29

29

மூன்று நாள் போர் நிறுத்தத்தை அறிவித்தார் ரஷ்ய ஜனாதிபதி !

மூன்று நாள் போர் நிறுத்தத்தை அறிவித்தார் ரஷ்ய ஜனாதிபதி !

இரண்டாம் உலகப் போர் வெற்றியின் 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 03 நாள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார். அதன்படி, மே 8 ஆம் திகதி முதல் மே 10 ஆம் திகதி வரை 72 மணி நேர போர்நிறுத்தம் அமுலில் இருக்கும் என்று கிரெம்ளின் அறிவித்துள்ளது. இந்த போர் நிறுத்தத்தை யுக்ரைனும் கடைபிடிக்க வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.

வெள்ளத்தில் மூழ்கியது நுவரெலியா!

வெள்ளத்தில் மூழ்கியது நுவரெலியா!

நுவரெலியாவில் இன்று ஏப்ரல் 28 ஆம் திகதி பெய்த பலத்த மழையால் பெரும் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்­ள­து. இதனால், பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் அடை­மழை கார­ண­மாக நுவரெலியாவில் அதிகமான  தாழ்­நிலப் பகு­திகள் முற்­றாக மூழ்­கி­யுள்­ளன.
சில பிர­தான வீதிகளில் மழை நீர் நிரம்­பி­யுள்­ள­துடன், நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் சிபெட்கோ எரிபொருள் நிலையத்துக்கு முன்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

அத்தோடு, தோட்டங்களை அண்டிய வீடுகளுக்கும் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் பாரிய மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.

 

பாரிஸில் விசா கிடைக்காத சம்பளம் கிடைக்காத விரக்தியில் இளைஞன் ரயிலில் வீழ்ந்து தற்கொலை !

பாரிஸில் விசா கிடைக்காத சம்பளம் கிடைக்காத விரக்தியில் இளைஞன் ரயிலில் வீழ்ந்து தற்கொலை !

லக்ஸான் என்ற தமிழ் இளைஞர் கடந்த சனிக்கிழமை 26 ஏப்பிரல் பாரிஸின் புறநகர் ரயில் நிலையமொன்றின் தண்டவாளத்தில் படுத்திருந்து தற்கொலை செய்துள்ளார். பெரும் தொகைப் பணத்தை செலவு செய்து குறித்த இளைஞன் பிரான்ஸ்க்கு வந்துள்ளார். அவரின் அகதித் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் அவர் வேலை செய்த உணவகம் ஒன்றிலிருந்து மூன்று மாதங்களுக்குரிய சம்பள பாக்கி இருந்ததாகவும் தெரியவருகின்றது. விசாவும் இல்லாமல் வேலை செய்த சம்பளமும் உரிய நேரத்தில் கிடைக்காத விரக்தியில் லக்ஸான் இருந்ததாக அவரது நண்பர்கள் வட்டாரத்திலிருந்து தெரிய வந்துள்ளது. கடும் மன உளைச்சலில் இருந்த அந்த இளைஞர், தண்டவாளத்தில் தலையை வைத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

வெநாளிட்டு வேலை வாய்ப்புக்களுக்கான பல்வேறு சந்தர்ப்பங்களை பல துறைகளிலும் ஐரோப்பிய நாடுகள் வழங்கி வருகின்றன. இந்த வாய்ப்புக்களை பயன்படுத்தி சட்ட ரீதியாக வெளிநாடுகளுக்கு இலங்கையிலிருந்து வேலை பெற்று வரலாம். அதற்கேற்றாற் போல் இளைஞர் யுவதிகள் தங்கள் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலரும் வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் தற்கொலை செய்துகொண்டுள்ளமை தெரிந்ததே.

அதேநேரம் கனடா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் விசா இல்லாத தமிழ் இளைஞர் மற்றும் யுவதிகள் வேலை வழங்கும் கடைக்காரர்களால் குறைந்த சம்பளம், அதிகப்படியான வேலைப்பளு மற்றும் ஒழுங்காக சம்பளத்தை கொடுக்காமல் என பல்வேறு வகைகளிலும் சுரண்டப்படுகிறார்கள். இப்படியான சந்தர்ப்பங்களில் விசா இல்லாத காரணத்தால் சட்டத்தையும் நாட முடியாதுள்ளது. ஒரு கட்டத்தில் லக்ஸான் போன்று தவறான முடிவு எடுத்து தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

யாழில் தொடரும் மலையக மாணவர்களின் தற்கொலைகள் !

