November

November

இந்திய அணி 642 ஓட்டங்கள்

greenpark.jpgஇந்தியா- இலங்கை அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இலங்கை- இந்திய அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்ஸிற்காக விளையாடிய இலங்கை அணி ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 66 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக அணித் தலைவர் குமார் சங்கக்கார 30 ஓட்டங்களையும், பரணவிதான 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெறும்.

இந்திய அணியின் பெற்ற ஓட்ட விபரம் வருமாறு:-

India 1st innings
 G Gambhir  c & b Muralitharan  167 
 V Sehwag  c Dilshan b Muralitharan  131 
 R Dravid  run out (Herath)  144  
 SR Tendulkar  c Samaraweera b Mendis  40 
 VVS Laxman  c Dilshan b Herath  63  
 Yuvraj Singh  c Sangakkara b Mendis  67 
 MS Dhoni*†  b Herath  4  
 Harbhajan Singh  b Herath  5  
 Z Khan  c DPMD Jayawardene b Herath  1 
 S Sreesanth  lbw b Herath  0  
 PP Ojha  not out  1  
 Extras (b 4, lb 11, nb 4) 19     
      
 Total (all out; 154 overs) 642 (4.16 runs per over)
Fall of wickets1-233 (Sehwag, 41.2 ov), 2-370 (Gambhir, 75.1 ov), 3-464 (Tendulkar, 102.5 ov), 4-511 (Dravid, 113.2 ov), 5-613 (Laxman, 141.1 ov), 6-619 (Dhoni, 145.2 ov), 7-639 (Harbhajan Singh, 149.4 ov), 8-641 (Yuvraj Singh, 152.2 ov), 9-641 (Khan, 153.3 ov), 10-642 (Sreesanth, 153.6 ov) 
        
 Bowling O M R W  
 UWMBCA Welegedara 26 4 103 0 
 AD Mathews 17 2 49 0  
 HMRKB Herath 33 2 121 5
BAW Mendis 38 3 162 2 
M Muralitharan 37 0 175 2
TM Dilshan 3 0 17 0        

 Sri Lanka 1st innings
 TM Dilshan  c Ojha b Khan  0 
 NT Paranavitana  not out  30  
 KC Sangakkara*  not out  30  
 Extras (b 4, lb 1, nb 1) 6     
      
Total (1 wicket; 24 overs) 66 (2.75 runs per over)
To bat DPMD Jayawardene, TT Samaraweera, AD Mathews, HAPW Jayawardene†, BAW Mendis, HMRKB Herath, M Muralitharan, UWMBCA Welegedara 
Fall of wickets1-0 (Dilshan, 0.1 ov) 
        
 Bowling O M R W
 Z Khan 7 3 14 1
 S Sreesanth 6 0 29 0 
 Harbhajan Singh 7 3 9 0 
 PP Ojha 4 2 9 0

படுகொலைகளைப் புரிந்த குற்றவாளிகள் சட்டத்தின்பிடியிலிருந்து தப்பிக்க முடியாது – பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி

பிலிப் பைன்ஸ் படுகொலைகளை வன்மையாக கண்டித்த ஜனாதிபதி கலோரியா அரோயா குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின்முன் கொண்டுவரப்படுவரென சூளுரைத்துள்ளார்.

பிலிப்பைன்ஸில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கு நியமனப்பத்திரம் தாக்கல் செய்யச் சென்ற அரசியல்வாதிகள் ஆதரவாளர்கள் ஊடகவியலாளர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

pili.bmpதேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு எச்சரிக்கை விடுத்த குழுவொன்றே இப்படுகொலைக ளைப் புரிந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது ஆரம்பத்தில் 21 பேரின் சடலங்கள் கண் டெடுக்கப்பட்டன. பின்னர் 41 பேரின் சடலங்களைப் பொலிஸார் கண்டெடுத்தனர். தேடுதல் நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன.

