2009

2009

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ரவுக்கு இலங்கை அரசின் பொருளாதார ஆலோசகர் பதவி?

thaksin.jpgதாய்லாந் தின்  முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ரவுக்கு இலங்கை அரசின் பொருளாதார ஆலோசகர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  அந்நாட்டின் முன்னாள் பிரதமர் தக்சின்  சினவத்ர தாய்லாந்திலிருந்து வெளியேறி வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மற்றொரு முன்னாள் பிரதமரும் சினவத்ரவின் உறவினருமான சோம்சல் வோங்சவட் இந்தத் தகவலைத் தெரிவித்திருப்பதாக பாங்காக் போஸ்ட் என்கிற இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டில் பிரதமர் பதவியில் இருந்து சினவத்ரவை ராணுவம் நீக்கியது. இதன் பிறகு அவர் மீது நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு ஊழல்களில் அவருக்கும் அவரது மனைவிக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. சிறைத் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக தாய்லாந்திலிருந்து வெளியேறிய காலத்தில், இலங்கைக்கு சினவத்ர பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்,  கம்போடியா மற்றும் இலங்கை அரசுகளின் பொருளாதார ஆலோசகராக சினவத்ர நியமிக்கப்படலாம் எனவும், இது எந்த வகையிலும் தாய்லாந்துக்கு அச்சுறுத்தலாக அமையாது எனவும் வோங்சவட் தெரிவித்திருப்பதாக பாங்காங் போஸ்ட் வெளியிட்டிருக்கும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முடியுமானால் நிரூபியுங்கள்; ஒரு வாரகால அவகாசம் – எதிர்க்கட்சிகளுக்கு லக்ஷ்மன் யாப்பா சவால்

ma-ya.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சுமத்தி வரும் ஊழல், மோசடிகள் தொடர்பாக முடியுமாயின் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்க முன்வருமாறு ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன எதிர் கட்சிகளுக்கு பகிரங்க சவால் விடுத்தார். தகுந்த ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமானால் அதற்கு ஒருவார கால அவகாசத்தை வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அவ்வாறு நிரூபிக்க முன்வருபவர்கள் விரும்பும் ஊடகத்தில் விவாத்துக்கு நேரத்தை ஒதுக்கித் தர தயாராக உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி மற்றும் தற்போதைய நிலை தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை நடைபெற்றது. தகவல், ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஆரிய ரூபசிங்க உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் இங்கு மேலும் உரை யாற்றுகையில், தேர்தல் பிரசாரத்திற்காக ஜனாதிபதி மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் எதிர்க்கட்சிகள் பொய்யான குற்றச் சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். இல்லாத ஒன்றை உருவாக்கி மக்களின் மனனத மாற்ற முயல்கின்றன. ஆனால் அதனை மக்கள் ஏற்றுக் கொள்ளப் போதில்லை.

அப்பலோ வைத்தியசாலை, அவுஸ்திரேலிய தூதரக காணி, சுவர்ணவாஹினி போன்ற பல நிறுவனங்களையும் இடங்களையும் இவர்கள் வாங்கியுள்ளதாக பொய்யான பிரசாரங்களை செய்து வருகின்றன. இவற்றில் உண்மை இல்லை. சுவர்ணவாஹினி பணிப்பாளர் இந்தக் குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ளார். அதே போன்று அவுஸ்திரேலிய தூதரகம் அமையப் பெற்ற காணி உரிமையாளர் தம்மிக பெரேரா அது தனது சொந்த காணி என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினர்.

பதிவுச்சான்று கோரவேண்டாமென பொலிஸாருக்கு கண்டிப்பான உத்தரவு – மீண்டும் அறிவுறுத்துகிறார் பிரதிப் பொலிஸ் மா அதிபர்

அவசர அலுவல்களின் நிமித்தம் கொழும்புக்கு வருபவர்கள் பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்துகொள்ள வேண்டுமென்ற கட்டுப்பாடு முற்றாக நீக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் மீண்டும் அறிவுறுத்தல்களை அனுப்புவதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிமல் மெதிவக தெரிவித்தார்.

