03

03

யாழில் கடவுச்சீட்டு அலுவலகம் !

யாழில் கடவுச்சீட்டு அலுவலகம் !

யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புதிய பிராந்திய அலுவலகம் விரைவில் அமைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் இந்த அலுவலகத்தை ஆரம்பிப்பதற்கான அனுமதி நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

வடமாகாண மக்கள் அதிக அளவில் பாஸ்போர்ட் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து வருகின்றனர் என்பதால், துரிதமான சேவைகளை வழங்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய அலுவலகத்தால் பொதுமக்களின் நேரம் மற்றும் பண விரயம் தவிர்க்கப்படும். ஜனவரி 31 ஆம் தேதி ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இதற்கான யோசனை முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

இலஞ்ச ஊழல் மோசடி குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதலமைச்சருக்கு 16 ஆண்டுகள் சிறை !

இலஞ்ச ஊழல் மோசடி குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதலமைச்சருக்கு 16 ஆண்டுகள் சிறை !

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில், வட மத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ். எம். ரஞ்சித், அவரின் மைத்துனி சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு இந்தத் தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் ஏப்ரல் முதலாம் திகதி விதித்து இருந்தது.

2012 மற்றும் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எஸ். எம் ரஞ்சித் சமரகோன் வட மத்திய மாகாணத்தின் முதலமைச்சராக செயல்பட்ட போது அவரின் தனிப்பட்ட செயலாளராக சாந்தி சந்திரசேன பணி யாற்றினர். லஞ்சம் ஊழல் பெற்றது, மற்றும் அதற்கு அரச அதிகாரிகளைத் தூண்டியமை உள்ளிட்ட குற்றங்களிலேயே அவர்களுக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லண்டன் தமிழர்கள் மத்தியில் வாழ்ந்த செக்ஸ் சாமியாரின் வழக்கின் தீர்ப்பு !

லண்டன் தமிழர்கள் மத்தியில் வாழ்ந்த செக்ஸ் சாமியாரின் வழக்கின் தீர்ப்பு !

தமிழ் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட செக்ஸ் சாமியார் எனக் குற்றம்சாட்டப்பட்ட புளிக்கள் முரளிகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அரச தரப்பு சட்டத்தரணி ஏப்ரல் 1 செவ்வாய் கிழமை தன்னுடைய இறுதி வாதத்தை முன்வைத்து பாதிக்கப்பட்;ட பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளைச் சுட்டிக்காட்டி நீதிமன்றத்திடம் நியாயத்தைக் கோரினார்.

ஏப்ரல் 2இல் பாலியல் வன்புணர்வு மற்றும் நான்கு பாலியல் தாக்குதல்கள் குற்றம்சாட்டப்பட்ட புளிக்கள் முரளிகிருஷ்ணனின் சட்டத்தரணி தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்து தங்கள் இறுதிவாதத்தை முன்வைத்தனர்.

புளிக்கள் முரளிகிருஷ்ணனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நிதிமோசடிக் குற்றச்சாட்டை அரசதரப்பு முன்னரே கைவிட்டிருந்தது. தற்போது பாலியல் வன்புணர்வு மற்றும் நான்கு பாலியல் தாக்குதல்கள் பற்றிய விடயங்களிலேயே தீர்பு அளிக்கப்பட உள்ளது.

200,000க்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கின்ற லண்டனில் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளன. ஆலயங்களோடு தொடர்புடையவர்களின் பாலியல் குற்றச்சாட்டுக்கள் சில ஏற்கனவே நிரூபிக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டு உள்ளது. இந்தப் பின்னணியில் லண்டன் தமிழர்கள் இவ்வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்து இருக்கின்றனர்.

தமிழ் கட்சிகள் தேர்தலுக்காக மட்டும் சேராமல் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்காக ஒரே அணியில் செயற்பட வேண்டும் !

தமிழ் கட்சிகள் தேர்தலுக்காக மட்டும் சேராமல் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்காக ஒரே அணியில் செயற்பட வேண்டும் !

இலங்கையின் இராணுவத் தளபதிகளுக்கு எதிரான தடையுத்தரவை பிரித்தானிய அரசு கொண்டுவருவதற்கு பின்னிருந்து செயற்பட்ட சென் கந்தையா