January

January

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு ( Bushra Bibi) 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. எனினும், அந்த வழக்குகள் அரசியல் பழிவாங்கல் காரணமாக தொடரப்பட்டிருப்பதாக இம்ரான் கான் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தண்டனையை எதிர்த்து இம்ரான் கான் மேன்முறையீடு செய்துள்ள நிலையில், மற்ற வழக்குகளில் பிணை கிடைக்கவில்லை.

இதற்கிடையே, அரச இரகசியங்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், இம்ரான் கான் மற்றும் அவரது உதவியாளர் ஷா முகமது குரேஷி ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நேற்று (30) நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், இன்று மேலும் ஒரு ஊழல் வழக்கில் இம்ரான் கான், அவரது மனைவிக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்த போது, அவருக்கும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் கிடைத்த பரிசுப்பொருட்களை அரசிடம் ஒப்படைக்காமல் ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதன்போது, இருவருக்கும் தலா 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் இருவரும் 10 ஆண்டுகளுக்கு அரச பதவிகளை வகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்குள் நுழைந்து மூன்று பாலஸ்தீனிய இளைஞர்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய படையினர் !

மருத்துவமனை பணியாளர்கள் போல உடையணிந்த இஸ்ரேலிய படையினர் மேற்குகரையில் மருத்துவமனையொன்றிற்குள் நுழைந்து மூவரை சுட்டுக்கொன்றுள்ளனர்.

Israel’s war on Gaza live: Israeli forces kill 3 in West Bank hospital | Israel War on Gaza News | Al Jazeera

மேற்குகரையின் ஜெனின் நகரில் உள்ள இபின் சின மருத்துவமனைக்குள் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் போல நுழைந்த இஸ்ரேலிய படையினர் மூன்று பாலஸ்தீனிய இளைஞர்களை சுட்டுக்கொன்றனர் என இஸ்ரேலிய பாலஸ்தீன தகவல்கள் தெரிவித்துள்ளன.

தாதிமார்கள் ஹிஜாப்அணிந்த பெண்கள் மருத்துவர்கள் போல உடையணிந்த இஸ்ரேலிய விசேட படைப்பிரிவினர் மருத்துவமனைக்குள் நுழைவதை சிசிடிவி காட்சிகள் காண்பித்துள்ளன.

ஒருவர் சக்கரநாற்காலியை தள்ளிக்கொண்டு செல்கின்றார் மற்றுமொருவர் குழந்தைகள் நாற்காலியுடன் காணப்படுகின்றார்.

மருத்துவமனைகள் நுழைந்த இஸ்ரேலிய படையினர் பின்னர் ஒவ்வொருவராக மூன்றாவது தளத்திற்கு சென்று இரண்டு இளைஞர்களை கொலை செய்தனர் என மருத்துவமனைக்குள் காணப்பட்டவர்களை மேற்கோள்காட்டி பாலஸ்தீன அரச செய்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பை சேர்ந்தவர்களே கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் இந்த நடவடிக்கையை பாராட்டியுள்ளார்.

சமீபத்தில் குறிப்பிடத்தக்க பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில் ஈடுபட்ட மருத்துவமனைக்குள் மறைந்திருந்த  முகமட் ஜலாம்னே என்பவரே கொல்லப்பட்டார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய படையினர் மீதான தாக்குதல்கள் உட்பட பலதாக்குதல்களில் ஈடுபட்டுள்ள ஜெனின் பட்டாலியனை சேர்ந்த ஜெனின் முகாமை சேர்ந்த முகமட் அல் கஜாவியும் அவரது சகோதரரும் கொல்லப்பட்டனர் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

வரலாறு காணாத அளவிற்கு 2023ஆம் ஆண்டில் ஆயுதங்களை விற்றுத்தள்ளிய அமெரிக்கா !

கடந்த வருடம் (2023) அண்டை நாடுகளுக்கு அமெரிக்கா விற்பனை செய்துள்ள இராணுவ தளவாடங்களின் மதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2022இல் ரஸ்யா உக்ரைன் போர் ஏற்பட்டதையடுத்து உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் களமிறங்கின.

இந்நிலையில் தீவிரமாக போரிட்டு வரும் உக்ரைனுக்கு அமெரிக்கா பெருமளவில் இராணுவ தளவாடங்கள் மற்றும் உபகரணங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது.

இதற்கமைய, 2023க்கான கணக்கெடுப்பின்படி இதுவரை இல்லாத அளவிற்கு $238 பில்லியன் அமெரிக்க ஆயுதங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை ஆகி உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவை மையமாக கொண்ட லாக்ஹீட் மார்டின், ஜெனரல் டைனமிக்ஸ், நார்த்ராப் க்ரம்மேன் உள்ளிட்ட தனியார் ராணுவ தளவாட நிறுவனங்கள் செய்த விற்பனையும் அமெரிக்க அரசு நேரடியாக $81 பில்லியன் விற்பனையும் இதில் அடங்கும்.

அமெரிக்கா அதிகளவில் ராணுவ தளவாடங்களை விற்பனை செய்த நாடுகளில் போலந்து ($29.75 பில்லியன்) முன்னணியில் உள்ளது.

ஜெர்மனி ($8.5 பில்லியன்), பல்கேரியா ($1.5 பில்லியன்), நார்வே ($1 பில்லியன்), செக் குடியரசு ($5.6 பில்லியன்) உள்ளிட்ட நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ஐரோப்பிய நாடுகளை தவிர, தென் கொரியா ($5 பில்லியன்), ஆஸ்திரேலியா ($6.3 பில்லியன்), ஜப்பான் ($1 பில்லியன்) ஆகிய நாடுகளும் குறித்த பட்டியலில் உள்ளன.

“பிராந்திய மற்றும் உலக பாதுகாப்பிற்கு நீண்டகால அடிப்படையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ராணுவ பாதுகாப்புக்கான வர்த்தகமும், ஆயுத விற்பனையும் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையில் முக்கியமான அம்சம்” என அமெரிக்கா தொடர்ந்தும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஹமாஸிற்கு உதவிய பாலஸ்தீன அகதிகளிற்கான ஐ.நா அமைப்பு – நிதி உதவியை இடைநிறுத்திய உலக நாடுகள் !

ஹமாஸின் ஒக்டோபர் 7ஆம் திகதி தாக்குதலிற்கு  பாலஸ்தீன அகதிகளிற்கான ஐ.நா அமைப்பு உதவியதாக தெரிவித்து அந்த அமைப்பிற்கான நிதி உதவியை உலக நாடுகள் இடைநிறுத்தியுள்ளன.

பிரிட்டன் உட்பட எட்டு நாடுகள் பாலஸ்தீனத்தின அகதிகளுக்கான ஐநா அமைப்பிற்கான நிதி உதவியை நிறுத்தியுள்ளன. உலகநாடுகளின் இந்த நடவடிக்கையை ஐநா அமைப்பு கண்டித்துள்ளது.

உலகநாடுகளின் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

யுஎன்ஆர்டபில்யூஏ என்பது பிரதானமாக காசாவிற்கான மனிதாபிமான அமைப்பு இரண்டு மில்லியனிற்கும் மேற்பட்ட மக்கள் உயிர்வாழ்வதற்காக அந்த அமைப்பினை நம்பியிருக்கின்றனர் என அந்த அமைப்பின் தலைவர் பிலிப்பே லசாரினி தெரிவித்துள்ளார்.

சிறிய எண்ணிக்கையிலான பணியாளர்களிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து நிதி இடைநிறுத்தப்பட்டுள்ளமை அதிர்ச்சியளிக்கின்றது  என தெரிவித்துள்ள அவர் ஏற்கனவே குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நாங்கள் சில பணியாளர்களை இடைநிறுத்தியுள்ளோம்  விசாரணைகள் தொடர்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தில் யுத்தம் இடம்பெயர்வு அரசியல் நெருக்கடிகள் காணப்படும் சூழ்நிலையில் இந்த தடைகள் பொருத்தமற்றவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

றோ இருக்கப் பயமேன்! தமிழீழம் மலரும்!! : ஈழம் வரையல்ல லண்டன் வரை பாயும் மோடியின் கோமியம்!!! – தேசம்திரை காணொளி

