‘நான் அவன் இல்லை’ அர்ச்சுனா – லோச்சன ஆனதால் வைத்தியருக்கு ஆப்புத் தவறியது

 ‘நான் அவன் இல்லை’ அர்ச்சுனா – லோச்சன ஆனதால் வைத்தியருக்கு ஆப்புத் தவறியது !
இராமநாதன் லோச்சனவுக்கு எதிராகவே அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ள மனுவில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் லோச்சனவுக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சாரதி அனுமதிப்பத்திரத்தில் அர்ச்சுனா இராமநாதன் என்ற பெயரே உள்ளதாக அர்ச்சுனா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், உரிய சந்தேக நபரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *