29

29

இலங்கை அரசும் புலிகளும் 200 000 – 300 000 தமிழர்களை ‘guinea pigs’ ஆக நடத்துகின்றனர் – பொறுப்பற்றவர்களின் யுத்தம் : த ஜெயபாலன்

Wanni Childஇப்போதுள்ள நிலையில் யுத்தத்தில் சிக்குண்ட தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் :
1. யுத்தம் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அல்லது
2. அரச படைகளும் புலிகளும் குறைந்த பட்சம் சில தினங்களுக்காவது யுத்தத்தைத் தவிர்த்து மக்கள் பாதுகாப்பாக பாதுகாப்பு வலயங்களுக்கு செல்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
3. பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குதல் நடத்துவதை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
4. பாதுகாப்பு வலயங்களை சர்வதேச மனிதாபிமான அமைப்புகளின் பொறுப்பில் விடவேண்டும்.
5. விடுதலைப் புலிகளும் பாதுகாப்பு வலயங்களுக்கு மக்கள் செல்வதை அனுமதிக்க வேண்டும்.
6. பாதுகாப்பு வலயங்களுக்கு செல்வதற்கான பாதுகாப்பான வழியை புலிகளும் அரச படைகளும் ஏற்படுத்த வேண்டும்.

கட்டுரைக்கான சில ஆதாரக் குறிப்புகள்:

._._._._._.

“வன்னி வாழ் மக்களை மனிதக் கேடயங்களாக நாம் வைத்திருக்கின்றோம் எனக் குற்றம் சாட்டும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள், வன்னிக்கு வந்து நிலைமையை நேரடியாகப் பார்க்க வேண்டும் என நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்” 

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், 27 ஜனவரி 2009
– – – – –

”சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு வன்னியில் நடத்தி வரும் மனிதப் பேரவலத்தைக் கண்டித்தும் அனைத்துலகத்திற்கு உணர்த்தும் வகையிலும் லண்டனில் நாளை மறுநாள் சனிக்கிழமை நடைபெறவுள்ள மாபெரும் ஊர்வலத்தில் லண்டன் வாழ் அனைத்துத் தமிழ் மக்களும் கலந்து கொண்டு பேரெழுச்சியைக் காட்ட வேண்டும்”

எஸ்.ஜெயானந்தமூர்த்தி, TNA MP, 28 ஜனவரி 2009

2002 நிலைமை வந்ததன் பின்னரே பேச்சுவார்த்தை! நிச்சயமாக தனி அரசு தான் தீர்வு!!! – ரிஎன்ஏ எம்பி ஜெயானந்தமூர்த்தியுடன் நேர்காணல் : த ஜெயபாலன் )
– – – – –

Liberation Tigers of Tamileelam (LTTE)’s Political Office on Wednesday categorically denied a news originated in Colombo government’s media, the Daily News, and was highlighted in the International media that LTTE prevented UN convoy transporting injured patients from Mullaiththeevu district to Vavuniyaa hospital. Director of LTTE’s Peace Secretariat S. Puleedevan described the news as mischievous. “In fact, the LTTE has been repeatedly urging the ICRC to facilitate unhindered transportation of injured civilians who need urgent attention and also for the provision of medical facilities locally,” Mr. Puleedevan told TamilNet Wednesday night.

TamilNet, 28 January 2009
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28187
– – – – –

Amnesty has received information that the LTTE have, in at least one instance, prevented injured civilians from moving to safer areas or accessing medical care, an act that could constitute a war crime… A convoy of 24 vehicles, arranged by the Red Cross and the UN to transport up to 300 wounded people, including 50 children, was stopped from leaving the area by the LTTE… The government had declared ’safe zones’ to allow civilians to seek shelter, but information made available to Amnesty International indicates that several civilians in the so-called safe zone have been killed or sustained injuries as a result of artillery bombardment.

Yolanda Foster, Amnesty International’s Sri Lanka researcher, 29 January 2009
http://www.amnesty.org.uk/news_details.asp?NewsID=18045
– – – – –

The United Nations in Sri Lanka will attempt for the second time in three days to help evacuate by convoy hundreds of critically wounded civilians from the war-torn north of the country, including at least 50 seriously injured children. The convoy has been trapped for days in the town which lies just across the lines of confrontation in Tamil Tiger-controlled territory. If permission is granted by the Liberation Tigers of Tamil Eelam and, if a lull in fighting permits, the United Nations convoy will cross the frontline at midday Thursday. The injured will then be transported to Ministry of Health hospitals in Vavuniya to help treat their injuries and wounds.

Marie Okabe, Deputy Spokesperson for the Secretary-General, 28 January 2009
http://www.un.org//News/briefings/docs/2009/db090128.doc.htm
– – – – –

The Sri Lankan government and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) should take immediate steps to allow thousands of civilians trapped in a shrinking conflict zone safe passage and to ensure that they receive desperately needed humanitarian aid, Human Rights Watch said today. Intense fighting between the Sri Lankan army and the separatist LTTE has caught an estimated 250,000 civilians in deadly crossfire, and in the past week civilian casualties have risen dramatically.

The government-ordered September 2008 withdrawal of all UN and nongovernmental humanitarian organizations (with the exception of the ICRC and Caritas) from the Vanni plunged the region into a serious humanitarian crisis, with acute shortages of food, shelter, medicine, and other humanitarian supplies. The humanitarian crisis was documented by Human Rights Watch in its December 2008 report, “Besieged, Displaced, and Detained.” A companion report, “Trapped and Mistreated,” focused on LTTE abuses against the civilian population in the Vanni.

