November

November

ஒரு மனித குல விரோதியின் மரணம்!!!

பல்லாயிரக் கணக்காண மனிதர்களைக் கொன்றொழித்த அமெரிக்க கொலை இயந்திரத்தின் சூத்திரதாரி ஹென்றி கிசிஞ்சர் இன்று தனது 100வது வயதில் மரணித்தார். உலகின் மிக மோசமான யுத்தக்குற்றவாளி நரகாசுரன் இயற்கையால் இந்த உலகை விட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளார். யூத இனத்தவரான ஹென்றி கிசிஞ்சர் இனவெறி கொலை வெறி கொண்ட ஹிட்லரின் கொலைத் தாண்டவத்திலிருந்து தப்பித்து அமெரிக்காவிற்கு அகதியாகச் சென்று பிற்காலத்தில் அமெரிக்க வெளியுறவுக்கொள்கையை அல்ல கொள்ளைகளை கொலைகளை வகுத்தவர். இவரது வழிகாட்டலிலேயே வியட்நாம், கம்போடியா முதல் சிலி வரை இலங்கை உட்பட இன அழிப்பு, காப்பற் பொம்பிங், கொம்யுனிச அழிப்பு என்பன முடுக்கி விடப்பட்டது.

மனித நேயத்திற்கு புறம்பான மனிதனாகக் கருதப்படும் ஹென்றி கிசிஞ்சர் மனித குலத்தின் சாபக்கேடாகவே பார்க்கப்பட வேண்டியவர். ஹிட்லரால் பாதிக்கப்பட்ட இனத்தில் இருந்து மேலெழுந்து வந்த ஹென்றி கிசிஞ்சர் ஹிட்லர் அளவுக்கு மிகப் பாரிய மனித அழிவுகளை உலகெங்கும் ஏற்படுத்தியவர். அதே ஹிட்லரின் கொலை வெறியில் இருந்து தப்பித்து வந்த யூத சமூகத்திலிருந்து உருவான இஸரேல் பாதுகாப்புப் படைகள் ஹிட்லரைக் காட்டிலும் மோசமான அழிவுகளை கொலை வெறியை காஸாவிலும் வெஸ்ற் பாங்கிலும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அவர்கள் பொதுமக்களை மட்டும் கொல்லவில்லை. நாளைய பாலஸ்தீன சமூகத்தை துடைத்தழிக்கும் வகையில் பெண்களை, சிறார்களை கொல்கின்றனர். காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றக் கூடாது என்பதற்காக மருத்துவ வண்டிகளையும் மருத்துவ மனைகளையும் தாக்கி அழிக்கின்றனர். கருவுற்றிருக்கும் பெண்கள் கருக்கள் கலைக்கப்படும் அளவுக்கு தாக்குதல் முடக்கிவிடப்படுகிறது. குறைப்பிரசவக் குழந்தைகளைக்கூடக் கொல்ல வேண்டும் என கொலை வெறிகொண்ட இஸ்ரேலிய பயங்கரவாத அரசு துடிக்கின்றது.

ஹன்றி கிசிஞ்சர் எழுபதுக்களில் கம்போடியா, வியட்நாமில் “நகர்வது எதுவானாலும் தாக்கி அழியுங்கள்” என்று குறிப்பிட்டது போல் காசாவில் நகருவது எதுவானாலும் தாக்கி அழிக்கப்பட்டது. ஹிட்லர் கொலைவெறித் தாண்டவம் ஆடிய போது சமூக வலைத்தளங்கள் எதுவும் கிடையாது. தகவல் தொழில்நுட்பமும் குறிப்பிடத்தக்க அளவில் வளரவில்லை. ஆனாலும் உலகம் முழுவதும் ஹிட்லருக்கு எதிராக கொதித்து எழுந்தது. ஆனால் ஹிட்லரின் வாரிசுகளாக மாறியுள்ள இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களை உலகம் முழுவதும் பார்த்துக்கொண்டிருக்க துடைத்து அழிக்கின்றனர்.

உலகம் என்றும் கண்டிராத அதர்மத்துடன் இஸ்ரேல் இராணுவம் தனது கொலைவெறித் தாண்டவத்தை புரிகின்றது. அதற்கு அமெரிக்தகா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பூரண அங்கிகாரம் வழங்கியுள்ளன. ஹின்றி கிசிஞ்சர் கொம்யுனிசத்தை தீண்டத்தகாத சொல்லக்கூட்டாத கெட்ட வார்த்தை என்று மேற்குலகை நம்ப வைத்தார். இன்றைய வலதுசாரி இஸ்ரோலிய பென்ஜமின் நெத்தன்யாகு யுத்த நிறுத்தத்தை கெட்ட வார்த்தை என்று அறிவித்துவிட்டார். ஹென்றி கிசிஞ்சரின் பள்ளியில் படித்த அன்ரனி பிளின்கனும் அதனைப் பிடித்துக்கொண்டுவிட்டார். அவரோடு சேர்த்த மேற்குலகக் கும்பலும் இப்போது யுத்த நிறுத்தம் என்றால் ஏதோ துஸணம் பேசுவது போல் கருதி அதனை பொது மேடைகளில் சொல்வதில்லை. பத்திரிகையாளர்கள் அதுபற்றி கேட்டாலும் வெட்கப்பட்டு பூசிமெழுகி அந்தச் சொல்லையே சொல்வதில்லை.

ஆயத வன்முறையால் உலகெங்கும் ஆண்டு தோறும் 500,000 பேர் கொல்லப்படுகின்றனர். உலகின் ஆயத விற்பனையில் 75 வீதத்திற்கும் அதிகமான வியாபாரம் நேட்டோ நாடுகளினாலேயே மேற்கொள்ளப்படுகின்றது. இதில் 40 வீதமான வியாபாரம் அமெரிக்காவினால் மட்டும் மேற்கொள்ளப்படுகின்றது. அமெரிக்காவில் பாடசாலைகளுக்குள்ளேயே துப்பாக்கிச் சுடுகள் நடத்தப்படுவதும் குழந்தைகள் கொல்லப்படுவதும் சாதாரண விடயமாக உள்ளது. அதனைக் கட்டுப்படுத்த ஆயத விற்பனைக்கு தடையைக் கொண்டுவருவதே முடியாத காரியமாக இருந்து வருகின்றது. தங்கள் சொந்த மக்களின் குழத்தைகளின் உயிரிழப்புப் பற்றியே அக்கறையற்ற அமெரிக்க ஆட்சியாளர்கள், அச்சிறார்களின் குருதியில் லாபத்தை சுவைக்கும் அமெரிக்க ஆட்சியாளர்கள் பாலஸ்தீனத்தில், உக்ரெயினில், எரித்திரியாவில், சுடானில் உயிரிழப்பவர்கள் பற்றி கரிசனை கொள்வார்களா?

உலக ஒழுங்கு மிகவும் மாறிக்கொண்டுள்ளது. மனிதமும் மனித நேயமும் ஹின்ரி கிசிஞ்சர், பென்சமின் நெத்தன்யாகு மற்றும் அவர்களுக்கு ஒத்து ஊதும் மேற்குலகினால் மரணத்தின் விளிம்புக்கு கொண்டு வந்துவிடப்பட்டுள்ளது. ‘சமாதானம்’ என்பது ஒரு கேவலம் கெட்ட சொல் என்று அடுத்த தலைமுறையை நம்பவைக்க மேற்குலகம் முயற்சித்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. சமாதானம் என்றால் போர் இல்லை. போர் இல்லாவிட்டால் ஆயதங்களை விற்க முடியாது. ஆயதங்களை விற்காவிட்டால் எப்படி லாபமீட்டுவது? லாபமீட்ட எதுவெல்லாம் தடையாக இருக்கின்றதோ அதுவெல்லாம் மிகக் கெட்ட விடயங்கள். இது தான் இன்றைய மேற்குலகின் நியதி.

பிலிப்பைன்ஸில் தங்கம் வென்ற அகிலத்திருநாயகிக்கு யாழில் கௌரவம் !

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற `National Masters & Seniors Athletics` போட்டியில் இலங்கையையின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 72 வயதான அகிலத்திருநாயகி 2 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்திருந்தார்.

இந்நிலையில் அகிலத்திருநாயகியை கௌரவிக்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

 

யாழ்.சிறைச்சாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இத்தாலியில் மூளைச்சாவடைந்த இலங்கையர் ஒருவரின் உறுப்புக்கள் தானமாக வழங்கப்பட்டன !

இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூளைச்சாவடைந்த இலங்கையர் ஒருவரின் இரண்டு சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் இரண்டு கண்கள் ஆகியன  அந்நாட்டில் உள்ள நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளன.

image

அவரது மனைவி, தாய் மற்றும் இரு சகோதரர்களின் இணக்கத்துடனேயே  அவரது உடலுறுப்புகள் தானமாக  வழங்கப்பட்டன.