பதிவுநீக்கம் தொடர்பில் ஏற்கனவே பொலிஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய பிரதிப் பொலிஸ் மா அதிபர், ஒரு மாதம் வரையிலான குறுகிய காலம் கொழும்பில் தங்கியிருப்பதற்குப் பொலிஸில் பதிய வேண்டுமென்ற நடைமுறை நீக்கப்பட்டுள்ளதாகத் திட்டவட்டமாகக் கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைகளுக்கு அமைய அவரின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

முன்பு, மலையக இளைஞர், யுவதிகள் கொழும்புக்கு வருவதற்குப் பொலிஸ் பதிவு நீக்கப்பட வேண்டுமென மலையகக் கட்சிகள் பசில் ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தன. அதன் பின்னர், அவசர அலுவல்கள் காரணமாகவோ, உறவினர், நண்பர்களைப் பார்ப்பதற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ கொழும்பில் வந்து தங்குபவர்கள் பொலிஸில் பதிய வேண்டிய அவசியம் இல்லையென அரசாங்கம் அறிவித்தது.

ஆனால் சில பொலிஸ் நிலையங்களில் முறையான அறிவித்தல்கள் கிடைக்கப்பெறவில்லை எனக் கூறி பொலிஸ் பதிவு கோரப்பட்டதாகத் தகவல்கள் பத்திரிகைகளில் வெளியாகின. எனினும், இவை உண்மைக்குப் புறம்பான தகவல்கள் எனப் பொலிஸ் மா அதிபர் மெதிவக தெரிவித்தார்.

நந்திக் கடல் பகுதியில் நிலத்துக்கு அடியில் நவீன ஆயுதங்கள் மீட்பு

புதுக்குடியிருப்பு சிவந்தபுரம் மற்றும் நந்திக் கடல் பிரதேசங்களில் நிலத்துக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நவீன ரக ஆயுதங்கள் பலவற்றை மத்திய பிரதேச புலனாய்வு மற்றும் தகவல் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 29ஆம் திகதி இவ்வாறு மீட்கப்பட்ட ஆயுதங்களில் ஸ்னைப்பரில் பொருத்தும் இரு ஆயுதங்களும் மற்றும் 75 கிலோ கிராம் நிறையுடைய வெடிபொரு ட்களும் இவ்வாறு மீட்கப்பட்டதாக மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்தார்.

புலிகள் அமைப்பைச் சேர்ந்த உயர்மட்ட தலைவர் ஒருவரிடம் இருந்து பெற்ற தகவலை அடுத்தே இந்த உபகரணங்கள் கைப்பற்றப்பட்டது. ‘சி.4’ ரகத்தைச் சேர்ந்த 35 கிலோ வெடிபொருட்களும், ரீ. என். ரீ. வெடிபொருட்கள் 15 கிலோ கிராமும் 10 கிலோ கிராம் நிறைகொண்ட 15 குண்டுகளும் டெட்டனேட்டர் 21 ஆகியனவற்றையும் புலனாய்வுப் பிரிவினர் மீட்டிருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

‘டில்கோ ஜஃப்னா சிட்டி ஹோட்டல்’ – 80 மில்லியன் ரூபா செலவில் யாழ். நகரில் சுற்றுலா ஹோட்டல்

Tilko_Property_Servicesவடக்கில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் திட்டத்திற்கமைய யாழ். நகரில் 33 அறைகளைக் கொண்ட ‘டில்கோ ஜஃப்னா சிட்டி ஹொட்டேல்’ என்ற சுற்றுலா ஹோட்டல் 2010 ஆம் ஆண்டு திறக்கப்படவுள்ளதாக முதலீட்டுச் சபையின் தலைவர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார். கிழக்கு லண்டன் வர்த்தகப் பிரமுகர் திலக் யாழில் ஹொட்டல் கட்ட ஒப்பந்தம்

சுமார் 80 மில்லியன் ரூபா முதலீட்டுடன் கட்டப்பட்டு வரும் இந்த ஹோட்டல் 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் திறக்கப்படவுள்ளதாக டில்கோ நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தவராஜா திலகராஜா தெரிவித்துள்ளதாகவும் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.

