அரச நிதியை எடுப்பதைக் காட்டிலும் வைப்பு செய்யும் போது தான் தவறு நடந்துள்ளது ! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க !
ஏப்பிரல் 28 ஆம் திகதி இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தில் மூன்று மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கினார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. நிரந்தர வைப்பிலிருந்த அரச நிதியை கணக்கிலிருந்து எடுத்து அரசிற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் வழக்கிலேயே ரணில் சாட்சியமளித்தார்.
அதன்பின்னர் தனது அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். தன்னைப் பொறுத்தவரை நிதியை எடுத்ததில் தவறில்லை. அரச செலவுகளுக்காக ஒதுக்கப்படும் நிதியை வங்கிகளில் வைப்பிலிட நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தில் இடம் இல்லை. எனவே வைப்பிலிட்டதே தவறு என இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் வாதிட்டதாகவுதம் கூறினார். அத்துடன் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திற்கு வழங்கும் கடிதங்களை பிறருக்கு தெரியப்படுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க மட்டக்களப்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திற்கு வழங்கிய கடிதம் குறித்து கருத்துக்கள் தெரிவித்த குரல் பதிவையையும் ஊடகவியலாளர்களுக்கு போட்டுக் காட்டினார்.