கால்பந்து என்றாலே ரசிகர்களுக்கு சற்றென்று நினைவுக்கு வருபவர் அர்ஜென்டினாவின் முன்னாள் வீரர் மாரடோனா. கால்பந்து விளையாட்டில் ஜாம்பவானாக திகழ்ந்தவர். எல்லாக் காலங்களிலும் தலைசிறந்த வீரராக கருதப்படும் மாரடோனா மாரடைப்பால் இன்று காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கால்பந்து வரலாற்றில் ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரர் மாரடோனா என்பது குறிப்பிடத்தக்கது.