வெள்ளத்தில் மூழ்கியது நுவரெலியா!

வெள்ளத்தில் மூழ்கியது நுவரெலியா!

நுவரெலியாவில் இன்று ஏப்ரல் 28 ஆம் திகதி பெய்த பலத்த மழையால் பெரும் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்­ள­து. இதனால், பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் அடை­மழை கார­ண­மாக நுவரெலியாவில் அதிகமான  தாழ்­நிலப் பகு­திகள் முற்­றாக மூழ்­கி­யுள்­ளன.
சில பிர­தான வீதிகளில் மழை நீர் நிரம்­பி­யுள்­ள­துடன், நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் சிபெட்கோ எரிபொருள் நிலையத்துக்கு முன்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

அத்தோடு, தோட்டங்களை அண்டிய வீடுகளுக்கும் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் பாரிய மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *