24

24

பத்து ஆண்டுகள் நீடிக்கும் அநுர ஆட்சி முன்னாள் யுஎன்பி எம்பி ஆருடம்

பத்து ஆண்டுகள் நீடிக்கும் அநுர ஆட்சி முன்னாள் யுஎன்பி எம்பி ஆருடம்

அநுர தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் நற்பணிகளை ஆதரிப்பதாக முன்னாள் யுஎன்பி எம்பி டொக்டர் ஆஷூ மாரசிங்க கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில், எந்த கொமிஷனும் இல்லாமல் பாதுகாப்பாக இலங்கையில் முதலீடு செய்வதற்கு10 வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வாய்பளித்தால், அவர்களைப் பார்த்து 100 பேர் வருவார்கள் என்கிறார். இதுவரையான என்பிபியின் ஆட்சிக் காலத்தில் எத்த தவறுகளும் நடக்கவில்லை என கூறும் மாரசிங்க அநுர இன்னும் 10 வருடங்கள் இலங்கையை ஆளுவார் என கட்டியம் கூறுகிறார்.

 

கிளி கண்டாவளையில் 2 சதவிகிதம் பேருக்கு சிறுநீரக நோய் ! யாழில் ஆய்வுகள் வேண்டும் !

கிளி கண்டாவளையில் 2 சதவிகிதம் பேருக்கு சிறுநீரக நோய் ! யாழில் ஆய்வுகள் வேண்டும் !

கிளிநொச்சி கண்டாவளைப் பகுதியில் 2 சதவீதமானவர்களுக்கு சிறுநீரக நோய் இருப்பதாக சூழலியல் ஊடகவியலாளர் முருகையா தமிழ்செல்வன் தெரிவிக்கின்றார். கண்டாவளை மட்டுமல்லாமல் கிளிநொச்சி மாவட்டத்தின் வேறு கிராமங்களிலும் யாழ் மாவட்டத்திலும் குடி நீரால் வருகின்ற பிரச்சினை காரணமாக சிறுநீரகக் கோளாறு ஏற்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் கள்ள மண் தொடர்பிலும் கண்டாவளையின் பெயர் அடிக்கடி செய்திகளில் இடம்பிடிக்கின்றது. கண்டாவளை பா உ சிறிதரனின் வாக்கு வங்கிகளில் ஒன்று. நெடுந்தீவைப் பூர்விகமாகக் கொண்ட சிவஞானம் சிறிதரன் வட்டக்கட்சியில் வாழ்ந்தவர். கண்டாவளையில் மணம் முடித்தவர். தற்போது யாழ் நகருக்கு புலம்பெயர்ந்து வாழ்கின்றார்.

யாழ் மற்றும் கிளி மாவட்டங்களில் குடிநீர் பாரிய பிரச்சினையாகி வருகின்றது. அதனால் மக்கள் பாராதூரமான நோய்களுக்கு சிறுநீரகக் கோளாறுகளுக்கு இலக்காகியும் வருகின்றனர். இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட தனபாலன் ரவி, “என்னுடைய சகோதரி வட்டக்கட்சியில் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு தனது 20வது வயதில் மிகத்துன்பப்பட்டு காலமானார். சில ஆண்டுகளுக்கு முன் எனது இன்னுமொரு சகோதரியின் கணவர் சிறுநீராக நோயினால் வட்டுக்கோட்டையில் காலமானார். தற்போது அவருடைய மகளுக்கு 30வது வயதில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு மாற்றுச் சிறுநீரக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உயிர்பிழைத்துள்ளார்” எனத் தெரிவித்தார். இதைவிடவும் எனது உறவுகளுக்குள்ளும் நண்பர்களுக்குள்ளும் இவ்வாறு பாதிக்கப்பட்ட பலரும் உள்ளனர். மாற்றுச் சிறுநீரக சிகிச்சையை மேற்கொள்ள ஒரு கோடி 50 லட்சம் வரை செலவாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினிகள் நிலத்தடி நீரோடு கலந்து கிணறுகளை வந்தடைகிறது. யாழில் உள்ள சுண்ணாம்புக்கற் கொறைகளினூடாக மலசல மற்றும் கழிவுகளும் கிணற்று நீரை அடைகின்றது. நீரால் ஏற்படுகின்ற சிறுநீரகக் கோளாறு மற்றும் பல்வேறு நீர் சம்பந்தமான நோய்களுக்கும் இதுவே காரணமாகின்றது.

இதன் காரணமாகவே குழாய் மூலமாக குடிநீரை வழங்க ஆசிய அபிவிருப்பி வங்கி இருபது ஆண்டுகளுக்கு முன்னரேயே நிதியை வழங்கி அதற்கான திட்டங்களை ஆரம்பிக்க உதவியது. துரதிஸ்டவசமாக ஊழல் மோசடி யாழ் – கிளி அரசியல் வாதிகளாலும் அதிகாரிகளாலும் பணத்தை வாரிக் கொண்டு சென்றதைத்தவிர குடிதண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு வைக்கப்பட வில்லை.

தற்போது பாராளுமன்றம் சென்றுள்ள உறுப்பினர்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் இதற்கான தீர்வொன்றை வைக்க வேண்டும். இவர்கள் யாழ் – கிளி குடிநீர்ப்பிரச்சினையை எவ்வாறு தீர்க்கப் போகின்றார்கள் எனபதைத் தெரியப்படுத்த வேண்டும். வரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழக் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டு மக்களுக்கு தங்களுடைய திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

கிளீன் சிறீலங்கா மூலம் 13 ஐ நடைமுறைப்படுத்துங்கள் – பா.உ சத்தியலிங்கம் !

கிளீன் சிறீலங்கா மூலம் 13 ஐ நடைமுறைப்படுத்துங்கள் – பா.உ சத்தியலிங்கம் !

கிளீன் ஸ்ரீலங்கா வெற்றிகரமான திட்டம் என்றும் அதன் ஊடாக அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழரசுக் கட்சி எம்.பி. சத்தியலிங்கம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் பற்றி மேலும் பேசிய வைத்தியர் ப.சத்தியலிங்கம்இ இத்திட்டம் வெற்றியளிக்க வேண்டும். கிளீன் ஸ்ரீலங்கா உட்பட அரசாங்கத்தின் ஏனைய வேலைத் திட்டங்கள் தோல்வியடையுமானால் ஜனநாயகத்தின் மீது உள்ள நம்பிக்கையை மக்கள் இழந்து விடுவர்.இந்த நாடு வேறு ஒரு நாடாக மாறும் சூழ்நிலையும் உருவாகும். என தெரிவித்தார்.

உலக நாடுகளுக்கான எரிபொருள் விநியோக மையமாக இலங்கை – அமைச்சர் விஜித ஹேரத் !

உலக நாடுகளுக்கான எரிபொருள் விநியோக மையமாக இலங்கை – அமைச்சர் விஜித ஹேரத் !

உலக நாடுகளுக்கு எரிபொருளினை விநியோகிக்கின்ற மையமாக இலங்கை மாற்றமடையும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போதுஇ ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் சீனாவின் சினோபெக் நிறுவனம் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்கவுள்ளது. இதன்மூலம் உள்ளுர் சந்தைகளுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும். இந்த சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து எந்த நாடுகளுக்கு எரிபொருள் ஏற்றுமதி செய்யப்படும் என்பது குறித்து சினோபெக் நிறுவனமே இறுதி முடிவுகளை எடுக்கும் என தெரிவித்தார்.

சிங்கப்பூர் எந்தவொரு எரிபொருளையும் உற்பத்தி செய்யாத ஒரு நாடாக உள்ளது. எனினும்இ அந்த நாடு இன்று உலகின் பல நாடுகளுக்கு எரிபொருள் விநியோகிக்கும் ஒரு மையமாகச் செயற்படுகிறது என குறிப்பிட்ட விஜித ஹேரத்இ எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையும் அவ்வாறானதொரு எரிபொருள் மையமாக மாற்றமடையும் என்றார்.

என்.பி.பிக்கு ஆதரவளிக்க மாட்டேன் – நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா ஆதங்கம் !

என்.பி.பிக்கு ஆதரவளிக்க மாட்டேன் – நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா ஆதங்கம் !

அநுர அரசாங்கத்திற்கு நான் வழங்கிய அனைத்து ஆதரவுகளையும் இன்றிலிருந்து இல்லாமல் செய்வதுடன் இனிமேல் உண்மையான எதிர்க்கட்சியாக நான் நிற்பேன் என நாடாளுமன்றத்தில் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

64 நாட்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கதைப்பதற்கு இடம்கொடுக்கவில்லை எனில் அது அரசாங்கத்தின் வெட்கம் கெட்ட செயல். சுயேட்சையான ஒரு தனி உறுப்பினரை கண்டு அரசாங்கம் ஏன் அச்சமடைகிறது? ஒரு ஹெட்லைற் போட்டதற்காக தன்னை கைது செய்யும் அரசாங்கம், ஒரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினரை இப்படி கைது செய்வார்களா என அர்ச்சுனா கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு நேரம் ஒதுக்குவது ஆளும் தரப்பின் பணியல்ல, அது எதிர்கட்சியின் பணியாகும். அவருக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். தேசிய நல்லிணக்கத்தை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் செயற்படுகிறது. ஆகவே, இனவாத விமர்சனங்களை அரசாங்கத்தின் மீது சுமத்துவது தவறானது என்றார்.

இதேவேளை பா.உ அர்ச்சுனாவுக்கு பேசுவதற்கான நேரம் ஒதுக்கப்படாமை குறித்து, அவரது தேர்தல் மாவட்டத்தை சேர்ந்த சக பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறிதரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மௌனம் சாதித்து வருவதாகவும், அர்ச்சுனாவுக்கு ஆதரவாக சிறு அசைவை கூட மேற்கொள்ளவில்லை எனவும் அவதானிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குப்பைகளை குப்பைத்தொட்டியில் போட முடியாதபடிக்கு யாழ்.மக்களிடம் ஒழுக்கமின்மை அதிகரித்து கிடக்கிறது – ஆளுநர் வேதனை !

குப்பைகளை குப்பைத்தொட்டியில் போட முடியாதபடிக்கு யாழ்.மக்களிடம் ஒழுக்கமின்மை அதிகரித்து கிடக்கிறது – ஆளுநர் வேதனை !

இது எங்களின் நகரம். நாங்கள் வாழும் நகரம். வாழப்போகும் நகரம் என்பதை ஒவ்வொருவரும் மனதிலிருத்திச் செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.

கிளீன் சிறீலங்கா செயற்றிட்ட முன்னெடுப்புத் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

‘தூய்மையான இலங்கை’ செயற்றிட்டத்தின் கீழ் ‘நகரைத் துப்புரவு செய்தல்’ வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அப்பால் நகரை அதே நிலையில் பேணுவதே முக்கியம்.

கடந்த காலங்களிலும் பல தடவைகள் நகரைச் சுத்தம் செய்தல், கடற்கரையோரங்களைச் சுத்தம் செய்தல் ஆகிய செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. துப்புரவு செய்த மறுநாளே குப்பைகளை அந்த இடங்களில் பொதுமக்கள் கொட்டுவதால் சுத்தம் செய்ததன் நோக்கம் நிறைவடையாத சந்தர்ப்பங்களே அதிகம் என்றார்.

மக்களிடையே இவ்வாறான ஒழுக்கமின்மை கலாசாரம் அதிகரித்துச் செல்வதாக வேதனை வெளியிட்ட ஆளுநர், 1970 – 1980 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் யாழ்ப்பாண நகரமே இலங்கையில் தூய்மையான நகரமாக அடையாளப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்புத் தரப்பினர் தமது படையினரை இந்தச் செயற்றிட்டத்துக்கு வழங்குவதாகத் தெரிவித்தனர். ஆனால் குப்பைகளைப் போடும் மக்களும் உணரும் வகையில் அவர்களையும் இந்தச் செயற்றிட்டத்தில் நிச்சயம் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்தனர் என ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும் பா.உ கஜேந்திரகுமார் !

பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும் பா.உ கஜேந்திரகுமார் !

 

இனப்பிரச்சினை தொடர்பான தெளிவான நிலைப்பாட்டைத் தேசிய மக்கள் சக்தி இதுவரையில் முன்வைக்கவில்லை. 75 ஆண்டு கால பிரச்சினைகளைத் தீர்க்கவே தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களித்தனர். பயங்கரவாத தடைச் சட்டத்தால் தமிழ் மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜே.வி.பியினருக்கும் இந்த சட்டத்தின் பாதிப்பு நன்றாகவே தெரியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் பதிலளித்த நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார, பயங்கரவாதத் தடை சட்டம் இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதற்குப் பதிலாக புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும். அதற்குரிய அமைச்சரவை பத்திரத்தைத் தயாரிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

மலையக தமிழர்கள் பற்றி பா.உ சிறிதரன் பாராளுமன்றில் மனம்விட்டு பேசுகிறாரா..? கிளி வீட்டில் பேசுகிறாரா..?

மலையக தமிழர்கள் பற்றி பா.உ சிறிதரன் பாராளுமன்றில் மனம்விட்டு பேசுகிறாரா..? கிளி வீட்டில் பேசுகிறாரா..?

 

மருதானை காவல் நிலையத்தின் சிறைக்கூடத்தில் தமிழ் பெண் மரணம் – கொலை என்கிறார் பா.உ சிறிதரன் !

 

கொழும்பு – மருதானை காவல் நிலையத்தின் சிறைக்கூடத்தில் உயிரிழந்த வடக்கைச் சேர்ந்த தமிழ் பெண், தவறான முடிவெடுத்து உயிரிழக்கவில்லை எனவும் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் பா. உ சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட பெண் எவ்வாறு காவல் நிலையத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழக்க முடியும் என்றும் அவர் மேலும் கேள்வியையும் பா.உ சிறிதரன் எழுப்பியிருந்தார்.

பா.உ சிறிதரனின் கேள்விக்கு பதிலளித்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, வவுனியாவை சேர்ந்த குறித்த பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெண் ஐந்து வழக்குகளில் பிரதிவாதியாக இருந்து பிடியாணையில் கடந்த 21ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். புதன்கிழமை துரதிஸ்டமான சம்பவம் நடந்துள்ளது. பிரேத பரிசோதனை வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது என்றார்.