராக ஒரு அரசு கொலை மிரட்டல் விட்டு விசயம் இஸ்லாத்தில் மட்டுமே எமதுகாலங்களில் நடந்திருக்கிறது. இங்குள்ள பின்நோட்டுங்களை வாசித்துவிட்டு இஸ்லாத்தின் மேல் வெறுப்புணர்வை ஏற்படுத்த ஏதுவாக இருந்தது நந்தாவா நிஸ்தாரா? ஆரம்பத்தில் நிஸ்தாருடன் உடன்பட்டே நந்தாவும் எழுதினார். சும்மாயிருந்த என்னையும் சுடுப்பேத்தி விட்டது யாரென்று பாருங்கள்.
Kusumpu
நிஸ்தார் நான் உங்களது பார்வையில் குலனின் அற்ரோனி!
உறவாகிக் கெடுப்பதுதான் இன்றைய அரசியல் யதார்த்தம் என்று பலதடவை கூறியும் ஏன் அடம்பிக்கிறீர்கள் நிஸ்தார். அன்பே மனிதம் குலனுக்காக இருக்கலாம் நான் கேள்விப்பட்டது அன்பே சிவம் என்றுதான்.
புலிகளை அரசு வென்றதும் கூடிக் கொண்டாடித்தான். அரசியல் என்று வந்தால் மனிதம் மனிதநேயம் குப்பையில்தான் கிடக்கும். இராஜதந்திரம் என்று வந்தால் கூடிக்கெடுப்பது என்ன ஓடியும் கெடுக்கலாம். மனிதத்தைப்பற்றி இஸ்லாத்துக்கு வக்காளத்து வாங்கும் நீங்கள் கதைக்கிறீர்கள். ஏன் உங்களது இஸ்லாமிய நாடுகளில் அரசியல் மனிதம் தாங்கியா நிற்கிறது. ஏன் மொட்டந்தலைக்கம் முளங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறீர்கள்.
//இப்போது உங்கள் சரணடையும் நேரம். உங்கள் அடிப்படை பிழையை// உமக்கு நீரே சமாதானம் சொல்லிக் கொள்கிறிர். விளங்கமாட்டேன் என்று அடப்பிடிப்பவருக்கு விளங்கப்படுத்துவதில் பிரயோசனம் இல்லை இன்று குலன் விட்டிருக்கலாம். இதைதான் சொல்வார்கள் நித்திரை மாதிரிக் கிடப்பவனை எழுப்புவது முடியாத காரியம். நீங்கள் முளித்திருந்தபடியே நித்திரை என்கிறீர்கள். குலன் குண்டிச்சட்டிக்குள் குதிரை என்று எழுதிய கட்டுரைக்குள் குதிரை ஓடியது நீங்கள்தான் நிஸ்தார். முஸ்லீங்கிடமிருந்தும் புரட்சி பிறக்கலாம் என்ற ஒருவரிக்காக அடிப்படைவாதத்தை கட்டுரை கட்டுரையாக பின்நோட்டும் விட்டது யார். நீங்கள் மதத்தைத் கதைக்கும் போது நாமும் மதத்தைக் காட்டித்தான் விளக்கம் கொடுக்க வேண்டியுள்ளது.
//காது குத்துவது” சைவர்கள் மாத்திரமல்ல எல்லா சமயத்தினரும் தான் செய்கின்றனர் என்று சொல்வதன் மூலம், இது பச்சிளம் குழந்தைகளுக்கு சித்திரவதையே இல்லை, ஆனால் நிச்சயமாக ஆண் குழந்தைகளுக்கு விருத்தசேதனம் // நந்தா அப்படிச் சென்னதில் என்ன தவறு இருக்கிறது. காதில் மட்டுமல்ல தொப்பிளிலும் எங்கெங்கோ எல்லாம் குத்துகிறார்கள். காது குத்துவதை விருத்தசேதனதுடன் ஒப்பிட இயலாது. விருத்தசேதனத்தின்போது ஏற்படும் இரத்த சேதாரம் அதிகம். வேதனை அதைவிட அதிகம். இறுதியான மருத்துவசெய்தியில் விருத்தசேதனம் தொற்று முக்கியமாக எச் ஐ வி பரவுதல் எழிது. உங்களது பின்னோட்டங்களில் நக்கலும் நளினமும் அடிப்படைவாதமுமே மேலோங்கி நிற்கிறது. இஸ்லாமியன் எந்த மதத்தையும் விமர்சிக்கலாம் ஆனால் மற்ற மதத்தவர்கள் இஸ்லாத்தை விமர்சித்தால் மரணதண்டனை கொலை அச்சுறுத்தல். இதன் விளைவுகளை இஸ்லாம் வெகுவிரைவில் ஐரோப்பாவில் சந்திக்கும். இஸ்லாத்தில் பெயரில் மனிதம் சாகும் இது உலகெங்கும் நடந்து வருகிறது. ஐரோப்பாவில் ஆரப்பிக்காது இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல உங்கள் அல்லாவை வேண்டுங்கள். நாங்களும் அதையே விரும்புகிறோம்: நிஸ்தார் பின்நோட்டத்தைக் கட்டுரையாக்காது உங்களது இஸ்லாமிய அடிப்படை வாதத்தையும் விதண்டா வாதத்தையும் ஒரு கட்டுரையாக பக்கம் பக்கமாக எழுதலாமே.
//சைவ தமிழ் பெண்கள் இந்த உதைகளுக்கு முகம் கொடுகாதவர் எங்கின்றீர்களா?/ ஐரோப்பிய ஸ்ரட்சிஸ்ரிக்கில் மதவடிப்படையில் முஸ்லீம் பெண்களே உதைகளுக்கு முகம் கொடுப்பவர்களாக உள்ளனர். கிறிமினல் ஸ்ரட்சிஸ்ரிக்கில் முன்னணி மன்னர்கள் முஸ்லீங்களே.
நிஸ்தார்! இஸ்லாமியப் பிரச்சாரம் செய்வதுதான் உங்களது உள்நோக்கமாக இருக்கிறது.
/கொண்டாடி கெடுப்பது” பற்றி குலன் தனது கட்டுரையில் எழுதியதற்கு விளக்கம் கேட்டேன். அத்தகைய நிலைப்பாடு பிழை என்றேன். மனிதத்துக்கும் அதற்கும் சம்பந்தமில்லை எனறேன் அவ்வளவு தான். இப்போது குலன் வெளியிட்ட பட்டியல் மூலம் அது பிழை என நிருபித்துள்ளோம் எனவே இனியும் சமயங்கள் பற்றிய உண்மைக்கு புறம்பான கிழ்தரமான ஆய்வுகள் தேவையில்லை என எண்ணுகிறேன்/ உமது இந்த எழுத்துக்களில் இருந்து புரிகிறது குலனில்லை உங்களது அல்லா வந்தாலும் நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர் என்று. குலன் போட்ட பட்டியலில் மட்டுமல்ல உலக அரசியலே கூடிக்குறிபறிப்புத்தானே நடக்கிறது. பட்டியல் போட்டால் புத்தகமாகிவிடும். நிரூபிக்காத ஒன்றை நிரூபித்தது என்கிறீர்கள். உறவாகிக் கெடுத்தல் நடக்கவில்லை என்கிறீர்களா?
Kusumpu
நிஸ்தார்- நானறிந்தவரை உலகெங்கும் இஸ்லாமியிர் பெண்களை படுக்கையறைப் பதுமைகளாகவும். வீட்டு வேலைக்காரிகளாகவும் பிள்ளைப் பெறும் இயந்திரமுகாகவே பாவிக்கிறார்கள். பெண்களின் சாதனையாளர் வரிசையில் இஸ்லாமியப் பெண்கள் இழி நிலையிலேயே உள்ளார்கள். இதற்குக் காரணம் இஸ்லாம் மட்டுமே. உலகின் 1/3பங்கைக் கொண்ட இஸ்லாமியரே சாதனையாளர்களாக அதிகம் இருக்கவேண்டியவர்கள். அதிலும் 2/3பங்கைக் கொண்ட பெண்களை விரல் விட்டுத்தான் எண்ணக்கூடியதாக இருக்கிறது. நிஸ்தார் போன்றோரின் அடிப்படை வாதத்தால் இஸ்லாமிய எதிர்பியக்கங்கள் ஐரோப்பாவில் ஆரம்பமாகி உள்ளது இது இஸ்லாமியரல்லாத எமக்கும் ஆபத்தானதே. பெண்களின் உயர்வுடைய உறுப்பான கிறிஸ்ரொடை அகற்றும் அக்கிரமம் இஸ்லாத்தின் பெயரால்தான் நடக்கிறது. குறான் கூறவில்லை என்று வாதிடாதீர்கள். இதை நடைமுறைப்படுத்துபவர்கள் இஸ்லாமியர்களே. மதத்தினூடாக மனம் கழுவிப் பெண்களை அடிமைகளாக வைத்துருக்கும் மதங்களுக் கெதிரான பிரசாரம் என்பது அத்தியாவசியமானது. பெண்ணுரிமை சமஉரிமை என்று பசப்பும் ஐரோப்பிய நாடுகள் கூட பெண்கள் மீதான இஸ்லாத்தின் கொடுமைகளை தட்டிக் கேட்க முன்வருவதில்லை. காரணம் பயங்கரவாதம் அச்சுறுத்தல்கள். இல்லாம் மதம் என்பற்கு அப்பால் அதிகாரத்தையே வைத்திருக்கிறது. அடிப்படையில் நபிகள் அரச அதிகாரத்தில் இருந்தவர் என்பதால் கூட இருக்கலாம்: இஸ்லாம் ஆத்மீகத்தை மட்டும் போதிக்கவில்லை பணம்:வருமானம்: பெண்ணைப் பயன்படுத்துதல்: குடும்பம் : உணவு: என்று எதையும் விட்டுவைக்கவில்லை. இதை மதம் சமயம் என்று சொல்வதை விட அதிகாரத்தின் இரும்புக்கரம் என்று கூறுவதே சரியானது.
//ஜெயராஜ் நன்றாக சாப்பிடுங்கள், சாப்பிட்டுகிட்டே பழகுங்கள் அதில் மனிதம் உள்ளது. //
மனிதம் விரும்புவோரே வாருங்கள் சாப்பிடுவோம். எனது அனுபவத்தில் இஸ்லாமியர்கள் ஆண்களை அநேகமாக தம் வீடுகளுக்கு அழைத்துப் போவதில்லை (எல்லோரும் அல்ல) அப்படிச் கூட்டிச் சென்றாலும் பெண்களை வரவிடுவதில்லை. ஆனால் மற்ற இனத்தவர்களின் வீட்டுக்குச் செல்லும் முஸ்லீங்கள் மற்ற இனப்பெண்களுடன் வில்லங்கத்துக்கே பழகுவார்கள். இஸ்லாமியப் பெண்கள் வேறினத்தவர்களை விரும்பினால் கெளரவ கொலைகள் தந்தையாலோ சகோதரனாலோ நிறைவேற்றப்படும். சொந்த மகளையோ சகோதரியையோ கொன்று விட்டு அதைக் சிறையிலிருந்தபடியோ கெளரவம் என்று பேட்டி கொடுத்து முஸ்லீம்களைப் பார்த்திருக்கிறேன். நிஸ்தாரின் பார்வையில் மனிதநேயம். வெளிநாட்டில் பிறந்த சொந்தமகளை தாய்குச் சுகவீனம் என்று உறவாடி அழைத்துச் சென்று ஒருசாரதியிடம் கொடுத்து அவன் அவளை கெடுத்தபின் காருடன் கடலுக்குள் தள்ளிய வளக்கு நான் வாழும் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. நானறிந்தவரை பெண்கள் மேல் இஸ்லாத்தினதும் இஸ்லாமியரினதும் பார்வை மிகக் கொடூரமானதே. ஆதாரங்கள் பல இருக்கிறது. இதை பின்நோட்ட நேயர்களும் அறிந்திருக்கலாம்.
nantha
நிஸ்தாரின் பதில்கள் அல்லது “இந்துக்களை” விமர்சிப்பவர்களின் கருத்துக்கள் இந்து தமிழர்களை பாதிக்காது என்பது சந்திரனின் கருத்து.