பெண்கள், ஊடகவியலாளர்கள் இதில் மிகமோசமாகக் கொலைசெய்யப்பட்டு தலைகள் துண்டிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து பிலிப்பைன்ஸின் சில இடங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அரசியல் நோக்கங்களுக்காக இப்படுகொலைகள் நடந்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் அரசியல்வாதிகள் சிலருக்கும் இக்கொலைகளில் சம்மந்தமுள்ளதாகத் தெரிவித்தனர். இது குறித்து ஜனாதிபதி அரோயா கூறியதாவது,

படுகொலைகளுக்கு பின்னால் யார் இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வந்து தண்டிக்கப்படுவர். கொலையாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்கமுடியாது மனித குலத்துக்கெதிரான இப்பாரிய கொலையால் பிலிப்பைன்ஸ் அதிர்ச்சியடைந்தது இப்படுகொலைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றார்.

தென்னிந்திய திரையுலகிற்குள் காலடி வைக்கிறார் வரதரின் மகள் நீலாம்பரி

Neelambari_Perumalஈபிஆர்எல்எவ் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாளின் மகள் நீலாம்பரி தென்னிந்திய திரையுலகிற்குள் காலடி வைக்கின்றார். உமமர் கரிகட் இயக்கும் ‘பொம்பே மிட்டாய்’ என்ற மலையாளப் படத்தில் நீலாம்பரி பெருமாள் அறிமுகமாகின்றார். இலங்கைத் தமிழர்கள் ஓரிருவர் தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்த போதும் ஒரு ஈழத் தமிழ் அரசியல் புள்ளியின் மகள் தென்னிந்தியத் திரைக்கு வருவது இதுவே முதற்தடவை.

மலையாளப் படத்தில் நடிக்கக் கிடைத்துள்ள வாய்ப்பையிட்டு மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ள நீலாம்பரி மலையாளப் படங்கள் சமூக அக்கறையுடையவையாகத் தரமானவையாக இருந்த போதும் அவை பரந்து பட்ட மக்களைச் சென்றடையும் நிலையை எட்டவில்லை எனத் இந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

வட இந்தியாவில் வாழும் இளம் பெண் ஊடகவியலாளர் தனது தாயகமான தென்னிந்தியாவுக்கு செல்கிறார். அங்கு ஒரு கொலைக்குப் பின்னுள்ள மர்மத்தை கண்டுபிடிப்பதே கதை.

சட்டப்படிப்பை முடித்துக்கொண்ட நீலாம்பரி பெருமாள் கலையில் நாட்டம் கொண்டவர். அரங்கியலில் ஈடுபட்டு வந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக இப்படத்தில் ஈடுபட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் தன்னை அதனுடன் இணைத்துக் கொண்ட ஒரு போராளியின் மகள் நீலாம்பரி. 1987ல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்து உருவாக்கப்பட்ட மாகாண சபையின் முதல்வராக இருந்தவர் நீலாம்பரியின் தந்தை வரதராஜப்பெருமாள். 1991ல் இந்திய இராணுவம் இலங்கையைவிட்டு வெளியெறியபோது அவர்களுடன் வரதராஜப் பெருமாளும் வெளியேற வேண்டிய நிலை உருவானது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலைப் பட்டியலில் முக்கிய புள்ளியாக இருந்த வரதராஜப்பெருமாளதும் அவரது குடும்பத்தினரதும் உயிரைப் பாதுகாக்க வேண்டிய கடமைப்பாடு இந்திய அரசுக்கு இருந்தது.

இலங்கை அரசியலில் செல்லாக்காசாகிப் போனாலும் வரதராஜப்பெருமாள் மற்றும் ஈஎன்டிஎல்எப் ராஜன் போன்றவர்களது உயிரைப் பாதுகாப்பது இந்தியாவை நம்பும் தலைமைகள் கைவிடப்படமாட்டாது என்பதை உறுதிப்படுத்த அவசியமாக இருந்தது.

இவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் முயற்சியில் நீலாம்பரியினது இளமைப்பருவம் பெரும்பாலும் பாதுகாப்பு நெருக்கடிகளுக்குள்ளேயே அமைந்தது. பெரும்பாலும் வட இந்தியாவிலேயே இவரது இளமைக்கால வாழ்வு அமைந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் பெரும்பாலும் அழிக்கப்பட்ட நிலையில் தென்னிந்திய சினிமாவினுள் இவரது நுழைவு அவருக்கு பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்றே கருத இடமுண்டு.

