சோதிலிங்கம் ரி

சோதிலிங்கம் ரி

ஈபிடிபி தோழர்களே! நல்லதொரு இதயவீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிந்திட வேண்டாம். : ரி சோதிலிங்கம்

EPDPNewsLogoதமிழ் குறிப்பாக யாழ்ப்பாண சமூகம் கல்விசார் சமூகம், தமது பிள்ளைகளின் கல்வியில் 100 சதவிகிதம் அக்கறையுடன் செயற்படும் சமூகம். கடந்த 30 வருட போர் நடவடிக்கைகளினால் தமது கல்வியை சீரழித்து இலங்கையில் கல்வியில் பின்தங்கிய சமூகம் என்ற நிலைக்கு தமிழ் சமூகம் தள்ளப்பட்டு உள்ளது. இதற்குக் காரணம் சமூகத்தில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளாத கல்விமான்கள், அரசியல் கட்சிகள், அரசியல் இயக்கங்கள் இன்னும் பல காரணங்களைக் கூற முடியும்.

தவறிப்போன – தோற்றுப்போன எமது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம், இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட கல்வி சம்பந்தப்பட்ட ஒருதலைப்பட்சமான முடிவுகளினாலேயே ஆயுதம் தூக்கும் போராட்டமாக மாறியது என்பது வரலாறு. இதில் யாழ் மாவட்ட மாணவர் சமூகத்தின் எழுச்சி மிக முக்கியமானது. இந்த கல்வி நிலையில் ஏற்பட்ட மாற்றங்களுக்காகவும் கல்வி வெள்ளை அறிக்கையை எதிர்த்தும் நாம் பாரிய எழுச்சிக் கூட்டங்களையும் அரச எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். குறிப்பாக பல்கலைக்கழக தெரிவுகள் பற்றிய விடயத்திலும் அரசுக்கு எதிராக பல எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதனைத் தொடர்ந்து ஆயுதம் ஏந்திய போராட்த்தை மேற்கொண்டோம்.

இந்தப் போராட்டங்களில் அன்றைய மாணவர் சமூகத்தின் பிரதிநிதித்துவம் பெற்ற ஈழமாணவர் பொதுமன்றத்தின் நடவடிக்கைகளில் ஒருவனாக நான் என்னையும் அன்று இணைத்துக் கொண்டிருந்தேன் இந்த போராட்டங்களில் இன்றுள்ள ஈபிடிபி தோழர்களில் பலரும் இணைந்தே செயற்பட்டிருந்தனர்.

இந்தப் போராட்டங்களை செழுமைப்படுத்தி இருக்க வேண்டிய அரசியல் தலைவர்கள், கல்விமான்கள் இப்போராட்டங்களை தங்கள் கட்சி சார்ந்தும் தங்கள் சொந்த விரும்பு வெறுப்புகளுக்கு ஏற்பவும் பயன்படுத்திக் கொண்டனர். கட்சி நலன்சார்ந்த அல்பிரட் துரையப்பாவின் படுகொலை முதல் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர் படுகொலை வரை இவற்றை ஆதரித்த அரசியல் தலைவர்களும் கல்விமான்களும் எமது சமூகத்தில் இருந்துள்ளனர் என்பது வேதனையானது. ஒவ்வொரு கொலையிலும் இரத்தம் காயுமுன்னரே அதனை நியாயப்படுத்த எமது கல்விமான்கள் தயங்கியதில்லை. இவற்றை ஆதரித்த பேராசிரியர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் அதற்கு வெளியேயும் இருந்துள்ளனர். இன்னமும் இருக்கின்றனர். ஆனால் இப்போது தங்கள் நிறத்தை மாற்றிக் கொண்டு விட்டனர்.

இன்று தமிழ் சமூகம் தனது போர்க்கால அவஸ்தைகளில் இருந்து இளைப்பாறி தமது பிள்ளைகள், அவர்களின் கல்வி என்பவற்றை முன்வைத்து தமது வாழ்க்கையை மீண்டும் ஆரம்பித்துள்ளனர். இந்தவேளையில் இலங்கை அரசினதும் தமிழ் அரசியல் தலைமைகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றனர். இந்த தமிழ் அரசியல் தலைமைகளில் வெறும் அறிக்கைகளுடன் மட்டும் நின்றுவிடாது அதற்கு அப்பாலும் மக்களினது குறைந்தபட்ச தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற வல்லமையை ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஈபிடிபி கட்சியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுமே கொண்டுள்ளனர்.

அரசாங்கத்துடன் இணக்கப் போக்கைக் கடைப்பிடித்து தமிழ் மக்களது வாழ்வை வளம்படுத்த வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எப்போதும் கூறிவருகின்றார். இப்போது ஈபிடிபி கட்சிக்கும் அதன் அமைச்சருக்கும் தமிழ் மக்களது வாழ்வை வளம்படுத்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் உள்ளது. அதனை வடமாகாண மக்கள் அவர்களுக்கு வழங்கி உள்ளனர்.

இந்த வடமாகாண மக்களின் முக்கிய தேவையாகி உள்ள கல்விசார் நிலைப்பாடுகள் உட்பட முக்கிய முடிவுகளை எடுக்கின்ற பொறுப்பு ஈபிடிபி கட்சியின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் உள்ளது. இந்த முக்கிய முடிவுகளில் ஈபிடிபி கட்சியும் அமைச்சரும் தமிழ் மக்களுக்கு தீங்குவிளைவிக்கக் கூடிய எந்தவொரு முடிவும் எடுக்கப்படாது என்ற உறுதியை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும்.

இதனை எழுதிக் கொண்டிருக்கும் வேளையிலேயே பிரபல பாடசாலையொன்றின் மூன்று மாணவிகளின் தற்கொலை முயற்சி பற்றிய செய்தி வந்துள்ளது. அதற்கு முன்னதாக பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களுக்கு விரிவுரையாளராக இருக்கும் பிரபல மருத்துவ நிபுணரின் பாலியல் துஸ்பிரயோகம் அம்பலமாகி உள்ளது. இவற்றுக்கும் மேல் யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் யாழ் பல்கலைக்கழக மாணவிகளின் தற்கொலை முயற்சிகள் பற்றி வெளியிட்ட கருத்துக்கள். இவையெல்லாம் வடமாகாண மாணவர்களின் பல்கலைக்கழகத்தின் எதிர்காலம் பற்றிய பயப்பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இவற்றைப் பார்க்கும் போது தமிழ் கல்விச் சமூகத்திற்கு நம்பிக்கையூட்ட வேண்டிய தேவை இப்போது மிக அவசியமாகி உள்ளது. தேசம்நெற்றில் வெளியான கட்டுரைகள் தமிழ் கல்விச் சமூம் எவ்வளவு பின்தங்கிய நிலையில் உள்ளது என்பதனை வெளிக்கொண்டு வந்துள்ளன.

தமிழ் மக்கள் தமது இன்றுள்ள பிரச்சினைகளில் தமது பிள்ளைகளின் கல்வி, சர்வதேச தரத்திலான கல்வியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். தமது பிள்ளைகள் பெறும் பட்டம் – பட்டம் விடுவதற்கு அல்ல, சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றதாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.  தமது பிள்ளைகள் பெறும் கல்வித்தரம், புலம்பெயர்ந்து வாழும் தமது உறவுகளின் கல்வித் தரத்திற்கு நிகராக இருக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.

தமிழ் மக்கள் கல்விசார் நிலையில் தமது இருப்பை மீண்டும் உறுதிசெய்ய யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவு தகமையின் அடிப்படையிலும் முகாமைத்துவ ஆளுமையின் அடிப்படையிலுமே அமைய வேண்டும் என கல்விசார் தமிழ் சமூகம் எதிர்பார்க்கின்றது. அதனை உறுதி செய்ய வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமை. குறிப்பாக அந்தத் தெரிவை மேற்கொள்கின்ற அரசியல் பலத்தை உடைய ஒவ்வொரு ஈபிடிபி உறுப்பினரும் அதன் பாராளுமன்றப் பிரதிநிதிகளும் அமைச்சரும் அரசியல் நேர்மையுடன் தமிழ் மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

தகமையின் அடிப்படையிலும் முகாமைத்துவ ஆளுமையின் அடிப்படையிலும் அல்லாமல் யாழ்-சைவ-வேளாளத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரோ அல்லது ஈபிடிபி கட்சிக்கும் அமைச்சருக்கும் நன்றாக வாலாட்டக் கூடிய ஒருவரையோ நியமிக்க முற்படுவது தமிழ் கல்விசார் சமூகத்திற்கு செய்யப்படும் பாரிய அநியாயமாகும். இன்றும் ஈபிடிபி கட்சிக்கும் அமைச்சருக்கும் வால் ஆட்டுபவர்கள் முன்னர் வேறு யாருக்கோ வால் ஆட்டியவர்களே. அவர்கள் நாளை இன்னுமொரு எஜமானர் வந்தால் அவருக்கு வாலில் குஞ்சமும் கட்டி ஆட்டுவார்கள். இவர்களுக்கு செக்கென்ன சிவலிங்கமென்ன எல்லாம் ஒன்றுதான்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்கள் சில்வேஸ்திரி அலன்டின் (உதயன்), முருகேசு சந்திரகுமார் (அசோக்), மற்றும் ஈபிடிபி யின் முக்கிய உறுப்பினர்கள் பொறுப்பாளர்களான தோழர் தவராஜா, தோழர் மித்திரன், தோழர் மார்டின் ஜெயா, தோழர் ஆறுமுகம், தோழர் விந்தன், தோழர் திலக், தோழர் ஜெயராஜா மற்றும் தோழர்கள் தங்களுடைய கட்சி எப்போதும் தமிழ் மக்களை முன்னிலைப்படுத்தி சரியான முடிவை எடுப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தவறான தெரிவுகளுக்கும், தவறான முடிவுகளுக்கும் இவர்கள் பொறுப்பாவது தவிர்க்க முடியாதது. தமிழ் கல்விசார் சமூகத்திற்கு எதிராகச் செயற்பட்ட அரசியல் சக்திகள் அதற்கான விலையைச் செலுத்தியே உள்ளனர். தமிழ் சமூகம் தங்கள் கல்வியை பாதிக்கும் விடயங்களை நீண்டகாலத்திற்கு பொறுத்துக் கொள்ளப் போவதில்லை.

ஆகவே ஈபிடிபி கட்சி பொறுப்பான முடிவுகளை பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும். இன்று நவம்பர் 17 யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கான தெரிவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மிக முக்கிய முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. தன்னுடைய ஆதரவை அல்லது அதற்கான சமிஞ்சையை அமைச்சர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது தமிழ் கல்விசார் சமூகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும்.

ஈபிடிபி தோழர்களே நல்லதொரு இதய வீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிந்திட வேண்டாம். 

அண்மைக் காலமாக தேசம்நெற் இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகள்:

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

”யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான தேசம்நெற் கட்டுரைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.” பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்

ஈபிடிபி தோழர்களே! நல்லதொரு இதயவீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிந்திட வேண்டாம். : ரி சோதிலிங்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை நூலுக்கான முன்னுரை : த ஜெயபாலன்

லண்டனில் ரெலோ கட்சியின் செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நேற்று நவம்பர் 14ம் திகதி ரெலோ உறுப்பினர்கள், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகாரலிங்கம் தலைமையில் ஒன்றுகூடி தமது இயக்கத்தின் உத்தியோகபூர்வ அலுவலகத்தையம் செயற்பாட்டுக் குழுவையும் லண்டனில் ஆரம்பித்துக் கொண்டனர்.

லண்டன் கரோவில் உள்ள லேபர் கட்சியின் அலுவலகத்தில் மெளன அஞ்சலியுடன் ஒன்று கூடிய ரெலோ உறுப்பினர்கள், கடந்த காலங்களில் ரெலோவின் நிலைப்பாடுகள், சிறிரெலோவின் நிலைப்பாடுகள், சிறிகாந்தா, ஜிவாஜிலிங்கம் போன்றோரது நிலைப்பாடுகள் பற்றியும், இவர்களிடையே ஒற்றுமைபாடுகளை உருவாக்குவது பற்றியும் நீண்ட நேரம் கலந்துரையாடிய பின்னர், இந்த விடயங்கள் பற்றி சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் நேரடியாக பேச்சுவார்த்தைகளை தொடர்வது என்று முடிவானது.

லண்டனிலும் மற்றைய ஜரோப்பிய நாடுகளிலும் இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்திற்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பது என்றும் இதர அமைப்புகளுடன் ஒன்றிணைந்த அரசியல் உரிமைகளுக்காக சாத்வீக வழியில் போராடுவது என்றும் உடன்பட்டனர். தமது இயக்கத்தின் செயற்பாடுகளை ஜரோப்பிய நாடுகளில் விஸ்தரிப்பது பற்றியும் ஆராய்ந்தனர். புலிகளாலும், இராணுவத்தினராலும், ரெலோவினாலும் பாதிக்கப்பட்ட ரெலோ உறுப்பினர்கள் பற்றியும் இவர்களுக்கான உதவிகள் செயல்வடிவங்கள் பற்றியும் ஆராய்ந்து, இவைபற்றி மேலும் அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத்தில் இறுதி முடிவுகள் எடுப்பது என்றும் முடிவானது.

ரெலோவின் ஆரம்பகால உறுப்பினரான திரு சுதன், ”ரெலோ என்ற அடையாளத்தைவிட தமிழ் மக்களின் இன்றைய தேவைகள், அம்மக்களின் இலட்சியம், நல்வாழ்வு  இவையே உயர்த்தப்பட வேண்டுமே தவிர, ரெலோவின் குறுகிய அரசியல் செயற்பாடுகளை அல்ல” என்றார். ”ரெலோவிற்காக அல்ல மக்களுக்காக செயற்படல் வேண்டும்” என்றும் சுதன் சுட்டிக்காட்டினார். திரு சுதன் அவர்கள் ரெலோ அமைப்பு ஈஎன்எல்எப் உருவாக்கத்திற்காக முன்னின்று உழைத்ததை குறிப்பிட்டு, ”இவ்வாறான கூட்டிணைவுச் செயற்பாட்டுக்கு ரெலோ என்றும் உறுதுணையாக இருக்கவேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து இயங்க ரெலோ தயாராக இருப்பதையும், இதற்கான பல தொடர்புகள் உருவாகியிருப்பது பற்றியும் கூட்டத்தில் கருத்துக்கள் பரிமாறப்பட்டது.

கூட்ட முடிவில் முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜனா தலைமையில் ஏழு பேர் கொண்ட செயற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டது. விரைவில் ரெலொவின் முழுமையான தொடர்பு விபரங்கள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

சமூகச் சீரழிவுகளில் மௌனம் காக்கும் தமிழ் ஊடகங்கள்: ரி சோதிலிங்கம்

Social_Censorship தமிழ் சமூகம் குறிப்பாக யாழ் சமூகம் ஒரு இறுக்கமான சமூகம். இச்சமூகத்தின் சகல பிரச்சினைகளுக்கும் வெளியார் மீது பழிபோடுகின்ற போக்கு காலம்காலமாக இடம்பெறுகின்றது. இந்த நிலையைப் பேணுவதில் தமிழ் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது எந்த வகையிலும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உதவவில்லை. மாறாக கூடுதலான சீரழிவிற்கே வழிவகுத்தது.

பொதுவாக யாழ் சமூகத்தில் சமூகப் பிரச்சினைகள் சாதிப் பிரச்சினைகள் என்று வரும்போது எமது தமிழ் ஊடகங்கள் பிரச்சினைகளை மூடிமறைத்து விடும். அதற்கான காரணமாக எப்போதும் சொல்லப்படுவது இப்படியான சாதி சமூகப் பிரச்சிகைளை அம்பலப்படுத்துவதால் அவற்றுக்கு விளம்பரம் கொடுத்து அதை எல்லோருக்கும் தெரியப்படுத்தி பிரச்சினைகளை பெரிசு படுத்தக்கூடாது என்பதேயாகும். இப்படியான கருத்தை யாழ் சமூகம் பல சகாப்தங்களாக, இன்றும் தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கிறது.

யாழ் பத்திரிகைகளும் மற்றைய பிரதேச ஊடகங்களும் இப்படியான கருத்தை கொண்டவர்களின் கைகளால்தான் நடாத்தப்படுகின்றது. இதுவரை யுத்தம் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைக்குரிய அம்சமாக இருந்ததால் அனைத்து கவனங்களும் யுத்தம் சார்ந்ததாகவே இருந்தது. தற்போது யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் சமூகத்தின் ஏனைய பிரச்சினைகள் முன்னிலைக்கு வந்துள்ளது. அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் பேசப்படும் சமூகச் சீரழிவுகள் சாதிப் பிரச்சினைகள், ஊர்ப் பிரச்சினைகள் என்பன பத்திரிகைகளிலும் பொது ஊடகங்களிலும் பொதுவாக வெளிவரத் தயங்குகின்றன. இது பத்திரிகைகளை நடாத்தும் நிறுவனத்தினரின் பொறுப்புணர்விலேயே தங்கியிருப்பதால் சமூகச் சீரழிவுகள் பற்றிய செய்திகளை மக்களும் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாது போய்விடுகின்றது.

ஒரு காலத்தில் யாழ் இயக்கங்களினால் சிறு களவுகளுக்கும் கூட மரண தண்டனைகள் வழங்கப்பட்டது. அதன் பின்னரான இயக்க மோதலின் போராளிகள் கொல்லப்பட்டனர். இவை எதனையும் யாழ் பத்திரிகைகள் கண்டனம் செய்யாமலும் இப்படியாக செய்யப்பட்ட கொலைகள் ஈறாக பத்திரிகைகளில் பிரசுரிக்காமலும் போயிருந்தன. அதேவேளை கொன்றுவிட்டு வந்த கிட்டு உட்பட புலிகளுக்கு கொலை செய்த களைப்புக்கு கோலா கொடுத்த செய்தி மட்டும் பெரிதாக வெளிவந்திருந்தது. இதனை புலிகளுக்கு பத்திரிகைகள் பயந்து இருந்தனர் என்றுமட்டும் சொல்லிவிட முடியாதுள்ளது. புலிகளை தமது சுயநலத்திற்கு ஆதரவளித்த தமிழ் பத்திரிகைகள் புலிகளின் தவறில் உள்ள ஆபத்துக்களை சுட்டிக்காட்டாமல் போனது பத்திரிகைகளின் தவறும் தமிழ் மக்களுக்காக போராடிய இளைஞர்களை தவறாக வழிநடாத்திய குற்றமும் இந்த பத்திரிகைகளுக்கு உண்டு. புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழர்களால் நடாத்தப்பட்ட பத்திரிகைகளும் இதற்கு விதிவலக்கல்ல.

அதேபோல இயக்கங்களின் பிரதேசங்களின் ஜக்கியம் பற்றியும் இந்த பத்திரிகைகள் மெளனம் காத்திருந்ததும் இன்று விமர்சனத்திற்கு உள்ளாகிறது. அதேகாலங்களில் இலங்கை அரசினால் நடாத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை முழுமையான எந்தவித விமர்சனங்களும் இன்றி கண்டனம் செய்திருந்ததும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

தமிழ் ஊடகங்கள் தமக்குரிய ஊடக கடமைகளை சரியாக செய்யத்தவறிவிட்டன ஜனநாயகம் மனித உரிமைகள் பற்றிய விடயங்களில் காட்ட வேண்டிய அக்கறைகளிலும் தவறியுள்ளன. புலிகளின் ஆட்சிக்காலத்தில் புலிகளினால் நடாத்தப்பட வேண்டிய ஜனநாயக நடைமுறைகளின் அவசியத்தை வலியுறுத்த மறந்து போயிருந்தன. அல்லது தவிர்த்தன.

தற்போது யாழ் சமூகத்தில் எழுந்துள்ள சமூகச் சீரழிவுகள் யாழ் சமூகத்தில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்துபவைகள் அல்ல. இப்படியான பல பிரச்சினைகள் முழு இலங்கையிலுமே எல்லா இனங்களிடையேயும் எல்லா சமயத்தவர்களிடையேயும் உருவாகியுள்ள சமூகச் சீரழிவேயாகும். போரினால் ஏற்பட்ட பாதிப்புக்களினால் அனாதரவாக்கப்பட குழந்தைகள் புலிகளின் சிறுவர்கள் சேர்ப்பிற்க்கு பயந்து திருமணம் செய்து வைக்கப்பட்ட இளம்வயதினரும் அவர்களின் குடும்ப பிரச்சினைகளும் கணவனை இழந்து விதவையானவர்களை சமூகத்தில் ஒதுக்கி வைத்துக் கொள்வதும் மனைவியை இழந்து குடும்பம் இழந்தவர்களும் என்பவற்றுடன் இளம்வயதுப் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தலும் பாடசாலை மாணவர்களையும் பல்கலைக்கழக மாணவர்களை பாலியல் துன்பத்திற்கு உள்ளாக்கும் கயமைத்தனங்களும் சமூகத்தில் பல துன்பியல்களை நடாத்திக் கொண்டிருக்கின்றன.

இவற்றுடன் தமிழ் சிங்கள முஸ்லீம் சமூகங்களிடையே போதைவஸ்து பாவனை விபச்சாரம் என்பவற்றின் அதிகரிப்பும் சமூகச் சீரழிவை மேலும் பல மடங்கு மோசமான நிலைக்கு இட்டுச்சென்றுள்ளன. கடந்த 30 வருடங்களாக இலங்கையில் நடைபெற்ற யுத்தம் இந்த சமூகச்சீரழிவின் தாக்கத்தை, சமூகச் சீரழிவின் கயவர்களை யுத்தத்திற்குள் ஒளிந்துகொள்ள உதவியுள்ளது. ஜனநாயக நடைமுறையற்று இருந்த சமூகத்தில் இவர்கள் தமது கயமைத்னங்களுக்கு இலகுவாக இடம் தேடிக்கொண்டனர். இந்த சமூகச் சீரழிவின் நாயகர்களில் பலர் தமது அயோக்கியத்தனங்களுக்கு தேடிக்கொண்ட இடம் புலி இயக்கமும் அதன் ஆதரவாளன் என்ற பெயருமேயாகும்.

இன்று புலிகளின் அழிவின் பின்னர் இந்த கயமைத்தனங்களின் இருப்பிடமாக யாழ் பல்கலைக்கழகமும் யாழ் பாடசாலை சமூகமும் இருந்துள்ளது வெளிப்படையாகின்றது. இந்த சீரழிவின் வெளிப்பாடுகளே இன்று யாழ் சமூகத்தில் யாழ் அரச அதிபர் யாழ் முற்போக்காளர்கள் இந்த சீரழிவிற்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துள்னர். பல வருடங்களாக நடைபெற்று வந்த யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சீரழிவுகளை யாழ்ப்பாணத்திலுள்ள பத்திரிகைகள் ஊடகங்கள் நிச்சயமாக தெரிந்தே வைத்திருந்திருக்கும். ஆனால் இப்படியான சீரழிவுகளை வெளிப்படுத்துவதன் மூலம் யாழ் கல்விச்சேவைகள் யாழ் சமூகத்தின் பெயர் என்ற தமது வரட்டு கெளரவத்தை பாதுகாக்கவே இவற்றை மூடிமறைத்து வெளிப்படுத்தாமல் விட்டுள்ளனர் என்றே பலரும் அபிப்பிராயப்படுகின்றனர்.

அண்மையில் யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பாசாலை மாணவர்களின் சீரழிவுகள் பற்றி வெளிப்படையாக கருத்து வைத்திருந்தது பாராட்டப்பட வேண்டியதாகும். சமூகத்தில் உள்ள சீரழிவுகளை வெளிப்படையாக பேச ஆரம்பிக்கும்போதுதான் அந்த சீரழிவிலிருந்து அந்த சமூகத்தை பாதுகாக்க முடியும்.

இமெல்லடா சுகுமார் போன்ற தமிழ் சமூகம்பற்றி விழிப்புணர்வு கொண்ட அக்கறை கொண்ட போர்க்கால அனுபவம் கொண்ட தமிழ் குலப் பெண்ணின் கருத்துக்கு நாம் ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கி சமூகத்தில் உள்ள சீரழிவுகளில் இருந்து மீள பின்புலம் கொடுத்து உதவ வேண்டும். கடந்த 40 வருட கால அரச அதிபர்கள் வரிசையில் இப்போது தான் சமூக விழிப்புணர்வு கொண்ட துணிவு மிக்க அரசஅதிபர் ஒருவரை யாழ் தமிழ் சமூகம் பெற்றுள்ளது.

இந்த அரச அதிபருக்கு ஆதரவும் ஒத்தாசையும் வழங்கும் பொறுப்பு வட கிழக்கு மக்களுக்கும் புலம்பெயர் மக்களுக்கும் உள்ளது. போராட்டம் புரட்சி என்று கடந்த 30 வருடங்களாக பேசிய பொறுப்பு வாய்ந்தவர்களினதும்இ பொறுப்புள்ள புலம்பெயர் தமிழ் சமூகத்தினதும் ஆதரவு தமிழ் மக்களின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் அரசியல் உரிமைகளுக்கு அடுத்து தமிழ் பிரதேசங்களில் எழுந்து கொண்டிருக்கும் சமூகச் சீரழிவுகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதும் இச்சீரழிவுக்கு எதிராக குரல் கொடுக்கும் இமெல்டா சுகமார் போன்றோருக்கு முடிந்த அளவு ஆதரவினை வழங்குவதும் தேவையாக உள்ளது.

தமிழ் சமூகத்தில் புதிய மாற்றங்களை உருவாக்க வேண்டுமாயின் இந்த மேற்கூறும் சமூகச் சீரழிவுகள் சாதியப் பிரச்சினைகளிலும் அக்கறை செலுத்த வேண்டும். இந்த சீரழிவுகளுக்கு ஆதரவும் பின்புலமுமாக இருப்பவர்களில் சிலரின் கைகளில்இ சமூகத்தில் சில விடயங்களை முன்னெடுத்துக் கொள்ளக் கூடிய அல்லது செயற்படுத்தும் வல்லமையும் அதிகாரமும் கொண்டவர்களாக உள்ளதையும் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படியானவர்கள் அரச சார் நிறுவனங்களிலும் கல்வி சார் நிறுவனங்களிலும் பொதுமக்களின் சமத்துவத்தை பேண வேண்டிய அரச அலுவலகங்களிலும் கடைமையாற்றுகின்றனர் என்பதே உண்மையாகும். இப்படியான பொறுப்பு வாய்ந்த பதவிகளில் உள்ளவர்களில் பலர் இன்றும் சாதிய வெறியர்களாகவும் சாதி என்ற ஒருகாரணத்திற்காக சில குறிப்பிட்டவர்களின் சலுகைகளை உதவிகளை அவர்களுக்கு கிடைக்காமல் செய்வதமாக செயறபடுவதாக பல யாழ் மக்கள் கருத்துக் கொண்டுள்ளனர். இப்பேர்ப்பட்ட பேர்வழிகளை உடனடியாக ஊடகங்கள் அம்பலப்படுத்தி இந்த அயோக்கியத்தனங்களை களைய முன்வர வேண்டும்.

வெறுமனே இப்படியான சமூக சீர்கேடுகளை தட்டிக்கேட்பது மட்டும் போதாது. தொடர்சியாக எழும் சீர்கேடுகளையும் ஜனநாயக மீறல்களையும் சாதிவெறி அகங்காரங்களையும் கையாளப்பட்டு சமூகத்தில் இவற்றிக்கான அடிப்படைக் காரணங்களின் மாற்றத்தை உண்டு பண்ணக்கூடிய கல்வி முறைமையும் புதிய சட்டவரையறைகளும் சமூகத்தில் இணைக்கப்படல் வேண்டும்.

இதைவிட கடந்த 30 வருட பயங்கரவாதப் போரில் ஜனநாகத்தின் பெறுமதி புரியாமல் வளர்ந்து விட்ட ஒரு சந்ததியினரின் அறியாமையும் இந்த சீர்கேடுகளுக்கு உதவி புரிவதாகவே உள்ளது. இது முக்கியமாக எந்த பிரச்சினைகளை கையாளுவதிலும் அதற்கான நடுநிலைமையை பேணாது புலிகளின் ஆட்கள் என்றால் அது என்னவாக இருந்தாலும் சரி என்றதும் புலிகளின் தேவைக்கு என்றால் அது எப்படியாகிலும் கொடுத்துவிட வேண்டும் என்றதும் சிறு வயதினரை கட்டாய ஆட்சேர்ப்புககு உட்படுத்தியதின் விளைவுகளால் சிறுபராயத்திலே திருமணங்கள் பல நடைபெற்றதும் புலிகளின் ஆதரவாளர்களால் அரச படைகளால் வன்முறைக்குட்பட்ட குழந்தைகளில் மனநிலைகளால் பாதிக்கப்பட்டதுமாக ஒரு வன்முறை சக்கரம் தமிழ் சமூகத்தில் இன்று வரையும் சுழன்று கொண்டிருப்பதை அவதானிக்கலாம். இவை சில வேளைகளில் வன்முறையாகவும் பாலியல் வக்கிரங்களாகவும் வெளிவருகின்றது.

கடந்த 30 வருட தமிழர் போராட்டத்தினிடையே வளர்ந்த தமிழ் ஊடகங்கள் இன்று வரையிலும் தமது கடைமைகளில் சமூகத்தின் தேவைகளை ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது பிரிவினர் சம்பந்தமாகவே சார்பாகவே இயங்கியுள்ளனர். இந்த ஊடகங்கள் தமிழ் சமூகத்தின் ஒட்டு மொத்த சமூகத்தின் பிரதிபலிப்பாக இருக்கவில்லை என்பதை கடந்த தேர்தலின்போது யாழ் ஊடகங்களின் நடத்தைகளிலிருந்து அவதானிக்க முடிந்தது.

யாழ் சமூகத்தில் நடைபெறும் சமூகச் சீர்கேடுகள் பற்றி கூறிய கருத்தை பல பத்திரிகைகள் பிரதிபலிக்க தவறியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று வவுனியாவில் நடைபெற்ற நகரசுத்தி தொழிலாளர்களின் போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவும் தவறியும் அம்மக்களுக்கு நீதிபெறும் வழிவகைகள் இன்று வரையில் அடையாளம் காணப்படவில்லை. தமிழ் ஊடகங்கள் ஊடகவியலை தமது ஊதியம் பெறும் தொழில் என்று மட்டும் பாராமல் இது சமூகத்தின் பாரிய கடமை என்ற உணர்வை உள்வாங்கியும் தற்போது உலக பொருளாதார சந்தைக்கு ஏற்ற சமூகத்தை எதிர்காலத்தில் எதிர்நோக்கியும் செயற்பட தயாராகிக்கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் தங்கள் பிரச்சினைகளையும் சமூகப் பலவீனங்களையும் சரியாக இனம்கண்டு அவற்றுக்கான தீர்வுகள் பற்றி ஆராயவேண்டும். அதைவிட்டுவிட்டு தமிழர்கள் கல்தோண்றி மண்தோண்றாக்காலத்தில் தேண்றிய மூத்த குடிகள் உயர்ந்த கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் கொண்டவர்கள் என்று மூச்சுவிடாமல் முழங்குவது தமிழ் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஆகாது. சமூகப் பிரச்சினைகளைப் பொதுத் தளத்தறிகுக் கொண்டு வந்து விவாதிப்பதன் மூலமாக மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்தையும் சமூக மாற்றத்தை நோக்கி நகர்த்த முடியும். இவ்விடயத்தில் பத்திரிகைகள் காத்திரமான ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

தாயக மக்களின் அபிவிருத்திக்கு உதவ முன்னாள் ரெலோ உறுப்பினர்கள் கிழக்கு லண்டனில் ஒன்றுகூடினர்! : ரி சோதிலிங்கம்

நேற்று 10/ 10/2010 லண்டன் லேயிட்டனில் ரெலோவின் பல முன்னாள் உறுப்பினர்களின் ஒன்று கூடல் நடைபெற்றது. முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜனா மற்றும் ரெலோவின் அப்போதைய படைத்துறைத் தளபதி இளங்கோ ஆகியோர் அண்மையில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு சென்று பல முன்னாள் ரெலோ உறுப்பினர்களையும், இன்றைய ரெலோ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறீரெலோ உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் போன்றோர்களை சந்தித்து உரையாடி வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து லண்டன், லேய்டனில் ரெலொ சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ரெலோவின் ஆரம்பகால உறுப்பினர்கள், புலிகளுடனான சகோதரப் படுகொலைகளில் பாதிப்புற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் பல முன்னாள் ரெலோ உறுப்பினர்கள் அமைப்பு ரீதியாக இயங்காமலும், நாட்டில் உள்ள ரெலோ அமைப்புடன் இணைந்து வேலை செய்யாமலும் வாழ்கின்றார்கள். இவர்கள் தாம் வாழும் பிரதேசங்களில் தமது மக்களுக்கான பணிகள், மக்களுக்கு சிரமதான உதவிகள், மக்களின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவிகள் புரிய வேண்டும் என வலியுறுத்தியும், தாம் மக்களின் அபிவிருத்தி நலனில் அக்கறையுடன் செயற்பட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். அதற்கான ஆதரவினையும், உதவிகளையும் புலம்பெயர் நாட்டிலுள்ள முன்னாள் ரெலோ உறுப்பினர்களிடம் கேட்டுள்ளனர்.

இந்த கோரிக்கைகள் புலம்பெயர் நாட்டிலுள்ள முன்னாள் ரெலோ உறுப்பினரிடையே ஒரு ஒன்று கூடலை வற்புறுத்தியும் உள்ளது.

மேலும் புலம்பெயர்நாட்டில் உள்ள முன்னாள் ரெலோ உறுப்பினர்கள் பலர் தாம் தனிப்படவும், பல்வேறுபட்ட பொது அமைப்புகள் ஊடாகவும் தமிழ் மக்களுக்கான உதவிகள் மேற்கொள்வதையும், இந்த உதவிகள் மேலும் வலுப்படுத்தப்பட்டு, ரெலோ உறுப்பினர்கள் ஸ்தாபன மயப்படுத்தப்பட்டு உதவிகள் புரிய விரும்புவதாகவும் தெரிவித்தமையையும் தொடர்ந்து இந்த ஆரம்பக் கூட்டம் கூட்டப்பட்டது.

இலங்கையில் வடக்கு கிழக்கு மக்களுக்கு எந்த வழிகளிலும் உதவி செய்தலையே அடிப்டையாக கொண்டு இயங்குவது என்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான ரெலோ உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து தமது முன்னாள் உறுப்பினரிடையே நிநி சேகரிப்புக்களை நடாத்தி, வடகிழக்கில் கஸ்ட நிலையில் உள்ள மக்களுக்கு சிறுகைத்தொழில் மற்றும் குடும்பத்திற்கு தேவையான உதவிகள் மேற்கொள்வது என்றும் இது பற்றிய மேலதிக முடிவுகளை பரந்த ரெலோ உறுப்பினர்களின் ஒன்றுகூடலில் முடிவு செய்வது என்றும் முடிவானது. இதன் தொடர்ச்சியாக அடுத்த ஒன்றுகூடலை நவம்பரில் ஏற்பாடு செய்ய முடிவெடுக்கப்பட்டது.

இன்று நாட்டில் இருக்கும் ரெலோவினரிடையே ஒரு ஒற்றுமையை வலியுறுத்தி தமிழ் மக்களின் அரசியலையும் வலுப்படுத்த வேண்டும் என்று ஒருசாரர் கருத்து வெளியிட்டனர். நாட்டிலுள்ள ரெலோவின் அரசியலில் புலம்பெயர் ரெலொ உறுப்பினர்கள் நேரடியாகத் தலையீடக்கூடாது என மறுசாரர் கருத்து வெளியிட்டனர். லண்டனில் ரெலோவிற்கு  உத்தியோகபூர்வ அலுவலகத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என முன்னையோரும், ரெலோ அலுவலகம் அல்ல தாயக மக்களின் உதவித் திட்டங்களை இணைப்பதற்கான அலுவலகம் ஒன்று அவசியம் என மறுசாராரும் கருத்துக்களைத் தெரிவித்தனர். உதவித் திட்டங்களை இணைப்பதற்கான அலுவலகம் வேண்டும் என்பவர்கள் ஒரு உதவி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர். இந்த மாறுப்பட்ட கருத்துக்களில் எதை ஏற்றுக் கொள்வது என்பது விரைவில் கூட்டப்படவுள்ள ரெலோ உறுப்பினர்களின் பரந்த கூட்டத்திலேயே முடிவு செய்யப்படவுள்ளது.

Tamil language disserves due recognition

Ven. Dr.Bellanwila Wimalaratana
A leading Buddhist monk has claimed that Tamils have had to face numerous difficulties as they have not been able to use their mother tongue as desired. The Ven. Dr.Bellanwila Wimalaratana Nayaka thera said that it is high time that the Tamil language be given due recognition.

The Venerable Dr Bellanwila Wimalaratana thera, the Viharadhipathi of the Bellanwila Raja MahaVihara who is also the Vice chancellor of the Sri Jayawardanapura University was giving evidence at the Commission on Lessons Learnt and Reconciliation.

Unjust

“We must sincerely admit that Tamils have been unjustly treated on language issue” said Dr Wimalaratna thera.

The prelate said that although Tamil is accepted as an official language even today many Tamils are deprived of using Tamil when conducting business. The Ven.Wimalaratna pointed out that fair language use would help promote the concept of Sri Lanka citizenship among Tamils.

Referring to the past, the prelate said that it is not correct to blame the Language policy of 1956 which promoted Sinhala, for the current lapse of giving due recognition to the Tamil Language. “Accepting Sinhala as the state language is not the issue, that was a necessity, but Tamil should have been given due recognition” said Venerable Dr Bellanwila Wimalaratana

http://www.bbc.co.uk/sinhala/news/story/2010/09/100924_bellanwila.shtml

TWDF Conference: Post-War Challenges facing women in Sri Lanka – war widows, broken communities and the displaced.

From: TWDF [mailto:twdf.ccd@sangu.org]
Sent: 17 August 2010 13:14

Dear Friends

TWDF Conference: Post-War Challenges facing women in Sri Lanka – war widows, broken communities and the displaced.

We are pleased to inform you that our third conference will be held on Saturday, 23 October 2010

at the Tolworth Girls School, Fullers Way North, Kingston KT2. See leaflet enclosed.

The conference has become an important event on Women, providing a regular forum to discuss issues affecting Women, particularly the Tamil speaking women in Sri Lanka.

The conference is organized around plenary sessions as well as workshops dedicated to specific themes. Some of the themes for the panels and workshops include: Post War Reconstruction: New Roles for Women; Advancing Women’s Economic Rights and Empowerment; Post-war childhoods/new generations; Developing Partnerships and Co-operation: Strengthening Civil Society and Diaspora; Guarding Refugee Protection; Better Health: Women, Children, War and Health; and Women and Violence.

It has been one of the main objectives of this conference is to create gender awareness and build links between organizations and activists who are involved in post-war initiatives targeting women in Sri Lanka. We see this conference as an opportunity for us to speak with many of those involved in gender matters and discuss collaborations, or other initiatives of collective interest.

The conference is entirely self-financed and we will depend on your registration and voluntary donations and where possible sponsorships to support the event. The details are provided in the leaflet. If you need any further information or ideas that you have on the conference, please do not hesitate to contact me on 0208 287 6303 or Sathiya, Conference Coordinator on 0208 391 0861 or the office on 0208 546 1560. We also would like to ask you to help us introduce the conference to others whom you think would be interested.

To register, please fill in the attached form with your details & send it with the fee to the address below. We look forward to receiving your registration & Fee early.

With kind regards

Shyla

Tamil Women Development Forum
c/o
Centre For Community Development
Thulasi
Bridge End Close
Kingston Upon Thames KT2 6PZ
(United Kingdom)
Telephone: +44 (0)20 8546 1560
Fax: +44 (0)20 8546 5701
E-mail: twdf.ccd@sangu.org

”ஈழம்(தமிழ்) என்ற அடையாளத்தை இல்லாமல் பண்ணவே முயற்சிக்கிறார்கள். ” ஜி ரீ லிங்கநாதன் வவுனியா நகரசபை உறுப்பினர். – நேர்காணல் : ரி சோதிலிங்கம்

Linganathan_giving_speechதமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே நிர்வாக அலகான வவுனியா நகரசபை தற்போது இயங்க முடியாத நிலையில் உள்ளது பற்றியும் அந்நகரசபையில் இடம்பெற்ற நிதி நிர்வாகச் சீர்கேடுகள் பற்றியும் விரிவான ஒரு அறிக்கை வவுனியா நகரசபையின் சர்வகட்சி உறுப்பினர்களாலும் கையெழுத்திடப்பட்டு வெளியாகி இருந்தது. இவ்வறிக்கையில் கையெழுத்திட்டவர்களில் ஒருவரான   முன்னாள் வவுனியா மேயரும் தற்போதைய வவுனியா நகரசபையின் புளொட் அமைப்பின் உறுப்பினருமான ஜி ரீ லிங்கநாதன் ஓகஸ்ட் 2ல் ‘தேசம்நெற்’க்கு வழங்கிய நேர்காணல்.

வவுனியா நகரசபை தொடர்பாக ‘தேசம்நெற்’இல் வெளியான முன்னைய பதிவுகள்:

”வெளியே போங்கடா சக்கிளிய நாயலே” வவுனியா நகரசபைத் தலைவரின் கூற்றும் இன்னமும் வீச்சுடன் இருக்கும் சாதிய மனோநிலையும்

ரிஎன்ஏ யின் வவுனியா நகரசபையின் தலைமை மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டு – எட்டு நகரசபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அறிக்கை

இந்நேர்காணலின் பின் ஜி ரீ லிங்கநாதன் சமாதானத்திற்கும் மீளுறவுக்குமான கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் முன் வவுனியா மாவட்ட செயலகத்தில் ஓகஸ்ட் 14ல் சாட்சியமளித்தார். அதிலிருந்து சில பகுதிகளை இங்கு பதிவு செய்து கொண்டு நேர்காணலுக்குச் செல்வோம்.

‘’நடந்தவைகளை மறந்து இனிவரும் காலங்களில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற கருத்தைக் கூறியிருந்தார். உண்மையில் நாமும் அதைத்தான் விரும்புகிறோம். இருந்தாலும்கூட மறைந்த இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான கொல்வின் ஆர் சில்வா “இந்த நாடு இரு மொழி பேசுவதாக இருந்தால் ஒரு நாடாகவும் ஒரு மொழி பேசுவதாக இருந்தால் இரு நாடாக வரும்” எனக் கூறியிருந்தார். இதை ஏன் நான் கூறுகிறேன் எனில் நடந்தவைகளை மறப்பதென்பது இலகுவான விடயமல்ல. இருந்தாலும் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் 30 ஆண்டுகளாக மிக இன்னல்களுக்கு மத்தியில் நாங்கள் இன்றைக்கு நிர்க்கதி அற்ற நிலையில் இருக்கின்றோம் என்பதுதான் உண்மை.

இன்று தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒன்று கௌரவமாக எல்லா மக்களும் வாழக்கூடிய அரசியல்த் தீர்வு முன்வைக்கப்பட வேண்டியது அவசியமாக இருக்கின்றது. அடுத்ததாக இந்த யுத்தத்தின் மூலம் இடம்பெயர்ந்து தங்களுடைய அன்றாட வாழ்வைக்கூட வாழமுடியாது இருக்கின்ற மக்களை சிறந்த முறையில் வாழவைக்க வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அடுத்து பல ஆண்டுகளாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அப்பாவி தமிழ் இளைஞர், யுவதிகளை அவர்களது விசாரணைகளை முடித்து விடுதலை செய்ய வேண்டும்.

இறுதியாக சுதந்திரத்திற்கு பின்னிருந்தே வடக்கு – கிழக்கில் ஓர் அத்துமீறிய குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டமையும் அந்த இனப் பிரச்சினைக்கான முக்கிய காரணங்களில் ஒன்று. இதற்கு அரசாங்கம் பின்ணணியில் செயற்படுவதாக நாம் சந்தேகிக்கின்றோம். இவ்வாறான செயற்பாடு ஜனாதிபதியின் இன ஒற்றுமைக்கும் சுபீட்சமான எதிர்காலத்திற்குமான செயற்பாட்டிற்கான முட்டுக்கட்டையாக அமையும் என்பதை ஆணித்தரமாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்’’
–சமாதானத்திற்கும் மீளுறவுக்குமான கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் முன் ஜி ரீ லிங்கநாதன்– ஓகஸ்ட் 14, 2010.

ஜி ரீ லிங்கநாதனுடனான நேர்காணல்:

தேசம்: வவுனியா நகரசபை தொடர்பாக நகரசபை உறுப்பினர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இருந்து இந்த நேர்காணலை ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன். வேறுபட்ட அரசியல் அமைப்பினர் ஒன்றிணைந்து நகரசபையின் அடிப்படை ஜனநாயக நடைமுறைகளை பரீட்சிக்க முயன்றுள்ளீர்கள். இந்த மாதிரியான நடவடிக்கைகள் மிகமுக்கியமானது. ஜனநாயகத்துடன் ஜக்கியப்படல் என்பதன் மூலமே தொடரச்சியாக சமூக சீர்கேடுகளை நாம் திருத்திச் செல்லாம்.
Linganathan_with_Waterpumbலிங்கநாதன்: நாங்கள் இந்த விடயத்தில் சரியாகவே செயற்படுகிறோம். செயற்படுவோம். காரணம் பெரிய பெரிய வசனங்களை பேசி, மக்களுக்கு எதையும் செய்யவில்லை. இப்ப நாங்கள் இப்படியான கட்டமைப்புக்களில் மாற்றங்களை உருவாக்க முனைகிறோம். அதன் மூலம் வருங்கால எமது பிள்ளைகளுக்காக இப்படியான விடயங்களை சொல்லிக் கொடுத்துவிட்டு போகலாம்.