யாழில் தொடரும் மலையக மாணவர்களின் தற்கொலைகள் !

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கற்று வந்த மலையகத்தைச் சேர்ந்த மாணவன் கடந்த 26 ஆம் திகதி சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டுள்ளார். கொட்டகல – புனித அன்ருஸ் தோட்டம் என்ற முகவரியைச் சேர்ந்த 24 வயதான கருப்பையா கவிரத்தினம் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் கொக்குவில் பிரவுண் வீதியில் தங்கியிருந்த விடுதியிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரம் ஆறுதிருமுருகனின் தெல்லிப்பளை துர்க்காபுரம் மகளிர் இல்லத்திலும் கடந்த வியாழக்கிழமை ஏப்பிரல் 24 ஆம் திகதி மலையக மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்விரு சம்பவங்களிலும் காதல் விவகாரங்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேநேரம் யாழ்ப்பல்கலைக்கழக மாணவன் தற்கொலையில் அவர் படிப்பதற்கு பணப்பற்றாமையால் சிரமப்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இவை எதனையும் உறுதப்படுத்த முடியவில்லை. எப்படியிருந்த போதும் மலையகத்திலிருந்து யாழ்ப்பாண பல்கலைக் கழகத்துக்கு வரும் மாணவர்கள் பொருளாதார ரீதியாக பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ஆறுதிருமுருகன் போன்றவர்கள் மலையக மாணவர்களின் நலனுக்காக உதவுகிறோம் என பெருந்தொகை பணத்தை புலம்பெயர் தொண்டு அமைப்புக்களிடம் வசூலிக்கிறார்கள். அதனை அவர்கள் மலையக மாணவர்களின் நலனுக்கு எவ்வாறு செலவு செய்கிறார்கள் என்பதில் எந்த வெளிப்படைத் தன்மையும் கண்காணிப்பும் இல்லை.

சமீப காலங்களில் இளையோரின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் மாணவர்களின் உளவள ஆரோக்கியம் தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதில்லை.

மூன்று முன்னாள் அமைச்சர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என ஜனாதிபதி அனுர தெரிவிப்பு !

மூன்று முன்னாள் அமைச்சர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என ஜனாதிபதி அனுர தெரிவிப்பு !

பதிவு செய்யப்படாத வாகனங்களைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பேருவளையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி , உத்தியோகபூர்வ இறக்குமதி தடையின் போது இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதில் இந்த நபர்கள் ஈடுபட்டதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

 

பலாலியை மூடுங்கள் வன்னியில் திறவுங்கள் – சர்வதேச விமான நிலையத்திற்கு வன்னியே பொருத்தமான இடம் ! எம் பி கஜேந்திரகுமார்

பலாலியை மூடுங்கள் வன்னியில் திறவுங்கள் – சர்வதேச விமான நிலையத்திற்கு வன்னியே பொருத்தமான இடம் ! எம் பி கஜேந்திரகுமார்

தற்போது இருக்கின்ற பலாலி விமானநிலையத்தை சர்வதேச விமான நிலையமாக விஸ்தரிப்பதற்கு ஏற்கனவே திட்டமிட்டிருந்த திட்டத்தை என்பிபி நிறைவேற்ற முனைகின்றது. சர்வதேச விமான நிலையமும் சர்வதேச கிரிக்கெட்ட மைதானத்தையும் யாழ்ப்பாணத்தில் கட்டித்தருவதாக கங்கனம் கட்டிக் என்பிபி அரசாங்கம் நிற்கின்றது. இது வாக்குகளுக்காக யாழ்ப்பாண மையவாதத்தை குளிர்விக்கும் செயற்பாடோ எனவும் சந்தேகம் எழுகின்றது. அபிவிருத்தியை யாழ்ப்பாணத்திற்குள் மட்டும் குவிப்பது பொருத்தமானதல்ல. இதனை தேசம்நெற்றும் யாழ் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தது.

இந்த விடயத்தில் ஏனைய தமிழ்த்தேசிய கட்ச்சித் தலைவர்கள் போல அல்லாமல் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரிடமிருந்து எழுந்த முதலாவது எதிர்ப்புக் குரல் வரவேற்கத்தக்கது. யாழ் சர்வதேச விமான நிலையத்திற்கு பலாலியை தெரிந்தெடுத்தமை பொருத்தமற்றது என்று கூறும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ்ப்பாணத்தின் ஒரு மூலையில் சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதற்குப் பதிலாக ஏன் வன்னியிலோ, வவுனியாவிலோ, அநுராதபுரத்திலோ அல்லது கிழக்கிலோ ஒரு இடத்தை தெரிவு செய்யக் கூடாது என கேள்வி எழுப்பினார்.

