May

May

துருக்கியில் தொடர்ந்தும் எர்டோகன் ஆட்சி !

துருக்கியில் 2003-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்த தாயீப் எர்டோகன் 2014-ல் அந்தபதவியை கலைத்து விட்டு ஜனாதிபதியாக பதவி ஏற்றார். அதுமுதல் அவர் சர்வாதிகாரி போல செயல்படுவதாக அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளாக எர்டோகன் ஆட்சி செய்து வரும் நிலையில் தற்போது அங்கு ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன் முதல்கட்டமாக கடந்த 15-ந் திகதி அங்கு தேர்தல் நடந்தது. இதில் எர்டோகன் 49.50 சதவீதம் வாக்குகளும், கூட்டணி கட்சி வேட்பாளர் கெமால் கிளிக்டரோக்லு 44.79 சதவீத வாக்குகளும் பெற்றனர். இரு தரப்பினரும் பெரும்பான்மை பெறாததால் 2-வது சுற்று தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் நேற்று காலை முதலே பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்தில் வாக்களித்தனர். அங்கு நீண்ட கால ஆட்சி புரிந்தவர் என்ற நிலையில் எர்டோகன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறாரா? அல்லது ஆட்சி மாற்றம் நடைபெறுமா? என்று பொதுமக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

 

இந்நிலையில் துருக்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதாக தாயீப் எர்டோகன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏறக்குறைய அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், நேற்று நடந்த இரண்டாவது சுற்றில் எர்டோகன் 52.2 சதவீத வாக்குகளைப் பெற்றார், அவருக்கு எதிராக போட்டியிட்ட கெமல் கிலிக்டரோக்லுவை 47.8 சதவீத வித்தியாசத்தில் வென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் உறுதியான முடிவு வரும் நாட்களில் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது 20 ஆண்டுகால ஆட்சியை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்துள்ள எர்டோகனின் இந்த வெற்றி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. அவர் ஏற்கனவே துருக்கி குடியரசின் நிறுவனர் முஸ்தபா கெமால் அட்டதுர்க்கின் 15 ஆண்டு ஜனாதிபதி பதவி சாதனையை முறியடித்துள்ளார்.

பிரித்தானியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா தொடர்பில் இறுக்கமான நடைமுறைகள் – வெளியாகியுள்ள அறிவிப்பு!

பிரித்தானியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா தொடர்பில் இறுக்கமான பல கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் அதிகரிக்கும் குடியேற்றத்தைக் குறைப்பதற்காக எடுக்கப்பட்டு வருகின்ற கடுமையான திட்டங்களின் ஒரு பகுதியாகவே மாணவர் விசா மீதும் கடும் போக்கைக் கடைப்பிடிக்க பிரதமர் ரிஷி சுனக்கின் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் மாணவர் விசா தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை (23) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் குடும்பத்தவர்களை அழைத்து அவர்களோடு இணைந்து கொள்வதை (family reunification for foreign students) பெருமளவில் கட்டுப்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது கல்வியை நிறைவு செய்வதற்கு முன்பாகவே மாணவர் விசாவைத் (student visa) தொழில் விசாவாக (work visa) மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகளும் வெகு விரைவில் நிறுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறிகளை அனுப்பிவைப்பதற்கான ஒரு பயண வழியாக மாணவர் விசாவைப் பயன்படுத்துகின்ற சர்வதேச முகவர்களை இது கட்டுப்படுத்தும் என பிரித்தானிய குடிவரவு குடியகல்வுத் துறை கருதுகிறது.

மேலும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது கல்வியை நிறைவு செய்வதற்கு முன்பாகவே மாணவர் விசாவைத் (student visa) தொழில் விசாவாக (work visa) மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகளும் வெகு விரைவில் நிறுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறிகளை அனுப்பிவைப்பதற்கான ஒரு பயண வழியாக மாணவர் விசாவைப் பயன்படுத்துகின்ற சர்வதேச முகவர்களை இது கட்டுப்படுத்தும் என பிரித்தானிய குடிவரவு குடியகல்வுத் துறை கருதுகிறது.

மாணவர் விசாவின் கீழ் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றிணைகின்ற வாய்ப்பைக் குறைப்பதன் மூலம் பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்கின்ற குடியேறிகளின் நிகர எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க புதிய விதிகள் உதவும் என பிரித்தானிய அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வரவுள்ள இந்தக் கட்டுப்பாடு பட்டப்படிப்புக்குப் பிந்திய ஆராய்ச்சிகளில்(postgraduate researchers) ஈடுபட்டிருக்கின்ற வெளிநாட்டு மாணவர்களுக்குப் பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களிலும் உயர் கல்வி நிறுவனங்களிலும் இணைந்து கல்வி கற்பதற்காக ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மாணவர் விசா வசதிகளைப் பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசிக்கின்றனர்.

