26

26

பெரியார் – சீமான் – பிரபாகரன்: சீமான் நாயகனா? நயவஞ்சகனா? சமூக இலக்கிய ஆர்வலர் அசோக் யோகன் கண்ணமுத்து

பெரியார் – சீமான் – பிரபாகரன்: சீமான் நாயகனா? நயவஞ்சகனா?

சமூக இலக்கிய ஆர்வலர் அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒரு உரையாடல்

காஷ்மீர் கிராமத்தில் நீர்நிலைகள் விஷமானதால் 17 பேர் மரணம் ! யாழில் கிளிநொச்சியில் யாருக்குத் தெரியும் ?

காஷ்மீர் கிராமத்தில் நீர்நிலைகள் விஷமானதால் 17 பேர் மரணம் ! யாழில் கிளிநொச்சியில் யாருக்குத் தெரியும் ?

இந்தியாவின் காஷ்மீரின் மலைக் கிராமமான பதாலில் சமீபத்தில் ஒன்றரை மாத காலப் பகுதிக்குள் 17 பேர் அநியாயமாக உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் 3 தொடக்கம் 15 வயது வரையிலான சிறுவர்கள் ஆகும். உயிரிழந்தவர்களின் உடற்கூறாய்வு முடிவுகள் படி, இறந்தவர்கள் நரம்பு மண்டலத்தை பாதிக்க கூடிய ஒருவகை விஷத்தினால் பாதிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் தெரியவருவதாவது பதால் மலைக் கிராமத்தின் நீருற்றின் தண்ணீரில் ஒருவகையான பூச்சி கொல்லி கலந்திருந்தமை தெரியவந்துள்ளது. விசாரணைகள் தொடர்கின்றன.

இப்படியான திடீர் மரணங்கள் நீர் விஷமாவதால் நிகழாமல் இருக்க வேண்டும் என்பதே சமூகநலன் விரும்பிகளின் அவாவாகும். யாழ்ப்பாணதில் நிலத்தடி நீர் விரைவாக விஷமாகிக் கொண்டு வருவதை கடந்த பல ஆண்டுகளாக சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாண நிலத்தடி நீரில் மலசல கூட கழிவு நீர் கலந்து வருவதற்கான ஏது நிலைகள் இருக்கின்றமையும் நீர்ப் பாதுகாவலர்களால் எடுத்தியம்பப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கூட ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம். யாழ்ப்பாணத்தில் மத்திய கழிவகற்றல் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும். இரணைமடு தண்ணீர் விவகாரத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தேசம்நெற் வலியுறுத்துகிறது. வரும் முன் காப்போம்.

நாய்க்கு தூக்கு தண்டனை கொடுத்தது இணக்க சபையா..? முல்லைத்தீவில் நடந்த கொடூரம் !

நாய்க்கு தூக்கு தண்டனை கொடுத்தது இணக்க சபையா..? முல்லைத்தீவில் நடந்த கொடூரம் !

ஆட்டை கடித்த நாய் ஒன்றை பெண் ஒருவர் தூக்கிலிட்டு கொலைசெய்த சம்பவமொன்று முல்லைத்தீவில் பதிவாகியுள்ளது. அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.

சம்பவம் தொடர்பில் தேசம்நெட் அப்பகுதி சமூக செயற்பாட்டாளர் ஒருவருடன் தொடர்பு கொண்ட போது, முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியிலுள்ள பெண் ஒருவருக்குச் சொந்தமான ஆட்டை, அயல்வீட்டு நாய் கடித்துள்ளது. இது தொடர்பில் அயல்வீட்டாருடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு குறித்த பிரச்சினை அப்பகுதி மத்தியஸ்த சபைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நாயை வளர்க்கும் பெண்ணின் வறுமையை கவனத்தில் கொண்டு இணக்க சபையினர், இறந்த ஆட்டுக்கான இழப்பீட்டை அந்தப் பெண்ணால் முடியாது என தெரிவித்துள்ளனர். இழப்பீட்டுக்கு பதிலாக குறித்த நாயை வழங்குமாறு ஆட்டின் உரிமையாளர் கோரியிருந்துள்ளார்.

இணக்கசபையினரும் நாயை வழங்குமாறு கூறிய நிலையில் நாயை பெற்றுக்கொண்ட பெண் அதனை சுருக்கிட்டு கொலை செய்துள்ளார். அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அறிய முடிகிறது.