கடற்கரையையும், கடலேரியையும் அண்டியுள்ள பகுதியில் சுமார் 340 பேர்ச்சஸ் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் டில்கோ ஜப்னா சிட்டி ஹோடேல் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர், வர்த்தக சமூகத்தினர் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் சகல வசதிகளையும் கொண்டதாக அமையவிருப்பதாகவும் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.

இலங்கை முதலீட்டு சபையில் இதற்கான ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்தானது. முதலீட்டுச் சபையின் தலைவர் தம்மிக்க பெரேராவும், டில்கோ நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தவராஜா திலகராஜாவும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

வீரசிங்கம் மண்டபத்தை அண்மித்ததாக கட்டப்பட்டு வரும் ‘டில்கோ ஜப்னா சிட்டி ஹோட்டேல்’ திறக்கப்பட்டதும் மேலும் உல்லாசப் பயணத்துறை சார்ந்த ஹோட்டல்களுக்கான முதலீடுகள் செய்யப்படவுள்ளன என்றும் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.

இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும். 03 – புன்னியாமீன் –

sri-lanka.jpg(கடந்த வாரத் தொடர்ச்சி….)

1 ஆவது ஜனாதிபதித் தேர்தல்

1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 30ம் உறுப்புரையின் 2ம் பந்தியில் குடியரசின் ஜனாதிபதியை ஆறாண்டுகளைக் கொண்ட பதவிக் காலத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசியல் வரலாற்றில் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் 1982.10.20ம் திகதி நடைபெற்றது. இத்தேர்தலின் நியமனப்பத்திரங்கள் 1982 செப்டம்பர் 17ம் திகதி கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் காலை 8.00 மணி முதல் 11 மணிவரை தேர்தல் ஆணையாளர் திரு. சந்திரானந்த டி. சில்வா அவர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளினூடாக 6 வேட்பாளர்கள் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்தனர்.

திரு. ஜே.ஆர். ஜயவர்தன  (ஐக்கிய தேசியக் கட்சி)  
திரு. ஹெக்டர் கொப்பேகடுவ  (ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி)
திரு. ரோஹன விஜயவீர   (மக்கள் விடுதலை முன்னணி)
திரு. கொல்வின் ஆர்.டி. சில்வா (லங்கா சமசமாஜக் கட்சி)
திரு. வாசுதேவ நாணயக்கார  (நவ சமசமாஜக் கட்சி)
திரு. குமார் பொன்னம்பலம்   (அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்)

இத்தேர்தலில் 1) ஹேவாலயாகே கீர்த்திரத்தின 2) முதியான்சே தென்னகோன் 3) திருமதி நீனா கெதரின் ஏஞ்சலா பெரேரா விஜேசூரிய ஆகியோரும் சுயேட்சை வேட்பாளர்களாக நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்தனர். இருப்பினும் சட்ட ஏற்பாடுகளுக்கமைய இவர்களின் நியமனப் பத்திரங்கள் தேர்தல் ஆணையாளரினால் நிராகரிக்கப்பட்டன.
1982ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது ஐக்கிய தேசியக்கட்சி,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்கிடையே போட்டி நிலவியபோதிலும்கூட மக்கள் மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பு நிலையே மிகைத்திருந்தது.

காரணம்:
1) இக்கால கட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியும் முன்னாள் பிரதமருமான திருமதி சிரிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை நீக்கப்பட்டிருந்தது. இதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளராக ஹெக்டர் கொப்பேகடுவ நிறுத்தப்பட்ட போதிலும் தேசிய ரீதியில் மக்கள் மத்தியில் பரிச்சயமற்றவராகவே இவர் இருந்தமை.

2) 1970-77க் கிடைப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் கடைபிடிக்கப்பட்ட சோஸலிசப் பொருளாதாரக் கொள்கையினால் நாட்டில் எதிர்நோக்கப்பட்ட பஞ்சநிலையின்போது பாதிப்புற்ற மக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மீது அதிருப்தி நிலையில் இருந்தமையும்,  1977ம் ஆண்டில் பதவிக்கு வந்த ஜே.ஆர். அரசாங்கம் இலங்கையில் முன்வைத்திருந்த திறந்த பொருளாதாரக் கொள்கையினால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட கவர்ச்சி நிலைமையும்,  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மீண்டும் பதவிக்கு வருமிடத்து 1970-1977க்கிடைப்பட்ட கால பஞ்சநிலை மீண்டும் தொடரலாம் என்ற மக்களின் பய உயர்வும்,  (1982 ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக்கட்சியினர் தமது பொருளாதாரக் கொள்கைகளை திட்டவட்டமான முறையில் முன்வைக்காமையும் ஒரு குறையாகவே கூறல் வேண்டும்)

1982-10-20ம் திகதி நடைபெற்ற 1ஆவது ஜனாதிபதித் தேர்தலில் அகில இலங்கை ரீதியாக வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த வாக்காளர் எண்ணிக்கை 8, 144, 995 ஆகும். (ஜனாதிபதித் தேர்தலின்போது இலங்கை பூராவும் ஒரு தொகுதியாகவே கருதப்படும்) இவர்களுள் 6, 602, 612 (81.06 %) வாக்காளர்கள் வாக்களித்த போதிலும்கூட,  6, 522, 147 (79.84  %) வாக்குகளே செல்லுடியான வாக்குகளாக இருந்தன. யாப்பு விதிகளுக்கிணங்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படக்கூடியவர் செல்லுபடியான வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றாக வேண்டும். அதாவது இத்தேர்தலில் 3, 261, 074 வாக்குகளுக்கு மேல் பெறுபவரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவர். திரு. ஜே.ஆர். ஜயவர்தன அவர்கள் 3, 450, 811 வாக்குகளை அதாவது 52.91 சதவீத வாக்குகளை பெற்றதினால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக 1983 பெப்ரவரி 04ம் திகதி மீளவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

1982 ஜனாதிபதித் தேர்தலில் 50சதவீதமான வாக்குகளை விட (3, 261, 074) மேலதிகமான 189, 737 வாக்குகளையும்,  தேர்தலில் 2ம் இடத்தைப் பெற்ற திரு. ஹெக்டர் கொப்பேகடுவையை விட 902, 373 மேலதிக வாக்குகளையும் திரு. ஜயவர்தனா அவர்கள் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் நடைபெற்ற 1ஆவது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் மாகாண ரீதியில் கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  436,290   (57.71%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  276,476   (36.57%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   28,580     (3.78%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     3,022    (0.40%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    9,655    (1.28%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    2,008    (0.26%)

பதியப்பட்ட வாக்குகள்  972,196
செல்லுபடியான வாக்குகள்  756,031  (98.96%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   7,990    (1.04%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 764,021  (78.59%)

கம்பஹா மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  365,838   (52.50%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  301,808   (43.31%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   23,701   (3.40%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     534      (0.88%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    3,835   (0.55%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    1,122   (0.16%)

பதியப்பட்ட வாக்குகள்  835,265
செல்லுபடியான வாக்குகள்  696,838  (99.15 %)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   5,992   (0.85 %)
அளிக்கப்பட்ட வாக்குகள் 702,830  (84.14 %)

களுத்துறை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  211,592   (50.15%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  185,874   (44.06%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   14,499    (3.44%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     443   (0.11%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    8,613   (2.04%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    871   (0.20%)

பதியப்பட்ட வாக்குகள்  499,215
செல்லுபடியான வாக்குகள்  421,892  (98.93%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,548   (1.07%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 426,440  (85.42%)

கண்டி மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  289,621    (59.82%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  178,493    (36.87%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   12,493    (2.58%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     562       (0.12%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    2,256    (1.46%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    718       (0.15%)

பதியப்பட்ட வாக்குகள்  564,767
செல்லுபடியான வாக்குகள்  484,143    (98.96%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,702   (0.96%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 488,845    (86.6%)

