கஜாவைத் தேசியத் தலைவர் என்ற சட்டத்தரணி சுகாஸ் – மாட்டிவிட்ட சுரேஸ் !
உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரையின் போது சட்டத்தரணி சுகாஸ் உணர்ச்சி மிகுதியால் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குப் பிறகு தேசியத் தலைவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இருக்கிறார் என்று கூறி வம்பில் மாட்டிக் கொண்டுள்ளார். பின்னர் ஐபிசி தொலைக்காட்சி விவாதத்தில் ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் தான் அப்படி ஒருபோதும் கூறவில்லை என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்கின்றார். இப்போது அந்தக் காணொளி வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தரணிகளும் அரசியல் வாதிகளும் என்றாலே பொய் பேசுபவர்கள் என மக்கள் மத்தியில் நிலவும் பொதுக் கருத்து நிரூபணமாகி இருக்கிறது என்று கூறலாம்.