ஊழல் குற்றச்சாட்டு – முன்னாள் அமைச்சரும் மனைவியும் கைது!
நேற்று புதன்கிழமை மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னாள் அமைச்சர் யாப்பவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டு பிங்கிரியா மற்றும் நாரம்மல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக் கூறி இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து 6.1 மில்லியனுக்கும் அதிகமான தொகையைப் பெற்று, 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதே இந்தக் கைதுகளுக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக மேலும் 6 பேரை குற்றப் புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்.