மாத்தளை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  94,031   (58.11%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  59,299   (36.66%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   7,169    (4.43%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     253   (0.16%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    866   (0.54%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    196   (0.12%)

பதியப்பட்ட வாக்குகள்  187,276
செல்லுபடியான வாக்குகள்  161,814    (99.13 %)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,414   (0.87%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 163,228    (87.1%)

நுவரெலியா மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  109,017   (63.10%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  57,093   (33.05%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   4,069    (2.35%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     558   (0.32%)
கொல்வின் ஆர்.டி. சில்வா   (L.S.S.P)    1,201   (0.70%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    831   (0.48%)

பதியப்பட்ட வாக்குகள்  201,878
செல்லுபடியான வாக்குகள்  172,769    (98.93%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,048   (1.17%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 174,817    (86.6%)

காலி மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  211,544   (50.23%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  180,925   (42.96%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   20,962    (4.98%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     425      (0.10%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    6,301   (1.50%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    981      (0.23%)

பதியப்பட்ட வாக்குகள்  512,489
செல்லுபடியான வாக்குகள்  421,138    (98.78%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   5,198   (1.22%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 426,336    (83.19%)

மாத்தறை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  164,725  (49.32%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  144,587  (43.29%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   22,117  (6.63%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     474     (0.14%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    1,571  (0.47%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    509     (0.15%)

பதியப்பட்ட வாக்குகள்  399,888
செல்லுபடியான வாக்குகள்  333,983 (99.08%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,091 (0.92%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 337,074 (84.29%)

அம்பாந்தோட்டை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  90,545       (45.90%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  76,402       (38.73%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   28,835     (14.62%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     275        (0.14%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    877        (0.44%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    344        (0.17%)

பதியப்பட்ட வாக்குகள்  241,956
செல்லுபடியான வாக்குகள்  197,278    (99.09%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,804   (0.91%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 199,082    (82.28%)

யாழ்ப்பாண மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  44,780   (20.54%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  77,300   (35.46%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   3,098   (1.42%)
குமார் பொன்னம்பலம்  (T.C)   87,263   (40.03%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    3,376  (1.55%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    2,186  (1.00%)
 
பதியப்பட்ட வாக்குகள்  493,705
செல்லுபடியான வாக்குகள்  218,003    (95.36%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   10,610  (4.64%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 228,613    (46.30%)

வன்னி மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  32,834      (46.42%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  23,221      (32.83%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   2,286      (3.23%)
குமார் பொன்னம்பலம்  (T.C)   11,521      (16.29%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    584       (0.82%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    292       (0.41%)

பதியப்பட்ட வாக்குகள்  119,093
செல்லுபடியான வாக்குகள்  70,739     (96.66%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,447  (3.34%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 73,186     (61.5%)

மட்டக்களப்பு மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  48,094   (40.05%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  21,688  (18.06%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   1,287  (1.07%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     47,095 (39.22%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    1,294 (1.08%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    618  (0.52%)

பதியப்பட்ட வாக்குகள்  172,480
செல்லுபடியான வாக்குகள்  120,076 (97.66%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,876 (2.34%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 122,955 (71.29%)

திகாமடுல்லை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  90,772  (56.39%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  53,096  (32.98%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   7,679  (4.78%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     8,079 (5.02%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    967  (0.60%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    377  (0.23%)

பதியப்பட்ட வாக்குகள்  204,268
செல்லுபடியான வாக்குகள்  160,970 (98.71%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,101 (1.29%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 163,071 (79.83%)

திருகோணமலை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  45,522  (48.63%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  31,700  (33.87%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   5,395  (5.76%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     10,068 (10.76%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    635  (0.69%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    276  (0.29%)

பதியப்பட்ட வாக்குகள்  133,646
செல்லுபடியான வாக்குகள்  93,596  (98.12%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,795 (1.88%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 95,391  (71.37%)

குருனாகலை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  345,769 (55.77%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  248,479 (40.08%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   21,835 (3.52%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     509  (0.08%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    2,594 (0.42%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    792  (0.13%)

பதியப்பட்ட வாக்குகள்  717,505
செல்லுபடியான வாக்குகள்  619,978 (99.13%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   5,431 (0.87%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 625,409 (87.16%)

புத்தளம் மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  128,877 (59.12%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  80,006  (36.70%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   7,001  (3.22%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     817  (0.37%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    1,040 (0.48%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    239  (0.11%)

பதியப்பட்ட வாக்குகள்  267,675
செல்லுபடியான வாக்குகள்  217,980 (99.09%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,995 (0.91%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 219,975 (82.18%)

அனுராதபுர மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  117,873 (49.84%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  102,973 (43.54%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   13,911 (5.88%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     222  (0.09%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    1,148 (0.48%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    396  (0.17%)

பதியப்பட்ட வாக்குகள்  278,594
செல்லுபடியான வாக்குகள்  236,523 (99.04%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,294 (0.96%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 238,817 (85.72%)

பொலநறுவை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  59,414  (56.24%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  37,243  (35.26%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   8,138  (7.70%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     228  (0.22%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    451  (0.43%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    141  (0.13%)

பதியப்பட்ட வாக்குகள்  127,624
செல்லுபடியான வாக்குகள்  105,615 (99.00%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,064 (1.00%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 106,679 (83.59%)

பதுளை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  141,062 (58.62%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  88,642  (36.84%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   7,713  (3.20%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     625  (0.26%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    2,115 (0.89%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    463  (0.19%)

பதியப்பட்ட வாக்குகள்  280,187
செல்லுபடியான வாக்குகள்  240,620 (98.85%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,802 (1.15%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 243,422 (86.88%)

மொனராகலை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  51,264  (49.38%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  44,115  (42.49%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   7,171  (6.91%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     163  (0.16%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    882  (0.84%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    226  (0.22%)

பதியப்பட்ட வாக்குகள்  126,558
செல்லுபடியான வாக்குகள்  103,821 (98.53%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,553 (1.47%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 105,374 (83.26%)

இரத்தினபுரி மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  175,903 (50.90%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  152,506 (44.13%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   11,283 (3.26%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     422  (0.12%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    1,996 (0.58%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    3,494 (1.01%)

பதியப்பட்ட வாக்குகள்  402,202
செல்லுபடியான வாக்குகள்  345,604 (99.02%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,407 (0.98%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 349,011 (86.8%)

கேகாலை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  195,444 (57.02%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  126,538 (36.92%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   13,706 (4.00%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     376  (0.11%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    6,184 (1.80%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    514  (0.15%)

பதியப்பட்ட வாக்குகள்  406,548
செல்லுபடியான வாக்குகள்  342,762 (98.69%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,537 (1.31%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 347,299 (85.4%)

முதலாவது ஜனாதிபதித் தேர்தல் 1982; இறுதித் தேர்தல் முடிவுகள்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  3,450,811 (52.91%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  2,548,438 (39.07%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   273,428 (4.19%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     173, 934 (2.67%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    58,531 (0.90%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    17,005 (0.26%)
பதியப்பட்ட வாக்குகள்  8, 144,995
செல்லுபடியான வாக்குகள்  6, 522,147 (98.78%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   80,470 (1.22%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 6,602,617 (81.06%)

இம்முடிவின்படி ஜனாதிபதியாகத் தெரிவாக குறைந்த பட்சமாகப் பெறவேண்டிய வாக்குகள் (செல்லுபடியான வாக்குகளின் 50% வீதத்துக்கும் அதிகமான வாக்குகள்)

3,261,074

குறைந்த பட்ச வாக்குகளை விட ஜே. ஆர். ஜயவர்தனா அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்

189,737

இரண்டாம் இடத்தைப் பெற்ற திரு ஹெக்டர் கொப்பேகடுவ அவர்களைவிட திரு ஜே. ஆர் அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்

902,373

தொடரும்……..

