
November
November

இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்றுவிதமான போட்டிகளிலும் சதம் அடித்த முதல் வீரர் என்ற அடையாளத்தைக் கொண்ட சுரேஷ்ரெய்னா தனது 34ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த பிறகு ரெய்னா கொண்டாடும் முதல் பிறந்த நாள் இதுவாகும். 2005ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ரெய்னா விளையாடத் தொடங்கினார். இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி மகேந்திரசிங் தோனியுடன் இணைந்து சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வுபெற்றார்.
தற்போது தனது 34ஆவது பிறந்தநாள் கொண்டாடுவதற்காக 34 பள்ளிகளைத் தத்தெடுத்து குடிநீர், சுகாதாரம் போன்ற வசதிகளைச் செய்துகொடுக்க சுரேஷ் ரெய்னா முன்வந்துள்ளார். இதன்மூலம் சுமார் 10 ஆயிரம் குழந்தைகள்ப் பயன்பெறுவார்கள். இதுபோக 500 ஏழைப் பெண் குழந்தைகளுக்கு உணவுப் பொருட்களும் வழங்கியுள்ளார் ரெய்னா.
இந்த உதவிகள் அனைத்தும் சில தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அடுத்த வருடம் முழுவதும் பல கட்டங்களாக நடைபெறும். காஷ்மிர், உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் தனது மகள் பெயரில் இயங்கி வரும் கிரேசியா பவுண்டேசன் மூலம் சில தொண்டு நிறுவனங்களின் உதவியோடு குறிப்பிட்ட சேவையை மேற்கொள்ள ரெய்னா ஆயத்தங்களை செய்து வருகிறார்.
சுரேஷ் ரெய்னாவின் இந்த தொண்டு உள்ளத்தைப் பாராட்டி ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.
தமிழர் உரிமைப் போராட்டத்தில் உயிர்துறந்த மாவீரர்களை நினைவுகூரும் வகையில் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் கார்த்திகைப் பூ சின்னம் ஒளிரவிடப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் சிலர் இணைந்து இவ்வாறு கார்த்திகை மலரை ஒளிரவிட்டுள்ளனர்.
மேலும், ‘இலங்கை அரசை எதிர்கொண்டு விடுதலைக்காக களமாடி வீழ்ந்த மாவீரர்களை நினைவுகூருகின்றோம்’ என்ற வாசகமும் கார்த்திகைப் பூவின் கீழ் பிரித்தானிய நாடாளுமன்ற இல்லக் கட்டடத்தில் ஒளிவீச்சாகப் பாய்ச்சப்பட்டுள்ளது.
லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) தொடரின் இரண்டாவது போட்டியில் நேற்றைறயதினம் (27.11.2020) காலி க்ளாடியேடர்ஸ் – யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.
போட்டியில் முதலில் ஆடிய காலி அணி 20 பந்துப்பரிமாற்றங்களில் 8 இலக்குகளை இழந்து 175 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அணி சார்பில் அதிரடியாக ஆடிய சகிட் அப்ரிடி 23 பந்தில் 58 ஓட்டங்களையும் , தனுஸ்க குணதில 38 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் டன்னி ஒலிவியர் 44 ஓட்டங்களுக்கு 4 இலக்குகளை வீழ்த்தினார்.
வெற்றியிலக்கை நோக்கி ஆடிய யாழ்ப்பாணம் அணி 19.3 பந்துப்பரிமாற்றங்களில் 2 இலக்குகளை மட்டும் இழந்து 176 ஓட்டங்களை பெற்று 8 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது.
அணி சார்பில் பொறுமையாகவும் அதிரடியாகவும் ஆடிய அவிஷ்க பெர்னாண்டோ 63 பந்தில் 92 ஓட்டங்களை பெற்று அணியை வெற்றிப்பாதையை நோக்கி நகர்த்தினார். தவிர மலிக் 31 ஆட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் மொஹமட் அமிர் 1 இலக்கை வீழ்த்தினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக 63 பந்தில் 92 ஓட்டங்களை பெற்ற அவிஷ்க பெர்னாண்டோ தெரிவுசெய்யப்பட்டார்.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஆரோன் பின்ஞ் 114 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 105 ஓட்டங்களையும், கிளென் மேக்ஸ்வெல் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்திய அணியின் பந்துவீச்சில், மொஹமட் ஷமி 3 இலக்குகளையும், பும்ரா, நவ்தீப் சைனி மற்றும் யுஸ்வேந்தி சஹால் ஆகியோர் தலா 1 இலக்கினையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 375 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணியால், நிர்ணயிக்கப்பட்ட 50 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 8 இலக்குகள்கள் இழப்புக்கு 308 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் அவுஸ்ரேலியக் அணி 66 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன்போது, அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹர்திக் பாண்ட்யா 90 ஓட்டங்களையும், ஷிகர் தவான் 74 ஓட்டங்களையும் நவ்தீப் சைனி ஆட்டமிழக்காது 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், ஆடம் செம்பா 4 இலக்குகளையும், ஜோஸ் ஹெசில்வுட் 3 இலக்குகளையும் மிட்செல் ஸ்டாக் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 66 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 11 பவுண்ரிகள் அடங்களாக 105 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஸ்டீவ் ஸ்மித் தெரிவுசெய்யப்பட்டார். இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, நாளை மறுதினம் இதே சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் (LPL) போட்டித் தொடர் நேற்று மிகவும் கோலாகலமாக ஹம்பாந்தோட்டை, சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.
இந்த போட்டித் தொடரின் முதலாவது போட்டி கண்டி டஸ்கர்ஸ் மற்றும் கொழும்பு கிங்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. இதில் சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி 5 ஓட்டங்களால் தனது முதலாவது வெற்றியை பதிவு செய்தது.
போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 03 இலக்குகளை இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அவ்வணி சார்பாக அணித்தலைவர் குசல் ஜனித் பெரேரா 87 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில், 220 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 219 ஓட்டங்ளை பெற்றுக் கொண்டதனால் காரணத்தினால் போட்டி சமநிலையில் முடிந்தது.
கொழும்பு கிங்ஸ் அணி சார்பாக தினேஸ் சந்திமால் 80 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
அதன்படி, சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி 16 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட நிலையில் கண்டி டஸ்கர்ஸ் அணி 12 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.
“நாடாளுமன்றுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், சர்வதேசம் என்று வரும்போது நாம் அனைவரும் ஒன்றிணைந்துதான் ஒரு பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டும்” என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்
நாடாளுமன்றில் நேற்று[25.11.2020] இடம்பெற்ற குழுநிலை விவாதத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடும் போது,
“நல்லாட்சி அரசாங்கத்தால்தான் நாடு கடந்த காலங்களில் காட்டிக்கொடுக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தினரால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு அவர்கள் அன்று இணை அனுசரணை வழங்கினார்கள்.
இது உலகிலேயே எங்கும் நடக்காத ஒரு விடயமாகும். இது இராணுவம் பெற்றுக் கொடுத்த அனைத்து வெற்றிகளையும் காட்டிக்கொடுக்கும் செயற்பாடாகும்.
எனினும், நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த இணை அனுசரணையில் இருந்து விலகியுள்ளோம். எனவே, இதனால் நாட்டுக்கு எந்தவொரு ஆபத்தும் வராது.
இதனை கடந்த ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த அரசாங்கம் நாட்டுக்கு செய்த அநியாயத்தை மாற்றியமைக்கும் பொருட்டே, மக்கள் எமது ஆட்சியைக் கொண்டுவந்தார்கள். நாம் பயங்கரவாதத்தை தோற்கடித்தவுடன், ஐ.நா.வின் அன்றைய பொதுச் செயலாளர் இலங்கைக்கு வந்தார்.
ஆனால், நாம் அவருடன் அன்று எந்தவொரு ஒப்பந்தங்களையும் செய்துகொள்ளவில்லை. மாறாக இணைந்த பத்திரிகையாளர் மாநாடொன்றை நடத்தி, ஒருங்கிணைந்த கருத்துக்களை மட்டும்தான் வெளியிட்டோம்.
இதனை திரிபுபடுத்தி, சொந்த நாட்டுக்கு எதிராகவே கருத்து வெளியிடக்கூடாது. நாடாளுமன்றுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், சர்வதேசம் என்று வரும்போது நாம் அனைவரும் ஒன்றிணைந்துதான் ஒரு பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்
சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ஐ.சி.சி) ஆண்டுதோறும் விருதுகளை அறிவித்து வருவதுடன் இம்முறை முன்னைய கிரிக்கெட் தசாப்தத்தினைக் குறிக்கும் வகையில் பல்வேறு விருதுகளுக்கான வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் நான்கு இலங்கை வீரர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, தசாப்தத்துக்கான ஐ.சி.சி.யின் ஆண் வீரர்கள்:
விராட் கோலி (இந்தியா)
ஜோ ரூட் (இங்கிலாந்து)
கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து)
ஏ.பி.டி.வில்லியர்ஸ் (தென்னாபிரிக்கா)
ஸ்டீவ் ஸ்மித் (அவுஸ்திரேலியா)
ரவிச்சரந்திரன் அஸ்வின் (இந்தியா)
குமார் சங்கக்கார (இலங்கை)
தசாப்தத்துக்கான ஐ.சி.சி.யின் பெண் வீராங்கனைகள்:
எல்லிஸ் பெர்ரி (அவுஸ்திரேலியா)
மெக் லானிங் (அவுஸ்திரேலியா)
சுசி பேட்ஸ் (நியூஸிலாந்து)
ஸ்டாஃபனி டெய்லர் (மே.இ.தீவுகள்)
சாரா டெய்லர் (இங்கிலாந்து)
தசாப்தத்துக்கான ஐ.சி.சி.யின் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள்:
விராட் கோலி (இந்தியா)
ஜேம்ஸ் அண்டர்சன் (இங்கிலாந்து)
ரங்கன ஹேரத் (இலங்கை)
ஜோ ரூட் (இங்கிலாந்து)
யஷிர் சஹா (பாகிஸ்தான்)
ஸ்டீவ் ஸ்மித் (அவுஸ்திரேலியா)
கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து)
தசாப்தத்துக்கான ஐ.சி.சி.யின் ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள்:
மகேந்திர சிங் தோனி (இந்தியா)
விராட் கோலி (இந்தியா)
ரோகித் சர்மா (இந்தியா)
லசித் மலிங்க (இலங்கை)
குமார் சங்கக்கார (இலங்கை)
மிட்செல் ஸ்டார்க் (அவுஸ்திரேலியா)
ஏ.பி.டி.வில்லியர்ஸ் (தென்னாபிரிக்கா)
தசாப்தத்துக்கான ஐ.சி.சி.யின் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைகள்:
மிதாலி ராஜ் (இந்தியா)
ஜூலன் கோஸ்வாமி (இந்தியா)
மெக் லானிங் (அவுஸ்திரேலியா)
எல்லிஸ் பெர்ரி (அவுஸ்திரேலியா)
சுசி பேட்ஸ் (நியூஸிலாந்து)
ஸ்டாஃபனி டெய்லர் (மே.இ.தீவுகள்)
தசாப்தத்துக்கான ஐ.சி.சி.யின் 20:20 கிரிக்கெட் வீரர்கள்:
ரோகித் சர்மா (இந்தியா)
விராட் கோலி (இந்தியா)
ஆரோன் பின்ஞ்ச் (அவுஸ்திரேலியா)
கிறிஸ் கெய்ல் (மே.இ.தீவுகள்)
ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்)
லசித் மலிங்க (இலங்கை)
இம்ரான் தாகீர் (தென்னாபிரிக்கா)
தசாப்தத்துக்கான ஐ.சி.சி.யின் ‘Spirit of Cricket’ வீரருக்கான வீரர்கள்:
விராட் கோலி (இந்தியா)
மகேந்திரசிங் தோனி (இந்தியா)
கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து)
அன்யா ஷ்ரப்சோல் (இங்கிலாந்து)
மிஸ்பா உல்-ஹக் (பாகிஸ்தான்)
பிரெண்டன் மெக்கல்லம் (நியூஸிலாந்து)
கேத்ரின் ப்ரண்ட் (இங்கிலாந்து)
மஹேல ஜெயவர்தன (இலங்கை)
டேனியல் விக்டோரி (நியூஸிலாந்து) ஆகியோரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
“கோட்டாபய அரசின் ஆட்சிக் காலத்தில் கிடைக்காது என்பது தமிழர்களுக்கு ஏற்கனவே தெரிந்த விடயம்” என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர் வடக்கு, கிழக்கில் தமிழர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில்
ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
இலங்கையில் போரில் இறந்த தங்கள் உறவுகளை நினைவுகூர மூவின மக்களுக்கும் உரிமையுண்டு. அதில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற வேறுபாடுகள் இருக்கவேகூடாது. எனவே, நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்க முடியாது.
நல்லாட்சியில் இருந்த நினைவேந்தல் உரிமை, கோட்டாபய அரசின் ஆட்சிக் காலத்தில் கிடைக்காது என்பது தமிழர்களுக்கு ஏற்கனவே தெரிந்த விடயம்தான். போரில் இறந்த உறவுகளை நினைவுகூர அனைத்து இன மக்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பரிகாரம் வழங்கப்பட வேண்டும். இதில் நான் உறுதியாக இருக்கின்றேன்” என்றார்.