லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) தொடரின் இரண்டாவது போட்டியில் நேற்றைறயதினம் (27.11.2020) காலி க்ளாடியேடர்ஸ் – யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.
போட்டியில் முதலில் ஆடிய காலி அணி 20 பந்துப்பரிமாற்றங்களில் 8 இலக்குகளை இழந்து 175 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அணி சார்பில் அதிரடியாக ஆடிய சகிட் அப்ரிடி 23 பந்தில் 58 ஓட்டங்களையும் , தனுஸ்க குணதில 38 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் டன்னி ஒலிவியர் 44 ஓட்டங்களுக்கு 4 இலக்குகளை வீழ்த்தினார்.
வெற்றியிலக்கை நோக்கி ஆடிய யாழ்ப்பாணம் அணி 19.3 பந்துப்பரிமாற்றங்களில் 2 இலக்குகளை மட்டும் இழந்து 176 ஓட்டங்களை பெற்று 8 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது.
அணி சார்பில் பொறுமையாகவும் அதிரடியாகவும் ஆடிய அவிஷ்க பெர்னாண்டோ 63 பந்தில் 92 ஓட்டங்களை பெற்று அணியை வெற்றிப்பாதையை நோக்கி நகர்த்தினார். தவிர மலிக் 31 ஆட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் மொஹமட் அமிர் 1 இலக்கை வீழ்த்தினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக 63 பந்தில் 92 ஓட்டங்களை பெற்ற அவிஷ்க பெர்னாண்டோ தெரிவுசெய்யப்பட்டார்.