27

27

உலகின் மிகப்பெரிய நிலக்கரி துறைமுகத்தில் காலநிலை எதிர்ப்பு போராட்டம் – 109 பேர் பொலிஸாரால் கைது !

உலகின் மிகப்பெரிய நிலக்கரி துறைமுகத்தில், இரண்டு நாட்கள் காலநிலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு அப்பகுதியை முற்றுகையிட்ட 109 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவுஸ்ரேலியாவில் நியூகேஸில் துறைமுகத்தின் கப்பல் பாதையை ஆக்கிரமித்து, போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான ஆர்வலர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.

அரை மில்லியன் டன் நிலக்கரி நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடை செய்ததாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அவுஸ்ரேலியா முழுவதிலும் இருந்து சுமார் 3,000 பேர் அதன் கப்பல் பாதையின் 30 மணி நேர வார இறுதி முற்றுகையில் பங்கேற்றனர், இந்தப் போராட்டம் பொலிஸாரால் அங்கீகரிக்கப்பட்டிருந்த போதும், டசன் கணக்கான எதிர்ப்பாளர்கள் போராட்ட எல்லையை மீறி தண்ணீரில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

இதனால், 109 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட ஐந்து சிறார்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

திங்களன்று, நியூ சவுத் வேல்ஸ் பொலிஸாரின் அறிக்கையின்படி, துறைமுக கால்வாயை விட்டு வெளியேற மறுத்ததற்காக 104 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அவுஸ்ரேலியா உலகின் இரண்டாவது பெரிய நிலக்கரி ஏற்றுமதியாளராக உள்ளது மற்றும் அதன் சொந்த மின்சார தேவைகளுக்கு புதைபடிவ எரிபொருளை நம்பியுள்ளது.

சிட்னியிலிருந்து சுமார் 170 கிமீ (105 மைல்) தொலைவில் அமைந்துள்ள நியூகேஸில் துறைமுகம் நிலக்கரி ஏற்றுமதிக்கான நாட்டின் மிக முக்கியமான முனையமாகும்.

 

அமெரிக்காவில் மூன்று பாலஸ்தீனிய மாணவர்களை இலக்குவைத்து துப்பாக்கி பிரயோகம் !

அமெரிக்காவின் வேர்மன்டில் உள்ள பல்கலைகழகமொன்றிற்கு அருகில் மூன்று பாலஸ்தீனிய மாணவர்களை இலக்குவைத்து துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

வேர்மன்ட் பல்கலைகழக வளாகத்தில் நபர் ஒருவர் பாலஸ்தீன மாணவர்கள் மூவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அராபிமொழியில் உரையாடிக்கொண்டிருந்தவேளை அராபிய ஸ்கார்வ் அணிந்திருந்தவேளை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது ஒருவர் கடும்காயங்களுக்குள்ளாகியுள்ளார் சந்தேகநபரை தேடிவருகின்றோம் என  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெறுப்புணர்வின் காரணமாக இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என குடும்பத்தவர்கள் வேண்டுகோள் விடுத்ள்ளனர்.