01

01

‘கிளீன் சிறீலங்கா திட்டம்‘ – மக்கள் முதல் இந்த நாட்டின் அத்தனை உயிர்களுக்குமானது – ஜனாதிபதியின் காத்திரமான உரை !

ஒரே ஆண்டில் இலங்கையை விட்டு வெளியேறிய மூன்று லட்சம் பேர் !

ஒரே ஆண்டில் இலங்கையை விட்டு வெளியேறிய மூன்று லட்சம் பேர் !

இலங்கை வரலாற்றில் அதிகளவானோர் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்ற ஆண்டாக 2024ஆம் ஆண்டு பதிவாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 2024ஆண்டில் 312,836 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது. 185,162 ஆண் தொழிலாளர்களும் 127,674 பெண் தொழிலாளர்களும் இவ்வாறு தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டு அதிகளவானோர் தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றதாகவும், கடந்த 6 வருடங்களில் 13 இலட்சம் இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடகங்கள் மீது தணிக்கை விதிக்கும் என்.பி.பி அரசாங்கம்..?

ஊடகங்கள் மீது தணிக்கை விதிக்கும் என்.பி.பி அரசாங்கம்..?

ஊடகங்களுக்கு தணிக்கை விதிக்கும் எண்ணம் புதிய அரசாங்கத்திற்கு இல்லை என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர், டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இலங்கை இலத்திரனியல் ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் ஊடக அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்.

ஊடகங்களும் அரசாங்கமும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும். மக்களுக்காக ஊடகங்களை முறையாக நிர்வகிக்கும் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றுவதாகவும் ஊடகங்கள் மீது தணிக்கை விதிக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் வெகுஜன ஊடக அமைச்சு பொறுப்பற்ற, செயலிழந்த இடமாக மாற்றப்பட்டுள்ளதால் வெகுஜன ஊடக அமைச்சை சரியான இடத்திற்கு கொண்டுசெல்வதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

ஊடகங்கள் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் செயற்படக்கூடிய சூழலை உருவாக்கி ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை இலத்திரனியல் ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் அதிகாரிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அபிவிருத்தி திட்டங்களை கண்மூடித்தனமாக வடக்கு மக்கள் எதிர்க்கின்றனர் – ஆளுநர் வேதநாயகன் விசனம் !

அபிவிருத்தி திட்டங்களை கண்மூடித்தனமாக வடக்கு மக்கள் எதிர்க்கின்றனர் – ஆளுநர் வேதநாயகன் விசனம் !

கறைபடியாத கரங்களுடன் இருந்தால்தான் பொதுமக்களுக்கு சிறப்பான சேவையைச் செய்ய முடியும். கௌரவ ஜனாதிபதி அவர்களும் இதைத்தான் வலியுறுத்தியிருக்கின்றார்கள். எங்கள் அரசாங்கப் பணியாளர்கள் மக்களுக்கு சேவைவழங்கும் வகையில் எதிர்காலத்தில் தங்களை மாற்றிக்கொள்வதற்குத் தயாராகவேண்டும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வடக்கு மாகாண விவசாய அமைச்சும், முல்லைத்தீவு மாவட்டச் செயலகமும் இணைந்து நடத்திய உலக மண் தின நிகழ்வில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.

பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் வேதநாயகன் தனதுரையில், எமது மாகாணத்தில் விவசாயிகள் தங்களை இன்னமும் ஏழை விவசாயிகள் என்று விளித்துக்கூறிக்கொண்டிருக்கின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவேண்டும். அவர்களுக்கு நவீன முறைமையிலான விவசாயத்தை அறிமுகப்படுத்தவேண்டும். அபிவிருத்திகளை முன்னெடுக்கும்போது கண்மூடித்தனமாக எதிர்க்கின்றார்கள். அபிவிருத்திகளை முன்னெடுக்கும்போது ஆகக்குறைந்த சூழல் பாதிப்பு இருக்கும். அதை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவுக்கு குறைத்து நாம் செய்யவேண்டும். அதைவிடுத்து எல்லாவற்றையும் எதிர்க்கும் மனநிலையில் நோக்கிக் கொண்டிருந்தால் நாம் முன்னேற முடியாது.

பல அரசு அதிகாரிகள் பிழையானவற்றுக்கு பழகிவிட்டார்கள். எங்கள் வடக்கு மாகாணமும் அதிலிருந்து விதிவிலக்கானது அல்ல. நேர்மையானவர்கள் பழிவாங்கப்படுகின்றார்கள் அல்லது பந்தாடப்படுகின்றார்கள். அதைப்போலத்தான் வசதிபடைத்த செல்வாக்கானவர்கள் அரச திணைக்களங்களுக்கு வந்தால் அவர்களுக்கு மரியாதையுடன் விரைந்து சேவை வழங்கும் அதிகாரிகள், ஏழை எளிய மக்கள் வந்தால் அலைக்கழிக்கின்றனர். இந்த நிலைமை மாறவேண்டும். புதிய அரசாங்கம் மக்கள் நேய சேவையைக் கொண்டு செல்லவே விரும்புகின்றது. அரச அதிகாரிகள் அதற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும், என்று ஆளுநர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தான் எங்களுக்கு பிரச்சினை. எங்களுடைய தண்ணீர் எங்களுக்கு போதுமானது. மகாவலி நீர் தேவையில்லை – பொறியியலாளர் சிவகுமார் !

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தான் எங்களுக்கு பிரச்சினை. எங்களுடைய தண்ணீர் எங்களுக்கு போதுமானது. மகாவலி நீர் தேவையில்லை – பொறியியலாளர் சிவகுமாருடனான நேர்காணல்!

‘2025இல் தடைகளைத் தகர்த்து இனவிடுதலை காப்போம்!’ ரீல் இருக்கட்டும், ‘2025இல் யாழுக்கு குடிக்க தண்ணீர் வருமா வராதா?’ யாழ் பா உ கள் பதில் சொல்லுங்கள் !

‘2025இல் தடைகளைத் தகர்த்து இனவிடுதலை காப்போம்!’ ரீல் இருக்கட்டும், ‘2025இல் யாழுக்கு குடிக்க தண்ணீர் வருமா வராதா?’ யாழ் பா உ கள் பதில் சொல்லுங்கள் !

யாழ் மக்களை இன்று மிகவும் பாதிக்கின்ற பிரச்சினை குடிதண்ணீர்ப் பிரச்சினை, இப்பிரச்சினைக்கு 2025 தீர்வு வரவேண்டும் என கால் நூற்றாண்டுகளுக்கு முன்னரே யாழ் பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவப் பேராசிரியர் மருத்துவ கலாநிதி நடராஜா சிவராஜா எச்சரிக்கை விடுத்திருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் யாழ் மக்களின் குடி தண்ணீர் ஒரு பிரச்சினையில்லை, தண்ணீர் தாகத்தோடு “2025இலும் இனவிடுதலை நோக்கிய லட்சியப் பயணத்தில் இணைந்து சவால்களை எதிர்கொள்வோம்” என அழைப்பு விடுத்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஒளிவிழாவிலேயே தன்னுடைய வழமையான உணர்ச்சிபொங்கிக் கொதிக்கும் உரையை வழங்கினார். யாழ் மக்களுக்கு தண்ணீரை மறுத்து, அவர்களுடைய மலசல கூடக் கழிவுகள் குடிநீரை அடைவதைத் தடுக்கும் மத்தியப்படுத்தப்பட்ட கழிவகற்றல் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை வீணடித்து, மோசடி செய்து அதனைக் கிடப்பில் போட்டதன் அறம் பற்றிப் பேசாமல் யாழில் தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றியைப் பற்றிக் குறிப்பிடுகின்ற போது, “அறம் பிழைத்தோரின் ஆணவம் நிறைந்த வெற்றிகள் நீடிக்கவோ, நிலைக்கவோ மாட்டாது எனச் சாபம் இட்டார்.

இதுதொடர்பான கட்டுரைகள் தேசம் சஞ்சிகையில் 2000 மாம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டு இருந்தது. யாழ் மருத்துவ பீடத்தில் சமூக மருத்துவப் பாடத்தை தனது இறுதிக்காலங்கள் வரை கற்பித்த மருததுவ கலாநிதி நடராஜா சிவராஜா, நூலகவியலாளர் நடராஜா செல்வராஜாவின் மூத்த சகோதரர். அவர் தேசம் சஞ்சிகைக்கு 2000ம் ஆண்டு காலங்களில் வழங்கிய நேர்காணல்களில் யாழ் கிணறுகளில் நைற்றஜனின் அளவு ஆபத்தான அளவிலும் அதிகமாக இருப்பதையும் யாழ் கிணறுகளில் சனத்தொகை நெருக்கம் காரணமாக மலசலக்கழிவுகள் கலப்பதன் ஆபத்தையும் வெளிப்படுத்தி இருந்தார். யுத்த காலங்களில் உயிர்காக்கும் முதலுதவிக் கை நூலை வெளியிட்டதுடன், முதலுதவிப் பயிற்சிகளையும் வழங்கி வந்தவர். அதேபோல் யாழ் மக்கள் எதிர்நோக்கும் குடிநீர்ப் பிரச்சினையை பா உ சிறிதரன் பாராளுமன்றம் செல்வதற்கு ஒரு தசாப்தத்திற்கு முன்னரேயே எச்சரித்திருந்தவர்.

மருத்துவ கலாநிதி நடராஜா சிவராஜா சுட்டிக்காட்டிய விடயங்களை பொறியில் பீடத்தின் பேராசிரியராகவும் நீர் முகாமைத்துவ நிபுணராகவும் இருந்து ஓய்வுபெற்றுள்ள கலாநிதி சுப்பிரமணியம் சிவகுமார் 2010 கலங்களில் இருந்து தற்போது வரை மிக அழுத்தமாகச் சுட்டிக்காட்டி வருகின்றார். இலங்கை அரசும் இப்பிரச்சினையை யாழ் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே அணுகி இருந்தது. ஒரு சிறு முதலீட்டையும் மேற்கொண்டு இத்திட்டத்திற்கான முழுமையான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் பெற்றிருந்தது. இரணைமடுவின் அணைக்கட்டை உயர்த்துவது, மேலதிக நீரை யாழ் மாவட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான நீர்வழங்கல் கட்டமைப்புகளை உருவாக்குவது, யாழ் நகரில் மத்தியப்படுத்தப்பட்ட கழிவகற்றலைக் கட்டமைப்பது ஆகிய மூன்று விடயங்களுக்கும் 266 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இதற்காக ஒதுக்கப்பட்டது. ஆனாலும் பா உ சிறிதரன் யாழ்ப்பாணத்துக்கு தண்ணீர் கொண்டு போனால் கிளிநொச்சியில் விவசாயம் செய்ய முடியாது என்ற பொய்யான தகவல்களை கிளிநொச்சி மக்கள் மத்தியில் விதைத்து அவர்களை யாழ் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு எதிராகத் திருப்பி உள்ளார்.

யாழ் மக்களின் குடி நீர்ப் பிரச்சினை மற்றும் நீர்ச் சுகாதாரம் தொடர்பில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் என்ன தீர்வை வைத்துள்ளனர் என்பதை மக்களுக்குத் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும். அதே போல் தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி இது தொடர்பில் என்ன தீர்வை வைத்துள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். சுயேட்சை பா ராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பா உ சிறிதரனிடம் சரியான கேள்வியை முன்வைத்தார், ஆனால் அவர் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை ஆராய்ந்து தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக முன் வைக்க வேண்டும். மேலும் ஊடகங்களும் சமூக ஊடகங்களும் இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இது தொடர்பில் கேள்விகளை எழுப்ப வேண்டும். பா உ சிவஞானம் சிறிதரன் மேலதிக இரணைமடுத் தண்ணீரை யாழ் மக்களுக்கு வழங்குவது தொடர்பான அறிவியல் விஞ்ஞானரீதியான கலந்துரையாடலுக்கு பொதுத்தளத்தில் வர வேண்டும். தேசம்நெற் அவரிடம் ஒரு நேர்காணலுக்கான நேரத்தை கோருகின்றது.