விரைவில் தையிட்டி விகாரையை அண்டிய காணிகள் விடுப்பு !
தையிட்டியில் கட்டப்பட்டுள்ள திஸ்ஸமகார விகாரைக்காக சூவிகரிக்கப்பட்ட பொது மக்களின் காணிகளில் விகாரை அமைந்திருக்கும் காணி தவிர ஏனைய காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என என்பிபி அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன. இதன் மூலம் தையிட்டி விகாரையை வைத்து என்பிபி அரசுக்கு எதிராக அரசியல் செய்யும் கட்சிகளுக்கு பின்னடவாக அமையும் எனக் கருதப்படுகிறது.
மே மாதம் 6 திகதி உள்ளூராட்சித் தேர்தல்களுக்கு முன்னராகவே காணிகள் விடுவிக்கப்படும் என்ற அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகள் அனைத்தும் விடுக்கப்படும் என கிளிநொச்சி தேர்தல்ப் பிரச்சார கூட்டத்தில் வைத்து ஜனாதிபதி வாக்குறுதியளித்தமையும் குறிப்பிடத்தக்கது.