April

April

இரண்டு பேருந்துகள் ஒன்றை ஒன்று மோதியதில் 30 பேர் காயம் !

இரண்டு பேருந்துகள் ஒன்றை ஒன்று மோதியதில் 30 பேர் காயம் !

பெலியத்த பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தங்காலை வைத்தியசாலையிலும், பெலியத்தவில் உள்ள வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தேங்காயின் விலை மீண்டும் அதிகரிப்பு !

தேங்காயின் விலை மீண்டும் அதிகரிப்பு !

நாட்டில் தேங்காயின் விலை சில பிரதேசங்களில் மீண்டும் அதிகரித்துள்ளதாக தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார். 180 ரூபாவிற்கு விற்கப்பட்ட தேங்காய் தற்போது 220 ரூபாய் முதல் 240 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மே மற்றும் ஜூன் மாதங்களில் நாட்டில் தேங்காய் அறுவடை 500 மில்லியனை தாண்டும் என்று தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கணித்துள்ளது. அவ்வாறாயின் தேங்காயின் விலை மீண்டும் குறைவடையும் என்று தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தெற்காசியாவில் போர்மேகம் சூழ்ந்துள்ளது !

தெற்காசியாவில் போர்மேகம் சூழ்ந்துள்ளது !

காஷ்மீரின் இரண்டு பகுதிகளான இந்திய மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இரு நாட்டு இராணுவங்களுக்கு இடையேயும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேநேரம் பஹல்காம் தாக்குதல் தொடர்பில் இந்தியா சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தி வருகின்றது.

பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு சம்பந்தம் இல்லை என்று முற்றாக மறுக்கிறது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து வரும் அமைதிக்கான கோரிக்கையை இந்தியா பலகீனமாக கருதக் கூடாது என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தான் கோரும் சுதந்திர விசாரணையில் சீனா மற்றும் ரஸ்யா நடுநிலமை வகிக்கலாம் என கருத்துப்பட தெரிவித்துள்ளார்.

முன்னராகவே பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு உரிமை கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பஹல்காம் தாக்குதலின் பின்னர் காஷ்மீரில் வாழும் மக்கள் இந்திய பாதுகாப்பு படைகளால் “கூட்டுத்தண்டணைக்கு“ ( collective punishment) உள்ளாகி வருவதாக எம்பி ரூஹீல்லா மெஹ்தி தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 7 ஹமாஸ் இஸ்ரேலின் இசை நிகழ்ச்சியில் மேற்கொண்ட தாக்குதலுக்கு பின்னர் இஸ்ரேல் இராணுவத்தின் கூட்டுத்தண்டணைக்கு ஹாசா மக்கள் பலியாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் இதுவரை 9 வீடுகளை காஷ்மீரில் இந்திய ராணுவம் குண்டு வைத்து தகர்த்துள்ளது. வீடுகள் போராளிகளுக்கு சொந்தமானவை அல்ல. அந்த வீடுகளில் ஒருகாலத்தில் லஷ்கர்-இ-தொய்பா உறுப்பினர்கள் தங்கியிருந்துள்ளனர். அல்லது அங்கே அவர்கள் பிறந்து வளர்ந்துள்ளனர். அதற்காக உள்ளூர் மக்களின் வாழ்விடங்களை அழித்து அப்பாவி மக்களை இஸ்ரேல் போன்று தண்டிப்பதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின், போர்த்துகல், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மின்சார வெட்டு !

ஸ்பெயின், போர்த்துகல், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மின்சார வெட்டு !

திங்கள் கிழமை மதியம் ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் பிரான்ஸின் சில பகுதிகளில் திடிரேன எதிர்பாராத மின்சார வெட்டு எட்டு மணிநேரம் நிகழ்ந்தது. இதனால் பல மில்லியன் பவுண்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் இன்ரநெட், தொலைத் தொடர்பு, போக்குவரத்து, நிதிப்பரிமாற்றம், மக்களின் நாளாந்த நடவடிக்கைகள் எனப் பல்வேறு பாதிப்புகளையும் இது ஏற்படுத்தி உள்ளது.

