25

25

 யாழ் மத்திய கல்லூரி அதிபர் மீது கஜா பாய்ச்சல் ! மீண்டும் சாதிய முழக்கமா ?

யாழ் மத்திய கல்லூரி அதிபர் மீது கஜா பாய்ச்சல் ! மீண்டும் சாதிய முழக்கமா ?

‘யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் அதிபர் அதற்குத் தகுதியில்லாதவர். இன்னமும் பதவியில் இருக்கின்றார்’ என்ற தொனிப்பட யாழ் பா உ உறுப்பினர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் பாராளுமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார். தற்போது அப்பாடசாலையின் அதிபராக உள்ளவர், அப்பாடசாலையின் அதிபராகச் செயற்பட முடியாதவர் என்ற பொருள்படவும் கஜேந்திரகுமார் குற்றம்சாட்டியிருந்தார். இக்குற்றச்சாட்டுக்கள் ஜனவரி 22இல் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

தற்போதைய அதிபர் எஸ் இந்திரகுமாரை, ஏன் பிரதமர் ஹரிணி அமரசூரிய இதுவரை கலைக்கவில்லை. டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டினால் கொண்டுவரப்பட்டவரே எஸ் இந்திரகுமார் எனக் குற்றம்சாட்டியிருந்தார், தமிழ் தேசியய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்.

“முன்னைய பாராளுமன்றத்தில் ஹரினி அமரசூரிய எனக்குப் பின்னால் இருந்தவர்’ என்றும் ‘அன்று யாழ் மத்திய கல்லூரி தொடர்பில் ஒரு பிரச்சினையை எழுப்பி இருந்ததார், என்றும் சுட்டிக்காட்டினார் கஜேந்திரகுமார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், “ஹரினி அமரசூரிய இப்போது கல்வி அமைச்சராக, அரசாங்கத்தில் சக்திவாய்ந்த ஒரு நபராக இருக்கின்றார். ஆட்சிக்கு வந்து 100 நாட்களாகிவிட்டது. யாழ் மத்திய கல்லூரியின் தற்போதைய அதிபர் எஸ் இந்திரகுமாரை ஏன் இன்னமும் மாற்றி அமைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். இப்பதவி நியமனம் போன்ற, முறையற்ற செயற்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பில் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் ஒருவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது. “சோலியன் குடுமி சும்மா ஆடுமா ? பொன்னம்பலம் கஜேந்திரகுமார் ஏன் யாழ் மத்திய கல்லூரியைப் பற்றி இப்ப கதைக்க வேண்டி வந்தது ?” என்று கேள்வி எழுப்பிய அவர், “எஸ் இந்திரகுமார் சோனல் டிரைக்டராக இருந்து அதிபராக வந்தவர். அவருடைய தலைமையில் யாழ் மத்திய கல்லூரி பாரிய வளர்ச்சியைக் கண்டு கொண்டுள்ளது. அவர் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அதிபர். ஆனால் அவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சாதியைச் சேர்ந்தவரல்ல. அதனால் தான் கஜேந்திரகுமார் பாராளுமன்றத்தில் கூடுதல் நேரம் கேட்டு தன் சாதியத் திமிரைக் காட்டுகின்றார்” என்று குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட யாழ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான அனஸ்லி ரட்ணசிங்கம் தற்போது ஜேர்மனியில் வாழ்கின்றார், அவர் இது பற்றிக் குறிப்பிடுகையில் “தற்போதைய அதிபர் எஸ் இந்திரகுமார் கல்லூரியின் ஒரு சொத்து. அவருடைய தலைமைத்துவத்தில் கல்லூரி வெகுவான முன்னேறி வருகின்றது. ஹரினி முன்னர் இது தொடர்பில் கேள்வி எழுப்பி இருந்தாலும், அதற்குப் பின் மக்கள் அவருக்கு கையொப்பமிட்டு கடிதங்களை அனுப்பி வைத்து, விளக்கமளித்ததைத் தொடர்ந்து அவர் மேற்கொண்டு இவ்விடயத்தில் தலையீடு செய்யவில்லை” எனத் தெரிவித்தார்.

இதுதொடர்பில் கேள்வி எழுப்பிய மற்றுமொரு யாழ் மத்திய கல்லூரி மாணவன் லண்டனில் வாழும் ரங்கநாதன் ரமணன், “அதிபராகத் தகுதியில்லாத, அதிபர் தரத்தைப் பெற்றிராத ஆறு திருமுருகன் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியை குட்டிச்சுவராக்கிய போது, யாழ் பல்கலைக்கழத்தின் பேரவையில் இருந்து பல்கலைக்கழத்தை குட்டிச்சுவராக்கிய போது, இந்த கஜாக்களுக்கு அவர்களை விமர்சிக்க சாதிய விசுவாசம் விடவில்லையோ” எனக் கேள்வி எழுப்பினார். “ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த ஒருவர் யாழ் நகரின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றை நிர்வகிக்கின்றார். அதிலும் அதனை மிகத் திறம்பட நிர்வகிப்பதாக அங்கு கற்கும் மாணவர்களின் பெற்றோர்களே பாராட்டுகின்ற போது, கொழும்புக்கு ஓடிப்போய் பாராளுமன்றத்தில் முறையிட்டு ஒரு நல்ல தகுதியான அதிபரை விரட்டியடிக்க நினைப்பது என்ன மனநிலை” என்றும் கேள்வி எழுப்பினார்.

பொன்னம்பலம் கஜேந்திரகுமார், தற்போது யாழ் மாவட்ட மக்களை மிகவும் பாதிக்கின்ற குடி தண்ணீர் பிரச்சினை அதனால் ஏற்படுகின்ற சுகாதாரப் பிரச்சினை, யாழ் மீனவர்கள் எதிர்கொள்கினற வாழ்வாதாரப் பிரச்சினை என்று பல பிரச்சினைகள் இருந்த போதும் அவை பற்றியெல்லாம் பாராளுமன்றத்தில் வாய் திறப்பதில்லை. இல்லாத பிரச்சினையை வெறும் சாதிய நலன்களுக்காக முன்வைக்கின்றார் என்றே பழைய மாணவர்களும் தற்போதைய கல்விச்சமூகமும் உணர்கின்றது.

முன்னைய அதிபர் ஓய்வுபெற்றுச் சென்றபோது அங்கு உப அதிபராக இருந்தவர் நியமிக்கப்பட்டார். ஆண்கள் பாடசாலைக்கு பெண் அதிபர் வேண்டாம் என்ற போராட்டமும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து தகுதிகள் பலவுடைய தற்போதைய அதிபர் எஸ் இந்திரகுமார் நியமிக்கப்பட்டார். அதன் பின்னால் அப்போது அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவின் அழுத்தங்கள் இருந்ததாகச் சொல்லப்பட்டது. எது எவ்வாறாக இருந்தாலும் தற்போதைய அதபர் எஸ் இந்திரகுமார் மக்களால் வரவேற்கப்படுகின்றார் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபருக்கான தகுதியில்லாமல் ஆறுதிருமுருகன் யாழ் ஸ்கந்தவரோதாயாக் கல்லூரியில் நியமிக்கப்பட்டார். யாழ் பல்கலையில் பேரவையிலும் நியமிக்கப்பட்டார். இவர் இப்பதவிகளைப் பெற முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசு இருந்தது. தான் போன கல்வி நிறுவனங்களைச் சீரழித்தார் ஆறுதிருமுருகன். ஆனால் யாரும் ஆறு திருமுருகன் மீது கேள்வி எழுப்பவில்லை. ஏனெனில் அவர் ஆதிக்க சாதி, ஆளப் பிறந்தசாதி, பொன்னம்பலம் கஜேந்திரகுமாரின் சாதி என்பதைத்தவிர வேறு காரணங்கள் இல்லை.

பிரதமரின் அறிவிப்பை மீறிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

பிரதமரின் அறிவிப்பை மீறிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற மாணவர் கௌரவிப்பு நிகழ்வு ஒன்றில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்து கொண்டமை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர், கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய முன்னதாக பாடசாலைகள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்தப்படுவதை ஏற்க முடியாது என் றும் அரசியல்வாதிகள் பாடசாலை விழாக்களில் கலந்துகொள்ளக்கூடாது என்றும் தடை விதித்திருந்தார்.

இந்தநிலையில் கல்வி அமைச்சரின் அறிவிப்பையும் மீறி அமைச்சர் சந்திரசேகர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளமை தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிடப்பட்டு வருகின்றனர்.

கட்டியவனே உடைத்த கல்லாசனங்கள் – கலைப் பீடாதிபதி ரகுராமிற்கு எதிராக கலைப்பீட மாணவர்கள் போராட்டம் !

கட்டியவனே உடைத்த கல்லாசனங்கள் – கலைப் பீடாதிபதி ரகுராமிற்கு எதிராக கலைப்பீட மாணவர்கள் போராட்டம் !

யாழ்ப்பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது தமது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து அடக்குமுறையை பிரயோகிக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக பல்கலைக்கழக முன்றலில் நேற்றைய தினம் ஜனவரி 24 மாணவர் ஒன்றியத்தினால் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கலைப்பீடாதிபதி ரகுராமிற்கும் அவருக்கு வாக்களித்த காமுக விரிவுரையாளர்களுக்கும் எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் 4 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். குறிப்பாக கேள்வி கேட்டதற்காக 9 மாணவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடைகளை நீக்க வேண்டும் என்பதும் அதில் உள்ளடங்கும்.