மரபுத் திங்களாக அறிவிக்கப்பட்ட தை மாதம் 28இல் நோத் ஹரோவில் “மாறிவரும் உலக ஒழுங்கில் ஈழத்தமிழர்களும் இந்தியாவும் மேற்குலகமும்” என்ற தலைப்பிலான சந்திப்பை சிறு துளிகள் என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. சிறு துளிகள் மற்றும் மள்ளர் மீட்புக் களம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. சிறு துளிகள் ஒரு உதவி அமைப்பாக தன்னை முன்னிலைப்படுத்தினாலும் அதன் செயற்பாடுகள் அது ஒரு அரசியல் அமைப்புப் போலவே உள்ளது. இக்கூட்டத்திற்கு இவர்கள் விடுத்துள்ள அழைப்பிதழில் ஒரு கையேட்டை இணைத்துள்ளனர். அதனை வாசித்துவிட்டு வரும்படியும் கோரியுள்ளனர். இக்கையேடானது ஏற்பாட்டாளர்களின் அரசியல் முகத்தை வெளிப்படுத்தி நிக்கின்றது. இலங்கையில் 1970களின் நடுப்பகுதியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் அதன் உச்ச கட்டத்தை அது எட்டிய 1980களின் நடுப்பகுதி வரை முக்கியமான ஐந்து விடுதலை இயக்கங்கள் உட்பட 40 விடுதலை இயக்கங்கள் உருவாகி இருந்தன. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் துப்பாக்கியின் நிழலில் ஓரளவு கட்டுக்கோப்பாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, அவரும் ஆயதங்களும் மௌனிக்கப்பட்ட பின் எண்ணற்ற பிரிவுகளாகின. இப்பிரிவுகள் நாட்டுக்கு நாடு வெவ்வேறு குழுக்களாக செயற்படுகின்றன. அவ்வாறான குழக்களில் ஒன்று தலைவர் இருக்கின்றார் என்று சொல்லியும் தங்கை துவாரகா உயிர்த்தெழுந்து வந்துவிட்டார் என்று சொல்லியும் எழுச்சி கொண்டுள்ளனர். இன்னும் சில பிரிவுகள் இலங்கை, இந்திய புலனாய்வுப் பிரிவுகளுடன் தங்களை இணைத்துக்கொண்டு செயற்படுகின்றனர்.

இது தொடர்பான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்க்ஐ கிளிக் செய்யுங்கள்..

இஸ்ரேல் மீது தென்னாபிரிக்கா பதிவு செய்த இனப்படுகொலை வழக்கு – சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு !

இஸ்ரேலுக்கு எதிராக தென்னாபிரிக்காவினால் பதிவு செய்யப்பட்ட இனப்படுகொலை வழக்கிற்கு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த வழக்கானது, இன்று(26) சர்வதேச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. காசா மீதான தாக்குதலில் இனப்படுகொலை செய்ததாக தென்னாபிரிக்கா இஸ்ரேல் மீது வழக்குத் தாக்கல் செய்தது.

இந்நிலையில், காசாவில் இஸ்ரேல் நடத்தும் போரில் இனப் பேரழிவு தொடர்பான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச நீதிமன்றம் இன்று (26) இஸ்ரேலுக்கு தீர்ப்பளித்துள்ளது.

அத்தோடு, பலஸ்தீனர்களுக்கு இனப் பேரழிவு நடவடிக்கைகளின் போது தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இருப்பதாகவும் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், இனப் பேரழிவுக்கு எதிரான சட்டத்தின் கீழ் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய பிரிவினர் என்றும் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் போரில் இஸ்ரேல் காசாவின் பெரும்பகுதியை தரைமட்டமாக்கி விட்டதுடன், 1.9 மில்லியன் மக்களை தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றிய நிலையில், குறைந்தது 25,900 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

 

காஸா மீதான இஸ்ரேலின் தொடரும் தாக்குதல் – 20 பேர் பலி!

