27

27

ரோஹிங்கியா அகதிகளை இலங்கை பாதுகாப்புடன் நடத்தும் – ஐ.நா நம்பிக்கை !

ரோஹிங்கியா அகதிகளை இலங்கை பாதுகாப்புடன் நடத்தும் – ஐ.நா நம்பிக்கை !

அகதிகளாக வந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம் மக்களை இலங்கை பாதுகாப்புடன் நடத்தும் என்று நம்புகிறோம் என ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே ப்ரான்ச் தெரிவித்தார்.

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே ப்ரான்ச் மற்றும் பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமசந்திர ஆகியோருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் ரோஹிங்கியா முஸ்லிம் மக்களை இலங்கை பாதுகாக்கும் விதம் குறித்து பாராட்டுக்களை தெரிவித்தார்.

அந்த மக்களை மீண்டும் மியன்மாருக்கு அனுப்பாமல் பாதுகாப்பான ஒரு நாட்டில் தங்க வைப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபை அவதானம் செலுத்தியுள்ளதாக கூறிய ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே, அதுவரை ரோஹிங்கியா முஸ்லிம் மக்களை இலங்கை பாதுகாப்புடன் நடத்தும் என்று நம்புகின்றோம் என தெரிவித்தார்

மக்களின் அழைப்புக்களுக்கு பதிலளிக்கவும் என்.பி.பி அமைச்சர்களுக்கு உத்தரவு !

மக்களின் அழைப்புக்களுக்கு பதிலளிக்கவும் என்.பி.பி அமைச்சர்களுக்கு உத்தரவு !

முடிந்தவரை அனைத்து சந்தர்ப்பங்களிலும் தங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்குமாறு அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆளும் கட்சி நாடாளுமன்றக் குழுக்களின் கூட்டத்தின் போது அறிவுறுத்தியுள்ளார்.

பொதுமக்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்து அவர்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ஜனாதிபதி அனுர குமார

எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் கைது ! சட்டங்கள் இறுக்கப்பட வேண்டும் ! அபராதமும் அதிகரிக்கப்பட வேண்டும் !

எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் கைது ! சட்டங்கள் இறுக்கப்பட வேண்டும் ! அபராதமும் அதிகரிக்கப்பட வேண்டும் !

இலங்கை கடல் எல்லையின் தலைமன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 33 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இதற்கு முன் கைது செய்யப்பட்ட எல்லை தாண்டிய மீனவர்களுக்கு உச்ச அபராதத்தை கிளிநொச்சி நீதிமன்றம் வழங்கியருந்தது. எதிர்காலத்தில் இந்த அபராதத் தொகையை அதிகரிப்பதன் மூலம் மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைவதைக் கட்டுப்டுத்த முடியும். கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் எல்லை தாண்டும் மீன்பிடி தொடர்பில் புதிய சட்டமூலங்களையும் தண்டனைகளையும் அபராதங்களையும் அதிகரிப்பதினூடாக எல்லைதாண்டி வந்து மீன்பிடிப்பது ஒரு லாபமற்ற செயல் என்பதை எல்லைதாண்டி வரும் மீனவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் குழுவையும் அவர்களது படகுகளையும் கரைக்கு கொண்டு வந்த பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக கிளிநொச்சி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று கடற்படை தெரிவித்துள்ளது.

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய நடவடிக்கைகள் வடக்கின் கடல் மற்றும் மீன் வளத்தை முழுமையாக சூறையாடும் நிலையில் தமிழ்நாட்டு மீனவர்களின் ரோலர் படகுகள் மீன்களின் இயக்க சமநிலையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதையும் கடல் வள நிபுணர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இதேவேளை விரைவில் வெளி நாட்டிலிருந்து மீன்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என கைத்தொழில் அமைச்சர் திரு.சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது.

கட்சிகள் மட்டுமல்ல தமிழ் தேசிய மாணவர் ஒன்றியமும் பிளவுபட்டுள்ளது !

கட்சிகள் மட்டுமல்ல தமிழ் தேசிய மாணவர் ஒன்றியமும் பிளவுபட்டுள்ளது !