நாங்கள் எதிர்வரும் நிர்வாக கூட்டத்தில் எமது 19 கோரிக்கைகளுக்கும் பதில் வரும் என எதிர்பார்க்கிறோம். அவர்கள் சரியான ஒரு நிர்வாகம் என்றால் ஒரு விசேட கூட்டத்தை கூடி இது பற்றி கலந்தாலோசித்திருக்கலாம். ஏனென்றால் இந்த கையெழுத்திட்டவர்களில் தமிழ்தேசிய முன்னணி, புளொட், பொதுசன ஜக்கியமுன்னணி இந்த மூன்று அமைப்புக்களையும் சேர்ந்த 8 உறுப்பினர்கள் தானே இதை செய்திருந்தோம். இது ஒரு கட்சி ரீதியாகவோ எதிர்க்கட்சி என்றோ செய்யவில்லை. ஆகவே அவர்கள் ஒரு விசேட கூட்டத்தை கூடியிருக்கலாம். அவர்கள் அப்படி செய்யவில்லை.

தேசம்:இந்த விடயங்களை ஒரு நகராட்சியிடமே கேட்டுள்ளீர்கள். இவ்வளவு காலப்போராட்டத்தின் பின்பும் இப்படியான நிர்வாக சீர்கேடுகளைப் பற்றி அக்கறையில்லாமல் இருப்பது வெட்கக்கேடான செயல் அல்லவா.
லிங்கநாதன்:நாங்கள் பெருமையாக சொல்லவில்லை. 1994ம் ஆண்டு அந்த சபையை பெறுப்பெடுத்து 1999 வரையில் புலிகளின் கெடுபிடிகள் ஆமியின் கெடுபிடிகள் அமைச்சர்களின் கெடுபிடிகள் இவற்றுக்குள்ளும் நாம் மிகத்தரமான நிர்வாகத்தை செய்துள்ளோம். காரணம் இது எங்களுடைய மக்களுடன் சம்பந்தப்பட்ட விடயம் உரிமைப் போராட்டத்தில் பாரிய தவறுகள் நடைபெற்றுவிட்டது. அதனால் குறைந்தது மக்களுக்கு இந்த சாதாரண வாழ்க்கையில்  நிம்மதியான வாழ்நிலைகளை உருவாக்க வேண்டும் என்பதில் எமக்கு அக்கறை இருந்தது அதற்காக செயல்பட்டோம்.
இந்த நடவடிக்கையின் ஒரு கட்டமாகவே நாம் பல சிரமதான பணிகளையெல்லாம் செய்துள்ளோம்.

எமது கீழ்மட்டத்தில் நடைபெற்ற சில தவறான நடவடிக்கைகள் காரணமாகவும் அதைவிட தேசியத்தின் பெயரால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். தேசியத்தின் பெயரால் சிந்திக்க தள்ளப்பட்டுள்ளனர். அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலும் நகராட்சி தேர்தலும். மக்களுக்கு இன்றும் அந்தத் தேசிய உணர்வுள்ளது என்பதனைக் காட்டியுள்ளன. ஆனால் கவலைக்குரிய விடயம் தமிழ் தேசியத்துக்கு தலைமை தாங்கக் கூடியவர்கள் எவரும் சுதந்திரத்திற்கு பின்னர் இல்லை என்பதே உண்மை.

தேசம்:தேசியத் தலைவர்கள் இல்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள். அப்படியானால் தந்தை செல்வா முதல் தம்பி பிரபா வரையான தலைவர்கள்?
லிங்கநாதன்:இவர்கள் பற்றி பல விமர்சனங்கள் உண்டு. அ அமிர்தலிங்கம் போன்றவர்களை தமிழ் மக்கள் பாவித்திருக்கலாம். அவர் உயிருடன் இருந்திருந்தால் எமது நிலைமை வேறு. ஆனால் ஒட்டு மொத்தமாக பார்த்தீர்கள் என்றால் அது தந்தை செல்வா என்றால் என்ன? இன்றுள்ள சிறீரெலோ உதயன் ஆக இருந்தால் என்ன தேசியத்தின் பெயரால் ஏதோ செய்ய வெளிக்கிட்டதே தவிர, வடிவேல் சொன்னமாதிரி உட்கார்ந்து இருந்து யோசிக்கவில்லை.

தேசம்:உங்கள் அறிக்கையில் நீங்கள் சொல்கிறீர்கள் நகரசபைக்கு கட்சி பேதமின்றி நிபந்தனையின்றி ஆதரவளித்தோம் என்று. அதை கொஞ்சம் விபரியுங்கள்?
லிங்கநாதன்:கடந்த தேர்தலில் எமக்கும் தமிழ் தேசிய முன்னணிக்கும் 3 ஆசனங்கள் தான். 143 வாக்குகள்தான் அவர்களுக்கும் எமக்கும் உள்ள வித்தியாசம். அதனால் அந்த 2 போனஸ் ஆசனங்கள் தமிழ் தேசிய முன்னணிக்கு கிடைத்தது. ஆனாலும் அவர்களின் பதவியேற்பு வைபவத்தின்போது நாங்கள் அவர்களுக்கு சொல்லியிருந்தோம், ‘தேர்தல் முடிந்து விட்டது. அது ஜனநாயகப்படி நடந்துள்ளது. நீங்கள் சரியானதை செய்யுங்கோ, நாங்கள் ஆதரவளிப்போம்’ என்று. இதை நாங்கள் மேயருக்கும், அவைக் கூட்டத்திலும் சொல்லியுள்ளோம். இன்று வரையில் இவர்களது நடவடிக்கைகளில் எமக்கு திருப்தியில்லை  இன்று தேர்தல் முடிந்து 10வது மாதம் எனக்கும் எமது தோழர்களுக்கும் பொது மக்களிடமிருந்து பல முறைப்பாடுகள் ஏதாவது செய்யச் சொல்லி. மக்களிடமிருந்து பல உறுத்தல்கள் வந்த வண்ணமே உள்ளன. எனக்குத்தான் விருப்பு வாக்குகளில் அதிகமான வாக்குகளை மக்கள் அளித்திருந்தனர். நான் முன்பு மேயராக இருந்தவன். ரிஎன்ஏயின் ஆட்கள் கூட என்னிடம் முறைப்படுகிறார்கள். என்ன நடககிறது என்று கேட்கிறார்கள். அவ்வளவு சீர்கேடுகள் நடக்கின்றன. பல பொது மக்களுக்கு இவை நன்றாகவே தெரியக்கூடிய மாதியாக நடக்கிறது.

சிவசக்தி ஆனந்தன் நேரடியாக தலையிட்டு ஆதரவளிக்கும்படி கேட்டார். நான் கேட்டேன் தனிப்பட நாதனுக்கு ஆதரவளிப்பதா? அல்லது ரிஎன்ஏக்கு ஆதரவளிப்பதா? என்று. அவர் சொன்னார் ரிஎன்ஏக்கு தான் ஆதரவளிக்க வேண்டும் என்று. நான் சொன்னேன் நாம் எல்லோரும் பேசுவோம் என்று. அவர்களில் மொத்தம் 5 பேர் கொண்டு வந்த இந்த தெரிவை நாங்களும் சேர்ந்து இந்த புரப்போசலுக்கு ஆதரவளித்தோம்.

தேசம்:நீங்கள் சொல்லுகிறீர்கள் மக்களின் பிரதிநிதிகள், சுகாதார உத்தியோகத்தர்கள் முறைப்பாடு செய்வதாக. அது என்ன?
லிங்கநாதன்:இவர்கள் ஆசனத்திற்க்கு வந்து இத்தனை நாளாக ஒன்றும் செய்யவில்லையே. எல்லாம் அரைகுறை. தனக்கும் தனது உப மேயருக்கும் ஏசி பூட்டியதும், ரோலிங் கதிரை போட்டதும், தமக்கு வாகனங்கள்(கார்) வாங்கியதும் தான்.

Linganathan_Cleaning_a_Wellநாங்கள் ஒரு புரோகிராமை போட்டு அதை மக்களிடம் கையளித்துவிட்டு அன்றே அடுத்த திட்டத்தை போடுவோம். மக்களிடம் கேட்டு அடுத்து என்ன செய்ய வேணும் என்று தானே நடந்து கொண்டுள்ளோம். மக்களிடம் கேட்டு பாருங்களேன் நாங்கள் எப்படி நடந்துள்ளோம் என்று. அதில் இருந்துதானே நாங்களும் இவர்களின் நிர்வாக சீர்கேடு என்பதை ஒத்துக்கொள்கிறோம். இவர்களிடம் ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி ஒரு வருடம் முடியும் போது என்ன செய்தீர்கள் என்று கேட்டால் இவர்கள் தங்களுக்கு வாங்கிய பிக்கப் வாகனத்தை கொண்டு வந்து நிற்பாட்டிவிட வேண்டியது தான். வேறு என்ன சொல்ல இருக்கிறது.

தேசம்: கோவில்குளம் பாலர் பாடசாலையின் நிதிபிரச்சினை விடயம் பற்றி அறிகிறோம். அதன் விபரம் என்ன?
லிங்கநாதன்:முன்பு ஆரம்ப கல்விக்கு நாங்கள் எந்த பணமும் செலவு செய்ய முடியாது. இப்ப புதிய சட்டம் வந்துள்ளது. செலவு செய்யலாம். அதற்கு செலவு செய்ய திட்டம் போட்டுள்ளனர். ஆனால் அதுபற்றி எந்த விளக்கமும் தரப்படவில்லை. அவர்கள் விளக்கம் தர வேண்டும்.

தேசம்:எப்படி சபை உறுப்பினர்க்கு தெரியாமல் இவைகள் நடைபெறுகின்றது?
லிங்கநாதன்:அதிகமான விடயங்கள் சபை உறுப்பினர்க்கு தெரியாமலேதான் நடைபெறுகின்றது.

தேசம்:நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் அது ஜனநாயகமாத் தெரியவில்லையே?
லிங்கநாதன்:புலிகளும் தாங்கள் ஒரு ஜனநாயகப்படியேதான் நடந்தோம் என்கிறார்களே.

தேசம்:புலிகள் இருக்கட்டும். இப்படி பெருந்தொகைப் பணத்தை செலவு செய்வதென்றால் சபையின் அங்கீகாரம் பெற வேண்டும் இல்லையா?
லிங்கநாதன்:அதுதான் இவர்கள் மீதுள்ள பெரிய பிரச்சினையேயாகும். மேயர் சாதாரணமாக 10 ஆயிரம் தான் செலவு செய்யலாம். அதை நாங்கள் முதல் கூட்டத்தில் ஒரு லட்சத்திற்கு அங்கீகரித்திருந்தோம். பின்பு ரிஎன்ஏ உறுப்பினர்களின் உள் முரண்பாடுகள் காரணமாக இரு ரிஎன்ஏ உறுப்பினர்கள் தான் அத்தொகையை  மீளவும் ஒரு லட்சத்திலிருந்து 10 ஆயிரத்திற்கு குறைத்துக் கொண்டனர்.

Linganathan_Honering_Celebrationகூட்டம் நடக்கும்போது நான் (முன்னாள் மேயர்) இருப்பது இவர்களுக்கு ஒரு சிக்கல். சில கூட்டங்களில் நான் கலந்து கொள்ளவில்லை. அந்தக் கூட்டங்களில் இவர்கள் தாங்களே இப்படி முன்மொழிவதும், வழிமொழிவதுமாக எல்லாம் தடல்புடலாக நடந்தேறியும் உள்ளது. இதுபற்றி எல்லா அங்கத்தவர்களுக்கும் ஒரு முறை கூட்டத்தில் சொல்லியிருந்தேன். காரணம் ஒரு நாளைக்கு நாம் எல்லோரும் விசாரணைக்கு உட்படலாம் என எச்சரித்திருந்தேன். நன்றாக என்ன பேப்பரில் உள்ளது என்பதை சரியாக வாசித்துவிட்டே ஆதரியுங்கள் என்றும் பொறுப்புணர்வில்லாமல் ஆதரித்துவிட்டு அரசிடம் சிக்கலில் மாட்டவேண்டாம் எனவும் சொல்லியிருந்தேன். இவைகளும் இவர்களின் உட்பூசல்களுமேதான் இவர்களின் இந்த பிரச்சினையின் விஸ்வரூபமாகும்.

தேசம்:அது என்ன உட்பூசல் என்று சொல்ல முடியுமா?
லிங்கநாதன்:இப்போ உதவி மேயராக உள்ள ரதனே ரிஎன்ஏக்குள்ளே விருப்புவாக்குளில் அதிக வாக்குகளை எடுத்தவராவார். ரதனை மேயராக்காமல் நாதனை தமிழரசுக் கட்சியின் மூத்ததலைவர் என்ற காரணத்தால் மேயராக்கினர். மேயர் பதவியேற்பு வைபவத்தன்றே ரதன் ஒரு நோட்டீஸ் வெளியிட்டிருந்தார். தானே அதிக வாக்கு பெற்றவர் என்றும் தானே மேயராக வர வேண்டும் என்றும். ஆனால் இரண்டு வருடங்களில் தான் மேயராக்கப்படுவேன் என்றும் இந்த நோட்டீஸில் வெளியிடப்பட்டிருந்தது. அன்றிலிருந்து இந்த மேயருக்கும் உதவி மேயருக்கும் இன்று வரையில் பிரச்சினையாகவே உள்ளது. இதன் பின்னர் மற்ற உறுப்பினர்களும் இந்த விடயங்களை திரும்ப திரும்ப பேசி மேயருடன் குழப்பமடைந்துவிட்டனர்.

தேசம்: இந்த நகரசபை நடவடிக்கைகளில் நிதி நிர்வாகச் சீர்கேடுகளுடன் சாதிய வேறுபாடு பற்றிய பிரச்சினையும் எழுந்துள்ளது அல்லவா?
லிங்கநாதன்:அப்படியான சில குற்றச்சாட்டுக்கள் உண்டு. அண்மையில் நடைபெற்ற சுகாதாரப் பகுதியில் ஒரு வேலை நிறுத்தம் நடைபெற்றது அங்கே சாதி வேறுபாடு காட்டி நடந்தாலேயே இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றது. (அதன் முழுவிபரம் தேசம் வெளியிட்டிருந்தது)

தேசம்:டெங்கு ஒழிப்பு திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதிக்கு இன்னமும் கணக்கு காட்டப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
லிங்கநாதன்:இன்னமும் வழங்கப்பட்ட நிதிக்கு என்ன நடக்கிறது? எப்படி செலவு செய்யப்பட்டது? போன்ற விபரங்கள் யாருக்கும் தெரியாது. இன்னமும் கணக்கு காட்டப்படவில்லை.

தேசம்:மேயருக்கு வாங்கப்பட்ட வாகனம் சம்பந்தமாக கடுமையான குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது.
Linganathan_in_a_prize_givingலிங்கநாதன்:சபை அங்கீகாரம் கொடுத்துள்ளது அதற்குபிறகு ரென்டர் கோல் பண்ணப்பட வேண்டும். வாகனம் தெரிவு செய்யப்பட்டால் ஒரு ஓட்டோ மொபைல் பொறியியலாளர் மதிப்பீடு வழங்கப்படல் வேண்டும். இப்படியான ஒழுங்கு முறைகள் அங்கு நடைபெறவில்லை. ஒழுங்கு விதிகளை மீறுவதாகத்தானே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவர்கள் இவைகளை சிறிய விடயங்களாக விட்டுவிட்டுப் போகலாம். ஆனால் இவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பதில்தான் எல்லாம் இருக்கிறது. இவர்கள் மக்களுக்கு செய்ய வேண்டிய விடயங்களை கவனம் எடுத்து செய்து கொண்டிருந்தால் இப்படியான விடயங்கள் வெளித்தோன்றாது. அபபடி மக்களுக்கான வேலைகளை செய்யாமல் இருந்தால் இது வெளியில் தெரியவரும். இவைகள் தான் கண்ணுக்கு பெரிதாகத் தெரியவரும். நாங்கள் நகராட்சியில் இருக்கும் போது செய்த பல விடயங்களை மக்கள் இன்னமும் நினைவில் கொண்டுள்ளார்கள். அதனால் தான் இவ்வளவு தொகைப் பணத்தை ஏசி போடவும் வாகனத்திற்கும் செலவு செய்த நீங்கள் மக்களுக்கு உருப்படியாக எதையும் செய்யவில்லை என்பதை மனவருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.

தேசம்:இந்த பிரச்சினைகளை விட வவுனியாவில் சிங்கள குடியேற்றங்கள் நடக்கிறதா? இவைபற்றி உங்களுக்கு ஏதாவது தெரியப்படுத்துவார்களா? அவற்றுடன் உங்களுக்கும் தொடர்புகள் உண்டா? அல்லது அரசு தனக்கு நினைத்தமாதிரியே சிங்கள பிரதேசத்தின் அபிவிருத்தி பற்றி நடத்துகிறார்களா?
லிங்கநாதன்: வவுனியா மாவட்டத்தை பொறுத்தவரையில் 4 பிரதேச செயலகங்கள் உள்ளது. இதில் மூன்று தமிழ்ப் பிரிவும் ஒரு சிங்களப் பிரிவுமாக உள்ளது இது நீண்டகாலமாக உள்ள விடயம். ஆனால் வன்னியில் மிகப்பெரிய பயங்கரமான விடயம் உருவாக இருப்பதாக எல்லா தரப்பிலும் சொல்லப்படுகிறது. நிரந்தர முகாம்களை அமைத்து அந்த படைவீரர்களுக்கு நிரந்தர வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இதில் எங்களுக்கு (புளொட்) உள்ள பிரச்சினைகள் என்ன என்றால் நகரசபையிலும் அதிகாரம் இல்லை, பாராளுமன்றத்திலும் அதிகாரம் இல்லை. ஆனபடியால் எங்களால் இந்த விடயங்களில் அடி எடுத்து வைக்கமுடியாமல் உள்ளது.

Linganathan_giving_speechஆனால் இன்று எல்லாவற்றிக்கும் முழு பொறுப்பானவர்கள் ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மந்திரிசபைக்கு கட்டுப்பட்டவர். இதைவிட நாங்கள் மீண்டும் எழுவோம் என்று தேர்தல் காலத்தில் பிரசுரங்கள், பனர்கள் மட்டும் போட்டுவிட்டு இன்று ஏனோ தானோ என்று இருக்கிறவர்கள் தான் மக்களின் பிரச்சினைகளை பார்க்க வேண்டும். முன்பு புலி இருக்கும்போது சொன்னார்கள் அபிவிருத்தி வேண்டாம். உரிமை வேணும் என்றார்கள். இன்று உரிமையும் இல்லை அபிவிருத்தியும் இல்லாத நிலையிலேயே தான் நாங்கள் தமிழ் மக்கள் இருக்கிறோம்.

தேசம்:இப்போதுள்ள அகதி முகாம்களின் நிலைப்பாடுகள் என்ன?
லிங்கநாதன்:அகதி முகாமில் 50லிருந்து 60ஆயிரம் மக்கள் வரையில் இருக்கிறார்கள். அதில் புதுக்குடியிருப்பு போன்ற சில இடங்கள் இன்னமும் அரசு முழுமையாக மக்களை போக விடவில்லை. காரணம் கண்ணி வெடி துப்பரவு பண்ணவில்லை என்று சொல்லுகிறார்கள். அதைவிட அங்கு உள்ள ஆயுதங்கள் வேறு என்ன நிலத்திக்கு கீழ் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்து முடியவில்லை என்றும் நான் தனிப்பட நினைக்கிறேன். இந்த காரணங்களால் இந்த மக்கள் முகாமில் தடைப்பட்டு இருக்கிறார்கள்.

11000 பேர் சரணடைந்தவர்கள். அதைவிட இன்னும் எத்தனையோ பேர் அகதி முகாமில் இருக்கிறார்கள். இவர்களிடம் டம் பண்ணிவைத்த பொருட்கள் எங்கே என்ன என்பது தெரிந்தவர்கள் இந்த நிலையில் ஆட்களை வெளியே விட்டால் தவறுகள் நடக்க சந்தர்ப்பங்கள் வரக்கூடும் என்பதுதான் அரசின் இராணுவத்தின் நினைப்பு என்று நான் கருதுகிறேன். இதில் நியாயம் இருக்கிறது. இவைகள் துப்பரவு செய்யப்பட்ட பின்பு மக்கள் எல்லோரும் மீள குடியேற்றப்படுவார்கள். அரசாங்கம் எல்லாரையும் திரும்பக் குடியேற்றும். அதை நம்பி இருக்கலாம்.

தேசம்: வவுனியாவில் உள்ள மற்றைய இயக்கங்கள் பற்றி என்ன சொல்ல முடியும். வவுனியாவில் சில  பிரச்சினைகள் கடத்தல்கள் நடப்பதாக அறிகிறோம். சிலர் தனிப்பட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்கள் என்றும் சிலர் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

Linganathan_in_Uma_Memorialலிங்கநாதன்: உங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும் 1977ம் ஆண்டிலிருந்து காந்தீயமாக உருவெடுத்து மக்களுக்கு உதவி செய்தும் காட்டுக்குள்ளே இருந்த இயக்கமாக, ஜனநாயக சக்தியாக இருந்தவர்கள் நாங்கள் – புளொட். எங்களுக்கு கடந்த தேர்தலில் வந்த பின்னடைவு எங்கட வேலைகளை தடைப் பண்ணியுள்ளது. ஏனைய கட்சிகளை பொறுத்த வரையில் பெரிதாக ஒண்டுமில்லை. ஆனால் இங்கே நடக்கிற கொலைகள், கொள்ளைகள் கடத்தல்களில் ஆரம்பத்தில் நடந்தவைகளுக்கு புலிகளுக்கு முக்கிய பொறுப்பு உண்டு. காட்டுக்குள் இருந்து வந்த புலிகளுக்கு ஒரு உதவியும் கிடைக்காமல் பல களவுகளில் ஈடுபட்டவர்கள் இதில் பலர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.

தேசம்: இலங்கை அரசின் உளவுப் படையினராக முன்னாள் இயக்க உறுப்பினர்களில் பலர் (முன்னாள் புலிகள் , முன்னாள் ரெலோ, முன்னாள் புளொட் இப்படி எல்லா இயக்கத்தவர்களும்) இருப்பதாக ஜரோப்பாவில் பரவலாக பேசப்படுகிறதே. இது எந்தளவு உண்மை. இவர்களில் பலர் தமக்கு நினைத்த மாதிரி பல வேலைகளை செய்துவிட்டு போய்விடுகிறார்கள் என்றும் பேசப்படுகிறதே?

லிங்கநாதன்:இங்கும் நீங்கள் சொல்வது போன்ற பல கதைகளை அறிகிறோம். எப்படி உண்மையை அறிவது. நான் புளொட் பற்றி சொல்லுவது என்றால், 2009 ஆகஸ்ட் 10ம் திகதியிலிருந்து இன்று வரையில் இயக்க ரீதியாக கொலையோ, யாரிடம் காசு வாங்கியதாகவோ அல்லது மக்கள் விரோதமான எந்த நடவடிக்கைகளுமே நடக்கவில்லை, திருணாவுக்குளத்தில் ஒரு பெண்பிள்ளை சம்பந்தமான சம்பவம் நடைபெற்றது. அதில் சம்பந்தப்பட்டவர் ஒன்றரை வருடத்துக்கு முன்பாகவே இயக்கத்திலிருந்து விலத்தப்பட்டவர். இதில் தவறு என்ன என்றால் இப்படிபட்டவர்களை நாம் இயக்கத்திலிருந்து விலக்கியுள்ளோம் என்பதை மக்களுக்கு தெரிவித்திருந்தால் இப்படியாக குற்றச்சாட்டுக்கள் எம்மீது வந்திருக்காது. அதைவிட வவுனியாவில் பிரதேசங்களில் உள்ள பொது மக்களிடம் எம்மைப் பற்றி விசாரித்து அறிந்து கொள்ளுங்கோ. அப்படி ஏதும் தவறுகள் இருந்தால் என்னிடமும் பேசுங்கோ நாங்கள் முடிந்தளவு எமது தரப்பு விளக்கத்தை தருவோம்.

தேசம்:வவனியாவில் தனிமனிதனுக்கு உள்ள சுதந்திரம் ஜனநாயக விரோதங்களை கண்டிக்கும் அதற்கு எதிராக குரல் கொடுக்கும் சுதந்திரம் இவை பற்றி?
லிங்கநாதன்:சுதந்திரம் இருகின்றது. லவ்பிரண்டுக்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம்! பகிரங்கமாக மதுபாவனை செய்ய சுதந்திரம் உள்ளது. சமூகத்தில் செய்யக்கூடிய கீழ்தரமான வேலைகள் செய்வதற்கு சுதந்திரம் உள்ளது. இவற்றை அரசும் ஆதரிக்கிறது. இது ஆயுத போராட்டத்தின் காரணங்களை மழுங்கடிக்கச் செய்யும் என்பதற்காக. மற்றப்படி ஜனநாயகம் என்பது இன்னமும் இங்கே இல்லை.

தேசம்: இன்று உள்ள நிலைமைகளில் தமிழர்களின் உரிமைப் போராட்டம் காரணமாக ஒரு கடையடைப்பு, ஒரு பகிரங்கக் கூட்டம், ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்த முடியுமா?
லிங்கநாதன்:இல்லை. அடுத்த நிமிடம் தனிப்பட அழுத்தங்கள் வரும் தடைகள் வரும்.

தேசம்:அல்லது கொல்லப்படுவீர்கள் என சொல்லுகிறீர்களா?
லிங்கநாதன்:கொலை என்பது இனிமேல் விடயங்களை மேலும் சிக்கலாக்கும். ஆகவே நடக்காது என்பதே எனது கருத்து. முன்பு புலிகளை சாட்டி எல்லோரும் கொலை செய்தார்கள். இனிமேல் அப்படி இல்லாமல் முயற்சி செய்து முடக்கவே முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

தேசம்:தற்போது நாடு கடந்த தமிழீழம் என்று புலம்பெயர் நாடுகளில் அமர்க்களமாக நடைபெறுகின்றது. அவைகள் பற்றி உங்கள் கருத்து என்ன?
லிங்கநாதன்: நாடுகடந்த தமிழீழத்தை பொறுத்தவரையில் ஊமை கண்ட கனவு கதை கேள்விப்பட்டுள்ளீர்களா? நாங்கள் இங்கே ஒருவேளை கஞ்சிக்கு வழியில்லாமல், நிம்மதியாக படுத்து எழும்ப முடியாமல் இருக்கிறோம். இவர்கள் இங்கே உள்ள மக்களின் கருத்துக்களோ, ஆதாரமோ இல்லாமல் அல்லது எமது மக்களின் வேதனை என்ன நிறம் என்றோ தெரியாமல் தாங்கள் தங்களுக்குள்ளே நாடகடந்த தமிழீழம் அது இது என்று என பித்தலாட்டங்கள். நாடு கடந்த தமிழீழம் நிலம் தொடாத வேர் என்று தேசம்நெற்றில் வெளிவந்த கட்டுரையையும் வாசித்துள்ளேன்

புலம்பெயர்ந்து உள்ளவர்களில் பலர் தமது சொந்த பணத்தில் ஒரு தொகையை வடக்கு கிழக்குக்கோ வவுனியாவுக்கோ என்று கொடுத்தால் எங்கட பிரதேசம் 2 வருடத்தில் மீண்டும் பழைய நிலைக்கு எங்கட மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திவிடலாம். இதுதான் இப்ப தேவையே தவிர நாடகடந்த தமிழீழம் என்ற பேய்க்காட்டல் அல்ல!

தேசம்: புலிகளின் சொத்துக்கள் பணங்கள் வெளிநாடுகளில் நிறையவே உள்ளது. இதில் பெரும்பான்மையானது தனிப்பட்டவர்களின் கைகளில் முடங்கியுள்ளது. இந்த பணங்களை திரும்ப வட கிழக்கு மக்களிடம் கையளித்தாலே மக்களின் வாழ்வு உயர்ந்து விடும். இந்த பணங்களைப் பற்றி யாருமே முக்கியமாக புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் இந்த பணங்கள் பற்றி பேசுகிறார்களே இல்லையே. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

லிங்கநாதன்: நீங்கள் சிலர் இதை ஞாபகப்படுத்தினாலும் அவங்களுக்கு தெரியும் மற்ற மக்கள் இது பற்றி பேசாமல் இருக்க வேண்டும் என்பதற்காக்ததான் நாடு கடந்த தமிழீழம். 1983ம் ஆண்டு பிறந்தே இருக்காதவரகள், எல்லாம் யூலைக் கலவரத்திற்கு ஒரு வைபவம், வட்டுக்கோட்டை எங்க இருக்கு என்று தெரியாதவர்கள் வட்டுக்கோட்டை தீர்மானம், இப்படியாக சீசன் விழாக்கள் நடாத்துகிறார்கள். புலி இல்லாவிட்டாலும் நாங்கள் பிழைப்பு நடத்திக்கொள்ளுவோம் என்ற பிழைப்பு நடக்கிறது.

இவர்கள் மனச்சாட்சிப்படி சொல்ல முடியாதவர்கள்.  நாங்கள் எவ்வளவு துன்பப்பட்டுள்ளோம், எந்த அளவு சிக்கலில் மாட்டியுள்ளோம், எவ்வளவு ஆபத்துக்களுக்கு மத்தியில் இருக்கிறோம். இது இங்கே இருக்கிற இலங்கை அரசு எங்களை இந்த நாட்டில் மேலும் அழுத்தத்தை பிரயோகிக்கவே சந்தர்ப்பத்தை கொடுக்கிறது என்பதே உண்மை. இதை உங்கே புலம்பெயர்ந்து இருக்கின்ற மக்களுக்கு தெரியப்படுத்துங்கோ.

தேசம்: கடந்த காலங்களில் வன்னியில் இருந்த அரசு சாரா நிறுவனங்கள் பற்றி?
லிங்கநாதன்: இவர்கள் காசு இருந்தால் ஏதோ செய்வார்கள். இல்லாவிட்டால் இல்லை. இவர்களின் கடந்த 5 வருட வரவு செலவுகளைப் பார்த்தால் பல மில்லியன்கள் செலவு செய்யப்பட்டடிருக்கும். என்ன செய்யப்பட்டுள்ளது என்றால் எதுவுமே சொல்வற்கில்லை. இவர்களின் பணத்தில் பெரும்பகுதி புலிகளின் பிரதேசங்களில் புலிகளின் ஊடாகவே செலவு செய்யப்பட்டது. இதில் உதவிகள் யாருக்கு போயிருக்கும் என்பது தெரிந்தது தானே. இவைபற்றி அரசுக்கு இப்போ நன்றாக தெரியும். இதனால்தான் அரசு இப்போ பாதுகாப்பு அமைச்சின் அனுமதியில்லாமல் எந்த அரசு சாரா நிறுவனங்களையும் அனுமதிப்பதில்லை. இந்த விடயத்தில் அரசை நாம் எதிர்க்க முடியாது. காரணம் இவங்களில் பலர் எங்களை சாட்டி தாம் காசு கொள்ளையடித்து விட்டார்கள். புலி இவங்களை வைத்து தனது அலுவல்களை பாவித்து விட்டார்கள். உதாரணத்திற்கு பல பாரிய ஆயுதங்கள், தொலைத்தொடர்பு உபகரணங்கள். நோர்வே தான் புலிகளுக்கு வாங்கிக் கொடுத்தார்கள். ஆகவே இந்த அரசு சாரா நிறுவனங்களை நம்ப முடியாத நிலையே இருந்தது. இன்றும் இருக்கிறது.

தேசம்:இன்று வவுனியாவில் உள்ள வுவனியா அடையாளங்கள் பற்றி சொல்லுங்கள்
லிங்கநாதன்: ஒருமுறை நான் வவுனியா மேயராக இருக்கும்போது தொலைக்காட்சியில் வவுனியா என்று காட்டும்போது கொப்பேக்கடுவாவின் சிலைகளையே காட்டுகிறார்கள். நாம் அடுத்த நகரசபைக் கூட்டத்தில் முடிவு எடுத்து தமிழ் தலைவர்கள் முக்கிய தமிழ் அறிஞர்களின் சிலைகளை உடனடியாக அவசர வசரமாக நிறுவினோம்.பலர் என்னிடம் தோழர் உமா மகேஸ்வரனுக்கு சிலை வைக்கும்படி கேட்டார்கள். நான் உடன்படவில்லை. நாளைக்கு புலி, ரெலோ இதை உடைத்து அவமானப்படுத்தும். வேண்டாம் என்று சொல்லியிருந்தேன். ஆனால் தமிழ் தலைவர்கள் அறிஞர்களின் சிலைகளை யாரும் உடைக்க மாட்டார்கள். உடைத்தாலும் திரும்பக் கட்டிக்கொள்ளலாம்.

தேசம்:எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அரசியல் உரிமை பற்றி உங்கள் கருத்து என்ன?
லிங்கநாதன்: நாங்கள் மாட்டுப்பட்டுப் போனோம். காரணம் எமக்கு பலம் இருக்கு என்று திரும்ப திரும்ப காட்டி எங்களை அவர்களால் பின்னடைவை ஏற்படுத்தக் கூடிய சந்தர்ப்பத்தை நாங்களே கொடுத்துவிட்டோம். இதில் புலிகளை மட்டும் சொல்ல முடியாது. இதில் புலிகள் விகிதாசாரத்தின்படி கூடவாக இருக்கலாம் அனைத்து ஜனநாயக அமைப்புக்கள், ஆயுதக் குழுக்கள் எல்லோருமே இதற்கு பொறுப்பு. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லுகின்ற அத்தனை பேருக்கும் பொறுப்புண்டு.

கடந்த காலங்களில் தமிழர்களை உடைத்துவிட பல முயற்ச்சிகளில் வெற்றி பெற்ற அரசு, பின்னர் வடக்கையும் கிழக்கையும் உடைத்தது, இப்போ வடக்கில் வன்னியை உடைக்கிறார்கள். காரணம் நாம் தொடர்ச்சியான நிலப்பரப்பை வைத்திருந்தால்தானே ஒரு கோசத்தை வைக்கலாம். ஆகவே இனப்பரம்பலை உருவாக்கி தமிழர் பரம்பலை பலவீனப்படுத்தி நான் கேள்விப்படும் விடயங்களை பார்த்தால் இனிமேல் (தமிழ்) ஈழம் என்ற அடையாளத்தை இல்லாமல் பண்ணவே முயற்சிக்கிறார்கள். இதற்கு ரிஎன்ஏ யும் தெரிந்தோ தெரியாமலோ உதவி செய்கிறது. என்ன வென்றால் இவர்களின் வீர வசனம் பத்திரகைகளில் கத்துவார்கள் இரவு போய் அரசாங்கத்திடம் தங்கட அலுவல்கள் கேட்பார்கள் என்று எல்லோருக்கும் தெரியும், ரிஎன்ஏ மக்களை பேய்க்காட்டுகின்றது என்பது, ரிஎன்ஏ தலைமை அரசுக்கு தான் நினைத்ததை செய்ய வசதியான தலைமையே.

தேசம்:இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் விடயத்தில் இலங்கை அரசு செயற்படுமா? இல்லையா?
லிங்கநாதன்:மகிந்தாவும் சிங்கள தேசியத்தின் உணர்வு பூர்வமானவர். சிங்கள தேசியவாதி. தமிழர்க்கு தமிழீழம் தேசியவாதமாக உள்ளதோ அதேபோல சிங்கள மக்களுக்கும், மகிந்தாவின் கட்சிக்கும். அன்று வட கிழக்கு இணைப்பை உடைக்க கோட்டுக்கு ஜேவிபி போனபோது பலம்பொருந்திய புலிகள் அமைப்பு, ரிஎன்ஏ எம்பிக்கள் 22 பேர், அமைச்சர் டக்ளஸ் இப்படி பலர் இருந்தும் இதை தடுக்க முடியவில்லை. குறைந்தது ஒரு இடைக்காலத் தடையை எடுத்திருக்கலாம். இது இவர்களின் பலவீனமே. அதை இப்ப இருக்கிற ஜனாதிபதி அதை நிரந்தரமாக தேர்தலை கிழக்குக்கு வைத்து கிழக்கை உடைத்து விட்டார். அரச 13வது திருத்தச்சட்டமூலம் தான் தீர்வு, அதுதான் இலங்கை-இந்திய ஒப்பந்தம், இது தான் தீர்வு வேறு இல்லை என்றே சொல்லுவார் என நான் கருதுகிறேன். இதற்க்கு மேல் மகிந்தா தரும் என்று நம்பினால் நாங்கள் தான் முட்டாள்கள்.

தேசம்: தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையேயான குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டுவதற்காக ஒரு உடன்படிக்கை ஒன்று லண்டனில் தயார் செய்யப்பட்டு உள்ளது. இது குறிப்பாக தமிழ் கட்சிகள் அமைப்புகளிடையே உடன்பாடு எட்டப்படுவது அவசியமானது என்பதனை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ளது. ஆவணி 02 புரிந்துணர்வுக்குழு (லண்டன்) என்ற குழுவாக இம்முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறான ஒரு முயற்சி பற்றிய உங்களுடைய அபிப்பிராயம் என்ன?

லிங்கநாதன்:எனது மனப்பூர்வமான பாராட்டுக்களும் ஒத்துழைப்புக்களும் கிடைக்கும். நிச்சயமாக புளொட் உதவி செய்யும். நான் உதவி செய்வேன்.

இப்போது இங்கே தமிழ் அரங்கம் என்ற முயற்சி நடைபெறுகிறது. இது மாகாண தேர்தலை நோக்கிய நகர்வா அல்லது உண்மையான நகர்வா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எம்முடைய எல்லா ஒத்துழைப்புக்களும் உங்களுடைய புரிந்துணர்வுக் குழுவிற்குக் கிடைக்கும்.

புலிகள் இரண்டு விடயங்களில் திடமாக இருந்துள்ளனர். ஒன்று கொலைக் கலாச்சாரத்தை பரப்பியது. இரண்டாவது தான் எடுத்தது தான் முடிவு என்பது. இந்தியாவைக் கும்பம் வைத்து வரவேற்று பின்னர் அடித்தது. பிரேமதாஸாவுடன் கூடி எஸ்டிஎப் உடன் சேர்ந்து மாற்று இயக்கத்தவர்களை கொலை செய்தது. பின்னர் பிரேமதாஸாவையே கொலை செய்தது. மற்றையது எவன் தனது நட்போ அவன் தியாகி. எவன் தனக்கு எதிர்ப்போ அவன் துரோகி. இதை இந்த உலகத்தில் வேறு யாராலும் செய்ய முடியவில்லையே.

தேசம்: புலம்பெயர் தமிழர்க்கு, இளம் சந்ததியினருக்கு, புலிகளுக்கு, புலிகளின் ஆதவாளர்க்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
Linganathan_visit_to_an_Exhibitionலிங்கநாதன்: புலிகளுக்கு கடந்த 30 வருடமாக எத்தனை விடயங்களை சொன்னாச்சு. அவர்களுக்கு சொல்லியும் பிரயோசனம் இல்லை. இனிமேலும் பிரயோசனம் வராது. அவர்கள் தங்கட பிழைப்பை பார்த்துக் கொள்கிறார்கள் அதைவிட்டுவிடுவோம்.

நான் தமிழ்பேசும் மக்களுக்கு சொல்வது எல்லாம், வன்னியில் மக்கள் இன்ரர்நெற் மொபைல் தவிர மற்ற எல்லாவற்றுடனும் வாழ்ந்தவர்கள். இன்று வீடுகட்டுவதற்க்கு அவர்களுக்கு கொடுத்த 4 தகரங்கள் 5 பலகை என்றதுடன் நிற்பவர்களுக்கு, உங்கள் உறவுகளுக்கு, சொந்தங்களுக்கு அவர்கள் அந்த வீட்டை கட்டிக்கொள்ள, இந்த வருடம் இந்த போகத்தை அவர்கள் வெற்றிகரமாக அறுவடை செய்ய உதவி செய்யுங்கோ. அந்த ஒரு உதவி அவர்களை தலை நிமிரவைக்கும். இதுதான் எங்களுடைய மக்களுக்கு இன்றுள்ள தேவை. தலைக்குமேலே கூரை இல்லை. சாப்பிட சாப்பாடு இல்லை. நிம்மதியாக படுக்க பாய் இல்லை. இப்ப அரசியல் உரிமை பற்றி பேச யார் முன்வருவார்கள். முதலில் இரத்தம் உறவு என்று சொல்லுபவர்கள் இந்த மக்கள் இந்த போகச் செய்கையை செய்ய உதவ முன்வாருங்கள். மீதி எல்லாம் அவர்கள் தாமாகவே எழுந்துவிடுவர்.

உங்கள் சகோதரங்கள் உறவினர்கள் சுற்றத்தார், தெரிந்தவர்கள் இப்படி ஒரு பட்டியலைப் போட்டு யாருக்கு உதவி தேவை என்று செய்யுங்கள் இதுவே போதும். இதைவிட உதவி செய்ய விரும்புபவர்கள் எத்தனையோ உதவி செய்யும் அமைப்புக்கள் உண்டு. அதற்கு ஊடாக உதவுங்கள்.

நன்றி ஜி ரீ லிங்கநாதன்-JP

நோர்வேயில் சிவசுப்பிரமணியர் ஆலயத் தேர்த் திருவிழாவில் நடந்தது என்ன? : ரி சோதிலிங்கம்

Sivaganesh_Vadiveluநோர்வேயின் ஒஸ்லோவில் அமைந்திருக்கம் அம்மரூட் சிவசுப்பிரமணியர் ஆலயத்தின் தேர்த்திருவிழா பிரசித்தமானதோ இல்லையோ அங்கு நடந்த அடிபாடு வேண்டிய அளவு பிரசித்தம் பெற்றுள்ளது. இவ்வாலயத்தில் அடிக்கடி அடிபாடுகள் சகஜமாகி வருகிறது, இது ஆலயத்தின் பொதுச்சபைக் கூட்டங்களிலும் சர்வ சாதாரணமான ஒன்றாகி விட்டது என்கிறார் இவ்வாலயத்தின் அடியார் ஒருவர். 8.8.2010 ஞாயிறு தேர் வீதிவலம் வரும்போது அங்கு பலத்த சலசலப்பும் சண்டையும் நிகழ்ந்தது. அதுவே நோர்வேயையும் தாண்டி தற்போது பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

அன்பே சிவம் என்று போதிக்கும் சைவ சமயத்தவரின் திருவிழாவில் தொண்டர்கள் கையிலே ஏன் கிரிக்கட் பட், விக்கற்றுக்களும், பொல்லுக் கட்டைகளும் என்று மற்றுமொரு அடியார் தேசம்நெற் இடம் முறைப்பட்டார். ஒழுங்கு விதிகளை உறுதிப்படுத்தவும் அன்பைப் போதிக்கவும் ஆலயம் எதற்காக கராட்டி சிவா என அறியப்பட்ட சிவகணேஸ் வடிவேலுவை நியமித்தது என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
 
சம்பவம் பற்றித் தெரியவருவதாவது; வெள்ளை நிற கார் ஒன்றில் குடும்பமாக வந்தவர்கள் தமது காரை வீதியோரமாக கார் நிறுத்துவதற்கான இடத்தில் நிறுத்த முற்பட்டனர். ஆனால் அங்கு கடமையில் இருந்த தொண்டர்கள் காரை அவ்விடத்தில் தரித்து நிறுத்த அனுமதிக்க மறுத்தனர். இதன் விளைவாக எழுந்த தர்க்கம் கைகலப்பிலும் விக்கற், பொல்லுக் கட்டைகளுடனான மோதலிலும் முடிவடைந்தது.

தொண்டர்களாக கடமையில் அமர்த்தப்பட்டவர்கள் ஏற்கனவே தயார் நிலையில் இருந்தவர்கள் போல் தம்முடன் வைத்திருந்த கிரிக்கெட் பட், விக்கெட்டுகளோடு காரில் வந்தவரைத் தாக்கியுள்ளனர்.

தேர்த் திருவிழாவிற்கு மனைவி, பிள்ளைகள் மற்றும் சகோதரர் ஒருவருடனும் குடும்பமாக வந்த அசோக் என்பவரே தொண்டர்களால் தாக்கப்பட்டு உள்ளார். காரில் வந்த அசோக் மற்றும் அவருடைய சகோதரனும் பதில் தாக்குதலில் ஈடுபட்டும் உள்ளனர்.

என்ன நடந்தது என்பதை விபரிப்பதிலும் பார்க்க காட்சிகளை கீழேயுள்ள இணைப்பில் காணலாம். இது நோர்வே ஊடகங்களில் வெளிவந்த ஒளிப்பதிவு.
http://www.vg.no/nyheter/innenriks/artikkel.php?artid=10026130
 
திருவிழாவின் போக்குவரத்து மற்றும் ஒழுங்குகளைக் கவனிக்க கோவில் நிர்வாகத்தினால் நியமிக்கப்படவர் கராட்டி சிவா என்ற சிவகணேஸ் வடிவேலு என்பவராகும். இவர் தமிழர் அவை (Norwegian Council of Eelam tamil) அங்கத்தவர். அண்மையில் தமிழர் அவைத் தேர்தலில் போட்டியிட்டவர். சிவகணேஸ் வடிவேலு கோவிலின் திருவிழா ஒழுங்குகளை கவனிக்கும் பொறுப்பை ஏற்கும்போதே அடிதடிக்கு தேவையான ஆயதங்களைத் தயார் நிலையில் வைத்திருந்ததாக எமக்குக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஆனால் காரில் அசோக் என்பவரும் சாதாரணமானவர் அல்ல என்றும் வாய்ச் சண்டையாக இருக்கும் போதே அவர், தான் பயன்படுத்தும் சிறுகத்தியால் காவல் பொறுப்பை ஏற்ற சிவகணேஸ் வடிவேலுவின் தலையில் கீறியதாகவும் சிவகணேஸ் வடிவேலுவின் பொறுப்பில் இருந்த தொண்டர்கள் தெரிவிக்கின்றனர். இதனைத் தொடர்ந்தே இந்த அடிபாடுகள் ஆரம்பித்தது என அவர்கள் பக்கச் செய்தி தெரிவிக்கின்றது.