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சுமார் 150 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

உணவு பெற வரிசையில் காத்திருந்தவர்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

 

இது ஒரு போர்க்குற்றம் என்றும், இஸ்ரேல் வேண்டுமென்றே இத்தகைய தாக்குதல்களை நடத்துகிறது என்றும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

தமிழர்கள் உட்பட நிரபராதிகளை சிறைக்கு அனுப்பிய பிரித்தானிய தபாலகங்கள்! 20 ஆண்டுகளாக போராடும் நிரபராதிகள்!! இன்றும் குற்றவாளிகளாகவே இறந்து போகும் தபாலக மேலாளர்கள்!!!

40க்கும் மேற்பட்ட நிரபராதிகள் குற்றவாளிகளாக மரணித்த நிலையில் 20 வருடங்களாக தொடரும் பிரச்சினையில் அப்பாவிகளுக்கு நீதி கிட்டவில்லை. இன்னமும் பலர் சிறைத்தண்டனை அனுபவிக்கின்றனர். இவர்கள் செய்த குற்றம் பிரித்தானிய மக்களுக்கான அடிப்படைச் சேவைகளில் ஒன்றான தபாலகச் சேவையை வழங்கியது மட்டுமே. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல ஆயிரம் என்றும் இழப்பீடு பெறுவதற்கு உரித்துடையவர்கள் மட்டும் 4,000 பேர் என்றும் தெரியவருகின்றது. இவர்களில் ஆயிரம் பேர் வரை நீதி மன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு குற்றவாளிகளாக்கப்பட்டு சிறைத் தண்டணையும் வழங்கப்பட்டது.

 

இவற்றையெல்லாம் தாங்க முடியாது என்று 15 ஆண்டுகள் போஸ்ற்ஒபிஸ் (Postoffice) நடத்திய சப் போஸ்ற் மாஸ்ரர் (Sub Post Master) அப்துல் அப்டீன் தற்போது 88 வயது தன்னுடைய மனைவி வனசாவுடன் 2005 இல் இலங்கைக்குச் சென்று வாழ்கின்றார்.

 

தேசம் திரையின் இது தொடர்பான காணொளி காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

 

சிறீதரன் எதைச் சாதிக்க போகிறார்..? – தேசம் திரை காணொளி!

இலங்கை தமிழர் அரசியல் பரப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தலில் வெற்றி பெற்று புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட எஸ்.சிறீதரன் எதைச் சாதிக்க போகிறார்..? என்பது குறித்தும் தமிழர் அரசியலில் எப்படியான மாற்றங்களை இது ஏற்படுத்தப்போகிறது என்பது தொடர்பிலும் தேசம் திரை YouTubeஇல் வெளியான இந்த காணொளி பேசுகிறது.

இலங்கை தமிழரசு கட்சி தலைவர் தெரிவு– தேசம் திரை பார்வை.

 

 

ரஸ்யாவின் பகுதி மீது உக்ரைன் தாக்குதல் ..? – 27 பேர் பலி !

ரஸ்யா ஆக்கிரமித்துள்ள டொனெட்ஸ்க் நகரின் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணை தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மிகவும் மும்முரமான சந்தையில் பயங்கரமான தாக்குதல் இடம்பெற்றுள்ளது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என பிராந்தியத்தின் ரஸ்ய சார்பு தலைவர் டெனிஸ் புஸ்சிலின் தெரிவித்துள்ளார். அவர் உக்ரைனே இந்த தாக்குதலை மேற்கொண்டது என குற்றம்சாட்டியுள்ளார்.

எனினும் அந்த பகுதியில் செயற்படும் உக்ரைன் இராணுவத்தினர் இதனை நிராகரித்துள்ளனர்.

அழிக்கப்பட்ட கடைகளையும் அவற்றின் முன்னால் சடலங்களையும் காண்பிக்கும் படங்களை ரொய்ட்டர் வெளியிட்டுள்ளது.

எறிகணைவருவதை சத்தத்தின் மூலம் அறிந்துகொண்ட நான் கடைக்குள் பதுங்கிக்கொண்டேன் என உயிர்பிழைத்த பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

புகைமண்டலத்தையும் மக்கள் அலறுவதையும் பெண் ஒருவர் அழுவதையும் பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.