29

29

இரண்டாவது போட்டியிலும் அவுஸ்ரேலியா அபாரம் – தொடரை இழந்தது இந்தியா !

இந்தியா – அவுஸ்ரேலியா இடையிலான 2-வதும் தீர்க்கமானதுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா 4 இலக்குகள் இழப்பிற்கு 389 ஓட்டங்கள் குவித்தது.
அவுஸ்ரேலியா அணி சார்பில் ஸ்டீவ் ஸ்மித் 64 பந்தில் 104  ஓட்டங்களும், டேவிட் வார்னர் 83 ஓட்டங்களும், ஆரோன் பிஞ்ச் 60 ஓட்டங்களும், மார்னஸ் லாபஸ்சேன் 70 ஓட்டங்களும், மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 29 பந்தில் 63 ஓட்டங்களும் அடித்தனர்.
இந்திய அணி சார்பில் நவ்தீப் சைனி 7 பந்துப்பரிமாற்றங்களில்  70 ஓட்டங்களும், பும்ரா 10 பந்துப்பரிமாற்றங்களில் 79 ஓட்டங்களும், முகமது ஷமி 9 பந்துப்பரிமாற்றங்களில் 73 ஓட்டங்களும் விட்டுக்கொடுத்தனர்.
பின்னர் 390 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. மயங்க் அகர்வால், ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அகர்வால் 26 பந்தில் 28 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தவான் 30 ஓட்டங்களில் வெளியேறினார்.
அடுத்து விராட் கோலி உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. அடித்து விளையாட நினைக்கும்போது 38 ஓட்டங்களில் வெளியேறினார் ஷ்ரேயாஸ் அய்யர்.
4-வது இலக்குக்காக விராட் கோலி உடன் கே.எல் .ராகுல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. விராட் கோலி சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார். ஆனால் 35-வது பந்துப்பரிமாற்றத்தின் 5-வது பந்தில் 89 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இந்தியா 4 இலக்குகள்  இழப்பிற்கு 225 ஓட்டங்கள் எடுத்திருந்தது, கே.எல்.ராகுல் 66 பந்தில் 76 ஓட்டங்களும், ஹர்திக் பாண்ட்யா 28 ஓட்டங்களும், ஜடேஜா 24 ஓட்டங்களும் அடிக்க இந்தியாவால் 50 ஓவரில் 9 இலக்குகள் இழப்பிற்கு 338 ஓட்டங்களே அடித்தது.
மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
இதனால் அவுஸ்ரேலியா 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.

பிறந்தநாளை முன்னிட்டு 34 பாடசாலைகளை தத்தெடுத்த கிரிக்கெட் வீரர் – குவியும் பாராட்டுக்கள் !

இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்றுவிதமான போட்டிகளிலும் சதம் அடித்த முதல் வீரர் என்ற அடையாளத்தைக் கொண்ட சுரேஷ்ரெய்னா தனது 34ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த பிறகு ரெய்னா கொண்டாடும் முதல் பிறந்த நாள் இதுவாகும். 2005ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ரெய்னா விளையாடத் தொடங்கினார். இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி மகேந்திரசிங் தோனியுடன் இணைந்து சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வுபெற்றார்.

தற்போது தனது 34ஆவது பிறந்தநாள் கொண்டாடுவதற்காக 34 பள்ளிகளைத் தத்தெடுத்து குடிநீர், சுகாதாரம் போன்ற வசதிகளைச் செய்துகொடுக்க சுரேஷ் ரெய்னா முன்வந்துள்ளார். இதன்மூலம் சுமார் 10 ஆயிரம் குழந்தைகள்ப் பயன்பெறுவார்கள். இதுபோக 500 ஏழைப் பெண் குழந்தைகளுக்கு உணவுப் பொருட்களும் வழங்கியுள்ளார் ரெய்னா.

இந்த உதவிகள் அனைத்தும்  சில தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அடுத்த வருடம் முழுவதும் பல கட்டங்களாக நடைபெறும். காஷ்மிர், உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் தனது மகள் பெயரில் இயங்கி வரும் கிரேசியா பவுண்டேசன் மூலம் சில தொண்டு நிறுவனங்களின் உதவியோடு குறிப்பிட்ட சேவையை மேற்கொள்ள ரெய்னா ஆயத்தங்களை செய்து வருகிறார்.

சுரேஷ் ரெய்னாவின் இந்த தொண்டு உள்ளத்தைப் பாராட்டி ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.