‘தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தளபதி ராம் கைது செய்யப்படவில்லை’ – தவிபு சிரேஸ்ட தளபதி நகுலன்

Nakulan_LTTEதமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட்ட தளபதி ராம் கைது செய்யப்படவில்லை என மற்றுமொரு முக்கிய தளபதியான நகுலன் ஊடகங்களுக்கு (24 Nov 09) அனுப்பி வைத்துள்ள ஒலிப்பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் நவம்பர் 21ல் வெளியிட்ட அறிக்கையிலும் அதனை மறுத்திருந்தனர். ராம் மற்றும் நகுலன் போன்றவர்கள் கைது செய்யப்பட்டனர் என்ற பொய்ப் பிரச்சாரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.

Nakulan_LTTEநவம்பர் 19 முதல் 22 வரை சுவிஸ்ர்லாந்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு வந்திருந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவு இலங்கையில் உள்ள போராளிகள் பற்றி மிக மோசமான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாகக் குற்றம்சாட்டினார். தான் அவர்களுடன் தொடர்புகளைப் பேணிவருவதாகத் தெரிவித்த அவர் அப்போராளிகள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் தங்கள் நடமாட்டத்தை மேற்கொள்வதாகவும் புலத்தில் நடாத்தப்படுகின்ற பிரச்சாரங்கள் அவர்களது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அபாயம் உள்ளதாகவும் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

இவ்வாண்டு மாவீரர் தின உரையை எழுத்து வடிவிலும் ஒலி வடிவிலும் தாங்கள் வெளியிட உள்ளதாகவும் நகுலன் தனது ஒலிப்பதிவில் தெரிவித்துள்ளார்.

40 ஆயிரம் டொலர் செலுத்தி விமானம் மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் அகதிகள்

அவுஸ்திரேலியாவுக்கு படகுகளில் புகலிடம் கோரி வருவோர் தொகை குறைவடைந்துள்ள நிலையில், 40 ஆயிரம் டொலர் செலுத்தி இப்போது விமான மூலம் சட்டவிரோத குடியேற்றவாசிகள் வந்து கொண்டிருப்பதாக அந்த நாட்டு பத்திரிகையொன்று நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக ஆட்களை கடத்திக் கொண்டு வருவோருக்கு 40 ஆயிரம் டொலர்கள் கொடுக்கப்படுவதாகவும் விமானக் கட்டணம், போலிக் கடவுச்சீட்டு, போலி அவுஸ்திரேலிய விசா என்பனவற்றுக்கான கட்டணங்களும் இதில் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் தரித்துள்ள கப்பலில் இருந்து மேலும் வெடிப்பொருட்கள் மீட்பு

oceanlady.jpgஅண்மையில் கனடாவில் கைதான 78 இலங்கையர்கள் சென்ற ஓசியன் டேடி கப்பலில் இருந்து  மீண்டும் ஆர் டீ எக்ஸ் மற்றும் சைக்லோ ஓக்சிஜன் போன்ற பாரிய வெடிப்புகளை ஏற்படுத்தக் கூடிய பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இந்த பொருட்கள் கப்பலின் முக்கிய பல மூன்று பகுதிகளில் மறைத்து வைக்கபட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

8வது வாரமாகத் தொடரும் படகு அகதிகளின் அவலமும் பதட்டமும்.

இந்தோனேசியாவின் ஜவாத் தீவின் மேர் துறைமுகக் கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகு அகதிகளின் அவலம் 8வது வாரமாகத் தொடர்கிறது. இந்தப் படகு அகதிகளை நேரடியாகச் சென்று பார்வையிட்ட சோசலிஸ்ட் கட்சியின் தேசிய ஒழுங்கமைப்பாளர் அன்ரொனி மைன் 40 முதல் 50 பேர் வரை மட்டுமே பயணிக்கக் கூடிய 30 மீற்றர் நிளமான மரப்படகில் 260 பேர் வரை அடைபட்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கப்பலில் உள்ள ஒவ்வவொருவரும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்த அன்ரொனி மைன் வயிற்றோட்டம், மலேரியா, போன்றவற்றால் அங்குள்ளவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார். மேலும் டயபிரிக்ஸ் போன்ற நீண்ட கால நோயுடைய நோயாளிகளும் அங்கு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். Eyewitness report from refugee boat in Merak -Anthony Main

இதற்கிடையே ஓசானிக் வைக்கிங் கப்பலில் இருந்து தஞ்சம் கோரிய தமிழர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு அவுஸ்திரேலிய அரச அதிகாரிகளின் உறுதி மொழிக்கு இணங்கித் தரையை அடைந்தனர். தஞ்ச விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் நான்கு முதல் 12 வாரங்களில் அவர்கள் அவுஸ்திரேலியாவில் மீள்குடியேற்றப்படுவார்கள் என்று அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர். நவம்பர் 12ல் 22 பேரைக் கொண்ட ஒரு பகுதியினரும் ஏனைய 56 பேரும் நவம்பர் 18லும் தரையிறங்கினர்.

