November

November

“இங்கிலாந்து-சீனா உறவுகளின் பொற்காலம் முடிந்துவிட்டது.” – ரிஷி சுனக்

ஹாங்காங், உய்குர் இன முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை உள்ளிட்ட விவகாரங்களில் சீனா மற்றும் இங்கிலாந்து இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த சூழலில் சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற இங்கிலாந்தை சேர்ந்த பிரபல செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளரை போலீசார் அடித்து, உதைத்து கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இங்கிலாந்தின் பிரதமராக சமீபத்தில் பதவியேற்ற ரிஷி சுனக் முதல் முறையாக தனது வெளியுறவு கொள்கை குறித்து நேற்று உரையாற்றினார். அப்போது சீனாவுடான இங்கிலாந்தின் உறவு குறித்து அவர் கூறும்போது,

“முன்னாள் பிரதம மந்திரி டேவிட் கேமரூனால் ஏற்படுத்தப்பட்ட இங்கிலாந்து-சீனா உறவுகளின் பொற்காலம் முடிந்துவிட்டது. வணிகம் தானாகவே இரு நாடுகளுக்கிடையே சமூக, அரசியல் சீர்திருத்தத்துக்கு வழிவகுக்கும். எங்கள் மதிப்புகள், நலன்களுக்கு சீனா ஒரு சவாலை முன்வைத்திருக்கிறது. உலகளாவிய பொருளாதார உறுதித்தன்மை, பருவநிலை மாற்றம் போன்ற விவகாரங்களில் சீனாவின் முக்கியத்துவத்தை நாம் வெறுமனே புறக்கணிக்க முடியாது. ஆனால், இது இன்னும் பெரிய சர்வாதிகாரத்தை நோக்கி நகரும்போது இன்னும் தீவிரமாக வளரும். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் பல நாடுகள் இதை புரிந்துகொண்டிருக்கின்றன. சீனா உள்நாட்டு மற்றும் உலகளாவிய பாதுகாப்புக்கு முதல் அச்சுறுத்தல்” என கூறினார். 

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடமாகாண ஊழியர்களின் திடீர் போராட்டங்களால் பாதிக்கப்படும் மக்கள் – சொந்த விருப்பு வெறுப்புக்களால் தரமிழந்து போகும் போக்குவரத்து சேவை !

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் யாழ் . சாலை ஊழியர்கள் நேற்றுத் திங்கட்கிழமை காலை முதல் பணிப்புறக் கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று வடக்கு மாகாணம் முழுமையும் மேற்கொள்ளப்பட்டு அனைத்து இ.போ.ச பேருந்துகளும் பணியில் இருந்து விலகியுள்ளன.

சரி ஏன் இந்த பணிப்புறக்கணிப்பு..?

வசாவிளான் பகுதியில் இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ் மோதியதில் மாணவன் ஒருவன் அண்மையில் காயமடைந்தான்.இதையடுத்து சாரதியொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது . இந் நிலையில் தாக்கிய நபர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தாக்கிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தெரிவித்தனர்.

 

இந்தத் தாக்குதலைக் கண்டித்தே நேற்று முதல்  பணிப் புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இன்று வடமாகாணம் முழுமையும் இந்த பகிஸ்கரிப்பு விரிவாக்கப்பட்டுள்ளது.

 

இதனால் இன்று காலை முதல் தனியார் பேருந்துகளில் சனநெரிசலான வகையில் மாணவர்களும் – தொழிலுக்கு செல்வோரும் – வேறு மாவட்டங்களுக்கு பணிக்கு செல்வோரும் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது முன்பாகவே அறிவிக்கப்பட்டிருந்தால் கூட வேறு ஆயத்தங்களை பலராலும் மேற்கொண்டிருக்க முடியும். ஆனால் திடீரென பணிப்பகிஷ்கரிப்பு என அறிவித்தால் சீசன் டிக்கெட்டுகள்களை நம்பி பயணப்படுவோரின் நிலை என்ன..? தனியார் பேருந்துகள் மட்டும் சேவையில் இருந்தால் பெட்ரோல் நெருக்கடியால் உள்ளதே பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது.  அரச பேருந்துகளும் இயங்காவிட்டால் தனியார் பேருந்துகளில்  சன நெருக்கடி எவ்வாறானதாக இருக்கும்..? அந்த கூட்ட நெரிசலில் சிக்கி சென்று வேலைகளை ஊழியர்களால் செய்ய முடியுமா..?

