05

05

தேசத்தின் செய்தியை அடுத்து பட்டம் வழங்கும் நிகழ்வைப் பிற்போட்டது உலகத் தமிழ் பல்கலைக்கழகம்

 

உலகத் தமிழ் பல்கலைக்கழகதெ்தால் நாளை 6ஆம் திகதி நடாத்தப்படவிருந்த கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கும் நிகழ்வு தேசம் இணையத்தளத்தில் வெளியாகிய செய்தியையடுத்துப் பிற்போடப்பட்டுள்ளது.

ஆய்வாளர்களோ மாணவர்களோ இல்லாமல் இவ்வாறு கௌரவ கலாநிதிப் பட்டங்களை வழங்குவது என்பது தமிழையும் தமிழ் புலமையையும் கொச்சைப்படுத்தும் என்பதையும் இதை நிராகரிப்பது சமூகக் கடமையெனவும் தேசம் சுட்டிக்காட்டியிருந்தது.

இதையடுத்து பல தரப்பினரிடமிருந்தும் கௌரவப்பட்டம் வழங்குவது தொடர்பில் விமர்சனங்களும் அதிருப்திகளும் வெளியிடப்பட்ட நிலையிலேயே இந்த நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது என அறியக் கிடைக்கின்றது.

நிகழ்வு பிற்போடப்பட்டமைக்கான காரணத்தை உலகத் தமிழ் பல்கலைக்கழகம் குறிப்பிடாத நிலையில் சர்வதேச அங்கீகாரம் உள்ள பல்கலைக்கழகத்தின் பங்களிப்புடன் இதை வழங்குவதற்கு கடும் பிரயத்தனங்கள் எடுக்கப்படுவதாக தெரியவருகின்றது.

நான் மீண்டும் வருவேன் – டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியாக 2016 முதல் 2020-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் இருந்தவர் டொனால்டு டிரம்ப். பல்வேறு அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர் டிரம்ப். இவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வடகொரியாவுடன் நட்பு, இஸ்ரேல் – அரபு நாடுகள் இடையேயான நட்பை ஏற்படுத்துவது உள்பட பல்வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த 2020-ம் ஆண்டு டொனால்டு டிரம்ப் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்தார். புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கிடையே, 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள்  டொனால்டு டிரம்ப் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகின.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசியதாவது: நான் 2 முறை தேர்தலில் போட்டியிட்டேன். 2 முறையும் வெற்றி பெற்றேன். 2016-ம் ஆண்டு பெற்றதை விட 2020-ம் ஆண்டு தேர்தலில் 10 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றேன். அமெரிக்க வரலாற்றில் பதவியில் இருந்த ஜனாதிபதி அதிக வாக்குகள் பெற்றது அதுவே முதல்முறை. நமது நாட்டை பாதுகாப்பாகவும், வெற்றிகரமாக நடத்த நான் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவேன். விரைவில் போட்டியிடுவேன். தயாராக இருங்கள் என தெரிவித்தார்.

உலகக்கிண்ண தொடர் தோல்வி – ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் மொஹமட் நபி ராஜினாமா !

ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் மொஹமட் நபி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

உலகக் கிண்ணத் தொடருக்கான அணி தயார் நிலையில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே அவர் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக வெளிநாட்டு விளையாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், அணி நிர்வாகத்துடனான சில கருத்து வேறுபாடுகளும் அவரது ராஜினாமாவுக்கு வழிவகுத்துள்ளதாக தகவல்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.