இந்த அடிபாட்டில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அறியவருகிறது.
 
கோயிலில் ஒழுங்கு கடமைகளுக்கு என அமர்த்தப்பட்ட தொண்டர்கள் சமயோசித புத்தியுள்ளவர்களாக, மற்றவர்களின் மனம் நோகாது கையாளுபவர்களாக தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கோவில் அதற்கு முற்றிலும் மாறாக காராட்டி பயிற்சி பெற்ற ஒருவரை அரசியல் பின்னணியுடைய ஒருவரை இப்பணிக்கு பொறுப்பாக நியமித்து, சர்வ சாதாரணமான விடயமொன்றை ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டிய வன்முறைக் கலகமாக மாற வழிவகுத்துள்ளது.

மேலும் இத்தேர்த் திருவிழாவிற்கு முதல்நாள் இடம்பெற்ற அன்னதான நிகழ்விலும் நோர்வே அரசின் உணவுக் கட்டுப்பாட்டு அலுவலர்கள், ஆலயம் உணவு சமைப்பது மற்றும் அதனை கையாளவது பரிமாறுவது தொடர்பில் சரியான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி அங்கு உணவு சமைத்து மக்களுக்கு பரிமாற வேண்டாம் என்று அறிவுறுத்திச் சென்றனர். ஆனால் அதனையும் மீறி அன்னதானம் பரிமாறப்பட்டது.

வன்னியில் மக்கள் ஒருவேளை உணவுக்கே மிகுந்த கஸ்டத்தை எதிர் நோக்கியுள்ள நிலையில், இலங்கையின் வடக்கு கிழக்கில் ஒருவேளை உணவுக்கு எவ்வளவோ கஸ்டங்களை சந்திக்கும் போது நோர்வேயில் அன்னதானம் கொடுக்கும் உபயகாரர்கள் தங்கள் பெயருக்காகவே இதனைச் செய்கிறார்கள் என்றும் அபிப்பிராயம் தெரிவித்தார்கள்.
 
சிவகணேஸ் வடிவேலு வன்முறைகளுடன் நெருக்கமானவர். இவரது கோஸ்டியைச் சேர்ந்த ஒருவர் சில வருடங்களுக்கு முன்னர் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்ட அதிர்ச்சி தரும் சம்பவத்தின் ஆரம்பமே இந்தக் கோவில்தான். இன்று இவர்கள் மீண்டும் வன்முறைகளில் இறங்கியுள்ளனர்.

மக்கள் அவையின் உறுப்பனர்களாக அறியப்பட்ட சிவகணேஸ் வடிவேலு போன்றவர்கள் இன்னமும் கோவிலில் பொது இடங்களில் மக்கள் கூடும் இடங்களில் உள்ள மிகச்சிறிய நடைமுறைகளையே பண்பாக நடத்தத் தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள்.
 
தனிநாடு பெற்ற பின்னர் பணம் தருவோம் என்று கூறிப் பணம் பெற்றவர்களும், இந்த கோவில் நிர்வாகத்தினரும் தேர்திருவிழா உபயகாரர்களும் ஊரை அடித்து உலையில் போட்டு கணக்கு விட்டு கணக்குக் காட்டிக் கொண்டு திரிகிறார்கள், என்று கடன் கொடுத்தவர்கள் கோவிலில் வந்து சாமியின் முன்னால் குமுறி அழும்குரலைக் கேட்டதாக ஒரு அடியார் என்னிடம் தெரிவித்தார்.

இந்த குறிப்பிட்ட வன்முறை எழுந்தமானமாக விபத்தாக நடந்த விடயம் அல்ல என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வதற்கான சூழல் இன்னமும் இந்த ஆலயத்தில் உள்ளது. சிவசுப்பிரமணியர் ஆலயம், மக்கள் அவை போன்ற அமைப்புகள் இவ்வாறான அடிபாடுகள் நிகழாமல் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த அடிபாடு அரசியல் சம்பந்தப்பட்டது என பிபிசி சந்தேசயா செய்தி வெளியிட்டு இருந்தது. சிவகணேஸ் வடிவேலு தமிழீழ விடுதலைப் புலிகளின் நெடியவனைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் மக்கள் அவை உறுப்பினர் என அச்செய்தி சுட்டிக்காட்டி இருந்தது. இவ்வடிபாட்டில் சம்பந்தப்பட்ட மறு தரப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் நெடியவன் பிரிவுக்கு எதிரானவர்கள் எனச் செய்தி தெரிவித்து இருந்தது. தமிழ்நெற் இச்செய்தியை மறுத்து அச்சம்பவம் முற்றிலும் தனிப்பட்ட ஒரு ஒழுங்குப் பிரச்சினையில் ஏற்பட்ட தகராறு எனச் சுட்டிக்காட்டி இருந்தது. நோர்வே மக்கள் அவை உறுப்பினரான சிவகணேஸ் வடிவேலு காயப்பட்டதை வைத்துக் கொண்டு சந்தேசயா செய்தியைத் திரிபுபடுத்தியதாக தமிழ்நெற் தனது செய்திக் கட்டுரையை வெளியிட்டு இருந்தது.

யூலை ’83 முதல் கருகிய கால்நூற்றாண்டு : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன்

Black July 19831983 யூலை இலங்கைத் தமிழ் மக்களின் வரலாற்றில் மிக முக்கியமானதொரு காலகட்டம். இன்றைய முள்ளிவாய்க்காலுக்கு ஒப்பான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலகட்டம். யூலை 23 1983ல் ஸ்தாபன வடிவம் பெற்ற இந்த வன்முறை அரசியல் மே 18 2009 வரை கால்நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி பாரிய அழிவை ஏற்படுத்தியது. இந்த வகையில் கருப்பு யூலை என்ற குறியீடு 1983 முதல் அடுத்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் மக்களது வாழ்வினை இருட்டில் கருமையிலேயே விட்டிருந்தது. இந்த மிகக் கொடிய கால்நூற்றாண்டு வரலாற்றிற்கு நாம் இன்றும் சாட்சியாக வாழந்து கொண்டுள்ளோம்.

இலங்கையின் இரத்தம் தோய்ந்த கால்நூற்றாண்டு வரலாற்றை இன்று திரும்பிப் பார்க்கும் போது, அண்மையில் காலமான தமிழ் – சிங்கள மக்களிடையே உறவுப்பாலமாக இருந்த தோழர் உபாலி குரே அவர்களின் சிந்தனையூடாகப் பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும் என் நினைக்கின்றோம். அவர் தனது மரணத்திற்கு சில வாரங்களுக்கு முன்பாக தனது பெறாமகன் முறையான உறவுக்கார இளைஞனுக்கு எழுதிய மடலில் இருந்து …..

Upaly Cooray‘‘ அன்புள்ள பெரிய மருமகனுக்கு!

உன்னுடைய பெயரை இங்கு தவிர்த்திருக்கிறேன். ஏனெனில் இந்தக் கடிதத்தின் நோக்கம் உன்னைத் தொல்லைப் படுத்துவதோ அன்றி உன்னைச் சிறுமைப்படுத்துவதோ அல்ல. உன்னுடைய FACEBOOK இல் வெளியாகியிருந்த வீறாப்பும் வெற்றிக் களிப்பும் கொண்ட அபிப்பிராயங்கள் எனது கவனத்தை ஈர்த்தன. அவற்றை மீளவும் நான் இங்கு சொல்ல எண்ணவில்லை. ஆனால், விடுதலைப் புலிகள் மீதான இராணுவரீதியான வெற்றியைத் தொடருகின்ற ஆதிக்க வாதக் காய்ச்சலினால் நீயும் பீடிக்கப்பட்டிருக்கிறாய் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. கடந்த சில மாதங்களாக இலங்கையில் நடந்த நிகழ்வுகள் பற்றி, உன்னைப் போன்ற கல்வியும் அறிவும் கொண்ட ஒரு இளைஞனிடம் இருந்து இதைவிட ஒரு விமர்சனப் பாங்கான பகுப்பாய்வை நான் எதிர்பார்த்திருந்திருக்க வேண்டும்.

உங்களுடைய வெற்றிக் களிப்பு, தமிழ் மக்களில் ஒரு பகுதியினரின் ஆயுதக் கிளர்ச்சிக்கு வித்திட்ட ஆழமான பிரச்சினைகளை எண்ணிப் பார்க்கத் தவறுகிறது. 1977இன் தமிழருக்கெதிரான இனக் கலவரம், 1981இல் மிகவும் பெறுமதி வாய்ந்த யாழ் பொதுநூல்நிலைய எரிப்பு, இவைகளைச் சரித்திரத்தில் இருந்து இது அழித்துவிட முடியாது. 1983இல் அரசினால் ஏவிவிடப்பட்ட இனக்கலவரத்தின் போது நாடு பூராவிலும் இருந்த தமிழர்கள் மீது பரந்தளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அப்போது பல தமிழ் செயற்பாட்டாளர்கள் காணாமல் போனார்கள். பலர் கிரமமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டார்கள். இவைகள் எல்லாம் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்டவை…..’’
சிங்கள சமூகத்தைச் சேர்ந்த, தனது மரணம் வரை இன உறவுகளைக் கட்டியெழுப்ப முயன்ற ஒரு சிந்தனையாளனின் வாக்குமூலம் இது.

1983 யூலை இனக்கலவரம் இனப்படுகொலையின் உச்சமாக அமைந்தது, இந்த இனக்கலவரங்களின் பின்னால் அப்போது ஆட்சியில் இருந்த ஜே ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் கரங்கள் இருந்தமை ஆதாரங்களுடன் வெளிவந்திருந்தது. தங்களுடைய இனவாத நடவடிக்கைகளை பெரும்பான்மை மக்களிடம் வாக்குகளைப் பெறுவதற்கும், அதன்மூலம் ஆட்சி அதிகாரத்தை தமதாக்கிக் கொண்டு தங்கள் குறுகிய நலன்களை பூர்த்தி கொள்வதற்குமாகும்.

எழுபதுகளின் பிற்பகுதியில் உருவான தமிழ் எழுச்சியையும் அரசுக்கெதிரான தமிழ் மக்களின் போக்கையும் கட்டுப்டுத்த சந்தர்ப்பம் பார்த்திருந்த அரசு கிடைத்த சந்தர்ப்பத்தினை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது. தமிழ் மக்கள் மீது யுத்தப் பிரகடனம் செய்யும் அறிக்கைகளையும் இனவாத பேச்சுக்களையும் பேசி, தமிழ் மக்களின் மீதான 1958க்களில் நடைபெற்ற கலவரங்களை போன்றதொரு கலவரத்தை நினைத்து ஏங்கியவர்களுக்கு 1983 யூலை 23 சம்பவம் வாய்ப்பாக அமைந்தது. அன்று யாழ்ப்பாணம் திருநல்வேலிச் சந்தியில் வெடிக்க வைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடி 13 இராணுவத்தினரைப் பலியெடுத்தது. தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த சந்தர்ப்பம் பார்த்து இருந்த ஜே ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு தமிழர் மீது கலவரத்தை கட்டவிழ்த்துவிட்டது. இதே ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் தலைவருமான ஜே ஆர் ஜெயவர்த்தனாவே 1958, 1977 இனக்கலவரங்களுக்கும் முக்கிய காரணகர்த்தாவாக இருந்துள்ளார்.

J R Jeyavarthaneதமிழ் மக்களுக்கு எதிரான இனக் கலவரங்களில் முன்னின்ற ஐக்கிய தேசியக் கட்சியுடனும் அதன் தலைவர் ஜே ஆர் ஜெயவர்த்தனே உடனும் தமிழரசுக் கட்சியும் அதன் பின் தமிழர் விடுதலைக் கூட்டணியும் எப்போதும் நெருக்கமான உறவுகளைப் பேணி வந்தனர். இலங்கையில் இடம்பெற்ற தேர்தல் கூட்டுக்களில் தமிழ் அரசியல் தலைமைகளான தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி இத்தனை இனக்கலவரங்களின் பின்னும் பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே கூட்டினை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

1983 இனக்கலவரம் பிராந்திய வல்லரசான இந்தியா இலங்கை மீது தலையீடு செய்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது. பனிப்போரின் உச்சமாக இருந்த அக்காலப்பகுதியில் உலக நாடுகள் இரு அணிகளாக பிரிந்து நின்றன. இந்தியா அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடித்த போதும் அமெரிக்க வல்லாதிக்கத்திற்கு எதிரான நிலையைக் கொண்டிருந்தது. ஆனால் ஜே ஆர் ஜெயவர்த்தனே தலைமையிலான இலங்கை அரசு அமெரிக்க சார்பு நிலையைக் கொண்டிருந்தது.

இந்தியாவின் பிராந்திய நலன்களும் இந்தியாவின் தேவைகளும் இலங்கை அரசிற்குகெதிராக இந்த இனக்கலவரத்தை இந்தியா பயன்படுத்த முற்பட்டது. இதன் விளைவு இலங்கையில் தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டம் இந்தியாவின் ஆசீர்வாதத்துடன் ஆயுத வடிவம்பெற்று மக்கள் சக்தியிலும் ஆயுதங்களின் சக்தியே மகத்தானது என தமிழ் விடுதலை இயக்கங்கள் தமிழ் மக்களைக் கைவிட்டு இந்தியா வழங்கிய ஆயுதங்களை இறுகப் பற்றிக் கொண்டனர். உரிமைப் போராட்டம் பயங்கரவாதப் போராட்டமாக ஆனது.

இந்த போராட்டத்தின் ஆரம்பத்தில் பல சமூக முன்னணியாளர்களும் சமூகநலவாதிகளும் ‘மக்கள் அரசியல் மயப்படுத்தப்படாத போராட்டம் – அரசியல் முன்னிலைப்படுத்தப்படாத போராட்டம் – மக்களின் பங்கு பற்றல் இல்லாத போராட்டம் – தோல்வியிலேயே முடியும்’ என்பதை அறைந்து சொன்ன போது ஆயுதங்கள் மீதான போதை அவர்களது மதியை மயக்கச் செய்தது. இறுதியில் ஆயுதங்கள் மீது காதல் கொண்ட சந்தர்ப்பவாத சக்திகளின் தலைமையில் இந்தப் போராட்டம் நடாத்தப்பட்டு தோல்வியுற்றது.

அரசியல் மயப்படுத்தப்டாத இப்போராட்டம் இலகுவில் வல்லரசுகளின் கைப்பொம்மையாகி அல்லது வல்லரசுகளின் வல்லாதிக்கத்திற்குட்பட்டு இலகுவில் தோல்வியை அடையும் என்பதை அன்றே சுட்டிக்காட்டிய அரசியல் சிந்தனையாளர்கள் இன்று அதன் முடிவையும் தாங்கள் வாழ்நாளிற்குள்ளாகவே கண்டும் உள்ளனர். இந்தச் சிந்தனைகள், அறிவுறுத்தல்கள் இவை எல்லாவற்றையும் மீறி ஆயுதங்களை மட்டுமே நம்பி இந்தப் போராட்டத்தை நடாத்தி இன்று அந்த போராட்டம் ஆரம்பித்த இடத்தில் இருந்து பின்னோக்கி வெகுதொலைவிற்கு மக்களைக் கொண்டு சென்றுள்ளது.

இன்றும் இந்த கடந்த காலம் பற்றிய மதிப்பீடோ அல்லது விமர்சனமோ இல்லாமலேயே அடுத்த நகர்வுக்குத் தயாராகின்றனர். எமது கடந்த காலத்தை மதிப்பீடு செய்து தமிழர்களின் அடுத்த கட்ட நகர்வு பற்றிய எவ்வித விவாதமும் இன்றி ஓடுகிற பஸ்ஸில் ஏற முற்படுகின்றனர். அவ்வாறு செய்யாதவர்களுக்கு துரோகிப் பட்டம். கடந்த போராட்டத்தின் தப்பான பண்புகள் இன்னும் தொடர்வதையே இது காட்டுகின்றது. இராணுவ சாகசங்களையே போராட்டம் என்று அடுத்த சந்ததிகளுக்கு படிப்பித்தும் ஆயிற்று. இதிலிருந்து வெளிவருவதும் மக்கள் அறிவூட்டப்படுதலும் மிகவும் சிக்கலான நிலையாகியும் விட்டது, இந்த சிக்கலிலிருந்து வெளியேற எமது கடந்த போராட்டத்தையும் நமது போராட்டவாதிகளின் போக்குகளையும் முழுமையாக மீள்மதிப்பீடு செய்தாக வேண்டிய அவசியமான காலகட்டம் இது.

Black July 1983இந்த 1983 யூலைக் கலவரத்தின் பின்னரும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த இலங்கையின் இனவாத அரசுகள் தங்களது இனவாதப் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. அல்லது இனவாத அரச இயந்திரம் மாற்றங்களை அனுமதிக்கவில்லை. இனவாத நடவடிக்கைகள் யுத்தத்தின் பின்னணியில் மிகவும் துரிதமாக இடம்பெற்றது. இந்த இனவாத நடவடிக்கைகளை தமிழ் மக்கள் ஸ்தாபனமயப்பட்டு கண்டிக்கவோ அதற்கு எதிராக செயற்ப்படவோ முடியாதபடி தமிழ் மக்களை வலிந்து பிரதிநிதித்துவப்படுத்திய தமிழீழ விடுதலைப் புலிகள் தடைசெய்தனர். இன்னோர் வகையில் இந்த இனவாதத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் நெய்யூற்றி வளர்த்தும் விட்டனர்.

இனமுரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தி சிங்கள பேரினவாதக் கட்சிகள் எவ்வாறு குறுகிய அரசியல் லாபம் பெற்றனரோ அவ்வாறே தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி அவர்களின் தொடர்ச்சியான தமிழீழ விடுதலைப் புலிகளும் இனவாதத்தைக் கூர்மைப்படுத்தி தங்கள் குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டனர்.

இந்த இனக்கலவரத்தை தூண்டிய காரணங்களில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் அன்று ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியும் இலங்கை அரசும் அதற்கான முழுமையான பொறுப்புகளைக் கொண்டுள்ளது. தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பொலீசாரும் இராணுவத்தினரும் சிங்களக் காடையர்கள் இனவாதிகளுடன் சேர்ந்து தாமும் இணைந்தே இந்த 1983ம் ஆண்டு இனக்கலவரத்தை நடாத்தி தமிழ் மக்களை கொன்று குவித்தனர், இந்த ஈனச்செயலுக்கு பொறுப்பான பலர் இன்றும் பல முக்கிய அரச பொறுப்புக்களில் உள்ளனர். இவர்கள் மீது எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை,

அதேசமயம் இந்த 1983 யூலை கலவரத்திற்கு சற்று முன்னான தமிழ் ஆயுத அமைப்புகளின் நகர்வுகள் இங்கு பதிவு செய்யப்படுவது அவசியம். யூலை 23 1983 திருநெல்வேலிச் சந்தியில் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலின் பின்னால் இருந்த உள்நோக்கத்தையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

TELO_Thangaththuraiதமிழீழ விடுதலை இயக்கம் – ரெலோ வெலிக்கடைச் சிறையில் இருந்த தமது தலைவர்களான குட்டிமணி தங்கத்துரை ஆகியோரை சிறையை உடைத்து வெளிக்கொணர்வதற்காக 24 இளைஞர்களை பயிற்சியளித்து வெலிக்கடைசிறையை தாக்கும் திட்டம் ஒன்றை செய்வதற்கு ஆயத்தமாக இருந்த வேளையிது. ‘இந்த தாக்குதலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளிடமும் அதன் தலைவர் வே பிரபாகரனிடமும் உதவிகள் கேட்கலாம்’ என்று சில ரெலோ உறுப்பினர்களிடம் அபிப்பிராயம் இருந்தது. ஆனால் இதற்கிடையே சில ரெலோ உறுப்பினர்கள் வே பிரபாகரனே தமது ரெலோ தலைவர்களை காட்டிக் கொடுத்தவர் என்று குற்றம்சாட்டினர். அவர்கள் ‘ரெலோ தலைவர்களை உயிருடன் வெளியே எடுப்பது வே பிரபாகரனுக்கு விருப்பமானதாக இருக்காது’ என்றும் கூறினர். ‘வே பிரபாகரன் இந்த திட்டத்தை குழப்புவார்‘ என்ற பலமான அபிப்பிராயத்தையும் அவர்கள் கொண்டிருந்தனர். இந்த அபிப்பிராயத்தை அன்று கொண்டிருந்தவரில் ரெலோ சுதனும் முக்கியமானவர். இவர் இப்போது லண்டனில் வாழ்கிறார்.

TELO_Kuddymani‘தமிழீழ விடுதலைப் புலிகளோ அதன் தலைவர் வே பிரபாகரனோ உதவி செய்யத் தேவையில்லை.உபத்திரவம் இல்லாது இருந்தாலே போதும். இப்போதைக்கு எந்த இராணுவத் தாக்குதலையோ இராணுவத்தினர்க்கு எதிரான சேட்டைகளையோ செய்ய வேண்டாம்’ என புலிகளிடம் கேட்பதாக முடிவாகியது. சிறீசபாரத்தினத்தின் இணக்கத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளை இதே சுதன் சந்தித்து மேற்கூறிய வேண்டுகோளை விடுத்திருந்தார். ரெலோ சுதன் கலட்டி அம்மன் கோவிலடியில் வைத்தே தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கண்ணனிடம் இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டது. (கண்ணன் இன்றும் வெளிநாடு ஒன்றில் வாழ்ந்து வருகிறார்.) ரெலோ தலைவர் தங்கத்துரை பிரபாகரனின் இம்மாதிரியான தாக்குதல்களை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்ததாயும் இத்தகவலை வே பிரபாகரனுக்கு அனுப்பியதாயும் இந்த ரெலோ உறுப்பினர்கள் நம்புகிறார்கள்.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது இராணுவ சாகசங்களை நிறுத்தவில்லை. இராணுவத்தினர் மீது மேற்கொள்ளளும் வலிந்த தாக்குதல்களை, துப்பாக்கிப் பிரயோகங்களை நிறுத்தவில்லை. திருநெல்வேலித் தாக்குதலை திட்டமிட்டு நிறைவேற்றினர். இனக்கலவரம் வெடித்தது. வெலிக்டை சிறையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்கள் குட்டிமணி, தங்கத்துரை கொல்லப்பட்டனர்.