இது தவிர வட மாகாண கடைக்கோடி கிராமங்களுக்கு தனியார் பேருந்துகள் இல்லை. இது தவிர தனியார் பேருந்துகள் தூர இடங்களுக்கு செல்லும் பயணிகளையே அதிகம் ஏற்றுவார்கள். இந்த நிலையில் பிரதான பாதைகளூடாக செல்லும் அரச பேருந்துகளே பல கிராமப்புற பயணிகளுக்கு தஞ்சம். இப்படியிருக்க அப்பகுதியில் இருந்து நகரம் வருவோர் இந்த பணிப்பகிஷ்கரிப்பால் என்ன ஆவார்கள்..?

“நான் பேருந்துக்காக காத்திருந்து அதே இடத்தில் நகரத்துக்கு கத்தரிக்காய்களை கொண்டு செல்ல காத்திருந்த முதியவர் ஒருவரும் நின்றிருந்தார். எதிர்பார்த்த பேருந்து வரவில்லை. தனியார் பேருந்து ஒரு கூட்ட நெரிசலான வகையில் வந்தது. அந்த முதியவர் பேருந்தில் ஏறவில்லை. அவரை ஏற்ற கண்டெக்டரும் விரும்பவில்லை.” என நண்பர் ஒருவர் பேருந்து வளாகத்தில் நின்று விசனப்பட்டுக்கொண்டார்.

இந்த சாரதிகளின் பணிப்பகிஷ்கரிப்பால் அந்த முதியவரின் பலநாள் உழைப்பு வீண். இனிமேல் அவர் ஆட்டோ எதிலாவது தான் நகரம் வர வேண்டும். அதற்கு எவ்வளவு செலவாகும்..? இவை எதுவுமே யாருக்கும் தேவைையில்லை. இ.போ.ச சேர்ந்த சாரதிகளின் சொந்த விருப்பு – வெறுப்புக்களுக்காக இப்படி நூற்றுக்கணக்கானோர் இன்றைய நாள் முழுதும் பாதிக்கப்படவேண்டும்.

இது தவிர QR முறையில் வழங்கப்படும் 4 லீட்டர் பெட்ரோல் ஒரு கிழமைக்கு பயன்படுத்த வேண்டும் என்ற நிலை நடைமுறையிலுள்ள இந்த சூழலில் இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண ஊழியர்களின் இந்த பணிப்புறக்கணிப்பு அபத்தமானது.

இவை எதனையும் இந்த அரச ஊழியர்கள் கவனத்தில் கொள்வதேயில்லை என்பதே வேதனையான விடயம்.

இ.போ.ச பேருந்து சாரதியின் கவனக்குறைவால் 65 வயது முதியவர் ஒருவர் விபத்துக்குள்ளாகி அண்மையில் மரணமடைந்தார். அது போல மதுபோதையில் பேருந்து ஓட்டிய இ.போ.ச சாரதி அண்மையில் புளியங்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அண்மையில் கிளிநொச்சியில் இ.போ.ச பேருந்து சாரதியின் அவசரத்தால் ஒரு பாடசாலை மாணவி விபத்துக்குள்ளாகி மரணமடைந்திருந்தார். இப்படியாக இ.போ.ச பேருந்து சாரதிகள் பற்றி ஒரு தொகை முறைப்பாட்டை அடுக்கிக்கொண்டே செல்லலாம். இவற்றுக்கு ஒரு முடிவு கட்ட இந்த இ.போ.ச வடமாகாண அதிகாரிகளால் முடியாது. எதற்கெடுத்தாலும் பணிப்பகிஷ்கரிப்பு என அறிவித்து விடுகிறார்கள்.

