13

13

கிளி உடற்கல்விப் பயிற்றுவிப்பாளரின் பாலியல் துஸ்பிரயோகம் ! 16 மாணவர்கள் பாதிப்பு ! பொலிஸ் தேடுதல் ! பெற்றோர் பா உ சிறிதரன் மீது காட்டம் !

கிளி உடற்கல்விப் பயிற்றுவிப்பாளரின் பாலியல் துஸ்பிரயோகம் ! 16 மாணவர்கள் பாதிப்பு ! பொலிஸ் தேடுதல் ! பெற்றோர் பா உ சிறிதரன் மீது காட்டம் !

 

கிளி கனிஸ்டா விளையாட்டு பயிற்றுவிப்பாளர் அலன் என்பவர் தன்னிடம் பயிற்சி பெற்று வந்த 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பாதிக்கப்பட்ட சிறார்களின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். பா உ சிறிதரனுக்கு நெருக்கமான இவரது விடயம் பொதுமக்களுக்குத் தெரிய வந்ததும் அதனை மறைக்க பா உ சிறிதரன் முயற்சித்தாக பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது சந்தேக நபரான அலனைக் கைது செய்h பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

 

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி பாராளுமனற உறுப்பினர் ரஜீவன் காணொலி ஒன்றை வெளியிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்க நம்பிக்கை அளித்துள்ளார்.

 

இந்த சிறுவர்கள் 10 முதல் 13 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களை விளையாட்டு பயிற்றுனர் மலசல கூடத்திற்கு அழைத்து சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களில் சிலரது நடவடிக்கைகளில் மாற்றமும் கல்வியில் பின்னடைவும் அவதானிக்கப்பட்ட நிலையில், சிறுவர்கள் இருவர் மூலமே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

இதனை அடுத்து பாடசாலை நிர்வாகம் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் விசாரணைகள் மேற்கொண்டனர். தொடர்ந்து போலீசாருக்கு மேற்குறித்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் சந்தேக நபரை கைது செய்யாத போலீசார் பாதிக்கப்பட்ட சிறுவர்களை குற்றவாளிகள் போல் நடத்துவதாக பாதிக்கப்பட்ட சிறுவர்களும் பெற்றோர்களும் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த புதன் கிழமை ஏப்ரல் 9 பொலிஸார் சிறார்களை பாடசாலையில் தடுத்து வைத்து குற்றவாளிகள் போல் விசாரித்துள்ளனர். அதையடுத்தே பெற்றோர் கலவரம் அடைந்து காணொலிகளைப் பரப்பினர்.

கிளி கனிஸ்டா பாடசாலை பா உ சிறிதரன் அதிபராக இருந்த பாடசாலை. பா உ சிறிதரனுக்குத் தெரியாமல் அங்கு ஓரணுவும் அசையாது. அப்படியிருக்கையில் இந்தப் பாலியல் துஸ்பிரயோகம் வெளிவந்ததும் அதனை மறைக்க அவர் முயற்சித்தார் எனக் குற்றம்சாட்டப்படுகின்றது. சந்தேகநபரான அலன் பா உ சிறிதரனது அரசியல் நடவடிக்கைகளுக்கு துணைநிற்பவர் எனவும் குற்றம்சாட்டப்படுகிறது. அதனால் பா சிறிதரன் குற்றம்சாட்டப்பட்ட அலனை காப்பாற்ற முற்பட்டதாக பாதிக்கப்பட்ட சிறார்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் பா உ சிறிதரனின் வலதுகரமான வேளமாலிதனின் பாலியல் லீலைகள் அம்பலமானதுடன் தமிழரசுக் கட்சியின் அலுவலகமும் வேளமாலிதனின் சிற்றின்ப தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தமை தெரியவந்தது. கிளிநொச்சியின் மண் மாபியாக்கள், வட்டி மாபியாக்கள், சாராய மாபியாக்களுடன் தற்போது பாலியல் மாபியாக்களும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களாகவும் பா உ சிறிதரனின் நிதி வழங்குநர்களாகவும் இருப்பதாக பெருமளவு குற்றச்சாட்டுகள் வெள வருகின்றது.

 

சிறுவர்களை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய விளையாட்டு பயிற்சியாளர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜிடம் கிளிநொச்சி போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்று சனிக்கிழமை உறுதியளித்திருந்தார்.