உலகிலேயே ஸ்பெயின் தான் அதிகமாக மீள்பயன்பாடுள்ள வளங்களைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றது. 43 சதவீதமான சக்தி இவ்வாறே உற்பத்தி செய்யப்படுகின்றது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் போர்த்துக்கல்லுக்கும் பிரான்ஸ்க்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. அதனாலேயே ஸ்பெயினில் உருவான பிரச்சினை போர்த்துக்கல்லுக்கும் பிரான்ஸ்க்கும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதுவரை ஏன் இந்த மின்சார வெட்டு வழமையான சாதாரணமான ஒரு நாளில் ஏற்பட்டது என்ற குழப்பத்தில் ரெட் எலக்ரிக்கா என்ற மின்சார விநியோகத்தை மேற்கொள்ளும் ஸ்பெயின் நிறுவனம் மண்டையைப் போட்டு உடைக்கின்றது. இதற்கிடையே இவ்வாறான ஒரு சம்பவம் ஜேர்மனியில் நிகழ்தாலும் என்பதைக் கவனத்தில் கொண்டு மூன்றுநாட்களுக்குத் தேவையான தண்ணீர், மெழுகுதிரி போன்றவற்றை கொள்வனவு செய்து வைத்திருக்குமாறு ஜேர்மனியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஸ்பெயினில் இந்த மின்சார வெட்டுக்கான சரியான காரணம் இதுவரை அறியப்படாததால் அது சைபர் தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் தொடர்கின்றது. இவ்வாறான சைபர் தாக்குதல்கள் அமெரிக்காவில் ஏற்கனவே நிகழ்ந்துள்ளது. அதனால் இது தொடர்பில் மேற்குலகம் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்படுகின்றது.

ஆனைவிழுந்தான் தொழில்நுட்ப கல்லூரியை விடுவிக்க எம்பி சிறிதரன் கோரிக்கை !

ஆனைவிழுந்தான் தொழில்நுட்ப கல்லூரியை விடுவிக்க எம்பி சிறிதரன் கோரிக்கை !

விடுதலைப்புலிகள் காலத்தில் சிறப்பாக இயங்கிய ஆனைவிழுந்தான் தொழில்நுட்பக் கல்லூரியை இராணுவம் விடுவிக்குமா? வன்னேரிக்குளம் மற்றும் ஆனையிறவு பகுதிகளில் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல்ப் பரப்புரையின் போது சிவஞானம் சிறிதரன் இதனைத் தெரிவித்துள்ளார். ஆனைவிழுந்தான் தொழில்நுட்ப கல்லூரி மீண்டும் இயங்கினால் அப்பகுதி மாணவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கிடமில்லை.

அரச நிதியை எடுப்பதைக் காட்டிலும் வைப்பு செய்யும் போது தான் தவறு நடந்துள்ளது ! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க !

அரச நிதியை எடுப்பதைக் காட்டிலும் வைப்பு செய்யும் போது தான் தவறு நடந்துள்ளது ! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க !

ஏப்பிரல் 28 ஆம் திகதி இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தில் மூன்று மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கினார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. நிரந்தர வைப்பிலிருந்த அரச நிதியை கணக்கிலிருந்து எடுத்து அரசிற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் வழக்கிலேயே ரணில் சாட்சியமளித்தார்.

அதன்பின்னர் தனது அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். தன்னைப் பொறுத்தவரை நிதியை எடுத்ததில் தவறில்லை. அரச செலவுகளுக்காக ஒதுக்கப்படும் நிதியை வங்கிகளில் வைப்பிலிட நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தில் இடம் இல்லை. எனவே வைப்பிலிட்டதே தவறு என இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் வாதிட்டதாகவுதம் கூறினார். அத்துடன் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திற்கு வழங்கும் கடிதங்களை பிறருக்கு தெரியப்படுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க மட்டக்களப்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திற்கு வழங்கிய கடிதம் குறித்து கருத்துக்கள் தெரிவித்த குரல் பதிவையையும் ஊடகவியலாளர்களுக்கு போட்டுக் காட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற காலவகாசம் கோரும் இலங்கை !

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற காலவகாசம் கோரும் இலங்கை !