LTTE Leader V Pirabakaranஇன்றும் லண்டனில் வாழும் முன்னாள் ரெலோ உறுப்பினர்களிடம் இந்த 13 இராணுவத்தினர் மீது தாக்குதல்கள் ரெலோ தலைவர்களை வெளியே வந்துவிடக்கூடாது என்ற நோக்குடனேயே செய்யப்பட்டதாக திடமாக நம்புகிறார்கள். அதேவேளை இந்தக் காலங்களில் சிறையில் இருந்த தங்கத்துரை தனது நீதிமன்ற உரைமூலம் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு உள்ள நியாயத்தை முக்கியமாக இது சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல என்பதையும் எடுத்து கூறி இருந்தார். இவ்வுரை தங்கத்துரை போராட்டம் பற்றிய சரியான போக்கைக் கொண்டிருந்தார் என்பதைக் கோடிற்று நின்றது. தமிழீழ விடுதலை இயக்கம் தங்கத்துரையை சிறையிலிருந்து மீட்டிருந்தால் வே பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நடாத்தியிருந்திருக்க முடியுமா? பின்னாளில் ஏற்பட்ட அரசியல் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமா? என்பது ஆர்வத்திற்குரிய விவாதமாக அமையும்.

அன்று 1983 யூலைக் கலவரத்தில் பாதிக்கப்பட்டு வன்னியில் குடியேறிய மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப் பகுதியில் இடம்பெற்ற யுத்தங்களுக்கும் கொடுமைகளுக்கும் அவலங்களுக்கும் உள்ளாகினர். இன்றும் இந்த வன்னி அகதி முகாம்கிளிலிருந்து வெளியேறி தங்க இடம் இல்லாது இருப்பவர்கள் இவர்களே.

இலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியே மூல காரணமாக இருந்த போதும் சுதந்திரக் கட்சி இவ்விடயத்தில் தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது. இலங்கை அரச இயந்திரத்தை இனவாத நச்சுச் சுழலில் இருந்து வெளியே கொண்டுவருவதற்கு சுதந்திரக் கட்சி காத்திரமான பங்களிப்பினை இதுவரை மேற்கொள்ளவில்லை. தற்போது ஆட்சியில் உள்ள சுதந்திரக் கட்சிக்கு தற்போது அமைந்துள்ள அரசியல் சூழல் மிகவும் வாய்ப்பானதொன்று. அதனை முழுமையாகப் பயன்படுத்தி அரசு இயந்திரத்தை இனவாதச் சூழற்சிக்கு வெளியே கொண்டுவர ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசினால் முடியும். ஆயினும் அவர்கள் தாம் அதற்குத் தயாரில்லை என்பதனையே அவ்வரசின் இராணுவப் போக்கு உணர்த்துகின்றது. இன்றும் வன்னி முகாம்களில் உள்ள இந்த மக்கள் 1983ம் ஆண்டின் இனவாத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு வெளியேறிய அப்பாவி மலையக மக்கள் என்பதை ஆட்சியில் உள்ளவர்கள் அறியாதவர்களா என்ன? இன்றைய அரசின் நடவடிக்கைகள் தம் குறுகிய அரசியல் நலன்களுக்காக நாட்டை மற்றுமொரு இனவாதச் சுழற்சிக்குள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசு தள்ளுகின்றதோ என்ற அச்சம் தமிழ் மக்களிடையெ எழுவது தவிர்க்க முடியாதது.

Rehabilitation_Wanni வன்னி அகதி முகாம்களில் உள்ள மீதமான மக்கள் மட்டுமல்ல பெயரளவில் மீளக் குடியேற்றப்பட்ட மக்களும் தமக்கென வாழ விவசாயம் செய்ய நிலமற்றவர்கள், வீடற்றவர்களாகும். இந்த மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமலும் அந்த இளம்பிள்ளைகளின் கல்வியில் அக்கறையில்லாமலும் அரசுக்கு என்ன வெற்றி விழா, ஆண்டுவிழா தேவைப்படுகின்றது. இப்படிப்பட்ட இனவாத போக்கே இலங்கையில் தமிழ் மக்கள் அரசுக்கு எதிராக போராட முற்பட்டதும் இராணுவத்தினரை தாக்கும் எண்ணம் உருவாகக் காரணம் ஆனது என்பதை இன்னும் உணராமல் இருப்பது இவர்களும் வரலாற்றைக் கற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.
இந்த மக்களின் அவல நிலையை இன்றுள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் கண்டுகொள்வதாக இல்லை. தம் வாக்கு வங்கியைக் காப்பாற்றிக் கொள்ள பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுவதற்கு அப்பால் இவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காத்திரமாக எதனையும் செய்துவிடவில்லை. அந்த மக்களை வன்னி முகாம்களில் சென்று பார்ப்பதற்குக் கூட அவர்கள் போராடவில்லை. பொறுப்பு வாய்ந்த அரசு ஆட்சியில் உள்ளது எனக் கூறிக்கொள்ளும் சுதந்திரக் கட்சியின் தமிழ் ஆதரவாளர்களும் அமைப்பாளர்களும் தோழமைக் கட்சிகளும் கூடி தமது சுதந்திரக்கட்சி அரசியல் உறவுகளை முழுமையாக இந்த மக்களுக்காக பயன்னபடுத்த முடியாதவர்களாகவே உள்ளனர்.

இக்கட்டுரையை மீண்டும் உபாலி குரேயின் சிந்தனையின் அடிப்படையிலேயே நிறைவுக்குக் கொண்டு வருவது பொருத்தமாக இருக்கும். அவர் மேற்குறிப்பிட்ட கடிதத்தில்…..

‘‘இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்றால், எங்களுக்கு இன்று தேவையானது வெற்றி குறித்த பெருந்தன்மையே அல்லாமல் வெற்றிக் களிப்பல்ல. நாங்கள் அவர்களோடு உடன்பாடு கொள்ள வேண்டிய தேவை இல்லாவிடினும் அவர்களை நோக்கி நாங்கள் நட்புக்கரம் நீட்ட வேண்டும். நாங்கள் அவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டுமேயன்றி இனிமேலும் சண்டைக்குப் போகக்கூடாது. அவர்களுடைய குறைகளை நாங்கள் கேட்க வேண்டும். அவர்களுடைய கோரிக்கைகளை அடைவதற்கு நாங்கள் அவர்களை நோக்கிச் செல்ல வேண்டும். இன்னும் உங்கள் வெற்றிக் களிப்பு எங்களுடைய கலாச்சாரத்திற்கு அந்நியமானது. உதாரணத்திற்கு, துட்டகைமுனு, எல்லாளனை வெற்றி கொண்டபின், எல்லாளனுடைய சமாதிக்குச் சென்றபோது எல்லாளனுக்கு மரியாதை செலுத்துமுகமாக ஒவ்வொரு குதிரைவீரனும் அந்தச் சமாதிக்கு மண்டியிட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தான். இந்த உயர்நிலையின் வழிநின்றுதான் நாங்கள் இலங்கையின் இனப்பிரச்சினையை அணுகவேண்டும்.’’

இந்த மனமாற்றம் பேரினவாதத் தலைமைகள் மத்தியில் ஏற்பட்டாக வேண்டும். அதற்கு முதல் நிபந்தனை இந்த மனமாற்றம் பரந்துபட்ட சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும். கடந்த கால்நூற்றாண்டு கால ஆயுதப் போருக்கு செலவழித்து ஆயிரக்கணக்கான லட்சக்கணக்காண கோடிக்கணக்கான பணத்தை சிங்கள மக்களின் மனங்களை வென்றெடுக்க அதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்கப் பயன்படுத்தி இருந்தால் எமது நியாயமான உரிமைகளை வென்றெடுக்க சிங்கள, முஸ்லீம் மக்கள் தோளோடு தோள் நின்றிருப்பார்கள். உபாலி குரேயின் கடிதத்திற்கு அந்த உறவுக்கார இளைஞன் வருமாறு பதிலளிக்கிறான்…..

”என் அன்புக்குரிய பெரிய அங்கிள்,

உங்களுடைய இந்தக் கட்டுரையை என்னுடைய FACEBOOK இலும், சில இலங்கையரின் FACEBOOK இலும் பிரசுரித்தேன். என்னுடைய நண்பர்களில் 20 பேருக்கும் அதிகமானவர்கள் யுத்தம் பற்றிய தங்கள் அபிப்பிராயத்தை இதற்குப் பின் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய கட்டுரை மூலமாக அவர்களுடைய அபிப்பிராயங்ளை மாற்ற முடிந்தததையிட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் இதைக் கட்டாயம் ஒரு பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.

தயவுசெய்து இதுபற்றி யோசியுங்கள். இந்தக் கட்டுரையை நீங்கள் எனக்கு அனுப்பி வைத்ததற்காக நான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரியமுடன்”

இலங்கை இந்த இனவன்முறை என்கிற நச்சு வட்டத்தில் இருந்து வெளியேற தமிழ் – சிங்கள – முஸ்லீம் சமூகங்களில் இருந்து பல உபாலி குரேக்கள் தோன்ற வேண்டும். தமிழ் இளைஞர்கள் ஏந்திய ஆயுதங்களிலும் பார்க்க உபாலி குரே போன்றவர்களின் சிந்தனையும் எழுத்தும் இன மத பேதங்களைக் கடந்து அவர்களின் இதயங்களையும் சிந்தையையும் வெற்றிகொள்ளும். உபாலி குரேயின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு அதன் முடிவில் இசைக்கப்பட்ட பொப் மாலியின் பாடல் இன்னும் மெல்லியதாக காதோரம் ஒலித்துக் கொண்டுள்ளது…..

Get up, stand up!
Stand up for your rights!
Get up, stand up!
Don’t give up the fight!

தமிழ் மக்களுக்கு அரசியல் படிப்பிக்க வானொலி நடாத்தவில்லை. சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட வேண்டும் என்பதற்காகவே ஆரம்பித்தோம்.’’ ரிபிசி பணிப்பாளருடன் நேர்காணல்

Ramraj V TBCRamraj V TBCRamraj V TBC
கடந்த 10 ஆண்டுகளைக் கடந்து வானலைகளில் தவழ்ந்து வந்த ரிபிசி வானொலி அண்மையில் தனது பதினொராவது ஆண்டில் கால் பதித்துள்ளது. அரசியல் நெருக்கடி மிகுந்த ஜனநாயக மறுப்புக்கு மத்தியில் இயங்கிய இவ்வானொலியின் கடந்த பத்து ஆண்டுகள் என்பது புலம்பெயர் தமிழ் ஊடக வரலாற்றில் குறிப்பிடத்தக்கதொரு பதிவு. அதற்காக இவ்வானொலியும் இதன் பணிப்பாளரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு நிற்கவில்லை. ரிபிசி மீதும் அதன் பணிப்பாளர் மீதும் அவர்களின் கடந்தகால அரசியல் மீதும் விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும் எவ்வித குறையும் இருக்கவில்லை. ரிபிசி அதன் பணிப்பாளர் அவர்களின் அரசியல் மீது தேசம்நெற் வைத்த கேள்விகளுக்கு ரிபிசி இன் பணிப்பாளர் ராம்ராஜ் பதிலளிக்கின்றார். இந்நேர்காணல் யூன் நடுப்பகுதியில் பதிவு செய்யப்பட்டது.
._._._._._.

தேசம்நெற்: ராம்ராஜ் நீங்கள் எப்படி விடுதலைப் போராட்ட இயக்கத்தினுள் உள்வாங்கப்பட்டீர்கள்? உங்களுடைய போராட்ட அனுபவம் என்ன?

ராம்ராஜ்: 1981க் காலத்தில் மட்டக்களப்பில் தமிழ் இளைஞர் பேராவையிலிருந்து முக்கியமாக மக்களுக்கு உதவி செய்தல் தமிழர் விடுதலைக்காக பிரச்சாரங்கள் செய்தல் ஆகிய விடயங்களில் ஈடுபடும்போது புலிகளின் முழு தொடர்புகளும் ஏற்பட்டுவிட்டது. இதன்போது ஆண்டு சரியாக ஞாபகம் இல்லை குண்டுவைப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு கண்டி போகம்பரை சிறைக்கு நாம் 11 பேர் கொண்டு வரப்பட்டோம். இந்த சிறையில் இருந்து பின்னர் நாம் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டோம்.

மட்டக்களப்பு சிறையில் தமிழர் விடுதலைக் கூட்டணி சம்பந்தமூர்த்தி, தங்கத்தரை போன்றோர்களை மட்டக்களப்பு சிறைக்கு கொண்டு வருகிறார்கள். அப்போது தான் எமக்கும் கூட்டணிக்கும் இடையில் தொடர்பு ஏற்ப்படுகின்றது. இந்த சிறையில் இருக்கும்போது அப்போது தமிழ் இளைஞர்பேரவை ராஜன் (பரந்தன் ராஜன் – ஈஎன்டிஎல்எப்) எம்மைப் பார்க்க அடிக்கடி வந்து போவார். எமக்கான பல உதவிகளையம் செய்து தருபவர். ராஜன் எமக்கான உதவிகளை கண்டியிலும் மட்டக்களப்பிலும் செய்து தருபவர். இந்தக் காலத்திலேயே புளொட்டும் புலிகளிலிருந்து பிரிந்து இயங்குகிறார்கள். இதில் ராஜன் புளொட்டுடன் இணைந்து வேலை செய்கிறார்.

நாம் சிறையில் இருக்கும் போது என்னையும் மற்றவர்களையும் எனது அப்பாவும் ராஜனும் தான் துணிந்து வந்து பார்ப்பவர்கள். அப்போது ராஜன் தமிழ் இளைஞர்கள் கைது செய்ப்பட்டுள்ளனர் என்ற ஒரு அடிப்படையிலேயே தான் எம்மை வந்து பார்ப்பார். அதனாலேயே நான் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியேறிய பின்னர் புளொட்டுடன் இணைந்து வேலை செய்ய ஆரம்பிக்கிறேன். இந்தக் காலத்தில் புளொட்டும் மிகவும் பிரபல்யமான அமைப்பாக தமிழ் பிரதேசம் எங்கும் இயங்குகின்றது.

மட்டக்களப்பில் புளொட்டுக்கு அமைப்பு ரீதியாக இயங்குபவர்களில் நானும் ஒருவன். புளொட் மலேசிய வாசுதேவனை அழைத்து ஒரு நிதிசேகரிப்பு நிகழ்ச்சி நடத்துவதற்கான பொறுப்பை என்னிடம் தந்தது. இந்த நிகழ்ச்சி எமக்கு தோல்வியிலேயே முடிந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சி எம்மை பல தமிழ் இளைஞர்களுக்கு ஒரு அமைப்பாக நிறுவனமாக இயங்க முயற்சிப்பதன் அம்சத்தை நிறுவியது. இது பலர் எம்முடன் இணையவும் காரணமாகியது. கே எஸ் ராஜா வந்து செய்த இந்த நிகழ்ச்சிகளை என்னுடன் முன்னின்று செய்தவர்கள் பரந்தன் ராஜனும் ராஜனுடைய அண்ணாவுமாகும்.

இந்தக் காலத்திலிருந்தே ராஜன் அடிக்கடி மட்டக்களப்பு வருவார். எமக்கும் மக்களுடன் தொடர்பு இக்காலத்தில் அதிகமாகி வருகின்றது. கிளிநொச்சி வங்கி கொள்ளையும் புளொட் செய்து முடிக்கிறது. இக்காலத்தில் ராஜன் கிளிநொச்சியில் இருக்கிறார்.

ராஜன் ஒருமுறை மட்டக்களப்பு வந்து திரும்ப கிளிநொச்சிக்கு போகும்போது பொலீஸ் சுற்றிவளைத்து ராஜனை கைது செய்து விட்டார்கள். அப்போது நான் 1983ல் புளொட்டின் முழுநேரமாக வேலை செய்கிறேன். இக் காலங்களில் நாம் மன்னார், உடப்பு போன்ற பிரதேசங்களுக்கு கடலால் படகு மூலம் பிரயாணங்களை ஆரம்பிக்கின்றோம். இதனை தொடர்ந்து நிக்ரவெட்டியாவில் வங்கிக்கொள்ளையை புளொட் நடாத்துகின்றது.

இந்த காலத்துடன் நான் இந்தியாவிற்கு வருகின்றேன். இந்தியாவில் புளொட்டின் அமைப்புக்குள்ளேயே நிறையப் பிரச்சினைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக ராஜன் புளொட்டுக்குள்ளேயே முரண்படுகின்றார். அதில் முதலாவதான பிரச்சினையானது நிரஞ்சனுடைய (காக்காவினுடைய) பிரச்சினை நடக்கிறது, முகுந்தனுடன் (உமாமகேஸ்வரனின் இயக்கப்பெயர்களில் ஒன்று) கடுமையாக முரண்பட்ட ராஜனின் நண்பன் காக்கா கடத்தப்பட்டு கொல்லப்படுகின்றார். ராஜன் இந்த காக்கா பிரச்சினையில் கருத்த முரண்படுகின்றார்.

011109dag.jpgஇதே காலத்தில் ஈபிஆர்எல்எப் இல் இருந்து தோழர் டக்ளஸ் தேவானந்தா வெளியேறுகின்றார். தோழர் டக்ளஸ், ராஜன் இணைந்து வேலை செய்வதற்கான பேச்சுக்கள் நடைபெற்று இருவரும் உடன்பட்டு இணைந்து வேலை செய்கிறார்கள்.

தேசம்நெற்: நீங்கள் புளொட்டின் உட்கட்சிப் பிரச்சினைகளை முன்வைத்து கண்டித்து வெளியேறினீர்களா?

ராம்ராஜ்: இல்லை! நான் ராஜனுடன் சேர்ந்தே இருந்தேன், புளொட்டின் மத்திய குழு உறுப்பினரான அசோக் ஈஎன்டிஎல்எப் உடன் பிரிந்து வந்தார். ராஜன் புளொட்டுக்குள்ளேயே நடந்த பிரச்சினைகளை பலமாக எதிர்த்தார். ஆனாலும் புளொட்டில் பல பிரச்சினைகளை முன்னின்று நடத்தியவர்களில் முக்கியமான புலனாய்வுத்துறையினரால், ராஜனுக்கு எதிராக ஏதும் செய்ய முடியவில்லை. காரணம் ராஜனுக்கு புளொட்டுக்குள்ளேயும் வெளியே மற்ற இயக்கத்தவர்களிடையேயும் பலமான உறவு இருந்தது. குறிப்பாக ரெலோ சிறிசபா, தோழர் டக்ளஸ், தோழர் நாபா போன்றவர்களிடம் ராஜனுக்கு பலமான உறவு இருந்தது. இந்த உறவு நாட்டில் சேர்ந்து இயங்கிய காலங்களிலிருந்தே இருந்து வந்தது. இவர்கள் யாரும் தம்மிடையே முரண்பட்டுக்கொண்டது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

புளொட்டுக்குள்ளே உட்பிரச்சினை பெரிதாக வளர்ந்து பல வரலாறு காணாத பிரச்சினைகள் எழுந்த போது ராஜன் லெபனானில் இருக்கிறார். ராஜனை கொண்டு வர பாஸ்போட் தேவைப்பட்டது. லெபனானில் பாஸ்போட்டை வாங்கி வைத்திடுவார்கள். முகுந்தன் திட்டமிட்டு ராஜன் பாஸ்போட் எடுக்க முடியாதபடி செய்தார். பிறகு ராஜனை திரும்ப கொண்டு வருவது இழுபறிப்பட்டு போயிருந்தது.

புளொட்டிலிருந்து ராஜன் பிரிந்து சென்று ஈஎன்டிஎல்எப் யை உருவாக்கியபோது ராஜனுக்கு மாற்று இயக்கத்திடமிருந்து பல உதவிகள் கிடைத்திருந்தது. அதில் ரெலோ ஆயுதங்களையும் பணத்தையும் நேரடியாக ராஜனுக்கு தந்து உதவியது. இதற்கு காரணம் ராஜன் – சிறி நெருக்கமான உறவேயாகும்.

தேசம்நெற்: புளொட்டில் இருந்து நீங்கள் பிரிந்து சென்ற போதும் புளொட் செய்தது போன்றே ஈஎன்டிஎல்எப் உம் ஆட்கடத்தல், கொலை, அரசிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்தீர்கள்?

ராம்ராஜ்: புளொட்டில் நடந்த பிரச்சினைகள் கடத்தல்களுக்கும் எம்மீதே குற்றம் சாட்டப்பட்டிருந்தது. நான் சென்னையில் புளொட்டில் நிதிப் பொறுப்பாளராக இருந்த போதும் இந்த குற்றச்சாட்டுக்கள் இருந்தது. நிதி பற்றிய குற்றச்சாட்டுக்கள் என்மீதும் வைக்கப்பட்டடிருந்தது. இந்தக் காலத்தில் யார்? யார் மீது? யாருக்கு? ஏது? என்ன? என்று இல்லாமல் வகை தொகையாக குற்றச்சாட்டுக்கள், பலர் மீதும் பல தடவைகளும் தாறு மாறாக வைக்கப்பட்டிருந்த காலம் என்பதை மறக்கக்கூடாது.

நானும் என்போல பலரும் இயக்கத்துக்கு சேரும் காலங்களில் இயக்கத்திற்காக எதையும் செய்யத் தயாராகவே வந்தோம். அப்படித்தான் இயக்கங்களும் வளர்க்கப்பட்டிருந்தன. எல்லோருமே தற்கொலை குண்டுதாரியாயும் மண்ணை மீட்க வேண்டும் என்ற சிந்தனையைத் தவிர வேறு என்ன சிந்தனையும் இருக்கவில்லை. ஆரம்பத்தில் எல்லா இயக்கத்திலும் இந்த சிந்தனைமுறை தானே இருந்தது. யாரும் இதை மறுக்க முடியுமா?

தேசம்நெற்: புளொட்டில் மிகமோசமான உட்படுகொலைகள் இடம்பெற்றது. அப்போது அதனை எதிர்த்து பலர் குறிப்பாக தீப்பொறி குழுவினர் வெளியேறி இருந்த போதும் நீங்கள் தொடர்ந்தும் புளொட்டில் இருந்ததாக கூறுகிறீர்கள். இன்று ஜனநாயகம் மனித உரிமைகள் பற்றிப் பேசும் நீங்கள் அன்று நடந்த உட்படுகொலைகளில் சம்பந்தப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டப்படுகின்றது. நீங்கள் புளொட்டினுள் இடம்பெற்ற உட்படுகொலைகள் எதிலும் சம்பந்தப்பட்டு அல்லது அதற்கு துணையாக இருந்திருக்கின்றீர்களா?

