உலகத் தமிழ் பல்கலைக்கழகதெ்தால் நாளை 6ஆம் திகதி நடாத்தப்படவிருந்த கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கும் நிகழ்வு தேசம் இணையத்தளத்தில் வெளியாகிய செய்தியையடுத்துப் பிற்போடப்பட்டுள்ளது.
ஆய்வாளர்களோ மாணவர்களோ இல்லாமல் இவ்வாறு கௌரவ கலாநிதிப் பட்டங்களை வழங்குவது என்பது தமிழையும் தமிழ் புலமையையும் கொச்சைப்படுத்தும் என்பதையும் இதை நிராகரிப்பது சமூகக் கடமையெனவும் தேசம் சுட்டிக்காட்டியிருந்தது.
இதையடுத்து பல தரப்பினரிடமிருந்தும் கௌரவப்பட்டம் வழங்குவது தொடர்பில் விமர்சனங்களும் அதிருப்திகளும் வெளியிடப்பட்ட நிலையிலேயே இந்த நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது என அறியக் கிடைக்கின்றது.
நிகழ்வு பிற்போடப்பட்டமைக்கான காரணத்தை உலகத் தமிழ் பல்கலைக்கழகம் குறிப்பிடாத நிலையில் சர்வதேச அங்கீகாரம் உள்ள பல்கலைக்கழகத்தின் பங்களிப்புடன் இதை வழங்குவதற்கு கடும் பிரயத்தனங்கள் எடுக்கப்படுவதாக தெரியவருகின்றது.
புலம்பெயர்ந்தோரிடையே கலாநிதிகளும் கல்லாநிதிகளும்: என்.செல்வராஜா – தேசம்
[…] தேசத்தின் செய்தியை அடுத்து பட்டம் வழங்கும் நிகழ்வைப் பிற்போட்டது உலகத் தமிழ் பல்கலைக்கழகம் https://www.thesamnet.co.uk//?p=90733 […]