எனது கருத்துக்கள் அல்லது கேள்விகள் “புண்படுத்தும்” என்று எப்படி சந்திரன் கண்டு பிடித்தாரோ தெரியவில்லை. இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளவற்றை பற்றி இங்கு கேள்வி எழுப்பினால் அவற்றை உண்மையா பொய்யா என்பதனை ஆராய்வதை விடுத்து “புண்ணாக்கும்”, ம்” என்று கூறும் சந்திரன் “அன்னியர்களின்” மதங்களுக்கு வக்காலத்து வாங்கும் ஏஜன்டாகவே மாறி உள்ளார்.
இவர் இடதுசாரிக் கருத்துக்களை முன் வைத்துவிட்டு வலது சாரி பிற்போக்கு சித்தாந்தங்களுக்கு “முட்டு” கொடுப்பது ஐரோப்பாவில் “நாலாம் அகிலம்” என்றவர்களின் செயல்பாடாகவே தெரிகிறது. அமெரிக்காவிடம் பணம் பெற்று “இடது சாரி” சித்தாந்தம், தொழிலாளர் ஐக்கியம் என்று சரடு விடும் நாலாம் அகிலத்து “போலிகள்” செய்யும் பிரச்சாரத்தைப் போலவே சந்திரனும் செய்கிறார்.
இவருடைய கருத்தில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் இந்துக்களைப் புண்படுத்துவது மாத்திரம் “சமாதான” மாத்திரையாகவே தென்படுகிறது.
நிஸ்தார்:
இந்தியாவில்நடந்த ஷாபானு ஜீவானம்ச வழக்கைப் பற்றிப் படிப்பது நல்லது. “தலாக்” முடிந்த மனைவி ஜீவனாம்சம் கேட்டு இந்திய சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்ததும் அதற்கு கணவன் சார்பில் “இஸ்லாமிய” முறைப்படி ஜீவனாம்சம் கொடுக்கத் தேவையில்லை என்று வாதாடப்பட்டதும் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்ற இந்திய சுப்ரீம் கொர்டின் தீர்ப்பையடுத்து இந்தியாவில் முஸ்லிம்கள் கலவரம் செய்தது எப்படி என்று சொல்வதை விடுத்து என்னுடைய கருத்து “பிழை” என்று சொன்னவுடன் அல்லது இஸ்லாத்தில் கானப்படாத கட்டுக் கதைகளை அவிழ்த்து விட புறப்பட்டிருக்கிறீர்கள்?
ஷாபானு விவகாரம் பற்றி படித்துவிட்டுப் பதில் எழுதுவது நல்லது. “கட்டுக் கதைகள்” வேண்டாம். மவுலவி என்பவர் வாத்தியார் ஆனால் அந்த மவுலவிகள்தான் “இமாம்களாக” வருபவர்கள் என்பதையும் சொல்லியிருந்தால் உண்மை சொல்வதாக நம்பலாம்.
இலங்கை அரசில் நடைமுறைப் படுத்தப்படும் “காதி” கோர்ட் விவகாரங்கள் பாகிஸ்தானிலும் நடைபெறுகிறது என்று சொல்லுகிறீர்களா?
அப்படி காதிக் கோர்டில் “இருக்கும்” படித்த சட்டத்தரணிகள் பற்றி தகவல் தர முடியுமா? அப்படிப் படித்த ஆள்த்தானோ “மட்டையடி” கொடுக்கலாம் என்று மசூதியில் தீர்ப்புக் கூறியவர்? மட்டையடி பற்றி “பயங்கர மவுனம்” சாதிக்கும் நிஸ்தார் மற்றைய விவகாரங்கள் பற்றீ சொல்லுவது வெறும் ஏமாற்று வேலை என்பதெ என் கருத்து.
நிஸ்தாருக்கு வக்காலத்து வாங்குபவர்கள் “மட்டையடி” பற்றி விளக்கம் சொல்வது நல்லது.
Kusumpu
//அதாவது குசும்புவும் நந்தாவும் ஏன் நீங்களும் கூட சமங்களை வம்புக்கிழுத்துக் கொண்டே என் மீது குற்றம் சாட்டுவதை நிறுத்தவில்லை.// சமயங்களை வம்புக்கிழுத்தது நாங்களா நீங்களா? மேலே போய் பின்நோட்டங்களைப்பாருங்கள். கட்டுரையோ மதம் பற்றியது அல்ல. இஸ்லாம் மதமே தவிர சமயமாகாது. உடன்கட்டை ஏறுவதைப்பற்றி உடன்கட்டை ஏறியிருந்தீர்கள். அது எப்படி இந்தியச்சமூகத்தில் ஏற்பட்டது என்று அறிவீரா? முகாலாக (முஸ்லீங்கள்) படையெடுத்து நாட்டை வென்றபின் முதலில் அவர்கள் செய்வது இராணியை கெடுப்பது பெண் மகளைக் கெடுப்பது போன்ற காரியங்களால் கணவன் இறந்ததும் மானமே மேலானது என்று தான் உடன்கட்டை ஏறல் ஆரம்பித்தது. இதை ஒரு முஸ்லீம் சொல்லக் கூடாது. நான் மதவாதியில்லாதபோதும் இஸ்லாத்துக் கெதிராக என்னை எழுதத் தூண்டியது நிஸ்தாரின் அடாவடித்தனமான இஸ்லாம் பற்றிய அடிப்படைவாதக் கருத்துக்களே.
//இதையெல்லாம் விட இந்த கல்லும், புல்லும் சாகும் போது இந்த கன்னகிகளை உடன்கட்டை ஏற்றினிர்களே இதைவிட மிருகத்தனம் எங்கே உள்ளது? இதுவும் உங்கள் கண்களுக்கு அகப்படாமல் போனது ஏன்// உடன்கட்டை ஏற்றியது நாங்களா நீங்களா? புரட்டிப்பாருங்கள் சரித்திரத்தை எல்லாம் புரியும். முகலாயர் வருகைக்கு முன் இது இந்தியாவில் நடைபெறவில்லையே ஏன்? ஈழத்திலோ அண்டைய பண்டைய இந்து நாடுகளிலோ நடைபெறவில்லை ஏன்? அடிப்படைக்காரணிகளே இஸ்லாம்தான். மதுரையெ வென்ற சுல்தான் ஒருவன் 500 தமிழ்பெண்களை இழுத்துப்போய் வடக்கு சுல்தானுக்கு கொடுத்தானாம். இது இஸ்லாமியருக்கு பாதகமாய் தெரியவில்லை?
அலகுவசல்லம் நபியார் எனது பார்வையில் ஒரு பெடோபீல் அதாவது குழந்தையை பாலியல் வல்லுறவுக்காகத் துர்பியோகம் செய்தவர். அவற்றையெல்லாம் நியாயப்படுத்து உங்களால் எப்படி முடிகிறது? இந்தியச்சரித்திரங்களை புரட்டிப்பாருங்கள் இஸ்லாமியரால் இடிக்கப்பட்டு இந்துக்கோவில்கள். அழிக்கப்பட்ட பெண்மை. அடக்கப்பட்டு வெட்டி எறியப்பட்ட உயர்கள் அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த இஸ்லாமிய அரசுகள் இந்தியாவில் மட்டுமல்ல போன போன நாடுகளில் பாலியலை ஒரு ஆயுதமாகவே பாவித்து வந்துள்ளார்கள். ஐரொப்பாவரை வந்த ஒட்டோமான் அரசும் தவிர்ப்பில்லை. இன்னும் குப்பைகளைக் கொட்டக் கனக்க இருக்கிறது முட்டிவிடும் என்று எண்ணுகிறேன்.
//பின்லாடனுக்கு பின் செல்வோர் என்று சொல்லாமல் விட்டிர்களே அது வரை சந்தோசம்//
நந்தா சொன்னாலும் தவறில்லைப்போல் இருக்கிறதே நிஸ்தார்- உங்களுக்கு சைவம்: இந்து: தமிழ் என்ற எல்லாத்தையும் போட்டுச் சாம்பாறாக்காதீங்கள். சைவம் இந்துவுக்குள் ஒரு பிரிவு அடுத்து “” கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்” அதைச் சொன்னது சைவம் அல்ல. தமிழ். உங்களது மொழியில் நீங்கள் நந்தாவுக்குச் சொன்னதையே உங்களுக்கும் திருப்பிச் சொல்கிறேன் தெரியாத விசயத்தில் மூக்கு நுளைக்கக் கூடாது நிஸ்தார்.
//போன “தலாக், தலாக், தலாக்” என்று மூன்று முறை ஒரு “மெளலவி”(அறபு படிப்பிக்கும் வாத்தியார்) க்கு முனால் சொல்லி விட்டால் ஆண் ஒருவன் விவாகரத்து செய்து விடலாம் என்று ஜோக் அடிக்கிறிர்கள். // இது ஜோக்கில்லை… இஸ்லாமியர்கள் பாக்கிஸ்தான் இந்தியமுதல் குறுடிஸ்தான் வரை நடைபெறும் உண்மை. இலங்கையில் எப்படியோ அது எமக்குத் தெரிய நியாமே இல்லையே. முஸ்லீங்கள் சோனகர்கள் ஒரு மூடப்பட்ட சமூகமாகவே வாழ்ந்தார்கள். தலாக் பற்றி அறியிவில்லை என்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
//குரங்கில் இருந்து பிறந்தாக தங்களை சொல்லும் மனிதர்களை விட இது எவ்வளவு மேலான விடயம்// எது மேலான விடயம். விஞ்ஞானம் சொல்கிறது குரங்கிலிருந்து கூர்ப்படைந்தான் மனிதன் என்று. நீங்கள் அப்படியே கூர்ப்படையாமலேயே இருக்கிறீர்களா நிஸ்தார். ஏன் விதண்டாவாதம் செய்கிறீர்கள்?
//நாங்கள் தமிழர் அல்லர் என்று சொல்ல ஏன் பலவந்தமாக நீங்கள் “தமிழர்” தான் என எங்களை அடக்க முனைகின்றிர்கள்// ஓகோ தமிழர் என்பது அடங்கிப்போவதற்குரியதோ. ஐயோ வேண்டாம் நீங்கள் தமிழ்மொழியைப் பேசாது அரபு பேசினாலும் சந்தோசம்!!. இணைந்து நிற்பதை விடக் குறுகி நிற்பதையோ சோனகன் விரும்புகிறார். நாம் சேர்த்துக் கொள்ள நினைத்தது தப்பு. சோனகன் இலங்கையன் அல்லவே. புலிகள் கலைத்ததை சரியென்று சொல்கிறார் நிஸ்தார்.
//ஏதாவது இரகசிய திட்டம் உள்ளதோ, சிங்களவர்களிடம் “சோனகர்” யார் என்று கேட்டால் மேலும், கீழும் பார்பார்கள் என்று குலன் சொல்லியுள்ளிர்கள். “சோனகர்” யார் என்று உங்களுக்கு தெரியாவிடால்// நிஸ்தார் மீண்டும் மீண்டும் ஏன் மாறாட்டம். இதைச்சொன்னது நந்தா. உங்களின் உரைப்படி நான் குலனின் அற்றோனி… நந்தாவுக்கும் அற்றோனியாக மாறவேண்டி வரும்போல் இருக்கிறது. எனக்கென்ன உழைப்புத்தானே. நிரூபிக்காத எதையும் தான் தப்ப தான் தப்ப என்று தட்டுகிறார் நிஸ்தார். என்ன குலன் என்ன கோடை விடுமுறையோ? காணவில்லை தேசப்பக்கம்.