யாரும் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதை ஏற்க முடியாது. இ.போ.ச சாரதி தாக்கப்பட்டது கண்டனத்துக்கு உரியதே. அதற்கான தீர்வை நீதிமன்ற நகர்வுகள் ஊடாக மேற்கொள்ளாது அரச அதிகாரிகள் என்பதற்காக பேருந்துகளை இயக்காது விடுவது என்பது மக்கள் பற்றி கிஞ்சித்தும் சிந்திக்காத  வடமாகாண இ.போ.சபையின் சர்வாதிகார போக்கையே காட்டுகிறது.

இன்றைய பகிஸ்கரிப்பு போராட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இ.போ.ச சபை ஊழியர்களின் ஒரு போராட்ட  பதாகையில் தனியார்  பேருந்து குழுவின் அராஜகம் ஒழிக என குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மையில் அரச ஊழியர்கள் என்ற பெயரில் அராஜகம் செய்வது இ.போ.ச ஊழியர்கள் தான்.  தங்களுடைய இஷ்டத்துக்கு திடீர் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால் சாதாரண மக்கள் என்ன செய்வார்கள் என்ற சிந்தனையே இல்லாமல் செயற்படுகிறார்கள்.

 

உண்மையிலையே இ.போ.ச சபையினர் மக்களை பற்றி சிந்திப்பவர்கள் என்றால் விரைவாக பேருந்துகளை இயக்க முன்வர வேண்டும். உள்ளதே பொருளாதார நெருக்கடி – எரிபொருள் விலையேற்றம் – என பலவற்றாலும் அல்லலுறும் மக்களை இந்த பகிஸ்கரிப்பு போராட்டங்கள் இன்னுமும் பாதிக்கின்றன என்பதை இ.போ.ச ஊழியர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

அமெரிக்காவில் வேகமெடுக்கும் பறவை காய்ச்சல் – ஒன்பது மாதத்துக்குள் 5 கோடியே 5 லட்சத்து 40 பறவைகள் பலி !

அமெரிக்காவின் வேளாண் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நடப்பு ஆண்டில் அமெரிக்க வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் பறவை காய்ச்சலுக்கு, முதன்முறையாக 5 கோடியே 5 லட்சத்து 40 பறவைகள் உயிரிழந்து உள்ளன. அவற்றில் பண்ணை மற்றும் பண்ணை அல்லாத பறவைகளும் அடங்கும்.

கோழிகள், வான்கோழிகள் மற்றும் பிற பறவைகளின் உயிரிழப்பு, இந்த நாள் வரையில் அமெரிக்காவில் மிக மோசம் வாய்ந்த விலங்கு சுகாதார பேரிடராக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு, 2015-ம் ஆண்டில் பறவை காய்ச்சலுக்கு 5 கோடியே 5 லட்சம் பறவைகள் உயிரிழந்து இருந்தது அதிக அளவாக இருந்தது. அதனை இந்த பாதிப்பு எண்ணிக்கை முறியடித்து உள்ளது.

இதன்படி, பறவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்ட பின்பு அவை உயிரிழக்கின்றன. முட்டையிடும் கோழி பண்ணைகளில் ஒரு கோழிக்கு பாதிப்பு உறுதியானால் அதில் உள்ள 10 லட்சம் கோழிகளும் அழிக்கப்படும். இதுபோன்ற அழிவுகளால், கோழி முட்டைகள் மற்றும் கோழிகளின் விலை அதிகரித்தது.அமெரிக்காவில் பறவை காய்ச்சல் கடந்த பிப்ரவரியில் தொடங்கியது. பின்னர் 46 மாகாணங்களில் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தியது. வான்கோழி பண்ணைகள் 70 சதவீதத்திற்கும் கூடுதலான அளவுக்கு காய்ச்சல் பாதிப்புகளை எதிர்கொண்டன என அந்த அறிவிக்கை தெரிவிக்கின்றது.

