2025

2025

என்பிபி வெல்லாத உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மாட்டோம் என கூறவில்லை ! ஜனாதிபதி

என்பிபி வெல்லாத உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மாட்டோம் என கூறவில்லை ! ஜனாதிபதி

உள்ளூராட்சி சபைகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான தனது கருத்து எதிர்க்கட்சிகளால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க தலவாக்கலயில் நடந்த பொதுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். என்பிபி கட்சி வெற்றி பெறாத உள்ளூராட்சி சபைகளுக்கு அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மாட்டோம் என ஜனாதிபதி அச்சுறுத்தி வாக்குச் சேகரிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தனர். அத்துடன் இது அப்பட்டமான தேர்தல் விதிமீறல் என்றும் முறையிட்டிருந்தன.

இவற்றுக்கெல்லாம் பதிலழித்த ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க மத்திய அரசு திருடாது. ஆகவே உள்ளூராட்சி சபைகளும் திருடக் கூடாது என தான் நான் கூறினேன். என்பிபி வெற்றியடையாத சபைகளுக்கு நான் நிதி ஒதுக்கீடு செய்ய மாட்டேன் என நான் கூறவில்லை எனக் குறிப்பிட்டார். ஊழலற்ற ஆட்சியையே தான் வலியுறுத்துவதாகவும் கூறினார்.

வாக்கு வங்கியற்றவர்கள் கஜாவோடு சைக்கிளில் டபிள்ஸ் – றிபிள்ஸ் ஓடுகிறார்கள் !

வாக்கு வங்கியற்றவர்கள் கஜாவோடு சைக்கிளில் டபிள்ஸ் – றிபிள்ஸ் ஓடுகிறார்கள் !

தமிழ்த்தேசியப் பரப்பில் பயணிக்கும் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் தேசிய மக்கள் சக்தியின் பொறிக்குள் தம்மை பாதுகாக்கலாம் என யாழ் முஸ்லிம் மக்கள் ஒன்றியத்தின் தலைவர் அப்துல் பரீக் ஆரீப் தெரிவித்துள்ளார். அந்த வகையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் பேரவைக்கு உள்ளூராட்சித் தேர்தலில் யாழ் முஸ்லீம் மக்கள் ஒன்றியம் ஆதரவு கொடுப்பதாக யாழ் ஊடக அமையத்தில் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு உள்ளூராட்சித் தேர்தலில் ஆதரவு வழங்கவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழரசுக் கட்சியில் தனியொரு நபர் ஆதிக்கம் செலுத்துகிறார். தமிழரசுக் கட்சி தன்னை தள்ளி வைத்து விட்டதாகவும் சரவணபவன் வருத்தம் தெரிவித்தார். எச்சூழலிலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலின அணியினரே தொடர்ந்து தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுப்பதாகவும் பாராட்டினார். அதனாலேயேயும் தனது அரசியல் எதிர்காலம் கருதியும் சைக்கிளை ஆதரிக்கும் முடிவை எடுத்ததாகவும் கூறினார்.

யாழ் நகரின் நீர், சுகாதாரம், போக்குவரத்து, கழிவகற்றல், முன்பள்ளி என சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணுவோம் ! என்பிபி கபிலன்

யாழ் நகரின் நீர், சுகாதாரம், போக்குவரத்து, கழிவகற்றல், முன்பள்ளி என சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணுவோம் ! என்பிபி கபிலன்

யாழ் நகர மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்குகின்ற, கடந்த காலங்களில் தீர்க்கப்படாத: நீர், சுகாதாரம், போக்குவரத்து, கழிவகற்றல், முன்பள்ளி என சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணுவோம் என என்பிபி யாழ் மாநகர முதல்வUf;fhd வேட்பாளர் விரிவுரையாளர் கபிலன் சுந்தரமூர்த்தி தெரிவிக்கின்றார். நேற்று ஏப்ரல் 23 இரவு தேசம்நெற்க்கு வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“உள்ளுராட்சி அமைப்புகளின் தேர்தல் முறைமையில் ஒரு தனிக்கட்சி வெற்றபெற்று ஆட்சி அமைக்கின்ற வாய்ப்புகள் இல்லை. தமிழ் தேசியக் கட்சிகள் என்பிபி ஆட்சியைக் கைப்பற்ற தாங்கள் ஒத்துழைக்க மாட்டோம் என்பதில் மிக உறுதியாக உள்ளனர். அப்படியிருக்கையில் உங்களுடைய கனவுத் திட்டங்களை எப்படி நடைமுறைச் சாத்தியமாக்க முடியும் ” எனத் தேசம்நெற் கேள்வி எழுப்பியது. அதற்குப் பதிலளித்த முதல்வர் வேட்பாளர் எஸ் கபிலன், “யாழ் மாவட்டத்தில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்கள் தங்களுடைய பூரண ஆதரவைத் தந்து தேசிய மக்கள் சக்தியை மிகப் பெரும்பான்மையுடன் வெற்றியடையச் செய்ய வேண்டும். வெற்றியடையச் செய்வார்கள்” எனத் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முதல்வருக்கான வேட்பாளர் அனுராவின் நிதி தேவையில்லை. அது இல்லாமலேயே நாங்கள் யாழ் மாநகரத்தை கட்டியெழுப்புவோம்’ எனச் சூளுரைத்து இருந்தார். அத பற்றி கபிலனிடம் கேட்ட போது, “அப்படியென்றால் ஏன் இவ்வளவு காலமாக அவர்கள் அதனைச் செய்யாமல் இருந்தனர். இவர்களுக்கு செய்வதற்கான வாய்ப்புக் கிடைத்தும் இவர்கள் செய்யவில்லையே. இப்ப இவர்கள் தேர்தலுக்குப் பிறகு சேருவோம் என்று சொல்வது கூட மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. தேசிய மக்கள் சக்தி வந்து அபிவிருத்தியைச் செய்துவிடாமல் தடுப்பதற்கே” எனத் தெரிவித்தார் கபிலன்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் நாங்கள் அளித்த உறுதிமொழிக்கு அமைய அனைத்தையும் சாதித்துக் காட்டுவோம். அப்படிச் செய்ய முடியாது போனால் அதற்கான முழுப்பொறுப்பையும் நான் எடுப்பேன். நாங்கள் எங்கள் மக்களுக்குச் சாதித்துக் காட்டுவோம். உள்ளுராட்சி, நகராட்சி, மாநகராட்சி எப்படி இயங்கும் அதில் எதையெல்லாம் சாதிக்கலாம் என்பதை மக்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பார்ப்பார்கள்” எனத் தெரிவித்தார் கபிலன்.

 

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் ராஜபக்ச குடும்பத்தின் கோளையா “ டான் பிரியசாத்”

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் ராஜபக்ச குடும்பத்தின் கோளையா “ டான் பிரியசாத்”

2019 ஆம் ஆண்டு ஏப்பிரல் 21 இல் நடந்த ஈஸ்டர் குண்டுத்தாக்குதலிற்கு மூளையாக செயற்பட்டவருக்கு டான் பிரியசாத் உதவியர் என்று கூறப்படுகிறது. இனவாதி டான் பிரியசாத் ராஜபக்ச குடும்பத்தின் கோளையா அதாவது உதவியாளராக செயற்பட்டவர். அவர் சுட்டுக்கொல்லப்படும் வரை ராஜபக்ச குடும்பத்துடன் நெருக்கமாக இருந்திருக்கின்றார். பாதாள உலக நடவடிக்கைகளிலும் கலவரங்களிலும் ஈடுபடுபவர் டான் பிரியசாத் எனவும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

என்பிபி அரசாங்கம் மக்களுக்கு ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரிகளை கடந்த ஈஸ்டர் தினமான ஏப்பிரல் 21 முன்னர் வெளிப்படுத்துவதாக வாக்களித்திருந்தது. ஆனால் இதுவரை என்பிபி அரசாங்கம் பகிரங்கமாக ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் எதையும் அறிவிக்கவில்லை. ஆனால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் மற்றும் அவரது சாரதி போன்றோரின் கைதுடன் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரி தொடர்பான ஊகங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. என்பிபி கிட்டத்தட்ட சூத்திரதாரியை நெருங்கி விட்டதாகவே என்பிபியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களிலிருந்து தெரியவருகின்றது.

இந்தப் பின்னணியிலேயே ராஜபக்ச குடும்பம் டான் பிரியசாத்தை இல்லாதொழித்து ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான முக்கிய சாட்சியத்தை அழித்து விட்டதாக தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது. குறிப்பாக நாமல் ராஜபக்சவுடன் நெருங்கி நட்புப் பாராட்டுபவர். இந்தமுறை உள்ளூராட்சித் தேர்தலில் மொட்டுக்கட்சியின் வேட்பாளராகவும் உள்ளார்.

நவ சிங்ஹலே என்ற அமைப்பின் தலைவராக செயற்படும் டான் பிரியசாத் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிங்கள மக்களிடையே இனவாதத்தை தூண்டியவராவர். தனது முகநூல் கணக்குகளூடாக இஸ்லாமிய போவியா கருத்துக்களை பரப்பி வந்தவர் என்றும் கூறப்படுகிறது.

டான் பிரியசாத் கொலை தொடர்பில் ஆரம்பத்திலிருந்து முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் வெளியாகியிருந்தன. டான் பிரியசாத் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இறந்து விட்டார் என்றும் இல்லை அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவதாகவும் செய்திகள் வெளியாகின. இறுதியாக நேற்றைய தினம் பொலிஸார் அவர் இறந்து விட்டார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். டான் பிரியசாத்தின் கொலைக்கான காரணங்கள் மர்மமாகவே உள்ளன.

பொலிஸாரின் முதல்கட்ட விசாரணையின்படி ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுவின் ஒப்பந்த துப்பாக்கிதாரிகளால் தான் டான் பிரியசாத் சுடப்பட்டுள்ளார். இதுவரை டான் பிரியசாத்தின் தங்குமிடம் பற்றிய தகவல்களை வழங்கிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம் சமீப காலங்களில் சில விடயங்களை மறைப்பதற்காகவே முற்கூட்டியே இக்கொலைகள் இடம்பெறுவதாகவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

 

மே தின ஊர்வலத்தில் அதிரடித் தகவலை ஜனாதிபதி வெளியிடலாம் ! உள்ளுராட்சி சபைகளில் 80 லட்சத்திலிருந்து ஒரு கோடி வாக்குகளை NPP எதிர்பார்க்கின்றது !

மே தின ஊர்வலத்தில் அதிரடித் தகவலை ஜனாதிபதி வெளியிடலாம் ! உள்ளுராட்சி சபைகளில் 80 லட்சத்திலிருந்து ஒரு கோடி வாக்குகளை NPP எதிர்பார்க்கின்றது !

 

மே 6 இல் நடக்கவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் 80 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரையான வாக்குகளைப் பெற்று இலங்கையில் சரித்திரம் படைக்க முற்பட்டுள்ளது தேசிய மக்கள் சக்தி. கட்சியின் மத்திய குழுக் கூட்டங்களில் உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றுவது என்பதற்கும் அப்பால் தனது வாக்கு வங்கியை மிகப் பலமானதாகக் கட்டியெழுப்பும் பணிகளில் தேசிய மக்கள் சக்தி கவனம் செலுத்தி வருவதாக அதனுடன் நெருங்கிய வட்டாரங்கள் தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றன.

மே முதலாம் திகதி நடைபெறவுள்ள மேதினக் கொண்டாட்டங்கள் வரலாறு காணாத மக்கள் செல்வாக்குடன் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கொழும்பு காலிமுகத்திடல் மே தினக் கூட்டம் மிகப் பிரமாண்டமான அளவில் மேற்கொள்ளப்பட இருக்கின்றது.

இந்தப் பிரம்மாண்டமான மக்கள் வெள்ளத்தில் வைத்து ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸ நாயக்க சில முக்கிய தகவல்களை வெளியிட உள்ளார். இதில் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு பின்னால் இருந்தவர்கள் என்பதைக்காட்டிலும் நாட்டைச் சூறையாடியவர்கள் தொடர்பில் சில முக்கிய தகவல்களை ஜனாதிபதி வெளியிடலாம் எனத் தெரிகிறது. ஈஸ்டர் குண்டுவெடிப்போடு தொடர்புடைய இதுவரை வெளிவராத சில தகவல்களும் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது.

மே முதலாம் திகதி வெளிவரவுள்ள தகவல்களும் பிரம்மாண்டமான மே தினக் கொண்டாட்டங்களும் மே ஆறாம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஜனாதிபதித் தேர்தலில் என்பிபி 57 லட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொண்டது. இது அளிக்கப்பட்ட வாக்குகளில் 42 சதவிகிதம். பாராளுமன்றத் தேர்தலில் என்பிபி தனது வாக்கு வங்கியை 62 சதவிகிதமாக அதிகரித்து 68 லட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொண்டது. உள்ளுராட்சித் தேர்தலிலும் என்பிபி உடைய வெற்றி மிகப்பலமாக இருக்கும் என்றே கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. உள்ளுராட்சித் தேர்தலில் 80 லட்சம் முதல் ஒரு கோடி வாக்குகளை என்பிபி எதிர்பார்க்கின்றது என்பது அவர்களுடைய அதித நம்பிக்கையாகவும் அமையலாம். அவர்கள் தங்கள் இலக்குகளில் மிகத் தெளிவாக உள்ளனர். தமிழ், சிங்கள, முஸ்லீம் தேசியக் கட்சிகள் தங்களுடைய இருப்புக்காக படாதபாடு படுகின்றனர்.

புதிய முற்போக்கான மாற்று அணி ஒன்றே தேசிய மக்கள் சக்திக்கு எதிர்காலத்தில் சவாலாக முடியும். பிற்போக்குத் தேசியவாதிகள் அவர்கள் தமிழர்கள், முஸ்லீம்கள், சிங்களவர்கள் என்ற அடிப்படை பிற்போக்குவாதக் கட்சிகள் முயவரியற்றுப் போகும் காலம் ஆரம்பித்துவிட்டதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

 

இனவாதம் பேசிவந்த டான் பிரியசாத் மீது துப்பாக்கிச்சூடு !

இனவாதம் பேசிவந்த டான் பிரியசாத் மீது துப்பாக்கிச்சூடு !

கொழும்பில் வெல்லம்பிட்டியப் பகுதியில் தனது நண்பருடன் மது அருந்திக் கொண்டிருந்த போது துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யததாக கூறப்படுகிறது. அரசியல் செயற்பாட்டாளர் என அடையாளப்படுத்தும் இவர்
நவ சிங்ஹலே’ அமைப்பினுடைய தலைவர் ஆவார்.

காயமடைந்த பிரியசாத் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.

டான் பிரியாத் முஸ்லீம் மக்கள் மீது தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்போவதாக இனவாதம் பேசி கைதாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தகப் போரின் உச்சகட்டமாக உலக நாடுகள் சீனா – அமெரிக்கா என அணி பிரிகின்றனவா?

வர்த்தகப் போரின் உச்சகட்டமாக உலக நாடுகள் சீனா – அமெரிக்கா என அணி பிரிகின்றனவா?

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்யும் போது சீனாவின் நலன்களை பாதிக்கும் வகையில் செயற்படும் நாடுகளுக்கு பதிலடி கிடைக்கும் என சீனா வர்த்தக அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ட்ரம்ப்புடன் வர்த்தகம் செய்ய முன்வரும் நாடுகளுக்கு அமெரிக்கா வரிச் சலுகைகளை வழங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரம் சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 145 சதவீதம் வரியையும் அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 125 சதவீதமும் பரஸ்பர வரியை விதித்துள்ளன. ஆனால் டொனால்ட் ட்ரம்ப் சீனா தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கு 90 நாட்களுக்கு வரிவிலக்கு அளித்துள்ளது. இக்காலப்பகுதியல் அமெரிக்காவுடன் வரிவிலக்கு சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடலாம் என கால அவகாசம் வழங்கியுள்ளது.

அந்த வகையில் தென்கிழக்காசிய நாடுகள் அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளிடமிருந்து உதவிகளைப் பெறுவதால் அந்நாடுகள் நடுநிலமை வகிக்கவே விரும்புகின்றன. அமெரிக்கா, சீனாவுடனான வர்த்தகப் போரில் ஏனைய நாடுகளை மிரட்டி பணிய வைக்க முயல்வதாகவும் சீனா குற்றம் சாட்டியுள்ளது.

 

இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க துணை அதிபர் !

இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க துணை அதிபர் !

அமெரிக்க துணை அதிபரான ஜே. டி. வான்ஸ், இந்தியாவிற்கு குடும்பத்துடன் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த அவரது மனைவி உஷாவுடனும் பிள்ளைகளுடனும் புதுடெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிவர்களை மத்திய அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ் வரவேற்றார் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அமெரிக்கா அதிபரான டொனால்ட் ட்ரம்ப் உலகின் பல்வேறு நாடுகளுக்கு இறக்குமதி வரியை உயர்த்திய போதும் தற்போது வரிவிதிப்பு 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையிலேயே அமெரிக்க துணை அதிபரின் பயணம் அமைந்துள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கும் வேளையில் இருதரப்பினரும் வர்த்தகம், வரி, வட்டார பாதுகாப்பு தொடர்புடைய முக்கிய விவரங்களை விரிவுபடுத்துவதற்கான பேச்சுவார்த்தையை நடாத்தவுள்ளனர்.

இந்திய பிரதமருடனான சந்திப்பின் பிறகு, ஜெய்ப்பூர் செல்லவுள்ளார் எனவும், பின்னர் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு செல்ல உள்ளார் எனவும் 24 ஆம் தேதி அமெரிக்க புறப்பட உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

வடமேல் மாகாணத்தில் 138 அதிபர்களை இடமாற்றம் செய்ய தீர்மானம் !

வடமேல் மாகாணத்தில் 138 அதிபர்களை இடமாற்றம் செய்ய தீர்மானம் !

வடமேல் மாகாணத்தில் ஒரே பாடசாலையில் பத்து வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றும் 138 அதிபர்களை மே மாதம்  20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்வதற்கு வடமேல் மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த இடமாற்றங்கள் குறித்து அதிருப்தி அடைந்துள்ள அதிபர்கள் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் தங்களது அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தைத் தவிர்ந்து வேறு எந்த காரணத்திற்காகவும் இடமாற்றங்கள் இடைநிறுத்தப்பட மாட்டாது என வடமேல் மாகாண கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

யாழ் மாநாகர சபைக்கும் போக்குவரத்தை கண்காணிக்க CCTV கெமராக்கள் வரவுள்ளது ! 4000 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை !

யாழ் மாநாகர சபைக்கும் போக்குவரத்தை கண்காணிக்க CCTV கெமராக்கள் வரவுள்ளது ! 4000 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை !

கொழும்பு நகரைச் சுற்றியுள்ள CCTV கெமராக்கள் மூலம் பதிவான காட்சிகளின் அடிப்படையில், வாகன விதிமீறல்களைச் செய்த 4,000க்கும் மேற்பட்ட வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வாகன சாரதிகளின் வீடுகளுக்கு, அவர்கள் செய்த வாகன விதிமீறல்கள் தொடர்பாக அறிவிக்கப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல், கொழும்பு நகரைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள CCTV கெமராக்கள் மூலம் வாகன விதிமீறல்களைக் கண்டறியும் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டம் உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அவ்வப்பகுதி நகர சபைகளாலும் மாநகர சபைகளாலும் தத்தம் பிரதேசங்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அவ்வப் பிரதேசங்களுக்கான நிதிமூலமாகவும் அமையும்.

இதன் அடிப்படையில் மாநாகரசபையும் வீதிப் போக்குவரத்து மற்றும் நகரின் பாதுகாப்பைக் கண்காணிக்க சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட வாய்ப்புள்ளது. கள்ளமண் ஏற்றுவது, கனியவளங்களைக் களவாடுவதைத் தடுப்பதிலும் இக்கமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே யாழ் மாநகரசபை குப்பைகளைப் அதற்கான இடங்களில் போடாமல் வேறு பிரதேசங்களில் கொட்டுபவர்களைக் கண்டறிய சிசிரிவி கமராக்கள் மயன்படுத்தப்படுவது பற்றி செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக மனதுங்க தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், உரிய முறையில் உரிமை மாற்றப்படாத 241 வாகனங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாகனம் விற்பனை செய்யப்படும்போது, உரிமை மாற்றம் கட்டாயமாகச் செய்யப்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், இந்த ஆண்டின் கடந்த காலப்பகுதியில் 724  வாகன விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துக்களால் 764 பேர் உயிரிழந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில், 1,535 கடுமையான விபத்துக்களும், 2,699 சிறிய விபத்துக்களும் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.