இப்போராட்டத்தின் பின்னணி தொடர்பில் ஊடகங்களுக்கு மாணவர்கள் ஒன்றிய பிரதிநிதிகள் விளக்கங்களை கொடுத்துள்ளனர். அதன்படி கடந்த வருடம் மேமாதம் விஞ்ஞான பீடமாணவர்கள் விரிவுரை மண்டபத்தில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது வேண்டுமென்றே விரிவுரையாளர் ஒருவர் மண்டபத்தை வெளியிலிருந்து பூட்டியுள்ளார். பின்னர் விஞ்ஞான பீட மாணவர் ஒன்றிய தலைவர் பூட்டை உடைத்து மாணவர்களை மீட்க வேண்டியேற்பட்டது. விரிவுரையாளர் மண்டபத்தை பூட்டிய சமயம் தீவிபத்து ஏற்பட்டிருந்தால் எவ்வளவு ஒரு பெரிய அனர்த்தம் ஏற்பட்டிருக்கும். இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட விரிவுரையாளரை விசாரணைக்கு உட்படுத்துவதற்குப் பதில் பூட்டை உடைத்து காப்பாற்றிய மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் புதுமுக மாணவர்களுடைய வட்ஸ் அப் குழு உரையாடல்களை சட்டத்திற்குப் புறம்பாக ஒட்டுக் கேட்டதோடு நிற்காமல் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுமுக மாணவர்கள் தாம் கற்க விரும்பும் பாடங்களை கற்க பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதிக்காதபட்சத்தில் போராட்டங்கள் மூலம் தமது கோரிக்கைளை முன்வைப்போம் என்று தமக்கிடையே வட்ஸ் அப் குழுவில் கலந்துரையாடியுள்ளனர். யாழ் பல்கலைக்கழகத்தில் போராட்டங்கள் ஒன்றும் புதிதல்ல. பேராசிரியர் கணேசலிங்கம் போன்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மாணவர்களை தமது அரசியல் சுயலாபங்களுக்கு பொங்கு தமிழ் போன்ற போராட்டங்களுக்கு அணிதிரட்டியவர்கள் . அப்படியிருக்க கடந்த 20 ஆம் திகதி ஆரம்பமான முதல் நாள் விரிவுரைகளுக்கு சமூகமளிக்காதபடி மாணவர்களுக்கு தடை விதிப்பது அதிகார துஸ்பிரயோகம்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் பல்கலைக்கழகத்தினுள் இருந்த 5 கல்லாசனங்களை கலைப்பீடாதிபதி ரகுராம் உடைத்தெறிந்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் ரகுராம் தரப்பில் கூறப்படுவதாவது அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இறுதியாண்டு மாணவர்கள் சிலர் இரவில் போதையில் கல்லாசனத்திலிருந்து வேண்டத்தகாத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அவ்வேளை அங்கு வந்த கலைப்பீடாதி ரகுராம் மாணவர்களின் செயலால் கோபமடைந்து சினிமா பாணியில் கல்லாசனத்தை உடைத்துள்ளார். இது தொடர்பில் கலைப்பீட பீடாதிபதியிடம் கேள்வி எழுப்பிய மாணவர்கள் ஐவருக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல மாதங்களாக நீடிக்கும் இப்பிரச்சினைகளில் மாணவர்கள் நலன்சார்ந்து பேச வேண்டிய மூத்தவை மற்றும் பேரவை என்பன மௌனமாகவுள்ளன. ஊழலும், முறைகேடுகளும் மலிந்து போயுள்ள வினைத்திறன் அற்ற யாழ்ப்பல்கலைக்கழக நிர்வாகத்தை தட்டிக் கேட்கவே மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர் எனக் கூறுகின்றனர். கடந்த வருடம் ஒக்டோபரிலேயே 10 கல்லாசனங்கள் கலைப்பீடாதிபதியின் அனுசரனையில் பொருத்தப்பட்டதாக கலைப்பீட மாணவர்கள் ஒன்றிய முகநூலில் பதியப்பட்டுள்ளது.

அந்தவகையில் பின்வரும் நான்கு பிரதான கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஓன்று: விதிகளுக்குப் புறம்பாக நடைபெறும், நடைபெற்ற மாணவர்கள் மீதான விசாரணைகளை உடன் நிறுத்த வேண்டும்.
இரண்டு: போராடுதல் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட மாணவர்களின் அடிப்படை உரிமைகள் உறுதிசெய்யப்பட வேண்டும்.
மூன்று: விரிவுரையாளர்கள் மீதான முறைகேடுகள் பாரபட்சமின்றி விசாரணை செய்யப்பட வேண்டும்
நான்கு: மாணவர்களின் கற்றலிற்கான சுதந்திரத்தை உறுதி செய்யப்பட வேண்டும்.