“இலங்கைக்கு உதவியதால் பலர் எங்களிடம் உதவி கேட்கிறார்கள்.”- பங்களாதேஸ் பிரதமர் ஷேக் ஹசீனா

இலங்கைக்கு பங்களாதேஸ் உதவி வழங்கிய பின்னர் பல நாடுகள் தங்களிடம் உதவி கோரியுள்ளன என பங்களாதேஸ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

பங்களாதேஸ் இலங்கையுடன் நாணயபரிவர்த்தனையில் ஈடுபட்ட பின்னர் பல நாடுகள் எங்களை தொடர்புகொண்டு அவ்வாறான உதவியை நாடின என அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் வெளிநாட்டு கையிருப்பிலிருந்து நாங்கள் இலங்கைக்கு உதவினோம் அதன் பின்னர் பல நாடுகள் என்னை தொடர்புகொண்டன என அவர் தெரிவித்துள்ளார்.

பல அரசாங்கங்கள் என்னை தொடர்புகொண்டுள்ளன நான் யதார்த்தத்தை அவர்களிற்கு தெரியப்படுத்தியுள்ளேன் நாங்கள் வேறு உதவிகளை அடிப்படையாகவைத்தே வரவு செலவு திட்டத்தை உருவாக்கியுள்ளோம். இந்த தருணத்தில் நாங்கள் உதவி வழங்கும் நிலையில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் பல நாடுகள் அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொள்கின்றன நாங்கள் உடனடியாக சிக்கன நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும் என ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த கோரி சீனாவில் மக்கள் போராட்டம் !

உலகம் முழுவதும் கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில் சீனாவில் கொரோனா வேகமெடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தினமும் 30 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. வைரஸ் பரவல் அதிகரிப்பு காரணமாக பல்வேறு மாகாணங்களில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை சீனா விதித்து வருகிறது.

அந்த வகையில் ஜிங்ஜங்க் மாகாணத்தில் 100 நாட்களுக்கு மேலாக முழு மற்றும் கடுமையான ஊரடங்கு அமலில் உள்ளது. இதனிடையே, ஊரடங்கு அமலில் உள்ள ஜிங்ஜங்க் மாகாணத்தில் உரும்யூ நகரில் கடந்த 24-ம் திகதி ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  இந்த தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.

ஊரடங்கு காரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளை அதிகாரிகள் சீல் வைத்து மூடியுள்ளனர். இதனால், அடுக்குமாடி குடியிருப்பில் தீ பற்றியபோது வீடுகளை விட்டு மக்கள் வெளியேற முடியாமல் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில், அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக சீனாவில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உரும்யூ நகரில் நேற்று முன் தினம் இரவு திரண்ட மக்கள் சீன அரசுக்கு எதிராகவும், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தவும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், சீன அதிபர் ஜி ஜீன்பிங்கிற்கு எதிராகவும் மக்கள் கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் கைது செய்தனர். ஆனாலும், போராட்டம் மாகாணத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது.

FIFA 2022 – கால்பந்து தொடருக்கான மைதான நிர்மாணிப்பில் சுமார் 6500 வெளிநாட்டு தொழிலாளர்கள் பலி – தகவல்களை மறைக்கிறதா கட்டார்..?

‘உலகின் மிக சக்திவாய்ந்த அணுசக்தியை வைத்திருப்பதே எனது நாட்டின் இறுதி இலக்கு.” – கிம் ஜாங் உன்

அடிக்கடி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தி வருகிறது. பல்வேறு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா இதனை செய்து வருகிறது. இதனை தொடர்ந்து ஏவுகனை சோதனையில் ஈடுபட்ட பல ராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

இதனிடையே, உலகின் மிக சக்திவாய்ந்த அணுசக்தியை வைத்திருப்பதே தனது நாட்டின் இறுதி இலக்கு என்று வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் செய்தி வெளியிட்டுள்ளார். நாட்டின் புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் சோதனையை கிம் ஆய்வு செய்த பின்னர், வெள்ளியன்று அமெரிக்க அணு ஆயுத அச்சுறுத்தல்களை அணு ஆயுதங்கள் மூலம் எதிர்கொள்வதாக உறுதியளித்த பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

