நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பெருமழை, இடி, மின்னல் குறித்து எச்சரிக்கை

srilanka-today.jpgவடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. குறிப்பாக கிழக்குக் கரையை அண்மித்த கடல் பிராந்தியத்தில் கடுமையான காற்று வீசுவதுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

இன்று முழுவதும் சில இடங்களில் கடுமையான மழை பெய்வதுடன் மழை சற்று குறைந்து காணப்பட்டாலும் சில நாட்களுக்கு தொடர்ச்சியான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்படுகிறது. இக்காலங்களில் இடிமின்னல் அதிகமாகக் காணப்படுவதால் பொதுமக்கள் சற்று அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *