இந்தப் பூவுலகில் சமாதானம் மலர்ந்து பிறந்த, பிறக்கின்ற, பிறக்கப் போகின்ற குழந்தைகள் குண்டுத் தாக்குதல்களுக்கும் வெறுப்புணர்வுக்கும் உட்படாமல் சந்தோசமாக குழந்தைகளாக ஆரோக்கியத்துடனும் ஆளுமையுடனும் ஆர்ப்பரிப்போடும் வளர இன, மத, சாதி, பேதங்கள் கடந்து மனிதத்துவத்தோடு வாழ்த்துவோம்.
இன, மத அழிப்புகள் அற்ற அமைதிப் பூங்காவாக எம்மால் ஆனவரை முயலுவோம் என தேசம்நெட்இன் வாசகர்களுக்கு மலர்ந்துள்ள 2024ஆம் ஆண்டு புதுவருட வாழ்த்துக்கள்.