ஷமில பெர்னாண்டோ என்ற 35 வயதுடைய நபரின்  உடல் உறுப்புகளே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளனர்.

இவரது  மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பியதாகவும், இரண்டு சகோதரர்கள் பல வருடங்களாக இத்தாலியில் பணிபுரிவதாகவும்  தெரிய வருகிறது.

 

உலகின் மிகப்பெரிய நிலக்கரி துறைமுகத்தில் காலநிலை எதிர்ப்பு போராட்டம் – 109 பேர் பொலிஸாரால் கைது !

உலகின் மிகப்பெரிய நிலக்கரி துறைமுகத்தில், இரண்டு நாட்கள் காலநிலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு அப்பகுதியை முற்றுகையிட்ட 109 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவுஸ்ரேலியாவில் நியூகேஸில் துறைமுகத்தின் கப்பல் பாதையை ஆக்கிரமித்து, போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான ஆர்வலர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.

அரை மில்லியன் டன் நிலக்கரி நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடை செய்ததாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அவுஸ்ரேலியா முழுவதிலும் இருந்து சுமார் 3,000 பேர் அதன் கப்பல் பாதையின் 30 மணி நேர வார இறுதி முற்றுகையில் பங்கேற்றனர், இந்தப் போராட்டம் பொலிஸாரால் அங்கீகரிக்கப்பட்டிருந்த போதும், டசன் கணக்கான எதிர்ப்பாளர்கள் போராட்ட எல்லையை மீறி தண்ணீரில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

இதனால், 109 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட ஐந்து சிறார்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

திங்களன்று, நியூ சவுத் வேல்ஸ் பொலிஸாரின் அறிக்கையின்படி, துறைமுக கால்வாயை விட்டு வெளியேற மறுத்ததற்காக 104 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அவுஸ்ரேலியா உலகின் இரண்டாவது பெரிய நிலக்கரி ஏற்றுமதியாளராக உள்ளது மற்றும் அதன் சொந்த மின்சார தேவைகளுக்கு புதைபடிவ எரிபொருளை நம்பியுள்ளது.

சிட்னியிலிருந்து சுமார் 170 கிமீ (105 மைல்) தொலைவில் அமைந்துள்ள நியூகேஸில் துறைமுகம் நிலக்கரி ஏற்றுமதிக்கான நாட்டின் மிக முக்கியமான முனையமாகும்.

 

அமெரிக்காவில் மூன்று பாலஸ்தீனிய மாணவர்களை இலக்குவைத்து துப்பாக்கி பிரயோகம் !

அமெரிக்காவின் வேர்மன்டில் உள்ள பல்கலைகழகமொன்றிற்கு அருகில் மூன்று பாலஸ்தீனிய மாணவர்களை இலக்குவைத்து துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

வேர்மன்ட் பல்கலைகழக வளாகத்தில் நபர் ஒருவர் பாலஸ்தீன மாணவர்கள் மூவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அராபிமொழியில் உரையாடிக்கொண்டிருந்தவேளை அராபிய ஸ்கார்வ் அணிந்திருந்தவேளை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது ஒருவர் கடும்காயங்களுக்குள்ளாகியுள்ளார் சந்தேகநபரை தேடிவருகின்றோம் என  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெறுப்புணர்வின் காரணமாக இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என குடும்பத்தவர்கள் வேண்டுகோள் விடுத்ள்ளனர்.

இஸ்ரேல் சிறையில் இருந்து 39 பாலஸ்தீன கைதிகள் விடுவிப்பு !

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருக்கும் நிலையில், 13 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்ததை அடுத்து, இஸ்ரேல் சிறையில் இருந்து 39 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என இஸ்ரேலில் உள்ள சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 7-ம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 40 நாட்களுக்கும் மேலாக நீடித்த போரில் காசாவில் 14,000-க்கும் மேற்பட்டோர் இறந்தனர், சுமார் 6 ஆயிரம் பேரை காணவில்லை என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கத்தார், அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்த முயற்சியால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 4 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில், 13 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்ததை அடுத்து, இஸ்ரேல் சிறையில் இருந்து 39 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என இஸ்ரேலில் உள்ள சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 33 குழந்தைகள் மற்றும் ஆறு பெண்கள் உட்பட 39 பாலஸ்தீனிய கைதிகளை விடுவித்தனர். இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்துள்ளனர். சாலைகளில் கூடிய ஆயிரக்கணக்கானோர் சிறையில் இருந்து விடுதலையாகி வந்தவர்களை உற்சாகமாக வரவேற்றனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 39 பேர் விடுவிக்கப்பட்ட அதே நாளில் 17 பாலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டதாக பாலஸ்தீனம் (The Palestinian Prisoners’ Club advocacy group) தெரிவித்துள்ளது.

முன்னதாக போர் நிறுத்த முதல் நாளான வெள்ளிக்கிழமை 24 பெண்கள், 15 சிறுவர்கள் என மொத்தம் 39 பேரை இஸ்ரேல் விடுவித்தது. இதற்கு ஈடாக 8 பெண்கள், 3 குழந்தைகள் உள்ளிட்ட 24 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. இந்த 24 பேரில் 13 இஸ்ரேலியர்கள் தவிர தாய்லாந்தை சேர்ந்த 10 பேர் மற்றும் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஒருவரும் அடங்குவர் என்று கத்தார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பாலஸ்தீனம் – வெளியுறவு கொள்கைகள் !

இஸ்ரல் பாலஸ்தீன் பிரச்சினை உச்சமடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில் தேசம் திரையின் இந்த காணொளி பாலஸ்தீனின் வெளியுறவு கொள்கைகள் தொடர்பில் அலசி ஆராய்கிறது.

[தேசம் திரையின் புதிய YouTubeபக்கத்தை Subscribeசெய்வதன் மூலம் நமது புதிய வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க முடியும்.]

 

https://youtu.be/B2vLXZaTfo0?si=biC5NLt-utYl4YKh

ஹமாஸ் தலைமை உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களைப் பின்தொடர்வோம் – இஸ்ரேல்

ஹமாஸ் தலைமை உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களைப் பின்தொடர்வோம் என இஸ்ரேல் படை அறிவித்துள்ளது.

 

இது தொடர்பில் வெள்ளியன்று இரவு இஸ்ரேல் படைத்துறை பேச்சார் டானியர்ஹகாரி தெரிவிக்கையில்,

ஹமாஸ் அமைப்பின் தலைமைகள் காசாவிலும் உலகம் முழுவதும் பின்தொடரப்படுகிறார்கள் என்று கூறினார்.

ஹகாரியின் எச்சரிக்கை கத்தார் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஹமாஸ் தலைமைக்கு இஸ்ரேல் படை அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களைப் பின்தொடரும் என்று சமிக்ஞை செய்கிறது.

இஸ்ரேலியர்களுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களின் சூத்திரதாரிகளை ஒழிப்பதற்கான பல புகழ்பெற்ற இஸ்ரேலிய நடவடிக்கைகளுக்கு இது மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.

 

யாழில் இளைஞன் பொலிஸ் காவலில் தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கு – ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்ய உத்தரவு !

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் வைத்து சித்தங்கேணி இளைஞன் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் 31 சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தனர்.

 

இந்நிலையில் கைது செய்யப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான மற்றுமொரு இளைஞன் அடையாளம் காட்டும் 5 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்யுமாறு நீதிவான் ஆனந்தராஜா உத்தரவிட்டார்

காசாவின் அல்ஷிபா மருத்துவமனையின் இயக்குநர் இஸ்ரேலால் கைது !

காசாவின் அல்ஷிபா மருத்துவமனையின் இயக்குநர், முகமட் அபு சல்மியா கைதுசெய்யப்பட்டுள்ளதை இஸ்ரேலிய இராணுவம் உறுதி செய்துள்ளது.

மருத்துவமனையின் இயக்குநர் காசாவின் தென்பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்த வேலையிலேயே இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அல்ஷிபா மருத்துவமனை ஹமாசின் பிரதான தளமாக பயன்படுத்தப்பட்டது என்பது குறித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே, மருத்துவரை இஸ்ரேலிய இராணுவம் விசாரணைக்குட்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அவரது முகாமைத்துவத்தின் கீழ் மருத்துவமனையில் அதிகளவில் ஹமாசின் செயற்பாடுகள் காணப்பட்டன என இஸ்ரேல் இராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.

 

இஸ்ரேல் காசாவை முற்றுகையிட்டு விமானக்குண்டுவீச்சினை மேற்கொண்டவேளை மருத்துவனையில் காணப்பட்ட நிலைமை குறித்து மருத்துவர் சர்வதேச ஊடகங்களிற்கு பரவலாக தகவல்களை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.