இதேவேளை சில சமூக வலைத்தள கணக்குகளில் இணக்கசபையினர் நாயை தூக்கிட்டு கொலை செய்யுமாறு கட்டளையிட்டதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது.

இது பற்றி கருத்துப் பதிவு செய்துள்ள சமூக அரசியல் செயற்பாட்டளர் தம்பையா சோதிலிங்கம், “சமூகத்தின் சிந்தனை முறையில் வன்முறை – எதிர்ப்பு – வெறுப்பு எவ்வளவு வெறுப்பு வேரூன்றியிருக்கின்றது என்பதை இச்செயல் எடுத்துக் காட்டுகின்றது” எனப் பதிவிட்டுள்ளார்.

லண்டனில் நடைபெற்ற கண்காட்சியொன்றில் குதிரை தூக்கில் தொங்குவது காட்சிப்படுத்தப்பட்டது. அது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளது. ஆனால் உயிரோடு இருந்த வாய்பேச முடியாத பிராணியை தூக்கிட்ட மனநிலை பலரையும் தூக்கிவாரிப் போட்டுள்ளது. வடக்கில் மாதம் 3 படுகொலைகள் நிகழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான சகிப்புத்தன்மையற்ற மனநிலை படுகொலைகளை நோக்கியே மனிதர்களை நகர்த்துகிறது.

உள்ளூராட்சி தேர்தல்கள் ஏப்ரலில் !

உள்ளூராட்சி தேர்தல்கள் ஏப்ரலில் !

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பான சிறப்பு ஏற்பாடுகள் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னரே தேர்தல்கள் தொடர்பான முடிவுகள் சாத்தியமாகும் என குறிப்பிட்ட தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, தேர்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் ஒன்றை நிறுவ வேண்டியதன் அவசியம் குறித்து தெரிவித்துள்ளார்.

 

டெய்சி ஆச்சியின் காணியை ஆட்டையைப் போட்ட யோஷித ராஜபக்ச கைது ! ஞானா முனசிங்க ஆச்சியின் காணியை ஆட்டையைப் போட்ட குடும்பி ஜெயேந்திரன் கைதாவது எப்போது?

டெய்சி ஆச்சியின் காணியை ஆட்டையைப் போட்ட யோஷித ராஜபக்ச கைது ! ஞானா முனசிங்க ஆச்சியின் காணியை ஆட்டையைப் போட்ட குடும்பி ஜெயேந்திரன் கைதாவது எப்போது?

காணி மோசடிக்காக, பண மோசடி சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ச ஜனவரி 25 கைது செய்யப்பட்டுள்ளார். கைதான யோஷித ஜனவரி 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தன்னுடைய பாட்டியான டெய்சி பாரஸ்ட்க்குச் சொந்தமான ரத்மலானை, கெகட்டிய மாவத்தையிலுள்ள 4 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை முறைகேடாக வாங்கியது தொடர்பாக இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. யோஷித ராஜபக்சவை சந்தேக நபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்தே அவர் கைதாகியுள்ளார்.

இக் கைதுக்கு பின்னால் ராஜபக்சக்களை அரசியல் பழிவாங்கும் சதித்திட்டம் இருப்பதாக அவர்களது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேசிய மக்கள் சக்தியினர் வழங்கிய வாக்குறுதியின்படி , 2015 ஆம் ஆண்டு நல்லாட்சிக் காலத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி கொள்ளையுடன் தொடர்புடையவர்களான ரவி கருணாநாயக்கா மற்றும் ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்யவில்லை எனக் கேள்வி எழுப்புகின்றனர். இக் குற்றச்சாட்டுக்களை மறுக்கும் என்பிபி அமைச்சர் நளிந்த ஜெயசிங்க பதிலளிக்கும் யோஷித மகிந்த ராஜபக்ச மகன் என்பதால் கைது செய்யப்படவில்லை என்கிறார். மேலும் அவர் கூறும் போது யாராக இருந்தாலும் சட்டவிரோதமாக அல்லது சந்தேகத்திற்கிடமான முறையில் நிலங்கள் அல்லது சொத்துக்களை வாங்கியிருந்தாலும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்கிறார்.

இதே நடைமுறையை முன்னாள் இராஜதந்திரி மங்கள முனசிங்கவின் மனைவியின் காணி அபகரிப்பு மோசடி வழக்கிலும் என்பிபி அரசாங்கம் பின்பற்றுவார்களா என பாதிக்கப்பட்டவர்கள் தேசம் நெற்றிடம் முறையிடுகிறார்கள். முன்னால் இராஜதந்திரியான மறைந்த அரசியல்வாதியான மங்கள முனசிங்கவின் மனைவியான ஞானா முனசிங்கவின் நல்லூரில் அமைந்துள்ள காணியை ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் குடும்பி வெற்றிவேலு ஜெயேந்திரன் கையெழுத்து மோசடி செய்து அபகரித்துள்ளார். அக்காணியின் உரிமையாளரான ஞானா முனசிங்கவின் சகோதரியான மீனா இரட்ணம் இந்தியாவில் சாய்பாவா கோயில் அமைந்துள்ள புட்பர்த்தியிலிருந்து தனது சகோகதரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ள கையொப்பத்தைப் பயன்படுத்தி மோசடியாக காணி அபகரிக்கப்பட்டுள்ளது.

இந்த காணி மோசடியில் கள்ள உறுதி எழுதும் சில சட்டத்தரணிகளும், அரசியல் வாதிகளும் மற்றும் முதலீட்டாளர்கள் என்ற வகையில் பிரான்ஸ் மற்றும் கனடா வாழ் புலம்பெயர் தமிழர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே இடம்பெற்ற இந்த காணி மோசடி வழக்கில் அரசியல் தலையீடு காரணமாக லக்ஸ் கோட்டல் முதலாளியும் ஐக்கிய மக்கள் கட்சியின் யாழ் அமைப்பாளரும் தற்போது வரை தப்பியுள்ளனர். இவ்வழக்கை மீள எடுத்து என்பிபி விசாரணை செய்ய வேண்டும். வெற்றிவேலு ஜெயேந்திரனும் கூட்டாக மோசடி செய்தவர்களும் கைது செய்யப்பட வேண்டும் என காலஞ்சென்ற மங்கள முனசிங்கவின் நண்பர்கள் கோருகின்றனர்.

ஜனவரி 25 தமிழ் தேசியத்தின் மாற்றத்திற்கான ஆரம்பம் என்று கஜா சொன்னது: சிவிகே சிவஞானத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதா ?

ஜனவரி 25 தமிழ் தேசியத்தின் மாற்றத்திற்கான ஆரம்பம் என்று கஜா சொன்னது: சிவிகே சிவஞானத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதா ?

புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் நாடாளுமன்றில் கூட்டாக செயற்படுவது தொடர்பான கலந்துரையாடலுக்கு இலங்கை தமிழரசு கட்சிக்கும் உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 25இல் தமிழ் தேசியத்தின் தலைவிதியை மாற்றப் போவதாக பத்திரிகையாளர் மாநாட்டைக் குப்பிட்டு பொன்னம்பலம் கஜேந்திரகுமார் சொன்னது இந்த கூட்டத்திற்கு வரச்சொல்லி அமைப்பிதழ் கொடுப்பதையா? எனப் பலரும் புரவங்களை உயர்த்துகின்றனர்.

அந்தவகையில் எழுத்து மூலமான அழைப்பு கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் நேற்றையதினம் வழங்கியுள்ளார்.

நாடாளுமன்றில் 8 ஆசனங்களைக் கொண்டிருக்கின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியும், தலா ஒவ்வொரு ஆசனத்தைப் பெற்றுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் ஒரு புள்ளியில் சந்திப்பதன் மூலம் தமிழர் தாயகத்தில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறுதிப் பெரும்பான்மையான 10 ஆசனங்களை நாடாளுமன்றில் உறுதிப்படுத்துவதற்குரிய ஒரு முயற்சியை மேற்கொள்கின்ற வகையிலேயே இந்த முயற்சி அமைந்துள்ளது என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் தமிழரசுக்கட்சிக்கு முறையான அழைப்பு எதுவும் விடுக்கப்பட்டால் மாத்திரமே நாம் அது தொடர்பில் நாம் பரிசீலிப்போம் என சீ.வி.கே சிவஞானம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இந்த கடிதத்தை பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கையளித்துள்ளார்.