மேர்க் கடற்பரப்பில் ஒரு சிறிய கப்பலில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ளவர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டு உள்ளது. கப்பலில் இருந்து வெளியேற விரும்புபவர்களுக்கும் கப்பலில் தங்கள் போராட்டத்தைத் தொடர விரும்புகிறவர்களுக்கும் இடையே பதட்டம் ஏற்பட்டு அது சிறு மோதலையும் ஏற்படுத்தியதாக இவ்வகதிகளுக்கு உதவியளிக்கும் மேற்கத்தைய உதவி நிறுவனத்தின் சிரேஸ்ட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதில் ஒரு இளைஞர் காயப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து 15 பேர் படகில் இருந்து தரையிறங்கியதாகவும் தெரியவருகின்றது. படகில் உள்ள அத்தனை அகதிகளும் தரையிறங்கிய பின்னரேயே அவர்களது தஞ்ச விண்ணப்பங்களைப் பரிசீலிக்க் ஐநா அதிகாரிகள் அனுமதிக்கப்படுவார்கள் என இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது. இம்முடிவு அங்கு இரு தரப்பினருக்கும் இடையேயான பதட்டத்தை மேலும் தூண்டியுள்ளது.

மேலும் கிறிஸ்மஸ் தீவில் நெருக்கமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்கான் – தமிழ் அகதிகளிடேயே நவம்பர் 23ல் மோதல் வெடித்துள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த 10 பேர் அப்பகுதி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர் 37 பேருக்கு அங்கேயே மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாண்டு ஒக்ரொபர் வரை 12 544 அப்கானியர்களுக்கு வீசா வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் இலைகையருக்கு 21 பேருக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டு இருந்தது. இதுவே மோதலுக்கான காரணமாகக் கருதப்படுகின்றது. அத்துடன் தடுப்பு முகாமில் உள்ள குறைந்தபட்ச வசதிகளைப் பயன்படுத்துவதில் உள்ள நெருக்கடியும் இம்மோதலுக்கு வழிவகுத்தள்ளது.

விலங்குகளை வளர்ப்பதற்கே அவற்றிற்கான வாழ்விடத்தின் தரத்தை உறுதிப்படுத்தும் அவுஸ்திரேலியா போன்ற மேற்கு நாடுகள் அகதிகள் என்று வரும்போது எவ்வித அக்கறையும் கொள்வதில்லை. அவர்களுடைய மனித உரிமைகள் கோசமும் தங்களுடைய தேவையைப் பொறுத்தே அமைகின்றது.

50 பேர் கொண்ட மற்றுமோர் படகு நவம்பர் 20ல் வழிமறிக்கப்பட்டு கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. அதே தினம் அங்குள்ள தஞ்ச விண்ணப்பங்களைப் பரிசீலித்து 69 பேருக்கு நிரந்தர வீசா வழங்கி அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்பிற்குக் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 46 பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தி தொடர்பான முன்னைய பதிவுகளுக்கு:

ஒசானியா வைக்கிங்கில் இருந்து ஒரு பகுதி அகதிகள் வெளியேறுகின்றனர்

மனித உரிமைகள் விடயத்தில் அவுஸ்திரேலிய பிரித்தானிய அரசுகள் இரட்டைவேடம்!

படகு அகதிகளின் தொடரும் அவலங்களும் மரணங்களும் – அவுஸ்திரேலியாவின் இந்தோனேசியத் தீர்வு – மேற்குலகு சொல்லும் மனித உரிமைகள் : த ஜெயபாலன்

ஏ(எச்1என்1) கண்டி பிரதேசத்தில் 55 பேர் பாதிப்பு

influenza-a.jpgகண்டியில் ஏ(எச்1என்1) பாதிப்புக் குள்ளான 24 பேர் பேராதனை ஆஸ் பத்திரியிலும் 14 பேர் கண்டி ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் சாந்தி சமரநாயக்க தெரிவித்தார்.

மாத்தளை பிரதேசத்தில் ஏ(எச்1என்1) வைரசினால் பீடிக்கப்பட்ட 17 பேர் மாத்தளை ஆதார வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மாத்தளை மாவ ட்ட சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஏ(எச்1என்1) வைரசினால் (பன்றிக் காய்ச்சல்) பீடிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மாத்தளை, தம்புள்ள, இறத்தோட்டை ஆஸ் பத்தி ரிகளில் விசேட சிகிச்சைப் பிரி வுகள் மத்திய மாகாண சுகாதார அமைச்சினால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

ஒரு இராணுவ அதிகாரியிடமிருந்து ஜனநாயக ஆட்சியை எதிர்பார்க்க முடியுமா? -விமல்

vimal-veeravansa.jpgஒரு இராணுவ அதிகாரியிடமிருந்து ஜனநாயக ஆட்சியை எதிர்பார்க்க முடியுமா எனக் கேள்வி எழுப்பிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, விடுதலைப் புலிகளின் பொங்கு தமிழ் நிகழ்வில் மேடையேறிய தேசத்துரோகிகளான மனோ கணேசன், ரவூப்ஹக்கீம் ஆகியோருடனும் தேசத்தைக் காட்டிக்கொடுத்த ரணில், மங்கள சமரவீரவுடனும் ஜெனரல் சரத் பொன்சேகா இணைந்து கொள்வது இன்னொரு துரோகச் செயலுக்காகவா எனவும் கேட்டார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் நாடு ஈட்டிய யுத்த வெற்றியை ஜெனரல் சரத் பொன்சேகா காட்டிக்கொடுக்க முற்படுவதாகவும் விமல் வீரவன்ஸ குற்றச்சாட்டு சுமத்தினார். நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு மகாவலி நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ இவ்வாறு தெரிவித்தார்.

ஜே.வி.பி.தலைவர் ரோஹன விஜேவீரவை கொலை செய்தவர்களில் ஒருவராக காணப்படும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருடன் ஜே.வி.பி.யினர் ஒரே மேடையில் தோன்றி மக்கள்முன் செல்லப்போகின்றனர். இவர்களுக்கு வெட்கம், மானம், ரோசம் என்பன கிடையாதா எனக் கேட்கவிரும்புகின்றேன்.

ஜே.வி.பி.யின் நோக்கமென்ன, ஒரு இராணுவ அதிகாரியால் ஜனநாயக ஆட்சியை நடத்த முடியுமா? நாட்டில் இன்னொரு பிரளயத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியிலேயே ஜே.வி.பி.யினர் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பேராபத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேண்டுமெனவும் விமல் வீரவன்ஸ கேட்டுக் கொண்டார்.

சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்ட நான்கு படகுகள் தென் பகுதி கடலில் மடக்கிப் பிடிப்பு

சட்டவிரோத ஆட்கடத்தலில் 100 க்கு மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற நான்கு மீன் பிடி படகுகளை இலங்கை கடற்படை யினர் தென் பகுதி ஆழ்கடலில் கைப்பற்றிய துடன் அதில் இருந்தவர்களை காலிக்கு கொண்டு வந்து தடுப்புக்காவலில் வைத்து ள்ளனர். இந்த நான்கு படகுகளில் இரண்டு நேற்றும் (23) இரண்டு படகுகள் இன்றும் (24) கடற் படையினரால் கைப்பற்றப்பட்டன.

இந்த நடவடிக்கைக்கு விமானப் படையினரும் பொலிஸாரும் கடற்படைக்கு உதவியுள்ளனர்.கைப்பற்றப்பட்ட சமயம் இந்த படகுகள் அவுஸ்திரேலியாவை நோக்கி சென்றுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அவுஸ்திரேலியா செல்வதற்காக படகில் இருந்தவர்கள் பெருந்தொகை பணத்தை இந்த சட்டவிரோத ஆட்கடத்தில் ஈடுபட்டவர்களிடம் கொடுத்திருப்பதாகவும் இவர்களில் தமிழர்களுடன் சிங்களவர்களும் இருப்பதாக கூறிய கடற்படை பேச்சாளர் இவர்களில் மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு கடற்படையினர் உதவி வருவதாக குறிப்பிட்டார்.