13

13

இஸ்லாமிய அமைப்பின் மாநாடு கடைசி நேரத்தில் ரத்து – யூத எதிர்ப்பு மற்றும் ஹமாஸ் ஆதரவு காரணமாம் !

அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மேரியட் நட்சத்திர விடுதியில் இடம்பெறவிருந்த இஸ்லாமிய அமைப்பின் மாநாடு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூத எதிர்ப்பு மற்றும் ஹமாஸ் ஆதரவு உள்ளிட்டவற்றை அந்த இஸ்லாமிய அமைப்பு ஊக்குவிப்பதாக விடுதி நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது

குறித்த விடயம் தொடர்பாக போராட்டக்காரர்களிடம் இருந்து 100-க்கும் அதிகமான அழைப்புகள் விடுதி நிர்வாகத்துக்கு வந்ததாகவும், இதனால் பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்பட்டு மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

30 மசூதிகள் மற்றும் இதர அமைப்புகளின் கூட்டணியான தெற்கு புளோரிடா இஸ்லாமிய அமைப்பு நடத்தவிருந்த இந்த மாநாட்டில் ஆயிரம் பேர் கலந்து கொள்ள இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேரியட் விடுதியின் இந்த முடிவு தெற்கு புளோரிடாவில் வாழும் இஸ்லாமிய சமூகத்தினருக்கு அதிர்ச்சியளிப்பதாக அந்தக் கூட்டமைப்பின் தலைவர் சமீர் கக்லி தெரிவித்துள்ளார். ஏனென்றால் இதற்கு முன்னர் இஸ்லாமிய குழுக்களும் குடும்பங்களும் பெரியளவிலான திருமண நிகழ்வுகளையும் மற்ற நிகழ்வுகளையும் அந்த விடுதியில் நடத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு தொடர்பான புகார் விடுதியின் தரப்பில் எழுவதற்கு முன்பே நகரத்தின் காவல்துறையையும் தனியார் பாதுகாப்பு குழுக்களையும் ஏற்பாடு செய்திருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

நிகழ்வு முழுவதற்கும் காவல்துறையால் பாதுகாப்பு உறுதி அளித்திட இயலும் என சொல்ல இயலாது. இருந்தபோதும் நிகழ்வை ரத்து செய்தது முழுக்கவே விடுதி நிர்வாகத்தின் முடிவு என புளோரிடா காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துவரும் காஃப்மேன் கருத்துத் தெரிவிக்கையில், “அங்கு பேச வருபவர்கள் குறித்து எங்களுக்கு கவலையில்லை, அமைப்பு மற்றும் அதன் தலைமை மீதே எங்களுக்கு விமர்சனம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லண்டனில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை !

லண்டனில் ட்விக்கன்ஹாம் பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம், காரைநகரை சேர்ந்த இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கத்திக்குத்து தாக்குதல் கடந்த திங்கட்கிழமை இரவு (08) இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சம்பவம் தொடர்பில் 4 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரித்துள்ளனர்.

குறித்த இளைஞன், பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் நிலையில், கடந்த திங்கட்கிழமை வீடு திரும்பும் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இளைஞன் ரயிலில் பயணிக்கும் போது பின்னால் வந்தவர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.