யாழ்ப்பாணம் ஒரு குடாநாடு. மிக நெருக்கமான மற்றும் குறுகலான நிலப்பகுதியாகும். பலாலி சர்வதேச விமான நிலையத்திற்காக 1,000 ஏக்கர் விவசாய மற்றும் தோட்ட தனியார் நிலங்கள் சுவீகரிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது மரக்கறி மற்றும் விவசாய பொருட்கள் உற்பத்தியிலும் கால்நடை வளர்ப்பிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். காணிகளை இழந்து தமது வாழ்வாதாரத் தொழில்களை செய்ய முடியாது நிலங்களுக்குச் சொந்தக்காரான மக்கள் வறுமையை எதிர்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

தனியே வாக்கரசியலுக்காக யாழ்ப்பாண மையவாதிகளை திருப்திப்படுத்துவதை விட நிலைபேறான அபிவிருத்தியை நோக்கியே அரசாங்கங்களின் செயல்த்திட்டங்கள் இருக்க வேண்டும்.

வன்னி மாவட்டமே ஈழப்போரில் கோரமான அழிவுகளைச் சந்தித்த மாவட்டம், அபிவிருத்தியில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. யுத்ததின் வடுக்களை சுமந்து நிற்கின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரை 1995 இல் நடந்த சூரியகதிர் இராணுவ நடவடிக்கையின் போது யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2009 அல் முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் வரையும்மே யாழில் நேரடி யுத்தம் ஒன்று இடம்பெறவில்லை. 1995 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு இடம்பெயர்ந்த யாழ் மாவட்ட மக்களில் வன்னியிலேயே நிரந்தரமாக தங்கியவர்களைத் தவிர ஏனைய யாழ்ப்பாண மக்கள் நீண்ட காலம் யுத்ததின் கொடிய அழிவுகளிலிருந்து தப்பிக் கொண்டனர்.

1995 க்கு பிறகு யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பூர்வீக மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வெளியேறி விட்டனர். பலர் புலம்பெயர்ந்து சென்றவர்களை விட ஏனையோர் தென்னிலங்கையில் கொழும்பில் குடியேறிவிட்டார்கள்.

வன்னி மாவட்டம் கிளிநொச்சியைப் பொறுத்தவரை ஏ 9 நெடுஞ்சாலை ஊடறுத்துச் செல்வதும் வாகனப் போக்குவரத்து நெரிசல் இல்லாத பயணிக்கலாம். வடக்கு கிழக்கை இணைக்கும் இடத்தில் வன்னி மாவட்டம் உள்ளது. மேலும் வன்னி மாவட்டத்தில் பெருமளவான அரசாங்க காணிகள் உள்ளன. தனியார் காணிகளை சுவீகரித்து பணம் கொடுக்கத் தேவையில்லை. மேலும் இலங்கையில் சனத்தொகை அடர்த்தி குறைந்த பிரதேசமாக வன்னி உள்ளது. அந்த வகையில் சர்வதேச விமான நிலையத்துக்கான பொருத்தமான இடம் வன்னியே என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமாரின் கோரிக்கை மிகப் பொருத்தமானதே.

நீண்ட கால நோக்கில் சனத்தொகை அடர்த்தி மிக்க யாழ்ப்பாணத்திலிருந்து சனத்தொகை அடர்த்தி குறைந்த வன்னிக்குக் கொண்டு செல்வதன் மூலமே அபிவிருத்தியை ஜனநாயகப்படுத்த முடியும். எதிர்கால விஸ்தரிப்புக்கும் இதுவே பொருத்தமானது. இந்த வகையில் யாழ் பல்கலைக்கழகத்தின் வளாகத்தை கிளிநொச்சி அறிவியல் நகருக்குக் கொண்டு சென்ற முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடு பாராட்டுக்குரியது.

குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு தமிழ்நாட்டுடனான தொப்புள் கொடி உறவை பேண வலுப்படுத்த தற்போது கப்பல் போக்குவரத்தும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காங்கேசன் துறை இறங்குதுறைக்கு நாகப்பட்டினத்திலிருந்து கப்பல் போக்குவரத்து கிரமமாக இடம்பெற்று வருகிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு 90 நிமிடங்களில் வந்து விடலாம். கிளிநொச்சி துரிதமாக வளர்ந்து வரும் நகரமாகும். யாழ் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை, மத்தியப்படுத்தப்பட்ட கழிவகற்றல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமை மற்றும் ஒடுங்கிய சன நெருக்கடி அதிகமான பலாலி வீதி என எப்படி பார்த்தாலும் சர்வதேச விமானநிலையம் வன்னி மாவட்டத்தில் அமைவதே பொருத்தமானதாகவிருக்கும். யாழ்ப்பாணத்திற்கு இரணைமடு குளத் தண்ணீரை குடிக்க கொடுக்க மறுக்கும் சிறிதரன், கிளிநொச்சிக்கு சர்வதேச விமான நிலையம் வர வேண்டும் என கோரிக்கை விடுக்கவில்லை என்பது தான் இராஜதந்திரமாகும். சிறிதரனுக்கு யாழ்ப்பாண வாக்கும் வேண்டும் கிளிநொச்சி வாக்கும் வேண்டும்.

சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை தீவகத்திற்குள் கொண்டு வருவது கூட பொருத்தமானதாக அமையலாம். பெரும்பாலன தீவுகள் மக்கள் இல்லாது வெறிச்சேடிக் கிடக்கின்றன. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை பார்வையிட சர்வதேச ரீதியாக கிரிக்கெட் ரசிகர்கள் வரும் போது தீவகத்தில் உல்லாச பயணத்துறையையும் அபிவிருத்தி செய்யலாம். தீவகத்தில் அதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

வடக்கு – கிழக்கில் பெண்களின் வேலை வாய்ப்புக்கு அச்சுறுத்தல் – ஜிஎஸ்பி வரிச்சலுகைகள் தொடர்பில் தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ், டிரிஎன்ஏ தங்கள் நிலைப்பாடட்டைச் சொல்லவும் !

வடக்கு – கிழக்கில் பெண்களின் வேலை வாய்ப்புக்கு அச்சுறுத்தல் – ஜிஎஸ்பி வரிச்சலுகைகள் தொடர்பில் தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ், டிரிஎன்ஏ தங்கள் நிலைப்பாடட்டைச் சொல்லவும் !

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் அதனை இலங்கைக்கு மறுக்க வேண்டும் என்ற தொனியிலேயே தமிழ் தேசியக் கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளன. ஆனால் அவர்கள் அதனை முழுமையாக மக்கள் முன் தெரிவிப்பதாகத் தெரியவில்லை. வெளிநாட்டில் உள்ள அவர்களின் எஜமானர்கள் இலங்கை அரசைப் பழிவாங்கும் எண்ணத்தில் மனித உரிமைகளின் அடிப்படையில் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்கக்கூடாது என வாதிடுகின்றனர்.

ஜி. எஸ். பி. பிளஸ் வரிச் சலுகையை இலங்கைக்கு வழங்குவது குறித்து மதிப்பிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றிய குழு இன்றைய தினம் நாட்டுக்கு வருகை தரவுள்ளது. எதிர்வரும் மே 7ஆம் திகதி வரை நாட்டில் தங்கி இருந்து அவர்கள் தங்களுடைய மதிப்பீட்டை மேற்கொள்ள உள்ளனர். இந்த குழுவினர் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உட்பட அரசஅதிகாரி கள், எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள், சிவில் சமூகம், வணிக சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் என பல தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளது.

இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படக் கூடாது என புலம்பெயர்ந்து வாழ்கின்ற சில தமிழ் அமைப்புகள் கோரிவருகின்றனர். பிரித்தானிய தொழிற்கட்சியின் முக்கிய பிரமுகர் சென் கந்தையா தாங்கள் இலங்கைக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை வழங்கவிடாமல் தடுப்போம் என தேசம்நெற் இல் சூழுரைத்து இருந்தார். மனித உரிமைகள் விடயத்தில் வன்னி யுத்தத்திற்கு சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசு மறுப்பதால் அதற்கு அழுத்தம் கொடுப்பதற்காக தாங்கள் இந்த அழுத்தத்தை வழங்குவதாக சென் கந்தையா தேசம்நெற்க்குத் தெரிவித்து இருந்தார்.