நாளை நள்ளிரவு முதல் யாழ். ஊரடங்கு முற்றாக நீக்கம்! உதய நாணயக்கார தகவல்

udaya_nanayakkara_brigediars.jpgயாழ். குடா நாட்டில் நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு முற்றாக நீக்கப்படும் என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார  தெரிவித்தார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இத்தகவலை வெளியிட்டார்.

இதுவரை காலமும் நள்ளிரவு 12.00 மணிமுதல் அதிகாலை 4.00 மணிவரை யாழ். குடாநாட்டில் ஊரடங்கு அமுலில் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐ. நா. தொழிற்பாட்டு குழுவின் இணைத்தலைவராக பாலித கொஹொன

khona.jpgதேசிய நியாயாதிக்கத்திற்கு அப்பாற்பட்ட கடல் சார்ந்த உயிரியல் வேறுபாடுகளின் பாதுகாப்பு மற்றும் தொடர்ச்சியான பாவிப்பு என்பது சம்பந்தப்பட்ட விடயங்களை ஆய்வதற்கான ஐ.நா. தொழில்பாட்டு குழுவின் இணைத் தலைவராக நியூயோர்க்கில் ஐ.நா.விற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாகிய தூதுவர் பாலித கொஹொன ஐ.நா. பொதுச் சபையின் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மற்றைய இணைத் தலைவர் நெதர்லாந்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சட்டமதியுரைஞரான கலாநிதி லைஸ்டெத் லிஜின்சாட் ஆவார்.

இவர் நியமனமானது 2010 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஐ.நா. தொழிற்பாட்டு குழுவினது மூன்றாவது கூட்டத்திற்காகவாகும். தேசிய நியாயாதிக்கத் திற்கு அப்பாற்பட்ட கடல் சார்ந்த உயிரியல் வேறுபாடுகளின் பாதுகாப்பு மற்றும் தொடர்ச்சியான பாவிப்பு என்பது சம்பந்தப்பட்ட விடயங்களை ஆய்வதற்கான ஐ.நா. தொழில்பாட்டு குழுவானது கடல்கள் மற்றும் கடல்சார் சட்டம் என்பதான ஐ.நா.வின் தீர்மானத்தைத் தொடர்ந்து ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் தாபிக்கப்பட்டது.

இத்தொழிற்பாட்டுக் குழுவானது உலகளாவிய ரீதியில் கடல் சார்ந்த உயிரியல் வேறுபாடுகளின் பாதுகாப்பு மற்றும் தொடர்ச்சியான பாவிப்பு என்பது சம்பந்தப்பட்ட விடயங்களை ஆய்வு செய்து அதன் சிபார்சுகளை ஐ.நா. பொதுச் சபைக்குச் சமர்ப்பிப்பதற்கு ஆணைப்படுத்தப்பட்டுள்ளது.

கல்முனையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பஸ் சேவை

lax-bas.jpgகல்முனை – யாழ்ப்பாணம் பஸ் சேவை நேற்று முதல் கல்முனை இ. போ. ச. டிப்போவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பிரதான பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து தினமும் அதிகாலை 5.30 மணிக்கு யாழ்ப்பாணத்துக்கு புறப்படும் பஸ் வண்டி காத்தான்குடி, மட்டக்களப்பு, பொலன்னறுவை, வவுனியா வீதி வழியாக யாழ்ப்பாணத்தை சென்றடைந்து மறுநாள் காலை 5.30 மணிக்கு கல்முனைக்கு புறப்படும். இப்புதிய பஸ் சேலை இன்டர் சிட்டி பஸ் சேவையாக இடம்பெறவுள்ளது.

கட்டணம் 825 ரூபாவாகும்.

ஏ-9 ஊடாக 4 நாட்களுக்குள் 30, 000 பேர் பயணம்

kandy-jaffna.jpgஏ-9 வீதி ஊடாக கடந்த நான்கு நாட்களுக்குள் சுமார் முப்பதாயிரம் பேர் சென்று வந்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அதேபோன்று சுமார் இரண்டாயிரம் வாகனங்கள் சென்று வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஏ-9 வீதி ஊடாக பொதுமக்கள் சென்று வர தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காடினார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.