Kusumpu
இன்றைய இலங்கையின் புதிய தகவல் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கூட இருந்து ஐ.தே.கட்சியின் முதுகில் குத்திவிட்டு குழிபறித்து விட்டு மகிந்த கொம்பனியுடன் இணைந்து கொண்டது. இந்த முஸ்லீம் காங்கிரஸ் மகிந்த கொம்பனியை வாய்வீச்சுகளால் வெட்டித் தீர்த்ததையாவரும் அறிந்ததே. இன்றைய அரசியல் நிலையில் ஐ.தே.கட்சி மிகப்பலவீனமான நிலையில் உள்ளது. இந்த நிலையில் ஆதரவாக இருக்க வேண்டிய முஸ்லீங்காங்கிரஸ் கூடியிருந்தே குழிபறித்துள்ளது. இது இன்றை புதிய உதாரணம். இது மனிதத்துக்கு முரணானது என்றாலும் இதுதானே அரசியல் ஜதார்த்தம்.
nantha
சோனகர் என்று வேறாக இருக்க வேண்டும் என்றால் செய்யட்டும். தமிழர் என்று வரும் “கோட்டா” பிரச்சனைகளில் மூக்கை நுழைக்காமல் இருக்கும்படி அவர் முஸ்லிம்களை கட்டுப்படுத்தட்டும்!
மதுரைக்குப் படையெடுத்த மாலிக் காபூர் “கோவில்களை” மாத்திரம் கொள்ளையிடவில்லை. 500 அல்ல 5000 பெண்களை கடத்திக் கொண்டு டெல்லி சுல்தானுக்குக் காணிக்கையாக்கியவன்.
இஸ்லாத்தில் பெண்களுக்கு தகரப் பேணியின் மதிப்புக் கூட கிடையாது. காபிர் பெண்கள் என்றால் கண்டிப்பாக பாலியல் அடிமைகள்தான்!
Abdul
நந்தா குசும்பு மற்றும் இன்னும் பிற காழ்ப்புணர்வுகளுடனும் துவேசத்துடனும் கருத்தெழுதிக் கொண்டிருக்கும் அன்பர்களுக்கு….நீங்கள் அழகு தமிழில் தீட்டியிருக்கும் உங்கள் கருத்துக்கள் நீங்கள் யார் என்பதை அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றன. அந்த வகையில் “குண்டுச் சட்டிக்குள் குதிரை” பொருத்தமான தலைப்பு உங்களின் பின்னோட்டங்களுக்கு. தலைப்பிட்ட குலனுக்கும் உங்களுக்கும் நன்றி. நான் இங்கு சில இணைப்புக்களை வைத்திருக்கின்றேன் அது உங்களுக்கு பதிலளிப்பதற்காக அல்ல. நயவஞ்சக மேற்குலகின் இஸ்லாத்திற்கெதிரான நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியான “மீடியா மாபியா”விற்கு நீங்கள் சேவகம் செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்பதனை நிரூபிப்பதற்காக மட்டுமே.
youtube.com/watch?v=maY-kmTeIjc&NR=1
youtube.com/watch?v=hW_T5ELSLS8&feature=related
youtube.com/watch?v=SMG0SeI7dVI&NR=1
youtube.com/watch?v=KAdwy5IJzj4&feature=related
Abdul
//நிஸ்தார் 1990 கதை அல்ல நிஜம் நிஸ்தார். /சோனகரை 24 மணி நேரத்திற்குள் இன சுத்திகரிப்பு செய்கிறார்கள்/ இனச்சுத்திகரிப்பு என்பது மிதப்பான சொற்பதமாகும். இனவிரட்டல் என்பதே சரியாது.//குலன்
ஒரு இனத்தைக் கொன்று குழி தோண்டிப் புதைத்து கருவோடு அழித்து விடுவது மாத்திரமல்ல இனச் சுத்திகரிப்பு. ஒரு இனத்தை அதன் வாழ்வாதாரங்களிலிருந்து சுத்தமாக விரட்டியடிப்பதும் இனச்சுத்திகரிப்பே.
//இலங்கைக்கு அப்பால் உலகெங்கும் ஜிகாத் என்ற கொன்று குவிக்கப்படும் அப்பாவிகளுக்கு என்ன சொல்லப்போகிறீர்? மதத்தின் போரால் முக்கியமாக இஸ்லாமியர்கள் மற்ற இனத்துடன் சேர்ந்து வாழமுடியாது போரைத் தூக்கித் திரியும் மனிதவிரோதங்களை எநதக் கூறானில் எழுதப்போகிறீர்கள்//குலன் மேலுள்ள இணைப்பை கண்டிப்பாகப் பார்க்கவும்.
//புலிகளுடன் உறவாடி பின் இராணுவத்துக்கும் பொலிசுக்கும் துப்புக் கொடுத்து வந்தவர்கள் யாழ்பாணத்து முஸ்லீம்கள். அதைப் புலிகள் பலதடவை கண்டித்தார்கள். அதன்பின்புதான் முஸ்லீம்களைக் கலைத்தார்கள்.// குசும்பு
அப்போ போராட்டம் முள்ளி வாய்க்கோலோடு சங்கமமாகிப் போனதற்கும் வன்னியில் வசிக்காத முஸ்லீம்கள்தான் காரணம்?? அதுசரி உங்களுக்குள் வேளாளர் அம்பட்டர் பறயர் எனப் பல பிரிவுகள் அவர்களுக்கென தனிக் கோயில்களென சமய முன்னோர்கள் வகுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அப்பிரிவினைச் சார்ந்த ஒருவர் புலிக்கெதிராகச் செயற்பட்டதற்காக அவர்களின் கோயில்களுக்குள் புகுந்து அவர்களைக் கொலை செய்ததாகவோ அல்லது அவர்கள் வாழ்ந்த இடங்களிலிருந்து அவர்களை 24 மணி நேரத்துள் விரட்டியடித்தாகவோ நான் கேள்விப்படவில்லை. ஏன் ஒரு அன்ரனியோ / அல்பர்டோ செய்த தவற்றுக்காக அவர்களின் சர்ச்சுகளோ அல்லது அவர்கள் சார்ந்த சமூகமோ களம் கொள்ளப்படவில்லை. அது ஏன் குசும்பு?
//ஆண்குறி அறுப்பதும் பெண்குறி அறுப்பது இஸ்லாத்தில் வளமையான ஒன்று. சோமலியா போன்ற முஸ்லீம் நாடுகளில் இளம் பெண்களின் குறி போத்திலோடுகளால் அறுக்கப்பட்டு இறுகத்தைக்கப்படுகிறது. ஆணுக்கு இறுக்கமாக இருக்கமாக இருக்கவேண்டுமாம்.//குசும்பு
புதிய தகவலுக்கு நன்றி. அது சரி “மீடியா மாபியா”வின் உபயத்தால் தங்க ஆபரணங்களுடன் கத்தியால் மனிதனின் கழுத்தை அறுத்துக் காட்டும் அந்த முஸ்லிம்களுக்கு பெண் குறியை அறுப்பதற்கு மட்டும் கத்தியில்லாமல் “போத்திலோடு” கைகொடுத்த மர்மம் என்ன குசும்பு?? ஓ….. அவர்களிடம் பெண் அடக்குமுறை அதனால்தான் ஆனுக்கு கத்தி பெண்ணுக்கு போத்திலோடு.(நிச்சயமாக உங்கள் உறவினரில் ஒருவர்தான் புலியின் பிரச்சார பிரிவில் முக்கிய பொறுப்பில் இருந்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம்)
//ஐரொப்பாவிலும் நாம் பலமுஸ்லீங்களுடன் பழகியிருக்கிறேன்.அவர்களும் நன்றாகவே பழகிட்டு இழுத்துவிழுத்துவார்கள்//.குசும்பு
குசும்பு நீங்கள் “இந்த கிரடிட் கார்டில் அட்டைய போடும் முஸ்லீம்கள் வங்கியில் கடன் எடுத்து கம்பி நீட்டும் முஸ்லீம்கள் அரச உதவித் தொகையில் திண்று கொண் ஊர் சுற்றித்திரியும் முஸ்லீம்கள் இந்த ரேஞ்சில் உங்கள் நட்பை வைத்துக் கொள்ள வேண்டாம் கொஞ்சம் வெளியில் வர முயற்சி செய்யுங்கள்.
//இதைச் சிறிது ஆராய்தபோது தெரியவந்தது கூறானில் நீ இஸ்லாமியனுக்கு மட்டும் நேர்மையானவனாக இரு என்கிறதாம்.//குசும்பு
குசும்பு நீங்கள் யாரோ ஒரு முஸ்லீம்கள் தனிப்பட்ட ரீதியில் பாதிக்கப்பட்டதற்காகவோ அல்லது காழ்ப்புணர்வின் காரணமாகவோ இப்படியான அவதூறுகளைச் சொல்வதாக இருந்தால் 1000 சொல்லுங்கள். எந்தச் முஸ்லீம்க்கும் எந்தக் குறையும் வராது. ஆனால் தகவல்களின் அடிப்படையில் என்றால் அதனை மாற்றிக் கொள்ளுங்கள்.குர்ஆனில் எந்த இடத்திலும் இவ்வாறு சொல்லப்படவில்லை.
//இனப்பெருக்கத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தும் ஒரே மதமும் இஸ்லாமும் முஸ்லீங்களுமே. அல்லாவுக்கு நாம் இந்த விஞ்ஞான உலகில் கருத்தடை முறைகள் பற்றி விரிவுரை ஒன்று நடத்தவேண்டும்//. குசும்பு
முள்ளந்தண்டில் சக்தியுள்ளவன் தன்பிள்ளைச் செல்வங்களை பராமரிக்கும் தகுதி கொண்டவன் பிள்ளை குட்டிகளைப் பெறுகின்றான். இதில் குசும்புவுக்கென்ன பிரச்சினை?? அடுத்தவரின் இயலாமைக்கு இஸ்லாம் பொறுப்பேற்க முடியாதல்லவா குசும்பு??? விஞ்ஞான விரிவுரை பற்றி குசும்பு கதைக்கின்றார்.தங்களுக்கு விஞ்ஞானத்தைக் கிரகிக்கும் ஆற்றல் இருந்தால் கீழுள்ள இணைப்பை அவசியம் பாருங்கள்.இப்புதிய நுhற்றாண்டின் அதிசயம் என விஞ்ஞானம் பெருமை கொள்கின்ற “பிக்பேங் தியறி” அதாவது இப்பிரபஞ்சத்தின் பிறப்பு எப்படி நிகழ்ந்தது என்பது காட்டு மிராண்டிகளாகிய முஸ்லிம்களுக்கு 1400 வருடங்களுக்கு முன் விவரிக்கப்பட்டிருக்கிறது என்பதை விளங்கிக் கொள்வீர்கள்.youtube.com/watch?v=GZXz5SXWOLE&feature=related
hவவி://றறற.லழரவரடிந.உழஅ/றயவஉh?எஃளுசயழுஓஒஞமுஒஞலு
hவவி://றறற.லழரவரடிந.உழஅ/றயவஉh?எஃபுணுஓண5ளுஓறுழுடுநுரூகநயவரசநஃசநடயவநன
//என்னைப் பொறுத்தமுறையில் குலன் கூறுவதுபோல் தமிழர்களாகப் பார்ப்பது ஆபத்தானது. இலங்கையில் ஒரு அரசியல் தீர்வு வந்தால் அவர்களைத் தனியாகப் பிரித்து விடுவதே யாவருக்கும் நன்மை பயக்கும்//.குசும்பு
தமிழரசுக் கட்சியில் தொடங்கி புலிக்கட்சி வரை; இராணுவச் சமநிலையில் இருந்த போதும் இல்லாத போதும் அதைத்தான் சொல்லியும் காட்டியும் வருகின்றீர்கள்.
