07

07

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவை எதிர்த்த போராட்டக்காரர்கள் – 52 பேர் வரை கைது !

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு 52 மன்னராட்சி எதிர்ப்பு போராட்டக்காரர்களை பொலிஸார் கைது செய்தனர்.

சனிக்கிழமையான நேற்று பிரித்தானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் முடிசூட்டிக் கொண்ட நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் அபே-யில் இருந்து பக்கிங்ஹாம் அரண்மனை வரை கூடியிருந்தனர்.

சிவப்பு, வெள்ளை மற்றும் நீல நிற உடையணிந்து இருந்த அரச நடைமுறை ஆதரவாளர்களுக்கு மத்தியில், நூற்றுக்கணக்கான மஞ்சள் ஆடை அணிந்த மன்னராட்சி எதிர்ப்பாளர்களும் ஊர்வலப் பாதையில் இணைந்து கொண்டனர்.

மேலும் அவர்கள் கையில் “எங்கள் ராஜா இல்லை”(Not My King) என்ற பதாகைகளை ஏந்திக் கொண்டு, பெரிய ஸ்பீக்கர்களில் மன்னராட்சிக்கு எதிரான கோஷங்களை கூச்சலிட்டனர்.

முடிசூட்டு விழாவில் மன்னராட்சி எதிர்ப்பாளர்கள் இடையூறுகளை ஏற்படுத்தலாம் என பொலிஸார் உறுதியாக நம்பிய நிலையில் அதன் தலைவர் கிரஹாம் ஸ்மித்-தை ஊர்வலம் தொடங்கும் முன்பே தடுத்து வைத்தனர்.

அத்துடன், மேலும் மன்னராட்சிக்கு எதிரான 51 ஆர்ப்பாட்டக்காரர்களை கூட்டத்தில் இருந்து பிரித்து பொலிஸார் கைது செய்தனர்.

இது தொடர்பாக லண்டன் பெருநகர காவல்துறையின் தளபதி கரேன் ஃபிண்ட்லே வெளியிட்ட அறிக்கையில், “இன்று காலை நாங்கள் கைது செய்ததைத் தொடர்ந்து பொதுமக்களின் கவலையை நாங்கள் முற்றிலும் புரிந்து கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

மன்னராட்சியை அகற்றிவிட்டு ஒரு அரச தலைவரைத் தேர்ந்தெடுக்க விரும்பும் குடியரசுக் குழுவின் தலைவரும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர்.

16 மணிநேர காவலுக்குப் பிறகு சனிக்கிழமை மாலை விடுவிக்கப்பட்ட கிரஹாம் ஸ்மித், “இங்கிலாந்தில் அமைதியான போராட்டத்திற்கு இனி உரிமை இல்லை” என்று தெரிவித்தார்.

“யாழ்ப்பாணத்தில் உள்ள 100அடி விகாரையை எக்காரணம் கொண்டும் அகற்ற முடியாது.” – ஜெனரல் சவேந்திர சில்வா

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை இராணுவத்தினரின் வழிபாட்டுக்காகவே உருவாக்கப்பட்டது. அதனை ஒருபோதும் அகற்றமுடியாது என  பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு அப்போது இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி அடிக்கல் நட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றிருந்தது.

இதனையடுத்து தனியார் காணிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மேற்படி விகாரையை அகற்றி அந்தக் காணிகளை விடுவிக்குமாறுகோரி மக்களால் 3 நாள் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பில் கொழும்புச் செய்தியாளர் ஒருவர் சவேந்திர சில்வாவிடம் கேள்வி எழுப்பியதற்கே மேற்கண்டவாறு அவர் பதிலளித்தார்.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரை அரசின் முழுமையான அனுமதியுடன் இராணுவத்தினரின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டது.

இனவாத. மதவாதக் கண்ணோட்டத்துடன் இதனை நோக்குவதை தமிழ்க் கட்சிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நிறுத்திக் கொள்ளவேண்டும்.

இந்த விகாரை சட்ட விரோதமானது அல்ல. அமைக்கப்பட்ட இந்த விகாரை எந்தக் காரணத்துக்காகவும் அகற்றப்படாது’ என்று சவேந்திரசில்வா பதிலளித்தார்.

நான் நளவன் என்பதால் என்னை ஆவாக்குழு, போதைப்பொருள் கடத்துபவன் என்கின்றனர் – அருண் சித்தார்த் உடனான நேர்காணல் காணொளி!

நான் நளவன் என்பதால் என்னை ஆவாக்குழு, போதைப்பொருள் கடத்துபவன் என்கின்றனர் என யாழ்ப்பாண சிவில் சமூக நிலைய  தலைவர் அருண் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

அருண் சித்தார்த் தொடர்பிலும் அவர் மீதான விமர்சனங்கள் தொடர்பிலும் – யாழ்ப்பாணத்திலுள்ள சாதிய அடக்குமுறை தொடர்பிலும் தேசம் திரையுடன் இடம்பெற்ற நேர்காணல்.

 

முழுமையான காணொளியை காண கீழேயுள்ளLink ஐ கிளிக் செய்யவும்..!