Brad Adams, Asia director at Human Rights Watch. January 28, 2009
http://www.hrw.org/en/news/2009/01/28/sri-lanka-urgent-action-needed-prevent-civilian-deaths
– – – – –

The Office of the Resident Coordinator in Sri Lanka has issued its strongest possible protest to the Liberation Tigers of Tamil Eelam, or LTTE, for their refusal to allow UN national staff and dependents to return from the Vanni region with the present UN convoy. The staff were part of a UN convoy which travelled to the Vanni on 16 January, delivering urgent food and emergency supplies to displaced populations trapped in the midst of fighting in the Vanni. Due to fighting between the LTTE and Government forces, the convoy has only been able to move safely today. The UN calls on the LTTE to meet their responsibilities and immediately permit all UN staff and dependents to freely move from this area, as its denial of safe passage is a clear abrogation of their responsibility under international humanitarian law.

Michèle Montas, Spokesperson for the Secretary-General. 22 january 2009
http://www.un.org//News/briefings/docs/2009/db090122.doc.htm

குறிப்பு: யுத்தப் பகுதியில் காயமடைந்த பொது மக்கள் (50 வரையான சிறார்கள் உட்பட) அப்பகுதியில் இருந்து ஐநா வாகனங்களில் வெளியே கொண்டுவரப்பட்டு உள்ளதாக ஐநா பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச அழுத்தங்களை அடுத்து இன்று (ஜனவரி 29) காயப்பட்டவர்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த நான்கு வாரங்களில் மட்டும் 220 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் நூற்றுக் கணக்காணவர்கள் காயப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
._._._._._.

இலங்கை அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான யுத்த பிரதேசத்தின் எல்லைகள் குறுகிக் குறுகி தற்போது சில பத்து மைல்களுக்குள் யுத்தம் குறுக்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள மிகப்பெரிய ஆபத்து இந்த குறுகிய சுற்றளவுக்குள் 200 000 – 300 000 பொதுமக்கள் அகப்பட்டு உள்ளனர். புலிகள் வடக்கு கிழக்கின் நிலப் பிரதேசங்களை பெரும்பாலும் முழுமையாக இழந்த நிலையில் இந்த சில பத்து மைல் சுற்றளவுக்குள் இலங்கை அரச படைகளும் புலிகளும் யுத்தத்தைத் தொடர்கின்றனர்.

வடக்கு கிழக்கின் பெரும்பாலான பகுதிகளை போர்த்தந்திரத்துடன் மெது மெதுவாக தங்கள் ஆயுத தளபாடங்களுடன் நிதானமாக பின்வாங்கிய புலிகள் தற்போது மிகக் குறுகிய மக்கள் செறிவான பகுதியில் ‘போர்த் தந்திரத்துடன்’ யுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். ( முல்லைத்தீவு முற்றுப் புள்ளியல்ல! புலிகளின் புதிய அத்தியாயம்! : த ஜெயபாலன் )

இலங்கை அரசு யுத்தத்தில் காட்டும் வேகத்தில் தமிழ் மக்களின் மனித அவலம் பற்றி அக்கறை கொள்ள மறுக்கிறது. புலிகளுக்கு எதிரான தாக்குதலைத் தொடர முன் யுத்தத்தில் அகப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தத் தவறியுள்ளது. பாதுகாப்பு வலயத்தை அறிவித்த இலங்கை அரசு அப்பகுதிகளை சர்வதேச உரிமை அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட வில்லை. மேலும் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலேயே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. 200 000 – 300 000 மக்கள் உள்ள பகுதியில் ஒரு நாட்டின் சட்டபூர்வமான அரசு யுதத்தை முடக்கி விட்டிருப்பது அந்த மக்களை (human guinea pigs) பரிசோதணைக் கூட விலங்குகளாக்கி உள்ளனர்.

‘வன்னி மக்களும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைப்பேன்’ என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் ‘எமது பாதுகாப்பில் வாழ்வதை விரும்பியே கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெயர்ந்து மக்கள் எம்முடன் வருகின்றனர்’ என்று புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா நடேசனும் வாய்த் தர்க்கம் புரிகின்றனர். யுத்தத்தில் அகப்பட்டுள்ள மக்களின் நிலைபற்றி எவ்வித உறுத்தலும் இன்றி அந்த மக்களை யுத்த பிரதேசத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கம் இன்றி வெறும் வார்த்தை ஜாலங்களும் மறுப்புகளும் மட்டுமே இரு தரப்பில் இருந்தும் வந்து உள்ளது. ( தொடரும் யுத்தமும் வன்னி மக்களின் ஏக்கமும் : த ஜெயபாலன் )

இலங்கை அரசுக்கு வேண்டியது விடுதலைப் புலிகளின் முழுநிலப்பரப்பையும் கைப்பற்றி அரச கட்டுப்பாட்டுக்குள் அவை வந்துவிட்டது என்ற செய்தி. அந்தச் செய்தி சுதந்திர தினத்திற்கு முன்னதாகவே வந்துவிட வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது. புலிகளைப் பொறுத்தவரை தங்களுடைய சகல பிரதேசங்களையும் இழந்தவர்கள் இந்த மக்களை வைத்துக் கொண்டு ‘ஒரு யுத்த நிறுத்தம்’, ‘ஒரு யுத்த பேரம்’ நடத்தி ‘வீழ்ந்தும் பிரபாவின் மீசையில் மண்படவில்லை’ என்று எழும்புவதற்கான ஒரு வாய்ப்பு. இந்த பொறுப்பற்ற யுத்தத்தில் ஈடுபட்டவர்களின் நலன்களுக்கு 200 000 – 300 000 மக்கள் பணயம் வைக்கப்பட்டு உள்ளனர். இதில் இருதரப்பினருமே குற்றவாளிகள் தான்.