Ramraj_V_TBCராம்ராஜ்: எந்த விதமான கொலைகள், கொள்ளைகள், கடத்தல்கள் எதிலும் சம்பந்தப்படவில்லை. இதில் புளொட்டிலிருந்த மிகப் பெரும்பான்மையினரைப் போல நானும் சாதாரண போராளியாகவே இருந்தேன். புளொட்டுக்குள்ளே இருந்தவர்களில் பலர் இந்த உள்வீட்டுப் பிரச்சினைகளை எதிர்த்தவர்கள், பலமாக எதிர்த்தவர்கள், தாமும் கொலை செய்யப்படுவோம் என்று பயந்தவர்கள் பலர். இயக்கம் பாதை தவறிவிட்டது என்று தாமாகவே வெளியேறிப் போனவர்கள் பலருக்கு நான் உதவி செய்துள்ளேன். அப்படி வெளியேறியவர்களில் பலர் இன்றும் ஜரோப்பாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்றும் என்னோடு நட்பாக பழகுபவர்கள், எனது நல்லது கெட்டதுகளில் கலந்து கொள்பவர்களாக உள்ளனர்.

Manikkadasan_and_Guardsபுளொட்டினுள் நடந்த எல்லா கொலைகளும் உமாமகேஸ்வரனுக்கு தெரிந்து நேரடி ஆலோசனையுடன் நடந்தது என்பது தவறு. சில தெரிந்திருக்கலாம் ஆனால் புளொட்டின் புலனாய்வுத்துறையினரே தமக்கு நினைத்த மாதிரி பல கொலைகளை செய்தார்கள். உதாரணம் மொக்கு மூர்த்தி. இவரே பல உட்படுகொலைகளுக்கு காரணமாக இருந்தவர்.

தேசம்நெற்: உமாமகேஸ்வரன் புளொட் இயக்கத்தின் தலைவர். அந்த இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் அவரே பொறுப்படையவர். இவர்களை கட்டுப்படுத்தும் பொறுப்பும் உமாமகேஸ்வரனுடையதே. உமாமகேஸ்வரன் தனது தலைமைப் பதவியைக் காப்பாற்ற இந்தப் புலனாய்வுத்துறையினரைப் பயன்படுத்தி உள்ளார். புளொட்டில் நடந்த உட்படுகொலைகளுக்கு உமாமகேஸ்வரன் முழுப்பொறுப்புடையவர்.

ராம்ராஜ்: இல்லை. இல்லை. இவர்களைக் கட்டுப்படுத்த என்று உமாமகேஸ்வரன் தொடங்கியிருந்தால் உமாமகேஸ்வரன் ஆரம்ப காலத்திலேயே முடிந்திருப்பார். இயக்கத்தினுள்ளே மற்றவர்களுக்கு இருந்த பயம் உமா மகேஸ்வரனுக்கும் இருந்திருக்கும். இப்படித்தான் புளொட் வளர்க்கப்பட்டு இருந்தது. இந்தக் காலத்தில் மற்றைய இயக்கங்களுக்கு உள்ளேயும் இப்படியான தன்மைகள் இருந்தது. அதைவிட உமாகேஸ்வரனுக்கு சில பலவீனங்களும் இருந்ததது.

UmaMaheswaran_PLOTEபுளொட்டுக்கு ஆயுதங்கள் வந்து இந்தியாவில் இந்திய அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டது. ராஜன் இந்த ஆயுதங்களை எடுப்பது சம்பந்தமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் உமாமகேஸ்வரன் தனது மச்சான் துரையை இந்த பிரச்சினையை கையாழுவதற்க்கு பொறுப்பாக வைத்தார். இது ஒரு முரண்பாடாக அந்த நேரம் எழுந்தது. அப்போது ராஜன் இந்த அலுவலை மிகஇலகுவாக செய்திருக்க முடியும். இதை துரை கையாள ஆரம்பித்ததாலேயே மேலும் சிக்கலாகி இந்த ஆயுதங்களைப் பெறமுடியாமல் போனது. மேற்குறித்த ஆயுதங்களை வாங்குவதில் பல ஊழல்கள் நிகழ்ந்திருந்தன. இந்த ஆயுதங்கள் எல்லாமே மிக சாதாரணதர ஆயுதங்களாகவே இருந்ததாகவும் பேசப்பட்டது.

ஒபரேய் தேவனுக்கு பின்பு ரெலா இயக்கத்தின் தலைவராக உமாமகேஸ்வரனின் மச்சான் வந்தபடியால் ரெலா இயக்கம் புளொட்டுடன் இணைந்தது.

தேசம்நெற்: இலங்கை – இந்திய ஒப்பந்தம் காலத்தில் ஈஎன்டிஎல்எப் மிக மோசமான செயற்பாடுகளில் ஈடுபட்டு இருந்தது. அப்போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்?

ராம்ராஜ்: நான் வெளியேறி போய்விட்டேன். இலங்கை – இந்திய ஒப்பந்தகாலத்தில் ஈஎன்டிஎல்எப் இலங்கைக்குப் போகும் போது நான் வெளிநாட்டில் இருந்தேன்.

தேசம்நெற்: இலங்கை – இந்திய ஒப்பந்தகாலத்தில் ஈஎன்டிஎல்எப் மிக மோசமான செயற்பாடுகளில் ஈடுபட்டு இருந்தது. ஆட்கடத்தல், கொள்ளை, கொலை, பலாத்காரமாக இளைஞர்களைப் பிடித்து பயிற்சி அளித்தது. குழந்தைப் போராளிகள். இவை பற்றி இன்றும் ஈஎன்டிஎல்எப் அமைப்பில் உள்ள நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?

ENDLF_Logoராம்ராஜ்: ஈஎன்டிஎல்எப் இந்திய ராணுவத்துடன் இருப்பதால் ஈஎன்டிஎல்எப்க்கு அவதூறு உருவாக்க, கெட்ட பெயரை திட்டமிட்டு உருவாக்க இதில் பல வேலைகளை புலிகளே செய்துவிட்டு பழியை எம்மீது போட்டனர். புலிகள் வாகனங்களை மறித்தும் ஆட்களை இறக்கியும், கடத்தியும் பல கொடுமைகளை செய்துவிட்டு புலிகள் தாங்கள் தான் திறீ ஸ்ரார் என்றும் ஈஎன்டிஎல்எப் என்றும் சொல்லியே இந்த அலுவல்களைச் செய்தனர். இதைப் புலிகள் எல்லா இயக்கங்களுக்கும் செய்தது. தாங்கள் கொள்ளையடித்து விட்டு வேறு இயக்கங்களின் பெயரையே பாவித்தனர். குறிப்பாக யாழ்ப்பாணம் கிளிநொச்சியில் புலிகள் பரவலாக இதனைச் செய்தனர். மற்ற இயக்கத்தவர்களிடம் கேட்டாலே இதை இலகுவாக அறிந்து கொள்ள முடியும்.

தேசம்நெற்: ராம் நீங்கள் என்ன சுத்தமான சுவாமிப்பிள்ளை என்கிறீர்களா?

ராம்ராஜ்: நான் அப்படிச் சொல்லவில்லை. ஆனால் என் மீது – ராம்ராஜ் மீது, ராம் இது செய்தார், அது செய்தார், என்று கூறுபவர்கள் நேரடியாக என்னிடம் வந்து பேசுங்கள். நான் என்ன செய்தேன் என்று பதிலளிக்கத் தயார். எனது தொலைபேசி எனது விலாசம் தெரியாதவர்கள் யார்? ஏன் யாரும் என்னிடம் இப்படி பிரச்சினை இருக்கு என்பவர்கள் பேசவருவில்லை!

யாரும் தனது குடும்பமோ தானோ என்னால் பாதிக்கப்பட்டது என்றால் என்னிடம் நேரடியாக வந்து கேட்கட்டுமே. தேவைப்பட்டால் நீங்களும் பக்கத்தில் இருந்து கேட்டு தேசம்நெற்றில் பதிவிடுங்கள் பலரும் தனிப்படப் பேசலாம். தவறு என்றால் நேரடியாகப் பேச வேண்டும். நான் எத்தனையோ எழுதுகிறேன். எத்தனையோ பேசுகிறேன். எனக்கு புலிகளால் தனிப்பட்ட வகையில் பாதிப்பு இல்லை.

தேசம்நெற்: இலங்கை – இந்திய ஒப்பந்த காலத்தில் ஈஎன்டிஎல்எப் குழந்தை இராணுவ அணியொன்றை உருவாக்கியது. இளைஞர்களைப் பலவந்தமாக கடத்திச் சென்று பயிற்சி அளித்தது?

ராம்ராஜ்: உண்மை தான். இது தவறுதான். இதனை உணர்ந்துகொண்டோம். இவர்களில் சிலர் புலிகளால் கொல்லப்பட்டும் உள்ளனர். அந்தத் தவறின் வலியை இப்போதும் உணர்கின்றோம். தமிழ் தேசிய இராணுவத்தை உருவாக்கக் காரணம் இந்தியப்படை வெளியேறப் போகிறது, அந்த இடைவெளியை நிரப்புவதற்கு ஒரு இராணுவ கட்டமைப்பு வேண்டும். இதன் மூலம் நாட்டை பிரிக்க ஒருவழி ஏற்ப்படும் என்ற ஒரு எதிர்பார்ப்பும் பெறப்பட்ட ஆலோசனைகளின் பெயரிலுமே இந்த நடவடிக்கை செய்யப்பட்டது. ஆனால் அது தவறிப்போய்விட்டது.

அதற்குப் பிராயச்சித்தமாகவே பெங்களுரில் இந்திராகாந்தி சர்வதேசப் பாடசாலையை உருவாக்கி பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கி வருகிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் பராமரிக்கின்றோம். ஆரம்பத்தில் இதனை எமது இயக்க குடும்பங்களுக்காகவே ஆரம்பித்தோம். ஆனால் தற்போது புலிகள் உட்பட ஏனைய அமைப்புகளில் இருந்த பாதிக்கப்பட்டவர்களும் தமிழ் நாட்டு முகாம்களில் இருந்த பாதிக்கப்பட்டவர்களது பிள்ளைகளும் அப்பள்ளியில் படிக்கின்றனர். அன்று இந்தியப் படைகளுடன் வந்த கப்பலை கருணாநிதி அரசு தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை. அக்கப்பல் ஒரிசாவுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் காங்கிரஸின் ஆட்சியில் பெங்களுர் இருந்தபடியால் எமக்கு பாடசாலையை பெங்களுரில் அமைக்க முடிந்தது. இதுவரை 4000 மாணவர்கள் வரை கல்விகற்று வெளியேறி உள்ளனர். இவ்வாறான ஒரு சேவையை வேறு எந்த அமைப்பும் செய்திருக்கவில்லை.

அப்போது இந்த பிரச்சனைகள் நடைபெறும்போது பிள்ளைகளை கூட்டிப்போக 500 தாய்மார்கள் வந்தார்கள் என்றால் புலிகள் ஒரு ஆயிரம் பேரை கூட்டிவந்து எமக்கும் இந்திய இராணுவத்திற்கும் எதிராக சத்தம் போட்டனர். ஆனால் இப்படித்தான் புலிகள் தமது இறுதிக் கட்ட போராட்ட காலங்களிலும் தமது கடைசிக் காலத்திலும் செய்து புலிகள் மக்களால் தோற்கடிக்கப்படடனர்.

புலிகளின் தோல்விக்கும் காரணம் ஆட்கடத்தல்கள், இளைஞர், யுவதிகள், பாடசாலை மாணவர்களைக் கடத்தி ஆயுதப் பயிற்ச்சி அளித்ததேயாகும். இதனால் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தனர். இதனைத் தவறு என்று புலிகள் அன்று புரிந்து மக்களை எமக்கு எதிராக கூட்டி வந்தவர்கள். பிறகு தாங்களே இந்தத் தவறை மக்களுக்கு அப்படியே செய்தது பெரிய தவறாகிப் போயிருந்தது. இதனாலேயே புலிகள் மக்களிடமிருந்து பிரிக்கப்பட்டனர். தோற்கடிக்கப்பட்டனர்.

இதை எல்லா இயக்கங்களும் செய்தது. ரிஎன்ஏ (தமிழ் தேசிய இராணுவம்) இராணுவத்தை உருவாக்க இந்தியா எல்லா இயக்கங்களுக்கும் சொல்லியது. ‘நாட்டைப் பிரிக்க போகிறோம்! உடனடியாக படையை திரட்டுங்கள்!! இந்திய இராணுவத்தை வெளியேற்ற அரசு முயல்கிறது” அப்போது நாடு பிரியும் நிலை உருவானது. இந்தக் காலத்தில் புலிகள் பிரேமதாஸ அரசுடன் கூட்டுச் சேர்ந்து இந்திய இராணுவத்தை வெளியேற்றினர். ஆனால் புலிகள் தமது இறுதிக் காலத்தில் இந்தியாவிடம் பேச முற்பட்டனர்.

அதைவிட இந்தக் காலத்தில் யார் பெரிய படையைத் திரட்டுவது என்ற நிலை இருந்தது. இதை எந்த மற்ற இயக்கத்தவர்களும் மறுக்க மாட்டார்கள். இந்தியப் படைகள் இருக்கும்போதே சிங்கள காடையர்களின் தொல்லைகள் நிறையவே கிழக்கு மாகாணத்தில் இருந்தது.

தேசம்நெற்: நீங்களும் ஈஎன்டிஎல்எப் உம் எப்போதும் இந்தியா மீது காதல் கொண்டவர்களாக இருக்கின்றீர்கள். ஆனால் தமிழ் மக்களுடைய இன்றைய நிலைக்கு இந்தியாவுக்கும் பொறுப்புள்ளது அல்லவா?

ராம்ராஜ்: இராணுவம், ஆயுதப் போராட்டம் அல்லது எந்த வகையிலோ போராட்ட முடிவில் ஒரு நாட்டின் அங்கீகாரம் தேவை. இதற்கு இந்திய உதவி கட்டாயம் தேவை. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் பல நல்ல நன்மைகள் உண்டு. இந்த ஒப்பந்தம் மூலம் மட்டும்தான் இந்திய அதரவை தமிழர் போராட்டத்திற்கு பாவிக்க முடியும். உரிமைகளைப் பெற முடியும். வட கிழக்கு தமிழர் தாயகம் என்ற சர்வதேச ஒப்பந்தம் அது தான். இதில் மேலும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். அப்படி செய்ய்பபட்டு இருந்தால் தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக அது இருந்திருக்கும்.

இந்த ஒப்பந்தத்தை மேலும் செழுமைப்படுத்தி போயிருக்கலாம். இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை அமுல்ப்படுத்தா விட்டால் நாட்டைப் பிரிப்போம் என்று சொன்னதால் தான் நாம் இளைஞர்களை கட்டாய பயிற்ச்சிக்கு எடுத்துப் போனோம். ஓப்பந்த காலத்தில் 5 ஆயிரம் மக்களே இறந்திருந்தனர் ஆனால் அதற்குப் பிறகு எத்தனை ஆயிரம் மக்கள், போராளிகள் இறந்து போயினர். அந்த ஒப்பந்தத்தை புலிகள் திட்டமிட்டு நிராகரித்தனர். யாரோ சொன்ன ஆலோசனையை கேட்டுத்தான் செய்துள்ளனர்.

தேசம்நெற்: இனப்பிரச்சினைக்கான தீர்வினை இன்றுள்ள சூழ்நிலையில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்திலிருந்து ஆரம்பிக்கலாம் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?

ராம்ராஜ்: இலங்கை – இந்திய ஒப்பந்தத்திலிருந்து ஆரம்பிப்பது என்பது மகிழ்ச்சியான விடயம். ஆனால் அரசாங்கம் அதற்கும் வெகுவாக கீழே போய்த்தான் ஆரம்பிக்க வேண்டும் என்றல்லோ சொல்கிறது. 13வது திருத்த சட்ட மூலம் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் ஒன்று அதிலிருந்து கூட அரசு ஆரம்பிக்க மாட்டேன் என்கிறதே.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஒரு நல்ல தீர்வு. ஜனாதிபதி கடைசியாக இந்தியாவிற்கு போனபோதும் இவைபற்றிப் பேசவில்லையே!

தேசம்நெற்: ஈஎன்டிஎல்எப் இந்தியாவுடன் இணைந்துதானே நம்பிக்கையுடன் செயற்படுகின்றீர்கள்?

ராம்ராஜ்: ஈஎன்டிஎல்எப் யைப் பொறுத்தவரையில் இந்தியாவின் பரிபூரண ஆதரவு இல்லாமல் இலங்கையில் தமிழர்களின் அரசியல் உரிமைகளை பெறமுடியாது. அந்த விடயத்தில் ஈஎன்டிஎல்எப் மிகவும் தெளிவாக இருக்கின்றது.

தேசம்நெற்: ஈஎன்டிஎல்எப் தெளிவாக இருப்பதாகவே வைத்துக்கொள்வோம். அப்படியானால் இன்று புலிகள் அழிக்கப்பட்டுள்ள நிலைமையில், புலிகளை அழிக்கும் பணியில் இலங்கைக்கு இந்தியா உதவியுள்ளது. ஆயினும் ஏன் இந்தியா தமிழர்களின் அரசியல் விடயத்தில் இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வில்லை?

ராம்ராஜ்: நாங்கள் சர்வதேச நிலைமைகளையும் விளங்கிக்கொள்ள வேண்டும் இலங்கை – இந்திய ஒப்பந்தம் வரும்போது சீனாவின் அழுத்தம் இந்தப் பிரச்சினையில் இல்லை. அனால் இன்று இது மிகமுக்கிய பிரச்சனை. இதை நாம் மிக அவதானமாக கவனத்தில எடுக்க வேண்டும். இலங்கை இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் எழுதினால் அடுத்த நாள் சீனா இலங்கையுடன் ஆறு ஒப்பந்தம் எழுதும். இதிலிருந்து தான் நாம் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் நிலைமைகளை இன்று பார்க்க வேண்டும்.

இதேநேரம் இன்னுமொரு நிலைமையையும் அவதானிக்க வேண்டும். இந்தியா 50,000 வீடுகளை கட்ட வட – கிழக்கு மாகாண அரசக்கு நேரடியாக பணத்தினை கொடுக்கப் போகின்றது. இதற்கு அரசு எப்படி உடன்பட்டது. இப்படியாக நடைபெறும் மாற்றங்களை அவதானிக்க வேண்டும். இந்தியா இலங்கை அரசை நம்ப முடியாமல்தான் இப்படி செய்கின்றது என்று கூறமுடியாதா?

Indo Lanka Cartoonதேசம்நெற்: ராம் ஆரம்பகால போராட்ட நிலைமைகளுக்கும் இன்றுள்ள நிலைமைகளுக்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. ஆனால் மாறாத உண்மையாக இருப்பது இந்தியா தனது நலனிலிருந்து தான் இந்த தமிழர் பிரச்சினைகளை அணுகுகின்றது.

ராம்ராஜ்: சிலர் சொல்லக் கூடும் இந்தியா தமிழர்களை அழிக்கவே செயற்படுகிறது என்று. ஒன்று மட்டும் உண்மை, இந்தியா கடைசி வரைக்கும் புலிகளை பேச்சுவார்த்தைக்கு கொண்டுவர முயற்சித்தது. எங்களுடைய ஈஎன்டிஎல்எப் அமைப்பினூடாக முயற்சித்தது. நாங்கள் புலிகளுக்கும் இந்தியாவிற்கும் இடையில் தொடர்பாளராக இருந்தோம். இது கடைசிக் காலங்களிலும் இடம்பெற்றது.

இலங்கையில் இன்னமும் ஒரு ஜனநாயக சூழ்நிலை உருவாகவில்லை. எப்படி புலிகள் மற்றவர்கள் மீது அழுத்தத்தை பிரயோகித்தார்களோ அதே போன்றே அரசும் தமிழர்கள் மீது ஒரு அழுத்தத்தை பிரயோகித்துக்கொண்டே இருக்கின்றது. இதனால் இலங்கை அரசைக் கட்டுப்படுத்த இந்தியா அவசியம்.

Karuna Colதேசம்நெற்: கருணா மீது பிற்காலங்களில் கடுமையான விமர்சனங்களை முன் வைத்த நீங்கள் கருணாவிற்கு மாவீரர் தின உரையை எழுதிக் கொடுத்ததுடன் ஆரம்பத்தில் கருணாவுடன் இணைந்து செயற்படவும் முன் வந்திருந்தீர்களல்லவா? கருணா புலிகளிலிருந்து வெளியேறி ஈஎன்டிஎல்எப் இடம்தான் இந்தியாவிற்கு வந்தார். இவ்வாறு கருணாவுடன் இணைந்து செயற்பட்ட காலத்தில் ஈஎன்டிஎல்எப் உறுப்பினர்கள் சிலரும் கொல்லப்பட்டனர். இந்த அரசியல் மாற்றம் சந்தர்ப்பவாதம் என்று கொள்ளலாமா?

ராம்ராஜ்: இல்லை. அப்படியல்ல. கருணா எங்களை அணுகியதால் நாம் கருணாவிற்கான பாதுகாப்பை கொடுத்திருந்தோம். நாங்களும் கருணாவும் ஒரு சரிசமமான ஏற்பாட்டுடன் சேர்ந்து இயங்க உடன்பட்டோம். அந்த அடிப்படையில் ஈஎன்டிஎல்எப் அங்கு ஆட்களை அனுப்பி வேலை செய்ய ஆரம்பித்தது. ஆனால் பின்னர் வேறு பாதையில் கருணாவின் அணுகுமுறைகள் இருந்ததால் நாம் வெளியேற வேண்டி இருந்தது.

கருணாவின் அண்ணர் குகநேசன் போன்றோர் கருணா இப்படி போயிருப்பார் என்று எதிர்பாக்கவில்லை. கருணாவிடம் சரியான அரசில் தெளிவு இருக்கவில்லை.

தேசம்நெற்: நீங்கள் ஒரு முழுநேர அரசியல் நடவடிக்கையாளராக இருந்து எப்படி ஒரு ஊடகவியலாளராக மாறினீர்கள்?

ராம்ராஜ்: இந்தியாவில் இருந்து லண்டனுக்கு வருகிறேன். அப்போது பிரித்தானியாவில் ஜபிசி வானொலியை தாசீசியஸ் ஆரம்பித்தார். அதனை 1991ம் ஆண்டு ஆரம்பிக்கும் போது என்னை தன்னுடன் இணைந்து வேலை செய்ய அழைத்தார். அப்போது வெளியே இருந்துகொண்டு அவருக்கு ஒத்துழைப்பு வழங்கினேன்.அதிலிருந்து ஒரு வருடத்துக்குள் அதிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

ரிபிசியில் 22 பங்குதாரர்கள் இருந்தனர். தலா 2500 பவுண்ஸ் போட்டு வானொலியை அரம்பித்து 4 இயக்குனர்களை கொண்டு இயங்கியது. 11 வருடங்களுக்கு முன் ரிபிசி யை ஆரம்பிக்கும் போது நான் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டேன். ஆரம்பத்தில் சில பணிப்பாளர்கள் இதையும் ஒரு குற்றச்சாட்டாக வைத்தார்கள். ஆனால் பின்பு எல்லாவற்றையும் அவர்கள் விளங்கிக்கொண்டனர். ஆனால் வேறு சிலரால் இது தொடர்ந்தும் பிரச்சினையாகவே பார்க்கப்பட்டது. நான் கட்சியின் அலுவல்களை ரேடியோவிற்குள் கொண்டுவரவில்லை. ஈஎன்டிஎல்எப் க்கு முன்னுரிமை கொடுத்து வானொலியை நடாத்தவில்லை. ஈஎன்டிஎல்எப் செய்தியை நான் எழுதிப் போடவில்லை. ஆனால் ஈஎன்டிஎல்எப் அனுப்பிய செய்திகளை வெளியிட்டுள்ளேன். 10 வருடமாக வானோலியை கேட்பவர்கள் தான் இதற்கு சாட்சியம். பின்னர் ஒரு தனி நிர்வாகத்தில்தான் ரேடியோ இயங்கியது.

