சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற காலவகாசம் கோரும் இலங்கை !
சர்வதேச நாணயத்தின் கடன் வசதியினை நீடிப்பதற்கான நான்காவது மதிப்பாய்வு நடந்து வருகின்றது. இதில் கலந்து கொண்டுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழு ஐஎம்எப் விதித்திருக்கின்ற நிபந்தனைகளை நிறைவேற்ற கூடிய கால அவகாசத்தை கேட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஒப்புதல் அளிக்கப்பட்டதா? என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
மேலும் இப்பேச்சு வார்த்தைகளில் ஈடுபடும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிரிவர்தன உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் குழு டொனால்ட் ட்ரம்ப் இலங்கைக்கு விதித்துள்ள வரிச்சலுகைகள் தொடர்பிலும் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்விரு பேச்சுவார்த்தைகள் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.