இலங்கை அரசு சட்ட ரீதியான ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்ற அடிப்படையில் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புடையது. புலிகளைப் பயங்கரவாதிகள் என்று குற்றம்சாட்டும் அரசு, தான் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடாமல் சர்வதேச விழுமியங்களுக்கு அமைய செயற்பட வேண்டும். ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் அவர் அனைத்து ஜனநாயக விழுமியங்களையும் மீறி ‘அரசியல் தாதா’வாகவே செயற்படுகிறார். புலிகளின் இறுதிக் கோட்டையான முல்லைத் தீவையும் கைப்பற்றி தன்னை ஒரு துட்டகைமுனுவாக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முற்பட்டு உள்ளார்.

புலிகளைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று தங்களைத் தாங்களே பிரகடனப்படுத்தி ஈழத் தமிழர்களை ஆள்வதற்கான உரிமை தங்களுக்கு மட்டுமே உண்டென்று மார் தட்டியவர்கள். அப்படியானால் இலங்கை அரசிலும் பார்க்க ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு அவர்களுடையது. ஆனால் இன்று அந்த மக்களைப் பணயம் வைத்து தங்களது மீசையில் மண்படவில்லை என்று காட்ட முற்பட்டு உள்ளனர். தமது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிலப்பரப்பில் இருந்தும் பின்வாங்கிய புலிகள் மக்கள் செறிந்துள்ள பகுதிகளுக்குள் பின்வாங்காமல் நின்று தாக்குவதோ அல்லது பதில் தாக்குதல் நடத்துவதோ எந்த விதத்திலும் அந்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாது. ‘சிங்கள அரசு தமிழ் மக்களை நரபலி செய்கிறது’ என்று முன்னாள் கூட்டணித் தலைவர்கள் மேடையில் பேசுவது போல ஐபிசியில் செய்தி வாசிக்கவே இந்த தாக்குதல்கள் உதவும். இழப்புகளை அரசியலாக்கும் மூன்றாம்தர அரசியலே தற்போது புலிகளின் கடைசி ஆயுதமாக மாறி உள்ளது. ( தவறிப் போகும் பிரபாவின் தலைமை : த ஜெயபாலன் )

இந்த யுத்த பிரதேசத்திற்குள் சிக்குண்ட ஒவ்வொரு பொதுமகனதும் பொது மகளதும் இழப்புக்கும் அவலத்திற்கும் இலங்கை அரசபடைகளும் புலிகளுமே பொறுப்பு. யார் எங்கிருந்து தாக்குதல் நடத்துகிறார்கள். யார் பதில் தாக்குதல் நடத்துகிறார்கள் என்ற விசாரணை இரண்டாம் பட்சமானது. யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினருமே இடையில் சிக்குண்ட மக்கள் பற்றி எவ்வித அக்கறையும் கொண்டிருக்கவில்லை என்பது சுயாதீன அமைப்புகளின் அறிக்கைகளில் இருந்து தெரியவருகிறது. சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் அறிக்கைகள் இரு தரப்பினரதும் பொறுப்பற்ற நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி உள்ளன.

இதற்கிடையே புலம்பெயர் தமிழர்கள் பல்லாயிரக் கணக்கில் திரண்டு இலங்கை அரசின் மீது தங்களது ஆக்ரோசமான கண்டனத்தை தெரிவித்து உள்ளனர். அவர்களுடைய கோபம் நியாயமானது. அது இலங்கை அரசுக்கு எதிராக அமைந்ததிலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.

ஆனால் இந்த எதிர்ப்புகளை ஒழுங்கு செய்பவர்கள் விடுதலைப் புலிகளாக அல்லது பெரும்பாலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதராவனவர்களாக இருப்பதாலேயே அந்த எதிர்ப்பு பலமிழந்து போய்விடுகிறது. அந்த எதிர்ப் நடவடிக்கைகளின் போது வைக்கப்படும் கோசங்கள் மக்கள் நலன்சார்ந்ததாக இல்லாமல் புலிகளின் நலன் சார்ந்ததாகவே அமைந்துவிடுகிறது. புலிக் கொடியும் வே பிரபாகரனின் உருவப்படத்தையும் தூக்கிச் சென்று மனித உரிமைகள் பற்றி கதைக்கின்ற அளவுக்கு வே பிரபாகரனினதோ புலிகளினதோ மனித உரிமைப் பார்வை ஒன்றும் மெச்சத்தக்கது அல்ல. ‘புலிகளும் தமிழ் மக்களும் வேறு வேறல்ல. புலிகள் தான் தமிழ் மக்கள். தமிழ் மக்கள் தான் புலிகள்’ என்று கதையளப்பது யுத்தத்தில் சிக்கியுள்ள தமிழ் மக்களை ஆபத்தில் தள்ளவே வழிவகுக்கும்.