 

இதேபோல் வன்னி முல்லைத்தீவில் கணித ஆசிரியர் தச்சுதன் 20 வயது வரையானமாணவிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்திருந்தமை தெரிந்ததே. தன்னுடைய மாணவர்களுக்கு போதை வழங்கி மாணவிகளை அவர்களின் வலையில் விழ வைத்து காணொலிகளை பதிவு செய்து சிற்றின்பம் கண்டவர். இவர் குறுகிய கால தண்டனையோடு தற்போது வெளிவந்துவிட்டார். அவர் தற்போதும் முல்லைத்தீவில் கணக்கு கற்பிக்கின்றார். பெற்றோர்கள் மீண்டும் மாணவிகளை அவரிடம் அனுப்புகின்றனர்

அர்ச்சுனா திருந்த வேண்டும் ! சுமந்திரன் சூழ்ச்சி செய்கிறார் ! தையிடிக்கு வழக்குப் போட்டால் அரசியல் செய்ய முடியாது ! பா உ கஜேந்திரகுமார்

அர்ச்சுனா திருந்த வேண்டும் ! சுமந்திரன் சூழ்ச்சி செய்கிறார் ! தையிடிக்கு வழக்குப் போட்டால் அரசியல் செய்ய முடியாது ! பா உ கஜேந்திரகுமார்

 

“பா உ அர்ச்சுனா தையிட்டி விவகாரத்தில் தவறான முடிவை எடுத்திருக்கின்றார். அது சட்டவிரோதமான விகாரை. உடைக்கப்பட வேண்டும். எங்களுடைய கட்சிக்கு என்று பண்புகள் இருக்கின்றது. நாங்கள் பெண்களை மதிக்கின்றோம், எங்களுடைய கட்சி சாதி, பிரதேச வேறுபாடுகள். பார்ப்பதில்லை. ஏனைய மதங்களை மதிக்கின்றோம். பா உ அர்ச்சுனா இந்த விடயங்கள் பற்றி பேசிய விடயங்கள் திருத்தப்பட வேண்டும்’ என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பா உ பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். யாழில் இருந்து வெளிவருகின்ற ஜப்னா கலரி காணொலி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்து இருந்தார்.

 

பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தமிழரசுக் கட்சி மீதும் அதன் பொதுச்செயலாளர் மீதும் காட்டமான விமர்சனத்தையும் அங்கு வெளியிட்டு இருந்தார். எம் ஏ சுமந்திரனின் கட்டுப்பாட்டில் தான் இலங்கைத் தமிழரசுக் கட்சி இருப்பதாகவும் எம் ஏ சுமந்திரனுக்குப் பயந்து மற்றவர்கள் செயற்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அரசயலமைப்புப் பற்றி அரசாங்கம் அறிவிக்கும்வரை தமிழ் கட்சிகள் தங்களுக்குள் உரையாடி அவசியமில்லை என்பது அடி முட்டாள்தனம் என அவர் அதனை வர்ணித்தார். இலங்கைத் தமிழரவுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரனை சூழ்ச்சிக்காரன் எனறும் கஜேந்திரகுமார் காட்டமான விமர்சனத்தை முன் வைத்தார்.

 

மிகவும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ள தையிட்டி விவகாரத்தில் இதற்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பௌர்ணமிப் போராட்டங்களை நடத்துவதில் எவ்வித பலனும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார் தற்போது யாழில் வாழ்கின்ற சட்டத்தரணி ரெங்கன் தேவராஜன். இவர் டான் தொலைக்காட்சியின் ‘எது சரி எது பிழை’ நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கின்ற போதே அங்கு மேலும் ஒரு கட்டிடம் கட்டப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

 

சட்டத்தரணி ரெங்கன் அங்கு மேலும் தெரிவிக்கையில், அந்த விகாரைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அது மட்டுமே இப்பிரச்சினையைத் தீர்க்கும் ஒரே வழியென்பதையும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். மேலும் தமிழ் தேசியக் கட்சிகளில் சட்டத்தரணிகளுக்குப் பஞ:சமில்லை. அப்படி இருக்கையில் அவர்கள் ஏன் இதுவரை தையிட்டி காணி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேட்டார்.

இதனை மறுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி காண்டிபன் அரசியல் நடவடிக்கைகள் மூலமாகவே இதனை நகர்த்த வேண்டும் என வலியுறுத்தினார். அங்கு கருத்து வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் வலிகாமம் உப தவிசாளர் சுகிர்தன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி விகாரை தவிர்ந்த ஏனைய காணிகளை விடுவித்து மக்களிடம் கையளிக்கும் முயற்சிகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணி தடுப்பதாகக் குற்றம்சாட்டினார்.

 

டான் தொலைக்காட்சியில் முன்வைக்கப்பட்ட இதே கேள்வி ஜப்னா கலரியில் கேட்கப்பட்ட போது அதற்குப் பதிலளித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார், இதற்கு நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதனை வைத்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார். நீதிமன்றத்தின் விசாரணையிலிருக்கும் விடயத்திற்கு போராட முடியாது. அதனை வைத்து அரசியல் நடவடிக்கைகளும் செய்ய முடியாது போகும் என்பதை ஜப்னாகலரியில் ஒத்துக்கொண்டார்