தேசம்நெற்: தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் திசைமாறிய பெரும் அழிவுகளைச் சந்தித்து தமிழ் மக்களின் அரசியல் வன்முறை அரசியலாக இருந்த காலகட்டத்தில் 10 வருடமாக வானொலியை இயக்கியது ஒரு சாதாரண விடயமல்ல. அதில் நீங்கள் குறிப்பாக எதிர் நோக்கிய பிரச்சினைகள் என்ன?

Ramraj_V_TBCராம்ராஜ்: ஈஎன்டிஎல்எப் என்ற பிரச்சினை, புலிகளின் ஆதரவாளர்களால் பிரச்சினை. ரிபிசியில் பணியாற்றியவர்கள் ஜனநாயகம் பேசியவர்கள் சிலரும் பிரச்சினையை ஏற்படுத்தினர். நாம் ரேடியோவை தமிழ் மக்களுக்கு அரசியல் படிப்பிக்க ஆரம்பிக்கவில்லை. நாம் ரேடியோவை ஆரம்பிக்கும் போது மக்கள் சுதந்திரமாக பேச வேண்டும், மக்கள் சுதந்திரமாக தமது கருத்துக்களை வெளியிடும் கலாச்சாரம் வளர்க்கப்படல் வேண்டும், அதற்கு நாம் உதவிகள் எமது சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்றே ஆரம்பித்தோம். இந்த கொள்கைகளிலிருந்து நாம் மாறவில்லை.

மக்கள் நான்கு சுவருக்குள் இருந்து சுதந்திரமாக தமது கருத்துக்களை சொல்லட்டும் நாங்கள் யார் வருகிறீர்கள் என்ன பெயரில் வருகிறீர்கள் என்றெல்லாம் அக்கறைப்படுவதில்லை. நாம் விரும்புவது அவர்கள் தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட ஊக்குவிப்பதேதான். அதில் நாங்கள் வெற்றிதான் கண்டுள்ளோம்.

Sivalingam Vஇன்று எல்லோரும் தங்கள் பெயரை சொல்லியே பேசுறாங்கள். இதை நாங்கள் வளர்த்துள்ளோம். இதை வளர்க்க நாம் பட்ட கஸ்டம் பாரியது. எமது அரசியல் ஆய்வார் திரு சிவலிங்கம் ஒவ்வொரு வியாழக்கிழமையும் வந்த இங்கு கலந்து கொள்வதும் அடுத்தநாள் வேலைக்கு போவதும் அன்று ஒரு இலகுவான காரியமல்ல. இன்று திரு சிவலிங்கம் சொன்ன ஒவ்வொரு ஆய்வையும் எடுத்துப் பார்த்தால் அவை ஒவ்வொன்றும் அப்படியே நடந்திருக்கிறது.

ஒருகாலத்தில் நாங்கள் புலிகளுக்கு எதிராக விமர்சனம் வைக்கும்போது புலிகளின் ஆதரவாளர்கள எம்மை அரச உளவாளிகள் என்றும் பின்பு அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கும் போது இலங்கை அரச தரப்பினர் எம்மை புலிகள் என்றும் சாயம் பூசினார்கள். இது உண்மையல்ல அன்று நடக்கும் நிகழ்வுகளை மக்கள் முன்வைப்பது தான் எங்கள் கடமை. மக்களுக்கு எல்லாவற்றையும் தெரியப்படுத்துவதே எமது கடமை அதை நாம் சரிவர செய்துள்ளோம்.

தேசம்நெற்: ஜபிசி யின் ஆரம்பகாலத்தில் நீங்களும் அவ்வானொலியில் பங்கெடுத்து இருந்தீர்கள். ரிபிசியில் பணியாற்றியவர்கள் ஐபிசி இலும் பின்னர் இணைந்து கொண்டனர். ஆனால் பிற்காலத்தில் ரிபிசி வானொலியை மதிப்பிழக்கச் செய்யும் பரவலான குற்றச்சாட்டுகள் ஐபியில் வெளிவந்தது.

ராம்ராஜ்: அதில் அவர்கள் வெற்றி பெறவில்லை. நாம் எப்பவுமே நேசக்கரம் நீட்டியபடியேதான் இருக்கிறோம். எமக்கு எதிராக சேறடித்தவர்கள் அவதூறுப் பிரச்சாரம் செய்தவர்கள் எம்மை திட்டி ரேடியோ பிரச்சாரம் நடாத்தியவர்கள் எல்லோரும் இன்று எம்முடன் நட்டபாகவே உள்ளனர். அவர்கள் இன்று என்னிடம் வரும்போது நாம் அவர்களை பழிவாங்கவில்லை. வணக்கம் வாங்கோ! என்ன உதவி தேவை! என்று தானே கேட்கிறேன். இது அவர்களுக்கு நாம் அன்றும் இன்றும் ஒரே மாதிரித்தான் உள்ளோம் என்பதை புரியவைத்துள்ளது அவர்களும் புரிந்துள்னர்.

TBC Break-inபுலிகளின் அதிதீவிரவாத ஆதரவாளர்கள் நேயர்கள் அவதூறுப் பேச்சுக்கள் எம்மீது நிகழ்த்தப்பட்டுள்ளது. நேரடியாக தனிப்பட்ட எந்த தாக்குதல்களும் புலிகளால் எனக்கு நடாத்தப்படவில்லை. எத்தனையோ இடங்களுக்கு, எத்னையோ நாடுகளுக்கு போயுள்ளேன் எங்கு போனாலும் வானொலியில் சொல்விட்டுத்தான் போகிறோம். யாரும் என்மீது தீண்டியதில்லை.

ரிபிசி வெளியிட்ட வான்முரசு பத்திரிகைக்கு அவதூறு ஏற்பட்டபோது அந்த அவதூறுக்கு எதிராக கண்டித்து தேசம் பத்திரிகை த ஜெயபாலன் மட்டுமே எழுதியுள்ளார். இன்று எத்தனையோ பேர் எமக்கு ஆதரவாக எழுதுகிறார்கள். பேசுகிறார்கள். ஆனால் அன்று எமது பத்திரிகைக்கு நடந்த அவதூறை கண்டித்தது ஜெயபாலனின் துணிவான செயலாகும். தேசம் அன்று செய்த உதவி மிகவும் முக்கியமானதாகும் அதற்கு நாம் என்றென்றும் நன்றியுடன் மதிப்புடனும் உள்ளோம்.

தேசம் ஜெயபாலனின் “ஆர்ட்டிகல் 19 கட்டுரையும் அதன் ஆசிரியர் தலையங்கமும்” என்ற கட்டுரையுடன் தான் தேசத்துடனும் ஜெயபாலனுடனும் தொடர்பு உருவானது. நாம் மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் அன்று எமது ரிபிசி ரேடியோவை நடாத்திக் கொண்டிருந்தோம். அந்த மாதிரியான காலத்தில் தேசம் எமக்காக குரல் கொடுத்தது அந்தக்காலத்தில் எத்தனையோ பத்திரிகைகள் ரேடியோக்கள் ஜனநாயகம் பேசியவர்கள் இது பற்றி கதைக்கவில்லை இன்று இவர்களும் ஜனநாயகம் பேசுகிறார்கள்.

தேசம்நெற்: புலிகளின் ஆதரவாளர்களின் எதிர்ப்பு. ஆவேசம். அரசின் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள். இவற்றிக்கும் ஊடாக தமிழர்களின் அரசியலை வெளிப்படுத்துவது என்பது மிகவும் கடினமானது இந்தக் காலகட்டத்தை எப்படி வெற்றிகரமாக நகர்ந்து வந்தீர்கள்?

ராம்ராஜ்: இதனால் தான் நான் ஈஎன்டிஎல்எப் யை ரிபிசியில் சம்பந்தப்படுத்தவில்லை. காரணம் ஈஎன்டிஎல்எப் எப்பவுமே இந்திய உதவியுடன்தான் தமிழர் அரசியல் பிரச்சினை தீர்க்க வேணும் என்ற கருத்துடையவர்கள்.

புலிகள் மக்களுக்காக போராட்டத்தை நடாத்துகிறார்கள் என்ற கருத்து மக்களிடம் பலமாக உள்ளது. இந்த காலத்தில் மாற்று இயக்கத்தவர்கள் புலிகளினால்த்தான் அரசுடன் சேர்ந்து இயங்க வேண்டிய நிலைமை ஏற்ப்பட்டது. இது புலிகளின் தவறான போராட்டத்தின் பாதிப்பு. உள்ளதைத் தெரியப்படுத்த ஆரம்பித்தோம். தமிழ் மக்கள் பணத்தில் போராட்டம் நடக்கிறது. இந்தப் பணம் எங்கே போகிறது, எப்படி செலவிடப்படுகிறது போன்ற விடயங்களை கேட்க ஆரம்பித்தோம்.

இராணுவம் 50 பேர் கொல்லப்பட்டனர். சரி இந்த சம்பவத்தால் எப்படி தமிழ் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தப் போகிறீர்கள்? இது பற்றிய ஆய்வு, தமிழர் உரிமைப் போராட்டத்தில் புலிகளின் இந்தியா பற்றிய நிலைப்பாடு என்ன? புலிகள் தொடர்ந்தும் இந்தியாவை எதிர்த்துக்கொண்டே இருப்பதா? புலிகளின் ஏகபோக பிரதிநிதித்துவம் பற்றி, புலிகளினால் செய்யப்பட்ட சகோதரப்படுகொலைகள் பற்றி, மற்ற இயக்கத் தலைவர்கள் கொல்லப்பட்டதிற்கான அஞ்சலி நிகழ்வுகள் நடாத்தினோம், ஏன் இவர்கள் கொல்லப்பட்டனர்? ஏன் புலிகள் தமிழர்களை கொல்கிறார்கள், இதை மக்களிடம் கேட்டுள்ளோம். மக்களிடம் கொண்டு போயுள்ளோம். மக்களை சிந்திக்க வைத்த நீலன் கொல்லப்பட்டார். கதிர்காமர் கொல்லப்பட்டார். இப்படி தலைவர்களை தமிழர்கள் கொலை செய்வது தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாகாது என அப்போதிருந்தே சொல்லிக் கொண்டிருந்தோம்.

TBC_Logoஜரோப்பாவில் எத்தனையோ ரேடியோக்கள் இருந்தன. ஆனால் ரிபிசி ஒன்று மட்டும்தான் மாற்று கருத்துத் தளத்தை உயர்த்தியது என்பது உண்மை. எல்லோருமே புலிகளுக்கு வக்காளத்து வாங்கினார்களே தவிர மக்களைப் பற்றி மக்களுக்கான அரசியலைப் பேசவில்லையே. நாம் பேசினோம்.

மற்றவர்களால் உயர்த்த முடியாதா தளத்தையே நாம் உயர்த்தினோம். எமக்கு இருந்த குறைந்த அளவு வளங்களுடன் நாம் இதைச் செய்தோம். இதே காலத்தில் வேறு பல ஊடகங்களும் தாமும் மாற்று கருத்தாடல்கள் என்றும் பேசினார்கள்.

ஜந்து வருடத்திற்கு முன்பே பிரபாகரன் பேச்சையும் முதன் முதலாக ஒலிபரப்பினோம். அதே நேரத்தில் தோழர் டக்ளஸ் தேவானந்தாவையும் நேர்முகம் செய்து வெளியிடுகிறோம். இன்று யாரும் செய்யலாம் எல்லாம் திறக்கப்பட்டுவிட்டது. அன்று இதை செய்ய துணிவும் சிந்தனைத்திறனும் இல்லாது போன ஊடகங்களே அதிகம்.

ஆஸ்ரப் கொல்லப்பட்டபோது எமக்குத்தான் புலிகள் இந்த செய்திகளை உறுதிசெய்யக் கேட்டார்கள். புலிகள் எம்முடன் நேரடியாகவே தொடர்பில் இருந்தார்கள். எம்முடன் பேசினார்கள். முதல் முதல் மாவீரர் தினத்தை பிரபாகரன் பேச்சை ஒலிபரப்பியதே ரிபிசி தான். பின்பு தான் ஜபிசி கூட அன்று ஒலிபரப்பி இருந்தது இதுதான் உண்மை. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினுடாக பிரபாகரனின் மாவீரர் தின உரையை மக்களுக்கு எடுத்துப்போனது ரிபிசியே தான் என்பதையும் மறக்க முடியாது.

அந்தக் குறிப்பிட்ட காலத்தில் இலங்கை அரசும் நாம் செய்வது தவறு என்று சொன்னது. புலிகளும் எங்களை தவறு என்றனர். இருவருமே அழுத்தத்தை கொடுத்தனர். புலிகள் நோர்வேயுடன் பேசி பேச்சுவார்த்தைக்கு போகும்போது அரசிடம் கேட்ட கோரிக்கைகளில் ஒன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினூடாக ரிபிசி செய்யும் ஒலிபரப்பை நிறுத்த வேண்டும் என்பதாகும். இப்போதும் தமிழ்நெற்றில் இந்த செய்தி உள்ளதைப் பார்க்கலாம்.

ஆகவே நாம் சரியான பாதையிலே இருக்கிறோம் மக்களுடனேயே இருக்கிறோம் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

எங்களை றோவுடன் தொடர்பு என்றும் இலங்கைப் புலனாய்வுடன் தொடர்பு என்றெல்லாம் சொல்லுவார்கள். நான் வெட்கப்படவில்லை. யாருடனும் நான் பேசுவேன். எமது விடயம் மீடியா மக்களுக்கு செய்தியை எடுத்துப்போவது தான். நாங்கள் விலை போகாமல் இலங்கை அரசு இந்திய அரசுடன் செயற்பட வேண்டும் ஆனால் இந்தியாவின் தயவு இல்லாமல் நாங்கள் நினைத்ததை செய்ய முடியுமா?

தேசம்நெற்: நீங்கள் ஊடகம் என்று கூறிக்கொள்கிறீர்கள். ஆனால் தேர்தல் காலங்களில் ஒரு கட்சி சார்ந்த அரசியலை முதன்மைப்படுத்துகின்றீர்கள். ஜனாதிபதித் தேர்தலில் சரத்பொன்சேகாவையும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டமைப்பையும் ஆதரித்து இருந்தீர்களே?

ராம்ராஜ்: நான் தேர்தல் காலத்தில் மகிந்தாவுக்கு பலமான எதிர்ப்பு. மகிந்தாவுக்கு எதிராக யார் நின்றாலும் சரி என்ற ரீதியில் மட்டும் தான் ஆதரவு அளித்தோம். அதற்காக மற்றவர்களின் கருத்தை தடுக்கவில்லையே.

ஜனாதிபதி மாவீரர்கள் கல்லறையை உடைப்பதில் எமக்கு உடன்பாடில்லை. அதை உடைக்க வேண்டிய தேவையும் இல்லை. ஆனால் அரசு அதை உடைத்தது. அந்த இடத்தில் அரசு இராணுவ வீரர்களின் கல்லறைகளை உருவாக்குவது தமிழ் மக்களை வேதனைப்படுத்தும் விடயமாகவே உள்ளது. இராணுவத்திற்காக தூபிகள் கட்டலாம் ஆனால் அந்த மக்களை வேதனைப்படுத்தி அந்த இடத்திலேயே காட்டுவதையே நாங்கள் எதிர்க்கிறோம்.

முறிகண்டி புனிதப்பிரதேசம் அங்கே போய் 5 ஸ்ரார் கோட்டல்களை கட்டினால் அங்கே மாட்டிறைச்சிக் கடை வரத்தான் போகுது. இங்கே தான் இப்படித்தான் மக்களை புண்படுத்தப் போகிறார்கள் என்பதை நாங்கள் ஏற்கனவே சொல்லிய பிறகும் அரசு அதையே செய்கிறது. ஆனால் பௌத்த புனித பிரதேசங்கள் கவனமாக பாதுகாக்கப்படுகின்றது. இப்படித்தான் இலங்கை அரசு செயற்ப்படும் என்றால் இன்னும் ஒரு 20 வருடங்களின் பின்னர் போராட்டம் வேறு வடிவில் உருவெடுக்கும்.

புலம்பெயர்ந்து பெரிய அளவிலான இளம்தலைமுறை வளத்துடன் படிப்புடன் உள்ளது. நாட்டில் 83ம்ஆண்டுக்குப் பிறகு பிறந்த இளம்தலைமுறை தமக்கு அரசியல் உரிமையில்லை என்று கூறுகின்ற சந்ததி உண்டு. அரசியல் தீர்வு ஒன்று தேவை என்பதை அரச உணரத் தவறுகிறது.

தேசம்நெற்: இன்று இலங்கை அரசு தமிழர்க்கான அரசியல் தீர்வை முன்வைக்காது போனால் எதிர்காலத்தில் ஒரு ஆயுதப்போராட்டம் ஒன்று உருவாகும் என்று எதிர்பார்க்கிறீர்களா? நீங்களும் உங்கள் அமைப்பும் இந்தியாவுடன் மிக அன்யோன்னியமான உறவைக் கொண்டிருக்கின்றீர்கள். இலங்கையில் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் முளைவிடுமானால் அதனை இந்தியா ஆதரிக்குமா?

ராம்ராஜ்: திட்டவட்டமாக எதையும் சொல்ல முடியாது. ஆனால் போராட்டம் நடைபெறும். அதன் இறுதியில் ஆயுதம் பாவிக்கப்படலாம். இலங்கையில் சீனாவின் நிலைப்பாடு எப்படி எதிர்காலத்தில் இருக்கும் என்பதைப் பொறுத்துள்ளது என்பது மட்டும் உண்மை.

தேசம்நெற்: கடந்த ரிபிசியின் வரலாற்றில் 2010 வரைக்கும் உள்ள வரலாற்றுக் காலத்தில் ரிபிசியின் பணிகள் பற்றி உங்கள் கருத்துக்கள்?

ராம்ராஜ்: இன்று வரைக்கும் ஆயுத கலாச்சாரம், ஆயுத வன்முறை பற்றித்தான் பேசினோம். இனிமேல் தான் அரசியல் பேசப்போகின்றோம். ரிபிசி கேட்கிற மக்களுக்கு அரசியலை வளர்ப்பதைத்தான் ரிபிசி இனிமேல் செய்யும். கடந்தகால வன்முறைக் கலாச்சாரத்தை விமர்சிப்பதை புலிகளின் வரலாற்றுத் தவறுகளை விமர்சிப்பதும் இதைவிட எல்லாதரப்பு தலைவர்கள் அரசியல் ஆய்வாரள்கள் அரசியல்வாதிகள் அனைவரையும் ஒன்று சேர இருந்து பேச ரிபிசி களத்திற்கு கொண்டுவந்து கலந்துரையாடுவதும், இனிமேல் நாம் எப்படி ஏமாற்றப்படப் போகிறோம் என்பதையும் ஏமாற்றப்படாமல் இருப்பதற்காகவும், அரசியல்பேச வேண்டும். அதற்கான உந்து சக்தியாக இருக்க அரசியல் பேச வேண்டும். தமிழ் மக்கள் அரசியல் உரிமைகளை பெற்றெடுக்க நாம் போராட வேண்டியுள்ளது.

மக்கள் அரசுக்கு என்ன சொல்ல விரும்புகிறார்கள், மக்கள் இந்தியாவிற்கு என்ன சொல்ல விரும்புகிறார்கள், ரிபிசி யை எல்லோரும் கேட்கிறார்கள். இந்த ஊடகக் கடமையை ரிபிசி செய்யும். ரிபிசியை கேட்கும் அரசுகளும் இதில் வரும் கருத்துக்களை அவதானிக்கிறார்கள். இது தமிழ் மக்களின் கருத்தாகவே பார்க்கப்படுகின்றது. இது இலங்கை அரசுக்கும் போய் சேருகின்றது.

இதைவிட மிக முக்கிய பணி உள்ளது. மக்களின் பணம், பெரும் பணம் இங்கு உள்ளது. அது சேர்த்தவருக்கோ அல்லது புலிகளின் பணமோ அல்ல. அது தமிழ் மக்களின் பணம். அது மக்களிடம் போய்ச்சேர வேண்டும். இந்த விடயத்தில் தேசம் ஆசிரியர்கள் நிறையவே செய்கிறார்கள். தேசம் உட்பட நாங்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அரசை எமது நியாயத்தன்மையை உணரவைக்க வேண்டும்.

இன்று ஊடகங்களில் புலிகளின் பினாமிகள் பெரும் வியாபாரிகளாகிவிட்டனர். இதுவும் ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுக்கிறது. ஜனநாயகம் பேசுபவர்கள் ஏன் கோவில் கட்டுகிறார்கள். அங்கே எது போலியானது என்பதும் அவர்கள் உள்நோக்கமும் என்ன என்பது தெளிவானது.

தேசம்நெற்: வி ராம்ராஜ் ரிபிசி வானொலியின் பணிப்பாளர். ஈஎன்டிஎல்எப் இன் உறுப்பினர். வி ராம்ராஜ் இன் உண்மையான அடையாளம் அல்லது அவரின் விருப்பமான அடையாளம் என்ன?

Ramraj_V_Sivalingam_V_TBCராம்ராஜ்: ராம்ராஜ் என்றால் ரிபிசி. ஈஎன்டிஎல்எப் என்றால் முஸ்தபா. இது இரண்டுமே எனது உண்மையான அடையாளங்கள் தான்.

தேசம்நெற்: இறுதியாக குறிப்பாக எதாவது சொல்ல விரும்புகின்றீர்களா?

ராம்ராஜ்: பிரிட்டன், இந்தியா, இலங்கை அரசுகளுடன் தொடர்பில் உள்ளேன். எந்தத் தொடர்பையும் தனிப்பட்ட தேவைகளுக்காகப் பாவிக்கவில்லை. எல்லாமே பொது தேவைக்காகவே பாவித்துள்ளேன். மக்களை, கருத்துச் சொல்ல விரும்புபவர்களை, அரசுக்குச் சொல்ல விரும்புபவர்களை, தலைவர்களுக்கு சொல்ல விரும்புபவர்களை, கருத்துச் சொல்ல இடம் கொடுப்போம். சுதந்திரமாக கருத்துக்களைச் சொல்ல சிந்தனை வளர இடமளிப்போம். இதை ரிபிசி எப்போதும் செய்யும்.