//இந்து மதம் “சுதந்திரக் காற்றை” அதிகளவு கொண்டுள்ளது. மற்றைய மதங்கள் “வியாபர நிறுவனங்களுக்கு” ஒப்பான கொள்கைகளை கொண்டிருக்கின்றன//நந்தா
முற்றிலும் உண்மையென்பதை ஐரோப்பிய நகரங்களுக்கு சென்றபோது தெரிந்து கொண்டேண்.
//குலன் உங்கள் கட்டுரை ஒரு திட்டமிடபடாத போராட்டமான நடைபயணம் பற்றியதே(குண்டு சட்டியில் குதிரை ஓடல்) மிக அழகான கருத்தான தலையங்கத்துடன் வந்த கட்டுரை அவரை அவர் பாட்டுக்கு நடக்க விட்டு விட்டு இன்று நந்தா, மொகமட்டுடன் திசைமாறி பயணிப்பதாகவே நான் கருதுகிறேன்//பல்லி
சந்தர்ப்பம் பலரது சுயரூபங்களை வெளிக்கொணருகிறது.
//கிறித்தவம்/இஸ்லாம் என்ற சமயங்கள் சமத்துவம், சமாதானம் என்பனவற்றை உபதேசம் செய்வன அல்ல. சமாதனம் பற்றிப் பேசுபவனை “பலவீனமானவன்” என்று கருதுபவை// நந்தா
இது நந்தா தெரிந்து வைத்துள்ள “குண்டுச்சட்டி”
//ஐரொப்பாவில் மதத்துக்காவே போரை நடத்தினார்கள்.”அல்லாகூ அக்பர்” என்ற கோசமே போரைத்தானே நினைவுபடுத்துகிறது நந்தா.//குலன்
குலனுக்கு கைகொடுத்த மாஸ் மீடியாவுக்கு நன்றி.”அல்லாஹ் அக்பர்” இவ்வார்த்தை முஸ்லிம்கள் தங்கள் மனோதிடத்தையும் ஒருமைப்பாட்டையும் வலியுறத்துவதற்காக மட்டும் பயன்படுத்துவதில்லை. தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதற்கும் தொழுகைக்கு அழைப்பதற்கும்தான் (அதான்) பயன்படுத்துகின்றார்கள்.
//முஸ்லீங்களுடன் சிங்களவர்கள் கலவரம் செய்தபோது தன்தலையை நுளைத்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளிவைத்து இன்று தமிழர்களுக்கு இவ்வளவு அழிவுக்கும் காரணமாகிப்போன சேர் பொன் இராமநாதன் போன்றவர்களை நீங்கள் அறிந்திருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டீர்கள். குறைந்தபட்சம் தமிழர்களுக்கு நன்றிக்கடனுடையவராக இருந்திருப்பீர்கள்//குலன்
எப்படி அவரை அறியாமலிருக்க முடியும் இலங்கைத் தமிழ் பேசும் சமூகம் தெரிந்து கொண்ட முதலாவது “காட்டிக் கொடுப்பு” அவரால்தானே நடந்தது. நன்றி செய்யுங்கள் நிஸ்தார்.
//இந்த மதம் தோன்றிய மத்திய கிழக்கில் இன்று அமைதி இருந்த காலமே மிக மிக் குறைவு.//குலன்
யாரால்?? தயவு செய்து உண்மை பேசுங்கள்(?)
mohan
/நாம் வாழும் பகுதியில் சைவ கோயிலுக்கு 20 யார் தூரத்தி தமிழ் கடைகள் “சைவ கடவுளர்களின் பெயரில்”, உள்ளே அந்த சைவம் “பஞ்சமா பாதங்களாக” கருதுபவைகளில் ஒன்றான குடி சர்வசாதாரணமாகவே கிடைக்கிறது. இன்னொரு பாதகமான செயலான கொலை முயற்சிகளும் சைவ ஆலயங்களில் நடந்தேர்கிறது, பகல் கொள்ளை வேறு ஆலய தர்ம கர்த்தக்களால் நடந்தேர்கிறது. என்ன சொல்ல போகுறிர்கள் நந்தா?/
நிஸ்தார் இதைப் பின்னூட்டம் எழுதும் நந்தாவிடம் கேட்பதை விட்டுவிட்டு பக்கத்தில் இருக்கும் ஜெயபாலனைக் கூப்பிட்டுச் சொல்ல வேண்டியதுதானே. எத்தனை கோயில்களில் நடக்கும் திருகு தாளங்களை வெளிக் கொண்டுவந்தவர் ஜெயபாலன்தானே. உங்களுக்குத் தெரிந்த உண்மைகளை ஏன் மூடி மறைக்கிறீங்கள். பகல் கொள்ளை எந்தக் கோயிலில்?? யார் அந்த ஆலய தர்மகத்தா?? விபரங்களை ஜெயபாலனிடம் கொடுங்கள். ஏன் ஒளிக்கிறீங்கள். மற்றது கொலை முயற்சிகளும் நடந்தேறுகிறது என சிம்பிளாக சொல்லிப் போட்டுப் போகிறீர்கள். சட்டம் தெரிந்த நீங்கள் அந்தத் துறையில் இருந்துகொண்டு சமூகத்தில் நடக்கும் அநீதிகளை ஏன் மறைக்கிறீங்கள்??
Kusumpu
//நந்தா குசும்பு மற்றும் இன்னும் பிற காழ்ப்புணர்வுகளுடனும் துவேசத்துடனும் கருத்தெழுதிக் கொண்டிருக்கும் அன்பர்களுக்கு//
உலகமகா பகிடிதான் சோனகர்மேல் காழ்புணர்வு என்பது. இதைப்பார்த்தால் பில் கேட் தெருப்பிச்சைக்காரன் மேல் பொறாமை கொண்டமாதிரியல்லவா இருக்கிறது. அப்துல்!/நீங்கள் அழகு தமிழில் தீட்டியிருக்கும் உங்கள் கருத்துக்கள்/ தமிழர்களுக்கு சோனகர் தமிழ்ர்களுக்குத் தமிழ்படிப்பிக்காமல் இருப்பது நல்லது. உங்களின் தமிழும் உச்சரிப்பும் நாம் நன்கு அறிவோம். கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை.
/அந்த வகையில் “குண்டுச் சட்டிக்குள் குதிரை” பொருத்தமான தலைப்பு உங்களின் / இஸ்லாத்துக்குள் நின்று குதிரை ஓடுவது யார்? குலனுக்கு நாங்களும் நன்றி சொல்கிறோம்.
ஏன் மற்றவர்கள் விரட்டப்படவில்லை என்று கேட்டீர்கள். அங்கே நடந்தது மதம் சார்ந்த போரல்ல இனப்போர். நிஸ்தாரின் கூற்றுப்படி நீங்கள் தமிழர்கள் அல்லவே நீங்கள் சோனகர்கள் அல்லவா. இதை நான் நிஸ்தாரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன். ஈழத்தில் நடந்தது இனப்போர் என்பதை அறியாமலா இவ்வளவு காலம் இருந்திருக்கிறீர்கள்?
/இலங்கைக்கு அப்பால் உலகெங்கும் ஜிகாத் என்ற கொன்று / இலங்கைக்கு அப்பால் மட்டுமல்ல இலங்கையிலும் இஸ்லாமிய மதவெறி கொலைகாரர்கள் உள்ளார்கள் அறியவில்லையா?
யுரியூபில் யாரும் தரவேற்றலாம் தெரியுமா. உங்களின் வாரிகளும் ஏற்றலாம். இதை ஆதாராமாக்க முயற்சியாதீர்கள்.
இனச்சுத்திகரிப்பையும் இனத்தை வாழ்விடத்தில் இருந்த அகற்றுவதையும் ஒன்றாக் காட்ட முயற்சிக்கு ஏதாவது பட்டம் கொடுக்கலாமே. சிந்துவெளி நாகரீகம் தமிழர்களின் உலகின் தொன்மையான நாகரீகம். அங்கு வாழ்ந்த தமிழர்கள் திராவிடர்கள் இன்று எங்கே? சுத்திகரிக்கப்பட்டார்களா? அரேபியர்கள் யூதர்களைச் சுத்திகரித்தார்களா? இன்று சிந்துநதி கடையுடைத்தப்பாய்து பெருந்தொகையான மக்களை இடம்பெயரச் செய்துள்ளது. இதுவும் சுத்திகரிப்பா? மனிதனின் வாழ்வாதாரங்கள் எதிரியால் நண்பர்களால் இயற்கை அனத்தங்களால் அழிக்கப்படலாம் இவை ஒருபோதும் இனச்சுத்திகரிப்பாகாது. யூதர்கள் தம்நாட்டை விட்டுப்போனது இனச்சுத்திகரிப்பல்ல.கிட்லர் செய்ததுதான் இனச்சுத்திகரிப்பு. இனியாவது தமிழ்பதங்களை முறைகேடாகப் பாவிக்காது இருப்பது நல்லது.
/ஒரு அன்ரனியோ / அல்பர்டோ செய்த தவற்றுக்காக அவர்களின் சர்ச்சுகளோ அல்லது அவர்கள் சார்ந்த சமூகமோ களம் கொள்ளப்படவில்லை. அது ஏன் குசும்பு?/ கிறிஸ்தவர்கள் மதரீதியாக சைவகளுக்கு பிரச்சனையானவர்களாக இருந்தாலும் அவர்கள் தமிழர்களே உங்களைப்போல் நேரத்துக்கு நேரம் தமிழர் என்றும் சோனகர் என்று சொல்வதில்லை. இலங்கையில் உள்ள தமிழர்கள்தான் முதலில் புத்தமத்தைத் தழுவியிருந்தவர்கள் என்ற வரலாற்று உண்மை தெரியுமா? புத்தமதமே வடபகுதியினூடாத்தான் பரவியது. தமிழ் பெளத்தர்கள் என்று யாராவது சொன்னால் கூட நாம் பெருமைப்படுவோம். சோனகர்கள்தான் சொல்லித்தந்தார்கள் தாங்கள் தமிழர்கள் இல்லை என்று.
பெண்குறி ஆண்குறி அறுத்தலைப் புதியதகவல் என்கிறீர்கள் அப்துல். இது பலருக்குக் கற்காலத்தகவல். தமிழில் கூட வெளியானது. நம்நாடு எனும் பத்திரிகையில் “சோமாலியப் பெண்கள் நலமடிக்கப்படுகிறார்கள்” என்ற தலைப்பில் படங்களுடன் வெளிவந்தது. உலகெங்கும் பத்திரிகைகள் சஞ்சிகைகள் பலவற்றிலும் தலைப்பு அம்சமாகவந்தது. இதைப் புதிய தகவல் என்கிறீரே. வெட்டுவதற்குக் கத்தியில்லை போத்திலோடா என்றீர்கள் அதைக் கேட்கவேண்டியது என்னிடமல்ல இஸ்லாமிய சோமாலியரிடம்தான்.
/முள்ளந்தண்டில் சக்தியுள்ளவன் தன்பிள்ளைச் செல்வங்களை பராமரிக்கும் தகுதி கொண்டவன் பிள்ளை குட்டிகளைப் பெறுகின்றான்/ அவர்களைச் சரியாகப் பார்ப்பதும் முக்கியம். சோனகதெருவில் பார்த்த நாங்கள் தானே. இப்போ ஐரோப்பாவில் பார்க்கிறோம். மீண்டும் கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை. உங்களுக்குத் தெரியாமா ஐரோப்பாவில் வாழும் வெளிநாட்டவர்களில் அரச உதவிப்பணத்தில் இருப்பவர்களில் பெருந்தொகையானவர்கள் இஸ்லாமியர்களே என்பது உங்களுக்கு வேதனை தரும் விசயமாக இருக்கலாம்.