இதில் பிரித்தானியாவில் குடியேற விரும்புபவர்களும் மாணவர் விசா வசதியைப் பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசிக்கத் தொடங்கியுள்ளனர்.

அதன்படி கடந்த ஆண்டு வெளிநாட்டு மாணவர் நிலையில் உள்ள ஒரு லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு விசா வழங்கப்பட்டிருப்பது பிரித்தானியாவின் குடிவரவு – குடியகல்வுப் பிரிவின் பதிவுகளில் தெரியவந்துள்ளது.

2019 இல் இந்த எண்ணிக்கை வெறும் 19 ஆயிரமாகவே இருந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து மீண்டும் புதிய வகை கொரோனா – அச்சத்தில் உலக நாடுகள்!

சீனாவில், ஓமிக்ரான் துணை வகை XBB வைரஸ் மூலம் மீண்டும் கொரோனா விரைவாகப் பரவி வருவதாக அந்நாட்டு ஊடங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்தப் புதியவகை கொரோனா அலை, ஜூன் மாத இறுதிக்குள் சீனாவில் உச்சம் தொடும் எனவும் அப்போது ஒரு வாரத்தில் 6.5 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ள நிலையில், இரண்டு புதிய கொரோனா தடுப்பூசிகளை சீனா விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

கடந்த மே 22ஆம் திகதி சீனாவில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், சுவாச நோய்க்கான சீன தேசிய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரான நிஜாங் நன்ஷான், “ஓமிக்ரான் துணை வகை XBB வைரஸ் விரைவாகப் பரவுவதால் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது உலகின் பிற பகுதிகளையும் பாதிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

 

சீனாவில் இருந்து உருவான கொரோனா, உலகம் முழுவதும் பல நாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இந்தச் செய்தி உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

76ஆவது உலக சுகாதார மாநாட்டில், “கொரோனாவைவிட பெருந்தொற்றை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும்” என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கூறியுள்ள நிலையில், சீனாவில் வேகமெடுக்கும் புதியவகை கொரானா உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

வெள்ளை வேன் கடத்தல் ஊகங்களும் – ஊடகங்கள் கிளப்பி விட்ட புரளிகளும் – YouTube வீடியோ !

அண்மைய நாட்களில் இலங்கையின் பல பகுதிகளிலும் இருக்கக்கூடிய சிறுவர்களையும் – அவர்களின் பெற்றோரையும் மிகுந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள தகவலாக மாறியுள்ளது வெள்ளை வான் கடத்தல் தொடர்பான செய்திகளாகும். அப்படியான ஒரு சம்பவம் நடைபெற்றதா..? நடைபெறவில்லையா..? உண்மையிலேயே அது கடத்தல் தானா ..? போன்றவற்றின் உண்மைத்தன்மையை தேசம் திரை இந்த காணொளியில் ஆராய்கிறது.

கடத்தல் தொடர்பான செய்திகள் முதன் முதலில் ஆரம்பித்தது மன்னார் மாவட்டத்தில் இருந்தே. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரான திருமதி ஏ.ஸ்டான்லி டிமெல் அவர்கள் மன்னாரில் அண்மை காலங்களாக சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் சுற்றி திரிவதாகவும் அவை சிறுவர்களை இலக்கு வைத்து கடத்தல் முயற்சிகளில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார். அதே நேரம் மன்னாரில் சிறுவர்களை கடத்த ஒரு குழு முயற்சித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதே நேரம் கடத்த முற்பட்டோர் கைதாகிய நிலையில் அது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் பரவி இருந்தது.

 

இதனைத் தொடர்ந்தே இது தொடர்பான உண்மைகளும் – வதந்திகளும் சமூக வலைத்தளங்களிலும் – வாட்ஸ் அப் குழுமங்களிலும் அதிகம் பகிரப்பட்டது. இந்த இடத்தில் மக்களை இன்னும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியது ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்திகள் ஆகும். சாதாரணமாக காணாமல் போன செய்திகளை கூட கடத்தல் செய்திகளாக ஊடகங்கள் மாற்றி தங்களுக்கான பார்வையாளர்களை அதிகரித்துக் கொண்டன. அதிலும் சில தனியார் யூடியூப் பக்கங்கள் சம்பவத்தை நேரடியாகவே பார்த்தது போலவும் புரளிகளை கிளப்பி விட ஆரம்பித்திருந்தனர்.

