10

10

பிரபலத்துக்காக மக்களை அச்சமூட்டாதீர்கள் – இலங்கையில் யாருக்கும் HMPV வைரஸ் இல்லை!

பிரபலத்துக்காக மக்களை அச்சமூட்டாதீர்கள் – இலங்கையில் யாருக்கும் HMPV வைரஸ் இல்லை!

தற்போது சீனா முழுவதும் பரவி வரும் எச்.எம்.பீ.வீ வைரஸ் இலங்கையிலும் அடையாளங்காணப்பட்டுள்ளதாக பல பிரபல ஊடகங்கள் அடுத்தடுத்து செய்தி வெளியிட்டு மக்களை பீதியடைய வைத்துள்ள நிலையில்இ பிரபல்யத்துக்காக மக்களை அச்சமூட்டும் வகையில் செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இலங்கையில் எச்.எம்.பீ.வீ வைரஸ் நோய் தொற்றாளர் எவரும் கண்டறியப்படவில்லை. இந்த வைரஸ் தொற்று தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ரோஹிங்கியா அகதிகள் நாடுகடத்தப்படுவதை எதிர்த்து முல்லையில் போராட்டம் !

ரோஹிங்கியா அகதிகள் நாடுகடத்தப்படுவதை எதிர்த்து முல்லையில் போராட்டம் !

முல்லைத்தீவு கடலில் தஞ்சம் அடைந்த ரோஹிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும் இலங்கை சர்வதேச மனித உரிமை சட்டங்களை பாதுகாக்க கோரியும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

 

போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர், முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தில் இரண்டு வாரங்களுக்கு மேலாக அந்த மாவட்டத்தின் சிவில் நிர்வாக கண்காணிப்பு இன்றி தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இராணுவ மயமாக்கல் சூழலுக்குள் அகதிகளை தங்கவைப்பது சர்வதேச மனிதாபிமான நியமங்களுக்கும் அடிப்படை மனிதாபிமான விழுமியங்களுக்கும் மாறானதாகும்.

 

எனவே இந்த அகதிகளை மீரியானவில் உள்ள அகதிகள் மையத்திற்கு அல்லது வேறொரு பொருத்தமான இடத்திற்கு மாற்றுவதுடன் அப்பிரதேச சிவில் நிர்வாக கண்காணிப்புக்குள் அவர்களை கொண்டுவரவேண்டும். இலங்கை என்பது ஒரு அபிவிருத்தி அடைந்து வரும் நாடு எனும் வகையில் இலங்கை சர்வதேச அகதிகளின் புகலிட மையமாக மாறுவதை நாம் விரும்பவில்லை. தற்போதுள்ள அகதிகளை சர்வதேச அகதிகள் சட்டத்திற்கு அமைய நடத்தவேண்டும் என்பதையே அரசாங்கத்திடம் வேண்டுகின்றோம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

நெல் உற்பத்திக் குறைவுக்கு தொல்லியல் திணக்களமும் காரணம் – பா உ சண்முகம் குகதாசன் !

நெல் உற்பத்திக் குறைவுக்கு தொல்லியல் திணக்களமும் காரணம் – பா உ சண்முகம் குகதாசன் !

 

தொல்லியல் திணைக்களம் உட்பட அரச திணைக்களங்களினால் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளமையும் நாட்டின் நெல் உற்பத்திக் குறைவுக்கு காரணமாக அமைகிறது என திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

நாட்டிலே அரிசி விலை உயர்வு குறித்து பேசப்பட்டது. இவ் அரிசி விலை உயர்வுக்கு வெள்ளம்இ வரட்சி போன்ற இயற்கை பேரிடர்கள் மட்டுமின்றி அரசினது அங்கங்களான பல்வேறு திணைக்களங்களும் காரணமாக உள்ளன. இதில் முதன்மை வகிப்பது தொல்பொருள் துறையாகும். தொல்பொருள் துறையானது தமிழ் மக்கள் சில நூற்றாண்டு காலமாக விவசாயம் செய்து வருகின்ற, விவசாய நிலங்களை தமது தொல்பொருள் இடங்களாக அறிவித்து கையகப்படுத்தி வருகின்றது.

தொடர்ந்தும் அத்துமீறும் இந்திய ரோலர்கள்: 7 இலட்சம் பெறுமதியான வலைகள் நாசம் – 10 இந்திய மீனவர்கள் கைது !

தொடர்ந்தும் அத்துமீறும் இந்திய ரோலர்கள்: 7 இலட்சம் பெறுமதியான வலைகள் நாசம் – 10 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 10 பேர் ஜனவரி 8, இரவு கைது செய்யப்பட்டுள்ளதுடன்இ மீன்பிடி படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் நேற்றிரவு யாழ்ப்பாணம் – காரைநகர், கோவளம் கலங்கரை விளக்கத்தில் நடத்திய விசேட நடவடிக்கையின்போது இவர்களை கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்படியால் யாழ்ப்பாணம் – சுழிபுரம், காட்டுப்புலம் பகுதி மீனவர் ஒருவரின் 7 இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் இரவு இந்த மீனவர் திருவடி நிலை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப் படகுகள் அவரது வலைகளை அறுத்துள்ளன. அவரிடமிருந்த 32 வலைகளில் 26 வலைகள் அறுக்கப்பட்ட நிலையில் 6 வலைகளே மீதமாகின. எஞ்சிய வலைகளும் சேதமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன.

பாதிக்கப்பட்ட மீனவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்இ ஏழு இலட்சம் ரூபா வங்கியில் கடன் பெற்று முதலிட்டே கடலில் தொழில் செய்தேன். வலைகளை இந்திய இழுவைப் படகு அறுத்துச் சென்றதால் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வேன்? வங்கிக் கடனை செலுத்த என்ன செய்வேன் என்று தெரியாமல் தவிக்கிறேன்.

புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி இந்திய மீனவர்கள் பிரச்சினையையும் தீர்த்து வைக்கவேண்டும். புதிதாக வந்த அமைச்சர் இதற்கு ஒரு தீர்க்கமான முடிவெடுத்து இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த வேண்டும். அரசாங்கம் எனக்கு இழப்பீட்டை வழங்கிஇ நான் மீண்டும் தொழில் செய்ய வழிவகுக்க வேண்டும் என்றார்.

இஸ்லாமிய மத அவமதிப்பு : சர்ச்சைக்குரிய ஞானசார தேரருக்கு 9 மாத சிறை !

இஸ்லாமிய மத அவமதிப்பு : சர்ச்சைக்குரிய ஞானசார தே ரருக்கு 9 மாத சிறை !

இஸ்லாமிய மதத்தை அவதூறுசெய்த குற்றத்திற்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன 9 மாத சிறைத்தண்டனையும் 1இ500 ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைக்கு நீதிமன்றில் ஆஜராகத் தவறியமையால் முன்னர் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை அடுத்தே அவருக்கு மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரரால் ஜூலை 16இ 2016 அன்று கிருலப்பனையில் நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பில். “இஸ்லாம் ஒரு புற்று நோய்… அதை ஒழிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதையடுத்து இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

தமிழரசுக்கட்சி சார்பில் பேச்சுவார்ததையில் ஈடுபட பா உ சிறிதரனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை – பா உ சாணக்கியன்

தமிழரசுக்கட்சி சார்பில் பேச்சுவார்ததையில் ஈடுபட பா உ சிறிதரனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை – பா உ சாணக்கியன்

“பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் எந்தவொரு பேச்சுவார்ததைகளிலும் ஈடுபட அனுமதி வழங்கப்படவில்லை” என அக்கட்சியின் மட்டு பா உ இராசமாணிக்கம் சுhணன்னியன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் “கட்சி சார்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக இருந்தால் கட்சியினுடைய அனுமதி இருக்க வேண்டும். எனவே இது ஒரு பேச்சுவாரத்தையே இல்லை. அது மதிய உணவு இடைவேளை நேரத்தில் அவர்கள் சந்தித்ததே தவிர அது ஒரு அரசியல் சந்திப்பு அல்ல எனவும் சாணக்கியன் சுட்டிக்காட்டி உள்ளார். தமிழ் கட்சிகள் மத்தியில் அதிக வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர் இராசமாணிக்கம் சாணக்கியன் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏழாம் திகதி பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் சிறீதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் மூவரும் சந்தித்து உரையாடி இருந்தனர். இது தமிழ் மக்களுக்கான அரசியல் வரைபை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட சந்திப்பாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தது. இது தொடர்பில் தேசம்நெற் நேற்று கேள்வியும் எழுப்பி இருந்தது. இதற்குப் பதிலளிக்கும் வகையிலோயே பா உ சாணக்கியனின் பதில் அமைந்துள்ளது. இதன் அடிப்படையில் எதிர்வரும் 25ஆம் திகதிஇ தமிழ்த்தேசிய கொள்கையை வலியுறுத்தும் மூன்று முக்கிய கட்சியினருக்கு இடையில் மற்றுமொரு சந்திப்புப் பற்றியும் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் ஊடகச் சந்திப்பில் தெரிவித்து இருந்தார். ஏற்கனவே தேசம்நெற் இல் குறிப்பபிட்டது போல இது கட்சிகளின் சந்திப்பல்ல மூன்று தனிக்கட்டைகளின் சந்திப்பு என்பதை பா உ சாணக்கியனும் உறுதிப்படுத்தி உள்ளார்.

சிறிதரன்இ அடைக்கலநாதன் இடையேயான சந்திப்பு ஒரு உணவு நேரத்தில் பேசிக்கொண்ட சந்திப்பு எனவும் அதை பற்றி அலட்டிக்கொள்ள தேவவையில்லை எனவும் சாணக்கியன் கூறியுள்ளமையானது சைக்கிள் குழுவினரின் தலைமையேற்கும் திட்டமும் புஸ்வானமாகப்போகிறது என பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் ஜனவரி 8 பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத்தலைவராகவும் நிதிக்குழவின் உறுப்பினராகவும் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவு செய்யப்பட்டுள்னார்.