01

01

இந்தியாவை மீள அச்சுறுத்தும் கொரோனா !

இந்தியா  முழுவதும்  கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 841 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாமுழுவதும் 4309 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளா கர்நாடகா பிஹார் மாநிலங்களில் தலா ஒருவர் கொரானாவால் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல் தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒரே நாளில் 831 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது வரை தமிழகம் முழுவதும் 175 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 29 பேர் குணமடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 44 வயது பெண்மணி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தார்.

அரியணையை துறக்கிறார் டென்மார்க் ராணி இரண்டாம் மார்கிரேத் !

டென்மார்க் ராணி இரண்டாம் மார்கிரேத் அரியணையை துறப்பதாக அறிவித்துள்ளார்.

1972 ஆம் ஆண்டு அரியணை ஏறிய 83 வயதான ராணி 52 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். இதன்மூலம்  ராணி ஐரோப்பாவில் நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நேரடி தொலைக்காட்சியில் ஆற்றிய பாரம்பரிய புத்தாண்டு உரையில்,

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் வெற்றிகரமாக முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், “அறுவைசிகிச்சை இயல்பாகவே எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கத் தூண்டியது எனவும், அடுத்த தலைமுறைக்கு பொறுப்பை விட்டுச்செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.

“இதுதான் சரியான நேரம் என்று நான் முடிவு செய்துள்ளேன். பதவியேற்ற 52 ஆண்டுகளுக்கு பின்னர் ஜனவரி 14 ஆம் திகதி டென்மார்க் ராணி பதவியில் இருந்து விலகுவேன்.

“தனது அரியணையை என் மகன் பட்டத்து இளவரசர் பிரடெரிக்கிடம் விட்டுச்செல்கின்றேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

தேசம்நெட்இன் வாசகர்களுக்கு மலர்ந்துள்ள 2024ஆம் ஆண்டு  புதுவருட வாழ்த்துக்கள்.  !

இந்தப் பூவுலகில் சமாதானம் மலர்ந்து  பிறந்த, பிறக்கின்ற, பிறக்கப் போகின்ற குழந்தைகள் குண்டுத் தாக்குதல்களுக்கும் வெறுப்புணர்வுக்கும் உட்படாமல் சந்தோசமாக குழந்தைகளாக ஆரோக்கியத்துடனும் ஆளுமையுடனும் ஆர்ப்பரிப்போடும் வளர இன, மத, சாதி, பேதங்கள் கடந்து மனிதத்துவத்தோடு வாழ்த்துவோம்.

May be an image of text that says "1997 முதல் தேசம முரண்பட்ட கருத்துக்களுக்கான களம் ! 2024 23 20 24 HAPPY NEW YEAR காலடி எடுத்து வைக்கும் 2024ஆம் ஆண்டு அனைவருக்கும் நல்ல மாற்றங்களையும் -ஆரோக்கியத்தையும்- சகிப்புத்தன்மையையும்- அன்பு செய்யும் மனதையும் வழங்கும் ஆண்டாக விளங்க தேசம் நெட்இன் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். THESAMNET.CO.UK"

இன, மத அழிப்புகள் அற்ற அமைதிப் பூங்காவாக எம்மால் ஆனவரை முயலுவோம் என தேசம்நெட்இன் வாசகர்களுக்கு மலர்ந்துள்ள 2024ஆம் ஆண்டு  புதுவருட வாழ்த்துக்கள்.