 

இதே நிலைப்பாட்டையே தமிழ் தேசியக் கட்சிகள் கொண்டிருந்த போதும் அவர்கள் இதனை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. ஊடகங்களும் அவர்களுடைய கருத்தை பெற்றுக்கொள்ளவில்லை. இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியக் குழுவை தமிழ் கட்சிகள் சந்திக்க உள்ளனவா? அவர்கள் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்க வேண்டும் என்று கோருவார்களா, வழங்க வேண்டாம் என்று குறுவார்களா? இது தொடர்பில் தமிழ் கட்சிகள் தங்களுடைய கருத்துக்களை மிக வெளிப்படையாக வைக்க வேண்டும். ஜிஎஸ்பி வரிச்சலுகை மறுக்கப்பட்டால் வடக்கு கிழக்கில் உள்ள ஆயிரக்கணக்கான பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பாதிக்கப்படும். அதனால் இது தொடர்பில் தமிழ் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை மிகத் தெளிவாக தெரியப்படுத்த வேண்டும்.

அமெரிக்கா இறக்குமதிக்கான தீர்வை யை இலங்கைக்கு சடுதியாக அதிகரித்துள்ளதால் இலங்கை மிகுந்த பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி உள்ளது. இதனால் மூன்று லட்சம் வரையான பெண்கள் வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதும் வேலையிழக்கும் அபாயம் உள்ளது. ஜிஎஸ்பி வரிச்சலுகையையும் இலங்கை இழந்தால் வேலையிழக்கும் பெண்களின் எண்ணிக்கை ஐந்து லட்சம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் பின்னணியில் இன்றைய தினம் கூடும் அமைச்சரவை, பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் என்பன குறித்து முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளனர். இதன்படி, நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை முழு மையாக நீக்கவும் புதிய சட்டம் ஒன்றை
நிறைவேற்றவும் அரசாங்கம் அவதானம் செலுத்துகின்றது என்பதனை தேசம்நெற் சில தினங்களுக்கு முன் சுட்டிக்காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜி. எஸ். பி. பிளஸ் வரிச் சலுகையில் பயனடையும் குறைந்த அல்லது நடுத்தர வருமானமட கொண்ட 8 நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். மனித உரிமை கள், தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் நல்லாட்சி தொடர்பான 27 சர்வதேச மரபுகளை அங்கீகரித்த
பொருளாதார ரீதியில் பாதிக்கப்படக் கூடிய வளரும் நாடுகளின் நலன் கருதி இந்த சலுகை வழங்கப்படுகிறது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெறும் நாடுகளை இரு வருடங்களுக்கு ஒருமுறை மதிப்பீடு செய்து சலுகைக்கான ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும்.

இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி இடமாக ஐரோப்பிய ஒன்றியம் உள்ளது. கடந்த ஆண்டு
270 கோடி யூரோவை இலாபமாக இலங்கை ஈட்டியது. இந்த ஏற்றுமதிகளில் 85 சதவீதம் ஜி. எஸ். பி. பிளஸ்
வரிச் சலுகை மூலம் கிடைத்தது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. ஆனாலும் இலங்கை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள விரல் விட்டு எண்ணக் கூடிய நாடுகளுக்கே தன்னுடைய பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் இந்த ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை முழுமையாகப் பயன்படுத்தவில்லை. அதனாலேயே அமெரிக்கா இறக்குமதித் தீர்வையை அதிகரித்ததும் இலங்கை மிகப்பெரிய தாக்கத்தை எதிர்கொண்டது. ஏற்றுமதிகளைப் பன்முகப்படுத்த வேண்டும் என்ற குரல்கள் தற்போது அதிகரித்துள்ளது.

இலங்கைப் பொருளாதாரம் – தேசியவாதம் பற்றி சமூக அரசியல் செயற்பாட்டாளர் முன்னாள் ஈரோஸ் உறுப்பினர் ரவி சுந்தரலிங்கம் குறிப்பிடுகையில் ஜேவிபி தேசியவாதத்தைக் விட்டுவிட்டதாகவும் தமிழ் கட்சிகளும் தேசியவாதத்தைக் கைவிட வேண்டும் என்றும் தெரிவித்தார். புலத்திலிருந்து சென் கந்தையா போன்றவர்களும் தமிழ் தேசியக் கட்சிகளும் ஜிஎஸ்பி பிளஸ் யை நிராகரிக்கக் கோருவது முட்டாள்தனம் என்பதையும் அவர் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் சுட்டிக்காட்டினார்.