கலைப் பீடாதிபதி ரகுராமின் முன்னாள் செல்லப் பிள்ளையாக அறியப்பட்ட எஸ் சிவகஜன் அணியினர், பரமேஸ்வரா ஆலயத்தின் அருகில் உள்ள கல்லாசனத்தில் போதைப்பொருள் பாவித்து வந்ததாகவும், அந்த வழியால் செல்லும் பெண்களுக்கு பாலியல் ரீதியான வசையாடல்களுடன் கூடிய சொற்களை பாவித்து தொல்லைகள் கொடுத்ததாகவும் கலைப்பீடாதிபதி ரகுராமின் தற்போதைய செல்லப்பிள்ளைகள் குற்றம்சாட்டுகின்றனர். எஸ் சிவகஜன் அணியினர், தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பேரவை கவனத்தில்கொள்ளாது மாணவர்களுக்கு தண்டனையிலிருந்து விலக்களிப்பு வழங்கியுள்ளது என ரகுராமின் தற்போதைய செல்லப் பிள்ளைகள் கொந்தளித்துள்ளனர்.

எஸ் சிவகஜன் தீவர தமிழ் தேசியத் தொண்டன். யாழ் பல்கலைக்கழகத்தில் புத்திஜீவிகள் இணைந்து தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு தெரிவிக்கின்றோம் என ஊடக அறிக்கையை வெளியிட்ட போது, அதில் கையொப்பமிட்ட அப்பேராசிரியர்களுக்கு எதிராக, கேலிச் சித்திரங்கள் வரைந்து அவர்களைக் கேவலப்படுத்திய போது கலைப்பீடாதிபதி ரகுராம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எஸ் சிவகஜன் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை ஆதரித்தவர். அதற்காகத் தீவிர பிரச்சாரங்களிலும் ஈடுபட்டவர். அப்படியானால் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகுதான் எஸ் சிவகஜனின் அணி இந்த போதைப்பொருள் பாவனை, பெண்களுக்கு பாலியல் ரீதியான வசைபாடல்கள் எல்லாம் செய்கின்றனரா?

கலைப்பீடாதிபதி ரகுராமின் பதவி விலகல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் விடுவிக்கப்பட்ட மாணவர்கள் மீது மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ரகுராம் மீண்டும் பதவியேற்கும் வரை தாம் போராடப்போவதாகவும் ரகுராமின் தற்போதைய செல்லப்பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராமுக்கு ஆதரவாக தமிழ்தேசியம் பேசும் பலரும் சமூக வலைத்தளங்களில் ஆதரவுக்குரல்களை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளதுடன் We Stand with Raguram என்ற ஹேஸ்டேக்கையும் பதிவிட்டு வருகின்றனர்.

அதேவேளை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைப்பீடாதிபதி ரகுராம் சுயலாபத்துக்காக போதைப்பொருள் பாவனையாளர்களாக முத்திரைகுத்தி, தன்னை நியாயப்படுத்துகின்றார் என பாதிக்கப்பட்ட மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் தேசியம் எப்படி சின்னாபின்னமாகச் சிதறுண்டதோ அதுபோல் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைக்குஞ்சுகளும் ராகுராமின் செல்லப் பிள்ளைகளிடையே எழுந்துள்ள பனிப் போரில் சிக்குண்டு உள்ளனர்.

மிக இறுக்கமாக மூடிய நிலையில் உள்ள யாழ் பல்கலைக்கழகம் திறந்த புத்தகமாக, பொறுப்புக் கூறலுடன் செயற்பட வேண்டுமாயின், அதற்கு யாழ் பல்கலைக்கழகத்திற்கு வெளியே இருந்து புது இரத்தம், சிந்தனை பாய்ச்சப்பட வேண்டும். அதற்கு அடுத்த துணை வேந்தர் இலங்கைக்கு வெளியே சர்வதேச பல்கலைகழகங்களிலிருந்தும் கோரப்பட்டு கல்வித்தகுதி மற்றும் அவர்களுடைய கல்விச் செயற்பாட்டு திறமையுடன் கூடிய ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். பிரதமரும் உயர் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய Clean University of Jaffna தொடர்பில் கவனம் செலுத்துவது மிக அவசியம்