உலக வங்கியின் நிதியுதவியுடன் நடை முறைப்படுத்தப்படவுள்ள கொழும்பு- கண்டி அதிவேக பாதை நிர்மாணப் பணிகள் விரை வில் ஆரம்பமாகுமெனவும் இது தொடர்பாக உலக வங்கியுடனான இறுதிப் பேச்சுவார்த்தை கடந்த வாரம் இடம்பெற்ற தாகவும் நெடுஞ் சாலைகள் அமைச்சர் டி. பி. ஏக்கநாயக்க தெரிவித்தார். இதன் சமகாலத்தில் கொழும்பு-கட்டு நாயக்க அதிவேக பாதை நிர்மாணப் பணி களையும் மேற்கொள்ளவுள்ளதாக அமை ச்சர் தெரிவித்தார்.
அமைச்சின் தற்காலிக ஊழியர்கள் 939 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற இந்த நான்கு வருட காலங்களில் சுமார் 12,000 பேர் நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி அமைச்சில் நிரந்தர நியமனம் பெற்றுள்ளனர். 2005ல் ஜனாதிபதி வழ ங்கிய வாக்குறுதிக்கிணங்க 2007ல் 5,000 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. அதற்கடுத்ததாக இன்று 939 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொழி லாளர்களின் உயர்வைப் பற்றிச் சிந்திக்கும் ஒரு உன்னதத் தலைவர். அதனால்தான் அவரது பிறந்த தினமும், நான்காவது சேவை பூர்த்தி நிறைவும் முடிவடைந்த கையோடு 939 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குகிறார்