நீங்கள் தந்த இணைப்பை மீண்டும் தருகிறேன் போய் பாருங்கள் என்ன இருக்கிறது என்றுஇ .லழரவரடிந.உழஅ/றயவஉh?எஃபுணுஓண5ளுஓறுழுடுநுரூகநயவரசநஃசநடயவநன
/தமிழரசுக் கட்சியில் தொடங்கி புலிக்கட்சி வரை; இராணுவச் சமநிலையில் இருந்த போதும் இல்லாத போதும் அதைத்தான் சொல்லியும் காட்டியும் வருகின்றீர்கள்/ இல்லையே. உங்களைத் தமிழர்களாகத்தானே பார்த்தார்கள்.
//சந்தர்ப்பம் பலரது சுயரூபங்களை வெளிக்கொணருகிறது// அப்துல் இது மிகப்பெரிய உண்மை இன்று சோனகன் தமிழன் அல்ல என்று உறுதியான நிலைப்பாட்டுக்கு எம்மைக் கொண்டுவந்த விட்டு இவ்வளவையும் எழுதப்பண்ணியிருக்கிறதே சந்தர்ப்பம் தானே.
//இலங்கைத் தமிழ் பேசும் சமூகம் தெரிந்து கொண்ட முதலாவது “காட்டிக் கொடுப்பு” அவரால்தானே //சேர். பொன் இராமநாதனுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். அன்று இராமநாதன் இல்லாமல் இருந்திருந்தால் சோனகர்களுக்கு அன்று கோவிந்தா தான். என்னத்தை இராமநாதன் காட்டிக் கொடுத்தார். எதாவது கடத்தி வைத்திருந்தீர்களா? புலிகளைப்போல் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டீர்களா? அப்படியானால் ஏன் சோனகரும் சிங்களவரும் சேர்ந்து தேர் இழுத்தீர்கள்? பகிடிக்கு இழுத்தீர்களா? இதன் பின் எந்த ஒரு இஸ்லாமிய சிங்கள கலவரம் வரவில்லையே. அப்படி இராமநாதன் காட்டிக்கொடுத்திருந்தால் தமிழரைத்தான் காட்டிக்கொடுத்திருக்க வேண்டும். அதற்கு நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? மத்திய கிழக்கில் என்றும் அமைதியிருந்ததில்லை என்பதற்கு யாரால் என்று கேட்கிறீர்கள் குலனிடன். நிச்சயமாக முஸ்லீங்களால்தான் யூதர்களால் என்கிறீர்களா? அப்படியானால் பாக்கிஸ்தானில் யாரால்? இலங்கையில் யாரால்? சீனாவில் யாரால் (உகுரு முஸ்லீங்கள்) பிலிப்பைந்தில் யாரால். இல்லை தமிழர்களால் என்கிறிரா? சச்சேனியாவில் யாரால் எங்கு இல்லை இந்த இஸ்லாமியனின் பிரச்சனை. மற்ற இனங்களுடன் புரிந்துணர்வும் நட்புடனும் வாழமுடியாத மதமே இஸ்லாம். மேலே கூறியதை விட வேறு உதாரணங்கள் தேவையில்லை. ஒரு சின்னஞ்சிறிய இஸ்ரோவேல் மத்திய கிழக்கையே ஆட்டுகிறான் என்பதில் இருந்து தெரியவில்லையா? உங்களது ஒற்றுமை.
Kusumpu
மோகன் நல்ல விசயம்தான் எழுதியிருந்தீர்கள்.
இஸ்லாமோ சோனகனோ விமர்சிக்கமுடியாத கொம்பர்களா? பூசாரிகளையும் கோவில்களைப் பற்றியும் கதைக்கிறீர்கள். அப்படியானால் இமாமிகளினதும் மசூதிகளில் நடக்கும் கூத்துக்களை அறியவில்லையோ? மோகன்! நந்தா என்ன எண்ணுகிறாரே எனக்குத் தெரியாது ஆனால் என்கருத்துப்படி பூசாரி பிராமணிகள் தான் இந்து மதத்தில் பரமவிரோதிகள். இந்து மதத்தின் ஆணிவேரையும் அடிநாதத்தையும் பிடுங்கியவர்கள் பிராமணியர் எனும் பாப்பாணிகள்.
nantha
இஸ்லாத்தின் கொள்கைகள், கொலைகள் பற்றி பகிரங்க விமர்சனங்கள் வந்தவுடன் அவை “சகிக்க” முடியாதவையாகி விட்டன. இஸ்லாம் பற்றி இஸ்லாத்தின் குரான், கதீஸ், சிரா என்பவற்றில் காணும் அப்பாட்டமான உண்மைகளை முஸ்லிம் அல்லாதவர்கள் சொன்னவுடன் மேலும் கீழுமாகக் குதிக்கிறார்கள். கேள்விகளுக்குப் பதில்களையே காணோம். இந்துக்களுக்கு எதிராக வசை பாட மட்டும் முடிகிறது.
ஜிகாத் என்பது “கடவுளைக் காணும் மார்க்கம் என்று கூட கதை விடுகிறார்கள். அப்படியானால் அவர்களின் அல்லா எப்போது இந்தியாவுக்கும், கனடாவுக்கும் ஒடினார்? அந்த இடங்களில்தானெ இப்போது குண்டு வெடிப்புக்களுக்கு முஸ்லிம்கள் அலைந்து கொண்டிறுக்கிறார்கள்.
ஆனால் குரானில் “காபிர்களுக்கு” எதிரான யுத்தம் என்பதே ஜிகாத் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது முஸ்லிம் அல்லாதவகளைக் கொல்ல வேண்டும் எனபதே!
மாயா
சிலர் தமது சுயநலங்களுக்காக மதங்களை தமக்கேற்றவாறு மாற்றி பயன்படுத்தியிருக்கிறார்கள். இவை அனைத்து மதங்களிலும் நிகழ்ந்துள்ளன. எனவே உண்மையுள்ளம் கொண்ட மக்கள் மனங்களை புண்படுத்தும் கருத்துகள் தவிர்க்கப்பட்டால் நல்லது. மதங்கள் மனிதனை நெறிப்படுத்தவே உருவாயின. அது மனிதனைப் பிரிக்கும் கருவியல்ல. அதை பலர் உணரவில்லை?
Kusumpu
உங்களின் கருத்துடன் எந்த எதிர்மறையான கருத்தும் எனக்குக் கிடையாது மாயா மனம் நோகக்கூடாது என்பதை மறுப்பதற்கில்லை. மனிதனும் மனிதமும் கொல்லப்படுகின்றனவே. நான் எந்த மதத்தையும் ஆதரிப்பவனல்ல பாபர் மசூதி இடிக்க முயன்றபோதே இந்துக்கள் தான் கண்டித்தார்கள். முஸ்லீங்கள் யாழ்பாணத்தை விட்டுத் துரத்தப்பட்டபோது யார் கண்டித்தவர்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்? நாங்கள் தமிழ் பேசினாலும் தமிழர்கள் இல்லை என்பது போல் சந்தர்ப்பத்துக்கு ஏற்றால் போல் கும்மியடிக்கமா?எமது நாட்டு இஸ்லாமியரை நான் கடசிவரையும் தமிழராகவே எண்ணியிருந்தேன். யாழ் அகல்விலும் பல இடங்களில் புலிகளை எதிர்த்து வாதிட்டிருந்தேன். நான் புலி எதிர்ப்புவாதி என்பதற்காக அல்ல.
நீங்கள் கூறுவதுபோல் மனிதனை நெறிப்படுத்தவே மதம் உருவானது. இன்று அது அப்படியா இருக்கிறது? உருவான நோக்கத்துக்காக சரியா இயங்கும் ஒரு மதத்தைக் கூறுங்கள்?
//அது மனிதனைப் பிரிக்கும் கருவியல்ல. அதை பலர் உணரவில்லை?// மாயா உங்கள் பரந்த உள்ளம் புரிகிறது. ஆனால் நீங்கள் கூறியது போல் பலர் மட்டுமல்ல உலகமே மதத்தால் பிரிந்து தான் கிடக்கிறது. ஒரு பைபிளை வைத்துக் கொண்டு எத்தனை பேர் திரிகிறார்கள். வயதில் குறைந்த இளமையான மதமான இஸ்லாம் கற்கால மனிதர்களை உருவாக்குகிறது. இதை விடத்தர்மயுகமே மேலானது. இந்து மதமும் சளைத்தது அல்ல. ஆனால் இந்து மதத்தை யாரும் விமர்சிக்கலாம். அன்றில் இருந்து இன்று வரை விமர்சிக்கிறார்கள்: குற்றங்கள் சுட்டிக்காட்டப்படுகிறது. இஸ்லாம் அப்படியல்ல. ஒரு இஸ்லாமியனே தன் மதத்தில் கேள்வி கேட்ககூடாது அப்படிக் கேட்டால் அவன் இஸ்லாமியன் இல்லை என்று கழித்து வைக்கவேண்டும் என்கிறதாம் கூறான். மற்றமதங்களில் மாற்று வழிகள் இருக்கிறது. இஸ்லாமில் அது கிடையாது. வாழ்ந்தால் இப்படித்தான் வாழவேண்டும். இது அதிகாரத்தின் பிறப்பிடம் என்பதை ஏன் விளங்கிக் கொள்ள மறுக்கிறீர்கள். கடவுளின் வழித்தோன்றல் என்றும் தூதர் என்று நம்பப்படும் நபி அதிகாரத்தில் இருந்தவர். அது அவரின் கட்டளை. கடவுள் சொன்னால் என்று சுத்தியது மீதி. புத்தமத்தின் கொள்ளை கோட்பாடுகள் நல்லவைதான் புத்தமார்க்கத்தை சரியாக் கடைப்பிடிக்காது விடும்போது பெளத்தர்களே மெளனமாக இருந்தால் நாமாவது கண்டித்தே ஆகவேண்டும். விடுதலை என்பது அரசுக்கெதிரானதோ அதிகாரங்களுக்கு எதிரானதே அல்ல. முதலில் அது மனித மனங்களின் அடிமை எண்ணங்களுக்கு எதிரானதாக இருக்கட்டும். இதற்குப்பின்பே புறகாரணியான விடுதலையும் சுயாட்சியும்.
nantha
//மதங்கள் மனிதனை நெறிப்படுத்தவே உருவாயின. //
எல்லா மதஙளும் அல்ல! எல்லாவற்றுக்கும் சம அந்தஸ்த்துக் கொடுப்பது இஸ்லாம், கிரிஸ்தவம் ஆகிய மதங்களில் கேள்க்கப்படும் “கொலைகளை”யும் நியாயப்படுத்திவிடும்!
வேற்று மதத்தவனைக் “கொலை” செய் அல்லது மதம் மாற்று என கோரும் மதங்கள் யாருக்குத் தேவை? அல்லது அவை மதிக்கப்பட வேண்டியவைதானா?
thurai
//மதத்தவனைக் “கொலை” செய் அல்லது மதம் மாற்று என கோரும் மதங்கள் யாருக்குத் தேவை? அல்லது அவை மதிக்கப்பட வேண்டியவைதானா?//நந்தா
இந்துக்கள் மட்டும் மதக்கலவரம் நடக்கும் போதெல்லாம் கொலைசெய்யப்பட்டவர்களா? உலகில் இந்துக்கள் எல்லாம் மாமிசமே புசிக்காதவர்களா? காந்திபோல் அடி வாங்கி மற்ரக்கன்னத்தைக் காட்டுபவர்களா?
பாதிரிகள் சிலர் முறைகேடாக நடக்கின்றார்கள் அதனை ஏற்கின்றோம். சிவன் கோவில்களில் லிஙகம் எனப்படுவது மனிதனின் ஆணுறுப்பெனக் கூறப்படுகிறதே. அதற்கு அபிசேகம் லட்சக்கண்க்கில் செய்யும் இந்துக் குருக்கள் எவ்வாறோ?
துரை
nantha
இஸ்லாத்திலும், கிரிஸ்த்தவத்திலும் மதமாற்றம் அல்லது கொலை என்பன நடந்த அல்லது நடக்கும் உண்மைகள். அதற்குப் பதிலைத் தராமல் “கேள்விக்கு” சம்பந்தமில்லாத தர்மனியாயங்கள் வெறும் துவேஷமே தவிர வேறொன்றுமில்லை. அத்துடன் “கொலை” விளையாட்டு என்பது தஙகள் மதத்தில் உண்டு என்பதன் “சம்மத” பத்திரமும் ஆகும்!
அடுத்தது “லிங்க” என்றால் “பால்” என்று பொருள். அது “இரு” பாலையும் குறிக்கும். ஆண், பெண் “சங்கமம்” சந்தான விருத்தியின் முக்கியமான அம்சம்! பாலுறவு மனிதர்களுக்கு சந்தோஷமான விஷயம். அதனை கொடுத்து மனிதர்களுக்கு “சந்தோஷமும், சந்தான விருத்தியும்” கிடைக்க வேண்டும் என்பதுவே லிங்க வழிபாட்டின் நோக்கம்!
3000 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட “கஜுராகோ” சிற்பங்கள் அதற்கு சாட்சி பகர்கின்றன.
பாலுறவு என்பது “கடவுள்” கேட்டுக் கொண்டதால் நாம் புரிகிறோம் என்பது அசட்டு வேதாந்தம்.
பாதிரிகள், பவுத்த பிக்குகள் “பிரமச்சார்கள்” என்று பறை சாற்றிவிட்டு “பாலுறவில்” ஈடுபடுவது அவர்கள் தங்கள் கடவுளுக்கோ அல்லது மத முறைகளுக்கோ “கடுக்காய்” கொடுக்கிறார்கள் என்பதுதான் அர்த்தம்!
thurai
//இஸ்லாத்திலும், கிரிஸ்த்தவத்திலும் மதமாற்றம் அல்லது கொலை என்பன நடந்த அல்லது நடக்கும் உண்மைகள்//நந்தா
மானிப்பாய் அந்தோனியார் கோவிலில் இந்துக்கழும், கிறிஸ்தவர்க்ழும் ஒன்றாக் மெழுகுதிரி கொழுத்தி வண்ங்குவார்கள். இதே போல் நல்லூரிலும் கிறிஸ்தவ்ர்க்ழும் போய் மகிழ்வார்கள். திருமணத்திற்காக சமயம் மாறி விட்டுக் கொடுப்புக்கழும் நடக்கின்றன. சமயத்திலும், சாதியிலும் தமது
இனத்தை விட அதிக வெறி கொண்டவர்களே உலகில் பிரச்சினக்குரியவர்கள். இதில் எல்லா சமயமும் அடங்கும்.
முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் பார்த்து குற்ரம் சொல்முன் தான் பிறந்த ஈழத்தமிழினம் உலகெங்கும் எவ்வாறு கணிக்கப்படுகின்றார்களென்பதையும் அவ்தானித்தால் நன்றாகவிருக்கும்.
//அடுத்தது “லிங்க” என்றால் “பால்” என்று பொருள்//நந்தா கூகிளில் போய் லிங்கம் என்பதனைத் தேடிப்பார்கவும்.
துரை
BC
மானிப்பாய் அந்தோனியார் கோவிலில் இந்துக்கழும் கிறிஸ்தவர்க்ழும் ஒன்றாக் மெழுகுதிரி கொழுத்தி வண்ங்குவார்கள். உண்மை தான்.(புலத்திலும் இது தானே நடக்கிறது)
இதே போல் நல்லூரிலும் கிறிஸ்தவ்ர்க்ழும் போய் மகிழ்வார்கள்.//இதுவும் உண்மை தான்.ஆனால் ஒரு முக்கிய விடயத்தை கவனித்தீர்களா? நல்லூருக்கும் கிறிஸ்தவர்கள் ஒரு விழாவுக்கு போனது மாதிரி போய் மகிழ்வார்களே தவிர ஒரு போதும் வணங்க மாட்டார்கள். இந்து கோவிலில் வணங்கிய ஒரு கிறிஸ்தவர் அல்பிரட் துரையப்பா மட்டுமே.
Vengai
துரை!
ஆண்பெண் உறவில்தான் இந்த உலகமே விருந்தியடைகிறது. ஒருவனோ ஒருத்தியோ கண்ணாடி முன் நிற்கும்போது தன் எதிர்பாலுடையவர் தன்னைப்பார்ப்பாரா என்ற அடிமனது எண்ணம் என்றும் இருக்கும் என்று மநோத்துவமேதைகள் சொல்லியிருக்கிறார்கள். ஐம்புல்களையும் அடக்கி மனதை ஒருநிலைப்படுத்துவதுதான் தியானம் ஆனால் ஒவ்வோரு புலனும் ஒரு உணர்வை உணர்ந்து இரசித்தாலும் ஐந்து புலன்களும் ஒரே நேரத்தில் சுகத்தை அனுபவிப்பது உடலுறவில்தான். இதை இந்துமதம் முழுமையாக ஏற்கிறது அனுமதிக்கிறது.
/பாதிரிகள் சிலர் முறைகேடாக நடக்கின்றார்கள் அதனை ஏற்கின்றோம். சிவன் கோவில்களில் லிஙகம் எனப்படுவது மனிதனின் ஆணுறுப்பெனக் கூறப்படுகிறதே. அதற்கு அபிசேகம் லட்சக்கண்க்கில் செய்யும் இந்துக் குருக்கள் எவ்வாறோ?//துரை
துரை கல்லுக்கு அபிசேகம் முறைகேடா? அப்படியாயின் பாதிரிகள் முறைகேடு யாருடன் எனச் சொல்கிறீர்கள்
லிங்கம் கல்லுத்தூன் சரி ஒருநாளைக்குக் கழுவாமல் விட்டுப்பாருங்கள் அப்போ தெரியும் அபிசேகத்தின் விறுத்தம். தத்துவமதமாக்கப்பட்டது இந்து மதம் என்பதை மறக்காமல் இருப்பது நல்லது. எம்மதமும் சம்மதம் என்று குட்டக்குட்டக் குனிந்த இந்துக்கள் இனியாவது என்மதம் தான் சம்மதம் என்று நிமிர்வார்களா?
Mohamed SR. Nisthar
வாசகர்களின் நலன் கருதி, நந்தாவையும், குசும்பையும், இவர்களின் விசிறிகளையும் கவனத்தில் எடுக்காது விட்டு விடுவோம் என்றால் முடியவில்லை. ஆகவே நிச்சயமாக, சத்தியமாக இனி நான் இந்த விடயத்தில் வாய் திறக்க மாட்டேன். ஆகவே கடைசியாக இதை கவனியுங்கள்.
குலனின் கட்டுரை வெளியானது ஓகஸ்ட் 1ல். ஐந்து நாட்கள் கழித்து ஓகஸ்ட் 6ல் எனது முதல் பின்னூட்டம் (அதற்கு முன் குலன் ஓகஸ்ட் 5ம் திகதி “..கர்த்தர் வருவார்” என்று ஆரம்பித்ததையும் தவிர்த்து) அதில் நான் கேட்ட கேள்வி இதுவே ” தமிழர் அழிவில் இருந்து பாடம் ஏதும் படிக்க விலையா, முஸ்லிம்களை ஏன் சண்டைக்கு” இதில் (சமயம்) மதம் என்னால் புகுத்தப்பட்டதா?
அதே நாள் B.C யின் பின்னூட்டம் ” இப்போதுதான் கவணித்தேன். நிஸ்த்தார் சொல்வதிலும் நியாயம் இருப்பது போல் தெரிகிறது”. மதம் பற்றி இங்கு நான் கதைத்ததாக B.C யும் சொல்லவிலலை. மேலும் என் கேள்வி B.C க்கு நியாயமாகவும் பட்டுள்ளது. ஆகவே நான் இதுவரை மதம் பற்றி வாய் திறக்கவில்லை.
ஓகஸ்ட் 7, 4.03 நான் குலனுக்கு கதைகள் பல சொன்ன நாள். அதில் “ஜிஹாத்” என்ற வார்த்தையை பாவித்துள்ளேன். அதுவும் அந்த “ஜிஹாத்” துக்கான் அத்தனை அம்சங்களும் இருந்தும் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள், ஜூலியஸ் சீஷர், “ப்புருட்டஸ்! நீயமா?” என்று கேட்டது போல் (1983ல் பாடம் படித்த பின்பும்) தமிழா நீயுமா? என்ற கேள்விக்கப்பால் ஒரு அப்பாவித் தமிழர்களில் கூட கைவைக்கவில்லை என்பதை உணர்த்தவே அல்லாமல் என் மதத்தை பெரிதாக சொல்லவோ அல்லது வேறு சமயங்களை குற்றம் சாட்டவோ இல்லை. இங்கும் இன்னும் நான் குலனையோ, வேறு யாரையுமோ திசை திருப்பவில்லை.
ஆகவே தான் ஓகஸ்ட் 7ல் நந்தா சொல்கிறார் “ நிஸ்த்தார் சொல்லும் கருத்துக்கள் தமிழருக்கும், முஸ்லிம்களுக்கும் பொருத்தமானதே. தவிர, குலனின் வாதத்தில் காணப்படும் பவுத்த மத விரோதம் கவலைகிடமானது” . ஆகவே நந்தாவின் படி குலத்தின் கட்டுரையில் முதலில் மதத்தை புகுத்தியவர் குலனே. நான் இல்லை.(குலனின் ஓகஸ்ட் 5 “கர்த்தர் வருவார்” என்ற பின்னுட்டத்தையும் இங்கு கவனிப்பது நன்று )
இப்படி குலனை சாடும் நந்தா அந்த சூடு மாற முன்னமே அதே பின்னூட்டத்தில் ” கத்தோலிக்க, வத்திகான் முழு இலங்கையையும் கிறிஸ்தவ மத(மய)மாக்கல் என்ற வத்திக்கானின் கொள்கையுடன் தொடர்படையதே” இங்கே கிறிஸ்தவத்தையும், வத்திக்கானையும் வம்பிற்கு இழுத்தது குலனுடன் சேர்ந்து நந்தாவே, நான் இல்லை.
ஓகஸ்ட் 8 அதிகாலை 12.41 குலன் எழுதுகிறார். “ முஸ்லிம்களை தூய்மைபடுத்த முயற்சிக்கின்றிர்கள். கிழக்கில் நீங்கள் அப்பாவித்தமிழர் (இப்போது குலன் தமிழரிடம் இருந்து முஸ்லிம்களை துகில் உரிக்கின்றார்.) மேல் நடாத்திய அட்டகாசம் எமக்கு தெரியும். “ உலகெங்கும் ஜிஹாத் என்று கொன்று குவிக்கப்படும் அப்பாவிகளுக்கு என்ன சொல்லப் போகுறிர்கள்? “ முக்கியமாக இஸ்லாமியர்கள் மற்ற இனத்துடன் சேர்ந்து வாழ முடியாது போரைத் தூக்கித் திரியும் மனித விரோதங்களை எந்த கூரானில் எழுதப் போகுறிர்கள்? “ நான் போர் முஸ்லிம்களிடம் இருந்து வெடிப்பதற்கான சாத்தியங்கள் என்று எதிர்வு (இது வேறு) கூறியது இஸ்லாமிய கொள்கை கோட்பாடு , வாழ்வியல், சமய நம்பிக்கை என்ற பின்னணியை முன்வைத்தே” நிச்சயமாக இது நான் இல்லை. மனிதம் பேசிய குலனே.
குலன் மீண்டும் ஓகஸ்ட் 8 அதிகாலை 1.37, “ எங்கு எடுத்தாலும் மதங்கள் கூறிய நல்லவிடயங்களை விட்டுவிட்டு ( அடடே ! மதங்கள் நல்ல விடயங்களையும் சொல்கிறதா) மதத்தை ஆயுதமாகவே பாவிக்க முயல்கின்றார்கள்”
ஓகஸ்ட் 8 அதிகாலை 1.49 குலன் “ நிஸ்த்தார் பல விடயங்களில் மதமென்ற ஒன்றில் எதைனயும் பார்க்கவிரும்புகிறார்” இது வரை நீங்கள் அல்லவா? நான் இல்லையே. (சரி அப்படி என்றாலும், ஏன் அது பிழை? அது எனது ஜனநாயக உரிமை அல்லவா?, நீங்கள், மொழி, இனம் என்று பார்க்கவிரும்புவது போல, நந்தா மாக்ஸியத்துடன் பார்க்குமாற் போல, அஜித் புலி ஊடாக பார்க்குமாற் போல், இப்படி பல பார்வைகள் இருக்கும் போது ஏன் எனக்கு மாத்திரம் தடை)
ஓகஸ்ட் 8 பகல் 12.23 குசும்பு எழுதுகிறார், “ நிஸ்த்தாரின் கருதுப்படி பார்த்தால் முஸ்லிம்கள் எந்த குற்றமும் செய்யாதவர் போலவும், தமிழர்கள் புலிகள் போலவும் தோன்றுகிறது” . “ வன்முறையை கூறான் போதிக்கவில்லை என்கிறிர்கள் உலகம் முழுவதும் இது முஸ்லிம்களாலேயே “அதிகம்” நடக்கின்றது..”(அப்பாடா சந்தோசம் எல்லாம் நம்மால் என்று கூறவில்லை) ” ஒரு இனத்தை மதமாக வரையறுக்கும் நிஸ்த்தார்.” (ஆத்தாடி இந்த வரையறுத்தல், பெண்ணின் உறுப்பறுத்தல் எல்லாம் நமக்கு தெரியாது ஸார்) “ இனப்பெருக்கத்தை ஒரு ஆயதமாக பயன்படுத்தும் ஒரே மதம் இஸ்லாமும், முஸ்லீம்களுமே..”( சான்றிதழ் கிடைத்துவிட்டது) இப்போதும் நான் இல்லை.
நந்தா ஓகஸ்ட் 8, 3.42 பிற்பகல். “ குசும்பு இஸ்லாம் பற்றி சொல்லியது நடை முறை உண்மை சரியானவை” இதே வழி முறைகளை கத்தோலிக்கரும் பின்பற்றுகிறார்கள்., யூதர்களும் பின்பற்றுகிறார்கள்”. இங்கு கத்தோலிக்கரையும், யூதர்களையும் மீண்டும் இழுப்பது நந்தா. நான் இல்லை.
நிஸ்த்தாரிடம் ஒரு கேள்வி ” முஹம்மது நபி ஆறு வயது ஆயிஷாவை வளர்த்து ஒன்பது வயதி உடல் உறவு.”, ” இஸ்லாமிய கோரமுகங்கள் உங்கள் ஹதீதுகளில் காணலாம்.” இதுவும் நான் அல்ல.
” இந்து/பெளத்த மதங்கள் நிறுவன மயப்படுத்தப்பட்ட சமயங்கள் அல்ல. மதம் மாறாதே என்றோ மத்துக்காக் கொலை, கொள்ளைகளை ஊக்குவிக்கும் மதங்களும் அல்ல” இன்னும் நந்தவே நான் அல்ல.
இப்போது நான் வருகிறேன். ஓகஸ்ட் 8 இரவு 10.27 “ நண்பர்களே (நந்தா பயப்பட வேண்டாம் சத்தியமாக உண்மையாகவே நண்பர்கள் என்று விழித்தேன்) அடிப்படையில் இனத்தையும், சமயத்தையும் , அதை பின்பற்றுவதால் ஏற்பட்ட பெயரையும் போட்டு குழப்பி விட்டீர்களே..” இன்னும் என் (சமயம்) மதம் பற்றியோ அல்லது அடுத்தவர் (மதம்) சமயம் பற்றியோ நான் கதைக்கவில்லையே.
ஓகஸ்ட் 8 இரவு 11.25 B.C. “ முஸ்லிம்களுக்கு முஸ்லிம் நாடுகளில் மதம் மாறினால் தலை போய் விடும் என்பது உண்மை”
இங்கும் நான் இல்லை.
ஓகஸ்ட் 8 இரவு 11.33 குலன் .” காலத்துக்கு ஏற்ற மாற்றங்களை கிரகிக்க உங்கள் மதம் தவறி விட்டது ( சும்மா சொல்லக் கூடாது எம்மா பெரிய கண்டுபிடிப்பு) இங்கும் நானா? இல்லயே.
நந்தா ஓகஸ்ட் 9 நேரம் 3.41 , “ இஸ்லாமியர்களில் எவனாவது ஒரு ஆயத்துல்லா மரண தண்டனை விதித்தால் நம்ம முஸ்லிம்கள்( அது என்ன “நம்ம” முஸ்லிம்கள்) அது சரி என்று” இதுவும் நான் இல்லை.
ஓகஸ்ட் 9 மாலை 6.47 பல்லி “ நந்தா எப்போதும் (நன்றாக கவனியுங்கள் “எப்போதும்”) போல கத்தோலிக்க மக்கள் மீது கல் எறிவதிலேயே கவணம் செலுத்துகிறார்..” பல்லி என்னை சாடவிலை. காரணம் இதுவரை (என்னுடயது என்றால்) மதம், (உங்களுடையது என்றால்) சமயம் பற்றி நான் வாய் திறக்கவில்லை என்பதனால்.
ஒகஸ்ட் 9 மாலை 7.18 “ எனக்கு தெரிந்த. கத்தோலிக்கர் மட்டுமல்ல முழு கிறிஸ்தவ, இஸ்லாமிய சமுகமே அப்படித்தான்.” இங்கும் குலனே. நானில்லை.
குலன் ஓகஸ்ட் 10, 10.22 ” நந்தா, இந்துக்கள் மதமாற்றம் செய்வதாக நான் கருதவில்லை. இந்துக்கள் மாறினார்களே தவிர மாற்றினார்கள் இல்லை.” இங்கும் நானில்லை.
அதே நாள் 12.14 பல்லி, “ இன்று நந்தா, மொகமட்டுடன்(தெரிந்தோ, தெரியாமலோ என் பெயர்) திசை மாறி பயணிப்பதாகவே நான் கருதுகிறேன்,..” நானா? இல்லையே.(பல்லி மீண்டும் ஒருமுறை பின்னுட்டங்களை படியுங்கள்)
அதே நாள் குலன் 8.37 பல்லியின் இத் தூண்டிலை பட்டென கெளவிக் கொண்டார். அதனால் குலன் “ என் கட்டுரையை நிஸ்த்தார் திசை திருப்பிவிட்டார்”, “ இஸ்லாமியருக்கு அவர்கள் விடும் பிழையை சுட்டிக்காட்டுவதற்கு ஒரு சந்தர்ப்பமாகவே கருதினேன். அவ்வளவுதான்” இன்னும் நானில்லை. (இது சாதாரண பல்டி அல்ல மெகா(mega) பல்டி). இதிலிருந்து தொடங்கிவிட்டர்கள் ஐயா, தொடங்கிவிட்டார்கள். நிஸ்த்தர்ர் திசை திருப்பி விட்டர், திசை திருப்பிவிட்டார் என்று முடக்கிவிட்ட மெசின் போல் சத்தம் வைத்து கொண்டே இருக்கிறார்கள்.
அடுத்த நாள் 9.50 இரவு. “ அன்று சிலுவைப் போர் அடித்து கலைக்கப்பட்ட இஸ்லாமியர்கள் இப்போது படையெடுத்து வருகிறார்கள். வெவ்வேறு வடிவங்களில்” இப்படி நான் சொல்லவில்லை. குலன் சொல்கிறார்.
இப்படியே கதை தொடர மீண்டும் நான் வருகிறேன் ஒகஸ்ட் 11ம் நாள் இரவு10.20 அதுவும் தற்காப்பு முறையில். ஆகவேதான் இப்படி கூறினேன். “ இங்கு நாம் சமயங்கள் பற்றி விவாதங்கள் முன் வைக்கவில்லை. எல்லாரும் என்மீதே பலியையும் போட்டுள்ளீர்கள்” இதற்கு பிறகும் நான் சும்மா இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றிகளா? அப்போதும் கூட என் மதம் பற்றி (அதுவும் மதங்களின் நல்ல கருதுக்கள் என்ற குலனின் கூற்றுக்கமைய) கட்டுரைக்கு ஏற்றாற் போல் விளக்கமட்டுமே முற்பட்டேன். மற்ற சமயங்களை தொட்டும் பார்க்கவில்லை.
இதன் பிறகு ஓகஸ்ட் 26ம் திகதி 6.19 மாலை, சைவர்களாக தங்களை சொலும் சிலரின்(பலரல்ல) விடயங்களையும் உதாரணப்படுத்தி இவர்களை “பலவீன பக்தர்கள்” என்றும் கூறி இருந்தேன். அதில் தங்களை முஸ்லிமாக கூறிக்கொண்டு இஸ்லாமிய போதனைக்கு எதிராக அட்டூழியம், அநியாயம், அத்து மீறல் செய்யும் முஸ்லிம்களும் ( பலவீன பக்தர் கூட்டத்தில்) அடங்குவர் என்பது கூட ஏன் இந்த மனித நேயகாரர்களுக்கு தெரியாமல் போனது? நான் அறியேன்.
இங்கு பொய் உரைத்து நடுநிலை ( பல்லி, துரை) போன்ற பின்னுட்டக் காரர்களையும் நிலை தடுமாற வைத்தது யார்?, மனிதம் பேசி குறையை மறைக்க முயன்றது யார்? நானா? நீங்களா?
இதற்கிடையில் எத்தனை விதமான மனிதர்கள், எத்தனை விதமான வினர்சனங்கள் என்ற போர்வையிலான சேறடிப்புகள். இத்தனையையும் வரவேற்றுக்கோன்டே இந்த குலன், குசும்பு, நந்தா முக்கூட்டு பொய்க் குற்றச்சாட்டுடன் என்னை பிந்தள்ள எடுக்கும் முயற்சி உங்கள் போலி மனிதத்தை வெளிக்காட்டி விட்டது. நிங்கள் வைத்த நேர வெடி(Time bomb) உங்கள் முகத்திலேயே வெடித்துள்ளதாகவே எனக்குப் படுகிறது.
ஆகவே, மனசாட்சி என்ற ஒன்று உங்களிடம் இருந்தால் நீங்கள் இப்போது செய்ய வேண்டியது என்னிடம் மிகச் சின்ன மன்னிப்பை கேற்பதே. இதை விட்டு விட்டு Islamophobics போன்று செயல்படுவது மாத்திரம் இல்லாமல், உங்களுக்கொரு கோஷம் (அப்படி இருந்தால்), அதற்கு ஒரு கொடி(அப்படியும் ஓன்று இருந்தால்) , அதற்குப் பின்னால் ஒரு அணி( எங்களை விட்டுவிடுங்கள்). ஏனெனில் துஸ்டரைக் கண்டால் தூர விலக வேண்டுவது எனது மதம்.
Mohamed SR. Nisthar.
S.Jeyakkumar
லிங்கம் கல்லுத்தூன் சரி ஒருநாளைக்குக் கழுவாமல் விட்டுப்பாருங்கள் அப்போ தெரியும் அபிசேகத்தின் விறுத்தம். தத்துவமதமாக்கப்பட்டது இந்து மதம் என்பதை மறக்காமல் இருப்பது நல்லது. எம்மதமும் சம்மதம் என்று குட்டக்குட்டக் குனிந்த இந்துக்கள் இனியாவது என்மதம் தான் சம்மதம் என்று நிமிர்வார்களா?//
தமிழர்களைப் பச்சோந்திகளாகவும் வாய் பிழப்பவர்களாகவும் இழிவான சுரண்டல் (கோயில் மோசடிகள்)செய்பவர்களாகவும் ஒற்றுமை இல்லாதவர்களாகவும் தங்கள் இலட்சியங்களை அடைய இயலாதவர்களாகவும் மூடநம்பிக்கையுடையவர்களாகவும் பேணிப் பாதுகாத்துக் கொண்டிருப்பது இந்த இந்து மதமே!
palli
//அதே நாள் 12.14 பல்லி, “ இன்று நந்தா, மொகமட்டுடன்(தெரிந்தோ, தெரியாமலோ என் பெயர்) திசை மாறி பயணிப்பதாகவே நான் கருதுகிறேன்,..” நானா? இல்லையே.(பல்லி மீண்டும் ஒருமுறை பின்னுட்டங்களை படியுங்கள்)//
உங்கள் மனதை என் எழுத்து புண்படுத்தியிருந்தால் பல்லியை நிஸ்தார் மன்னிக்கலாம்; நான் கூறியது நந்தாவுடன் அவரது மத பாட்டுக்கு நீங்களும் பதில் பாட தொடங்கினால் அது மனிதத்துக்கு ஆபத்து என்பதாலே அப்படி எழுதினேன்; ஆனால் நம் வீட்டு பிள்ளைதானே நாமே பேசலாம் என பல்லியும் சந்திராவும் சேத்தில் கால்வைத்து அனாகரிகமான வாதத்தில் ஈடுபட்டோம்; அது இன்று கட்டுரை மாறி வேறு இடத்தில் அசிங்கமாக தொடர்கிறது, உன்மையில் பல்லி இனம் மதம் சாதி இவைகளுக்கு அப்பால் மனிதத்தை மட்டுமே நேசிக்கிறேன், இன்றுவரை நந்தாவுடன் என வாதம் மதம் பற்றி பேசாதீர்கள் எனதான்; மீண்டும் சமூக சிந்தனைகளுடன் சந்திப்போம் மறப்போம் மன்னிப்போம்;
நட்புடன் பல்லி;
nantha
நிஸ்தார் “பந்திக்” கணக்கில் எழுதி எதனைச் சாதிக்க விரும்புகிறார் என்பது புரிகிறது. அவர் இன்னமும் “கொக்கரல்ல” மசூதி மட்டையடி இஸ்லாமிய “சட்டத்தின்படி” கொடுக்கப்பட்ட கொடுமை என்பதை மூடி மறைத்து என்ன “மானிடம்”, “மனிதம்” பேசுகிறார்?
அவர் இஸ்லாமியன் அல்லது சோனகன் என்பதையே வற்புறுத்துகிறார். எனவே அவரின் “மதம்” பற்றி சர்ச்சயை மற்றவர்கள் கிளப்பக் கூடாது என்று எதிர்பார்க்கிறாரா?
இலங்கையன் என்று தன்னை கூறும் அவர் இலங்கயில் உள்ள மசூதிகள் “பாகிஸ்தான்” அல்லது “சவுதி அறேபியா” என்று கருதப்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்!
பாதிரிகளின் பயங்கரவாத தொடர்புகள் பற்றிய எனது கேள்விகளுக்கு “கிரிஸ்தவர்களை” தாக்குவதாக சொல்கிறார்!
அவர் “ஷரியா” என்ற இஸ்லாமிய அனாகரீகத்துக்கு ஆதரவு கொடுக்கிறார் என்பது மாத்திரம் உண்மை!
முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குரான், ஷரியா, சிரா என்பன பற்றி தெரியாது அல்லது தெரிந்தாலும் அதனை சொன்னால் அல்லது கேள்வி எழுப்பினால் “பொய்” என்கிறார்! அப்படி சொல்வதன் மூலம் இஸ்லாமியர்கள் “நம்பத்தகாத” ஒரு கூட்டம் என்பதனையே அறிவிக்கிறார்.
பாதிரிகளின் ஆதரவாளர்களை “நடுனிலையாளர்கள்” என்று அத்தாட்சி பத்திரம் கொடுப்பதன் மூலம் இந்துக்களை விமர்சிப்பவர்கள் “புண்ணியவான் கள் என்று வேறு கரடி விடுகிறார்.
“காபிர்கள்” என்று இஸ்லாத்தில் குறிப்பிபவர்கள் யார் என்றும் அவர்களை என்ன செய்ய வேண்டும் என்றும் இஸ்லாம் சொல்லுகிறது என்பதற்கு இந்த இஸ்லாமிய நிஸ்தார் பயஙர மவுனம் சாதிப்பதன் நோக்கம் என்ன?
இரண்டு வரியில் பதில் எழுத நிஸ்தார் முடியாமல் ஓட்டம் பிடிப்பது அவரின் மதம் பற்றிய “கொடுமை” யை மற்றவர்கள் கண்டு பிடித்து விட்டார்களே என்ற ஆதங்கம் என்றே கருதுகிறேன்.
nantha
“லிங்க” என்பதன் அர்த்தம் தேடி கூகிளுக்கு போகவேண்டிய அவசியம் எனக்கில்லை! தவிர லிங்கம் என்பது லிங்க அல்ல! சமஸ்கிருதம் சொல்லுவதை நான் நம்புகிறேன். கூகிளை அல்ல!
முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் “மதம் மாற்று அல்லது கொலை செய்” என்பதற்கு இந்திய இலங்கை மற்றும் பலநாடுகளின் வரலாறுகள் சாட்சி. மெழுகுதிரி கொழுத்தியவுடன் செய்த கொலைகள் இல்லையென்று ஆகி விடாது!
துரை இந்துவையும், முஸ்லிமையும் ஒப்பிடத் தொடங்கியிருக்கிறார். ஆனால் அவர் ” கூறுவது” போல ஒரு கிறிஸ்தவன் கலியாணம் முடித்த கதை ஒன்றையும் சொல்லவில்லை. அதன் மூலம் முஸ்லிம்களையும், இந்துக்களையும் விட கிறிஸ்தவர்கள் கேவலமானவர்கள் என்பதை ஒப்புக் கொள்ளுகிறார்!
BC
உறவாடி கெடுப்பது என்ற கருத்துடன் நான் உடன்படவில்லை இப்படியான எண்ணத்துடன் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் இலங்கையில் நிம்மதியாக வாழ முடியாது.
//S.Jeyakkumar -தமிழர்களைப் பச்சோந்திகளாகவும் வாய் பிழப்பவர்களாகவும் இழிவான சுரண்டல் (கோயில் மோசடிகள்)செய்பவர்களாகவும் ஒற்றுமை இல்லாதவர்களாகவும் தங்கள் இலட்சியங்களை அடைய இயலாதவர்களாகவும் மூடநம்பிக்கையுடையவர்களாகவும் பேணிப் பாதுகாத்துக் கொண்டிருப்பது இந்த இந்து மதமே! //
தமிழர்கள் தங்கள் இலட்சியங்களை அடைய இயலாதவர்களாக இந்து மதமே வைத்துள்ளது என்று சொல்லபடுவதை பார்த்தால் நந்தாவின் எச்சரிக்கைகளை ஒதுக்கிவிட முடியாது.
Jeyakkumar, நீங்கள் கூறிய தமிழர்களைப் பச்சோந்திகளாகவும், வாய் பிழப்பவர்களாக இருப்பது 100% உண்மை தான். அதனால் தான் புலி அவர்களிடம் மிக பெரிய அளவில் பண மோசடி செய்ததும் அதில் கண்ட சுவையால் தொடர்ந்து பண மோசடிக்கு முயற்ச்சிப்பதும். அதே போல் கிறிஸ்தவ மத பிரிவுகள் நோய், வேலையின்மை போன்ற பிரச்சனைகளை காட்டியவுடன் உடனே மதம் மாறி விடுகிறார்கள்.
Kulan
நிஸ்தார் பல்லியையும் பிசியையும் இழுத்து கொழுவவிட்டுப் கூத்துப்பாக்கும் பாணிக்கு சபாஸ். பல்லி தூண்டில் போட குலன் கவ்வ குலன் மீனும் இல்லை. பல்லி செம்படவனும் அல்ல. பல்லிக்கு எழுதியதை நான் மறுக்கவில்லை. இக்கட்டுரையை சரியாக விளங்காது முழுமையாக திசை திருப்பியது நிஸ்தார் இல்லை என்பதை யாராவது வந்து நிரூபிக்கட்டும். கட்டுரையின் ஆதங்கமே நோக்கமற்ற குறிக்கோளற்ற நடைப்பயணம் பற்றியது. படம் கூடப்போட்டப்பட்டிருக்கிறது கட்டுரையின் கருச்சார்ந்து. இதுக்குப் பிறகும் விளங்கல்லை என்றால் யாரால்தான் என்ன செய்ய முடியும்.இங்கு இஸ்லாமிய அடிப்படை வாதத்தைப் பற்றி கட்டுரையில் குறிப்பிடப்படவில்லை என்பதும் சான்று.
பி.சி உறவாடிக்கெடுப்பது இராஜதந்திரம். உங்களைப்போல் எனக்கும் முழுமையான உடன்பாடில்லை. ஆனால் அதுதானே நடக்கிறது. போரை யார் விரும்புகிறார்கள். எவர் விரும்பாவிட்டாலும் போர் நடக்கிறதே. எதிர்த்து நின்று போராட முடியாதவர்கள் அணைத்து நின்று தானே அறுக்கிறார்கள் இது என்றும் அரசியலில் சகஜமாகிவிட்ட ஒன்றே. உ.ம் கக்கீம் இ.மு.கா குத்துக்கரணம் அடித்தார் காரணம் அவரின் சபையில் இருந்து பலர் குத்துக்கரணம் அடித்தபடியால் இ.மு.கா ஆல் ஐ.தே க உடன் இருக்க முடியவில்லை. தொடர்ந்தும் ஐதேகட்சியுடன் இருந்தால் இ.மு.கா இன்னும் பிரிவுபட ஏதுவாகம் என்பதால் குத்துக்கரணம் அடித்தார். பிழை என்கிறீர்களா? நான் இல்லை என்கிறேன். கட்சியைக் காப்பாற்ற ஐதேகட்சியை உறவாடி கெடுத்துள்ளார்கள். இன்று ஐதேகட்சி இருக்கும் நிலையை நான் விளங்கப்படுத்தத் தேவையில்லை. உறவாடிக் கெடுத்தல் என்பது நாணயத்துக்கு இருபக்கங்கள் போன்று ஒருபகுதி நன்மை அடையும் போது இன்னோரு பகுதி ஏமாற்றத்துக்கு உள்ளாகிறது. தமிழர்கள் சிங்களவர்கள் அடிபட சிங்களவர்களுடன் முஸ்லீங்கள் இலாபம் தீட்டினார்கள். ஆனால் நாடுபிரிப்பது அரசியல் உரிமைகள் பற்றி பேசும்போது எமது பங்கைத் தந்துவிடுங்கோ என்பார்கள். உறவாடிக் கெடுப்பது என்பது எமது உரிமைகளை எடுப்பதாக ஏன் கருத மறுக்கிறீர்கள். இது சிங்கள: இஸ்லாமியருக்குக் கெடுதலாக இருக்கலாம். போர் வைத்து உழைத்த புலிகளும் இஸ்லாமியருமே. இப்போர் நின்றதால் வயிறு எரிபவர்கள் யாராக இருக்க முடியும்? இப்வாவது புரிந்து கொள்ளுங்கள் ஒருவன் எமக்குரிய பொருளை அடாவடித்தனமாக எடுத்து வைத்திருக்கும் போது அதை போரிட்டு எடுக்க முடியாத நாம் உறவாடி எந்த எதிர்ப்பும் இல்லாமல் பெற்றுக்கொள்ளுவோமானால் அதில் என்ன தவறு இருக்கிறது. எடுத்தவன் எதிர்க்காத வரை அது கெடுதலில்லாதது தானே. எடுத்த பின் எதிர்ப்பது கெடுதலுக்குரியதே. இந்த இராஜதந்திரத்தில் தந்திரம் என்ற பதம் இருப்பதைக் கவனியுங்கள். இதை டிப்ளோமற்றிக் என்பார்கள். தந்திரம் என்பதே நேரடி அற்ற செயற்பாடுதானே.