இது தொடர்பில் தேசம் திரையின் முழுமையான காணொளியை காண கீழேயுள்ள link ஐ Click செய்யவும்..!

 

பயனாளிகளின் தரவுகளை கைமாற்றிய விவகாரம் – மெட்டாவுக்கு 1.2 பில்லியன் யூரோ அபராதம் !

உலகின் பிரபலமான சமூகவலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் எனப்படும் முகநூலின் நிறுவனமாக மெட்டாவுக்கு ஐரோப்பாவில் அது இதுவரை சந்திக்காத அளவுக்கு 1.2 பில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முகநூல் நிறுவனம் தனது ஐரோப்பிய பயனாளிகளின் தரவுகளை அமெரிக்காவிற்கு அனுப்பியதை மையப்படுத்தி அயர்லாந்தை தளமாக கொண்ட தரவு பாதுகாப்பு ஆணையம் இன்று இந்த அபராததொகையை அறிவித்துள்ளது.

தனது நிறுவனத்துக்கு இவ்வாறு ஒரு பாரிய அபராதத்தொகை விதிக்கபட்டால் முகநூல் நிறுவனம் ஐரோப்பாவை விட்டு வெளியேறும் என அதன் தாய் நிறுவனமான மெட்டா அச்சுறுத்தல் விடுத்திருந்தாலும் இந்த அச்சுறுத்லை அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணையம் இன்று காலை இந்த அபராதத்தை அறிவித்ததுடன் முகநூல் நிறுவனத்தின் விதிமீறலையும் கண்டனம் செய்துள்ளது.

ஐரோப்பாவை பொறுத்தவரை மெட்டாவுக்கு விதிக்கப்பட்ட 1.2 பில்லியன் யூரோ என்ற இந்த அபராததொகை ஒரு சாதனை அளவாகும்.

எனினும் முகநூல் வலைத்தளத்தில் பயனாளிகளாக உள்ள ஐரோப்பியர்களின் அடிப்படை உரிமை மற்றும் அவர்களின் சுதந்திரத்துக்கு ஆபத்துக்களை உருவாக்கும் வகையில் அவர்களின் தரவுளை அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டமைக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கபட்டுள்ளது.

அத்துடன் ஐந்து மாதங்களுக்குள் ஐரோப்பிய பயனர்களின் தரவுகளை அமெரிக்காவிற்கு மாற்றும் நகர்வுகளை நிறுத்த வேண்டும் எனவும் அதேபோல ஆறு மாதகாலத்துக்குள் அமெரிக்காவில் முகநூல் நிறுவனத்தின் பயன்பாட்டில் உள்ள தரவுசேகரிப்பு களஞ்சியங்களில் இருந்து ஐரோப்பிய பயனர்களின் தரவுகள் அகற்றப்படவேண்டும் எனவும் உத்தரவிடப்படுகிறது

இந்த நிலையில் அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணையத்தின் இந்த அபராத நகர்வு நியாயமற்ற ஒரு நடவடிக்கையென விமர்சித்துள்ள மெட்டா நிறுவனம்; இந்த முடிவுக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போததாகவும் குறிப்பிட்டுள்ளது

இலங்கையுடன் மீண்டும் புதிய உடன்படிக்கை திட்டம் எதுவுமில்லை – அமெரிக்கா அறிவிப்பு !

இலங்கையுடன் மீண்டும் புதிய சோபா உடன்படிக்கை எதனையும் முன்னெடுக்கும் திட்டம் எதுவுமில்லை என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களிற்கான அமெரிக்க பணியகத்தின் துணை உதவிச்செயலாளர் அப்ரீன் அக்தர் தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் சோபா உடன்படிக்கையை செய்துகொள்வது குறித்து தற்போது அமெரிக்கா சிந்திக்கவில்லை என அவர்தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாங்கள் தற்போதைக்கு சிந்திக்கவில்லை என அப்ரீன் அக்தர் தெரிவித்துள்ளார்.

இருநாடுகளிற்கும் இடையில் சோபா உடன்படிக்கையை செய்துகொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் 2019 இல் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

இந்த நிலையில் அமெரிக்கா இலங்கையுடன் தொடர்ந்தும் நெருக்கமான விதத்தில் செயற்படுகின்றது என தெரிவித்துள்ள அப்ரீன் அக்தர் குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு விவகாரங்களில் மிகவும் நெருக்கமாக செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடற்படைக்கு அமெரிக்க கடற்படை கலத்தை வழங்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா விசேட கடல்ரோந்து விமானமொன்றை இலங்கைக்கு வழங்கவுள்ளதாகவும் அது அடுத்தவருடம் இலங்கைக்கு வந்துசேரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்தோபசுபிக் பிராந்தியத்தில் இலங்கையை அமெரிக்க வலுவான சகாவாக கருதுகின்றது எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

பராக் ஒபாமா உள்பட 500 அமெரிக்கர்களுக்கு ரஷியாவில் நுழைய தடை !

உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. மேலும் ரஷியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா உள்பட 500 பேர் ரஷியாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சகம் கூறும்போது,

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் நிர்வாகத்தால் தொடர்ந்து விதிக்கப்பட்ட ரஷியாவுக்கு எதிரான தடைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் 500 அமெரிக்கர்களுக்கு ரஷியாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷியாவுக்கு எதிரான ஒரு விரோதமான நடவடிக்கைக்கு கூட பதிலளிக்கப்படாமல் விடாது என்பதை அமெரிக்கா நீண்ட காலத்திற்கு முன்பே கற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

ரஷ்ய வைரங்களை தடை செய்ததது இங்கிலாந்து !

உக்ரைன், ரஷ்ய போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்ய வைரங்களை இங்கிலாந்து தடை செய்துள்ளது. ரஷ்யாவிலிருந்து தாமிரம், அலுமினியம், நிக்கல் உள்ளிட்ட உலோகங்கள் மற்றும் ரஷ்ய வைரங்களை இறக்குமதி செய்வதை தடை செய்வதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். அனைத்து வகையான பொருளாதார தடைகளையும் சமாளிக்க பிரிட்டன் ஜி 7 உறுப்பு நாடுகளுடன் சேர்ந்து தொடர்ந்து பணியாற்றி வருவதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

ஜி7 நாடுகள் உக்ரைனுடன் துணை நிற்பதை ரஷ்யாவிற்கு காட்ட விரும்புவதாக இந்திய வம்சாவளி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எப்போதும் அமைதி மற்றும் உலக பொருளாதார பாதுகாப்பை ஊக்குவிப்பதில் தான் ஜி7 கவனம் செலுத்துவதாகவும் ஜி7 நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக நின்று இந்தோ- பசுபிக் பகுதியில் அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதை புட்டனுக்கு காட்ட வேண்டும் எனவும் ரிஷி சுனக் தனது டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கார் ஏற்றுமதியில் ஜப்பானை பின்னுக்கு தள்ளியது சீனா !

ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் மிகப்பெரிய கார் ஏற்றுமதியாளராக மாறியுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில் சீனா 1.07 மில்லியன் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது, இது 2022 முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது 58 சதவீதம் அதிகமாகும் என பிபிசி தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் ஜப்பானின் வாகன ஏற்றுமதி முந்தைய ஆண்டை விட 6 சதவீதம் அதிகரித்து 954,185 ஆக உள்ளது.

மின்சார கார்களுக்கான தேவை மற்றும் ரஷ்யாவிற்கு விற்பனை செய்வதால் சீனாவின் ஏற்றுமதிகள் அதிகரித்துள்ளன.

சீனாவின் சுங்க பொது நிர்வாகத்தின்படி, ஜேர்மனியின் 2.6 மில்லியன் வாகன ஏற்றுமதியுடன் ஒப்பிடுகையில், 2022 ஆம் ஆண்டில் சீனா 3.2 மில்லியன் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளியாக்கும் ஊடகங்கள். !

பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளியாக்கும் ஊடகங்களின் போக்குத்தொடர்பில் பெண்கள் சந்திப்பு இணைய வழி கலந்துரையாடலில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணங்களாலும் அவதூறுகளாலும் மறைக்கப்படும் பெண்கள் மீதான சுரண்டல்கள் – உரத்துப் பேசுவோம் எனும் தலைப்பில் கடந்த 13.05.2023 சனிக்கிழமை இணைய வழிக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

அண்மையில் வலி வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சோ. சுகிர்தனால் ஏமாற்றப்பட்டு அவரின் வீட்டின் முன்பாக தீயில் எரிந்து உயிரிழந்த விஜிதா என்ற பெண்ணின் இறப்பு மற்றும் தேசம் இணையத்தளம் வெளிக்கொணர்ந்த ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பிரதம இணைப்பாளரான குடுமி ஜெயா என அறியப்பட்ட வெற்றிவேலு ஜெயந்திரனின் பெண்கள் மீதான பாலியல் சுரண்டல்கள் ஆகிய இரு விடயங்கள் இந்த உரையாடலின் பிரதான பேசுபொருளாக இருந்தன.

இது தொடர்பில் தேசம் திரையின் முழுமையான காணொளியை காண கீழேயுள்ள Link ஐ Click செய்யுங்கள்.