சர்வதேச நாணயத்தின் கடன் வசதியினை நீடிப்பதற்கான நான்காவது மதிப்பாய்வு நடந்து வருகின்றது. இதில் கலந்து கொண்டுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழு ஐஎம்எப் விதித்திருக்கின்ற நிபந்தனைகளை நிறைவேற்ற கூடிய கால அவகாசத்தை கேட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஒப்புதல் அளிக்கப்பட்டதா? என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

மேலும் இப்பேச்சு வார்த்தைகளில் ஈடுபடும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிரிவர்தன உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் குழு டொனால்ட் ட்ரம்ப் இலங்கைக்கு விதித்துள்ள வரிச்சலுகைகள் தொடர்பிலும் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்விரு பேச்சுவார்த்தைகள் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தற்கொலை குண்டுத் தாக்குதல் வழக்கில் சாட்சியமளித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரி !

தற்கொலை குண்டுத் தாக்குதல் வழக்கில் சாட்சியமளித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரி !

2008 இல் ஒக்டோபர் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் மைத்திரிபால சிறிசேனா மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் அவர் உயிர் பிழைத்திருந்தார். இந்த தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு உதவிய குற்றச்சாட்டில் இரண்டு நபர்களுக்கு எதிரான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினமான ஏப்பிரல் 28 ஆம் திகதி இவ்வழக்கின் முதலாவது சாட்சியான மைத்திரிபால சிறிசேன நீதிமன்றில் முற்பட்டு சாட்சியமளித்துள்ளார். 2008 இல் மைத்திரி சுகாதார அமைச்சராக இருந்த போதே அவரது வாகனத் தொடரணி மீது தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மைத்திரி பயணித்த வாகனம் குண்டுத் தாக்குதலில் தப்பியது. இருந்தபோதும் இத்தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் ஏழு பேர் காயமடைந்திருந்தனர்.

 

விரைவில் தையிட்டி விகாரையை அண்டிய காணிகள் விடுப்பு !

விரைவில் தையிட்டி விகாரையை அண்டிய காணிகள் விடுப்பு !

தையிட்டியில் கட்டப்பட்டுள்ள திஸ்ஸமகார விகாரைக்காக சூவிகரிக்கப்பட்ட பொது மக்களின் காணிகளில் விகாரை அமைந்திருக்கும் காணி தவிர ஏனைய காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என என்பிபி அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன. இதன் மூலம் தையிட்டி விகாரையை வைத்து என்பிபி அரசுக்கு எதிராக அரசியல் செய்யும் கட்சிகளுக்கு பின்னடவாக அமையும் எனக் கருதப்படுகிறது.

மே மாதம் 6 திகதி உள்ளூராட்சித் தேர்தல்களுக்கு முன்னராகவே காணிகள் விடுவிக்கப்படும் என்ற அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகள் அனைத்தும் விடுக்கப்படும் என கிளிநொச்சி தேர்தல்ப் பிரச்சார கூட்டத்தில் வைத்து ஜனாதிபதி வாக்குறுதியளித்தமையும் குறிப்பிடத்தக்கது.

கஜாவைத் தேசியத் தலைவர் என்ற சட்டத்தரணி சுகாஸ் – மாட்டிவிட்ட சுரேஸ் !

கஜாவைத் தேசியத் தலைவர் என்ற சட்டத்தரணி சுகாஸ் – மாட்டிவிட்ட சுரேஸ் !

உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரையின் போது சட்டத்தரணி சுகாஸ் உணர்ச்சி மிகுதியால் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குப் பிறகு தேசியத் தலைவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இருக்கிறார் என்று கூறி வம்பில் மாட்டிக் கொண்டுள்ளார். பின்னர் ஐபிசி தொலைக்காட்சி விவாதத்தில் ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் தான் அப்படி ஒருபோதும் கூறவில்லை என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்கின்றார். இப்போது அந்தக் காணொளி வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தரணிகளும் அரசியல் வாதிகளும் என்றாலே பொய் பேசுபவர்கள் என மக்கள் மத்தியில் நிலவும் பொதுக் கருத்து நிரூபணமாகி இருக்கிறது என்று கூறலாம்.