லண்டனில் ஜனவரி 31 அன்று பிரித்தானிய தமிழர் பேரவை STOP SRI LANKA’S GENOCIDE OF TAMILS என்ற தலைப்பில் மாபெரும் ஊர்வலம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஜனவரி 31 மதியம் ஒரு மணிக்கு மில்பாங்கில் ஆரம்பிக்கும் ஊர்வலம் ரெம்பிள் பலசில் முடிவடைகிறது. ‘We shall gather to fight for our rights’  என்று இந்த எதிர்ப்பு ஊர்வலத்திற்கு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்தள்ளது. ஜனவரி 27 அன்று பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் லோட் மலோச் பிறவுண் வெளியுறவுச் செயலர் மில்பாங்க் ஆகியோருடன் பிரித்தானியன தமிழர் பேரவையினர் ஒரு சந்திப்பை நடத்தி இருந்தனர். அச்சந்திப்பும் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. பிரித்தானிய அரசு இலங்கை அரசின் செயற்பாடுகளைக் கண்டிக்க தயாராக இருக்கவில்லை. வெளியுறவு அமைச்சகம் ஜனவரி 21ல் வெளியிட்ட அறிக்கை தொடர்பாகவும் பிரித்தானிய தமிழர் பேரவை அதிருப்தியைத் தெரிவித்து இருந்தது. ( பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் அறிக்கைக்கு பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனம் )

Protest_Swissபிரித்தானிய தமிழர் பேரவை தமிழ் மக்களின் சுயாதீனக் குரலாக அல்லாமல் புலிகளின் குரலாகச் செயற்படுகிறது என்ற குற்றச்சாட்டு அது ஆரம்பிக்கப்பட்டது முதல் இருந்து வருகிறது. ( பிரித்தானிய தமிழ் போறமும் அதன் அரசியலும் : த ஜெயபாலன் ) இலங்கை அரசுக்கு குறையாத வகையில் விடுதலைப் புலிகளும் மனித உரிமை மீறல் செய்துள்ள நிலையில் சுயாதீனமாக அல்லாமல் புலிகள் சார்ந்து இயங்கும் எந்த அமைப்பினதும் நியாயத்தன்மை அடிபட்டுப் போவது இது முதற்தடவையல்ல. இந்தப் பாடத்தை புலம்பெயர் தமிழ் அமைப்புகள் விளங்கிக்கொள்வதாக இல்லை. (  ”புலிகளுக்கும் தமிழீழம் வேணும். பிரிஎப் க்கும் தமிழீழம் வேணும். ஆனால் புலிகளின் மெதடோலஜியை பிரிஎப் சஸ்கிறைப் பண்ணவில்லை” சுரேன் சுரேந்திரனுடன் நேர்காணல் : த ஜெயபாலன்)

காசாவில் இஸரேல் குண்டுகளைப் பொழிந்து பாலஸ்தீனியர்களைக் கொன்றொழித்த போது யாரும் ஹமாஸின் தடையை நீக்கச் சொல்லிக் கேட்கவில்லை. ஹமாஸ் தலைவர்களின் படத்தையும் ஹமாஸின் கொடியையும் தாங்கி ஊர்வலம் செய்யவில்லை. இஸ்ரேலுக்கு எதிராக ஊர்வலத்தில் பாலஸ்தீனியர்கள் மட்டும் பங்கெடுக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இஸ்ரேலுக்கு எதிரான எதிர்ப்பு ஊர்வலத்தை ஏற்பாடு செய்தவர்கள் பாலஸ்தீனியர்கள் அல்ல.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் முதலில் தங்களது புலிவாலாத் தனங்களை கைவிட்டு தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக மட்டும் போராடுவதன் மூலமே தமிழ் மக்களின் அடிப்படை நியாயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர முடியும்.  (  காஸாவில் இருந்து கிளிநொச்சிவரை புரிந்துகொள்ளாத பாடம் : த ஜெயபாலன் )

மேலும் இன்று யுத்தமுனையில் தமிழ் மக்கள் சந்திக்கும் அவலத்திற்கு புலிகளுக்கும் சம பொறுப்பு உண்டு. அப்படி இருக்கையில் புலிக்கொடியையும் பிரபாகரனின் உருவப்படத்தையும் தாங்கிச் சென்று தமிழ் மக்களுக்கு நியாயம் கேட்க முடியாது.

இப்போதுள்ள நிலையில் யுத்தத்தில் சிக்குண்ட தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால்
1. யுத்தம் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அல்லது
2. அரச படைகளும் புலிகளும் குறைந்த பட்சம் சில தினங்களுக்காவது யுத்தத்தைத் தவிர்த்து மக்கள் பாதுகாப்பாக பாதுகாப்பு வலயங்களுக்கு செல்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
3. பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குதல் நடத்துவதை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
4. பாதுகாப்பு வலயங்களை சர்வதேச மனிதாபிமான அமைப்புகளின் பொறுப்பில் விடவேண்டும்.
5. விடுதலைப் புலிகளும் பாதுகாப்பு வலயங்களுக்கு மக்கள் செல்வதை அனுமதிக்க வேண்டும்.
6. பாதுகாப்பு வலயங்களுக்கு செல்வதற்கான பாதுகாப்பான வழியை புலிகளும் அரச படைகளும் ஏற்படுத்த வேண்டும்.

மக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் உருப்படியான நடவடிக்கைகள் எதனையும் எடுக்காமல் அறிக்கைவிடுவதும் பதிலறிக்கை விடுவதும் மறுப்பறிக்கை விடுவதும் பொறுப்பற்ற தன்மையின் வெளிப்பாடே.

அப்பாவி தமிழ் மக்களைத் தண்டிக்காதீர்கள்! : தமிழ் சமாதான ஒன்றியம்

TFP Logoஇலங்கையில் தொடர்ந்துவரும் இனப்போரில்; அகப்பட்டுள்ள அப்பாவிப் பொதுமக்கள் பேரழிவுகளுக்கு உள்ளாகும் சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்துவரும் செய்திகளையிட்டு தமிழ் சமாதான ஒன்றியம் கவலை கொண்டுள்ளது. இலங்கை அரசும், தமிழீழ விடுதலைப் புலிகளும் பொதுமக்களின் நலன்களை புறந்தள்ளி அப்பாவிப் பொது மக்களை தொடர்ந்து பணயக் கேடையங்களாக பாவித்து போர் புரிவதை தமிழ் சமாதான ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்க விரும்புகின்றது. குறிப்பாக, இலங்கை அரசு ஏற்படுத்தியிருந்த பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்திலிருந்து இலங்கை அரச படைகள்மீது போர் புரிவதன்மூலம் பொது மக்களுக்கு ஏற்படும் இழப்புகள் அதிகரிக்கச் செய்வதை தமிழீழ விடுதலைப் புலிகள் உடனடியாகக் கைவிடவேண்டுமென தமிழ் சமாதான ஒன்றியம் வற்புறுத்துகிறது.

போரில் சிக்குண்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரும் வரையில் இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் உடனடியாகப் போர்நிறுத்தம் ஒன்றை செய்யவேண்டுமென தமிழ் சமாதான ஒன்றியம் கோருகிறது. அத்துடன் சர்வதேச கண்காணிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் ஏற்படுத்தப்படும் பாதுகாப்பு வலயமொன்றில் பொதுமக்கள் சென்று சேர்வதற்கான ஏற்பாடுகளை இரு பகுதியினரும் உடனடியாக செய்யவேண்டுமெனவும் தமிழ் சமாதான ஒன்றியம் கருதுகிறது.

போரில் சிக்குண்டுள்ள அப்பாவிப் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும், வணக்கத்திற்குரிய யாழ் அதிமேற்றிராணியார் அவர்களும் மற்றும் ஜக்கிய நாடுகள் ஸ்தாபனமும் இதுவரையில் தெரிவித்திருந்த கருத்துக்களை கவனத்திலெடுத்து செயற்படுமாறு இலங்கை அரசையும், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழ் சமாதான ஒன்றியம் கேட்டுக் கொள்கிறது. இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பில் பொறுப்பாக நடந்துகொள்ள கடமைப்பட்டவர்கள் என்பதை தமிழ் சமாதான ஒன்றியம் நினைவூட்ட விரும்புகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் குறிப்பிட்ட சிறுபகுதியினுள் முடக்கப்பட்ட நிலையில் அவர்களை மேலும் பலவீனப்படுத்துவதற்காக அப்பாவி மக்களைக் கொல்லக்கூடிய போர் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துவது மட்டுமே இலங்கை அரசு தமிழ் மக்கள் மேல் அக்கறை கொண்டுள்ளது என்பதை வெளிபடுத்தும். தற்பாதுபாப்பு அணுகுமுறைகளை மேற்கொண்டு மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துவதை நிறுத்தவும் அப்பிரதேசங்களிலிருந்து மக்கள் வெளியேறவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு தமிழ் சமாதான ஒன்றியம் அரச தரப்பினரை கேட்டுக் கொள்கிறது. அதற்கு ஆவன செய்யுமாறு புலம் பெயர்ந்து வாழும் எமது மக்களையும் இந்திய அரசு உட்பட அனைத்து உலக நாடுகளையும் சர்வதேச அமைப்புக்களையும் சமய நிறுவனங்களையும் கரம் கொடுத்து உதவுமாறு தமிழ் சமாதான ஒன்றியம் கோருகிறது.

பிரிட்டனின் எக்கனோமிஸ்ட் சஞ்சிகைக்கு தாய்லாந்தில் தடை

பிரிட்டனை தளமாகக் கொண்டு வெளியாகும் எக்கனோமிஸ்ட் சஞ்சிகையின் புதிய வெளியீட்டிற்கு தாய்லாந்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.  இராஜ குடும்பம் தொடர்பாக வெளிவரும் கட்டுரை இப்பதிப்பில் பிரசுரமாவதால் மக்களிடையே நிலவும் சர்ச்சைகளுக்கு மத்தியிலேயே இச்சஞ்சிகையின் வெளியீட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசாட்சியை அவதூறாக விமர்சித்தமைக்காக சிறைவைக்கப்பட்டிருக்கும் அவுஸ்திரேலிய எழுத்தாளரின் கட்டுரையே இப்பதிப்பில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை பொது வாழ்வில் தாய்லாந்து மன்னரின் செயற்பாடு குறித்துக் கேள்வி எழுப்பி இருந்தமைக்காக கடந்தமாதமும் இச்சஞ்சிகையின் வெளியீட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

வவுனியா ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த 26 உடல்களும் பூந்தோட்டம் மயானத்தில் அடக்கம்

வவுனியா அரசினர் பொது வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்த அடையாளம் காணப்படாத 26 சடலங்களும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியவில் அரசாங்க செலவில் பூந்தோட்டம் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட நீதிமன்றின் உத்தரவுடன் சடலங்களை பொலிஸார் அடக்கம் செய்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. வன்னிப் போர்முனைப் பகுதியில் இராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்ட இவையாவும் புலிகளின் சடலங்கள் எனத் தெரிவிக்கப்பட்டு சவச்சாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. சடலங்களை பொறுப்பேற்குமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் பொலிஸார் கேட்டிருந்தனர். பழுதடைந்த நிலையில் இவை இருந்ததால் சவச்சாலையிலிருந்து விரைவாக அப்புறப்படுத்தப்பட வேண்டுமென பொலிஸார் தெரிவித்திருந்தனர். அத்துடன் சவச்சாலையில் இடநெருக்கடியும் ஏற்பட்டிருந்தது. தொடர்ந்தும் சடலங்களை வைத்திருக்க முடியாத நிலையில் மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் பொலிஸார் சடலங்களை அடக்கம் செய்தனர்.

முத்துக்குமாரின் தீக்குளிப்பு எதிரொலி – இலங்கை வங்கி தாக்குதல் :தூதரகத்திற்கும் பலத்த பாதுகாப்பு

ஈழத்தமிழருக்காக தீக்குளித்து உயிர்நீத்த வாலிபர் முத்துக்குமாரின் எதிரொலியாக சென்னையில் உள்ள இலங்கை அரசுக்கு சொந்தமான வங்கி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது.

சென்னை வேப்பேரியில் பூந்தமல்லி சாலையில் வணிகவளாகத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கியில் இன்று மாலை 4மணிக்கு 50க்கும் மேற்பட்டவர்கள் காவலுக்கு நின்றிருந்த போலீசாரை மீறி உருட்டுக்கட்டைகளுடன் உள்ளே நுழைந்தனர். வங்கியின் ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன.  முக்கிய ஆவணங்கள் அள்ளி வீசப்பட்டன. வணிகவளாகத்தின் மூன்று அடுக்கு மாடியில் இருந்த கண்ணாடிகளும் அடித்து நொறூக்கப்பட்டன. வங்கி அதிகாரிகளின்  கார்களும் அடித்து நொறுக்கப்பட்டன. பின்னர் போலீசார் வந்து பதட்ட நிலையை சரிப்படுத்தினர். மேலும் இந்த வங்கியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தையும் தாக்கக்கூடும் என்று முன்னெச்சரிக்கையாக அங்கே போலீசார் குவிந்துள்ளனர். எந்த அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விசுமடு நகரப் பகுதி முழுவதையும் இராணுவம் கைப்பற்றியுள்ளது

viswamadu_2901.jpgநேற்று பிற்பகல் விசுவமடு சந்தியைக் கைப்பற்றிய இராணுவத்தின் 58வது படையணியினர் அதனைத் தொடர்ந்து விசுவமடு நகரப் பகுதி முழுவதையும் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். விசுவமடு பகுதியில் புலிகளின் முன்னரங்க நிலைகள், அரசியல் அலுவலகங்கள் மாவீரர் இல்லங்கள் என்பவற்றையும் படையினர் கைப்பற்றி தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
 

புலிகள் அனுமதித்தால் காயமடைந்தவர்களை மீட்போம்: ஐ.நா.

uno.gifஇலங்கையின் போர் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி மக்களை மீட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஐ.நா. திட்டமிட்டுள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே தற்போது போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பல்வேறு நகரங்களை பிடித்துள்ள ராணுவம், தற்போது முல்லைத்தீவையும் பிடிக்க போராடி வருகிறது.

இந்நிலையில், போரினால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் இரண்டரை லட்சம் அப்பாவிப் பொதுமக்கள் வன்னிக் காட்டுப் பகுதியில் சிக்கியுள்ளனர். இவர்களில் சுமார் 50 குழந்தைகள் உள்பட பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், போரினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களை மீட்டு, சிகிச்சையளிக்க தயாராக இருப்பதாகவும், இதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும் என்றும் ஐ.நா.சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூனின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “புலிகள் அனுமதித்தால், இன்று பகல் நேரத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, வவுனியாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.காயமடைந்தவர்களை போர் நடக்கும் பகுதியில் இருந்து மீட்பதற்காக சென்ற ஐ.நா மீட்புக் குழு, புதுக்குடியிருப்பு பகுதியில் சிக்கியுள்ளது. இப்பகுதி விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கே.வி. பாலகுமாரன் மூத்த தலைவர் படுகாயம்

Balakumar Kஇலங்கையில் ராணுவத்துடன் நடந்த கடும் சண்டையில் விடுதலை புலிகளின் மூத்த தலைவர் கே.வி. பாலகுமாரன் படுகாயமடைந்ததாக, புலிகள் ஆதரவு இணையதளம் கூறியுள்ளது. முல்லைத்தீவு பகுதியிலுள்ள உடையார்காட்டில் கடந்த திங்களன்று நடந்த கடும் சண்டையில், எல்டிடிஈ மூத்த தலைவரும் சிறப்பு உறுப்பினருமான பாலகுமாரன் படுகாயமடைந்ததாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக, அந்த இணையதளம் கூறுகிறது. ‘ஈழ புரட்சிகர மாணவர் அமைப்பின் (ஈராஸ்) முன்னாள் தலைவரான பாலகுமாரன், கடந்த 90-களில் தனது ஆதரவாளர்களுடன் விடுதலை புலிகள் அமைப்பில் இணைந்தார்.

கடந்த 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு ராணுவத்துடன் நடந்த மோதலில் புலிகளின் மூத்த தலைவர் ஒருவருக்கு ஏற்பட்ட மிகமோசமான பாதிப்பு இதுவாகும். இதற்கு முன் கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பரில், புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் (முன்னாள்) தமிழ்செல்வன் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாஸ்திரி பவன் முன்பு பத்திரிக்கை நிறுவன ஊழியர் தீக்குளித்துத் தற்கொலை

muthukumar.jpgஇலங்கையில் நடந்து வரும் இனப்படுகொலையைக் கண்டிக்காத மத்திய அரசைக் கண்டித்து சென்னையில், சாஸ்திரி பவன் முன்பு பத்திரிக்கை நிறுவன ஊழியர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமரன் (28) எனும் இளைஞ‌ர் சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று காலை மத்திய அரசு அலுவலக வளாகமான சாஸ்திரி பவனுக்கு வந்த அவர், இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்தும், ராஜபக்சேவைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் கோஷமிட்டார். பின்னர் சட்டென்று தனது கையில் இருந்த மண்ணெண்ணையை மேலே ஊற்றிக் கொண்டு தீவைத்துக் கொண்டார்.கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த சம்பவத்தால் அப்பகுதியே அதிர்ந்து போனது.  உடல் முழுக்க தீ பற்றி எரிய அவர் சாஸ்திரி பவனுக்குள் அங்கும் இங்கும் அலறியபடி ஓடினார்.

இதற்கிடையே உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துக்குமர‌ன் ஒரு இடத்தில் சாய்ந்து விழுந்தார். அவர் மீது எரிந்துக் கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டது. உடனடியாக அவரை மீட்ட காவல்துறையினர் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அ‌ங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ப‌ட்டும் பயனின்றி மரணமடைந்தார்.

தீ‌க்கு‌‌‌ளி‌த்து இற‌ந்த முத்துக்குமரன், செ‌ன்னை கொள‌த்தூ‌‌ர் மக்கான் தோட்டம் திருவள்ளுவர் தெருவி‌ல் வ‌சி‌த்து வ‌ந்து‌ள்ளா‌ர். இவரது சொ‌ந்த ஊ‌ர் தூ‌‌த்து‌க்குடி மாவ‌ட்ட‌ம் பு‌லியந‌ல்லூ‌ர் எ‌ன்ற ‌கிராம‌ம் ஆகு‌ம். ‘மக்கள் தொலைக்காட்சியில் பணிபுரிபவர், ‘பெண்னே நீ மாத இதழில் கணினி துறையில் பணியாற்றி வந்தார்.
.
ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்: சாகும் தருணத்தில் முத்துக்குரின் வாக்குமூலம்

shastri-bhavan.jpg”ஈழத் தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்” என்று சென்னையில் தீக்குளித்த வாலிபர் முத்துக்குமரன் வாக்குமூலம் கொடுத்துள்ளார். உயிருக்கு போராடிய அவரை சிகிக்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மருத்துவர்களிடம் பேசிய முத்துக்குமரன், தீக்குளித்த தன்னை யாரும் காப்பாற்றி விடக்கூடாது என்பதற்காக, பெட்ரோல் கேனில் பெரிய அளிவில் ஓட்டை போட்டு, மண்ணென்ணெய்யை தன் மீது ஊற்றிக்கொண்டதாக தெரிவித்தார். இப்படி புத்திசாலித்தனமாக இருக்கும் ஏன் தீக்குளித்தாய் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு, ‘என்னைவிட புத்திசாலியான குழந்தைகள், சிறுவர்கள், வாலிபர்கள், பெண்கள் அனைவரும் இலங்கையில் கொல்லப்படுகிறார்கள். போர் முனையில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திதான் நான் தீக்குளித்தேன்’ என முத்துக்குமரன் தெரிவித்தார்.

மேலும் பேசிய முத்துக்குமரன், ”எங்கள் ஊரில் போருக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் அதிகம். உலக அமைதிக்காக போராடுபவர்கள் அதிகப் பேர் இருக்கிறார்கள். ‘கொள்கை நல்லூர்’ என்றே எங்கள் ஊரை சொல்லுவார்கள் என்றார். அந்த ஊரில் பிறந்த நான் ஈழத் தமிழர்களுக்காக உயிர் விடுவதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன்” என்றார்.

முத்துக்குமாரின் மரணத்துக்கு பிறகாவது இந்தியா போர் நிறுத்தத்தை கொண்டுவர வேண்டும் – வைகோ

இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி தீக்குளித்த தூத்துக்குடி வாலிபர் முத்துக்குமரனின் மரணத்துக்கு பிறகாவது இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு வந்த வைகோ, மருத்துவமனை உள்ளே சென்று முத்துக்குமரனின் கருகிப்போன சடலத்தைப் பார்த்து அழுதார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீரத்தமிழன் முத்துக்குமரன் ஈழத் தமிழர்களுக்காக தன்னுடைய இன்னுயிரை போக்கியிருக்கிறார். மருத்துவர்கள் தன்னுடைய உயிரை காப்பாற்றிவிடக் கூடாது என்ற வைராக்கியமாக, லட்சியத்தோடு தீக்குளித்திருக்கிறார். கருகிப்போன முத்துக்குமரனின் கால்களைப் பிடித்து அழுதேன். ஈழத் தமிழர்களுக்காக போராடும் வரலாற்றில் முத்துக்குமரனுக்கு தனி இடம் உண்டு.  வசந்தம் தேடும் வாலிப வயதில் ஈழத்தமிழர்களுக்காக தன்னுடைய இன்னுயிரை கொடுத்திருக்கிறார். 1965இல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழக இளைஞர்கள் எரிமலை போல் வெடித்தார்கள்.

அதேபோலத்தான் இப்போது இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களுக்காக, தமிழக இளைஞர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இளைஞர்களின் இந்த போராட்டம் பெரிய அளவில் எழுச்சித் தரும். முத்துக்குமரனின் மரணத்துக்கு பின்பாவது இந்திய அரசு இலங்கையில் நடக்கும் போரை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்னியில் கைக்குழந்தைகள், பெண்கள், சிறுவர்கள் என ஈழத்தமிழர்கள் பல்லாயிரக்கணக்கானோர் சிங்கள ராணுவத்துக்கு அஞ்சி தவிக்கின்றனர். இலங்கை அதிபர் சர்வதேச செஞ்சசிலுவை சங்கங்கள், பத்திரிகையாளர்களை அழைத்து உண்மை நிலவரம் என்ன என்பதை அறிவிக்க வேண்டும்.

முத்துக்குமரன் சாவுக்கு இந்திய அரசுதான் பொறுப்பு: திருமா

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ஈழத் தமிழர்களுக்காக முத்துக்குமார் தீக்குளித்திருக்கிறார். இதற்கு மேலேயும் இந்திய அரசு ஈழத்தமிழர்களை காக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழகத்தில் பல முத்துக்குமரன் உருவாகுவதைத் தடுக்க முடியாது.  சிங்கள அரசுடன் இணைந்து இந்திய அரசு தமிழனை அழித்துக் கொண்டிருக்கிறது. தமிழர்களுக்கு மனநோய் பிடித்திருக்கிறது. அந்த அளவுக்கு இந்திய அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

முத்துக்குமார் என்ற இளைஞன் தீக்குளிக்கும் அளவுக்கு வந்திருக்கிறார் என்றால், சிங்கள அரசு தமிழர்களை எப்படி நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை தமிழர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள் முத்துக்குமரனின் மரணத்துக்கு இந்திய அரசே காரணம் என்றார்.

முத்துக்குமார். கடைசியாக எழுதிய கடிதம்

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே…
வணக்கம்.

வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சகதமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்.

வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த இரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்? ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பழிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.

ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் மட்டும் குற்றம் சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ் காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா? ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத்தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.

மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்? கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் லி இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல.

காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்து கொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ”தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா”னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே…

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே… உங்கள் போராட்டம் வெற்றிபெற சக தமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்சினை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான்.

உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழி வகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டு விடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.

உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய இராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் இராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை இராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புக்களையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆட்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள்.

உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதி கொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கு இன்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்’ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத் தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத் தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்தவர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழி தவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே…

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே…

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக பொலிஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள்.

ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ் காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி பொலிஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் லி அதுதான், இந்திய உளவுத்துறை லி ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா… இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப் பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத் தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே…

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே… ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று… நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?

வன்னியில், விடுதலைப் புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா. என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் எடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர் இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது.

நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர் வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொன்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியாலிபாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ் காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று.

ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறு தெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்ப்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளைலி ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை.
உதாரணம் ரணில்லி கருணா. ஆனால், புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானேலி ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா?

அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்… வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? பிரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல… இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்லிநியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்… எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப் புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐ.நா. பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ் காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8. அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்து வந்த தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக பொலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,
அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை99

அருமைத்தமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி. இவ்வாறு அந்த துண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இணக்கப்பாடில்லாத முக்கிய சில விடயங்களுக்கு அடுத்த சர்வகட்சி மாநாட்டில் தீர்வு எட்டப்படும்?

நாட்டின் முக்கிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அமைக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவினர் 99 வீதமான இணக்கப்பாட்டை எட்டியுள்ள நிலையில் இணக்கப்பாடு இல்லாத முக்கிய ஒருசில விடயங்களை அடுத்த சர்வகட்சி மாகாநாட்டின் மூலம் எட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் 104 ஆவது கூட்டம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றபோது இதுவரை காணப்பட்ட இணக்கப்பாடுகள் குறித்த அறிக்கை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.  இந்நிலையில் இணக்கம் காணப்படாத ஏனைய ஒரு வீதத்தையும் சர்வகட்சி மகாநாட்டின் மூலம் இணக்கப்பாடு எட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதேவேளை, அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் 105 ஆவது கூட்டத்தை 2 அல்லது 3 ஆம் திகதியில் நடத்த இருந்த போதிலும் அத்தினங்களில் கண்காட்சியொன்று இடம் பெறவுள்ளதால் எதிர்வரும் 10 ஆம் திகதி நடத்துவதற்கும் தீர்மானித்துள்ளது.