மேலும் அவர், தற்போது சோதனை செய்யப்பட்டுள்ள ஏவுகணை உலகின் வலுவான மூலோபாய ஆயுதம் என்று கூறினார். இது வட கொரியாவின் உறுதியையும், இறுதியில் உலகின் வலிமையான இராணுவத்தை உருவாக்கும் திறனையும் நிரூபிப்பதாக கூறினார். வட கொரிய விஞ்ஞானிகள் “பாலிஸ்டிக் ஏவுகணைகளில் அணு ஆயுதங்களை ஏற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் ஒரு அற்புதமான முன்னேற்றத்தை அடைந்துள்ளனர் என்று கிம் தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலிய கடற்கரையில் நிர்வாணமாக குவிந்த பெருமளவு மக்கள் – காரணம் என்ன..?

சர்வதேச அளவில் தோல் புற்றுநோயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக ஆஸ்திரேலியா திகழ்கிறது. அங்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் சூரிய கதிர்கள் உடல் மீது படும் மனிதர்களுக்கு தோல் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு மிக குறைவு என மருத்துவர்கள் தெரிவித்து வரும் நிலையில், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆஸ்திரேலியாவில் கடந்த ஒரு வாரமாக தோல் புற்றுநோய் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் நேற்று விழிப்புணர்வு போட்டோ சூட் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஆண்கள், பெண்கள் என சுமார் 2,500 தன்னார்வலர்கள் பங்கேற்றனர். கடற்கரையில் சூரிய உதயத்தின்போது தங்கள் ஆடைகளை களைந்த அவர்கள் நிர்வாணமாக நின்று கொண்டும், கடற்கரையில் படுத்துக் கொண்டும், தோலின் மீது சூரிய கதிர்கள் படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்விற்காக கடற்கரையின் ஒரு பகுதி மட்டும் தற்காலிகமாக நிர்வாண கடற்கரையாக அறிவிக்கப் பட்டிருந்தது. பிரபல புகைப்படக்கலைஞர் ஸ்பென்சர் துனிக் பல்வேறு கோணங்களில் இதனை படம் பிடித்தார். இது குறித்து பேசிய நிகழ்ச்சி ஏற்பட்டாளர் ஸ்காட் மாக்ஸ், இந்த கலை படைப்பு மக்களின் கவனத்தை ஈர்க்கும் மற்றும் புற்றுநோயிலிருந்து நமது மக்களைக் காப்பாற்றும் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனென்றால், புற்று நோய் காரணமாக யாரும் இறக்கக் கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம் என கூறினார்.

அமிர்தலிங்கம் காண்டீபன் அவர்களின் இறுதி அஞ்சலி – காணொலி!

நாளை நவம்பர் 27 அன்று அமிர்தலிங்கம் காண்டீபன் அவர்களின் இறுதி நிகழ்வுகள் லண்டன் சறே பகுதியில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

அமிர்தலிங்கம் காண்டீபனின் நினைவுகள் பற்றி அவருடைய நண்பர்கள் பகிர்ந்துகொண்ட அஞ்சலிக் குறிப்பு.

ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை முடக்கியது தவறான செயல் – எலான் மஸ்கட்

கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப் தோல்வி அடைந்தார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக டிரம்ப் கூறினார்.

இதையடுத்து டிரம்ப்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க பாராளுமன்றத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக டிரம்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது.

இதற்கிடையே டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய உலகின் முதல்தர பணக்காரரான எலான் மஸ்க், டிரம்பின் டுவிட்டர் கணக்கு மீதான தடையை நீக்கினார். இந்த நிலையில் டிரம்ப் டுவிட்டர் கணக்கு தடை நீக்கம் குறித்து எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- டிரம்ப் மீதான டுவிட்டர் தடையானது ஒரு மிகப்பெரிய தவறு. அது திருத்தப்பட வேண்டும். அவர் சட்டத்தை மீறவில்லை என்றாலும் அவரது கணக்கை தடை செய்ததில் டுவிட்டர் ஒரு பெரிய தவறை செய்துள்ளது என்றார்.