23

23

இந்திய அரசால் நக்சல் வாதத்தை முழுமையாக ஒழிக்க முடியுமா?

இந்திய அரசால் நக்சல் வாதத்தை முழுமையாக ஒழிக்க முடியுமா?

அடுத்த ஆண்டு மார்ச்மாத த்திற்குள் இந்தியாவை நக்சல்கள் இல்லாத நாடாக மாற்றப்போவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சூளுரைத்துள்ளார். நக்சல்வாதிகள் உருவாவதற்கான காரணத்தை கண்டுகொள்ளாமல் அவர்களை ஒழிக்க முடியுமா என விடுதலைப் போராட்டங்களில் நேரடியாகவே ஈடுபட்டவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். நக்சல் வாதிகளை சிறிது காலத்துக்கு ஒழிக்கலாம் அல்லது ஒழிக்கப்பட்டதான ஒரு மாயை ஏற்படும். ஆனால் அவர்கள் உருவாவதற்கான சூழல் தொடரும்வரை அவர்களை அழிக்க முடியாது என முன்னாள் ஈழப் போராளிகள் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஜனவரி 20 சத்தீஸ்கரில் நக்சல்களின் முக்கிய தளபதியான ஜெய்ராம் ரெட்டி என்ற சலபதி, உட்பட 16 நக்சல்கள் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதேநேரம் ஜனவரி 16 இலும் பிஜப்பூர் மாவட்டத்திலும் 12 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.

நக்சல்வாதம் என்பது தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மக்கள் பிரச்சினைகளை ஆளும் அரசாங்கங்கள் தீர்க்க தவறும் போது ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் மூலம் மக்கள் ஜனநாயகப் புரட்சியை நடத்தி பொதுவுடமையை நிலை நாட்டுவதேயாகும்.

சத்தீஸ்கர், ஒரிசா, ஆந்திரா, மஹாராஸ்டிரா, ஜார்கண்ட், பீகார், உத்திரப் பிரதேசம், மற்றும் மேற்கு வங்கம் நக்ஸல்பாரி இயக்கத்தவர்களின் செயல்பாடுகள் காணப்பட்டாலும் ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் அதிகமாக காணப்படுகின்றன.

நடைமுறையிலிருக்கும் பாராளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளாத நக்சல்கள் ‘தேர்தல் பாதை, திருடர் பாதை’ என்று விமர்சிக்கின்றனர். மறுபுறம் ஆட்சியாளர்கள் கூட நக்சல்களின் நியாமான கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்க்காமல் அரச வன்முறையை ஏவி ஆயுத முனையில் நக்சல்களை கொன்றொழித்து அவர்களை மௌனமாக்குகின்றனர். ஆனால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் அப்படியே தான் இருக்கப்போகின்றன.

ஊழல் குற்றச்சாட்டு – முன்னாள் அமைச்சரும் மனைவியும் கைது!

ஊழல் குற்றச்சாட்டு – முன்னாள் அமைச்சரும் மனைவியும் கைது!

நேற்று புதன்கிழமை மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னாள் அமைச்சர் யாப்பவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டு பிங்கிரியா மற்றும் நாரம்மல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக் கூறி இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து 6.1 மில்லியனுக்கும் அதிகமான தொகையைப் பெற்று, 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதே இந்தக் கைதுகளுக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக மேலும் 6 பேரை குற்றப் புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்.

அரிசி பதுக்கினால் அரிசி ஆலைகள் இராணுவவசமாகும் அரிசி மாபியாக்களுக்கு எச்சரிக்கை !

அரிசி பதுக்கினால் அரிசி ஆலைகள் இராணுவவசமாகும் அரிசி மாபியாக்களுக்கு எச்சரிக்கை !

ஜனவரி 21 தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற ஜனாதிபதி அநுர அரசியை பதுக்கும் ஆலை உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் நிலவும் அரிசித் தட்டுப்பாட்டை நீக்க அஅரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இந்நிலையில் அரசாங்க அறிவுறுத்தல்களை பின்பற்றாத போது அரிசி அறுவடையாகி களஞ்சியத்திற்கு கொண்டு செல்லப்படும் வரை இராணுவ கண்காணிப்பு போட வேண்டி வரும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் ஜனாதிபதி அனுரா.

இனிமேல் அரிசிக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையை விட ஒரு சதம் கூட அதிகமாக விற்க இடமளிக்கப்பட மாட்டாது எனவும் கடும்தொனியில் எச்சரித்தார் ஜனாதிபதி அநுர.

நாட்டில் அவசரநிலை காலங்களில் இராணுவ உதவி பெறப்படுவது வழமைதான் என்கிற போதும் அரிசிப் பிரச்சினையை தீர்க்க காத்திரமான வேறு பல பொறிமுறைகள், கலந்துரையாடல்கள் மற்றும் ஆலோசனைகளையும் பெறலாம் அல்லது முன்னெடுக்கலாம்.

நீதிமன்றத்தின் கிடுக்குப்பிடியில் பா.உ செல்வம் !

நீதிமன்றத்தின் கிடுக்குப்பிடியில் பா.உ செல்வம் !

பா.உ செல்வம் அடைக்கலநாதனின் கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும், நீதிமன்ற அனுமதி பெற்றே வெளிநாடு செல்ல முடியும் எனவும் அனுராதபுர மேல் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பில் கருதது வெளியிட்டுள்ள செல்வம் அடைக்கலநாதன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகளுடன் இணைந்து இலங்கை அரசாங்கத்திற்கு சதி செய்தேன் என்ற அடிப்படையில் எம்மை கைது செய்தார்கள். அது தொடர்பான வழக்குகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. கடந்த 16 ஆம் திகதி வழக்கு நடைபெற்ற போது நான் அதற்கு சமூகமளிக்கவில்லை. அதனால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது என தெரிவித்துள்ளார்.

மதுபான சாலைகளுக்கு எதிராக விளக்குமாறுடன் போராட்டித்தில் குதித்த பெண்கள் !

மதுபான சாலைகளுக்கு எதிராக விளக்குமாறுடன் போராட்டித்தில் குதித்த பெண்கள் !

அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஒன்று கூடிய பொதுமக்கள் பெரிய நீலாவணை பகுதியில் புதிய மதுபானசாலை வேண்டாம் என விளக்குமாற்றுடன் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

கிளிநொச்சியில் மதுபோதையில் வந்தத டிப்பர்சாரதி மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பத்தினை மோதி இருவர் மரணித்ததற்கு முன் தினம் கிளிநொச்சியில் மதுபாண சாலைகளை மூடச்சொல்லி ஒரு போராட்டம் மேற்கொள்ளப்பட்டமை தெரிந்ததே.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாங்கள் போராட்டம் மேற்கொண்ட போது அன்று திறக்கப்பட இருந்த மதுபான சாலையை அப்பொழுது மூடினார்கள். ஆனால் இப்பொழுது மீண்டும் திறப்பதற்கு ஏற்பாடு நடைபெறுகிறது.எனவே எங்களுக்கு இவ்வாறான மதுபானசாலை வேண்டாம் என நீலாவணையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக் கொண்டனர்.

கிளீன் சிறிலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு முன்னேற்பாடாக 500 பேருக்கு மேற்பட்ட நீலாவணை பொதுமக்கள் ஒன்றுகூடி நீலாவணையில் அமைக்கப்பட்ட மதுபானசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை செய்து கொண்டிருக்கின்றார்கள் என நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார் கோடீஸ்வரன். கடந்த அரசாங்கம் வழங்கிய மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்வதாக தற்போதுள்ள அரசாங்கம் குறிப்பிட்டது. ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை என்பதையும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.

பா.உ கோடீஸ்வரனின் கருத்துக்கு பதிலளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, அரசாங்கம் புதிதாக மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வழங்கவில்லை, வழங்கப் போவதுமில்லை. சட்டரீதியில் வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்களை பலவந்தமான முறையில் இடைநிறுத்தினால் சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும். அனுமதிப்பத்திரம் சட்டரீதியில் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அது சட்டரீதியான ஆவணமாகும். பலவந்தமான முறையில் செயற்பட முடியாது என தெரிவித்தார்.

வடக்கில் மாதம் மூன்று படுகொலைகள் – சமூக பிறழ்வுகள் அதிகரிக்கின்றது !

வடக்கில் மாதம் மூன்று படுகொலைகள் – சமூக பிறழ்வுகள் அதிகரிக்கின்றது !

 

கடந்த ஆண்டில் வடமாகாணத்தில் கடமையாற்றி வந்த 28 பொலிஸார் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், 34 படுகொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார். , இதன்படி வடக்கில் மாதாந்hம் 3 படுகொலைக் அல்லது பத்து நாட்களுக்கு ஒரு படுகொலை நிகழ்கின்றது.

அத்தோடு, 255 கொள்ளைகள், 501 திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், 70 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்தார்.

ஏன் பலாலியில் தான் விமான நிலையம் வரவேண்டும் ? யாழ்ப்பாணத்துக்கு வெளியே சிந்திக்க மாட்டார்களோ ? 

ஏன் பலாலியில் தான் விமான நிலையம் வரவேண்டும் ? யாழ்ப்பாணத்துக்கு வெளியே சிந்திக்க மாட்டார்களோ ?
பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கத்துக்கான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனுக்கும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கம் முன்னெடுப்பதற்கு 114 ஹெக்டேயர் நிலப் பரப்பு சுவீகரிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினர் குறிப்பிட்டனர். கடலை நோக்கியதாக அந்த விஸ்தரிப்பு அமையும் எனவும் ஆளுநருக்கு தெரியப்படுத்தினர்.
இந்நிலையில், காணிகளை சுவீகரிப்பதற்கு முன்னதாக 1986ஆம் ஆண்டு பலாலி விமான நிலையத்துக்காக பெற்றுக் கொள்ளப்பட்ட காணிகளுக்கு இன்னமும் இழப்பீடு வழங்கப்படவில்லை என ஆளுநர் சுட்டிக்காட்டினார். தற்போதைய பெறுமதிக்கு ஏற்ப அவர்களுக்கு இழப்பீடு முதல்கட்டமாக வழங்கிய பின்னரே தற்போது தேவைப்படும் மேலதிக காணிகளுக்காக சுவீகரிப்பை ஆரம்பிக்கலாம் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் விரிவாக்கத்தின்போது இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகளவில் கிடைக்கும் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகளுக்கான நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
அதே சமயம் யாழ்ப்பாணம் வடமாகாணத்திலேயே சனத்தொகை அடர்த்தி உள்ள மாவட்டமாகவும் பலாலி ஒரு விவசாயத்துக்குகந்த பூமியாக உள்ளது. அதனால் விவசாய நிலங்களை இவ்வாறான விஸ்தரிப்புகளுக்குப் பயன்படுத்தாமல் எதிர்காலத்திலும் விமான நிலையத்தை விஸ்தரிக்கும் வகையில் சனத்தொகை அடர்த்தி குறைந்த வன்னி நிலப்பரப்பில் புதிய விமானத்தளத்திற்கான இடத்தை பார்ப்பது பொருத்தமானது எனச் சூழலியலாளர்கள் கருதுகின்றனர்.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தை கிளி அறிவியல் நகருக்கு நகர்த்தியது போல பலாலி விமான நிலையத்தைக் கைவிட்டு வன்னி நிலப்பரப்பில் புத்தம் புதிய நவீன விமான நிலையத்தை அமைப்பதே பொருத்தமானதாக அமையும் என்கின்றனர் சூழலியலாளர்கள்.

“இலங்கை தமிழரின் பெருமைக்கும் – இருமாப்புக்கும் உரிய யாழ்ப்பாணம்” – தமிழரசுக்கட்சி தலைவர் சி.வி.கே ! 

“இலங்கை தமிழரின் பெருமைக்கும் – இருமாப்புக்கும் உரிய யாழ்ப்பாணம்” – தமிழரசுக்கட்சி தலைவர் சி.வி.கே !

யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தின் பெயர் மாற்றம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் இந்திய துணை தூதுவர் சாய்முரளியைச் சந்தித்து தமிழரசுக் கட்சி சார்பில் கட்சிப் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கடிதம் ஒன்றினை சமர்ப்பித்துள்ளார்.

இக்கடிதத்தில் “இலங்கைத் தமிழினத்தின் பெருமைக்கும் இறுமாப்புக்கும் உடையதான “யாழ்ப்பாணம்” என்ற பெயரை அகற்றியமை எம்மை அவமதித்ததற்கு சமமாகும். “யாழ்ப்பாணம்” என்பது விட்டுக் கொடுக்கப்பட முடியாத எம். இனத்தின் அடையாளம் ஆகும். எனவே இந்த விடயத்தை உடனடியாக மீளாய்வுக்கு உட்படுத்தி சீர்செய்யுமாறு வேண்டிக் கொள்கிறோம்” என சீ.வீ.கே.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையம் திருவள்ளுவரின் பெயரில் மாற்றப்பட்டதும் – அதனை இந்திய பிரதமர் தமிழ்நாட்டில் தாமரையை மலர வைக்கும் நோக்குடன் தமிழை பெருமைப்படுத்துகிறோம் என ட்வீட் செய்திருந்தார்.

சி.வி.கே சிவஞானம், ஒருபடி மேலே போய் யாழ்ப்பாணத்தவர்களின் மேட்டுக்குடி அரசியலை, இலங்கை வாழ் ஏனைய தமிழர்களின் தலையில் கட்டிவிடும் வழமையான ஓர் செயலை தன் கடிதத்தின் மூலம் நகர்த்தியுள்ளார்.

 ‘நான் அவன் இல்லை’ அர்ச்சுனா – லோச்சன ஆனதால் வைத்தியருக்கு ஆப்புத் தவறியது

 ‘நான் அவன் இல்லை’ அர்ச்சுனா – லோச்சன ஆனதால் வைத்தியருக்கு ஆப்புத் தவறியது !
இராமநாதன் லோச்சனவுக்கு எதிராகவே அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ள மனுவில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் லோச்சனவுக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சாரதி அனுமதிப்பத்திரத்தில் அர்ச்சுனா இராமநாதன் என்ற பெயரே உள்ளதாக அர்ச்சுனா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், உரிய சந்தேக நபரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.